விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
-
- 1 reply
- 794 views
-
-
ஐஸ்எஸ்எல் கால்பந்து: சென்னை அணியில் ஜமைக்கா வீரர் டுவைன் கெர் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 3-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணிக்காக ஜமைக்கா கால்பந்து அணியின் டுவைன் கெர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளார். கோல்கீப்பரான கெர் இந்த சீசனுக்காக மட்டும் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். 29 வயதான கெர் ஐஸ்லாந்தில் உள்ள கிளப் ஒன்றில் விளையாடி வந்தார். அந்த கிளப்பின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை அணியில் இணைந்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு ஜமைக்கா அணிக்காக சர்வதேச போட்டிகளில் கெர் அறிமுகமானார். இதுவரை அவர் 15 …
-
- 0 replies
- 469 views
-
-
2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு தெரிவாவதில் பாகிஸ்தானுக்கு சிக்கலாம் ஒருநாள் கிரிக் கெட் தரவரிசையில் பாகிஸ்தான் இதுவரை இல்லாத அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் தன்னிச்சையாக 2019 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து– - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்தொடர் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 4 போட்டிகளை வென்று 4–-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று வைட் வொஷ்ஷை தவிர்த்தது. இந்த தொடர் த…
-
- 1 reply
- 443 views
-
-
விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு விசா இருந்தும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் வங்காள தேசம் வீரர் ருபெல் ஹொசைன் தவித்து வருகிறார். வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்க…
-
- 13 replies
- 2k views
-
-
ரசிகரை உதைத்த கால்பந்து வீரர்...8 மாதங்கள் கால்பந்தை உதைக்கத் தடை! #FootballNothingWithoutFans கால்பந்து - ரசிகர்களுக்கான விளையாட்டு. பீலே, மரடோனா போன்ற ஜாம்பவான்களுக்குக் கொடுக்கும் மரியாதையை இங்கு ரசிகர்களுக்கும் கொடுத்தாக வேண்டும். ரசிகர்களை நோக்கி நடுவிரல் காட்டிவிட்டு ஒரு வீரர் சாதாரணமாக தப்பித்துவிட முடியாது. கால்பந்து மைதானத்துக்குள் முக்கியமானது பெர்ஃபாமன்ஸ் அல்ல, மரியாதை. அந்த விளையாட்டுக்கு, ஆடும் அணிக்கு, தன் அணியை இயக்கும் அந்த ஆதரவாளர்களுக்கு ஒரு வீரன் மரியாதை செலுத்தியே ஆகவேண்டும். இல்லையேல், அவன் எப்பேர்ப்பட்ட சாதனையாளனாக இருந்தாலும் கால்பந்து அரங்கிலிருந்து காணாமல் போய்விடுவான். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம், ரசிகர் ஒருவரை உதைத்து, சஸ்பெண்ட்…
-
- 0 replies
- 335 views
-
-
ஐ.சி.சி. தரப்படுத்தல் : இருவகை போட்டிகளிலும் ஆஸி முதலிடம் Thu, 05/01/2014 - 16:37 ஐ.சி.சியின் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. அதேபோல் ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. டெஸ்ட் தர வரிசையில் தென்னாபிரிக்கா 2ஆவது இடத்திலும், இங்கிலாந்து 3ஆவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி 2 இடங்கள் பின்தள்ளி 5ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 7 ஆவது இடத்திலுள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி 2ஆவது இடத்திலுள…
-
- 0 replies
- 443 views
-
-
வட்மோருக்கு ICCஇல் பதவி வியாழக்கிழமை, 08 மே 2014 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அண்மையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து பதவியில் இருந்து விலகிய டேவ் வட்மோர், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளின் மேம்படுத்தலில் ஈடுபடுவார் என சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் அதி உயர் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான குழுவின் முகாமையாளர் உடன் இணைந்து செயற்ப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலககக் கிண்ணத்திற்கு குறிப்பிட்ட நான்கு அணிகளையும் தயார்ப்படுத்தும் நோக்கிலேயே டேவ் வட்மோர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். 14ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் தன…
-
- 0 replies
- 341 views
-
-
தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்! இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில…
-
- 1 reply
- 641 views
-
-
யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவேண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, கிறாஸ்கோப்பர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. யுவ பிரன்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் டுவேண்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. மே மாதம் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டியில் 18 அணிகள் பங்குபற்றுவதுடன், முதற் சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் இடம்பெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற முதற்போட்டியில் ஜொலிஸ்ரார்ஸ் அணியினை எதிர்த்து தெல்லிப்பளை யூனியன்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ர…
-
- 0 replies
- 469 views
-
-
