கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
-
இந்த இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்யலாம் கடைசி பேட்டி மெல்லக் கொல்வேன் மேற்கே செல்லும் விமானம் - பாகம் 1 மேற்கே செல்லும் விமானம் - பாகம் 2 மேற்கே செல்லும் விமானம் - பாகம் 3 நேற்றைய கல்லறை கறுப்பு வரலாறு
-
- 10 replies
- 3.5k views
-
-
இது கதையா? அல்லது கடிதமா என்பதற்கு அப்பால், பேசப்படும் பொருள், தற்போதைய ஈழத்து நிகழ்வுகள் தனிமனிதர்களிடம் ஏற்படுத்தும் உணர்வோட்டாங்கள் என்பவற்றை திறம்பட எழுத்தில் வடித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஈழத்தில் ஏற்படும் போரியல் மாற்றங்கள் ஏன் ஒருவரை மனதளவில் துவண்டுவிடச்செய்கிறன, ஏன் அதீத மகிழ்ச்சியில் திழைக்கச்செய்கிறன என்பதை தமிழ்நதி சொல்லியிருக்கிறார். அன்பு நித்திலா, நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன். “இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகி…
-
- 6 replies
- 1.7k views
-
-
கடைசி பேட்டி 1 ராஜேஷ். வயது 28. 5 அடி 11 அங்குலம். மாநிறம். வழக்கமாக உடற்பயற்சி செய்யும் தேகம். மிடுக்கான நடை. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை. உடை அணிவதில் தற்போதை நாகரீகம் எது என்று இவனை கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் உண்டு. ஆனாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு ஹீரோ ஹோன்டா ஸ்பெலன்டர். இவன் தான் கதையின் நாயகன். இவனும் ஒரு ஸ்பெலன்டர் தான். உலக ஞானம். அனைத்து நாட்டு அரசியலும் விரல் நுனியில். இந்திய நடப்பை கரைத்து குடித்தவன். யார் மந்திரி யார் சட்டமன்ற உறுப்பினர் அவர் ஜாதகம் என்ன என்று அனைத்தும் அறிவான். வேலை. மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சியில் நிருபர். தனியே…
-
- 4 replies
- 2.2k views
-
-
அனிதாவின் டயரி - நாள் : 20-11-2006, இரவு 10.30 மணி "ஏண்டா டல்லா இருக்கேன்னு கேட்டேன். ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டான். மத்தியானம் போன் பண்ணலைன்னு கோவமான்னு கேட்டேன். அதெல்லாம் இல்லேன்னு விரக்தியா சொன்னான். "வண்டியில வர்றப்ப கூட எப்பவும் அவன் தோள் மேல கைய போட்டுக்கிட்டு வருவேன். தோள்ல கைய போடலைன்னா வண்டியை நிறுத்திட்டு, என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டா தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன்னு அடம் புடிப்பான். இன்னைக்கு என்னவோ 'தேமே'ன்னு இருந்தான். நான் தோள்ல கையைப் போடலைங்கிறதையே ஒரு பொருட்டா அவன் நெனைக்கலை. "வர.. வர... அவன் போக்கே புரிய மாட்டேங்குது. கல்யாணம் ஆனப்ப இருந்தமாதிரி அவன் இப்ப இல்லை. ப்ரெண்ட்ஸ் கூட வெளியே சுத்தக்கூடாதுன்னு நான் கண்டிஷன் போடறதால அவன் என் மேல க…
-
- 8 replies
- 2k views
-
-
'என் ஞாபகப் பதிவிலிருந்து' என்ற தலைப்பில் 'சுதந்திரா' ஒரு பேப்பருக்கு வழங்கிய உண்மைச்சம்பவம். குப்பிளானில் இலங்கை அரஜகாத்தினால் 86ல் நடந்த உண்மைச் சம்பவம். http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_34.pdf
