விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஏழே மாதத்தில் பெனிட்சின் பதவி பறிப்பு : ரியல்மாட்ரிட் பயிற்சியாளராக சிடேன்! ரியல்மாட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக சினடேன் சிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசன் தொடக்கத்தில் அந்த அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரஃபேல் பெனிட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் எந்த கோப்பையையும் வெல்ல முடியாத நிலையில் ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த கார்லோ அன்சாலெட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் பெனிட்ஸ், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த ஜுன் மாதம் 3 ஆண்டுகளுக்கு அவர், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பெனிட்சின் பதவி வெறும் ஏழே மாதத்த…
-
- 3 replies
- 455 views
-
-
விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- பெரெட்டினி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த, ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும். ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன்படி தற்போது ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம், 1.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பிய…
-
- 0 replies
- 455 views
-
-
உலகக்கிண்ண T-20 தொடரில் நரேன் January 24, 2016 எதிர்வரும் உலகக்கிண்ண T-20 தொடர் மூலம் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்குள் நுழைவதே தனது நோக்கம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கட் விதிமுறைகளை மீறி பந்து வீசியதாக 27 வயதுடைய சுனில் நரைனிற்கு சர்வதேச கிரிக்கட் சபையால் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் உலகக்கிண்ண T-20 தொடரிற்கு முன்னர் மீண்டும் பந்து வீச்சு பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதால், உலகக்கிண்ண T-20 தொடரில் பங்கேற்க முடியும் என நம்புவதாக சுனில் நரைன் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் இலங்கையுடன் நடைபபெற்ற ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியி…
-
- 0 replies
- 455 views
-
-
308வது வெற்றியுடன் பெடரரை முந்தினார் செரீனா யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கஜகஸ்தானின் ஷ்வெடோவாவை வீழ்த்திய செரீனா, கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் தனது 308வது வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தார். ஏற்கனவே முன்னாள் நட்சத்திரம் மார்டினா நவ்ரத்திலோவாவின் சாதனையை (306 வெற்றி) முறியடித்த செரீனா, ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர் 307 வெற்றிகள் பெற்று படைத்த சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது, 308வது வெற்றியுடன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை பதிவு செய்தவராக மகத்தான சாதனை படைத்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243929
-
- 1 reply
- 455 views
-
-
ஜேம்ஸ் பேட்டின்சன் வீசிய பவுன்சர் தாக்கியதில் நடுங்கிப் போன வாட்சன் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் நெற்றிப்பகுதியை தாக்க நடுங்கிப் போன வாட்சனை மருத்துவர் அழைத்துச் செல்லும் காட்சி. | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஆஸதிரேலிய வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் ஒன்று வாட்சனின் ஹெல்மெட்டைத் தாக்க வாட்சன் ஒருநிமிடம் ஆடிப்போனார். பிறகு மைதானத்தை விட்டு ஓய்வறைக்குத் திரும்பினார். பேட்டின்சனும் மேலும் பயிற்சியைத் தொடராமல் வருத்தத்துடன் வெளியேறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மைதானத்திலேயே ஆஸி, அணி மருத்துவர் பீட்டர் பக்னர் முதலுதவி செய்ய பிறகு அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் ஓய்வறைக்குத் திரும்பினார். மிகவும் வருத்தம…
-
- 0 replies
- 455 views
-
-
நட்சத்திர வீரர்கள் இல்லாதது வெறுப்பாக உள்ளது: மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஆதங்கம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பய ணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஹோபர்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அனுபவம் இல்லாத மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சரண்டர் ஆனது. அதேவேளையில் கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, டேரரன் சமி, ஆந்த்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேசிய அணிக் கான போட்டிகளில் பங்கேற்காமல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இ…
-
- 0 replies
- 455 views
-
-
35 வருடத்திற்கு அப்புறம் இப்படி.. இந்த மாதிரி நடந்தா கௌரவம் போயிடும்.. மேயரை புலம்ப விட்ட கொரோனா! 2020 ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற உள்ளது. ஊடகங்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளது ஒலிம்பிக் கமிட்டி.35 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க உள்ளது. இதனால், இந்த நிகழ்ச்சிக்கு உரிய கௌரவம் பறிபோய்விடும் என ஒலிம்பியா மேயர் கடிதம் எழுதி உள்ளார்.2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற உள்ளது. கொரோனாவைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் பாதிப்படைந்து இருக்கும் நிலையில், 2020 ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி …
-
- 0 replies
- 455 views
-
-
