விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
டிவில்லியர்ஸ் ஆடும் சில ஷாட்களை என்னால் கனவிலும் ஆட முடியாது: ராகுல் திராவிட் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸின் நூதனமான அதிரடி பேட்டிங் பற்றி ராகுல் திராவிட் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் விளையாடும் சில நூதன ஷாட்கள் பற்றி ராகுல் திராவிட் கூறும் போது, “அவர் விளையாடுவதைப் பார்க்கும் போது, என்னால் அவர் விளையாடுவது போன்ற ஷாட்களை எனது கனவிலும் நான் ஆட முடியாது, அப்படிப் பட்ட ஷாட்களை ஆடுவது போல கனவு கூட கண்டது கிடையாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், அப்படிப்பட்ட ஷாட்களை ஆடும் தைரியம் என்னிடம் இல்லை” என்றார். இளம் வீரர்கள், டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது பேட்டிங்கைப் பார்த்து பழகுவது சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு பதில் …
-
- 0 replies
- 493 views
-
-
கேட்ச் பிடிக்க முற்படாத தோனி: நெஹ்ராவின் இரு அனுபவம் ஸ்லிப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரளவுக்கு தள்ளி கேட்ச் சென்றால் அதனை பிடிக்க விக்கெட் கீப்பர் தோனி சில காலங்களாக முயற்சி எடுப்பதில்லை. இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான தோனி சில வேளைகளில் அத்தகைய கேட்ச்களை அருமையாக பிடித்த தருணங்களும் உண்டு. ஆனால் சமீப காலங்களில் அவர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் முதலில் 8-0 என்று இரு அணிகளுக்கு எதிராக உதை வாங்கிய போதும் சரி, அதன் பிறகு சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் 3-1 என்று இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவிய போதும் சரி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரில் பாதியிலேயே ஓய்வு அறிவித்த தோனி பல கேட்ச்…
-
- 1 reply
- 492 views
-
-
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கான் சார்பாக ஷேஹ்ஸாத் முதல் சதம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையைப் பதிவு செய்த மொஹமத் ஷேஹ்ஸாத், ஸிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 போட்டியில் ஆப்கானிஸ்தானின் இலகுவான வெற்றிக்கு வித்திட்டார். ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிறன்று மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் மொஹமத் ஷேஹ்ஸாத் 67 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்ஸர்கள், 10…
-
- 0 replies
- 492 views
-
-
முன்னணி அணிகளின் வெற்றியுடன் ஆரம்பமான பீரீமியர் லீக் Getty Images 27 ஆவது பருவத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமானது. இங்லாந்தின் முதல்நிலை தொழில்முறை கால்பந்து தொடரான இந்த போட்டிகளின் முதல் ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. அது உள்ளிட்ட முதல் இரு தினங்களிலும் நடைபெற்ற முக்கிய போட்டிகளின் விபரம் வருமாறு. மன்செஸ்டர் யுனைடெட் எதிர் லெஸ்டர் சிட்டி போல் பொக்பா போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம் லெஸ்டர் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக் 2018/19 பருவத்தின் ஆரம்ப போட்டியில் வெற்றியை பதிவு ச…
-
- 1 reply
- 492 views
-
-
ஆனந்தா - நாலந்தா மாணவரிடையே முறுகல்; பொலிஸார் கண்ணீர்க்குண்டு பிரயோகம் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் நாலந்தா கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது கைகலப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் கலவர நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கலகமடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டதோடு பொலிஸாரால் கண்ணீர்க்குண்டுப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த கலவரத்தின் போது மாணவர்கள், அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டமையினாலேயே கண்ணீர்க்குண்டு பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பி.எம்.எச்.பீ.சிறிவர்தன தெரிவித்தார். See more at: http://t…
-
- 0 replies
- 492 views
-
-
