விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றில் அனுப்பி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தளு. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன…
-
- 0 replies
- 834 views
-
-
அர்ஜென்டினா - பிரான்ஸ் போட்டியை மீண்டும் நடத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் தீவிரமான கையெழுத்துவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை வசமாக்கிக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. போட்டி முடிந்ததில் இருந்தே இறுதிப் போட்டி சர்ச்சைகள் தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டன. ஆன்லை…
-
- 1 reply
- 901 views
- 1 follower
-
-
எல்பிஎல் கிண்ணத்தை 3 ஆவது தடவையாக சுவீகரித்து வரலாறு படைத்தது லைக்கா ஜெவ்னா கிங்ஸ் ; வியாஸ்காந்துக்கு முன்னேறிவரும் சிறந்த வீரருக்கான விருது 24 Dec, 2022 | 07:39 AM (நெவில் அன்தனி) கலம்போ ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய லைக்கா ஜெவ்னா கிங்ஸ், 2022 எல் பி எல் சம்பியனானது. இதன் மூலும் இலங்கையில் விளையாடப்பட்ட முதல் 3 எல் பி எல் அத்தியாயங்களிலும் ஜெவ்னா கிங்ஸ் சம்பியனாகி வரலாறு படைத்தது. இந்த வெற்றியுடன் 3 கோடியே 60 இலட்சம் ரூபா பணப்பரிசை ஜெவ்னா கிங்ஸ் தன…
-
- 0 replies
- 353 views
-
-
ரொனால்டோ சவுதி அரேபியா சென்றார் 🚨 கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவுடன் 7 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார், வருடத்திற்கு £170 மில்லியன். 💰 கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சேவைகளுக்கான அரசாங்க ஆதரவுடன் அல்-நாசருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக துபாய் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் அல்-நாசரின் வீரராகவும், மீதமுள்ள ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கான அதிகாரப்பூர்வ தூதராகவும் மற்றும் அவர்களின் 2030 உலகக் கோப்பை ஏலத்தில். 🇸🇦 கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் சவூதி அரேபியாவுக்குச் சென்று இஸ்லாமிய நாட்டின் மிக உயர்ந்த குடிமக்களில் ஒருவராக மாறினால், சூரிய ஒளியில் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்கள். சவூதி அரேபியாவை மேற்கத்திய பார்வையாளர…
-
- 1 reply
- 352 views
-
-
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்! டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை இந்திய ரூபா மதிப்பில் 5.75 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. https://thinakkural.lk/article/229868
-
- 177 replies
- 11.5k views
- 1 follower
-
-
வட மாகாண விளையாட்டு விழா : வவுனியா மாணவனுக்கு தங்கம், வெள்ளி By DIGITAL DESK 2 20 DEC, 2022 | 05:16 PM வட மாகாண விளையாட்டு விழாவில் வவுனியா மாவட்டத்தைச் செர்ந்த சசிகுமார் டனுசன் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் வென்றெடுத்தார். 1,500மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 37.00 செக்கன்களில் ஓடி முடித்து சசிக…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி By SETHU 20 DEC, 2022 | 12:00 PM கராச்சியில் இன்று நிறைவடைந்த பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் வென்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். கடந்த 17 வருடங்களின் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய இங்கிலாந்து அணி 3:0 விகிதத…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
நாங்க சர்வதேச விளையாட்டுகாரர்கள்.❤️ 1🌍 Kylian Mbappé (Cameroun/ Algérie 🇨🇲🇩🇿) 2🌍 Ousmane Dembélé (Mali/ Mauritanie 🇲🇱🇲🇷) 3🌍 Aurélien Tchouameni (Cameroun 🇨🇲) 4🌍 Karim Benzema (Algérie 🇩🇿) 5🌍 Ibrahima Konaté (Mali 🇲🇱) 6🌍 Jules Koundé (Bénin 🇧🇯) 7🌍 Steve Mandanda (RD Congo 🇨🇩) 8🌍 Youssouf Fofana (Côte d'ivoire 🇨🇮) 9🌍 Mattéo Guendouzi (Maroc 🇲🇦) 10🌍 Axel Disasi (RD Congo 🇨🇩) 11🌍 William Saliba (Cameroun 🇨🇲) 12🌍 Dayot Upamecano (Guinée Bissau 🇬🇼) 13🌍 Eduardo Camavinga (Angola 🇦🇴) 14🌍 Kingsley Coman (Guinée 🇬🇳) 15🌍 Randal Kolo Muani (RD Congo 🇨🇩) 📷 Mercatospagnol 🇨🇩 RD Co…
-
- 1 reply
- 385 views
-
-
மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா? கட்டுரை தகவல் எழுதியவர்,க.சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி... அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார். ஆம், உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவத…
-
- 4 replies
- 943 views
- 1 follower
-
-
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 18 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்…
