விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
டி20 தொடர்: அணிக்கு திரும்பினார் ரெய்னா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா சுமார் ஓராண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு உடற்தகுதி பிரச்னைகள் காரணமாக அணிக்கு திரும்பாமல் நீடித்து வந்தவர், சமீபத்தில் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன், உடற்தகுதிக்கான "யோ யோ' சோதனையிலும் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார். அவரோடு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட…
-
- 0 replies
- 203 views
-
-
விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை அ-அ+ இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். #Dhoni #MSDhoni #MSD400 #Dhoni400 #MSD நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் பந்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் மெர்க்ராமை விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் செய்தார். இதன்மூலம் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார். 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட் (295 கேட்ச்+106 ஸ்டம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த…
-
- 0 replies
- 293 views
-
-
பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவ்வறையின் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச் செய்பாடானது கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. http://www.virakesari.lk/article/31697
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கை அணி ரசிகருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ரோஹித் சர்மா Image Courtesy - Mohamed Nilam's Facebook page சுதந்திரக் கிண்ண முக்கோண T20 தொடரில் இந்திய அணியின் தலைவராக செயற்பட்டிருந்த ரோஹித் சர்மா, தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கை அணியின் தீவிர ரசிகரான மொஹமட் நிலாமின் வீட்டுக்குச் சென்று இன்ப அதிர்ச்சி தந்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக மாறியிருக்கின்றது. யார் இந்த மொஹமட் நிலாம்? இலங்கை கிரிக்கெட் அணி எந்த நாட்டிற்கு சென்று எப்படியான தொடர்களில் விளையாடினாலும் குறித்த தொடருக்காக அந்நாட்டுக்கே பயணம் செய்து போட்டி நடக்கும் மைதானத்தில் இலங்கை அணிக்கு ஆதரவு தரும் ரசிகர்கள் சிலர் உள்ளனர். அந்த …
-
- 0 replies
- 495 views
-
-
இந்திய ரி 20 அணி - அரையிறுதி தோல்விக்கு பின்னர் பல மாற்றங்கள் இடம்பெறலாம் By RAJEEBAN 11 NOV, 2022 | 12:36 PM இந்திய ரி20 அணி அடுத்த இரண்டு வருடங்களில் பாரிய மாற்றங்களை சந்திக்கும் ரோகித் சர்மா விராட்கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் ஓய்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மா விராட்கோலி அஸ்வின் போன்றவர்கள் மெல்ல மெல்ல அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்களை மேற்கோள்காட் டிதகவல்கள் வெளியாகியுள்ளன. தினேஸ் கார்த்திக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினும் ரி20 போட்டிகளில் தங்களின் இறுதி போட்டிகளை விளையாடியுள்ளனர் பி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டார…
-
- 8 replies
- 344 views
- 1 follower
-
-
12 மில்லியன் டொலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி… உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், முதலீட்டு நிறுவனம் ஒன்றில் பல மில்லியன் டொலரை முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட குறித்த முதலீட்டு நிறுவனம், கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஓர் அறிக்கை …
-
- 3 replies
- 462 views
-
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜோன்சன், ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய இரு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார். இதில் முக்கிய விருதுகள் எதையும் இலங்கை அணி வீரர்களில் ஒருவர் கூட பெறவில்லை. இந்த ஆண்டிற்கான மக்கள் விருப்ப விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஐ.சி.சி. ஒருநாள் அணியில் இலங்கை வீரர்கள் சார்பாக அஜந்த மெண்டிஸின் பெயர் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஒருநாள் அணித்தலைவராக இந்திய அணித் தலைவர் டோனி அறிவிக்கப்பட்டுள்ளார். விருது பெற்ற…
-
- 0 replies
- 481 views
-
-
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையான ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம். இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான நான்கு ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகளை உள்ளடக்கிய போட்டித் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இன்று Nagpur துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெற்றுக்களை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர். Sourav Ganguly 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார், Gautam Gambhir 69 ஓட்டங்களையும், Dhoni 62 ஓட்டங்களையும், Rahul Dravid 54 ஓட்டங்களையும் பெற்றன…
-
- 1 reply
- 892 views
-
-