ஜெயசூரியாவின் அதிவேக சத சாதனையை முறியடிக்கத் தவறிய இலங்கை வீரர் செகுகே பிரசன்னா அயர்லாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியது. இதில் டப்ளினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நேற்று இலங்கை அணி வீரர் செகுகே பிரசன்னா 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார், இதன் மூலம் ஜெயசூரியாவின் 48 பந்துகளில் சதம் என்ற சாதனையை செகுகே முறியடிக்க முடியாமல் போனது. செகுகே பிரசன்னாவின் ஒருநாள் கிரிக்கெட் சராசரி இதுவரை 9.19 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று திடீரென அவர் 3-ம் நிலையில் களமிறக்கப்பட்டார். இறங்கியவுடன் முதல் பந்திலேயே தனது நோக்கத்தை அவர் அறிவித்தார். அயர்லாந்து ஆஃப் ஸ்பின்னர் ஆண்டி மெக்பி…
-
- 1 reply
- 492 views
-
-
(நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த உலக மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை ஒலிம்பிக் சம்பியன்கள் சிபான் ஹசன், லெட்சைல் டெபோகோ ஆகியோர் வென்றெடுத்தனர். மொனாக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுநர்கள் விருது விழா 2024இன் போது அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், அதிசிறந்த வெளியரங்க வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு தங்கப் பதக்கத்தையும் சிபான் ஹசன் வென்றிருந்தார். பெண்களுக்கான 5000 மீற்றர், 10000 ம…
-
- 0 replies
- 492 views
- 1 follower
-
-
லிப்சிக், அடலாண்டா அணிகள் சம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேற்றம் By Mohamed Shibly - <a target='_blank' href='https://flow.aquaplatform.com/ck.php?n=31e28fe'><img border='0' alt='' src='https://flow.aquaplatform.com/avw.php?zoneid=2124&amp;n=31e28fe' /></a> ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் இரு இரண்டாம் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (11) நடைபெற்றன. இதில் RB லிப்சிக் மற்றும் அடலாண்டா அணிகள் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, …
-
- 0 replies
- 492 views
-
-
SAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு By Mohamed Azarudeen - தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) இந்த ஆண்டு (2019) 13ஆவது தடவையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையில் நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவில் நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பங்கெடுக்கும் நாடுகள் (இளையோர் கிரிக்கெட் அணிகள்) இடையே T20 கிரிக்கெட் தொடரும் இடம்பெறவிருக்கின்றது. எட்டு நாடுகள் பங்குபெறும் இந்த T20 கிரிக்கெட் தொடர் ஆடவர், மகளிர் என இரு பாலாருக்கும் நடைபெறவுள்ள நிலையில் தொடரில் பங்கெடுக்…
-
- 0 replies
- 492 views
-
-
றியல் மட்றிட்டுக்கு 10ஆவது ஐரோப்பிய லீக் பட்டம் 2014-05-25 20:30:54 அத்லெட்டிகோ மட்றிட் கழகத்தை றியல் மட்றிட் கழகம் 4 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு பத்தாவது தடவையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது. லிஸ்பன், டாலுஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 90ஆவது நிமிடம் வரை அத்லெட்டிக்கோ மட்றிட் கழகம் முதல் தடவையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை சூடுவதற்கான வாயிலில் நின்றுகொண்டிருந்தது. கடுமையாகவும் சரிசமமாகவும் மோதிக் கொள்ளப்ட்ட இப் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் ஜுவான்ஃப்ரான் தலையால் தட்டி பரிமாற்றிய பந்தை டியகோ கொடின் கோலாக்கி அத்லெட்டிக்கோ மட்…
-
- 1 reply
- 492 views
-
-
கிழக்கு மாகாண உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியனாகத் தெரிவு கிழக்கு மாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அம்பாரை மாவட்ட அணியை 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தே மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அணி கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கு மாகாணம் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங…
-
- 0 replies
- 491 views
-
-
ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள்... 13 வயது சிறுவன் சாதனை! இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லூக்கா ராபின்சன். இவர் அங்கு 13 உட்பட்டோருக்கான கிளப் கிரிக்கெட்டில், பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அங்கு மற்றொரு கிளப் அணிக்கு எதிரானப் போட்டி ஒன்றில், ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ராபின்சன். குறிப்பாக, ஆறு விக்கெட்டுகளுமே க்ளீன் போல்ட். ராபின்சனின் அதிரடி பந்து வீச்சால் அவரது அணி போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது. ராபின்சனின் இந்த சாதனையை அவரது குடும்பத்தினர் அனைவரும் நேரில் பார்த்துள்ளது க…
