விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
ஓய்வு காலத்தை நெருங்கியுள்ளேன் - ரொஜர் பெடரர் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக டென்னிஸ் ஜாம்பவானான ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக திகழும் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் பட்டங்கள் அடங்கும். டென்னிஸ் தரவரிசையில் 310 வாரங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை அலங்கரித்த சாதனையாளராகவும் திகழ்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது வலது முழங்கால் முட்டியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெடரர், இவ்வாண்டு எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன் என்றும், அடுத்த ஆண்டில் புத்துணர்ச…
-
- 0 replies
- 915 views
-
-
240 பக்க புத்தகம்.. எல்லோரும் இதை பின் பற்றியே ஆகணும்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி.! மும்பை : 2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. பிசிசிஐ அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ள ஐபிஎல் தொடர் என்பதால் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக வீரர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டிய கடமையும் உள்ளது. முன்னெச்சரிக்கை பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து ஐபிஎல் அணிகள், வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து வருகிறது பிசிசிஐ. …
-
- 1 reply
- 766 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியிலிருந்து மதிவாணன் திடீர் இராஜினாமா.! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியிலிருந்து விலகிய கே. மதிவாணனின் இடத்திற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜயந்த தர்மதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் உப தலைவர் மதிவாணன் தனது பதவியை இன்று (29) இராஜினாமா செய்ததோடு, அது தொடர்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மோகன் டி சில்வாவிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், கே. மதிவானனின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவன சட்டத்தின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்ப, துணைத் தலைவரை நியமிப்பதற்கும் இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு இன்…
-
- 0 replies
- 777 views
-
-
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை 18 மாதங்களாக குறைப்பு! by : Anojkiyan பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு செய்து இருந்த மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த 3 ஆண்டு கால தடையை 18 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டார். கருணையின் அடிப்படையில் இந்த தண்டனை குறைப்பு செய்யப்…
-
- 1 reply
- 863 views
-
-
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு! இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது அப்பாஸ், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா, சர்பராஸ் அகமது உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையில், மீதமுள்ள ஒன்பது வீரர்கள் ஃபக்கர் சமான், ஹைதர் அலி, இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது அமீர், முகமது ஹஸ்னைன் மற்றும் மூசா கான் ஆகியோர் தொடர்ந்து ரி-20 தொடருக்கான அணியுடன் பயிற்சி பெறுவார்கள். முழுமையான அணி விபரம் இதோ. அசார் அலி, பாபர் அசாம், அபிட் …
-
- 0 replies
- 455 views
-
-
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு அனுமதி! by : Anojkiyan இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம் என நியூசிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கிரிக்கெட் சபையின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் இதுகுறித்து கூறுகையில் ”ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதன் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், வீரர்கள் மறுப்பது அபூர்வம். எனி…
-
- 0 replies
- 637 views
-
-
கிரிக்கெட்: ரிவர்ஸ் ஸ்விங் - கலையும், அறிவியலும் இணைந்த ரகசியம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால், பந்தை எச்சிலை கொண்டு பளிச்சிட செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறிய முதல் வீரராக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டோம் சிப்லே அறியப்படுகிறார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் நான்காவது நாளில் இந்த சம்பவம் நடந்தது. ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டோம் கவனக்குறைவாக தனது எச்சிலை கொண்டு பந்தை பளிச்சிட செய்தார். தனது விதிமீறல் குறித்து சிறிது நேரத்திற்கு பின்னர் உணர்ந…
-
- 0 replies
- 643 views
-
-
