விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
இங்கிலாந்தை 5-0 என வெள்ளையடிப்புச் செய்தது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்குபற்றிவரும் இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி 3 நாட்களில் நிறைவடைந்துள்ளது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 281 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டீவன் ஸ்மித் 115 ஓட்டங்களையும், பிரட் ஹடின் 75 ஓட்டங்களையும், ஷேன் வொற்சன் 43 ஓட்டங்களையும் பெற, அவ்வணி 326 ஓட்டங்களைப் பெற்றது.…
-
- 11 replies
- 759 views
-
-
ஆறு வருடங்கள் தொடர்ந்து யாழ் உதைபந்தாட்ட சம்பியன்களாக வந்த மகாஜனா அணியை கொக்குவில் இந்து கல்லூரி அணி 1975 ஆண்டு வென்றது . அந்த அணியின் படம் தான் மேலுள்ளது .
-
- 12 replies
- 1.2k views
-
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார். இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார். தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.
-
- 29 replies
- 2.7k views
-
-
துபாய்: 2020ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு தங்கம் வெல்லும் நோக்கத்துடன் துபாயில் படிக்கும் தமிழக மாணவி பயிற்சி பெற்று வருகிறார். துபாய் மில்லியனியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் தமிழக மாணவி ஆர்யா (11). சென்னையை சேர்ந்த இவர் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே 12 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் கடந்த ஒன்பது வருட சாதனையை முறியடித்துள்ளார். ஹரியனாவில் நடைபெற்ற போட்டியில் 10 டிகிரி செல்சியஸ் நீரில் நீந்தி சாதனை படைத்துள்ளா…
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் இனைத்துக் கொள்ளப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக கூட்டம் வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் தலைவர் நா . நவரத்தினராசா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணிக்கு நடை பெற்றது . இந்தக் கூட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் றஞ்சித றொட்றிக்கோ செயற்பாட்டு முகாமையாளர் அனுரடிசில்வா மற்றும் குருணாகல் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் பொருளாளர் கே . சத்தியராஜ் உட்பட மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்குக்கு உட்படட் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள் . யாழ் நிருபர் . http://www.ttnnews.com/othernews/5655-2013-12-13-13-24-16
-
- 0 replies
- 571 views
-
-
யாழில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் மோதியது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது - http://vvtfrance.com/?p=19442
-
- 1 reply
- 541 views
-
-
பிரேசிலில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடக்க உள்ளது. இப்போட்டி தொடருக்கான வெற்றிப் பரிசு தொகையை அதிகரித்துள்ளதாக சர்வதேச கால்பந்து சமேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:- கடந்த 2010ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 420 மில்லியன் டொலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த முறை இந்த பரிசுத்தொகையை 61 சதவீதம் அதிகரித்து 576 மில்லியன் டொலர் வழங்கப்பட உள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 35 மில்லியன் டொலர்களும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும். மேலும் பங்கு பெறும் 32 அணிகளுக்கும் தலா 1 மில்லியன் டொலருக்கும் மேலாக கிடைக்கும் …
-
- 1 reply
- 652 views
-
-
2014 உலக கோப்பை உதைபாந்தட்ட அணிகளின் பிரிவுகள் தெரிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஆறாம் திகதி ) பிரேசிலில் நடைபெறவுள்ளது . பார்த்து மகிழுங்கள் .