-
- 28 replies
- 7.6k views
-
-
ஓசியில் வளர்த்த ஒழுங்கற்ற உடம்போடை சைக்கிள் விட்டு இறங்க மனம் இல்லாமால் சீற்றில் இருந்தபடியே மற்ற காலை நிலத்தில் ஊன்றின படி பக்கத்து வீட்டு மணியத்தாரோடை தனகு பட்டு கொண்டிருந்தார். மணியத்தாரும் கூனி குறுகி ஏதோ சொல்லி கொண்டிருக்க.. அதையும் மீறி அதட்டும் குரல் மாதிரி ஒலிக்க.. அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து சனங்கள் வேலிக்கு மேலாலும் வேலி இடுக்குக்காலும் அரை குறை உருவங்களோடு எட்டிப்பார்த்து கொண்டிருந்தன. இந்த போகம் முடிய உன்ரை கணக்கை முடிக்கிறன் என்று தவணை தவணையாய் சொல்லி http://sinnakuddy.blogspot.com/2007/01/blog-post_15.html
-
- 2 replies
- 1.4k views
-
-
நட்புத் தேவதையே... "நித்யா... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகமணுமா...?" "ஆமா சந்துரு...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி" நிதானமாய் ஏறெடுத்து நோக்கினான் சந்துரு. "சந்துரு...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான் ஆகணும்." நித்யா...என்னோடு வேலை செய்யும் அன்புத் தோழி. அறிவு, அழகு, திறமை, தைரியம் அனைத்திற்க்கும் சொந்தக்காரி. எல்லாம் இருந்தும் அடக்கத்தை மட்டும் ஆட்சி செய்யும் இளவரசி. என்னை போன்ற ஒருவனுக்கு கிடைத்த அபூர்வ தோழி. உண்மைதான். நித்யாவைப் பற்றி எதைச் சொல்வது!! என் கவிதை எழுத்துக்களை அதிகம் நேசிப்பதை சொல்வதா..? இல்லை என் மன வருத்தத்திற்கு நம்பிக்கை வார்த்தைகளை மருந்தாய் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
எனக்கு அப்போது ஏழு வயதிருக்கும். என்னவென்று சொல்லத்தெரியாத ஓர் கனமான, பீதி நிறைந்த அமைதிக்குள் மூழ்கிக்கிடந்தந்தது எனது தேசம். மேலே நீறு மூடிக்கிடந்தாலும் முழு வீச்சுடன் வெடித்தெரியத் தயாராகிக் கொண்ட்ருந்த விடுதலை வேட்கைத்தீயின் வெப்பம் அவ்வப்போது ஆங்காங்கே தலை காட்டி, உயிரின் ஆழம் வரை சிலிர்க்கச் செய்து விட்டு மறைந்தாலும், அதை இன்னதென்று கிரகித்துக் கொள்ளும் பரிபக்குவமோ அறிவாற்றலோ முதிர்ச்சி அடையாத வயது. ஆகவே தென்றலாகத்தன் வீசிக் கொண்டிருந்தது எனது பட்டாம் பூச்சிப் பருவம். அன்று பாடசாலை விடுமுறை நாள். வறுத்த அரிசிமாவுடன் தேங்காய்ப்பூவும் சேர்ந்து வேகும் வசனை, புதிதாய்ப்புலர்ந்த காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு உரம் கூட்டிக்கொண்டிருந்தது. அம்மா சுடவைத்துத் த…
-
- 16 replies
- 2.4k views
-
-
அண்மையில் எம்மை சோகத்தில் ஆழ்த்தி சென்ற பாலா மாமாவிற்காக "நானும் என் ஈழமும்" தொடரை அர்ப்பணம் செய்கிறேன்.... ------------------------------------------------------------------------------------ உங்களில் எத்தனை பேர், கோயிலை கடக்கும் நேரங்களில் எல்லாம் கையெடுத்து கும்பிடுவீர்கள்?அல்லது நெஞ்சில் கைவைத்து "இறைவா" என சொல்வீர்கள்? எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு. அதனால் எனக்கு ஏற்பட்ட ஒரு பழக்கம்..இன்று வரை தொடர்வது.. அதை பற்றி பார்க்கலாம்... ஊருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் அப்பப்பாவீட்டில் அதிக நேரத்தை செலவழிப்பேன். காரணம் அங்கு இருக்கும் புத்தகங்கள், பழைய படங்கள், அப்பபாவின் இசை கருவிகள்...அதில் வீணை மீட்டுகிறேன் என்று கம்பிக்களை அறுத்த வீரத்திருமக…