அவுஸ்ரேலியா அணியினரின் சிம்பாவே பயணம் நிறுத்தப்பட்டது. வரும் செப்ரம்பர் மாதம் சிம்பாவேயில் அவுஸ்ரேலியா - சிம்பாவே அணிகளுக்கு இடையில் 3 ஒரு நாள் சரவதேச போட்டிகளில் நடத்துவதாக ஐசிசி திட்டமிட்டிருந்த வேளையில் திடீரென அவுஸ்ரேலியா அணியினரை சிம்பாவேக்கான இந்த சுற்று பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அவுஸ்ரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. Government stops Zimbabwe tour The Australian government has ordered the country's cricket team not to tour Zimbabwe in September. John Howard, the prime minister, said it was not fair to leave the decision up to Cricket Australia and the players. However, James Sutherland, the CA chief executive, has foreshadowed the po…
-
- 0 replies
- 939 views
-
-
நாடே ஒழுங்கீனமாக இருக்கும் போது என்னை ஒழுக்கமற்றவன் என்று சொல்வதா? என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடிவாளம் இல்லாத குதிரை போல் செயற்படக்கூடியவர் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர். இதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. ஊக்க மருந்து விவகாரம் இரவு விடுதி நடனம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித…
-
- 0 replies
- 866 views
-
-
06 NOV, 2023 | 08:18 PM சி.சி.என் 2023 உலகக்கிண்ணத் தொடர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்த முறை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆடுகளத்தில் நுழைந்த அவர் தனது தலைக்கவசம் பிரச்சினை கொடுத்ததால் சுமார் மூன்று நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாட தயாராகவில்லை. இதையடுத்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோர ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் படி TIME OUT முறையில் மெத்யூஸ் ஆட்டமிழந்தவராக கருதப்பட அவர் ஆட்டமிழப்பு தீர்ப்பை வழங்கினார். ஒரு நாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளைப்பொறுத்தவரை இ…
-
- 1 reply
- 345 views
- 1 follower
-
-
உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் பணப்பரிசுத் தொகையில் ஏன் இந்த பாகுபாடு? ஆடவருக்கு 576 மில்லியன் டொலர்கள், மகளிருக்கு 11.1 மில்லியன் டொலர்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மகளிருக்கான போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகையை விட 400 மடங்கு அதிகமான பரிசுத் தொகை ஆடவருக்கான போட்டிக்கு வழங்கப்படுவதாக குறைகூறப்படுகின்றது. நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையைவிட இம் முறை கனடாவில் நடைபெற்ற போட்டிகளுக்கு பணப்பரிசு 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. எனினும் , ஆடவர் உலக சம்பியனான ஜேர்மனிக்கு கடந்த வருடம் 35 மில்லியன் அமெரிக்க டொலர்…
-
- 1 reply
- 219 views
-
-
இந்தியாவின் முதல் பெண் 'பாடிபில்டர் ': ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி அஸ்வினி! பொதுவாக பாடி பில்டிங் என்பது ஆண்கள் பங்கேற்கும் விளையாட்டு. இந்திய பெண்கள் அந்த பக்கமே திரும்புவதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கருத்தை உடைத்து எறிந்திருக்கிறார் ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி ஒருவர். மும்பையை சேர்ந்த அஸ்வினி வாஸ்கர் என்பவர்தான் அவர். இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் பாடிபில்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வரை அஸ்வினி சாதாரண இந்திய பெண்களை போலத்தான் இருந்தார். ஓவர் வெயிட் காரணமாக மிகுந்த சோகத்தில் இருந்தார். தோழிகள் கூறியதன் பேரில், உடல் வெயிட்டை குறைக்க ஜிம்முக்கு சென்றவர்தான் தற்போது பாடிபில்டராக மாறி விட்டார். ஜிம்மில் முத…
-
- 2 replies
- 417 views
-
-
இந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு! உலகக்கிண்ண தொடருக்கான சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை பாகிஸதான் கிரிக்கெட் சபை இன்று (18) வெளியிட்டுள்ளது. 15 பேர் அடங்கிய அணியில் அபிட் அலி பாபர் அசாம், பகீஷ் அஷ்ரஃப், பகர் சமான், ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இமாட் வசீம், இமாம்-உல்-ஹக், ஜுனைட் கான், மொஹமட் ஹபீஸ், முகம்மது ஹஸ்னைன், ஷாதாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் …
-
- 1 reply
- 775 views
-
-
(ஆதவன்) வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைக்ளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம்பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது. இரண்டாமிடத்தை மகாஜனக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஸ்கந்தவரோதயக் கல்லூரியும், நான்காம் இடத்தை இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. (ச) மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை (newuthayan.com)
-
- 0 replies
- 428 views
-
-
இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்குள் முதலாவது அணியாக காலடி எடுத்து வைத்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்தது. 286 என்ற வெற்ற…
-
- 0 replies
- 702 views
-
-
