Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கோடி ரசிகர்களின் கரவோசம் வான்பிளக்க.. தனது பாரமான துடுப்பினை உயர்தியபடி சச்சின் வருகிறார். அது பிடரி மயிர் சிலிர்க்க சிங்கம் ஒன்று கம்பீரமாக நடந்துவருவது போலிருக்கும். சுருண்ட குட்டை முடி காற்றில் பறக்க, தனது கரகரத்த குரலில் நன்றி சொல்லிக் கொண்டிருப்பார். உறையாத அந்தக் கணத்தினை தொலைக்காட்சிகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். அப்பாவும் அவர் நண்பர்களும் 16 வயசு சிறுவனின் பழம் பெருமைகள் பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்களோ சச்சின் உச்சமாக இருந்த தொன்னூறுகளின் இறுதியையும் , இரண்டாயிரத்தின் தொடக்கங்களையும் பெருமை பொங்க உரையாடிக் கொண்டிருப்போம். சித்தியின் பெடியனுக்கோ சச்சின் குறியீடாகி எல்லைகளை கடந்தவராக பாடக் கொப்பியின் முன்னட்டையில் உறைந்திருப்பார். நான் விர…

  2. தர்மசாலா: கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியைப் பெற்று கவுரமாக ஒருநாள் தொடரை முடித்தது. இயான் பெல் சிறப்பான சதம் போட்டு இந்திய அணியின் வெற்றியைத் தடுத்து விட்டார்.இங்கிலாந்து அணியுடன் 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒரு போட்டியில்தான் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இதர 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ச்சியாக வென்று தொடரைக் கைப்பற்றியது. இதனால் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியைப் பெற்றது.இந்நிலையில் இன்று காலை ஹிமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் கடுமையான குளிருக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே ரன்களை எடுக்க பெர…

  3. ஒலிம்பிக் சின்னமாகும் பந்து எறும்புத் தின்னி வரும் 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடக்கிறது. இதற்காக அரிதான, மிகவும் பொருத்தமான ஒரு அதிகார பூர்வ சின்னத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறது அந்த நாடு. அது ஒருவகை எறும்புத்தின்னி. ‘பிரேசிலியன் த்ரீ பேண்டட் ஆர்ம டில்லோ’ என்று இதற்குப் பெயர். பெயருக்கு ஏற்றபடி இது பிரேசில் நாட்டில் மட்டுமே வசிக்கிறது. அழிந்துவரும் அரிதான இனம். இதன் உடல் அமைப்பு விநோதமானது. தலை ஒரு பகுதியாகவும், வயிற்றுப் பிரதேசத்தில் ‘வெஸ்டிபுள் டியூப்’ போல மூன்று விசித்திரமான மடிப்புகளுடன் உடல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. குட்டியூண்டு வால் பின்னால் நீட்டிக் கொண்டிருக்கும். இதன் உடலின் மேல்பகுதி, ஆமைகளுக…

  4. - என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் ஒழுங்கை கிரிக்கட் தெரியுமா? பன்னிரண்டு அடி அகலம் தான். பண்டா செல்வா ஒப்பந்தம் முடிந்து மூன்றாம் நாள் போட்ட தார் அத்தனையும் எடுபட்டு போய் சல்லிக்கல்லும் குண்டும் குழியும் மட்டுமே எஞ்சி இருக்கும். இரண்டு புறமும் மதில் சுவர். வெடித்துப்போய், கவனமில்லாமல் ஏறினால் சரிந்துவிழுந்துவிடும். ஒரு பக்கம் யாராவது ஹிட்லர் குடும்பம் இருக்கும். இன்னொரு வீட்டில் அந்த ஏரியாவின் தேவதை, “என் வீட்டு தோட்டத்தில்” பாட்டுக்கு கனவில் உங்களோடு சேர்ந்து டூயட் ஆடும் மதுபாலா! “ம்ஹூஹூம் அனுபவமோ” என்று நிச்சயம் இரண்டு நாளுக்கு ஒருவாட்டியாவது கனவில் வந்து செல்லமாக சிணுங்கியிருப்பாள்! வடிவான பெட்டை! அவளை ரூட்டு போட ஒன்றிரண்டு ஏஎல் அண்ணாமார…

    • 2 replies
    • 1.5k views
  5. இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதியில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் எண்ணிக்கையில் ஒருவர் அதிகரிக்கப்படவுள்ளார். இதற்கான பரிந்துரைக்கான நபர்களின் விபரங்கள் இலங்கை விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே சனத் ஜெயசூரியவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரின் விபரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலில் மேலும் சிலர் சேர்க்கப்படலாம் எனவும், இவர்களில் ஒருவர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்படவுள்ளார். சனத் ஜெயசூ…

