விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா. கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெ…
-
- 12 replies
- 6.6k views
-
-
அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்ற மாற்றுத்திறனாளியான ஒலெக்ஸி Published By: VISHNU 28 FEB, 2023 | 05:20 PM (நெவில் அன்தனி) அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் விழாவில் முதல் தடவையாக மாற்றுத்திறனாளியான மாசின் ஒலெக்சி அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார். பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற 'அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் 2022' விழாவில் உலகத் தரம்வாய்ந்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒற்றைக் கால் வீரரான மாசின் ஒலெக்சி இந்த விருதை வென்று முழு உலகினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். கால்பந்தாட்ட விற்பன்னர்களான லியனல் மெ…
-
- 0 replies
- 593 views
- 1 follower
-
-
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும் ‘மாட்டுச் சாணத்தை’ எடுத்துச் செல்லும் கிரிக்கெட் வீரர் மகாயா நிடினி : கோப்புப்படம் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போது, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஸ்போர்ட்ஸ் கிட் உடன் எடுத்துச் செல்வார்கள், சிலர் தங்களின் மனைவியை உடன் அழைத்துச் செல்வார்கள் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், ஒரு கிரிக்கெட் வீரர் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், தன்னுடன் மாட்டுச் சாணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருக்கு நேற்று 41-வது பிறந்த நாளாகும். தென் ஆப்பிரிக்க நேரப்படி இன்றுதான் அவருக்குப் பிறந்த நாள். அவர் வேறுயாரும…
-
- 0 replies
- 494 views
-
-
கிரிக்கெட் - பாக் அழைப்பு இலங்கை நிராகரிப்பு கிரிக்கெட் போட்டிகள் விளையாட வரும்படி இலங்கைக்கு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி இலங்கை நிராகரித்துள்ளது. லாகூர் நகரில் 2009 ஆம் ஆண்டு அங்கு சென்றிருந்த இலங்கை அணியினர் பயணித்த பேருந்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவில்லை. எதிர்வரும் அக்டோபர் மாதம் தமது நாட்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வருமாறு இலங்கைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், தமது அணியினரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதால், அங்கு பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்க…
-
- 0 replies
- 632 views
-
-
பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் : முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு! பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்தவகையில் முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்களை இழந்து 482 ஓட்டங்களை பெற்றது. இதில், மொஹமட் ஹபீஸ் 126 ஓட்டங்களையும், ஹரிஸ் சோஹைல், 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 202 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அணி சார்பில் உஷ்மான் கவாயா 85, ஆரோன் பின்ச் 62…
-
- 1 reply
- 358 views
-
-
குழந்தையை பார்க்க அவசரம் இல்லை: உலகக் கோப்பையை வெல்வதுதான் மிக முக்கியம் - கேப்டன் தோனி பேட்டி எனது குழந்தையை பார்க்கச் செல்வது மிக அவசரமான வேலையில்லை. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். தோனி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவரது மனைவி சாக்ஷிக்கு குழந்தை பிறந்தது. இது தோனியின் முதல் குழந்தையாகும். கடந்த இரு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அடுத்து உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது. எனினும் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியாவுக்கு உடனடியாக வந்து செல்வார் என்று எத…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திக்வெல ஏமாற்றம் Share இருபத்தியொரு ஓவர் போட்டியில் 150 ஓட்டங்களை பெறுவதன் மூலம் அணியொன்று வெற்றி பெற முடியாது என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல தெரிவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை அணி சிறப்பாக ஆரம்பித்தது ஆனால் நாங்கள் 25 -30 ஓட்டங்கள் குறைவாக பெற்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த நாங்கள் தீடீர் என மேலும் இரண்டு விக்கெட்களை இழந்தோம் என தெரிவித்துள்ள நிரோசன் திக்வெல இதுவே முக்கிய திருப்…
-
- 0 replies
- 475 views
-
-
பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார் சாய்னா உலக பேட்மிண்டன் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் வகையில் சாய்னா நெவால் சாதனை புரிந்துள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சனிக்கிழமையான இன்று ராட்சனாக் இண்டனான் என்பவர் கரோலினா மாரின் என்பவரை வீழ்த்தியதை அடுத்து சாய்னா நெவால் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். இன்று ஜப்பான் வீராங்கனை யுயி ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நெவால் தனது 2-வது அரையிறுதியில் விளையாடுகிறார். ஆனால், இந்தப் போட்ட…
-
- 0 replies
- 302 views
-
-
ஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இந்தியா அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி இந்தியா அணி 346 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. ஆட்டநேர முடிவில் ரிஷப் பந்த் 6 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் …
-
- 0 replies
- 413 views
-
-
இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்: ஆன்டி ராபர்ட்ஸ் பாராட்டு இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து விச்சாளர் உமேஷ் யாதவ்தான் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அச்சுறுத்தல் வேகப்பந்து விச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1975-76-ல் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆன்டி ராபர்ட்ஸ். | கோப்புப் படம். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராபர்ட்ஸ் கூறும்போது, "உமேஷ் யாதவ் என்னை மிகவும் கவர்கிறார். இந்தியாவின் முதல் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்தான். இவருக்கு முன்பாக இந்தியாவில் உண்மையான வேகம் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக நான் கருதவில்லை. மொகமது ஷமியும் நன்றாக வீ…
-
- 0 replies
- 435 views
-
-
151 கால கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் 501 ரன்கள் குவித்து புதிய சாதனை! கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஒரு ஜோடி 501 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில், லாங்ஷயர் கிரிக்கெட் அணியும் கிளமார்கன் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் பீட்டர்சன் 286 ரன்களையும் ஆஷ்வெல் பிரின்ஸ் 261 ரன்களையும் எடுத்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 501 ரன்கள் சேர்த்தது. இது கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜோடி அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். 151 கால வரலாற்றில் ஒரு ஜோடி 500 ரன்களை கடப்பதும் இதுவே முதல் …
-
- 0 replies
- 915 views
-
-
மஹானாமவின் பதவி ரிச்சி ரிச்சார்ட்சன் வசம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரோஷான் மஹானாம ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவரது பதவிக்காலம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைகிறது. இதனால், அவருக்குப் பதிலான ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தற்போது ரிச்சார்ட்சன் மேற்கிந்திய தீவுகள் அணியின் மானேஜர் பதவியில் இருக்கிறார். இந்த பதவி அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெறும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது. அதன்பின் ஐ.சி.சி.யின் நடுவர் பதவியை ஏற்றுக்கொள்வார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 319 views
-
-
பதிவுகள் 2015: திறமையால் தெறிக்கவிட்டு தேசத்துக்குப் பெருமை சேர்த்த சானியா சானியா- ஹிங்கிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பெற்ற விம்பிள்டன் கோப்பை, அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்; விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது; இந்திய கிரிக்கெட் கிளப்பில் (சிசிஐ) வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து; சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் 2015-ம் ஆண்டின் சிறந்த ஜோடியாக சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தேர்வு. இவை அனைத்தும் 2015-ம் ஆண்டில் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா வசமாகி இருக்கிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர், மகளிர் …
-
- 3 replies
- 689 views
-
-
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் அதிரடித் துடுப்பாட்டம் காரணமாக மேற்கிந்தியத்தீவுகள் அணி 196 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தனது அதிரடியான ஆட்டம் மூலம் 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பிரண்டன் கிங் 33 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரண் 14 ஓட்டங்களையும், ரஸல் 14 பந்துகளி…