-
- 2 replies
- 614 views
-
-
இங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நிர்ணயித்து ஆடும் "மேட்ச் பிக்ஸிங்" என்ற மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரித்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் போலிசார் ஆறு பேரைக் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது மூன்று பேர் கால்பந்து விளையாட்டு வீரர்கள். ஆனால் இவர்களில் எவரும் தொழில்முறை கால்பந்து கிளப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் இல்லை என்று பிபிசிக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையின் கவனம் ஒரு சர்வதேச சட்டவிரோத சூதாட்டக் குழுவினரே என்று போலிசார் கூறுகின்றனர். பிரிட்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி டெலெகிராப்" பத்திரிகை ரகசியமாக நடத்திய புலன் விசாரணையினை அடுத்து இந்தக் கைதுகள் வருகின்றன. ஆசியாவில் இருந்து இயங்கும் இந்தப் பந்தயச் சூதாடிகள்…
-
- 3 replies
- 738 views
-
-
2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கான அரங்கொன்று வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாரின் அல் வக்காரா நகரிலுள்ள இந்த கால்பந்தாட்ட அரங்கின் வடிவமைப்பானது பெண்ணுறுப்பை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நகரங்களில் ஒன்றாக அல் வக்காரா விளங்கவுள்ளது. இந்நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள அரங்கின் கணினி மூலமான தோற்றத்த்தை கட்டார் உலகக்கிண்ண ஏற்பாட்டுக்குழு சில தினங்களுக்குமுன் வெளியிட்டது. 45,000 ஆசனங்களைக் கொண்ட இந்த அரங்கின் மேற்புறக் கூரையின் தோற்றத்தைப் பார்த்த சிலர் இது பெண்ணுறுப்பு வடிவில் உள்ளது எனக் கருத்துத் தெரிவித்த…
-
- 0 replies
- 616 views
-
-
ஸச்சின் எனும் ஆச்சரியம் சித்தார்த்தா வைத்தியநாதன் உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். பின், அங்கு சுழன்று கொண்டிருக்கும் மங்கலான எண்ணங்கள், பிம்பங்கள், தொடர்சித்திரங்கள் இவற்றிலிருந்து உங்கள் நினைவாற்றலின் முழு முனைப்புடன் ஸச்சின் ஒரு டெஸ்ட் மாச்சில் பங்குபெற்ற ஒரு தினத்தின் ஞாபகங்களைத் தேர்வு செய்யுங்கள். அது மெல்போர்னில் ஆடிய ஒரு பந்தயமாய் இருக்கலாம். அல்லது போர்ட் ஆஃப் ஸ்பெயினில். ஹராரே அல்லது சென்னையின் ஒரு புழுக்கமான காலையாக இருக்கலாம். இவை எதுவுமேயன்றி ஹெடிங்க்லி மைதானத்தை முறியடிக்க மேகங்கள் அச்சுறுத்திய மாலைப்பொழுதாகவும் இருக்கலாம். எந்த டெஸ்ட், எந்தக் களம் என்று உறுதிப்படுத்திக் கொண்டதும், அந்த ஆட்டத்தில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்த அந்தத் தருணத்தை நினை…
-
- 1 reply
- 1.1k views
-
-
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அவசியமில்லை - சுட்டெரிக்கும் உண்மைகள் S.Raman,Vellore இது பற்றி மூன்று தினங்கள் முன்பாக சுருக்கமாக எழுதியிருந்தேன். நேற்றும் இன்றும் அலுவலகத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதங்கள், இணையத்தில் தொடரும் வாதப் பிரதிவாதங்கள் ஒரு நீண்ட கட்டுரைக்கான அவசியத்தை உருவாக்கியது. கிரிக்கெட்டை வெறுப்பதால் சச்சினுக்கு விருது அளிப்பதையும் எதிர்ப்பதாக யாரும் கருத வேண்டாம் என்பதால் ஒரு முன்னுரிமையும் தேவைப்படுகிறது. பிஷன் சிங் பேடி காலத்திலிருந்தே கிரிக்கெட் வர்ணனை கேட்டவன் நான். கான்பூரில் நியூசிலாந்தோடு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நாள் முதல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவன். பள்ளி படிக்கையில் பள்ளிக்கு எதிரேதான் வ…
-
- 2 replies
- 849 views
-
-
நாக்பூர்: 14 வயதுக்குட்டவர்களுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்க சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் கலக்கினால் பேரன் 'வருண் வைகோ' டென்னிஸில் கலக்குகிறார். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார் வருண் வைகோ. கடந்த ஞாயிறு அன்று நாக்பூரிலுள்ள சி.பி.டென்னிஸ் சென்டரில் நடந்த போட்டியில் அவர் தனது போட்டியாளரான மல்ஹர் பேகேவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வச் செய்து 14 வயதுக்குட்பட்டோர் போட்டியின் ஆண்கள் பிரிவில் கோப்பையை கைப்பற்றினார். வைகோ அவர்களின் பேரனான வருண் வைகோ தற்போது டென்னிஸ் தர வரிசையில் 6ஆவது இடத்தில…
-
- 3 replies
- 708 views
-
-
