விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில் இந்திய இளையோர் அணிக்கெதிராக எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டித் தொடருக்கான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியதன் பிரதிபலனாகவே வியாஸ்காந்துக்கு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. …
-
- 0 replies
- 643 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: புவனேஷ்வர் குமார் நீக்கம் இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் விளையாடுவார்கள். மீதமுள்ள 2 போட்டிகளுக்குப் பின்னர் அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் ம…
-
- 195 replies
- 22.7k views
-
-
தேறாத பந்து வீச்சும் மாறாத அணுகுமுறையும் இந்தியாவின் மட்டை வலு எவ்வளவுதான் கூடினாலும் 20 விக்கெட்களை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சு இல்லாமல் வெற்றிகளைக் குவிப்பது பற்றிக் கனவு காண முடியாது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை இரண்டு முறை மட்டுமே இந்தியாவால் முழுக்க ஆட்டமிழக்கச் செய்ய முடிந்திருக்கிறது. அந்த இரண்டு சமயங்களிலும் ஆஸ்திரேலியா 500 ரன்களைக் கடந்த பிறகே ஆட்டமிழந்தது. இந்தியாவால் சில சமயங்களில் வெற்றிக்கு அருகே செல்ல முடிந்தது என்றால் அதற்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததுதான் காரணம். பந்து வீச்சின் மூலம் இந்தியா அந்த நிலையை எட்டவில்லை. பிரிஸ்பேனில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே இந்திய வேகப்பந்து வீச்சு வீரியத்துடன் வெளிப்பட்டது (130-6). மற்ற சமயங்களில் யார் வேண்டுமான…
-
- 1 reply
- 554 views
-
-
அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டி – 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி: October 25, 2018 அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் அபுதாபியில் நேற்றையதினம் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில்; முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 156 னெற் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அஅவுஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 89 ஓட்டங்களை மாத்திரN ம பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இ…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி November 9, 2018 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் நிறைவில் 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 322 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. எனினும் இரண்டா…
-
- 0 replies
- 437 views
-
-
மிர்பூர் டெஸ்டில் பங்களாதேஷ் அணியை இனிங்ஸாலும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தனது அதிகூடிய வெற்றி வித்தியாசத்தை நேற்று முன்தினம் பதிவு செய்தது. இதற்கு முன் 1997 - 98 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இனிங்ஸாலும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. சிட்டகாங் மற்றும் மிர்பூரில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய `மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 254 ஓட்டங்கள் தவிர, 3 விக்கெட் மற்றும் 4 கட்சுகளும் சச்சினுக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தன. இது, டெஸ்ட் போட்டிகளில் சச்சின் கைப்பற்றும் நான்காவது தொடர் நாயகன் விருது. மிர்பூர் டெஸ்டின் இரண்டு இனிங்ஸிலும் ச…
-
- 6 replies
- 1.4k views
-
-
கோபா- அமெரிக்க கால்பந்து இறுதியாட்டம் சாம்பியன் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றியது [17 - July - 2007] கோபா அமெரிக்க கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் பிரேசில் அணி ஆர்ஜென்ரீனாவை தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது. கோபா- அமெரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டி வெனிசுலாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இதில் தற்போது சாம்பியனான பிரேசில் - ஆர்ஜென்ரீனா ஆணிகள் மோதின. பிரேசில் வீரர்களின் அபாரமான ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் ஆர்ஜென்ரீனா வீரர்கள் திணறினார்கள். ஆட்டம் தொடங்கிய 4 ஆவது நிமிடத்தில் பிரேஸில் முதல் கோலைப் போட்டது. கனிஷ்ட வீரர் பாப்டிஸ்டா இந்தக் கோலை அடித்தார். 40 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனா …
-
- 0 replies
- 979 views
-
-
அஸ்வினின் 100வது டெஸ்ட்: இந்திய மண்ணில் சாதித்தவர் வெளிநாடுகளில் சறுக்குவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 39 நிமிடங்களுக்கு முன்னர் “ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே எளிதல்ல. அதிலும் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலே அது சிறப்புதான். அதிலும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டால் அற்புதமான வீரர் என்றுதான் கூற வேண்டும்.” இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவரும், பயிற்சியாளருமான ராகுல் திராவிட், ரவிச்சந்திரன் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி குறித்து இப்படி வெளிப்படையாகப் பேசினார். ராகுல் திராவிட் தனது வாழ்நாளில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்ப…
-
-
- 3 replies
- 785 views
- 1 follower
-
-
