நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
639 topics in this forum
-
‘‘டேய்... நீ எல்லாம் அதுக்கு லாயக்குப்பட மாட்டே...’’ என்று கூறப்பட்ட ஒரு சிறுவன், உலகில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு விஞ்ஞானியாக, மாமேதையாக உருவாகி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்றால் நீங்கள் நம்பித்தானே ஆக வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன் 1847, பிப்.11ம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள மிலன் எனும் நகரில் சாமுவேல் - நான்சி தம்பதிக்கு ஏழாவது, கடைசி மகனாக பிறந்தார். ஆனால், மற்ற பிள்ளைகள் போல எடிசனின் செயல்பாடுகள் இல்லை. 4 வயது வரை பேச்சே வரவில்லை. 7 வயதில் பள்ளியில் சேர்த்தபோது, இவரை தேறாத கேஸ் என்றுதான் ஆசிரியரே எண்ணினார். கவனக்குறைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெயரை கேட்டால் கூட உடனே சொல்லத்தெரியாத மறதி நோயும் இவரை ஆககிரமி…
-
- 1 reply
- 567 views
-
-
முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமான அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் மாணவ-மாணவிகள் மரியாதை செலுத்தினர். அப்துல்கலாம் நினைவிடத்தில் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர், குடும்பத்தினர் பிரார்த்தனை செய்தனர். முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமான அப்துல் கலாமின் 88ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் கலாம் நினைவிடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தன…
-
- 0 replies
- 376 views
-
-
125 ஆண்டுகள் வெற்றிப் பயணம் காந்திமகானின் பாதம்பட்ட கல்விக்கூடம் கல்விமான்களை உருவாக்கிய சாதனைக் கல்லூரி இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் காணப்பட்ட போது சுதேச மதங்கள், அவற்றின் கலாசாரம், மொழி என்பன நலிவுற்றிருந்தன. ஆங்கிலேயர்கள் தமது மதத்தையும், கலாசாரத்தையும் பரப்புவதற்கு கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தியிருந்தனர்.இலங்கை முழுவதும் பல கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி, அதன் மூலம் தமது மதத்தையும், தமது நாட்டு பண்பாடுகளையும் பரப்பியதோடு எமது மதங்களை நசுக்கவும் தொடங்கினர். இவ்வாறான நிலையில், இந்து மதத்தையும், தமிழ்மொழியையும், அதன் பண்பாடுகளையும் காப்பாற்றுவதற்கு ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதத்தையே பயன்படுத்தி வடக்கே ஆறுமுக நாவலரும், கிழக்கே விபுலானந்தரும் இந்துப…
-
- 1 reply
- 605 views
-
-
´நட்புமிகு தேசத்தில் சிறார்களை வெற்றிபெறச் செய்வோம்´ – சிறுவர் தினம் இன்று! சர்வதேச சிறுவர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது. ´நட்புமிகு தேசத்தில் சிறார்களை வெற்றிபெறச் செய்வோம்´ எனும் தொனிப்பொருளில் இவ்வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கையின் பல இடங்களிலும் பாடசாலைகளிலும் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையில் உள்ள சிறுவர்களில் பலர் பெற்றோரின் பாதுகாப்புடன் வாழும் அதேநேரம், 13704 பேர் வரை குழந்தைத் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர். அவர்களில் 87,854 பேர் சிறுவர் தொழிலாளர்களாகவே வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, தோட்டப்புறங்களைச் சேர்ந்த 2321 சிறுவர…
-
- 0 replies
- 529 views
-
-
மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு! மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹாதர்ம குமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்த மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெவுள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை ஏந்திய எழுச்சிப் பேரணி, மன்னார் பிரதான பாலத்திலிருந்து ஆரம்பமாகி மன்னார் நகர மண்டபத்தை சென்றடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சைவ எழுச்சி மாநாடு இடம்பெறும். குறித்த மாநாட்டில் ஈழத்தின் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்…
-
- 0 replies
- 494 views
-
-
1919-ம் ஆண்டு இந்தியா முழுவதும் விடுதலை வேட்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருந்த காலகட்டம். ஆங்கிலேயரிடமிருந்து தன்னாட்சி வேண்டி இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தன. இந்தப் போராட்டங்கள் அன்றைய ஆங்கிலேயருடைய ஆட்சிக்குப் பெரும் இடையூறாகத் திகழ்ந்தன. இந்தப் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சர் சிட்னி ரௌலட் தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது, ஆங்கிலேய அரசு. இந்த நிலையில், ஆங்கிலேயர் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நீதிமன்ற விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்பது உள்ளிட்ட புதுச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த அடக்குமுறைச் சட்டத்தை (ரெளலட் சட்டம்) எதிர்த்து இந்தியா முழுவதும் பெரும் பயணத்தை மேற்கொண்டிருந்தார், காந்தி. …
-
- 2 replies
- 613 views
-
-
சந்துருக்கொண்டான் படுகொலையின் நினைவுநாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்…
-
- 0 replies
- 368 views
-
-
தாய், தந்தையருக்கு.... அடுத்த இடத்தில் மதிக்கப் படுபவர்கள் ஆசிரியர்கள். இன்று நாம்... உலகத்தை புரிந்து கொள்ளவும், சமூகத்தில் நல் மதிப்புள்ள மனிதராக வாழவும்... அவர்கள் கற்றுத் தந்த படங்களே... வழி காட்டியாக உள்ளன. எம்மை... இந்த நிலைக்கு, கொண்டு வந்த.. ஆசிரிய பெரு மக்களை, இந்த நாளில் நினைவு கூருவோம். உங்களுக்கும், ஆசிரியருக்கும் இடையில் நடந்த... சுவையான, சம்பவங்களையும் எழுதுங்களேன்.
