விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
. இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல்நாள் முடிவில் இலங்கை அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. காலியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய நாள் ஆட்டம் மழை காரணமாக 4.3 ஓவர்கள் முன்னதாகவே நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இலங்கை அணி 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவின் முழங்கையில் பந்து பட்டதன் காரணமாக அவர் வெளியேற, டில்ஷானுடன் இணைந்து குமார் சங்கக்கார…
-
- 6 replies
- 694 views
-
-
சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: பங்களாதேஷ் அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.. இதன் முதலாவது டெஸ்ட் போட்டியில், சிம்பாப்வே அணி 151 ஓட்டங்களால் …
-
- 0 replies
- 694 views
-
-
நாளை இலங்கை வருகிறது உலகக் கிண்ணம் 6 ஆவது இருபதுக்கு20 உலகக்கிண்ணம் இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கை வரவுள்ளது. உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் கிண்ணமானது மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 இல் பங்களாதேஷில் இடம்பெற்ற 5 ஆவது தொடரின் கிண்ணத்தை இலங்கை அணி தனதாக்கிக் கொண்டது. இருபதுக்கு20 கிண்ணத்திற்கான தொடர் 2007 ஆம…
-
- 2 replies
- 694 views
-
-
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் இறுதிப் போட்டிக்கு தகுதி! அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டி இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், பெடரரை தோற்கடித்த இளம் வீரரான கிரீஸின் சிட்ஸிபஸ்-ஐ எதிர்கொண்டார். நடாலின் அதிரடிக்கு சிட்ஸிபஸ்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-2 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-0 எனவும் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் பேட்டிக்கு முன்னேறினார் நடால். நடால் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அல்லது பவுலி ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavann…
-
- 0 replies
- 694 views
-
-
பேர்ண்லியிடம் தோற்ற ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது. பேர்ண்லிக்கு கிடைக்கப்பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது. இதேவேளை, புல்ஹாமின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை பொபி றெய்ட் பெற்றிரு…
-
- 0 replies
- 694 views
-
-
சென்னையில் களமிறங்கும் ஜூனியர் ஷூமேக்கர்! ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில், ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கர். இவர், இந்தியாவில் நடக்கவிருக்கும் எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் நடக்கும் இப்போட்டியில், பல முன்னாள் வீரர்களின் வாரிசுகளும் பங்கேற்கவுள்ளனர். ஃபார்முலா ஒன் வரலாற்றில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஷூமேக்கர், பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று மீண்டவர். அவரது மகனான 16 வயது மிக், இதுவரை 22 'ஃபார்முலா 4' பந்தயங்களில் பங்கேற்று, 1 பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். ‘வேன் அமர்ஃபூட் ரேசிங்’ அணிக்காக பங்கேற…
-
- 0 replies
- 694 views
-
-
சிஎன்என்) லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதாக ஸ்பானிஷ் கிளப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. "கிளப் மற்றும் பிளேயர் ஒரு உடன்பாட்டை எட்டினாலும், இன்று ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்களின் தெளிவான எண்ணம் இருந்தபோதிலும், நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக இது நடக்காது" என்று பார்சிலோனா தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 34 வயதான அவர், கடந்த மாதம் அர்ஜென்டினாவுடன் தனது முதல் கோபா அமெரிக்காவை வென்றார், 2020 கோடையில் அவர் "ஆண்டு முழுவதும்" வெளியேற விரும்புவதாக ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தை அவர் இலவசமாக செய்ய முடியும் என்று கூறினார், ஆனால் இறுதியில் பார்சிலோனா உடன்படாததால் மெஸ்ஸி தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப…
-
- 14 replies
- 693 views
- 1 follower
-
-
ராகுல் திராவிட் ஆலோசனை மறக்க முடியாதது: முரளி விஜய் சிறப்புப் பேட்டி இங்கிலாந்தின் பிட்ச் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் தொடக்க வீரர் என்ற கடினமான பணியைத் திருப்தியளிக்கும் விதமாகச் செய்த முரளி விஜய் ஆஸ்திரேலியா தொடரில் இந்த இளம் இந்திய அணி எழுச்சிபெறும் என்று நம்பிக்கை கூறியுள்ளார். இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 402 ரன்களை 40.20 என்ற சராசரியில் எடுத்த முரளி விஜய் 'தி இந்து' (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தமிழ் வடிவம் வருமாறு: டெஸ்ட் தொடரை சிறப்பாகத் தொடங்கி விட்டு பிறகு சவால் அளிக்காமல் தோல்வியடைந்தது உங்களை எப்படி ஏமாற்றமடையச் செய்தது? குறிப்பாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் 4 மணி நேர ஆட்டத்திலேயே இந்திய அணியின் கையை விட்டுச் சென்றதே? இ…