-
- 9 replies
- 2k views
-
-
தோழர் விஜய் ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட். பார்க்கும் பிகர்களை எல்லாம் தன்னுடைய பிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி. நண்பர்களின் பிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவருக்குண்டு. முந்தையப் பதிவொன்றில் நான் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் என்னுடன் பணியாற்றிய சகப்பணியாளர். வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் Aய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளர். அவருக்கு அப்போது 35 வயதிருக்கலாம். காதல் திருமணம் செய்து அதன் விளைவாக அழகான ஒரு மகளை ஈன்றெடுத்திருந்தார். என்னைப் போன்ற இளைஞர்கள் எப்போதும் "சாட், சாட்" என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட நண்பருக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு சாட்டிங்கில் மாட்டியவர்கள் நிறையப் பேர் அமெர…
-
- 4 replies
- 4.1k views
-
-
நான் ஒரு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியில் ஜுனியர் லெவலில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த நேரம். எங்கள் CEOக்கு கம்ப்யூட்டர் என்றாலே அலர்ஜி. அவரது பர்சனல் மெயில்களையும் நான் தான் அப்போது Handle செய்துக் கொண்டிருந்தேன். அவர் தண்ணி அடிக்கும் கிளப், அலுமினி கிளப் மற்றும் அவரது மச்சான், மாமன் அனுப்பும் மெயில்களை எல்லாம் செக் செய்து அவருக்கு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பதே அலுவலகத்தில் எனது முதல் வேலையாக இருந்தது. ஒரு நாள் அவரிடம் வேலை கேட்டு ஒரு மெயில் வந்திருந்தது. அட்டாச்மெண்ட் ஓபன் செய்துப் பார்த்தால் ஒரு பெண், வயது 20. விஸ்காம் முடித்திருந்தாள். நான் இருந்த போஸ்டிங்குக்கே அவளும் அப்ளை செய்திருந்தாள். இதென்னடா வம்பாப் போச்சி என்று மெயிலை பாஸுக்கு மறைத்து நானே அவளுடைய யாஹூ மெயி…
-
- 10 replies
- 2.2k views
-
-
என் வலைப்பூவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் நான் எழுதி வரும் ஒரு சிறு அனுபவப்பதிவு..என்னை எழுத தூண்டிய யாழில் பதியும் ஆசையுடன்.. தமிழ்மணத்தில் இணைந்த பின்னர் உங்களில் பலரின் வலைப்பூக்களை பார்த்தேன். அதில் பெரும்பாலனவை அனுபவப்பதிவுகளாகவே இருக்கின்றது. பெரும்பாலும் நான் எழுதுவதும் எனது அனுபவங்களையோ, அல்லது என்னை சுற்றி நடப்பவையாகவே இருக்கும். ஈழத்தில் வருடக்கணக்கில் வாழாவிடினும், எனக்கும் பங்கருக்குள் தொடர்ந்து பல நாட்கள் வசித்த அனுபவம் உண்டு. சாவையும், இரத்தத்தையும் நானும் பார்த்திருக்கின்றேன். காயம்பட்டவர்களுடன் ஒரே வாகனத்தில் பயணித்திருக்கின்றேன். வெளிநாட்டு மண்ணிலேயெ இருந்த எனக்கு, ஊர் செல்லும் காலம் வந்தால் இருக்கும் மனநிலையை எழுத்தில் …