மீண்டும் மெத்தியுஸ் ; ஒருநாள் தொடருக்கான குழாம் அறிவிப்பு தென்னாபிரிக்க அணியுடனா ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியை தெரிவுக்குழுவினர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். இதன்படி இந்த அணிக்கு அஞ்சலோ மெத்தியுஸ் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகின்றது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி…
-
- 0 replies
- 310 views
-
-
Published By: SETHU 04 MAY, 2023 | 12:00 PM பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்தாட்டக் கழகத்திலிருந்து ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸி 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். கழகத்தின் அனுமதியின்றி சவூதி அரேபியாவுக்கு மெஸி சுற்றுலா சென்றமையே இதற்கான காரணம் என கழக வட்டாரங்கள் தெரஸ்ரீழிவித்துள்ளன. கத்தாரில் கடந்த டிசெம்பர் மாதம் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியின் தலைவரான லயனல் மெஸி, பிரான்ஸிலுள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்காகவும் 2021 ஆகஸ்ட்டிலிருந்து விளையாடி வருகிறார். 7 தடவைகள் பெலோன் டி' ஓர் விருதை வென்ற மெஸி பிஎஸ்ஜி கழகத்தின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். …
-
- 2 replies
- 435 views
- 1 follower
-
-
சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து லாராவும் ஓய்வு பெறுகிறார் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய கப்டன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில் நேற்று முன்தினம் மேற்கிந்தியா 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவிடம் தோற்றது. இந்த தோல்வி யின் மூலம் மேற்கிந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. இதற்கிடையே கப்டன் லாரா ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; "எனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைக்கிறேன். இது உறுதியானது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் எனது ஆட்டம் முடிவு பெறுகிறது. உலகக் கிண்…
-
- 0 replies
- 764 views
-
-
மே.இ.தீவை மோசமான நிலையிலிருந்து மீட்டார் சேஸ் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை மண்ணை கெளவ வைத்து, இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது. இந் நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஹைதராபாதிலுள்ள ராஜுவ் காந்தி சர்வதேச கிர…
-
- 0 replies
- 466 views
-
-
உலககோப்பை அரங்கை நிர்மாணிக்கும் பணியாளர்களின் அவலம் - காணொளி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடும் வெப்பத்தை தவிர்க்க, 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலககோப்பையை நவம்பர் , டிசம்பரில் நடத்துமாறு உலக கால்பந்து சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது. டோஹாவில் நடந்த ஒரு சந்திப்பை அடுத்து இந்த பரிந்துரை வந்திருக்கிறது. அதேவேளை, இந்த போட்டிக்கான அரங்கத்தை நிர்மாணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்டாரில் படும் கஸ்டங்கள், பாதுகாப்பின்மை குறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது. பிபிசி ரகசியமாக சேகரித்த சில தகவல்கள். <iframe width="400" height="500" frameborder="0" src="http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F02%2Femp…
-
- 0 replies
- 321 views
-
-
நான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி Share நான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவரல்ல ரவி சாஸ்திரி என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு இந்திய அணியினர் பயணமாவதற்கு முன்னர் விராட்கோலி இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ரவிசாஸ்திரி தலையாட்டுவாரா என நிருபர் ஒருவர் விராட்கோலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள விராட்கோலி நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் வேடிக்கையான விடயம் இதுதான் என குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான் என விராட்கோல…
-
- 0 replies
- 885 views
-
-
புதிய ஒப்பந்தம் குறித்து இந்திய சிரேஷ்ட வீரர்களுடன் கிரிக்கெட் சபையின் 2 பேர் கொண்ட குழு 11 ஆம் திகதி ஆலோசிக்கவுள்ளது. உலகக் கிண்ண தோல்வியின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இருந்த பழைய ஒப்பந்த முறை அடியோடு ரத்து செய்யப்பட்டது. அந்த முறையில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவாக வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு முறையே 50 இலட்சம், 35 இலட்சம், 20 இலட்சம் ரூபா ஆண்டுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக தற்போது புதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் சபை வகுத்துள்ளது. இதன்படி பாகுபாடின்றி அனைத்து வீரர்களுக்கும் சமமாக 5 இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்படும் என்று கிரிக்கெட் சபை அறிவித்தது. மேலும், ஒவ்வொரு போட்டி மற்றும் தொடர்களில் கிடைக்கும் வெற்றி அடிப்…
-
- 0 replies
- 853 views
-
-
யாழ் இந்து எதிர் கொழும்பு இந்து கிரிகெட் போட்டி அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் கொழும்பு இந்து வெற்றியீட்டியுளது.