4 பந்துகளில் 3 விக்கெட்டுகள்: தென் ஆப்பிரிக்காவை மிரட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான் டெஸ்ட் அறிமுக போட்டியிலும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: ஏ.எஃப்.பி. சிட்டகாங்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கல் அறிமுகம் கண்ட முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகப் படுத்தப்பட்ட…
-
- 8 replies
- 929 views
-
-
‘இங்கிலாந்துக்கான சாதனை என்பது கனவு நனவானது போலாகும்’’ இங்கிலாந்து அணிக்கான சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிக கோல்களைப் போட்டவர் என்ற சாதனைக்கு தற்போதைய அணித் தலைவர் வெய்னி றூனி சொந்தக்காரரானார். சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற யூரோ கிண்ண 2016 தகுதிகாண் போட்டியில் பெனல்டி கோல் ஒன்றைப் போட்டதன் மூலம் தனது 50ஆவது சர்வதேச கோலை றூனி பதிவு செய்து சேர் பொபி சார்ள்டனின் 49 கோல்கள் என்ற சாதனையை முறியடித்தார். சுவிட்ஸர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 2 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றிருந்தது. வெம்ப்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியின் 82ஆவது நிமிடத்தில் இங்கி…
-
- 0 replies
- 361 views
-
-
தேசிய மட்ட கபடிப் போட்டிகளில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. 15 வயது பிரிவில் கிளிநொச்சி சிவபுரம் அ.த.க பாடசாலை முதலிடத்தினையும், 19 வயது பிரிவில் கிளிநொச்சி இந்து கல்லூரி இரண்டாம் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்கும், வடமாகாணத்திற்கும் புகழ் தேடி தந்துள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி 19 வயது பிரிவு மாணவர்கள் திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய மட்ட கபடி போட்டியில் அனுராதபுரம் மக்குளாவ மகாவித்தியாலயத்தை எதிர்த்து தேசிய மட்டத்திற்கான இறுதிப்போட்டியில் போட்டியிட்டு பத்திற்கு இருபது எனும் விகிதத்தில் இரண்டாம் நிலையினை பெற்றுக்கொண்டார்கள். இப்போட்டியில் பிரகாசித்த இரு வீரர்களான க.தசப்பிரியன், எஸ்.சிவராஜ் ஆகியோர் தேசிய கபடி அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறி…
-
- 0 replies
- 254 views
-
-
2019 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிவந்த தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது இடதுகை பெருவிரல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் சதமடித்த ஷிகர் தவான், காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முந்தைய போட்டியில், அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவதால் உண்டாகும் தாக்கம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஓய்வு பற்றி மனம் திறக்கும் மிஸ்பா உல் ஹக் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் 13-ம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு, 41 வயதான மிஸ்பா உல் ஹக் தலைவராக இருந்து வருகிறார். இவர் இந்தியாவுடன் ஒரு தொடர் விளையாடிய பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இநதியாவுடன் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கும் தன்னுடைய தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்ப…
-
- 0 replies
- 382 views
-
-
'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது. ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி ஃபிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும் மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில் என ம…
-
- 0 replies
- 209 views
-
-
இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்! இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 215 ரன்களை சேர்த்தது. இந்த டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது நேற்றுதான். 215 ரன்கள் குவித்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, நேற்று இரண்டு விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்திருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரையே அஸ்வினிடம் கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. இன்று முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ஆட்டமிழந்தார். இதையடுத்து அடுத்தடுத்த ஓவர்களிலேயே…
-
- 1 reply
- 1.1k views
-
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ல் தொடக்கம்! இந்தியா- பாக் மார்ச் 19-ல் மோதல்!! மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 8 மைதானங்களில் ஏப்ரல் 3-ந் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. தர்மசாலாவில் மார்ச் 19-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இந்த போட்டி தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. குரூப் ஏ,பி மொத்தம் 16 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. முதல் சுற்றுக்கான குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அ…
-
- 3 replies
- 837 views
-
-