-
- 23 replies
- 982 views
- 1 follower
-
-
152 ஓட்டங்களுடன் சுருண்டது தென் ஆபிரிக்கா By SETHU 17 DEC, 2022 | 06:37 PM அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று இப்போட்டி ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி வீரர்களில் கைல் வெரெய்ன் மாத்திரை அரைச்சதம் (64) குவித்தார். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் நேதன் லியோன் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஸ்கொட் போலன்ட் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும பட் கம்மின்ஸ் 35 ஓட…
-
- 1 reply
- 664 views
- 1 follower
-
-
இந்தியாவுடனான அறிமுகப் போட்டியில் சதம் குவித்தார் ஸாகிர் ஹசன் By SETHU 17 DEC, 2022 | 07:19 PM இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷின் அறிமுக வீரர் ஸாகிர் ஹசன் சதம் குவித்தார். பங்களாதேஷின் சிட்டாகொங் நகரில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 2 ஆவது இன்னிங்ஸில் 513 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டமுடிவில் அவ்வணி விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப்பெற்றிருந்தது. 4 ஆவது நாளான இன்று ஸாகிர் ஹசன் 100 ஓட்டங்களைப் பெற்றார். தனது முதல் போட்டியிலேயே அவர் கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 224 பந்துவீச்சுகளை எ…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
கால்பந்து வீரருக்கு மரண தண்டனை: பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் கால்பந்து வீரர் அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ள அமீர் நசீர் அந்நாட்டின் பீரிமியர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொது வெளியில் தூக்குத் தண்டனை இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் அமீர் நசீர் கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது ‘கடவுளுக்கு எதிரான போ…
-
- 2 replies
- 762 views
-
-
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹொக்கி போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் 2 ஆம் இடம் By NANTHINI 15 DEC, 2022 | 10:23 AM (என்.வீ.ஏ.) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஹொக்கி போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் ஹொக்கி போட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. முதல் சுற்று லீக் அடிப்படையிலும், இறுதிச் சுற்று நொக்-அவுட் அடிப்படையிலும் நடைபெற்ற இப்போட்டியில் தோல்வி அடையாமல் யாழ். பல்கலைக்கழகம் 2ஆம் இடத்தை பெற்றது. இறுதிப் போட்டி வெற்றி தோ…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
47 ஆவது மைலோ பாடசாலைகள் நீச்சலில் ஆண்கள் பிரிவில் புனித சூசையப்பர், பெண்கள் பிரிவில் விசாக்கா சம்பியனாகின By DIGITAL DESK 5 14 DEC, 2022 | 10:46 AM (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் நீர்நிலை சங்கத்தினால் கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடத்தப்பட்ட 47ஆவது அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ஆண்கள் பிரிவில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியும் பெண்கள் பிரிவில் விசாக்கா வித்தியாலயமும் ஒட்டுமொத்த சம்பியனாகின. டைவிங் போட்டியில் ஆண்கள் பிரிவில் றோயல் கல்லூரியும் பெண்கள் பிரிவில் பிஷப்ஸ் கல்லூரியும் சம்பியனாகின. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் …
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
உலக ஆணழகன் போட்டி!! 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தமிழக இளைஞர் சாதனை!! Get up to $500* when you open an eligible chequing account Sponsored by Issued by HSBC Bank Canada உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக தமிழர் ஒருவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மணி. இவர் மாடம்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே தாய்லாந்து நாட்டில் உள்ள புகேட் நகரில் நேற்று உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 44 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவு இருக்காது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் By RAJEEBAN 12 DEC, 2022 | 12:36 PM இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். வரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் அறிவித்திருந்தார். மேலும் ஆசிய கோப்பை தொடர், நடுநிலையான ஒரு இடத்தில் நடைபெறும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…
-
- 0 replies
- 661 views
- 1 follower
-
-
