நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
638 topics in this forum
-
தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 53.0மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பி தலைமையுரை ஆற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து நிழ்வில் கௌரவிருந்தினராக கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 1 reply
- 424 views
-
-
6 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்) மற்றும் கிறிஸ்தவர் இஸ்லாமிய மதத்தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் ஆர்த்தி, குருபரன் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளன. உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார். மேற்படி மெய்நிகர் (zoom) நிகழ்வில் நீங்களும் இணை…
-
- 0 replies
- 421 views
-
-
முன்னாள் மன்னார் ஆயர் மறைவு – தமிழ் தேசிய துக்க தின பிரகடனம் 32 Views மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் 01/04/2021 இல் இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது என வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மேலும், “ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர்தேசம் இன்று இழந்துநிற்கின்றது . 2009 ம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நே…
-
- 0 replies
- 420 views
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது கலாசாலையின் முன்னாள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டு நூறாவது ஆண்டு நினைவையொட்டிய 25 ரூபாய் பெறுமதி கொண்ட தபால் முத்திரை ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. அத்துடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசனால் நூறாவது ஆண்டு நூல் ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் …
-
- 0 replies
- 420 views
-
-
வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன். “Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்க…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
கனடாவின் Scarborough’s Markham பகுதியில் இன்றும் நாளையும் நடக்கவுள்ள திருவிழாவில் இலங்கை மற்றும் யாழ்ப்பாண தமிழ் உணவுகள் சமைக்கப்படவுள்ளன. தமிழ் விழாவில் தனது திறமைகளை வெளிப்படுத்த தென்னிந்தியாவின் பிரபல சமையல் நிபுணர் தாமு கனடாவிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் பிரபல கேட்டரிங் வணிக உரிமையாளரான கந்தையா இராஜகுலசிங்கம் தாமுவுடன் இணைந்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழாவை நடத்தி வருகின்றார். எனது தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு வர விரும்புகிறேன், அதனால் தாமுவின் உதவியை நான் விரும்புகிறேன் என இராஜகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த விழாவில் யாழ்ப்பாணத்தின் பிரபல உணவுகள் சமைக்கப்படவுள்ளன. இலங்கையின் பிரபல உணவான கொத்து, அப்பம், தோசை உட்பட …
-
- 0 replies
- 418 views
-
-
15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" 83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நக…
-
-
- 4 replies
- 417 views
- 1 follower
-
-
வண்ணை, வீரமாகாளி அம்மன் தேர். யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1290882
-
- 2 replies
- 415 views
-
-
மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழர் ஆய்வு மையம் அறிவுசார் தளத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆளுமைகளிடம் புவிசார் ரீதியில் தமிழ்தேசிய கருத்துருவாக்க ஆய்வரங்கம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக “மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம்” என்பது தொடர்பான ஆய்வரங்கம் நார்வே முன்னாள் வெளியுத்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன், இந்திய அரசியல் ஆய்வாளர் அய்யாநாதன் மற்றும் முனைவர் கிருக்ஷ்ணா முத்துகுமரப்பன் ஆகியோரின் கருத்துரைகளுடன் இடம்பெறவுள்ளது. நாள்: 26 செப்டம்பர் 2020 நேர…
-
- 0 replies
- 414 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்! வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான சூர்யோற்சவ உற்சவம் இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும் வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். இதேவேளை, சூரிய திருவிழாவான இன்றையதினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். நல்லூர் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் திருவிழாவின் நேரடியான காட்…
-
- 1 reply
- 414 views
-
-
இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம். உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 23 வருடங்கள் ஆகின்றன. உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோக் நகரில் இதே திகதியில் (11/ 09/2001) காலை 8:46 மணியளவில் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்கள் மீது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று மோதியது. 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் வொஷிங்டனில் இருந்து லொஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு பயணிக்கவிருந்த விமானமே இவ்வாறு மோதியது. எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற இவ் விபத்தினால் அமெரிக்காவே அதிர்ந்துபோய் இருந்த நிலையில் தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில்அதாவது காலை 9:03க்கு…
-
- 1 reply
- 413 views
-
-
கார்லஸ் சொரியா: எவரெஸ்ட் உட்பட உலகின் நெடிய சிகரங்களை தொடும் 81 வயது `இளைஞர்` பட மூலாதாரம்,COURTESY OF CARLOS SORIA உலகின் 14 சிகரங்களில் பெரும்பாலான சிகரங்களை ஏறிவிட்டார், கார்லஸ் சொரியா. இதில் எவரெஸ்ட் சிகரமும் அடக்கம். மீதமுள்ள சிகரங்களையும் ஏற இவர் திட்டமிட்டிருக்கிறார். 81 வயதான கார்லோஸ் சொரியா, இந்த ஆண்டின் வசந்த காலத்தில், மீண்டும் இமய மலையில் அடர்த்தி குறைந்த காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை எதிர்பார்க்கிறார். இவர் நேபாளத்தில் இருக்கும் தெளலகிரி சிகரத்தை ஏறவிருக்கிறார். அதன் பிறகு இலையுதிர் காலத்தில், திபெத்தில் இருக்கும் சிஷபங்மா சிகரத்தை ஏறத் திட்டமிட்டு இருக்கிறார். அப்படி ஒருவேளை இந்…