'இளவரசி'யை மணக்கிறார் ஸ்ரீசாந்த்... டிசம்பரில் குருவாயூரில் திருமணம்... ! குருவாயூர்: தடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்தைதச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே டிசம்பர் 12ம் தேதி குருவாயூரில் திருமணம் நடைபெறுகிறது. குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. ஸ்ரீசாந்த்தை மணக்கப் போகும் பெண்ணின் பெயரை இதுவரை வெளியிடப்படாமல் வைத்துள்ளனர். இருப்பினும் இது காதல் திருமணம் என்கிறார்கள். கடந்த 2006ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது அந்தப் பெண்ணும், ஸ்ரீசாந்த்தும் சந்தித்து காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீசாந்த்துக்கு மேட்ச் பிக்ஸிங் சோதனை வந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தாராம் இப்பெண். மேலும் தேவ…
-
- 4 replies
- 2k views
-
-
Congress President Sonia Gandhi had recommended Sachin Tendulkar's name for nomination to Rajya Sabha, according to BCCI Vice-President Rajeev Shukla, who also hinted that the government may consider conferring the prestigious 'Bharat Ratna' on the iconic cricketer after his retirement. http://www.mid-day.com/sports/2013/nov/131113-sachin-tendulkar-in-parliament-because-of-sonia-gandhi-rajeev-shukla.htm
-
- 0 replies
- 451 views
-
-
80களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். கோண்டாவிலில் நான் வாழ்ந்து வந்த காலம். உரும்பிராயிலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. பலமுறைகளில் அங்கே ஒரு சிறுவர் பட்டாளம் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்திருந்து பெரும் ஆரவாரத்துடன் ஏதோ ஒரு விளையாட்டை ரசித்துக்கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த விளையாட்டுப் பற்றித் தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கவில்லை. சிலவேளைகளில் எதேச்சையாக அவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்பதும், கபில், சுனில், வென்சாக்கர், குண்டப்பா, சர்மா... என்று பெயர் கொண்டவர்கள் என்றும் கேள்விப்படுவதுண்டு. ஆனால் ஒரு போதுமே அவர்கள் யாரென்றோ அல்லது அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்றோ அறிந்துகொள்ள விரும்பியதில்லை. ஆக கிரிக்கெட…
-
- 19 replies
- 1.5k views
-
-
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரோகித் சர்மா, அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இன்றைய 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளுக்கு 354 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவு வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 10 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ரோகித்- டோனி ஜோடி இந்திய அணியின் ரன் எண்ணிக்கை சற்று உயர்த்தியது. 42 ரன்னில் டோனி வெளியேற, அஸ்வின…
-
- 2 replies
- 854 views
-
-
தமிழில் இந்த விளையாட்டை கூடைப்பந்து விளையாட்டு என்று அழைப்பார்கள்..அமெரிக்காவில் American footballக்கு அடுத்ததாய் அதிக மக்கள் விரும்பி பார்க்கும் விளையாட்டு தான் இந்த கூடைப்பந்து விளையாட்டு..அமெரிக்காவில் NBA என்ற கூடைப்பந்து விளையாட்டு மிகவும் புகழ்பெற்ற விளையாட்டு உலகம் பூரா இருக்கும் கூடைப்பந்து ரசிகர்களை கவர்தது தான் இந்த NBA....இந்த விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்த விளையாட்டு இந்த விளையாட்டுக்கு நான் ஒரு அடிமை என்று கூட சொல்லலாம் ..இந்த விளையாட்டை பெரிய பெரிய கிளப்புவள் விளையாடும் போது தான் இந்த விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கும் உதாரனத்துக்கு Oklahoma City thunder , Miami Heat போன்ற கிளப்புவள் விளையாடினால் கூடைப்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..இந…
-
- 11 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தில் சில வருடங்கள் வாசித்ததாலோ என்னவோ இடைக்கிடை அங்கிருக்கும் பழைய நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுப்பது எனது வழக்கம். நான் கனடா வந்து இருபத்தி ஐந்துவருடங்கள் ஆகியும் இங்கிலாந்தில் இருக்கும் நண்பர்கள் போல் கனடாவில் ஏனோ அமையவில்லை. உலக புதினங்கள் தொடங்கி ஊர் புதினங்கள் வரை ஒரே அலைவரிசையில் உரையாட எப்பவும் இங்கிலாந்திற்குத்தான் தொலைபேசி அழைக்க வேண்டிஇருக்கும் .அதுவும் குறிப்பாக கிரிக்கெட் பற்றி எனக்கு மிக பிடித்த வர்ணணையாளர்கள் TONY GREIG, GEOFF BOYCOTT லெவலுக்கு புள்ளிவிபரங்களுடன் அலசி ஆராய அங்கிருக்கும் சில நண்பர்களை கேட்டுத்தான். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் எம்மவர் பலர் பிரிட்டிஷ்காரர்களின் அந்த பாரம்பரியம் காக்கும் கடமைகளில் தாமும் இ…