ராவல்பிண்டி ஆடுகளம் சராசரியை விட தரம் குறைந்தது: எதிர்மறைப் புள்ளி வழங்கப்பட்டது By SETHU 13 DEC, 2022 | 03:02 PM இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி ஆடுகளம் சராசரி தரநிலைக்கு குறைவானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று அறிவித்துள்ளதுடன் அம்மைதானத்துக்கு ஒரு எதிர்மறையைப் புள்ளயையும் வழங்கியுள்ளது. டிசெம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து 74 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்களும், பாகிஸ்தான் அணியின் 3 வீரர்களும் சதம் குவித்தனர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 657 ஓட்டங்களையும் பாகிஸ்தான…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
கிராமத்தை கூட ஹை டெக் சிட்டியாக மாற்ற முடியும் என்பதற்கு நெய்மரே சாட்சி !!! கால்பந்தில் இன்னைக்கு ஒரு ஆப்ரிக்கன் டீம் விளையாடுதுன்னா அதுல ஆடுர வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி மைதானம் பந்து வாங்க ஷீ வாங்க வழி இல்லாமல், பயிற்சியாளர் இல்லாமல் தங்களுக்குள்ளே இரண்டு அணிகளாக பிரித்து தெருவில் விளையாடி வந்தவர்களாக தான் இருப்பாங்க. பிரேசிலின் நெய்மரும் அப்படி வந்தவர்தான். நெய்மர் பிறந்த இடம் ஒரு மலை வாழ் மக்கள் வாழ கூடிய பகுதி தான். சுருக்கமா சொன்னா பிரேசிலில் ஒதுக்கி வைக்கப்பட்ட இடம். குப்பைகளை மொத்தமாக கொட்டி எரிக்கும் ஒரு பகுதி. அங்கு மைதானங்கள் பள்ளிகள் புட் பால் மைதானங்கள் என்று எதுவும் இல்லாத பகுதி …
-
- 0 replies
- 718 views
-
-
https://www.thepapare.com/thepapare-football-championship-2022-final-jaffna-central-st-joseph-preview-tamil/
-
- 2 replies
- 705 views
- 1 follower
-
-
யுவராஜ் சிங் பிறந்தநாள்: மறக்க முடியாத 4 போட்டிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,விவேக் ஆனந்த் பதவி,பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும்; தேவைப்பட்டால் ஆட்டத்தில் பந்துவீசவேண்டும்; அற்புதமாக ஃபீல்டிங் செய்ய வேண்டும்; ஃபினிஷராகவும் இருக்க வேண்டும்; அது மட்டுமல்ல இடதுகை பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லாத் துறையிலும் அந்த நபர் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இப்படி ஒரு 'ஆல்ரவுண்டரை' இந்தியா தேடி…
-
- 0 replies
- 735 views
- 1 follower
-
-
போர்ச்சுகல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. போட்டியிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா? போர்ச்சுக்கல் அணி காலிறுதி போட்டியில் இருந்து வெளியேறியவுடன் ரொனால்…
-
- 4 replies
- 442 views
- 2 followers
-
-
இஷான் கிஷன்: ரோஹித்துக்கு பதில் களமிறங்கி இரட்டை சதம் விளாசிய இளம் புயல் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ஃபாக் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அப்படித்தான் இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் நடந்திருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு கையில் காயம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை களமிறக்க வேண்டும். வெறும் 10க்கும் குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள இஷான் கிஷன் ரோஹித்துக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தேர்வானார். அதற்கு பின்னர் நடந்த அதிரடிகள் தனிக்கதை. …
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
அறிமுகப்போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தானின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாதனை By RAJEEBAN 09 DEC, 2022 | 04:39 PM பாக்கிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமட் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்துள்ளார். முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அப்ரார் அஹமட் 114 ஓட்டங்களை கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தினார். நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 281 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தனது முதலாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் தனது முதல…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்தார் லபுஸ்சேன் By SETHU 08 DEC, 2022 | 05:43 PM அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களையும் அவர் குவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஆரம்பமான, மேற்கிந்திய அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஸ்சேன் சதம் குவித்தார். அடிலெய்ட் நகரில் நடைபெறும் இப்போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாண…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-