-
- 4 replies
- 559 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவுள்ள புதிய விதிமுறைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்களை கொண்டுவருவதற்கு எம்.சி.சி., ஐ.சி.சி.யிடம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழுவில் இந்நாள், முன்னாள் வீரர்கள், நடுவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந் நிலையில் மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழுவின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தன. இதன்போது எம்.சி.சி. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் கீழ் கண்ட பரிந்துரைகளை முன்வைத்தன. * நேரத…
-
- 0 replies
- 719 views
-
-
உசேன் போல்ட்டை கீழே தள்ளிவிட்ட கேமராமேன் (வீடியோ): பெய்ஜிங் அதிர்ச்சி சம்பவம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.79 வினாடிகளில் கடந்து சாம்பியன் ஆனார். இந்நிலையில் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். வெற்றி உற்சாகத்தில் மைதானத்தில் குழுமி இருந்த ரசிகர்களுக்கு கைகொடுத்த வண்ணம் போல்ட் வந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வை படம் பிடித்த டி.வி. கேமராமேன் ஒருவர் தவறுதலாக பின்பக்கத்தில் போல்ட் மீது மோதிவிட்டார். இதில் நிலைதடுமாறிய போல்ட் தலைகுப்புற கீழே விழுந்தார். ஆனாலும் தனது ஸ்டைலில் 'டைவ்' அடித்து எழுந்த உசேன் போல்ட், மீண்டும் சாதாரணமாக ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று சென்றார். http://www.vik…
-
- 0 replies
- 205 views
-
-
தெல்லிப்பழை யூனியன்ஸ் வெற்றி கனகநாயகம் சுயந்தன் ஆட்டமிழக்காது பெற்ற சதம் மற்றும் எஸ்.ஜனோசன் பெற்ற அரைச்சதம் மூலம் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில், தெல்லிப்பழை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிஸ் விளையாட்டுக் கழகமும் தெல்லிப்பழை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லிஸ் விளையாட்டுக் கழகம், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. பிரதீப் 46, ஹரிஹரன் 31, தீபன் 27, சத்திய…
-
- 0 replies
- 232 views
-
-
இங்கிலாந்து பயிற்றுநர் குழாமில் மஹேல, கொலிங்வுட் பாகிஸ்தானுக்கு எதிரான மூவகை கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு மஹேல ஜயவர்தன, போல் கொலிங்வுட் ஆகியோரை விசேட பயிற்றுநர்களாக இங்கிலாந்து நியமித்துள்ளது. இதன் மூலம் தனது நிபுணத்துவ பயிற்றுநர் குழாமை இங்கிலாந்து பலப்படுத்திக்கொண்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யும் இங்கிலாந்து அணியின் பயிற்சிப் போட்டியின் போதும் பாகிஸ் தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போதும் இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டப் பயிற்சிகளை மஹேல ஜயவர்தன வழங்கவுள்ளார். ஆசிய கண்ட ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்துள்ள மஹேல ஜயவர்தன, இந்த ஆடுகளங்களில் திறமையை …
-
- 0 replies
- 269 views
-
-
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சு: இங்கிலாந்து கடும் அச்சம் ரூட் மற்றும் குக். | கோப்புப் படம் கடந்த முறை யு.ஏ.இ.-யில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்க் தொடரில் 3-0 என்று இங்கிலாந்து உதை வாங்கியதற்கு பாகிஸ்தான் ஸ்பின்னர்களே காரணம் என்பதால் இம்முறையும் இங்கிலாந்து பாக். ஸ்பின் பந்து வீச்சு குறித்து கடும் அச்சம் கொண்டுள்ளது. வரும் செவ்வாயன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா, மற்றும் சுல்பிகர் பாபர் ஆகியோர் குறித்து இங்கிலாந்து கேட்பன் குக் அச்சம் வெளியிட்டுள்ளார். 2012-ம் ஆண்டு தெஸ்ட் தொடரின் போது நம்பர் 1 டெஸ்ட் அணியாக இங்கிலாந்தை பாகிஸ்தான் 3-0 என்று வீழ்த்தி ஒன்றுமில்லாமல் செய்தது. அந்தத் தொடரில் சயீத் அஜ்மல் 24 விக்கெட்டுகளையும், அப்துல் ரெ…
-
- 0 replies
- 267 views
-
-
திரிமான்ன நீக்கப்பட்டார் டிசெம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட், ஒ.நா.ச, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன அடங்கிய தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் குழாமிலிருந்து லஹிரு திரிமான்ன நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட்: அஞ்சலோ மத்தியூஸ், குசால் மென்டிஸ், உதார ஜயசுந்தர, டினேஷ் சந்திமால், குசால் பெரேரா, மிலிந்த சிரிவர்தன, கித்துருவன் விதானகே, திமுத் கருணாரத்ன, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, ஜெப்றி வன்டர்சே ஒ.நா.ச: அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, திலகரட்ண டில்ஷான், குசால் பெ…
-
- 0 replies
- 241 views
-
-
இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில், 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரையும் தக்கவைத்துக் கொண்டது. மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 301 ரன்கள் சே ர்த்தது. இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால்,197 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றி…
-
- 0 replies
- 711 views
-
-
09 DEC, 2024 | 02:08 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 20.04 செக்கன்களில் ஓடி முடித்ததன் மூலம் அரை நூற்றாண்டு நீடித்த அவுஸ்திரேலியா மற்றும் ஓஷானியா சாதனையையும் 16 வயதுடையோருக்கான யுசெய்ன் போல்டின் சாதனையையும் அவுஸ்திரேலியாவின் கௌட் கௌட் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அவுஸ்திரேலிய அனைத்துப் பாடசாலைகள் சம்பியன்ஷிப் போட்டியிலேயே கௌட் கௌட் (Gout Gout) இந்த புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆண்களுக்கான 200 ஓட்டப் போட்டியில் 1968ஆம் ஆண்டு பீட்டர் நோமன் நிலைநாட்டிய ஓஷானியாவுக்கான (கடல்சூழ் நாடுகள்) 20.06 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்த கௌட் கௌட், 2003ஆம் ஆண்டு யுசெயன்…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
SAG மெய்வல்லுனரில் நிலானிக்கு முதல் தங்கம்: மயிரிழையில் தங்கத்தை இழந்த ஹிமாஷ By Mohammed Rishad - தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை நிலானி ரத்நாயக்க பெற்றுக் கொடுத்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றது போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (03) காலை இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களை பெற்றுக் கொடுக்கின்ற போட்டி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. …
-
- 0 replies
- 553 views
-