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் டு ப்ளெசிஸ்! by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பாப் டு ப்ளெசிஸ் நிதி திரட்ட முன்வந்துள்ளார். டு ப்ளெசிஸ் தன்னுடைய IXU ரக புதிய துடுப்பு மட்டை மற்றும் தான் அணிந்த 18ஆம் இலக்க இளஞ் சிவப்பு நிற சீருடை என்பவற்றை கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக ஏலம் விட தீர்மானித்துள்ளார். குறித்த சீருடையானது 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது டு ப்ளெசிஸ் அணிந்திருந்த சீருடையாகு…
-
- 0 replies
- 460 views
-
-
இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு மென்செஸ்டரில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில், ஒரு புள்ளியையேனும் பெற்றிராத மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த வெற்றியின் மூலம் 40 புள்ளிகளை பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, இந்தப் பட்டியலில் முதலாம் இடத்திலும், 296 புள்ளிகளைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 2 ஆம் இடத்திலு…
-
- 7 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜுலை 8 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களை அடித்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்களை அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷனான் கப்ரியல் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டாம் பெஸ் 2 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 114 ரன்கள் முன்னிலை உடன் இ…
-
- 1 reply
- 780 views
-
-
குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயரிட்ட உசைன் போல்ட்! மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கைவிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடாத்த வாய்ப்பு.! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்ட ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடாத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்த நிலையில் அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதி பெற்றிருந்த நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையேயான விரிசல் நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் உலகளாவிய…
-
- 0 replies
- 479 views
-
-
இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது 2020 ஜூலை 07 , பி.ப. 10:40 இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, செளதாம்டனில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கிறது. அந்தவகையில் கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர் இப்போட்டியுடன் கிரிக்கெட் மீளத் திரும்புகின்ற நிலையில், போட்டி முடிவுக்கப்பால் போட்டி எவ்வாறு நடைபெறுகின்றது என்பது உற்று நோக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா?- இன்று கங்குலிக்கு பிறந்தநாள் கொல்கத்தாவின் இளவரசர் என்ற செல்லப்பெயருடன் இருந்து தற்போது இந்திய கிரிக்கெட்டின் “தாதா“வாக வலம் வரும் சவுரவ் கங்குலி இன்று பிறந்தநாள் காண்கிறார். இந்திய கிரிக்கெட்டின் மரபுகளை தயங்காமல் தகர்த்தவர். ஆஃப் சைடில் அசுரன், இமாலய சிக்ஸர்களின் எந்திரன். இந்திய அணியின் இயல்பை மாற்றியவர், இயல்பிலேயே ஆளுமை பண்பு நிறைந்தவர். 1992-ம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்றோருடன் தனது 19-வது வயதில் ஆடிய அந்த போட்டியில் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார்…
-
- 0 replies
- 465 views
-
-
டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தானம்.! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு இன்று 39 வது பிறந்தநாள். இதனை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தின் சார்பில் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூலை-7) காலையில் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும், கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் கொண்டாடியுள்ளனர். தமிழர் தாயகப்பரப்பில் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுக்கு ரசிகர் மன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது! இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இன்று அதிகாலை மென்டிஸ் பயணித்த கார் – சைக்கிளுடன் மாேதிய விபத்தில் ஒருவர் பலியானமை தாெடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் பலியானமை முறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கிரிக்கெட்-வீரர்-குசல்-ம/
-
- 0 replies
- 540 views
-
-
உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க குழிபறிக்கும் கூட்டம்.! ஐ.சி.சி தலைவர் பதவிக்கு சங்கக்கார தகுதியற்றவர் என்ற திலங்க சுமதிபாலாவின் அண்மைய கூற்று , சங்கக்கார ஒரு உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க திலங்க சுமத்திபால மற்றும் மஹிந்தானந்த இருவரும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் குழிபறிப்பில் செயல்படுவதாக உணர வைக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மஹிந்தானந்தாவின் சர்ச்சைக்குரிய அறிக்கை, கோவிட் -19 ஐ விட அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் அவமானம். ICC தலைமை நாற்காலிக்கு இலங்கை கிரிக்கெட் சபை சங்காவை முன்மொழிய இருக்கும் தருணத்தில் 2011 உலகக் கோப்பை காட்டிக்கொடுப்பு என அப்போதைய துணை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த, பேசும் …
