Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தோனியிடம் சிக்கித் திணறிய மூத்த புகைப்பட பத்திரிகையாளர் பெர்த்தில் நேற்று தோனியிடம் பேச்சு கொடுத்த மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவர் சரியாக அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். பேடு கட்டிக் கொண்டு வலை வேலி அருகே இந்திய கேப்டன் தோனி நின்று கொண்டிருந்த போது மூத்த புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர், தோனியிடம் பேச்சுக் கொடுத்த போது, “மாஹி (தோனி) நீங்கள் 2004-05-ல் இருந்தது போல் இல்லை. அப்போதெல்லாம் அட்டகாசமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பீர்கள்.” என்றார். அதற்கு தோனி, “பொய் சொல்லாதீர்கள். 2004ஆம் ஆண்டு உங்களுக்கு என்னை தெரியவே தெரியாது, நீங்கள் என்னவென்றால் புகைப்படத்துக்கு நான் போஸ் கொடுப்பது பற்றி கூறுகிறீர்கள்.” என்றார். உடனே அந்த புகைப்பட பத்திரிகையாளர் தன…

  2. இரவில் மாயமான வீரர் இலங்கை அணியுடன் மேற்கிந்திய தீவுகளிற்கு சென்றிருந்த சுழல்பந்துவீச்சாளர் மைக்கல் வன்டர்சே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை தொடர்ந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் முடிவடைந்த பின்னர் வன்டர்சே இரவு விடுதிக்கு வேறு சில வீரர்களுடன் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்டர்சேயை ஹோட்டலில் காணாததன் காரணமாக அணி முகாமைத்துவம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னர் ஹோட்டலிற்கு திரும்பியுள்ள வன்டர்சே தான் சில வீரர்களுடன் இரவுவிடுதிக்கு சென்றதாகவும் பின்னர் அந்த வீரர்கள் தன்னை விட்டுவிட்டு ஹோட்டல் திரும்பிவிட்டனர் எனவும் தான் வழிதெரியாமல் தடுமாறியதாகவும் குறிப்பிட்டுள்…

  3. டென்மார்க் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இருபதாவது ஆண்டு 24.08.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. டென்மார்க் தேசியக்கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதுடன் கரும்புலிகள் ஞாபகார்த்த நினைவு கல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இச் சுற்றுப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் மற்றும் 16 வயதிற்கு மேற்ப்பட்டோர் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் நோர்வேயில் இருந்து 2 அணிகளும் பிரித்தானியாவில் இருந்து 1 அணியும் கலந்து கொண்டன. வெற்றிபெற்ற அணிகள் 16 வயதிற்கு உட்பட்டோர்: 1ம் இடம்: Vejle 2ம் இடம்: Grindsted 3ம் இடம்: Middel…

  4. இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான கிரிக்கெட்டை 1980ஆம் ஆண்டுகளில் அப்போதைய அணித்தலைவர் கிளைவ் லொய்டின் வழிகாட்டலில் விளையாடியிருந்தது. இது நடந்து ஒரு தசாப்த காலத்தின் பின்னர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி அனைவரையும் கவரும் வகையில் தமது பாணியிலான கிரிக்கெட்டை உலகிற்கு காட்டியிருந்தது. எதிர்பார்ப்புகளைத் தாண்டி அப்போது பல சாதனைகளைப் புரிந்த இலங்கை அணி இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இந்த ஆண்டில் மூன்று தடவைகள் 5-0 என ஒரு நாள் தொடர்களில் வைட் வொஷ் …

  5. நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20 சதம் குவித்து சாதனை 27 FEB, 2024 | 04:54 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நமிபியா வீரர் ஜான் லொஃப்டி ஈட்டன் அதிவேக சதம் குவித்து புதிய உலக சாதனை நிலைநாட்டியுள்ளார். நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் லொஃப்டி ஈட்டன் 33 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்துள்ளார். நேபாள வீரர் குஷால் மல்லாவினால் நிலைநாட்டப்பட்ட சாதனையை ஈட்டன் முறியடித்திருப்பது விசேட அம்சமாகும். சீனாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டு விழா ரி20 கிரிக்கெட் போட்டியில் மொங்கோலியாவுக்கு எதிர…

  6. கொரோனா எதிரொலியாக தள்ளிவைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல்.போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்படுமா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு, ஐ.பி.எல்.லுக்கு வீரர்களை தேர்வு செய்யும் ஏல நடைமுறையை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐ,பி,எல், அணி உரிமையாளர்கள், முக்கிய வீரர்களை தக்கவைத்து, அடுத்த ஆண்டு ஐ.பி.எல்,லில் அவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிரிக்கெட் மைதானத்தில் சமூக விலகியிருத்தலை உறுதி செய்வது இயலாத காரியம் என்பதால் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ரத்தாவது உறுதி எனவும் கூறப்படுகிறது. கொரோனாவால் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் மற்…

