விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
"நச்"சுன்னு அடிச்சு ஆடி 652 ரன்களைக் குவித்த ஆட்டோ டிரைவர் மகன்... 15 வயதில் உலக சாதனை! மும்பை: மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடி அடித்து நொறுக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் 15 வயதேயான இளம் கிரிக்கெட் வீரர். 199 பந்துகளில் 652 ரன்களை இந்த குட்டிப் பையன் குவித்து அத்தனை பேரையும் வியக்க வைத்துள்ளார். இந்தப் பையனின் பெயர் பிரணவ் தனவாடே. மும்பையைச் சேர்ந்த தனவாடே, மும்பையில் நேற்று நடந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் பேய்த்தனமாக ஆடி விட்டார். பள்ளிகள் அளவிலான கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வீரராக புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார் தனவாடே. இதற்கு முன்பு 1899ம் ஆண்டு ஏஇஜே காலின்ஸ் என்ப…
-
- 6 replies
- 547 views
-
-
அசோசியேட் அணிகளுக்கு தோனி முழு ஆதரவு நடப்பு உலகக்கோப்பையில் அசோசியேட் அணிகளின் ஆட்டம் குறித்து தோனி புகழ்ந்து பேசியதோடு அந்த அணிகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிரிக்கெட் ஆட்டம் உலகளாவிய தன்மையை எட்ட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வணிக நோக்கத்தை விடவும் முக்கியமானது கிரிக்கெட் ஆட்டம் எங்கு வளர்கிறது என்பதை அறுதியிடுவது. அங்கெல்லாம் கிரிக்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த நாடுகளில் கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்புகள் கூடிவருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். எங்கேனும் சிறு தீப்பொறி இருந்தால் கூட அதனை பெருந்தீயாக மாற்ற வேண்டும், அதாவது அதன் தீவிரத்தை. ஆப்கானிஸ்தான் அல்லது வேறு சில அணிகளை …
-
- 0 replies
- 547 views
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக டொனல்ட் 2016-04-28 12:16:04 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனல்ட் நியமிக்கப்படவுள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரே லிய கிரிக்கெட் விஜயத்தை முன் னிட்டு குறுகியகால அடிப்படையில் அலன் டொனல்டை பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்காவுடனான ஒப்பந்தம் நீடிக்கப்படாதது எவ்வளவு தவறானது என்பதை அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக நிய மிக்கப்பட்ட பின்னர்…
-
- 1 reply
- 547 views
-
-
ஐ.பி.எல். 2020 லீக் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 வரை ஒத்திவைக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இறுதி அனுமதி விரைவில் வரும் என்று ஐ.பி.எல். நிர்வாக சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப் போட்டிகள் இது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் என ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார். எனினும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2 ஆம் திகதி (நேற்று) நடைபெறும் ஐ.பி.எல் ஆட்சி மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இன்று ஐ.பி.…
-
- 0 replies
- 547 views
-
-
யாழில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் மோதியது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது - http://vvtfrance.com/?p=19442
-
- 1 reply
- 547 views
-
-
(புதியவன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின்வெள்ளிவிழா உதைபந்தாட்டத்தில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் இருபத்தைந்தாவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு இடையில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் போட்டியின் இறுதியாட்டம் கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து சென்.ஹென்றீஸ் கல்லூரி மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கோல் எதையும் போடாமையால் ஆட்டம் சம நிலையில் முடிந்தது. இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற…
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கை கனிஷ்ட குத்துச்சண்டை அணியில் ஹார்ட்லி மாணவன் ஷானுஜன் By Mohammed Rishad - சுவீடனில் போராஸ் நகரில் நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் (King of the Ring 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் பங்குபற்றவுள்ளார். சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் குத்துச்சண்டை கோதாவில் சுவீடன், இங்கிலாந்து, நோர்வே, பின்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, உகண்டா, கனடா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500இற்கும் அதிகமான வீரர்கள…
-
- 0 replies
- 546 views
-
-
கெளதம் கம்பீர் கதை முடிந்ததா? #EndOfGambhir? தோல்வியை நினைத்து வெற்றியாளர்கள் பயப்பட மாட்டார்கள். தோல்வி என்பது வெற்றிக்கான முயற்சிகளின் ஒரு அங்கேம. தோல்வியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெற்றியையும் தவிர்க்கிறார்கள். - ஒரு வாரத்துக்கு முன்பு, ட்விட்டரில் இதை ரீவிட் செய்திருந்தார் கவுதம் கம்பீர். நேத்து என்னடான்னா... அவரை இந்திய அணியில் இருந்தே நீக்கி விட்டது தேர்வுக்குழு. இது கங்குலிக்கு முன்பே புரிந்திருக்கிறது. அதனால்தான் விசாகப்பட்டினம் டெஸ்டில் கம்பீரை உட்கார வைத்து விட்டு, ராகுலை தேர்வு செய்தபோது கங்குலி இப்படிச் சொன்னார்... ''கெளதம் கம்பீர் விஷயத்தில் இந்திய அணி முடிவெடுத்தாக வேண்டும். உண்மையிலேயே அவர் விளையாட வேண்டும் என நினை…