-
- 8 replies
- 1.7k views
-
-
தரிசனம் கிடைக்காதா? ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் ("தம்பிக்கு" "தங்கைக்கு" அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல்…
-
- 63 replies
- 9.5k views
-
-
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் -சினேகிதி- அன்பான தன் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்தவள் ஆதிரை.சின்ன வயது முதலே படிப்படியாக பல வெற்றிகளைக் கல்வியில் அடைந்து மிகுந்த புகழுடன் இருந்தாள்.இனப்பிரச்சனையால் சொந்த ஊரை விட்டு நீங்கும் துன்பத்தை ஆதிரை குடும்பமும் ஏற்க வேண்டியதாயிற்று.கொழும்புக்க
-
- 30 replies
- 4.7k views
-
-
"அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வித்தியா. அம்மா தான் இப்போது இல்லையே! பழக்கத்தில் சொல்லிவிட்டேன் என்று நினைத்து அண்ணியிடம் என்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களின் அறையை நோக்கினாள். வழக்கம்போல் அது பூட்டித்தான் இருந்தது. அண்ணிக்கு இப்போதுதான் சாமம் மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள். வெளியில் போகும்போது "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று சொல்லிப் பழகியவளுக்கு அன்று எதையோ இழந்தது மாதிரி இருந்தது. ஆம் வித்தியாவின் தாய் இறந்து 10 நாட்களுக்குப்பின் இன்று தான் முதல்முதலாக அலுவலகத்திற்கு புறப்படுகிறாள் வித்தியா. அம்மாவின் பிரிவை தாங்குவதற்கும், மனம் ஆறுதல் அடைவதற்கும் அவளுக்கு இன்னும் பல நாட்கள் தேவைப்பட…
-
- 40 replies
- 109k views
-
-
"வருத்தமில்லா வாலிபர் சங்கம்" - இந்த வார்த்தையைக் கேட்டாலே ஏதோ உருப்படாதவர்களின் சங்கம் என்று முகம் சுளிக்கும் வயோதிகர்கள் நிறைந்த உலகம் இது. வருத்தப்பட்டு என்ன ஆவப்போகுது என்று முடிவு கட்டி சங்கம் அமைப்பது ஒரு பெரிய குற்றமா என்ன? "வருத்தப்பட்ட வயோதிகர் சங்கம்" இதுவரை நமது சங்கத்தை விட பெரியதாக என்னத்தை சாதித்தது என்று சவால் விட்டு என் அட்லஸ் வாலிபர் மாதத்தை ஆரம்பிக்கிறேன். என்னையும் ஒரு வாலிபனாக மதித்து 2007 ஆண்டின் முதல் அட்லஸ் வாலிபராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி! வால் முளைத்ததால் தான் "வாலி" என்று இராமாயண வாலிக்கு ஒரு பெயர் வந்ததோ என்று சில சமயம் நினைப்பேன். வால் இல்லாவிட்டாலும் வாலிக்கான குணநலன்கள் கைவரப்பெற்றவர்கள் வாலிபர்கள் என்பதாலோ என்னவோ நம்மை "வாலி"பர்கள…
-
- 4 replies
- 2.1k views
-
-
பைக்குகளின் மேல் எனக்கு எப்போது காதல் ஏற்பட்டது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் சகலகலா வல்லவன் படத்தில் தலைவரின் "இளமை இதோ இதோ"வில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். சென்னையில் வசிக்கும் இளைஞர்களை பலநேரங்களில் காக்கும் கடவுள் அவர்களது பைக்குகள் தான். சொன்னால் நம்பமாட்டீர்கள் என் பைக் நான் சொல்லும் பேச்சை கேட்கும். என்னுடனும் திரும்ப பேசும். "மச்சி இன்னைக்கு பவுர்ணமி. மகாபலிபுரம் போகணும். அப் அண்டு டவுன் 100 கி.மீ. பத்திரமா போயிட்டு வந்துரலாமா" என்று கேட்டால் "பட்டையக் கிளப்பிடலாம் மாமு" என்று பதில் சொல்லும். அஃறிணைகளோடு பேசும் பழக்கம் எனக்கு எப்போது வந்தது என்று நினைவில்லை. தினமும் வீட்டுக்குள் நுழையும்போது கழட்டி விடும் என் செருப்புக்கோ அல்லது ஷூவுக்கோ மனதுக…