சென்.பற்றிக்ஸ் அணிக்கு கௌரவிப்பு September 26, 2015 இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி உதைபந்தாட்ட அணிக்கு கல்லூரி சமூகத்தினரால் நேற்று பெரும் எடுப்பில் கெளரவம் வழங் கப்பட்டது. சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீதியிலிருத்து கல்லூரி பாண்ட் வாத்திய இசையுடன் கல்லூரியின் மத்தியூஸ் மண்டபம் வரை வீரர்கள் அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்த்து அதிபர் அருட்தந்தை ஜொறோ செல்வநாயகத்தின் தலைமையில் வீரர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வுகளுக்கு பிரதம விருத்தினராக வடமாகாணசபை உறுப்பினரும் விளையாட்டுத்துறை இணைப்பாளருமான இ.ஆனல்ட், சிறப்பு விருத்தினரா…
-
- 1 reply
- 295 views
-
-
இங்கிலாந்து, ஆஸி ஒ.ச. போட்டித் தொடர்: மீள் பார்வை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. உலக சம்பியன் அவுஸ்திரேலியா அணி 3-2 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. இரண்டு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்று ஐந்தாவது போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெற்றி பெற்று தாம் உலகச்சம்பியன் என்பதனை நிரூபித்துவிட்டனர். ஆனாலும் இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் இது பெரிய தோல்வியாக கருதமுடியாது. உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து…
-
- 0 replies
- 295 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியினரின் நடத்தை குறித்து குற்றச்சாட்டு நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுபான விருந்துகளில் கலந்து கொண்டமை மற்றும் அணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் போன்றன குறித்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிகளுக்கு முதல் வந்த இரவுகளில் இலங்கை அணியினர் மதுபான விருந்துகளில் பங்கேற்றமை தொடர்பான புகைப்படங்கள் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்…
-
- 3 replies
- 353 views
-
-
ரபேல் நடாலையே அசர வைத்த காது கேளாத டென்னிஸ் வீரர்! பிறவியிலிருந்து காதுகள் கேட்கவிட்டாலும், லட்சியத்தை நோக்கிய தனது பயணத்தை தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார் லீ டக் ஹீ. ஜனவரி 18-ம் தேதி தொடங்கும் கிரான்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கப் போகிறார், கொரியாவைச் சார்ந்த இந்த 17 வயது இளைஞன். தன்னுடைய பிரச்னையை ஒரு குறையாகவே கருதாத லீ, தனக்கு இது மிகப்பெரிய பலம் என்று சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். நடாலைக் கவர்ந்தவர் பிறக்கும்போதிருந்தே காது கேளாத லீக்கு, இரண்டாம் வகுப்பு படிக்கையில்தான் தனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே தெரிந்துள்ளது. ஆனாலும் ஒருநாளும் இதைப்பற்றி வருந்தியதில்லையாம் லீ. டென்னிஸ் பேட்டை கையில் …
-
- 0 replies
- 520 views
-
-
கேப்டன் பொறுப்பில் தோனி சற்று அதிக காலம் நீடித்து வருகிறார்: இயன் சாப்பல் தோனி, குர்கீரத் சிங் மான். | படம்: ஏ.எஃப்.பி. இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி முன்பு வலுவான தலைவராக திகழ்ந்தார், இப்போது யோசனைகள், திட்டங்கள் இன்றி தவிக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார். ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது பற்றி கூறும்போது, அலிஸ்டர் குக், மார்க் டெய்லர், கிரெக் சாப்பல் ஆகிய கேப்டன்களின் காலக்கட்டத்தை விரிவாக அலசி தோனி பற்றிய தனது கருத்தை தெரிவித்தார். அலிஸ்டர் குக் தனது பலவீனமான கேப்டன்சி மற்றும் பேட்டிங் என்ற ஒரு காலக்கட்டத்திலிருந்து திறம்பட எழுச்சியுற்ற கேப்டன் என்…
-
- 0 replies
- 363 views
-
-
மஹேல தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் : திலங்க குற்றசாட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹே ஜயவர்தன இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயற்படுவது சிறப்பான ஒரு விடயம் அல்ல என இலங்கை கிரிக்கைட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட மஹேல ஜெயவர்தன கிரிக்கெட்டிருந்து ஓய்வுபெற்று ஒரு சில மாதங்களே ஆகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயற்படும் அவர் சொந்த நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார். இந்தச் செயல் எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார் கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெர…
-
- 4 replies
- 1.1k views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2016 – ஒரு கண்ணோட்டம் 16 அணிகள் பங்கேற்கும் 35 போட்டிகளைக் கொண்ட 6வது இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று (மார்ச் 08) முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தல…
-
- 0 replies
- 536 views
-
-
கிளார்க் தலைமையில் ‘நச்சுக் கலாச்சாரம்’ பரவியது: மிட்செல் ஜான்சன் கடும் தாக்கு மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன். | படம்: ஏ.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், மைக்கேல் கிளார்க் கேப்டன்சி காலக்கட்ட பிரச்சினைகளை அலசி எழுதும் போது “நச்சுக் கலாச்சாரம்’ பரவியது என்று கடுமையாக சாடியுள்ளார். தனது ‘Resilient’ என்ற சுயசரிதை நூலில், பாண்டிங் சென்ற பிறகே கிளார்க் தலைமையில் அணியில் கடும் கோஷ்டிகள் உருவானதால் சில வீரர்கள் விளையாடுவதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் என்று எழுதி அதிர்ச்சி அலை பரப்பியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு ஜான்சன் கூறும்போது, “பாண்டிங்கிற்குப் பிறகு நடைமுறைகள் மிகவு…
-
- 0 replies
- 300 views
-