-
- 0 replies
- 546 views
-
-
ஐசிசி கால்பந்து தொடர்- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 5-1 என வீழ்த்தியது அர்செனல் சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் அர்செனல் 5-1 என பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்ததியது. #Arsenal #PSG சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்செனல் - பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் அர்செனல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது…
-
- 1 reply
- 546 views
-
-
சுயநலனுக்காக விளையாடும் போதே தோல்வி கண்டேன்: மனம் திறக்கும் ராகுல்! by : Anojkiyan எனக்காக சுயநலமாக விளையாடும் போது தோல்வியடைந்தேன் அதன்பிறகு அணிக்காக விளையாட முடிவெடுத்த போது எல்லாம் கை கூடிவருகிறது என இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ரோஹித்தின் அந்த வார்த்தைகள் என்னை சாதாரணனாக்கியது. அதாவது முதலில் ராகுல் பிறகு நானா, தவானா என்பதை முடிவு செய்யலாம் என்று ரோஹித் கூறினார். இதை என்னால் மறக்க முடியாது. நான் ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய இரசிகன். அவருடன் சேர்ந்து சில ஆண்டுகள் வ…
-
- 0 replies
- 546 views
-
-
தோல்விகளின் பின்னரும் இலங்கை வீர்களின் பொறுப்பற்ற செயல் - விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாமில் சுற்றித் திரியும் ஒரு காணொளி தற்சமயம் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை முழுமையாக இலங்கை இழந்துள்ள நிலையிலும், இவர்களது இந்த பொறுப்பற்ற செயற்பாடு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும் குறித்த காணொளியின் நம்பகத் தன்மையை சரிபார்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட், அணி முகாமையாளரிடம் அறிக்கையை கோரியுள்ளது. இந்த காணொளி பதிவனை சமூக ஊடகங்களில்…
-
- 1 reply
- 546 views
- 1 follower
-
-
ஆடம் கில்கிறிஸ்ட் முதல் கே.எல்.ராகுல் வரை: ஐபிஎல் அதிவேக அரைசதங்கள் 14 பந்துகளில் அதிவேக ஐபிஎல் அரைசதம் கண்ட ராகுல். - படம். | அகிலேஷ் குமார். ஐபில் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதங்கள் சில நிகழ்ந்துள்ளன, இந்த அரைசதங்கள் அணியின் வெற்றிகளைத் தீர்மானித்துள்ளன. அவற்றில் சுவையான் சில இன்னிங்ஸ்கள் இதோ. இதில் ரெய்னாவின் பாஸ்ட் அரைசதம் ஒன்று வெற்றியைத் தரவில்லை. ஆடம் கில்கிறிஸ்ட் முதல் கே.எல்.ராகுல் வரை ஓர் பார்வை: ஆடம் கில்கிறிஸ்ட்: டெக்கான் சார்ஜர்ஸ் என்ற அணிதான் இன்று பெயர் மாறி, உரிமையாளர்கள் மாறி சன் ரைசர்ஸ் ஆக மாறியுள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் ஆக 2009-ம் ஆண்டு இருந்த ஐபி…
-
- 0 replies
- 546 views
-
-
இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இடம்பெறலாம் ! இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலோ அல்லது இலங்கையிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா, நடக்காதா என்று பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து இருநாட…
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கை வாழ்வியலுக்குள்ளே விளையாட்டையும் விதைத்து விளைவிக்கும் தேசம். இங்கு 'பார்க்கும் இடத்தில் எல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி' என்று பாரதி பாடியது போல எம்மவர்களுக்குப் பார்ப்பதெல்லாம் பந்தாகவே தெரிவதுண்டு. படிக்கும் புத்தகங்களும் பேப்பர்களும் கூட துடுப்பு மட்டையாகவும் பந்தாகவும் மாறிவிடும் மாயாஜாலங்கள் அடிக்கடி காணக்கிடைப்பதுண்டு. வடக்கின் கரையோரப்பகுதிகளில் சீரான தூரத்தில் இருக்கும் பனைகளை பழைய மீன்வலைகொண்டு இணைத்து உருவாக்கப்பட்ட கரப்பந்தாட்டக்கூடங்கள் ஏராளம் உள்ளன. இன்றளவில் இலங்கை முழுவதும் கிரிக்கெட் பேசப்படுகிறது. ஒரு யாழ் வீரனின் அறிமுகம் சர்வதேசத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் தேசிய விளையாட்டு என்று மார்தட்டப்படும் கரப்பந்தாட்டத்திற்கு…
-
- 0 replies
- 546 views
-
-
Ind Vs Aus 2-வது டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி 28 டிசம்பர் 2020 பட மூலாதாரம், QUINN ROONEY/GETTY IMAGES மெல்பர்னில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான தொடரின் இரண்டாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதால் 1-1 எனும் அளவில் இப்போதைக்கு இந்தத் தொடர் சமநிலையை எட்டியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முறை…
-
- 0 replies
- 545 views
-
-
பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கண்டி, பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் (adaderana.lk)
-
- 0 replies
- 545 views
-
-
அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் மாலிங்க நியூசிலாந்து அணியுடன் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றையதினம் (01) இரவு நேர போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும், இசுறு உதான ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் அவ்வணியின் தலைவர் ரிம் செளதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கமைய, ச…