-
- 0 replies
- 693 views
-
-
அவுஸ்ரேலியா இங்கிலாந்து அணிகளுக்கான முதலாவது ஓடி நாளை ஆரம்பம் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள முதலாவது ஓடி போட்டி நாளை அவுஸ்ரேலியா மெல்பேர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இவ் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளதுடன் 1 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. அதனால் டெஸ்ட் தொடரை அவுஸ்ரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஓடி தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணி மோதவுள்…
-
- 8 replies
- 693 views
-
-
இந்தியர்கள் பலமாக இருக்கும் போட்டியான துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 காமன்பெல்த் போட்டிகளில் இந்தியா 16 பதக்கங்களை வென்றிருந்தது. காமன்வெல்த் போட்டிகளின் தலைவர் லூயிஸ் மார்டின் 2022ல் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி இடம்பெறாது என்று கூறியுள்ளார். இந்தியா இந்த பர்மிங்ஹாமில் நடைபெறும் இந்த தொடரை புறக்கணிக்கவுள்ளது. இந்தியாவின் புறக்கணிப்புக்கு போட்டிகளின் விதிமுறைகளில் கொன்டு வரப்படும் மாற்றமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளின் தலைவர் இங்கிலாந்து நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் 1974ம் ஆண்டிலிருந்து நடைபெற்ரு வரும் இந்த போட்டியில் முதல்முறையாக துப்பாக்கி சுடுதல் நிறுத்தப்படவுள்ளதாக கூறினார். இந்தியர்கள் பல…
-
- 0 replies
- 693 views
-
-
ஷேவாக், கெய்ல், அப்ரிடியின் அதிரடியை மீண்டும் பார்க்கலாம்! #T10Cricke கிரிக்கெட் போட்டிகளை அடுத்த லெவலுக்கு நகர்த்திச் செல்லும் முன்னெடுப்புகளில் ஒன்றாக, பத்து ஓவர்கள் மட்டுமே கொண்ட 'டி-10 கிரிக்கெட்' போட்டித் தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ் கெய்ல், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்கரா ஆகியோர் இப்போட்டிகளுக்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, நால்வருமே களத்திலும் இறங்கி கலக்க இருக்கிறார்கள். ஆசிய நாடுகளைச…
-
- 1 reply
- 693 views
-
-
Published By: VISHNU 09 FEB, 2024 | 06:51 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அப் போட்டியில் 190 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான பெத்தும் நிஸ்ஸன்க 50 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டில் சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்ட…
-
- 8 replies
- 693 views
- 1 follower
-
-
வறுமையின் பிடியிலும் திறமையால் பிரகாசிக்கும் வீராங்கனை
-
- 2 replies
- 693 views
-
-
‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’ அரசியல்வாதிகள் இலங்கை கிரிக்கெட் துறை அழிக்கப்படுவதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஒருவருடத்திற்குள் மாத்திரம் இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் “ த எக்கொனமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்…
-
- 3 replies
- 692 views
-
-
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள் சிலருக்கும் இதில் பங்கிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் கிரிக்கெட் புக்கிகளில் ஒருவரான சோனு யோகேந்திர ஜலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமையன்று இவரையும் பையாஜி என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. உலகில் நடக்கும் மிகப் பெரிய கிரிக்கெட்ட சூதாட்டம் தொடர்புடைய புக்கிகள் இருவருமே. இவர்கள்தான் கிரிக்கெட் வீரர்களை அணுகி பல கோடி பேரம் பேசி, ஒரு அணியை ஜெயிக்க அல்லது தோற்க வைக்கும் கருவிகள். இவர்களிடமிருந்து 25 மொபைல…
-
- 0 replies
- 692 views
-
-
சர்வதேச கால்பந்து போட்டி: மாஸ்கோ சென்ற தமிழக தெருவோர குழந்தைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசங்கீதா ''கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்த…
-
- 0 replies
- 692 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இங்கிலாந்து Editorial / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, மு.ப. 08:12 Comments - 0 மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்படோஸில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்தியத் தீவுகள்: 360/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 135 (129), ஷே ஹோப் 64 (65), டரன் பிராவோ 40 (30), ஜோன் கம்பெல் 30 (28), அஷ்லி நேர்ஸ் ஆ.இ 25 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 3/37 [8], அடில் ரஷீட் 3/74 [9], கிறிஸ் வோக்ஸ் 2/59 [10]) இங்கிலாந்து: 364/4 (48.4 ஓவ. ) (துடுப்…
-
- 0 replies
- 692 views
-
-
