விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
பாட்டிலை வைச்சுகிட்டு ஆடணுமா? ஆஹா இப்பவே கண்ணை கட்டுதே.. ஐசிசியின் அதிரடி விதிகள்.! துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கொரோனா வைரஸ்-க்கு இடையே கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் துவக்க சில விதிமுறைகளை வகுத்துள்ளது. புதிய விதிகள் கிரிக்கெட் போட்டிகளை இப்போது துவங்காவிட்டால் பல அணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் இந்த விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விதிகளில் பெரும்பாலானவை பந்து குறித்தவை தான். கிரிக்கெட் போட்டியில் பந்து பல வீரர்களின் கை மாறி, அம்பயர் வசமும் செல்லும். அனைத்து வீரர்களும் பந்தை தொட வேண்டிய அவசியம் உள்ளது. என்ன கூறி உள்ளது ஐசிசி.? பந்தை எப்படி கையாள்வது என்பது பற்றி அந்த விதிமுறைகளில் அதிகம் குறிப…
-
- 0 replies
- 738 views
-
-
கம்ப்யூட்டர் வந்ததுக்கு அப்புறம் செஸ் விளையாட்டு மாறிப் போச்சு - விஸ்வநாதன் ஆனந்த் . சென்னை : தமிழகத்தை சேர்ந்தவரும், ஐந்து முறை செஸ் சாம்பியன் பட்டம் வென்றவருமான செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கணினி வந்த பின் செஸ் விளையாட்டு மாறியதை பற்றி பேசி உள்ளார். சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் செஸ் விளையாட்டைப் பற்றி பகிர்ந்து கொண்டார். செஸ் விளையாட்டின் அணுகுமுறை, அதனால் ஏற்படும் அழுத்தம், தான் ஓய்வு பெறலாம் என நினைத்த போது தான் பெற்ற முக்கிய வெற்றி என பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். என் அண்ணன், அக்கா செஸ் ஆடும் போது எனக்கு ஆறு வயது. அப்போது நான் என் அம்மாவிடம் எனக்கும் செஸ் கற்றுத் தருமாறு கேட்டேன். திடீ…
-
- 0 replies
- 548 views
-
-
பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் 40 மில்லியன் டொலர் செலவில் அமையும் புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் கட்டுமானம் தொடருமா என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச…
-
- 1 reply
- 553 views
-
-
சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை.? சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை என்ற கேள்விக்கு,சீன பிரதமர் லீகியாங்கின் பதில்! “நாங்கள் ஒரு நாளில் சிறுபகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக்கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக்கொள்வதில்லை. இந்தியர்களின் ஆர்வத்தைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது”என்பதாகும். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும், மற்றும் கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபி…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ, ‘‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியைவிட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் …
-
- 0 replies
- 827 views
-
-
வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான இந்திய பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன்: அக்தர் by : Anojkiyan இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பயிற்சியளிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘என்னிடம் உள்ள அறிவைப் பரப்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் கற்றுக்கொண்டது பந்துவீச்சுப் பயிற்சி பற்றி தான். அதனை அடுத்தவர்களுக்குக் கற்றுத் தர ஆர்வமாக உள்ளேன். இப்போதுள…
-
- 1 reply
- 968 views
- 1 follower
-
-
எச்சில்,வியர்வை பயன்படுத்த தடை ;அவுஸ்திரேலியாவின் முடிவு Leftin May 2, 2020 எச்சில்,வியர்வை பயன்படுத்த தடை ;அவுஸ்திரேலியாவின் முடிவு2020-05-02T09:21:45+00:00விளையாட்டு அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளின் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலக விளையாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிரிக்கெட்டில் கைகுலுக்குவது ஏற்கனவே தடை செய்யப்பட்டது. தவிர பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடை விதிக்கவும், இதற்குப் பதில் வேறு ஏதாவது ஒரு பொருளை பயன்படுத்தலாமா எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே ஆஸ்திரேலிய வ…
-
- 0 replies
- 735 views
-
-
கிரிக்கெட்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை இழந்தது ஏன்? படத்தின் காப்புரிமை Kai Schwoerer / getty images ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 2016 அக்டோபருக்கு பிறகு முதல்முறையாக இந்தியா இழந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 116 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. அடுத்த நிலையில் நியூசிலாந்தும் (115 புள்ளிகள்), 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையே இந்தியா பிடித்துள்ளது. 2016-17 காலகட்டத்தில் முதலிடத்தை பிடித்த இந்தியா 12 டெஸ்ட்களில் வென்றது. ஒரு போட்டியில் மட்டுமே தோற்…
-
- 0 replies
- 488 views
-
-