    • 12 replies
    • 869 views
  6. இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக திலின கண்டம்பி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்தன, இலங்கை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அணியின் டெஸ்ட் அணித்தலைவராக அவுஸ்ரேலியத் தொடர் வரை பதவி வகித்த மஹேல ஜெயவர்தன, தனது இறுதி சர்வதேசத் தொடராக அவுஸ்ரேலிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இத்தொடரின் பின்னர் சாதாரண வீரராகப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மஹேல ஜெயவர்தன பதவி விலகிய பின்னர் இலங்கை டெஸ்ட், ஒருநாள் அணிகளின் தலைவராக அன்ஜலோ மத்தியூஸ் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் தற்பொது வெளியா…

    • 2 replies
    • 399 views
  7. . அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. பிறிஸ்பேணில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 26.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இறுதி விக்கெட்டுக்காக மிற்சல் ஸ்ரார்க், ஷேவியர் …

  8. இலங்கை அணியின் இளம் இடதுகைத் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்ன இலங்கையின் எதிர்காலத்திற்குரிய வீரர் என இலங்கை அணியின் தலைவரும் அடுத்த தொடரிலிருந்து இலங்கையின் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான அன்ஜலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கார காயமடைந்ததை அடுத்து இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேரடியாகச் சேர்க்கப்பட்ட லஹிரு திரிமன்ன, அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன்போது அவர் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பந்தொன்றையும் சந்திக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த லஹிரு திரிமன்ன, இரண்டாவது போட்டியில் மிகச…

    • 6 replies
    • 754 views
  9. ஊக்க மருந்தை பயன்படுத்தியது உண்மைதான்! - ஒப்ராவிடம் சைக்கிள் வீரர் ஒப்புதல் போதைப் பொருள் பயன்படுத்தியதல் தனது சாதனைகளை எல்லாம் இழந்த சைக்கிள் சாதனையாளர் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், தனது தவறுகளை பிரபல தொலைக்காட்சியாளர் ஒப்ரா வின்ஃப்ரையின் நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘இந்த சர்ர்ச்சைத் தொடர்பாக நான் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஆர்ம்ஸ்ட்ராங் வெளிப்படையாக பதிலளித்தார்’ என்று வின்ஃப்ரை கூறியிருக்கிறார். ‘நான் இந்தப் பேட்டி குறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் உங்களுக்குத் தெரிந்து விட்டது. அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுவிட்டார்’ என்று கூறியிருக்கிறார் வின்ஃப்ரை. இந்த பேட்டி ஆஸ்டின் நகரில் நடைப் பெற்றது…

  10. அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அடிலெய்ட் ஓவலில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக…

  11. இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நான்கு விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் குக் 75 ரன்களும், பெல் 85 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் யுவராஜ்சிங் 61 ரன்களும், சுரேஷ் ரெய்னா 50 ரன்களும் எடுத்தனர். மிக அற்புதமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகள் எடுத்த JC Tredwell ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியின் மிக அற்புதமான படங்கள், மற்றும் முழு ஸ்கோர் விவரங்கள் பார்க்க.…

  12. உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பல்லோன் தோர் (Ballon d'Or) தங்கப் பந்து விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அர்ஜெண்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி வென்றுள்ளார். பார்சலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கு விளையாடிவரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக விளையாடும் இத்தாலியின் அந்த்ரெஸ் இனியஸ்தாவையும், ரியல் மட்ரிட் கழகத்துக்காக விளையாடும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை முந்திக்கொண்டு இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டில் மட்டுமே 91 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஸுரிச் நகரில் நடந்த வைபவத்தில் மெஸ்ஸியே விருதுக்குரியவர் என்பது அறிவிக்கப்பட்டது. பல்லோன் தோர் விருதை தொடர்ந்து நான்கு முறை வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையைய…

  13. டெல்லி கிரிக்கெட்: கடைசி நேர திருப்பத்தில் பெரும் போராட்டத்தில் இந்திய அணிக்கு த்ரில்லான ஆறுதல் வெற்றி!!டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி நேர திருப்பத்தில் கடுமையான போராட்டத்துக்கு இடையே த்ரில்லாக 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஒருநாள் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றி!இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணியுடனான 2 ஒருநாள் போட்டிகள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா தோல்வியை சந்தித்தது. இன்றைய போட்டியில் ஷேவாக் இடம்பெறவில்லை. ரஹானேவும் அசோக் திண்டாவுக்குப் பதில் சமி அகமது சேர்க்கப்பட்டனர்.சொதப்பல் இந்தியாபோட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அண…