  7. ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி. இந்தியக் கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவரான டோனி, நாளை ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் இன்னுமொரு மைல்கல்லை எட்டித்தொடக் காத்திருக்கிறார். இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்க்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி, 3 இலும் தோல்வி கண்டுள்ள நிலையில் ,நாளை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியில் டோனி 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வாராயின் ஒருநாள் போட்டிகளில் 9000 ஓட்டங்கள் கடந்தவர்கள் வரிசையில் இணைந்துகொள்வார். இது…

  8. நான் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்: ஸ்டெய்ன் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தான் விக்கெட் எடுக்காவிட்டாலும் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றால் அதுவே போதுமானது என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். "ஊக்கமளிக்கக் கூடிய வீரர்களான டிவிலியர்ஸ், வெர்னன் பிலாண்டர் ஆகியோரிடையே ஆடுவதே சிறந்தது. டிவிலியர்ஸ், ஆம்லா பேட் செய்வதைப் பார்ப்பது, வெர்னன் பிலாண்டர், மோர்னி மோர்கெல் சிறப்பாக ஆடுவதைப் பார்ப்பதே நம்மை ஒரு சிறந்த வீரராக மாற்றும். நான் இவர்களை விட சிறந்தவனாக விரும்பவில்லை, வெற்றி அணியில் அவர்களுடன் இருந்தால் போதும். நான் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் முடிந்து போனாலும் கோப்பையை வென்றால் எனது கழுத்தைச் சுற்றி பதக்கம் க…

  9. விடைபெறும் வேளையில் எதிரணியை களங்கடித்த மெக்கல்லம் (வீடியோ) February 8, 2016 12:09 pm நியூஸிலாந்து - அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இது நியூஸிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மெக்கல்லம் விளையாடும் கடைசி சர்வதேச ஒரு நாள் தொடராகும். இதன்பிறகு நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். எனவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றி மெக்கல்லத்துக்கு சிறப்பான முறையில் பிரியா விடைகொடுக்க நியூஸிலாந்து அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு …

  10. கால்பந்து ரசிகனே உயிர்கொள்... ப்ரீமியர் லீக் தொடங்கி விட்டது..! #PremierLeagueUpdate உலகின் மிகவும் பிரசித்திபெற்ற கால்பந்து தொடரான ப்ரீமியர் லீகின் (Premier league) புதிய சீஸன், சனிக்கிழமை தொடங்கியது. அனைத்து அணிகளும் பல புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன. குறிப்பாக, முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் போன்ற அணிகள் எல்லாம் பல மில்லியன் டாலர்களைச் செலவுசெய்து பல வீரர்களை வாங்கியதால், இந்த முறை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. நடப்பு சாம்பியன் செல்சீ, ஆர்சனல், டாட்டன்ஹாம், லிவர்பூல், யுனைடெட் மற்றும் சிட்டி அணிகளுக்கிடையே போட்டி முன்பைவிட பல மடங்கு தீவிரமாக இருக்குமென்று அனைவரும் கண…

  11. 24 JAN, 2025 | 03:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியில் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். ஐசிசி விருதுகள் சிலவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சமரி அத்தபத்து கடந்த வருடம் 9 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 458 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் அவர் குவித்த ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை 6 விக்கட்களால் அமோக வெற்றிபெற்றிருந்தது. பந்துவீச…

  12. பிரேசில் தோல்வி: மலேசிய எம்.பி.யின் 'ஹிட்லர்' ட்வீட்டால் சர்ச்சை உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ட்விட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமது தேச அணி தோல்வியுற்றதால் பிரேசில் ரசிகர்கள் சோகத்திலும், தமது தேச அணியின் அபார வேற்றியால் ஜெர்மனி நாட்டினர் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருந்த வேளையில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பங் என்பவர் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ஜெர்மனியின் வெற்றியை பாராட்டும் விதமாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் நன்று... சபாஷ்! ஹிட்லர் நீடூழி வாழ்க!" என்று கூறியிருந்தார். மலேசிய எம்.பி.யின் இந்தக் கருத்துக்கு, பல்வேறு தரப்பில் இர…

  13. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் உள்பட நாடு முழுவதும் 30 பேர் கைதாகி உள்ளனர். 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் பெற்ற பணத்தில் ஸ்ரீசாந்த் மாடல் அழகிகளுக்கும் ஏராளமான பரிசு பொருட்களை வாங்கி இருந்தார். அவைகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். சூதாட்ட தரகர்களிடம் அவர் பெ…