-
- 4 replies
- 681 views
-
-
ஆங்கிலேய கிரிக்கெட் லீக் அனுபவத்திற்கு நன்றி கூறுகின்றார் குசல் மெண்டிஸ் "டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய அனுபவமோ, ஏ அணியுடனான வெளிநாட்டு விஜயமோ, உள்ளூர் கழகத் தலைமைத்துவமோ குசல் மெண்டிஸுக்கு இதற்கு முன்னர் கிடைத்ததில்லை. ஆனாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் பற்றிப் பிடித்துக்கொள்ளத் தவறியதில்லை. அதுதான் அவரது திறமை வெளிப்படுவதற்கு காரணமாகும். இங்கிலாந்தில் தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய குசல் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில் குவித்த அரைச்சதம் டெஸ்ட் அரங்கில் அவ ரது கன்னி அரைச் சதமாகப் பதிவானது. …
-
- 0 replies
- 410 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இந்திய பயிற்சியாளராகத் தேர்வு. படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டுக்கானது. கும்ப்ளேயின் பயிற்சிக்காலம் மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய தொடருடன் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு 57 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 21 பெயர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பிசிசிஐ-க்கு அனுப்பியது சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய குழு. பவுலிங், பேட்டிங் மற்றும் உதவிப்பயிற்சியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்ற…
-
- 2 replies
- 842 views
-
-
முதல் இடத்தை பிடிக்க இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே கடும் போட்டி! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 118 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. தற்போது இந்த நான்கு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தபின் டெஸ்ட் தர வரிசை வெளியிடப்படும். இதில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா அவ்விடத்தை தக்கவைக்க தீவிர முயற்சி மேற்கொள்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான், இலங்கிலாந்து, இந்தியா அந்த பதவியை பறிக்க முயற்சி செய்கிறது. எது நடக்கிறது என்று டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர்…
-
- 0 replies
- 296 views
-
-
கொள்ளை நாடகம் நடத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள். | படம்: கெட்டி இமேஜஸ். ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் 3 பேர் தாங்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறியது நாடகம் என்று அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து பிரேசிலுக்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிக்கப்பட்டதால் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி பிரேசிலிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. உண்மையில் விசாரணையில் தெரிய வந்தது என்னவெனில் அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் குடிபோதையில் எரிவாயு நிலையத்தில் நுழைந்து சூறையாடியுள்ளனர். இதனையடுத்து இவர்களை பிடித்து வைத்த பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள் சேதாரத்திற்கு பணம் செலுத்திவிட்டு இங்கிருந்து செல்லுங்கள…
-
- 1 reply
- 706 views
-
-
ஒருநாள் தொடரிலும் ஆவேசமாகவே விளையாடுவோம்: அஜிங்கிய ரஹானே உறுதி ரஹானே. | படம்: விவேக் பெந்த்ரே. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைபிடித்த அதே ஆவேசமான அணுகுமுறையையே ஒருநாள் தொடரிலும் கடைபிடிப்போம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தரம்சலாவில் அவர் கூறியதாவது: கட்டுக்கோப்பு மிக முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆவேசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒருநாள் தொடரிலும் அதே அணுகுமுறையிலேயே ஆடுவோம். தீவிர கிரிக்கெட்டை எங்கள் பலத்திற்குத் தக்கவாறு ஆடுவோம். எதிரணியினரின் பலம், பலவீனத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை. டெஸ்ட் தொடருக்குப் பிறகே ஒருநாள் தொடரை ஆவலுடன் நான் எதிர்நோக்கினேன். இங்கும் புதிதாகவே தொடங்க …
-
- 48 replies
- 3.3k views
