விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
கடலூரில் கபடி வீரர் மரணம்: விளையாட்டின்போது நம் ஆரோக்கியத்தில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 26 ஜூலை 2022, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடலூர் மாவட்டம் காடாம்புலியூரை அடுத்த புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த களத்திலேயே மயங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விளையாட்டு வீரர்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. என்ன நடந்தது? கபடி வீரர் விமல், கபடி போட…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
தொடரை வென்றது இந்தியா! மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டத்தை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை ஷாய் ஹோப், கைல் மேயா்ஸ் தொடங்கினா். இதில் மேயா்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா்களுடன் 39 ஓட்டங்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஷாமா் புரூக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். 4 ஆவது வீரா் பிராண்டன் கிங் டக் அவுட்டானாா். இடையே தலைவர் நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் அதிரடியாக 74 ஓட்டங்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா். ரோவ்மென் ப…
-
- 0 replies
- 463 views
-
-
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பம்! இலங்கை மற்றும பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச விளையாட்டுத் திடலில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணிக்கு துனித் வெல்லலாகே மற்றும் அசித பெர்ணான்டோ அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இப்போட்டி துனித் வெல்லலாகேவின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். பாகிஸ்தான் அணியிலும் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அசார் அலி ஆகியோருக்கு பதிலாக நவிமான் அலி மற்றும் பவாட் அலாமி ஆகியோ…
-
- 0 replies
- 237 views
-
-
நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றது எப்படி? இறுதிச்சுற்று எப்படி நடந்தது? க. சுபகுணம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தனது சிறப்பான திறமையைக் காட்டி நீண்டகாலமாக நம்மைக் கவர்ந்து வருகிறார். அதைப் போலவே இந்த முறையும் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் இருபது ஆண்டுக்கால ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் சாம்பியனான நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: ஆசிய கோப்பை கிரிக்கெட் நடத்துவதில் சிக்கல்! Jul 21, 2022 08:32AM IST இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தாமல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும். த…
-
- 0 replies
- 276 views
-
-
CWG 2022: ஊக்கமருந்து சோதனையில் தோல்வி - தனலட்சுமி, ஐஸ்வர்யா பாபு இடைநீக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேபோல, தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடகாவைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை செலுத்திக் கொண்டது பரிசோதனை முடிவில் கண்டறியப்பட்டுள்ளதால் அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 36 பே…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
கோலியின் பிரச்சனை என்ன? விராத் கோலி பற்றிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அஷ்வினுடையதே. அவர் கோலி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாக மட்டையாடி வருவதாகக் கூறி இருக்கிறார். இது சரி தான். ஒரு மட்டையாளர் தன ஆட்டநிலையை இழக்கும் போது மூன்று விசயங்கள் நடக்கும்: 1) தொழில்நுட்ப பிரச்சனை ஒன்று அம்பலமாகி அதில் இருந்து வெளிவரத் தெரியாமல் தவிப்பார்கள். (காம்ப்ளி, லஷ்மண், திராவிட், ஸ்டீவ் வாஹில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வரை ) 2) உடற்தகுதியின்மை ஏற்படும். (கங்குலி, சச்சின்) 3) பந்து விழும் நீளத்தை கணிக்க முடியாமல் போகும் - சிலருக்கு பார்வைக் குறைபாட்டினாலும் வேறு சிலருக்கு தசைகளுக்கும் நர…
-
- 0 replies
- 664 views
- 1 follower
-
-
வரலாற்றுச் சாதனைகளுடன் அவுஸ்திரேலியாவை அபார வெற்றிகொண்டது இலங்கை (நெவில் அன்தனி) காலி சர்வதேச விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற அவுஸ்திரெலியாவுடனான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்றுச் சாதனைகளுடன் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் தொடர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 1 - 1 என சமநிலையில் முடிவடைந்தது. அறிமுக சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரய பந்துவீச்சிலும் மூத்த வீரர் தினேஷ் சந்திமால் துடுப்பாட்டத்திலும் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டி இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றினர். ப்ரபாத் ஜயசூரிய தனது…
-
- 0 replies
- 380 views
-
-
போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது 41 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, ஐபிஎல்: போலி கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்களை இந்திய போலீசார் கைது செய்தனர் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடிக்கு உயிர் கொடுக்க, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் ஒருவர் பேசுவது போலவும் இந்த கும…
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு அமெரிக்காவில் ஹாக்கி பயிற்சி - யார் அந்த பெண்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHAKTIVAHINI ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் 70 வீடுகள் மட்டுமே கொண்ட ஹெசல் கிராமம் பற்றி தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்த கிராமம் பற்றிய பேச்சு இப்போது மேலும் அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் 17 வயதான புண்டி சாரு. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வளரும் ஹாக்கி வீரர்களில் புண்டி சாருவும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள மிடில்பரி கல்லூரியில் கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். புண்டி சாருவின…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