இன்சமாம் உல் ஹக் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மற்றும் தலைமை தேர்வாளர் ஆவார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தலைமைத் தேர்வாளர் இன்சமாம் உல் அக், அவர் விளையாடும் காலங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையிலிருந்த வித்தியாசங்கள் குறித்துப் பேசியுள்ளார். இந்திய வீரர்கள் அணியில் தங்களுடைய இடத்தை பாதுகாப்பதற்காக விளையானார்கள் என்றும், பாகிஸ்தான் வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளைக் கருத்தில் கொள்ளாமல் அணிக்காக விளையாடினார்கள் என்றும் கூறியுள்ளார். ஒரு யூடியூப் சேனலில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணி வீரரான ரமிஸ் ராஜாவுடன் பேசினார் இன்சமாம். இப்போது இருக்கும் வீரர்கள், சில சமயங்களில் தோல்விக்குப் பயப்படுவதால், அணியில் நிரந்தர இடம்பெறாமல் பாதியில் விலக வே…
-
- 1 reply
- 932 views
-
-
நான் பார்க்காத கஷ்டங்களா..? கண்டிப்பாக றி-20 உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பேன்.. சீனியர் வீரர் நம்பிக்கை. 2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்ட தினேஷ் கார்த்திக்கால், தோனி விக்கெட் கீப்பராக உருவெடுத்ததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார் தினேஷ் கார்த்திக். இந்திய கிரிக்கெட்டில் அவரும் ஒரு வீரராக இருந்தாரே தவிர, அவரால் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நிதாஹஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு த்ர…
-
- 1 reply
- 821 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை நடத்த தயாராகவிருப்பதாக இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது. மே மாதம் 03 ஆம் திகதி வரையான இந்தியாவின் நாடு தழுவிய பூட்டல் நடவடிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரை பி.சி.சி.ஐ. ஐ.பி.எல் தொடரை ஒத்திவைத்தது. இந் நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதொடர்பான செய்தியொன்று சிங்கள ஊடகத்தில் வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அத்துடன் அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் 19 அச்சுறுத்தல் குறைந்தால் இலங்கையின் இந்த முன்மொழிவு தொடர்பில்…
-
- 1 reply
- 706 views
-
-
டி20 உலக கோப்பை ரத்தாச்சுன்னா எல்லாமே கெட்டு போயிடும் -பிசிபி தலைவர் எச்சரிக்கை.! இஸ்லாமாபாத் : ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் ரத்தானால் ஐசிசி நிதி நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மற்றும் ஐசிசி நிதி மற்றும் வணிக விவகாரங்கள் குழுவின் தலைவருமான ஈசான் மணி, திட்டமிட்டபடி டி20 உலக கோப்பை நடத்தப்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.டி20 உலக கோப்பை தொடர் ரத்தானால் அதன்மூலம் ஐசிசி அதன் உறுப்பினர்கள், போர்டுகள் ஆகியவற்றிற்கு அளிக்கும் நிதி பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நடைபெறுவதில் சிக்கல்? ஆஸ்திரேலியா…
-
- 0 replies
- 761 views
-
-
ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஐபிஎல் அணிகளிற்கு அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இது குறித்த பகிரங்க அறிவிப்பை வெளியிடாத போதிலும் எட்டு அணிகளிற்கும் ஒலிபரப்பு உரிமம் பெற்றவர்களிற்கும் இதனை தெரிவித்துள்ளது. தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, என பிசிசிஐ தெரிவித்துள்ளது,இயல்பு நிலை ஏற்பட்டவுடன் வருட இறுதியில் போட்டிகளை நடத்தலாம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் என அணியொன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் முடக்கல் தொடர்பான அறிவிப்பிற்காகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் காத்திருந்தார் முடக்கல் நிலை நீடிக்கப்பட்டது…
-
- 0 replies
- 781 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகுஜன கூட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதிப்பை நீடித்ததைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவிருந்த 'Tour de France' சைக்கிள் ஓட்டப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் திங்களன்று பொது நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளானது 2020 ஜூலை மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என்று அறிவித்தார். குறித்த சைக்கிள் ஓட்டப் போட்டியானது ஜூன் 27 ஆரம்பமாகி ஜூலை 19 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்தது. டூர் டி பிரான்ஸ் என்பது ஆண்டுதோறும் பிரான்சில் நடைபெறும் வருடாந்திர ஆண்களின் பல நிலை சைக்கிள் பந்தயமாகும். தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர்களுக்கான ஒரு பிரெஞ்சு சைக்கிள் பந்தயம் மூன்று வாரங்கள் நீடிக்கும் மற்றும் சுமார…
-
- 0 replies
- 443 views
-
-
3 வருடம் வீட்டிற்கே போக மாட்டேன் - சுழற்பந்து வீச்சாளர்! கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் திகதியுடன் 21 நாட்கள் முடிவடைகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்றபின் மூன்று வருடங்கள் வெளியே தங்க முடியும் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். சாஹல் இதுகுறித்து கூறுகையில் ‘‘லாக்டவுன் முடிந்து நான் விட்டை விட்டு வெளியே சென்றபின், என்னுடைய விட்டுக்கு திரும்பமாட்டேன். இனிமேல் என்னால் வீட்டுக்குள் இதுபோன்று ந…