-
- 0 replies
- 412 views
-
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தலும் நூல் வெளியீடு மறைந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள், முன்னாள் வட. மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், ”ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்” எனும் தலைப்பில் நிலாந்தன் அரசி…
-
- 0 replies
- 411 views
-
-
யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 21 ஆம் திகதி ஆரம்பம்! யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறையும் 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச வர்த்த பேரவை மற்றும் இந்தியாவின் கைத்தொழில் மற்றும் வர்த்த ஆலோசனை நாயகத்தினாலும் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தமது உற்ப…
-
- 1 reply
- 410 views
-
-
அன்னையர் நாள் / Mother's Day [12 மே 2024 / 12 th May 2024] அன்னையர் நாள் விடுமுறை தினம், அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் [Anna Jarvis] அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் [Grafton, West Virginia] உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. உதாரணமாக ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் மே மாதத்திலும், அயர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவை மார்ச் மாதத்திலும் கொண்டாடுக…
-
- 1 reply
- 410 views
-
-
கிளிநொச்சியை தளமாகக் கொண்ட வானொலி அறிமுக விழா! கிளிநொச்சியை தளமாக கொண்டு இயங்கும் இணையத்தள வானொலியின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த இணைய வானொலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாடசாலை மாணவியர்களின் நடன நிகழ…
-
- 0 replies
- 409 views
-
-
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஜனவரி 2021 படக்குறிப்பு, 1968ல் ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லி வேதிப் பொருளை சாய்கோன் என்ற பகுதியில் காடுகளின் மீது தூவியபடியே பறந்து செல்லும் அமெரிக்க விமானப்படை ஜெட் விமானம். வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது. வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்…
-
- 0 replies
- 409 views
-
-
தவ பூமியாகிய “வேலோடும் மலை” முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை” இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டி, இலுக்குச்சேனை முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. 3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை”கணிக்கப்படுகின்றது. இந்த ஆலயத்தினை சூழ சிவலிங்கமும்,18 சித்தர்களின் சிலைகளும் நாகத்தின் ஆலயங்களும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. 12ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்த…
-
- 0 replies
- 409 views
-
-
நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு October 18, 2018 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். நிமலராஜனின் படுகொலையுடன் பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை 2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது. ஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிக்கதிரையேறிய நல்லாட்சி அரசும் கூட இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்…
-
- 0 replies
- 407 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் October 21, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் காலை நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்தியஅமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்து…
-
- 0 replies
- 405 views
-
-
நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா! நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று வெகுவிமர்சையாக இடம் பெற்றுள்ளது. இன்றைய முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றன. அத்துடன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஊர்தி பவனியில் இராணுவ பீரங்கி ஒன்று கடோற் அணியினரால் உருவாக்கப்பட்டு அதுவும் காட்சியாகக் கொண்டு செல்லப்பட்டது. பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமார் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர். https://ath…
-
- 0 replies
- 405 views
-
-
கென்யாவில் கோலாகலமாக இடம்பெற்ற காளை போட்டி – ஏராளமானோர் பங்கேற்றனர் கென்யாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள லுஹ்யா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே ‘காளைச் சமர் விளையாட்டு’ என்பது பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது. இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். இது மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் இலாபகரமானதாகவும் அமைகின்றது. ‘டன்கன் மூரே’ என்ற ஔிப்படக் கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள ‘ககமேக’ எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டு போட்டிகளை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எவ்வாறான தொடர் போட்டிகளை முன்னெடுத்து வருகின்ற…
-
- 0 replies
- 400 views
-
-
தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
-
- 0 replies
- 398 views
-
-
எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தின நிகழ்வு யாழில்! தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம் நேற்று (திங்கட்கிழமை) மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் மனைவி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் மற்றும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர்,எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்…
-
- 0 replies
- 397 views
-
-
ஊடகவியலாளர் சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று! குளோபல் தமிழ் செய்தியாளர்:- இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்;டு சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்ற…
-
- 1 reply
- 395 views
-