    • 0 replies
    • 521 views
  14. வைரலாகும் மெஸ்சி - ரொனால்டோவின் அந்தப் படம்! களை கட்டும் எல் கிளாசிகோ மோதல் கிளப் கால்பந்து போட்டியின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படும் 'எல் கிளாசிகோ' நாளை நடைபெறுகிறது. ரசிகர்களிடையே மோதலைத் தவிர்க்கும் வகையில் மெஸ்சியும் ரொனால்டோவும் முத்தம் பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் பார்சிலோனா நகரில் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் 'எல்கிளாசிகோ' மோதல் நடைபெறவுள்ளது. உலகம் முழுக்க 70 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளிப்பார்கள். 'எல் கிளாசிகோ' மோதலின் போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் ஒரு வித பதற்றம் காணப்படும். இரு நகரங்களிலும் …

  15. இறுதி போட்டிக்கு தெரிவான பங்களாதேஷ் அணி..! தென் ஆப்ரிக்காவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டிக்கு பங்களாதேஷ் அணி தெரிவாகியது. பங்களாதேஷ் அணி முதல் முறையாக இவ்வாறு இறுதி போட்டிக்கு தெரிவிக்கியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் நியுசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 6 விக்கட்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதனை தொடர்ந்து வெற்றிஇலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44வது ஓவ…

    • 0 replies
    • 521 views
  16. சர்வீஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் மீது செக். குடியரசு நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ரசூல் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யின் 2-வது சுற்று ஆட்டத்தில் லூகாஸை நடால் தோற்கடித்தார். இதன் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய லூகாஸ், சர்வீஸ் செய்வதற்கு நடால் வேண்டுமென்றே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். முன்னணி வீரர்கள் இதுபோன்ற தவறை செய்யும்போது நடுவர்களும் அவர்களைக் கண்டு கொள்வது இல்லை. இது தவறான முன்னுதாரணம். அதே நேரத்தில் வளர்ந்து வரும் வீரர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சர்வீஸ் செய்கிறார்கள். முன்னணி வீரர்கள் என்பதால் விதிகளை மீற அனுமதிக்கலாமா? இதனை யாரும் கண்டுகொள்ளா…

    • 3 replies
    • 521 views
  17. இறுதிப் போட்டியில் கால்பதித்தார் கிவிட்டோவா 2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், பெட்ரோ கிவிட்டோவா டேனிலி ரோஷ் கோலின்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இன்று காலை நடந்த பெண்ளுக்கான அரையிறுதி ஆட்டமான இப் போட்டியில் செக்குடியரசுவை சேர்ந்த 8 ஆம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா அமெரிக்க வீராங்கனையான டேனிலி ரோஸ் கோலின்ஸ் எதிர்த்தாடினார். இதில் கிவிட்டோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் இறுதிப் போட்டியில் பிளி…

  18. கூடைப்பந்தாட்ட வரலாற்றில் லெப்ரொன் ஜேம்ஸ் சாதனை By DIGITAL DESK 5 09 FEB, 2023 | 03:37 PM (என்.வீ.ஏ.) ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் தேசிய கூடைப்பந்தாட்ட சங்க (NBA) போட்டி வரலாற்றில் அதிக புள்ளிகளைப் புகுத்தியவர் என்ற கரீம் அப்துல்-ஜபாரின் 38 வருட சாதனையை லேப்ரொன் ஜேம்ஸ் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். ஓக்லஹோமா சிட்டி தண்டர் அணியிடம் லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் அணி 130 - 133 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் கூடைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான ஜேம்ஸ் (38 வயது), தோல்விக்கு மத்தியிலும் 38 புள்ளிகளைப் பெற் று கரீம் அப்துல்-ஜபாரின் …

  19. ஓய்வு அறிவித்தார் பிர்லோ ! இத்தாலி சூப்பர்ஸ்டார் ஆன்ட்ரூ பிர்லோ, கால்பந்து விளையாட்டுக்கு விடைகொடுத்துள்ளார். அவருக்கு வயது 38. இத்தாலி மிட்ஃபீல்டர் ஆன்ட்ரூ பிர்லோ, இரண்டு ஆண்டுகளாக நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடிவந்தார். முன்னதாக ஏ.சி.மிலன், இன்டர்மிலன், ஜூவான்டஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதில், ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடியபோது, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றினார். 2006-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணியிலும் பிர்லோ இடம் பிடித்திருந்தார். பிர்லோ ஃப்ரீகிக் மற்றும் பெனால்டி ஸ்பெஷலிஸ்ட். நடுக்களத்தில் அபாரமாக விளையாடக்கூடியவர். மிக நேர்த்தியான பாஸ்களையும் கோல் வாய்ப்புகளையும் உருவாக்கித்…