கோஹ்லியினால் ஓரம்கட்டப்படுகிறாரா அஷ்வின்? இதுவரை நான் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாகவே ஆடியுள்ளேன். என்னுடைய முழுத் திறமையை அனைவரிடமும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளேன். என்னுடைய திறமையின் காரணமாக கண்டிப்பாக விரைவில் அணியில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வாய்ப்பும் என் வீடு தேடி வரும் என இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய அணியில் விளையாடாதது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அஷ்வின் இவ்வாறு தெரிவித்தார். மிகவும் சிறப்பாக செயற்பட்ட அஷ்வின் நீண்ட காலத்திற்கு பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் திக…
-
- 0 replies
- 455 views
-
-
மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய வந்தவரை நிராகரித்த பாக். வீரர் சர்ஃபராஸ்: அதிகாரிகளிடம் புகார் சர்ஃபராஸ் அஹம்த் | கோப்புப் படம்: ஏபி துபாயில் தன்னைத் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்றவரைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சர்ஃபராஸ் அஹமத் கூறியுள்ளார். பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ஃபராஸ் அஹமதை ஒருவர் அணுகி மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து பேசியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை உடனடியாக மறுத்துள்ள சர்ஃபராஸ் சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொல்லிய…
-
- 0 replies
- 455 views
-
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்குபற்ற அனுமதி மறுப்பு பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் இரண்டு தடவைகள் சம்பியனான மரியா ஷரபோவாவுக்கும் இவ் வருட பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. மரியா ஷரபோவாவுக்கு குருட்டு வாய்ப்பு சீட்டு (வைல்ட் கார்ட்) வழங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிச்சியதை அடுத்து விதிக்கப்பட்ட 15 மாதத் தடையின்பின்னர் மரியா ஷரபோவா மூன்று டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்ல…
-
- 1 reply
- 455 views
-
-
ஆஷஸ்: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஒல்லி போப் 35 ஓட்டங்கள…
-
- 1 reply
- 455 views
-
-
தடிப்பான துடுப்புகளுக்கு வருகிறது ஆப்பு கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துடுப்புகளின் அளவை மட்டுப்படுத்துவதற்கான விதிகளை, கிரிக்கெட்டின் விதிகளில் ஏற்படுத்த வேண்டுமென, கிரிக்கெட் விதிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) உலக கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சை அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது எனத் தெரிவித்துள்ள அக்குழு, துடுப்புகளின் தடிப்பம் குறித்தும் அவற்றின் எடை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது. அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், எம்.சி.சி-இன் விதிகள் தொடர்பான இறுதி முடிவில் அதிகளவில் மதிக்கப்படும் சுயாதீனமான இந்தக் குழுவில், சர்வ…
-
- 0 replies
- 455 views
-
-
"ஐ.பி.எல் ஃபைனலில் டிரெஸிங் ரூமில் பேசியது என்ன?" - கலகல ரோஹித் ஷர்மா ‛புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோரே எடுத்திருந்தாலும், பாசிட்டிவ் சிந்தனையும் ஸ்கோர் போர்டை பற்றிக் கவலைப்படாத மனநிலையுமே, மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம்’ என்றார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யு ஷாப்பிங் மாலில் உள்ள அடிடாஸ் நிறுவனத்தின் 'ஹோம் கோர்ட்' (home court) திறப்பு விழாவில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியது: ‛‛சென்னைக்கு வருவது என் வீட்டுக்கு வருவதைப் போன்றது. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று சென்னையில் விளையாடுவதைப் பற்றி நெகிழ்வாகப் பேசினார். …
-
- 0 replies
- 455 views
-
-
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நடால்! அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் ஆடவர் பிரிவில், நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ், பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்டீஃபென்ஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் நடால் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆண்டர்சன் மோதினர். இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வென்று, அமெரிக்க ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, 58 நிமிடங்களில் போட்டியை முடித்து, தான் நம்பர் 1 பிளேயர் என்பதை நிரூபித…
-
- 0 replies
- 455 views
-
-
ரவி சாஸ்திரி சாதனை சமன் இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2 முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு போட்டியில் கிளாமோர்கன் - டெர்பி ஷையர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கிளாமோர்கன் அணியின் பேட்ஸ்மேன் அனேயுரின் டொனால்டு 123 பந்தில் இரட்டை சதம் விளாசினார். 80 பந்தில் சதம் கடந்த அவர், அடுத்த 43 பந்தில் இரட்டை சதம் அடித்தார். 100, 150 மற்றும் 200 ரன்களை அனேரியுன் சிக்ஸ் அடித்து நிறைவு செய்தார். அவர் 136 பந்தில் 26 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 234 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி 1985-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டியில் 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இது…
-
- 1 reply
- 455 views
-
-
வவுனியா காத்தார் சின்னக்குளம் அ.த.க.பாடசாலையின் வருடார்ந்த மெய்வன்மைப் போட்டி, பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதிபர் சு.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக காத்தார் சின்னக்குளம் கிராமஅலுவலர் க.தர்சன், சிறப்பு விருந்தினராக பிரதேச்சபை உறுப்பினர் யோகராசா , கெளரவ விருந்தினர்களாக சமாதான நீதவான் ந.ரவீந்திரன் , கங்கேஸ்வரி முன்பள்ளி ஆசிரியை திருமதி டட்லி,ச மூக சேவையாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 455 views
-
-
தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி January 28, 2019 தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது. ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 41 ஓவரில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது இதனையடுத்து, 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2 – 2 என சமனிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது …
-
- 0 replies
- 454 views
-
-
ஆப்பிரிக்க நாடுகள் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நைஜீரியா மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஞாயிறன்று நடந்த இறுதி ஆட்டத்தில் புர்கினோ ஃபாஸோவை 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வென்றது. நைஜீரிய அணியின் சண்டே ம்பா அற்புதமான கோலை அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆட்டத்தின் முதல் பாதியில் ம்பா இந்த கோலை அடித்திருந்தார். புர்கினோ பாஸோ அணியின் வில்ஃப்ரட் சனூ ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோல் எண்ணிக்கையை சமன் செய்ய முயன்றார். ஆனால் நைஜீரிய கோல்கீப்பர் வின்செண்ட் என்யீமா தனது விரல் நுனியால் அந்த கோலைத் தடுத்து நிறுத்தி விட்டார். இதற்கு முந்தைய ஆப்பிரிக்க நாடுகளிடையிலான பந்தயங்களைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் நட…
-
- 2 replies
- 454 views
-
-
சொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா? இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது. கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக…
-
- 0 replies
- 454 views
-
-
ஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் அனித்தா உட்பட மூவர் புதிய சாதனைகள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்பமான ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான இரண்டாவது திறன்காண் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் உட்பட மூவர் இலங்கைக்கான புதிய சாதனைகளை நிலைநாட்டினர். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இதே மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது திறன்காண் போட்டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அனி…
-
- 0 replies
- 454 views
-
-
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகவும் முன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் அணியொன்றை ஆட்டநிர்ணயசதிக்கும்பல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்தே விபி சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விபி சந்திரசேகரின் நெருங்கிய நண்பர்களையும் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் வீரர்களைம் சந்திரசேகரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்தவேளையே காவல்துறையினருக்கு ஆட்டநிர்ணய சதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இவர்களிற்கு இந்த தற்கொலையுடன் நெருங்கிய…
-
- 0 replies
- 454 views
-
-
வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி Tamil வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி தொடர்ச்சியான திறமை வெளிப்பாட்டின்மூலம் வடக்கின் முதல்தர கால்பந்துக் கழகமாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், தற்பொழுது தேசிய மட்டத்தின் கால்பந்துத் துறையைச் சேர்ந்த பலராலும் பேசப்படும் ஒரு கழகமாக மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரிவு-2 இன் சம்பியனாகத் தெரிவாகி…
-
- 0 replies
- 454 views
-
-
ரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன இலங்கை அணியின் இரசிகர்களுக்கு, பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் கிடைத்த த்ரில்லர் வெற்றி உற்சாகத்தையும், அணி மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது. இலங்கையின் இந்த வெற்றி மூலம் அனைத்து இரசிகர்களும் களிப்புற்று வரும் இத்தருணத்தில் இலங்கை அணிக்கும், இலங்கையின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிய சுழல்…
-
- 1 reply
- 454 views
-
-
பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ராவல்பின்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை இனிங்ஸால் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பங்களாதேஷ்: 233/10 (துடுப்பாட்டம்: மொஹமட் மிதுன் 63, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 44, லிட்டன் தாஸ் 33. மொமினுல் ஹக் 30, மகமதுல்லா 25, தஜியுல் இஸ்லாம் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/53, மொஹமட் அப்பாஸ் 2/19, ஹரீஸ் சொஹைல் 2/11, நசீம் ஷா 1/61) பாகிஸ்தான்: 445/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 143, ஷண் மசூட் 100, ஹரீஸ் சொஹைல் 75, அசட் ஷஃபிக் 65, அஸார் அலி 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: அபு ஜயெட் 3/86, ருபெல் ஹொஸைன் 3/113, தஜியுல் இஸ்லாம் 2/139, எபடட் ஹொஸைன் 1/97)…
-
- 0 replies
- 454 views
-
-
இருதயக் கோளாறு: 26 வயதிலேயே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஓய்வு இருதயக் கோளாறினால் 26 வயதிலேயே ஓய்வு பெற்றார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர். | கெட்டி இமேஜஸ். இருதயக் கோளாறுகள் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மென், நாட்டிங்கம்ஷயர் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தனது 26-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நேரிட்டுள்ளது. இருதயத்தின் வலது அறையில் தசை சுருங்கி விரிவதில் இவருக்கு தீவிர பிரச்சினைகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இருதய தசை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தால் அது மாரடைப்பில் போய் முடியும். இந்நிலையில் அவர் ஓய்வு அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 2012-ல் கால்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா இதே …
-
- 0 replies
- 454 views
-