-
- 1 reply
- 545 views
-
-
தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி - வைரலாகும் வீடியோ பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் தெரு கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுக்கான வாலிபர் ஒருவர் ஐசிசியின் உதவியை நாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #ICC #pakistanfanvideo கிரிக்கெட் என்பது நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு. எங்கு சென்றாலும் தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் கனவு தெரு …
-
- 0 replies
- 545 views
-
-
ஏலியன் டிவில்லியர்ஸை ஏன் நமக்கு பிடிக்கிறது ? ரசிகர்களால் செல்லமாக, கிரிக்கெட் உலகக் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சச்சின் டெண்டுகருக்கு பிறகு தற்போது உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்வீரர் பெயர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம்தான். சச்சின், ஷேவாக், தோனியின் பெயர்களை மட்டுமே அரங்கம் அதிர கேட்டுவந்த ஸ்டேடியங்கள், முதல் முறையாக 'ஏ.பி.டி ... ஏ.பி.டி...' என ஒவ்வொரு முறை டிவில்லியர்ஸ் களமிறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கூக்குரலிட்டதை கேட்டன. இந்தியாவில் அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு எக்கச்சக்க வர…
-
- 0 replies
- 545 views
-
-
ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு ரி-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ் 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இவர்களையடுத்து, நியூசிலாந்தின் கொலின் முன்ரோ 801 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் பகார் சமான் 793 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். நியூசிலாந்தி…
-
- 0 replies
- 545 views
-
-
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ஜொன்டி றோட்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டி றோட்ஸ் குறுகிய காலத்திற்கு பதவி வகிக்கவுள்ளார். இவர் நேற்று இரவு இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனியின் முயற்சியின் பயனாகவே ஜொன்டி றோட்ஸின் வருகை அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது இலங்கை அணியினரின் களத்தடுப்பு தரம் குன்றியிருந்ததை அடுத்தே ஜொன்டி றோட்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த எட்டாவது இண்டியன் …
-
- 3 replies
- 545 views
-
-
அணி வீரர்களுக்கு சீருடை வாங்க கடன் கொடுத்த டி20 சாம்பியன் கேப்டன்! "டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட, அணி வீரர்களுக்கு சீருடை வாங்க நான்தான் கடன் கொடுத்தேன்" என்று சாம்பியன் பட்டத்தை வென்ற மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி வேதனை தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில், தனது அணியின் வெற்றி குறித்து மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி கூறுகையில், "எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் மேலாளராக இருந்து அனுபவமே இல்லாதவர். எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்க…
-
- 0 replies
- 545 views
-
-
பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சை பயிற்சியில் பிரேசில் வீரர்கள் உலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டீனா, நெதர்லாந்து ஆகிய பலம் வாய்ந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் அனைத்துமே இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை. புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பெலோ ஹாரிசோன்ட் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரேசில், ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபல…
-
- 1 reply
- 545 views
-
-
யது பாஸ்கர் கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியானது வடக்கு மாகாணம் தழுவி வீரர்களை அடையாளம் காணும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. இரணைமடுவிலிருந்து, பரந்தன் வரையான குறித்த மரதன் போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த போட்டியில் ஆண் குழுவில் கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.கீரன் முதல் இடத்தினை பெற்றார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே.ஜெயந்தன் இரண்டாம் இடத்தினையும், வவுனியாவை சேர்ந்த எஸ்.கிந்துசன் மூன்றாம் இடத்தினையும் பெற்றனர். பெண்கள் குழுவில், வவுனியாவை சேர்ந்த எஸ்.கேமப்பிரியா முதல் இடத்தினை பெற்றுக்கொண…
-
- 3 replies
- 544 views
-
-
தினேஷ் கார்த்திக் தலைவராக தேர்வு! இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5 வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது. டி20 தொடருக்கு முன்பு இந்திய அணி - டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் இன்றும் கடைசிப் பயிற்சி ஆட்டம் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளன. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் வியாழன்று செளதாம்ப்டனில்…
-
- 1 reply
- 544 views
-