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் தென்னாபிரிக்கா நோக்கிப் பயணம் நான்கு வருடங்களுக்கு பின்னர் கிரிக்கெட் தொடரொன்றுக்காக அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று தென்னாபிரிக்கா நோக்கிப் பயணமானது. தென்னாபிரிக்காவில் 03 டெஸ்ட் 05 ஒரு நாள் மற்றும் 03 இருபதுக்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணியை வழியனுப்பும் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த 12 பேர் கொண்ட இலங்கை குழாமில் பி.ஆர்.சீ விளையாட்டுக்கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய பண்டாரவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத், உபுல் தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளதோட…
-
- 0 replies
- 225 views
-
-
ஸ்மித், கோஹ்லியின் செயற்பாடுகளுக்கு ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்காதது ஏன்? : குற்றம் சுமத்துகிறார் டுபிளசிஸ்! சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தென்னாபிரிக்க அணி வீரர் டுபிளசிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது. இதன்போது இந்திய அணித் தலைவரும் அவுஸ்திரேலிய அணித் தலைவரும் நடந்துக்கொண்ட விதம் தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வந்தன. எனினும் இது தொடர்பில் ஆராய்ந்த ஐ.சி.சி. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது டுபிளசிஸ் பந்தை சேதப்பட…
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்ற முடியாது : தற்போதைய நிலைமைக்கு நான் என்ன செய்ய முடியும்? : தயாசிறி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்றுவது என்பது அடிப்படையற்றது. கடந்த எட்டு வருடங்களாக இலங்கையில் இடைக்கால நிர்வாக சபையே காணப்பட்டது. நான்வந்த பின்னர் தான் தேர்தல் நடத்தி ஒருவரை தெரிவு செய்தேன். அந்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்க போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியடைந்துவிட்டார். இனி மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு எம்மால் செல்ல முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் நிர்வாக மற்றும் தொழிற்பாட்டு பதவிகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட தரப்…
-
- 0 replies
- 253 views
-
-
ஹெராத் 400 விக்கெட் சாதனையும், சங்கக்காராவினால் மீண்ட கதையும்! ஹெராத், சங்கக்காரா. - கோப்புப் படம். | ஏ.எஃப்.பி. அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை குறைந்த வெற்றி இலக்கையும் எடுக்க விடாமல் நசுக்கிய இலங்கை இடது கை வீச்சாளர் ரங்கனா ஹெராத், உலகிலேயே முதன் முதலாக 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய இடது கை சுழற்பந்து வீச்சாளரானார். மேலும் அபுதாபியில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணி இலங்கை என்ற பெருமையையும் சேர்த்தார் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த ரங்கனா ஹெராத். இலங்கை அணி முரளிதரன் ஓய்வுக்குப் பிறகே பெற்ற வெற்றிகளில் ஹெராத் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளார்,…
-
- 0 replies
- 434 views
-
-
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள் ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள் ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் பிரிவில் செல்வி ச. சங்கவி 1ஆம் இடத்தை பெற்றுள்ளார். கொழும்பு தியகம மைதானத்தில் இடம்பெறும் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் 20வது வயது பெண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச்சேர்ந்த செல்வி ப. கிரிஜா 2.85m உயரம் பாய்ந்து 3ஆம் இடத்தை பெற்றுள்ளார். http://www.tamilsguide.com/blog/srilanka-news/13994
-
- 12 replies
- 2.1k views
-
-
பாகிஸ்தானை கடைசி 5 ஓவர்களில் சாத்தி எடுத்து பிறகு முதல் 6 ஓவரில் அந்த அணியை போட்டியிலிருந்தே விலக்கிய மேற்கிந்திய அணியின் கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை. ஆனால் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியபோது வெஸ்ட் இண்டீஸ் அணி டான்ஸ், கூத்து என்று கடுமையாக கொண்டாட்டங்களை வெளிப்படுத்தியது. இதற்குக் காரணம் 'மரியாதை மரியாதை' என்கிறார் மேற்கிந்திய ஆல்ரவுண்டர் வைன் பிராவோ. இது குறித்து அவர் கூறியதாவது: "ஆஸ்ட்ரேலியாவென்றால் நாங்கள் பொங்கி விடுவோம், காரணம் உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன், அந்தப் போட்டி எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி, நாங்கள் எங்களுக்கே எங்களை நிரூபித்துக் காட்டுவதிலும், ஆஸ்ட்ரேலியர்களுக்கும் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கவும் தீவிரம் காட்டினோம். அதாவது முடிவில் நாம் க…
-
- 2 replies
- 788 views
-