விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
உலகக் கிண்ண செம்பியன்! இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு செம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்க வைத்துக் கொண்டது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2 ஆவது முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் கொலம்பிய அணி விஷயத்தில் விதி விளையாடியது. அந்த அணியின் அனா மரியா குஸ்மான் 82 ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, அது ஸ்பெயினுக்கு சாதகமாகிப் போனது. எஞ்சிய நேரத்தில் கொலம்பியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஸ்பெயின் வாகை சூடியது. நைஜீரியா 3 ஆம் இடம் : இப்போட்டியில், 3 ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் …
-
- 0 replies
- 383 views
-
-
தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ் இளைஞன்புதிய சாதனை By NANTHINI 30 OCT, 2022 | 01:50 PM தேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார். 120 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட இவர், squat பிரிவில் 335 கிலோ, benchpress பிரிவில் 183 கிலோ, deadlift பிரிவில் 275 கிலோ பளுக…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
வாசிம் அக்ரம்: ஓய்வுக்கு பிறகு கோகைன் போதைக்கு அடிமையானதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல் 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோகைன் போதைக்கு அடிமையானதாக கூறியுள்ளார். ஆனால், முதல் மனைவி இறந்த பின்னர் அதில் இருந்து விடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான வாசிம், 2003ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் 900 விக்கெட்டுகளை எடுத்தவர் இவர். தனது வாழ்க்கை வரலாற்று நூலில் வாசிம்(56), உலகம் மு…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் - சம வருவாய் கிடைக்குமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்திய கிரிக்கெட் அணியில் பெண் வீராங்கனைகளுக்கும் ஆண் வீரர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்" என அறிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா. வாரியத்தின் அறிவிப்பை பெண் வீராங்கனைகளும் பிறரும் வரவேற்றுள்ளனர். "இது பெண்கள் கிரிக்கெட்டில் அதிக அளவில் தேர்வு ஆவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை," என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஹேமலதா. அண்மையில் ஆசிய கோப்பையை …
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
இந்தியா-பாகிஸ்தான்: கிரிக்கெட்டை காயப்படுத்தும் போர்களும் அரசியலும் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் தெரிவித்த ஒரு கருத்தால் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்தத் தொடரை இந்தியா புறக்கணித்தால் அது சர்வதேச கிரிக்கெட்டை பிரித்துவிடும் என்றும், இந்தியாவில் நடைபெறும் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பதைப் பாதிக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவலை தெரிவித்துள்ளது. நா…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
ரோஜர் பின்னி: "இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வாய்த்த நல்லவர்" சுரேஷ் மேனன் விளையாட்டு எழுத்தாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE HINDU இவர் மிகவும் நல்லவர் எனக் கூறும் இவருடைய பல நண்பர்கள் இவரை 'ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னி' என்று முழு பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள். பல ஆண்டுகளாக இருந்த உறுதியற்ற தன்மை, பணக்கார விளையாட்டு நிர்வாகக் குழுவை சம்பந்தப்படுத்திய நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கு பிறகு, ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக வருவது காலத்துக்கு ஏற்றது, மிகவும் அவசியமானது. பிசிசிஐ தலைவராக அலுவல்ப…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக் கோப்பை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களில் ஒன்று 2011ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி. அதன் இறுதிப் பந்தில் நடந்த அதிரடியின் உணர்வுகளை, நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் உண்டாக்கியது. பேட்ஸ்மேனின் கோட்டை தாண்டி, லாங் ஆனில் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்த சிக்சரை அடித்துவிட்டு தோனி நின்றிருந்தார். அதேபோல், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி…
-
- 1 reply
- 398 views
- 1 follower
-
-
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்கின்றன. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=166658 இந்திய அணிக்கு 66 ஓட்டங்கள் வெற்றியிலக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்கின்றன. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை …
-
- 3 replies
- 862 views
-
-
தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர் மில்லரின் மகள் மரணம்… தென்னாப்பிரிக்காவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் அன்பு மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து டேவிட் தனது சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளார். காவியன் https://thinakkural.lk/article/213996
-
- 1 reply
- 727 views
- 1 follower
-
-
#இரக்கமற்ற_இரும்பு_மனிதன்... சனத் ஜெயசூர்யவின் பிறந்த நாளையொட்டி பல கட்டுரைகளைப் படித்தேன். அதில் ரொம்பவும் பிடித்திருந்தது விகடனின் இந்தக் கட்டுரை. மீண்டுமொரு முறை அந்தக் காலத்துக்கே சென்றதான உணர்வு. வாசித்துப் பாருங்கள் சனத்தின் இரக்கமில்லா தன்மைகளை… சின்ன வயதில் இருந்தே செகண்ட் ஹேண்ட் Pad, ஹெல்மெட்களை அணிந்து விளையாடியவர் என்பதால் தனக்கு செட் ஆகாத பேட்களையும், ஹெல்மெட்டையும் ஒவ்வொரு பந்தையும் அடிக்கும் முன் அட்ஜஸ்ட் செய்வது ஜெயசூர்யாவின் வழக்கமாகியிருக்கிறது. மார்ச் 2, 1996... அது ஒரு சனிக்கிழமை. உலகக்கோப்பையில் இந்தியா விளையாடிய நான்காவது போட்டி. இதற்கு முன்பான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்திருந்தது. ''இலங்கையை ஜெயிக்கிறதெல…
-
- 1 reply
- 789 views
- 1 follower
-
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன ? By VISHNU 06 OCT, 2022 | 11:48 AM (என்.வீ.ஏ.) அவுஸ்திரேலியாவில் முதல் சுற்றுடன் இம் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று, சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதுடன் முதல் சுற்றில் 8 நாடுகள் இரண்டு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் அடிப்படையில் மோதவுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் By VISHNU 06 OCT, 2022 | 11:16 AM (என்.வீ.ஏ.) மலேசியாவின் லங்காவி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான குழுநிலைப் பிரிவில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கை சார்பாக முன்னாள் உலக சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீத் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கதை வென்றனர். பங்களாதேஷ் அணியினரை எதிர்த்தாடிய இலங்கை அணி 2 - 1 ப்ரேம்கள் கணக்கில வெற்றிபெற்று 3 ஆம் இடத்தைப் பெற்றது. கடந்த திங்கட்கிழமை (03) ஆரம்பமான 8 ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை (07) நிறைவடையவுள்ளது. …
-
- 0 replies
- 231 views
- 2 followers
-
-
16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல்: மன்னார் மாணவன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு! மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.விஜய், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானார். பயிற்றுவிப்பாளர் திரு.ஆ.கு.ரொசேன் செரூபா பீரிஸ், பாடசாலையின் அதிபர் வு.ஆனந்தன் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர், தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவன் சி.விஜய் வாழ்த்த…
-
- 4 replies
- 746 views
-
-
உலகை உலுக்கிய விளையாட்டு மைதான மரணங்கள்! இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 போ் உயிரிழந்த நிலையில், இதேபோன்று கடந்த காலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் முக்கிய சம்பவங்கள் குறித்த விவரம்: ஜன. 20, 1980 கொலம்பியாவில் காளைச் சண்டையைப் பாா்ப்பதற்காக மரத்தால் அமைக்கப்பட்ட நான்கடுக்கு பாா்வையாளா்கள் காலரி இடிந்து விழுந்ததில் 200 போ் உயிரிழப்பு. அக். 20, 1982 ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கால்பந்து மைதானத்திலிருந்து ரசிகா்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் 62 போ் உயிரிழப்பு. மே 28, 1985 பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரசிகா்களுக்கு இடையே ஏற்பட்ட வ…
-
- 2 replies
- 685 views
-
-
மகளிர் ஆசிய கிண்ண இருபது - 20 கிரிக்கெட் : இலங்கையை வெற்றிகொண்டது இந்தியா By VISHNU 02 OCT, 2022 | 10:48 AM (என்.வீ.ஏ.) பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் 01 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமான மகளிர் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கையை 41 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த அபார அரைச் சதம், ஹேமலதா, பூஜா, தீப்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 4 ஓவர்களுக்குள் …
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
PreviousNext ICC ரி20 உலகக்கிண்ணம் - பரிசுத் தொகை அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண ரி20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, ஐசிசி ரி20 உலக்கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதிப் போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதேபோல், அரையிறுதியில் வௌியேறும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்…
-
- 1 reply