-
- 3 replies
- 491 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் 3-வது இடம் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் நேற்று 3-வது இடத்துக்கு அதிரடியாக முன்னேறியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் பாகிஸ்தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் 3-வது இடத்தைப் பிடித்ததால் இங்கி லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் ஓரிடம் பின்தங்கிவிட்டன. இங்கிலாந்து 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கும், இலங்கை 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கும், இந்தியா 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கும் சென்றுவிட்டது. தென்னாப்பிரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொடரை இழந்தபோதிலும் ஆஸ்திரேலியா 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன…
-
- 0 replies
- 491 views
-
-
நடுவருக்கு சிவப்பு அட்டை காட்டிய வீரர் February 24, 2016 துருக்கி சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வீரர் ஒருவர் நடுவருக்கே ’சிவப்பு அட்டை’ காட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளார். துருக்கியில் நடக்கும் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இஸ்தான்புல்லை சேர்ந்த கலாட்டாசாரே- டிரப்ஜான் அணிகள் மோதின. இதில் வீரர்களின் மோசமான நடத்தை காரணமாக டிரப்ஜான் அணியின் ஹர்மாச்சி, டெமிர் ஆகிய இருவரும் இரண்டு முறை ’மஞ்சள் அட்டை’ பெற மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் 86வது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த கவாண்டாவும் வெளியேற்றப்பட்டார். இதனால் கோபமடைந்த வீரர்கள் நடுவர் டெனிஸ் பிட்னெலை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் தர்சுன் என்ற வீரர் நடுவரிடம் இரு…
-
- 0 replies
- 491 views
-
-
இலங்கை அணியின் T 20 பாடல் February 18, 2016 இந்தியாவில் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வீரர்களை வைத்து டி20 உலகக்கிண்ணப் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிங்கள பாடலில் சந்திமால், கபுகெடரா, சிறிவர்த்தனே, துஷ்மந்த சமீரா, சனாய்க, டிக்வெல்ல உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் நடித்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=9475
-
- 0 replies
- 491 views
-
-
இளையோர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆம் இடத்துக்கான கோப்பைப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணி, விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவின் அபார சதத்தின் உதவியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 13 ஆம் திகதி முதல் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதில் D பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் மற்றம் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவி, காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டது. …
-
- 0 replies
- 491 views
-
-
வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்! இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (10) வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தா…
-
- 0 replies
- 490 views
-
-
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை A அணி, இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் கந்துறட்ட மரூண்ஸ் அணிக்காகவும் சம்பியன்ஸ் லீக் போடியில் அதே அணியிலும் 2013 ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார். http://ww…
-
- 1 reply
- 490 views
-
-
ஆஸியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக பிரெட் ஹாடின் தெரிவு அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரரும், அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளருமான பிரெட் ஹெடின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய கிரெக் பிளெவெட் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவரின் இடத்துக்கு ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரெட் ஹாடின் எதிர்வரும் 2019 ம் ஆண்டு நிறைவுவரை அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/22999
-
- 0 replies
- 490 views
-
-
