Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஜடேஜா உலகத்தர ஸ்பின்னர் இல்லை... ஏன்? - ஒரு பார்வை ஜடேஜா, தோனி, பின்னால் அஸ்வின். | கோப்புப் படம். உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் இந்திய அணியில் ஜடேஜாவின் பங்களிப்பு குறிப்பிடும்படி அமையவில்லை. நேற்று அரையிறுதியில் அவர் 4 ஓவர்களில் 48 ரன்களை வாரி வழங்கினார். இதில் ரன் இல்லாத 5 பந்துகள் போக 4 பவுண்டரி 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஆக, 12 பந்துகளில் 34 ரன்கள், சரியாகக் கூறுவதென்றால் 7 பந்துகளில் 34 ரன்கள், ஆனால் டாட் பந்துகளையும் சேர்த்துதான் ஆகவேண்டும் எனவே கிட்டத்தட்ட ஒரு பந்துக்கு 3 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் கொடுத்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில், இவர் அளவுக்கு மூன்று வடிவங்களிலும் விளையாடும் மற்ற இடது கை சுழற்…

  2. ஜடேஜாவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்தியது இந்தியா (என்.வி.ஏ.) இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களான ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரின் அற்புதமான சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் 3 நாட்களுக்குள் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 புள்ளிகளை இந்தியா பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (06) நிறைவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டி சில் மைல்கற்களை பதவுசெய்தமை விசேட அம்சமாகும். ஓரே டெஸ்ட் போட்டியில் 150க்…

  3. ஜடேஜாவுடன் ஏற்பட்ட மோதல் உலகக் கோப்பையின் போது பாதித்தது: ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த முறை இந்திய அணி, இங்கிலாந்து சென்றிருந்த போது டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜடேஜாவைத் தள்ளிவிட்டதாக ஆண்டர்சன் மீது புகார் எழுந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகே தான் மாறிவிட்டதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். இன்று இங்கிலாந்து-மே.இ.தீவுகள் அணி ஆன்ட்டிகுவாவில் விவ் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் ஜடேஜாவுடனான சம்பவம், அதனையடுத்த விசாரணைக்குப் பிறகு தான் முன்பு இருந்த ஆக்ரோஷமான பவுலராக இருப்பேனா என்பது சந்தேகமாக உள்ளது என்று ஆண்டர்சன் தெரிவித்தார். டிரெண்ட் பிரிட்ஜில் அன்று, 2-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேள…

  4. ஜன.27ல் யு-19 உலககோப்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கிறது. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளும், பி பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், கனடா ஆகிய அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, பிஜி அணிகளும் டி பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19 நாட்கள் நடைபெறும் தொடரின் முதல் ஆட்டத்தில் 27ம் தேதி நடப்பு சாம்பியன் தென்…

  5. ஜனவரி 27, 28-ல் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு 2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது. மும்பை: உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது. 2018-ம் ஆண்டுக்கான 11-வது…

  6. ஜனாதிபதி முதல் சமானியன் வரை சானியா பத்திதான் பேச்சு...! விம்பிள்டன் மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் வரலாற்றில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியாதான். இதையடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சானியாவுக்கு வாழ்த்துக்கள்... இளம் இந்தியர்களுக்கு உங்கள் சாதனை ஊக்க சக்தியாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார். அருமையான டென்னிஸ் விளையாட்டை வெளிப்படுத்தி, அற்புதமான வெற்றியை ஈட்டியுள்ள உங்களால் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செ…

  7. ஜனாதிபதியை விஞ்சவிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஊதியம்! இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை ரூ.12 கோடியாக உயர்த்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலுள்ள கிரிக்கெட் வாரியங்களில் அதிக வருமானம் ஈட்டும் வாரியங்களில் ஒன்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே இதற்குக் காரணமாகும். போட்டி ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்ஷர்ஷிப், ஐ.பி.எல் எனப் பல்வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது, இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் …

  8. ஜப்பானிய ஃபார்முலா ஒன்று கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் வெற்றி மெர்சிடிஸ் வாகன நிறுவனத்தின் பந்தய ஓட்டுநர் நிகோ ரோஸ்பெர்க் ஜப்பானிய ஃபார்முலா ஒன்று கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் வெற்றியடைந்து, அவருடைய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது சாம்பியன் கோப்பையை பெற்று தந்துள்ளார். 2014-2015 போட்டியின் பருவ காலத்தில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார் நிகோ ரோஸ்பெர்க் இந்த பருவத்தின் நான்கு போட்டிகள் இன்னும் எஞ்சியிருக்கும் நிலையில் ,மெர்சிடிஸ் அதனுடைய மிகவும் நெருங்கிய போட்டியாளர் ரெட் புல்லை விட முன்னிலை பெற்று இந்த கோப்பையை வென்றிருக்கிறது. நிகோ ரோஸ்பெர்க்கிற்கு 23-வது தொழில்முறை வெற்றி இத…