-
- 2 replies
- 2.4k views
-
-
நான் +2 படித்துக் கொண்டிருந்தபோது என் வீட்டுக்கும், பள்ளிக்கும் சுமார் 5 கி.மீ தூரம் இருக்கும். லஞ்ச் அவரில் வீட்டுக்கு வந்தே சுடச்சுட சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போகும் வாய்ப்பிருந்தது. 1 to 2 லஞ்ச் அவர் என்பதால் கால்மணிநேரத்தில் சைக்கிளை மிதித்து வீட்டுக்கு வந்து கால் மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு உடனே பள்ளிக்கு திரும்ப முடிந்தது. இந்த மாதிரியான லஞ்ச் அவர் ட்ராவலில் எனக்கு அறிமுகமானவர்கள் தான் மூர்த்தியும், சண்முகமும். இருவரும் என் வகுப்புத் தோழர்கள் என்றாலும் அவர்கள் வேறு "தாதா" குரூப், நான் வேறு "மாபியா" குரூப். அவ்வளவாக டச்சப் ஆரம்பத்தில் இல்லை. எனினும் மூவரும் ஒரே வழியில் தான் வீட்டுக்கு வந்தாக வேண்டும் என்பதால் வேறு வழியின்றி பேச்சுத்துணை நண்பர்கள…
-
- 1 reply
- 1.3k views
-
-
இல்வாழ்வு தந்த இயலாமை கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, "அம்மா அம்மா பிடியுங்கோ" என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. "இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?" "அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?" "ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி..."…
-
- 8 replies
- 1.9k views
-
-
எதிரி ஓய்வு நிலையிலிருந்த உலகம் மெல்ல மெல்லச் சோம்பல் முறித்துச் செயற்பட ஆரம்பிக்கும் காலை நேரம். சூரியனும் தன் பொற் கிரணங்களை அள்ளி வீசத் தொடங்கி விட்டான். அவசர உலகத்தின் வேகத்திலே மனிதனை விஞ்சிவிட வேண்டுமே என்ற ஆவேசத்துடன் பறவைகள் தம் உறக்கம் கலைத்து இரை தேடக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. வெள்ளைச் சிறகு கட்டிய பள்ளிக் குழந்தைகள், தம் தோட்டத்தைப் பார்க்கச் செல்லும் கமக்காரர்கள், சந்தை வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள்... என வீதிகள் சுறுசுறுப்படையத் தொடங்கி விட்டன. வழமையாக வசுமதி வீட்டில் பொழுது புலர்வதில் சற்றுச் சுணக்கந்தான். அவர்களுக்கென்ன? கடைகளைக் கவனிக்கக் கணக்கப்பிள்ளைமார், பொருட்களை வாங்குவதற்கும் வீட்டு அலுவல்களைக் கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேலையாட்கள், சமையல்…
-
- 11 replies
- 3.6k views
-
-
My Love story வசந்தகாலப்பறவை. அந்திமாலை சிவக்கும் நேரம். காரிருள் மெல்லத்தன்போர்வையை சூரின்பால் போர்க்கின்றான்.. பனித்துளிகள் அங்கும் இங்குமாக பரவி விழுகின்றன. இதமான உடல்ச்சூடு இன்னும் உடம்பைவிட்டு அகலவில்லை. மனமோ, அங்குமிங்குமாக இடம்விட்டு இடம் தாவுகின்றது. ஆதலால்தான் மனம் ஒரு குரங்கு என்று முன்னோர்கள் கூறியுள்ளனரோ என்று எனக்கு எண்ணத்தோன்றியது. அத்தனையும் தாண்டி கண்கள் கடிகாரத்தை பார்க்கின்றன. ஆமாம்.. இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் புகையிரதம் வந்து சேர்வதற்கு. திடீரென.. அலைபாயும் மனததோ, ஓர்நிலைப்படுகிறது. ஆமாம்.... அது ஒரு சிலையா,? இல்லை ஓர் சி;த்திரமா? திடிரென வசந்தகாலத்தில் மட்டும் தோன்றும் பறவையாக கண்முன்னே தோன்றுகிறாள்... என்னவென்றுதான் சொல…