யுபுன் அபேகோன்: "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த வீரர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் போட்டியிலேயே, இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை சாதனை மற்றும் தெற்காசிய சாதனை, யுபுன் அபேகோனினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-
-
ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் குவித்த 35 ரன்கள் - பிரையன் லாராவின் உலக சாதனை முறியடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரில் 35 ரன்கள் சேர்த்து, இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி குறித்த முக்கிய தகவல்கள் இங்கே தொகுத்துள்ளோம். டெஸ்ட் போட்டிக்கு பேர்போன இங்கிலாந்து அணி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் எனும் சாதனை படைத்திருக்கிறார் இந்திய கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித்…
-
- 3 replies
- 425 views
- 1 follower
-
-
தினேஷ் கார்த்திக் தலைவராக தேர்வு! இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5 வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது. டி20 தொடருக்கு முன்பு இந்திய அணி - டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் இன்றும் கடைசிப் பயிற்சி ஆட்டம் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளன. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் வியாழன்று செளதாம்ப்டனில்…
-
- 1 reply
- 538 views
-
-
10 விக்கெட்களால் இலங்கையை இலகுவாக வென்றது அவுஸ்திரேலியா (நெவில் அன்தனி) இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸை 22.5 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு சுருட்டிய அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர்கள் தமது அணிக்கு மிக இலகுவான 10 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். காலி சர்வதேச விளையாட்டரங்கில் இரண்டரை தினங்களுக்குள் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பகுதிநேர சுழல்பந்துவீச்சாளரைக்கூட இலங்கை துடுப்பாட்ட வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் பொனது. பொதுவாக உப கண்ட ஆடுகளங்களில் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலியா சிரமப்படும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எதிர்மாறாக அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சில் இலங்கை திணறிப்போனது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர…
-
- 0 replies
- 464 views
-
-
இன்று பும்ரா தலைமையில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்! மின்னம்பலம்2022-07-01 கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 1 - இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின்போ…
-
- 0 replies
- 385 views
-
-
மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி சூசன் நைனன் விளையாட்டுத்துறை எழுத்தாளர் 25 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாட்டின் ஒரு சிறிய பகுதியான மாமல்லபுரம் (மகாபலிபுரம்), ஒரு வேறுபட்ட ரஷ்யா-யுக்ரேன் இடையிலான போட்டியைப் பார்க்கப் போகிறது. இந்தியா நடத்தவிருக்கும் செஸ் ஒலிம்பியாடின் பின்னணியில், சதுரங்க விளையாட்டின் உச்ச அமைப்பான சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவரை தேர்வு செய்ய 180க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர். போட்டியில் முன்னணியில் இருப்பவர் ரஷ்யாவின் முன்னாள் …
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
கிரிக்கெட் வரலாற்றில் பார்த்திடாத முறையில் அவுட்..! சொந்த அணி வீரரால் ஆட்டமிழந்த வீரர் வைரலாகும் வீடியோ இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத…
-
- 4 replies
- 429 views
-
-
பிரித்தானியா செல்லும் கிளிநொச்சி வீரர்! பிரித்தானியா - பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்குபெற்றும் குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள பயணமாகவுள்ளார். இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார். …
-
- 0 replies
- 358 views
-
-
SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட தொடரை, இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி அப்போது, வெற்றியை தன்வசப்படுத்தியது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இ…
-
- 2 replies
- 480 views
- 1 follower
-
-
புதிய சாதனையை படைத்த வீரர்! டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ. நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. 2 வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. தலைவர் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. நியூசிலாந்து அ…
-
- 0 replies
- 684 views
-
-
ICC மே மாதத்திற்கான சிறந்த வீரராக-மெத்தியூஸ்-தெரிவு! வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அறிவித்துள்ளது. அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்தியூஸின் துடுப்பாட்டம் இந்தப் பெயரிடலுக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 410 views
-
-
ஆஸி – இலங்கை அணிகள் மோதும் ...முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று! இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. https://athavannews.com/2022/1286877
-
- 0 replies
- 256 views
-
-
காமன்வெல்த் 2022: எங்கு எப்போது நடைபெறுகிறது? இந்திய வீரர்கள் யார்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இடம்பெறுகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி: யார் இவர்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KALAIYARASI படக்குறிப்பு, இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியிலிருந்து கலையரசி எனும் தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வெற்றி (என்.வீ.ஏ.) டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலை அடைந்துள்ளது. இந்தியாவின் அதிரடி வீரர் இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதம், ரசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களால் வீண் போனது. இந்திய அணியில் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் க…
-
- 1 reply
- 221 views
-