  9. ஜப்பான் கிராண்ட் பிரியில் விபத்தில் சிக்கிய வீரர் 9 மாதங்களுக்கு பிறகு மரணம்! ஜப்பான் கிராண்ட் பிரி பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, 9 மாதங்கள் சிகிச்சைக்கு பின்,நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 25. பிரான்சை சேர்ந்த பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஜப்பான் கிராண்ட் பிரி போட்டியின்போது மெர்சியா குழுவுக்காக பங்கேற்ற பியான்ச்சியின் பந்தய கார், விபத்தில் சிக்கியது. பலத்த மழை காரணமாக பியான்ச்சியின் கார் பந்தய பாதையில் இருந்து வழுக்கி சென்று, அருகில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவி வாகனத்தின் மீது ம…

  10. ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் ஜப்பானில் நடந்த பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். சுஜுகா : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மூன்று முறை சாம்பியனான இங்கில…

  11. பாகிஸ்தான் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமேக்காவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியா மற்றும் அயர்லாந்திடம் அடுத்தடுத்து படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் மர்மமான முறையில் இறந்தார். ஜமேக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஹோட்டல் அறையில் அவர் வாந்தி எடுத்தும், மூக்கில் இரத்தம் வழிந்த நிலையிலும் மயங்கிக் கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் …

  12. ஜயசூரிய - தரங்கவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி! அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 320 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணியின் டீப்டி சர்மா 188 ஓட்டங்களையும், பூனம் ரவுட் 109 ஓட்டங்களையும் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் சாரா டெய்லர் மற்றும் கரோலின் அட்கின்ஸ் பெற்ற 268 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. இதேவேளை ஆண்களுக்கான ஒருநாள் போட்டியொன்றில் உபு…

  13. ஜயசூரியவை பின்னுக்கு தள்ளிய சங்கா புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய மைல்கல் ஒன்றை எட்டினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் அதி கூடுதலாக ஓட்டங்களை பெற்றவர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றி குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார் . நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய நான்காவது ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த இலக்கை அடைந்துள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 394 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 20 சதங்கள் 92 அரைச் சதங்கள் அடங்கலாக 13490 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 40.63 சராசரியையும் கொண்டுள்ளார். சர்வ…

  14. சென்ற வாரம் நடைபெற்ற ஜரோப்பிய தடகளப் போட்டியில் சுவிஸ் நாட்டிற்காக ஒரு தமிழர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்றுள்ளார். இறுதிச் சுற்றில் சில விநாடிகளால் 3ஆம் இடத்தை நழுவிட்டுள்ளார்கள். http://www.youtube.com/watch?v=RMqSS0ZlPFQ

  15. (நெவில் அன்தனி) அங்குரார்ப்பண லங்கா ப்றீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சம்பியனான ஜவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்கள், அதன் உரிமைத்துவத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகிக்கொண்டுள்ளனர். 'இது ஒரு கவலை தரும் செய்தியாகும். எமது பணியை மீண்டும் செயல் உருவாக்குவதற்கு நாங்கள் எங்களால் ஆன அதிகபட்ச முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அது சாத்தியப்படவில்லை. சுருங்கச் சொல்லின் இப்படி ஒரு முடிவுக்கு வருவோம் என நாங்கள் நிச்சயமாக எண்ணவில்லை' என ஜவ்னா ஸ்டாலியன்ஸ் ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'யாழ்ப்பாணத்தை நேசிப்பதாலும் இலங்கையில் எமது பணி அர்த்தம் மிக்கதாக அமைய வேண்டும் என்பதாலும் எமது உரிமைத்…

  16. ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் குவித்த 35 ரன்கள் - பிரையன் லாராவின் உலக சாதனை முறியடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரில் 35 ரன்கள் சேர்த்து, இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி குறித்த முக்கிய தகவல்கள் இங்கே தொகுத்துள்ளோம். டெஸ்ட் போட்டிக்கு பேர்போன இங்கிலாந்து அணி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் எனும் சாதனை படைத்திருக்கிறார் இந்திய கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித்…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய் கிஷோர் பதவி,மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி 11 ஜூன் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது. கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம் : அது `ஜஸ்பிரித் பும்ரா’. பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீ…

  18. ஜஸ்ப்ரீத் பும்ராவைச் சந்திக்க முடியாத ஏக்கத்தில் தாத்தா மரணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங், சபர்மதி ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ராவைப் பார்க்க அகமதாபாத்துக்கு வந்த அவரை ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாயார் தல்ஜித் சிங் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்தோக் சிங் காணாமல் போனார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சபர்மதி ஆற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார். குஜராத்தின் மிகச்சிறந்த வர்த்தகராக திகர்ந்த சந்தோக் சிங்கின் வியாபாரம் நஷ்டத்தைச் சந்தித்தையடுத்து, ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆங்கில நாளிதழ் ஒன்ற…