-
- 4 replies
- 1k views
-
-
நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவின் மேலதிக புகைப்படத் தாெகுப்பு. By sub editor Last updated Aug 29, 2019 …
-
- 0 replies
- 393 views
-
-
வவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை வவுனியாவிலிருந்து வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை இன்று வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியது. வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து சாமி அம்மா தலைமையில் 9ஆவது தடவையாக இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை நோக்கிய வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை ஆரம்பமாகியது. வவுனியாவிலிருந்து பிரதான ஏ9 வீதியால் செல்லும் குறித்த நடைபாதை யாத்திரை வீதியிலுள்ள ஆலயங்களில் தரித்து நின்று செல்லவுள்ளதுடன் எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்தினத்தன்று நல்லூர் திருத்தலத்தை சென்றடையவுள்ளது. பிரதான வீதியிலுள்ள ஆலயத்தின் நிர்வாக சபையினர் வேல்தாங்கிய பாதையாத்திரையில் க…
-
- 0 replies
- 450 views
-
-
அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலை திறப்பு விழா மற்றும் ஆலய சுற்றுக்கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழா, அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஆலயத் தலைவர் க.வடிவேல் தலைமையில் நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.ஜெயராஜ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.காளிதாசன், ஆர். ஜெகநாதன் உள்ளிட்ட சமய நிறுவனங்களின் தலைவர்கள் ஆலய தலைவர்கள் கும்பாபிசேக குழுவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அ…
-
- 2 replies
- 524 views
-
-
2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 03:18 -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணத்தில், செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று, மாபெரும் எழுக தமிழ்ப் பேரணியொன்றை நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் தீர்மானித்துள்ளதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் இன்று (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு வெளிக்காட்டும் முகமாகவும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தியும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று…
-
- 0 replies
- 579 views
-
-
யாழ்ப்பாணம் அனலைதீவு ஸ்ரீ ஹரிகரபுத்திர ஐயனார் ஆலயத் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/story/16/அனலைதீவு-ஐயனார்-ஆலய-தேர்.html
-
- 0 replies
- 508 views
-
-
July 30, 2019 வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் உள்வீதியுலா வந்து காலை 11 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய அதி சிறப்பும் மிகப் பெரியதுமான பஞ்சரதங்களின் நடுநாயகமாக விளங்கும் சண்முகப் பெருமானின் முக உத்தர திருத்தேர் 1990ஆம் ஆண்டுகளில…
-
- 0 replies
- 806 views
-
-
கிளிநொச்சியை தளமாகக் கொண்ட வானொலி அறிமுக விழா! கிளிநொச்சியை தளமாக கொண்டு இயங்கும் இணையத்தள வானொலியின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த இணைய வானொலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாடசாலை மாணவியர்களின் நடன நிகழ…
-
- 0 replies
- 418 views
-
-
நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு…. July 27, 2019 வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(27.07.2019) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…
-
- 1 reply
- 1k views
-
-
அனைத்துலக திருக்குறள் மாநாடு இம்முறை அவுஸ்ரேலியாவில்! அனைத்துலக திருக்குறள் மாநாடு இம்முறை அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் சிட்னி பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ‘அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான இலக்கியங்கள், திருக்குறள் அனைத்துல இலக்கியம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை அனைத்துலக திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது. திருக்குறள் பொதுமறையாக யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்டு வரும், நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாநாடு கடந்த வருடம் இங்கிலாந்திலுள்ள லிபர்பூலின் ஐந்து இடங்கள…
-
- 0 replies
- 621 views
-
-