  14. இன்று நடந்த விக்வாஸ் T20 விளையாட்டில் சென் வான்னும் மார்லன் சல்முஸ் நேருக்கு நேராக மோதி கொண்டனர் http://www.youtube.com/watch?v=Nt_wlKsRgiU இந்த வீடியோவில் சண்டை பிடிப்பது வடிவாக்க தெரியுது

  15. அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தோல்வியடைந்துள்ளது. சிட்னியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி லஹிரு திரிமன்னவின் 91 ஓட்டங்கள், மஹேல ஜெயவர்தனவின் 72 ஓட்டங்களின் துணையோடு 294 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜக்ஸன் பேர்ட் 4 விக்கெட்டுக்களையும், மிற்சல் ஸ்ரார்க் 3 விக்கெட்டுக்களையும், பீற்றர் சிடில் 2 விக்கெட்டுக்களையும், நேதன் லையன் ஒரு விக்கெட்டையும் …

  16. 2012ம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் வீரர்களே கிரிக்கெட் உலகில் சத்தம் போடாமல் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்தவர்களே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் முன்னணியில் இருந்தனர். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் இலங்கை வீரரே முன்னணியில் இருந்தார். இந்திய வீரர்கள் எந்த ஒருகிரிக்கெட்டிலும் உலக அரங்கில் இந்த ஆண்டு பிரகாசிக்கவில்லை. முற்றிலும் இருண்டு போன ஆண்டாக இந்த ஆண்டு இந்தியாவுக்கு அமைந்து போனது. டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே முதல் பத்து வீரர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது ரசிகர்களுக்குப் பெரும் சோகமான செய்தியாகும். ஒரு நாள் பந்து வீச்சில் மலிங்கா கலக்கல் 1/9 Light on ஒரு நாள் பந்து வீச்சில்…

  17. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக ட்விட்டர் சமூக வலையமைப்பில் வதந்தியொன்று வெளியாகியுள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் இலங்கை அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் ரங்கன ஹேரத் இலங்கை அணி சார்பில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. 'சிட்னி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரங்கன ஹேரத் உயிரிழந்ததாகவும் இலங்கையின் முன்னாள் பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் காயமடைந்துள்ளார்' என்று மேற்படி ட்விட்டர் சமூக வலையமைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தியைத் தொடர…

  18. இலங்கை அணியின் தலைவராக இரு வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கிய மஹேல ஜெயவர்த்தன இரண்டாவதும் இறுதியுமான தடவையாகத் தனது தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார். இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னதாக மஹேல தனது டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும், அதன் பின்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒருநாள் தலைமையிலிருந்தும் விலகுவதாக இந்த இரண்டாம் முறை தலைமைப் பதவியை ஏற்கும்போதே மஹேல அறிவித்திருந்தார். தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலிலிருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை கிரிகெட் அணியின் மிகச் சிறந்த தலைவராக எப்போதும்…

    • 8 replies
    • 909 views
  19. விறுவிறுப்பு

    • 7 replies
    • 634 views
  20. Started by nunavilan,

    வர்மக்கலை வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது. வர்மம் என்றால் என்ன? உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்ம…

    • 1 reply
    • 1.9k views
  21. முன்னை நாள் இங்கிலாந்து கிறிக்கட் தலைவன் ரொனி கிறக் சுவாசப்பையில் ஏற்பட்ட கான்சர் நோயால் காலமானார். http://www.youtube.com/watch?v=BKwZi_xS_7U

  22. சென்னை: ஒரு நாள் போட்டிகளில் 7000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார் இந்திய கேப்டன் எம்.எஸ்.டோணி. இன்று பாகிஸ்தானுடன் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியின்போது இந்த ரன்களை அவர் எடுத்தார். 7000 ரன்களை எடுத்த 7வது இந்திய வீரர் டோணி ஆவார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார். சச்சின் 18,426 ரன்களை குவித்துள்ளார். 2வது இடத்தில் கங்குலி 11,221 ரன்களும், ராகுல் டிராவிட் 10,768 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். அதற்கடுத்த இடங்களில் அசாருதின் 9378 ரன்களுடனும், ஷேவாக் 8242 ரன்களுடனும், யுவராஜ் சிங் 8053 ரன்களுடனும் உள்ளனர். டோணி இன்று போட்ட சதம் அவரது ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8வது சதமாகும். இதே சென்னையில்…

  23. இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு வோர்ன்-முரளி கிண்ணத்திற்கான மூன்று போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் மெல்பேர்ணில் ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களால் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.