அனில் கும்ப்ளே - விராட் கோலி முட்டல்.. மோதல்..! நடந்தது என்ன? கடந்தாண்டு இதே மாதம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான், அனில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் தொடர்! ஆனால் இம்முறை அதே வெஸ்ட் இண்டீஸ்... அதே இந்தியா... ஆனால் பயிற்சியாளர் இல்லை என்பது நெருடலாக இருக்கிறது. அனில் கும்ப்ளேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சாம்பியன்ஸ் டிராபி பைனலில், இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததைவிட, தலைப்புச் செய்திகளில் விராட் கோலியே அதிக முக்கியத்துவம் பெற்றார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பாங்கர்தான், இப்போதைக்கு …
-
- 0 replies
- 490 views
-
-
உம்ரான் மாலிக்: ஐபிஎல் போட்டிகளில் அசுர வேகத்துடன் மிரட்டும் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வீரர் மோஹித் கந்தாரி ஜம்முவிலிருந்து பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER ஜம்மு நகரில் வசிப்பவரும் பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளருமான அப்துல் ரஷீத்தின் இளைய மகன் உம்ரான் மாலிக் இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீசினார். உம்ரான் தனது வேகமான மற்றும் சிறந்த பந்துவீச்சு மூலம் அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வரும் நாட்களி…
-
- 0 replies
- 490 views
- 1 follower
-
-
கிரிக்கெட்டில் நடந்த அபூர்வ நிகழ்வு: பழிக்குப்பழி தீர்த்த ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி, கடந்த போட்டியில் தோல்வியடைந்ததை போல, வெற்றி பெற்ற அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. ஷார்ஜாவில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, 34.4 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற…
-
- 2 replies
- 490 views
-
-
புள்ளிப்பட்டியலில் அனைத்து அணிகளும் எட்டு போட்டிகள் விளையாடி முடித்துவிட்டன. அதன் அடிப்படையில் தற்போது : 14 புள்ளிகளோடு ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 13 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 11 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து 10 புள்ளிகளோடு நான்காவது இடத்திலும் பாகிஸ்தான் 9 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திலும் உள்ளன. அரை இறுதிக்குத் யார் தகுதி பெறவுள்ளனர் என்பதை இரு முக்கியமான போட்டிகள் நிர்ணயிக்கவுள்ளன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். ஆனால் தோல்வி பெறும் அணி பாகிஸ்தான் - வங்கதேசம் …
-
- 0 replies
- 490 views
-
-
இங்கிலாந்து வீரர் மொயீன் அலியின் காஸா ஆதரவு உணர்வை முடக்கியது ஐசிசி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ‘காஸாவைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் 'பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளியுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட் அணிந்து டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். உடனே ஐசிசி சமயம் மற்றும் அரசியல் சார்ந்த செய்திகள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட்களை அணியக்கூடாது என்று தடை விதித்தது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மொயீன் அலியின் இந்தச் செயல்பாடு மனிதார்த்த மதிப்பீடுகள் சார்ந்ததே தவிர அரசியல் அல்ல என்று ஆதரவு அளித்துள்ளது. அதாவது, மொயீன் அலி தனது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறலாம், ஆனால் கிரிக்கெட் மைதான…
-
- 0 replies
- 490 views
-
-
பெனால்டியை பாஸ் செய்த மெஸ்ஸி: சக வீரருக்கு உதவிய பெருந்தன்மை! தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், பந்தை கோல் நோக்கி அடிக்காமல், சுவாரஸ் கோல் அடிப்பதற்காக பாஸ் செய்து அப்ளாஸ் அள்ளியுள்ளார் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. தனது 300-வது கோலைப் பொருட்படுத்தாமல், சுவாரசின் சாதனைக்கு உதவிய அவரது இந்தப் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டியுள்ளனர். நேற்று நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி, செல்டா டி விகோ அணிக்கெதிராக விளையாடியது. முதல் பாதியில் மெஸ்ஸியும், செல்டா அணியின் குடேட்டியும் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய சுவாரஸ், 59 வது மற்றும் 75 வது நிமிடங்களில் கோலடித்தார். இந்நிலையில்தான் அந…
-
- 0 replies
- 490 views
-