-
- 0 replies
- 1k views
-
-
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இருக்கட்டும். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் தினக்கூலி 200 ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் தெரிந்துகொள்வோம். ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் பெண்தான் என்று நிரூபிக்கவோ, அவருக்குரிய வாய்ப்புகளை வழங்கவோ இந்திய விளையாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரைப் போலவே சர்ச்சைக்குள்ளான தென்னாப்பிரிக்க விளையாட்டு வீராங்கனை கேஸ்டர் செமன்யாவை அந்நாட்டு விளையாட்டுத் துறை பெண் என நிரூபித்திருப்பதுடன், லண்டன் ஒலிம்பிக்கில் தென்னாப்ப…
-
- 0 replies
- 626 views
-
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அந்தக் கனவை தான் ஆண்டுதோறும் நனவாக்கி வந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனது 11 ஆவது வயதில் இருந்து கிரிக்கெட்டைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும், கிரிக்கெட் இல்லாமல் என்ன செய்வது என்பதை நினைக்…
-
- 4 replies
- 714 views
-
-
இந்திய உள் நாட்டு கிரிக்கெட் அணிகளின் டெஸ்ட் அங்கீகாரமும் ஈழத்துக் கிரிக்கெட் அணியும் வினையூக்கி பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தின் (ICC) விதிகளின் படி, அதன் துணை / இணை உறுப்பினராக , ஒரு நாட்டைச் சார்ந்த கிரிக்கெட் வாரியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை . கிரிக்கெட்டிற்காக ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டு வாரியமாகவோ கிரிக்கெட் கட்டுமானம் சரியாக அமைந்து, புவியியல் அமைப்பைச் சார்ந்து இருக்கும் வாரியமாகக் கூட இருக்கலாம். (may be from a country, or countries associated for cricket purposes, or a geographical area where cricket is firmly established and organised.) இந்த வாரியங்களின் சார்பில் அணிகள் , ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும். எடுத்துக்காட்டாக , மேற்கிந்திய தீவு…
-
- 0 replies
- 361 views
-
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் புத்தகத்தில் நேற்று மேலும் ஒரு புதிய அத்தியாயம் இடம் பெற்றது. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 50,000 ரன்களை நேற்று கடந்தார். இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனை இது.நேற்று மும்பை இந்தியன்ஸ், டிரினிடாட் டொபாகோ இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போதுதான் இந்த புதிய சாதனையை சச்சின் படைத்தார்.சச்சின் கிரிக்கெட் ஆட வந்து 25 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் 50,000 ரன்களை அவர் கடந்திருப்பது புதிய வரலாறும் ஆகும். டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டுவென்டி 20 என மொத்தம் 953போட்டிகளில் இதுவரை சச்சின் ஆடியுள்ளார்.அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 50,009 ரன்களைக் குவித்துள்ளார்.இதில் 307 முதல் தர போட்டிக…
-
- 4 replies
- 725 views
-
-
-
- 3 replies
- 752 views
-
-
இந்த தசாப்தத்தின் சீறந்த வீரர் யார் என்றதுமே பலரது நினைவில் வருபவர் சச்சின் தெந்துல்கார் தான். அதற்குக் காரணம் இன்றைக்கு கிறிக்கெற் உலகில் தனது பணபலத்தாலும் ஊடக பலத்தாலும் கட்டுக்குள் வைத்திருக்கின்ற இந்திய கிறிக்கெற் அதிகார மையம் தான் என்பது இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கின்ற போது உங்களுக்குப் புரியும். சச்சின் தெந்துல்கர் தன்னுடைய துடுப்பாட்டத்தால் இந்திய துடுப்பாட்டத்தை கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுகளாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவில் ஏற்றுக் கொண்டாலும் அவரே உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. புள்ளிவிபரங்களின் துணைகொண்டு இது குறித்து ஆராய்வதற்கு முன்பதாக பொதுவான சில விடயங்கள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டிய…
-
- 10 replies
- 995 views
-