  19. ஜாதவ் விக்கெட் எடுத்ததால் வர்ணனை அறையிலிருந்து வெளியேறிய ஸ்காட் ஸ்டைரிஸ்: மொஹாலியில் ருசிகரம் விக்கெட் வீழ்த்திய கேதர் ஜாதவ்வை பாராட்டும் இந்திய வீரர்கள். | படம்: அகிலேஷ் குமார். மொஹாலி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங் பற்றி எதிர்மறையாகக் குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ் தனது பந்தயத்தில் தோற்றார். ஜாதவ் பந்து வீச அழைக்கப்பட்ட போது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோருடன் நியூஸிலாந்து வர்ணனையாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் வர்ணனை அறையில் அமர்ந்திருந்தார். ஜாதவ்வின் பந்து வீச்சு குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்த ஸ்காட் ஸ்டைரிஸ், “ஜாதவ் இன்று விக்கெட் எடுத்தால் இந்த வர்ணனை அறையிலிருந்து வெளியேறுகிறேன், முதல் விமானத்தை பிடித்து நியூஸில…

  20. ஜானி பேர்ஸ்டோ - பேங்க்ராப்ட் ‘தலைமுட்டு’ சர்ச்சை: இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் காட்டம் இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ். - படம். | ஏ.எஃப்.பி. பெர்த்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பேங்கிராப்டை ‘பார்’ ஒன்றில் சந்தித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ அவரைத்தலையால் முட்டியதாக எழுந்த சர்ச்சை தற்போது பெரிதாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, களத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் காட்டமாக கடிந்து கொண்டுள்ளார். அதுவும் பிரிஸ்பன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலா…

  21. ஜாம்பவான் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீசை 115 ரன்னில் சுருட்டியது யுஏஇ கெய்ல், சாமுவேல், லெவிஸ் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை 115 ரன்னில் சுருட்டியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். #WIvUAE ஜிம்பாப்வேயில் வருகிற 4-ந்தேதி உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் தொடங்குகிறது. இதற்கு முன் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. உலகக்கோப்பைக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி கிறிஸ் கெய்ல், சாம…

  22. ஜாம்பவான்களின் இருபதுக்கு 20 : மஹேலவுக்கு அழைப்பு முன்னாள் நட்­சத்­திர வீரர்கள் பங்­கேற்கும் ‘லெஜண்ட்ஸ் பிரி­மியர் லீக் இரு­ப­துக்கு20’ தொடரில் விளை­யாட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலை­வரும் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான மஹேல ஜய­வர்­த­ன­வுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தகவல் வெ ளியாகியுள்ளது. சச்சின் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோர் இணைந்து, ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்­நி­லை­யி­லேயே ஜாம்­ப­வான்க ளுக்­கான இரு­பது ஓவர் கிரிக் கெட் போட்டித் தொடரில் விளையாட மஹே­ல­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது. http://www.virakesari…

  23. நான் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு போட்டி இன்று நடைபெற்றது. இந்த எதிர்பார்ப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் குறிப்பிடத்தக்க காரணம் கடந்த இரு மாதங்களாக இலங்கையணியை துவம்சம் செய்து வரும் நியுசிலாந்தணியின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரரும், அணியின் தளபதியுமான பிரண்டன் மக்கலத்தின் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தை யாராவது தடுத்து நிறுத்த மாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பே முதலாவது. இரண்டாவது காரணம், இந்த முறை உலகக் கிண்ணத்தை எப்படியாவது தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்கலத்தின் அணிக்குச் சவாலாக யாராவது வரமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. மூன்றாவது காரணம், எனது இரண்டாவது அபிமான அணியான அவுஸ்த்திரேலியா (எனது முதலாவது அணி எதுவென்பதை நான் விளையாட்டுத் திடலில் முன்…

  24. ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கும் தோனி ஜார்கண்ட் அணி வீர்ர்களுடன் இணைந்த தோனி. | படம்: ஜி.சம்பத்குமார். நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்காக ஜார்கண்ட் அணிக்குக் களமிறங்குகிறார் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி. தோனி கடைசியாக 2007-ல் ஜார்கண்ட் அணிக்காக உள்நாட்டுப் போட்டியில் ஆடினார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வருண் ஆரோன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட ஜார்கண்ட் அணியில் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக ஜார்கண்ட் தனது முதல் போட்டியில் மோதுகிறது. பிரிவு பி-யில் ஜார்கண்ட் அணியுடன் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ரயில்வேஸ், கேரளா, ஹரி…

  25. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு அமெரிக்காவில் ஹாக்கி பயிற்சி - யார் அந்த பெண்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHAKTIVAHINI ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் 70 வீடுகள் மட்டுமே கொண்ட ஹெசல் கிராமம் பற்றி தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்த கிராமம் பற்றிய பேச்சு இப்போது மேலும் அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் 17 வயதான புண்டி சாரு. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வளரும் ஹாக்கி வீரர்களில் புண்டி சாருவும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள மிடில்பரி கல்லூரியில் கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். புண்டி சாருவின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.