-
- 0 replies
- 992 views
-
-
(செ.தேன்மொழி) 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் போதிய ஆதராங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆகையால் இது தொடர்பான விசாரணைகளை நிறுத்தி வைப்பதற்கு விளையாட்டு குற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது. ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 2019 ஆம் ஆண்டு 24 இலக்க விளையாட்டு தொடர்பான குற்றச் செயற்பாடுகளை தடுக்கும் சட்டத்தின் கீ…
-
- 0 replies
- 500 views
-
-
2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா 2011ம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம் பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்து, இந்த போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெவித்திருந்தார். அதற்கான வலுவான சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மகிந்தானந்தவின் இந்த சர்ச்சையான …
-
- 0 replies
- 525 views
-
-
WWE பிரபலம் அண்டர்டேக்கர் ஓய்வு! WWE எனப்படும் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று உலகப்புகழ் பெற்ற ‘தி அண்டர்டேக்கர்’ தனது ஓய்வை அறிவித்துள்ளார். ”ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை” என தி அண்டர்டேக்கர் கூறியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பற்றி புகழ்ந்து வருகின்றனர். மார்க் காலவே என்ற நிஜப்பெயரை கொண்ட 55 வயதான தி அண்டர்டேக்கர், சமீபத்தில் வெளியான ஒரு ஆவணப்படத்தில் தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக WWE போட்டியில் பங்கேற்றுள்ளார். ‘தி டெட்மேன்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து, ‘தி லாஸ்ட் ரைட்’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், தி அ…
-
- 2 replies
- 889 views
-
-
இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்த பங்களாதேஷ் அணி! பங்களாதேஷ் அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் பங்களாதேஷ் அணி இலங்கைக்குச் சென்று 3 டெஸ்டுகளில் விளையாட இருந்தது. அந்தத் தொடர் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆகஸ்டில் பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்கான சூழல் தற்போது இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாத சூழலால் இந்த நிலை உள்…
-
- 0 replies
- 681 views
-
-
உலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் பதக்கம் வெல்வேன் - பி.வி.சிந்து உறுதி ஐதராபாத்: சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உலக சாம்பியனும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை 24 வயது பி.வி.சிந்து கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- சர்வதேச பேட்மிண்டன் போட்டி மீண்டும் தொடங்கும் போது போட்டி அட்டவணைக்கு தகுந்தபடி புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மனநிலையை கொண்டு இருப்பார்கள். ஆனாலும் இதுபோன்ற சோதனையான காலக்கட்டத்தில் நேர்மறையான எண…
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு! இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை துடுப்பாட்ட சபையால் யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சங்கத்திலிருந்து ஒருவர் தரநிலை 3 இற்கு உள்வாங்கப்பட்டுள்ளார். வடமராட்சி பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக மூத்த வீரரும், சிறந்த தடகள வீரருமான ரி. கிருபாகரன் யாழ் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சபையின் முன்னிலை மத்தியஸ்தரே இவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளார் வடக்கு கிழக்கு மாகணத்திருந்து முதன் முறையாக இலங்கை துடுப்பாட்ட மத்தியஸ்தர் சங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது கிரிக்கெற் மத…
-
- 0 replies
- 625 views
-
-
பணத்திற்காக 2011 உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு விற்றோம் – மஹிந்தானந்த by : Vithushagan 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கான தகுதி இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்கான அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடுவ…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
சுயநலனுக்காக விளையாடும் போதே தோல்வி கண்டேன்: மனம் திறக்கும் ராகுல்! by : Anojkiyan எனக்காக சுயநலமாக விளையாடும் போது தோல்வியடைந்தேன் அதன்பிறகு அணிக்காக விளையாட முடிவெடுத்த போது எல்லாம் கை கூடிவருகிறது என இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ரோஹித்தின் அந்த வார்த்தைகள் என்னை சாதாரணனாக்கியது. அதாவது முதலில் ராகுல் பிறகு நானா, தவானா என்பதை முடிவு செய்யலாம் என்று ரோஹித் கூறினார். இதை என்னால் மறக்க முடியாது. நான் ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய இரசிகன். அவருடன் சேர்ந்து சில ஆண்டுகள் வ…
-
- 0 replies
- 540 views
-