ஈழத்து இந்துக் கோயில்களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய, விவகார அமைச்சின் வழிகாட்டலில் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாடு “இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக்கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்து சமயத்தைப் பொறுத்தவரையில் கோயில்கள் பிரதான இடம் வகிப்பன. இந்து கலாசாரம் கோயிலை மையப்படுத்திய கலாசாரமாகவே விளங்குகின்றது. அழிந்தனவும் அழியாதனவுமாய் விளங்கும் கோயில்கள் பற்றித் தொல்பொருட்கள், இலக்கிய…
-
- 0 replies
- 488 views
-
-
ஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும் ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாட…
-
- 0 replies
- 854 views
-
-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நேற்றுச் சிறப்பாக இடம்பெற்றது. https://newuthayan.com/story/16/ஒட்டுசுட்டான்-தான்தோன்ற.html
-
- 0 replies
- 521 views
-
-
உலக அகதிகள் தினம்! June 20, 2019 இன்று உலக அதிகள் தினம். பல்வேறு காரணங்களால் உலகில் அகதிகள் நாடற்று, வீடற்று அலையும் இன்றைய நாட்களில் ஈழத்திலும் மக்கள் அகதிகளாக அல்லல்படுகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விடுவிக்க இராணுவ ஆக்கிரமிப்பு முகாமின் முன்னே போராடுகின்றனர். உலக அகதிகள் தினத்தில் தத்தளிக்கும் அந்த மக்களின் துயரம் ஒரு குறியீடு. இலங்கையின் அரசியல் நிலமைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார நிலமைகள் இன்னமும் அகதிகளாக பலர் புலம்பெயர்கின்றனர். உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக வாழ்கின்றனர். இவ்வாறு கட்ட…
-
- 0 replies
- 993 views
-
-
"கண்ணெதிரேயுள்ள கடவுளப்பா நீ..!": இன்று தந்தையர் தினம்! தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம் (Father's Day). உலகம் முழுவதும் இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆவது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது. பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான்.அதே நேரத்தில், தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தந்தையும்,தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களை செய்து பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிற…
-
- 0 replies
- 833 views
-
-
‘இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும்’ Editorial / 2019 ஜூன் 12 புதன்கிழமை, மு.ப. 08:09 Comments - 0 சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. சமுதாயத்தில் சிறுவர்களின் வருங்காலத்தை கட்டியெழுப்பும் தேவை அனைவருக்கும் உண்டென்ற வகையில், அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படை விடயமான கட்டாயக் கல்வியை வழங்குதல் அவசியமானதாகும். ஒவ்வொரு குழந்தையும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையுடையவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தங்களது புதிய கனவுகளை அடைய வாய்ப்புகளை வழங்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். எந்தவொரு சிறுவரையும் தொழிலாளர்களாக யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக, அருகில் உள்ள பொலிஸ் நி…
-
- 0 replies
- 465 views
-
-
கென்யாவில் கோலாகலமாக இடம்பெற்ற காளை போட்டி – ஏராளமானோர் பங்கேற்றனர் கென்யாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள லுஹ்யா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே ‘காளைச் சமர் விளையாட்டு’ என்பது பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது. இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். இது மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் இலாபகரமானதாகவும் அமைகின்றது. ‘டன்கன் மூரே’ என்ற ஔிப்படக் கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள ‘ககமேக’ எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டு போட்டிகளை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எவ்வாறான தொடர் போட்டிகளை முன்னெடுத்து வருகின்ற…
-
- 0 replies
- 409 views
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம் 2019 இற்கான உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் உடசவம் இன்று மாலை சிறப்புற இடம்பெற்றது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது. எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்ற முடியும் என் அறிவிக்கப்படடதோடு பொங்கல் கிரியைகள் சிறப்புற இடம்பெற்றதுவருகிறது அந்தவகையில் 06.05.2019 அன்று பாக்குத்தெண்டல் உடசவம் சிறப்புற இடம்பெற்றது…
-
- 27 replies
- 3.1k views
-