  20. கௌதம் கம்பீர்: தோனியின் 'நிழலில்' 2 உலகக் கோப்பைகளை வெல்ல பங்களித்தவர் பயிற்சியாளராக சாதிக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 10 ஜூலை 2024, 03:26 GMT “கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. தனிப்பட்ட முறையில் நீங்கள் புகழ்பெற விரும்பினால், தனியாக ஆடும் விளையாட்டில்தான் விளையாட வேண்டும்” கிரிக்கெட் விளையாட்டுக்கு கெளதம் கம்பீர் அளித்த விளக்கம் இது. சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் என ஏராளமான ஜாம்பவான்களுடன் சேர்ந்து தனது முத்திரையை பதித்து, தாக்கத்தை ஏற்படுத்தியவர் கம்பீர். 2008 முதல் 2011ம் ஆண்டுவரை கிரிக்கெட்டின் 3 விதமான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் முழுமை பெற்ற கிரிக்கெட்…

  21. தீவிரவாதம்தான் பிரச்னையா?! - பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய அரசியலும் #9yrsofPAKterrorattack ஜிம்பாப்வே அணியுடனான அந்த டி20 தொடரை வென்றிருந்தது பாகிஸ்தான். ஜிம்பாப்வே அணியைத்தான் வென்றிருந்தது. ஆனால், உலகக்கோப்பையையே வென்றதுபோல் அளவுகடந்த ஆர்ப்பரிப்பு. பாகிஸ்தான் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தார்கள். கோப்பையை வாங்குவதற்குமுன் பேசச் செல்கிறார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி. "பல்வேறு காரணங்களால் இந்தத் தொடர் மிகவும் முக்கியமான தொடராக அமைந்துள்ளது. இந்த அணியிலுள்ள பல வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாடியதில்லை..." என்று உருக்கமாகப் பேசினார். ஆம், 6 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் நடந்த முதல் சர்வதேசத் தொடர் அது. ஒரேயொரு சம்பவம் அந்தத் தேச…

  22. ரியல் மெட்ரிட் பயிற்றுநரை நீக்காவிட்டால் தான் விலகப்போவதாக ரொனால்டோ எச்சரிக்கை! ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழ­கத்­தி­லி­ருந்து பயிற்­றுநர் ரபாயெல் பெனிட்­டஸை நீக்க வேண்டும் எனவும் இல்­லா­விட்டால் அக்­க­ழ­கத்­தி­லி­ருந்து தான் வில­கப்­போ­வ­தா­கவும் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ எச்­ச­ரித்­துள்ளார் என தகவல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. போர்த்­துக்கல் வீரரான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ (30) 2009 ஆம் ஆண்டு முதல் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழ­கத்தில் விளை­யாடி வரு­கிறார். ஆனால், கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற லா லீகா போட்­டியில் ரியல் மெட்ரிட் கழ­கத்தை பார்ஸிலோனா கழகம் 4:0 கோல்­களால் வென்­றது. இத்­தோல்­வி­யினால், லா லீ…

  23. காமன்வெல்த் 2022: பிரிட்டனில் இன்று தொடங்கும் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி உள்ளது? 13 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இன்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு…

  24. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆஃப் ஸ்பின் வீசிய மலிங்கா இலங்கையின் கலக்கல் வேகப்பந்து வீச்சாளர் உள்நாட்டு ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஃப் ஸ்பின் வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 300 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளைக் கடந்த மலிங்கா சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. மேலும் லாகூரில் நடந்த 3-வது டி20 போட்டிக்கு அங்கு செல்ல மறுத்த வீரர்களில் மலிங்காவும் ஒருவர். இதனையடுத்து டி20 தொடர் முழுதிலும் மலிங்கா ஆடமுடியாமல் போனது. இந்நிலையில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஏ-டிவிஷன் நாக் அவுட் போட்டியில்…

  25. சுவிஸ் பயிற்சியாளர் ஒற்மார் ஹிற்ஸ்வெல்ட்விடைபெற்றார் சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் ஒட்மார் ஹிட்ஸ்பெல்ட் ஓய்வு பெற்றார். தனது சகோதரர் வின்பிரெட் (81) இறந்த துக்கத்துக்கு இடையிலும் அர்ஜென்டீனாவுக்கு எதிராக ஆடிய சுவிட்சர்லாந்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஹிட்ஸ்பெல்ட் கனத்த இதயத்துடன் விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அர்ஜென்டீனாவுடனான இந்தத் தோல்வி 1999 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. எனது இதயம் முழுவதும் உணர்ச்சி வசத்தால் நிரம்பியுள்ளது. இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தருணங்கள் கால்பந்து விளையாட்டில் மட்டுமே கிடைக்கும். அதனால்தான் கால்பந்தை விரும்புகிறேன்” என்றார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.