-
- 1 reply
- 1.6k views
-
-
மம்மி..... கதைப்புத்தகத்தில் கலந்திருந்த சுஜாதா நிமிர்ந்தாள் மம்மி நான் ஜெயிச்சுட்டேன் மம்மி கையில் கப்போடு கட்டிப்பிடித்த பாலாவை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். கண்கள் கலங்கின. என் செல்லக்குட்டி நீ எப்போதும் ஜெயிக்கணும்டா. படிப்பிலும் எந்த போட்டியாகினும் நீ வெற்றி பெறணும் என் செல்லத்தங்கம் என வாரியணைத்தாள். நான் பெரிய சம்பியனாகினால் என்ன மம்மி தருவீங்க என கண்கள் அகல விரித்து பாலா தாயை அன்போடு கேட்டான். எதுவானாலும் தருவேன்டா எனதன்பு செல்லமே என சுஜாதா வாஞ்சையுடன் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள் என்ன மம்மியோடு கொஞ்சல் என கேட்டுக்கொண்டே வந்த ரமேஷை கண்டதும் செல்லப்பைய்யன் பாலா தனது வெற்றியை தந்தயோடும் தாயோடும் சேர்த்து களித்தான். இருவரும் அவனை மாறி…
-
- 18 replies
- 2.9k views
-
-
"என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு யன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் என் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாக கேட்டுப்பார் உன் பெயர் சொல்லுமே" என்று பொங்கும் பூபாளம் நிகழ்ச்சி காலையில் காதல் நாணத்துடன் இசைத்துக் கொண்டிருந்தது. பாடலின் வரிகளில் தன்னை மறந்து பூக்களுடன் கதைக்க தொடங்கினாள் ஐங்கரி. "என் வீட்டு பூக்கள் என்னவனின் பெயரை கனவிலும் சொல்ல தயங்காது" என காதலனை எண்ணியவறே மல்லிகையில் "இச்"சென்று முத்தம் ஒன்றைப் பதித்ததாள். இலைகளிலிருந்து வந்து சிதறிய பனித்துளிகள் முகத்தில் பட்டதும் சட்டென நினைவுக்கு வந்தாள். காதல் மயக்கத்தில் தான் அங்கே செய்ததை நினைத்து முகம் சிவக்க நாணினாள். திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தவள் "அட 8 மணி ஆகிவிட்டது…
-
- 17 replies
- 3.4k views
-
-
சின்னச் சின்ன கதைகள் "எப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, புது யூனிப்பார்ம் போட்டு வரலைனா, டீச்சர் ஸ்கூலுக்கு வரவேணாம்டாங்க. சீக்கிரம் யூனிப்பார்ம் எடுங்கப்பா." தேவி சும்மாயிருக்க மாட்டே. நானே எலக்ஷன் டென்ஷன்ல இருக்கேன். இன்னும் வேலையே முடியலே. தொகுதிப் பூரா போஸ்டர் ஒட்டணும். கொடி, பேனர் கட்டணும். வட்டச் செயலாளர், பொறுப்பை எங்கிட்ட விட்டிருக்காரு. அதப் பார்ப்பேனா, இல்லை இதச் செய்வோன" கடுப்பானான் மாரி. "ஆமா, அடுப்பெரிக்க விறகில்ல, கொடி கட்டப் போறாறாம் கொடி. முதல்ல குழந்தைக்கு டிரஸ் எடுக்க வழிய பாரு, இல்லைனா, வீட்டு வாசப்படி மிதிக்காத" பொருமினாள் அஞ்சலை. வாசலில் நிழலாடியது. அஞ்சலை பார்த்தாள் சோமு நின்றிருந்தான். 'எக்கா, கட்சி கொடி, பேனர், போஸ்ட…
-
- 15 replies
- 6.2k views
-