என்னிடம் வெள்ளைச் சீருடை கைவசம் உள்ளது: கிறிஸ் கெயில் சூசகம் 2015 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் பந்தை அடித்து நொறுக்கும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் இன்னமும் ஓய்வு பெற்றுவிடவில்லை என்று கூறிய மேற்கிந்திய அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், பாக்சிங் டே அன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக எதிராக களமிறங்க தன்னிடம் வெள்ளைச் சீருடை உள்ளது என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முனைப்போடு கிறிஸ் கெயில் வந்திறங்கியுள்ளார். இது பற்றி கூறும்போது, “நான் இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டுள்ளேன். எனவே டெஸ்ட் அணியில் நான் இடம்பெறும் வாய்ப்பில்ல…
-
- 0 replies
- 426 views
-
-
புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும! By A.Pradhap - நாட்டின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, முன்னாள் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன்பின்னர், நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இவ்வாறான நிலையில், அவரின் கீழான புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்றைய தினம் (22…
-
- 0 replies
- 459 views
-
-
செம சேஸ்...கோலியின் ரேஸ்! டைம் டூ லீட் கோலி என வெறுத்துப்போய் ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையில், உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த தென்னாபிரிக்காவை வொயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒரே மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருதின போட்டிகளில் வொயிட்வாஷ் ஆகும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஆஸி மண்ணில் கடந்த 2014 -ம் ஆண்டில் இருந்து இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஏழு ஒருதின போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்திய அணி விளையடியிருக்கிறது. அனைத்திலும் தோல்விதான். தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளிலும் 290 ரன்களுக்கு மேல் குவித்து…
-
- 0 replies
- 777 views
-
-
தோல்வியடையாத முதல் 10 டெஸ்ட் போட்டிகள்: ஆஸி. கேப்டன் ஸ்மித்தின் சாதனைத் துளிகள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். | கெட்டி இமேஜஸ். நியூஸிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் கேப்டன்சியில் 10 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகளைப் பெற்றதோடு 4 டிராக்களை செய்துள்ளது. இதன் மூலம் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித் 2-ம் இடத்தில் உள்ளார். 95 ஆண்டுகளுக்கு முன்பாக வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தன் கேப்டன்சியில் 8 வெற்றிகளையும…
-
- 0 replies
- 571 views
-
-
மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் புதன்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் பர்ன்லி மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபர்டில் பர்ன்லி அணிக்கு எதிராக 2-0 என அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்தது. பர்ன்லி ஓல்ட் ட்ரபர்டில் ப்ரீமியர் லீக்கில் பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். லிவர்பூலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-0 என தோல்வியுற்ற மன்சஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்ட…
-
- 0 replies
- 459 views
-
-
ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது? உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது. பாரம்பரிய முறையில் ஏற்றப்பட…
-
- 2 replies
- 4.5k views
-
-
வடக்கின் மாபெரும் போர் ;ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 ஓட்டங்களால் வெற்றி யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் போட்டி, சென்.ஜோன்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 18 ஆவது வருட ஒருநாள் போட்டி நேற்று 14 ஆம் திகதி சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது, நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 36.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனுஜன் 14, டினோசன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யாழ்ப்…
-
- 0 replies
- 441 views
-
-
ஃபிஃபாவின் உயர்மட்ட குழுவின் உறுப்பினருக்கு தடை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான குழு, ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஊழல் இடம்பெற்றது, ஆனால் தான் பொறுப்பில்லை என்கிறார் நியர்ஸ்பாக் ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்தே வுல்ஃப்காங் நியர்ஸ்பாக் கால்பந்து விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் தடை செய்யப்பட வேண்டும் என அந்தக் குழு கோரியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அவர் கையூட்டு அளிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்ற ஆண்டு நவம்பரி…
-
- 0 replies
- 404 views
-
-
சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை.? சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை என்ற கேள்விக்கு,சீன பிரதமர் லீகியாங்கின் பதில்! “நாங்கள் ஒரு நாளில் சிறுபகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக்கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக்கொள்வதில்லை. இந்தியர்களின் ஆர்வத்தைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது”என்பதாகும். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும், மற்றும் கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபி…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-