-
- 1 reply
- 771 views
-
-
ரசிகர்கள் இல்லாமல் டி20 உலக கிண்ணம் என்பது சரியாக இருக்காது! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நாளை (15) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் போட்டி நடைபெறும் என ரசிகர்கள் மட்டுமல்ல, வீரர்களும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்பது உறுதியாகிவிட்டது, அதேபோல் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் டி20 உலக கிண்ணத்தையும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்று சில வ…
-
- 0 replies
- 472 views
-
-
தைவானில் ஆரம்பமான எல்லே (பேஸ் பால்) விளையாட்டும் ஆட்களில்லாத அரங்கும் இப்படித்தான் சிலகாலம் துடுப்பெடுத்தாட்டம், உதைபந்தாட்டமும் நிகழுமா? ஆனால், தொலைக்காட்சியிலும் வானொலி மற்றும் இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு
-
- 2 replies
- 517 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் வகையில் அதற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு …
-
- 0 replies
- 684 views
-
-
கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 க்கான பிளேஒப் போட்டிகள் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2021 ஆண்டு இடம்பெறவிருந்த மகளிர் யூரோ கிண்ணத்தற்கான தகுதிப் போட்டிகள் உட்பட ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய கற்பந்து சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்…
-
- 0 replies
- 447 views
-
-
கொரோனாவைக் கட்டுப்படுத்த நன்கொடை வழங்கினார் நோவக் ஜோகோவிச் by : Benitlas உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நன்கொடை அளித்துள்ளார். இதற்கமைய அவர் 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளார். செர்பியாவையும் பாதிக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மருத்துவ உபகரணங்கள் மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதற்காக அவர் குறித்த நிதியுதவியை வழங்கியுள்ளார். http://athavannews.com/கொரோனாவைக்-கட்டுப்படுத-2/
-
- 0 replies
- 712 views
-
-
கொரோனா எதிரொலியாக தள்ளிவைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல்.போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்படுமா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு, ஐ.பி.எல்.லுக்கு வீரர்களை தேர்வு செய்யும் ஏல நடைமுறையை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐ,பி,எல், அணி உரிமையாளர்கள், முக்கிய வீரர்களை தக்கவைத்து, அடுத்த ஆண்டு ஐ.பி.எல்,லில் அவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிரிக்கெட் மைதானத்தில் சமூக விலகியிருத்தலை உறுதி செய்வது இயலாத காரியம் என்பதால் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ரத்தாவது உறுதி எனவும் கூறப்படுகிறது. கொரோனாவால் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் மற்…
-
- 1 reply
- 522 views
-
-
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. அதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் திகதி நிறைவடைகிறது. பராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 23 தொடக்கம் செப்டெம்பர் 2 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/237591/2021-டோக்கியோ-ஒலிம்பிக்-போட்டிகள்-ஜூலை-23-ஆரம்பம்
-
- 0 replies
- 543 views
-
-
லண்டன்: ஜூன் 29ம் தேதி லண்டனில் துவங்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பிரிட்டனில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 1990களுக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றது. கடைசியாக் இரண்டாம் உலகப் போரின்போது விம்பிள்டன் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஜெர்மன் டென்னிஸ் பெடரேஷன் துணை பிரஸிடண்ட் டிர்க் ஹார்டோர்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூன் 29 1945ம் தேதி நடக்க இருந்த கிராண்ட் ஸ்லாம் போட்டி இரண்டாம் உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டபோது டென்னிஸ் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த விம்பிள்டன் நிர்வாகிகள், அடு…
-
- 0 replies
- 655 views
-
-
28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்ட், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார். குறித்த தகவலை அன்டனி யார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார். அத்துடன் அந்த பதிவில் உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/78903
-
- 0 replies
- 572 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டகிராம் பதிவில் பிராவோ, உலக அளவில் 27.000 பேரைக் கொன்ற கோவிட்-19க்கு எதிரான ஒரு புதிய பாடலை வெளியிட்டார். “நாம் விட்டுக் கொடுக்கவில்லை. தொற்றுநோயால் ஏற்பட்ட இந்த பாதிப்பில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பிரார்த்தனை! ஒன்றாகப் போராடுவோம். இந்த பாதிப்பில் ஒரு நேர்மறைய…
-
- 0 replies
- 395 views
-