- 431 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா By VISHNU 29 SEP, 2022 | 01:41 PM (என்.வீ.ஏ.) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியா அமோக வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அர்ஷ்தீப…
-
- 2 replies
- 371 views
- 1 follower
-
-
இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி - இலங்கை மகளிர் அணித் தலைவி By DIGITAL DESK 5 28 SEP, 2022 | 03:00 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து தெரிவித்தார். பங்களாதேஷில் அக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் இருவது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து இன்று புதன்கிழமை (28) அதிகாலை புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார…
-
- 1 reply
- 323 views
- 1 follower
-
-
உடல் எடையை குறைப்பதற்காக ஓட ஆரம்பித்தவர் 24 மணித்தியாலங்களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை By VISHNU 26 SEP, 2022 | 01:00 PM லித்துவேனியாவைச் சேர்ந்த ஓட்ட வீரர் அலெக்ஸாண்டர் சோரோகின், 24 மணித்தியாலங்களில் 319.6 கிலோமீற்றர் தூரம் ஓடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். 41 வயதான சோரோகின் சானியா எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறார். 24 மணித்தியாலங்களில் அதிக தூரம் ஓடும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் வெரோனா நகரில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 319.6 கிலோமீற்றர் ஓடிய சோரோகின், முதலிடம் பெற்றதுடன் புதிய உலக சாதனை படைத்தார். சராசரியாக மணித்தியாலத்துக்கு …
-
- 2 replies
- 333 views
- 1 follower
-
-
மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார் By DIGITAL DESK 5 26 SEP, 2022 | 03:07 PM (என்.வீ.ஏ.) ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி எம் டபிள்யூ பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 01 நிமிடம் 09 செக்கன்களில் நிறைவு செய்த கென்ய வீரர் எலியுட் கிப்சோகே தனது முன்னைய உலக சாதனையை 30 செக்கன்களால் முறியடித்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர் பேர்லின் நிலைநாட்டிய 2 மணி. 01 நி. 09 செக்கன்கள் என்ற தனது சொந்த சாதனையையே கிப்சோகே முறியடித்துள்ளார். இந்த வெற்றியுடன் இதுவரை அவர் பங்குபற்றிய 17 மரதன் போட்டிகளில் 15 வெற்றிகளை ஈட்டியுள்ளார். மரதன் ஓட்டப் போட்டியின் சரி அரைவாசி தூரத்தை 5…
-
- 0 replies
- 505 views
- 1 follower
-
-
ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை - இந்திய 'வேகப் பெண்' சாதித்தது என்ன? வந்தனா பிபிசி 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயத…
-
- 0 replies
- 211 views
-
-
பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 10:00 AM (என்.வீ.ஏ.) மூன்று வருடங்களின் பின்னர் முதல் தடவையாக இங்கிலாந்துக்காக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததன் பலனாக கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டியில் அவரது அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 09:59 AM (என்.வீ.ஏ.) மொஹாலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 4 பந்துகள் மீதிமிருக்க 6 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆரொன் பின்ச், கெமரன் க்றீன், ஸ்டீவ் ஸ்மித், மெத்யூ வேட் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை…
-
- 2 replies
- 345 views
- 1 follower
-
-
'மன்கட் ரன்-அவுட் சரியானது; பந்துமீது எச்சில் தேய்க்க நிரந்தர தடை;' புதிய விதிமுறைகளை கொண்டுவரும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் 1-ந்தேதி அமலுக்கு வரும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. தினத்தந்தி துபாய், சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் அதிரடியான சில மாற்றங்கள் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. சவுரவ் கங்குலி தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி, தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய விதிமுறை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட விதிமுற…
-
- 0 replies
- 385 views
-
-
ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி : இராணுவ வீரரான புவிதரன் கோலூன்றிப் பாய்தலில் சாதனை By T YUWARAJ 18 SEP, 2022 | 10:18 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இராணுவ வீரர் ஏ. புவிதரன் 5.15 உயரம் தாவி புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார். தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கான திறன்காண் மெய்வல்லுநர் போட்டியிலேயே சாவகச்சேரி இந்து கல்லூரியின் முன்னாள் பழைய மாணவன் புவிதரன் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். விமானப்படை வீரர் இஷார சந்தருவன் 2017ஆம் ஆண்டு நிலைநாட்டிய 5.11 மீற்றர் என்ற முந்தைய த…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-