குமார் தர்மசேனவின் தீர்ப்பு அவருக்கு உலை வைக்குமா? இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பர்னில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண குழு ஏ போட்டியில் இங்கிலாந்தின் கடைசி ஆட்டக்காரருக்கு மத்தியஸ்தர் குமார் தர்மசேன வழங்கிய தீர்ப்பு முழு கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்பு மத்தியஸ்தர்கள் குழாமில் இடம்பெறும் மத்தியஸ்தர் ஒருவரிடமிருந்து இத்தகைய தீர்ப்பு ஒன்று வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து மத்தியஸ்தம் வகிக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போட்…
-
- 0 replies
- 692 views
-
-
சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார பெற்றுக்கொண்ட சதத்துடன் சர்ரே (Surrey) அணி யோர்க்ஷையர் (Yorkshire) அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்களைக் குவித்துள்ளது. டிவிஷன் – I அணிகளான சர்ரே மற்றும் யோர்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சர்ரே அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சர்ரே அணிக்கு ஆ…
-
- 5 replies
- 692 views
-
-
சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள் 33 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வட பகுதியைச் சேர்ந்த பாடசாலைகள் யுத்த சூழ்நிலை காரணமாக ஆரம்ப காலத்தில் பங்கேற்கவில்லை. எனினும், கடந்த 10 வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பாடசாலைகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்று வெற்றிகளைப் பதிவுசெய்து வருவதுடன், தேசிய மட்டத்தில் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 158 புள்ளிகளைப் பெற்ற வடக்கு மாகாணம், தேசிய மெய்வல்லுனர் அரங்கில் முன்னிலை வகிக்கின்ற வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை பின்தள்ளி 6ஆவது இட…
-
- 0 replies
- 692 views
-
-
இந்திய அணியில் விவசாயின் மகன் December 21, 2015 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரன் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை நேற்று தெரிவுக் குழு அறிவித்தது. இதில் பஞ்சாபை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீரர் பிரைந்தர் ஸ்ரன் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்தார். அதே போல் ரிஷிதவானும் அறிமுக வீரராக ஒருநாள் அணியில் தெரிவாகி உள்ளனர். 23 வயதான பிரைந்தர் ஸ்ரன் 11 முதல் தர போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 7 முதல் தர ஒருநாள் போட்டிகளில் வ…
-
- 0 replies
- 692 views
-
-
உலகக் கிண்ண போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான கிரிக்கெட் அணிகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் : பாஃப் டூ பிளசிஸ் (அணித்தலைவர்) ஹாசிம் அம்லா குயின்றன் டி ஹொக் (விக்கெட் காப்பாளர்) ஜெ.பி. டுமினி ஐடென் மார்க்ராம் டேவிட் மில்லர் லுங்கி நிகிடி அன்ரிச் நோர்ட்ச் அன்டைல் பெஹ்லுக்வாயோ டிவைன் பிரிடோரியஸ் …
-
- 0 replies
- 691 views
-
-
சச்சின் மகன் vs ஆட்டோ ஓட்டுநரின் மகன்... ஒப்பீடும், உண்மையும்! கார்த்தி Arjun Tendulkar Vs Pranav Dhanawade நமக்கு எப்போதுமே, நாம் படிக்கும், பார்க்கும் விஷயங்களில் ஒரு எமோஷனல் வீக்னெஸ் தேவைப்படுகிறதா? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்... 15 வயது சிறுவனான பிரனவ் தனாவடே ஜனவரி 2016-ம் ஆண்டு 1000 ரன்கள் அடித்து மீடியாக்களில் தலைப்பு செய்தியானார். எதிரணயினரின் ஒட்டுமொத்த ஸ்கோர் நூற்றுக்கும் குறைவு என்பதால், அது இன்னும் பெரிதானது. அதன் பின்னர், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு மண்டலத்துக்கான அணி அறிவிக்கப்படுகிறது. அதில் சச்சினின் மகன் அர்ஜுன் ஸ்குவாடில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அந்தப…
-
- 0 replies
- 691 views
-
-
விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 17 முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கோப்பை முடிந்த பின்னர், டி 20 களின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக விராட் கோலி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ன டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அணியை வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அண…
-
- 3 replies
- 691 views
- 1 follower
-
-
ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது இலங்கை! [sunday, 2014-03-09 08:42:39] ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. நேற்றிரவு மீர்பூரில் நடந்த போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது. முதலில் மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணியினர் 260 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தனர். பாகிஸ்தான் அணியில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் மட்டைவீச்சின்போது விழுந்த ஐந்து விக்கெட்களையுமே இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கைப்பற்றியிருந்தார்.இலங்கை அணி தனது மட்டை வீச்சில் சிறப்பான துவக்கத்தைக் கண்டது. துவக்க ஆட்டக்காரர் திரிமான்ன சதமடித்திருந்தார்…
-
- 3 replies
- 691 views
-