Jump to content

‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’


Recommended Posts

‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’
 
 

image_5e805e8e50.jpgஅரசியல்வாதிகள் இலங்கை கிரிக்கெட் துறை அழிக்கப்படுவதாக, இலங்கை அணியின்  முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஒருவருடத்திற்குள் மாத்திரம்  இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் “ த எக்கொனமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்லாதவர்களால் கிரிக்கெட் அழிவடைந்து செல்கின்றது. கிரிக்கெட் என்பத நம்பிக்கை. வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியம் என்று முரளி தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியல்வாதிகளால்-கிரிக்கெட்-துறைக்கு-அழிவு/175-214463

Link to comment
Share on other sites

இலங்கை கிரிக்கெட்டின் அழிவு குறித்து முரளி ஆவேசம் !

 

இலங்கையின் கிரிக்கெட்டை அரசியல்வாதிகள் அழிக்கின்றனர் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

muttiah-muralitharan.jpg

இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட் பாரிய குழப்பநிலையில் உள்ளது என்பதே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட்டினை நிர்வகிக்கும் பொறுப்பை அரசியல்வாதிகள் கைப்பற்றியுள்ளனர் என தெரிவித்துள்ள முரளீதரன் கிரிக்கெட் குறித்த அறிவு இல்லாத அவர்கள் நாளாந்தம் இலங்கை கிரிக்கெட்டை அழித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையுடன் தொடர்புபட்ட விடயம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கான நம்பிக்கையை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள முரளீதரன், நான் ஒரே நாளில் தலைசிறந்த வீரனாக மாறவில்லை, நான்கைந்து வருடங்கள் அர்ஜுண ரணதுங்க எனக்கு தேவையான நம்பிக்கையை வழங்கினார்  எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது துடுப்பாட்ட வீரர் ஒருவர் களத்தில் இறங்கும் ஒவ்வொரு தடவையும் அவர் சிறந்த முறையில் விளையாடாவிட்டால் அடுத்தபோட்டியில் அவரிற்கு இடமில்லை என  தெரிவிக்கின்றனர் என முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

பந்துவீச்சாளர்களின் நிலைமையும் இவ்வாறானாதாகவே காணப்படுகின்றது. கடந்த ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்தில் இலங்கை அணிக்காக 60 வீரர்கள் விளையாடியுள்ளனர். இது தொலைநோக்கம் எதுவும் இல்லாததை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/32582

Link to comment
Share on other sites

இலங்கை கிரிக்கெட்டின் அழிவுக்கு அரசியல்வாதிகளே காரணம் – முரளிதரன்

Muttiah-Muralitharan-2
 

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் தி எகொனமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

”இலங்கையின் கிரிக்கெட்டானது தற்போது குழம்பிப் போயுள்ளது. அரசியல்வாதிகள் தான் இலங்கை கிரிக்கெட்டை நிர்வாகம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எந்தவொரு அனுபவமும், அறிவும் இல்லாதவர்கள் நிர்வாகத்தில் இருப்பதென்பது இலங்கையின் கிரிக்கெட் நாளுக்கு நாள் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்தி நிற்கின்றது. கிரிக்கெட் என்பது நம்பிக்கை. வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு அங்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் இலங்கை அணியின் ஜேர்சியை கிரிக்கெட் வீரர்கள் அணியும் போது கௌரவமும், மதிப்பும் காணப்பட்டது. எனினும், தற்போது அவ்வாறான நிலை உள்ளதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

”இதேநேரம், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றது. அதேபோன்று 2014 T-20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. அவ்வாறான சாதனைகளை அண்மைக்காலமாக படைத்து வந்த இலங்கை அணி தற்போது பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக, நான் ஒரு நாளில் சிறந்த பந்துவீச்சாளராக மாறவில்லை. நான்கைந்து வருடங்கள் அர்ஜுன ரணதுங்க எனக்கு தேவையான நம்பிக்கையை வழங்கினார்” எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்காவிட்டாலோ அல்லது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றாவிட்டாலோ அடுத்துவரும் போட்டிகளில் கதிரைகளில் உட்கார வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதுதான் இலங்கை அணியின் தற்போதைய நிலை.

அதேநேரம், கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 60 வீரர்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்கள். வருடமொன்றுக்கு 60 வீரர்களா? இது மிகவும் மோசமான அணுகுமுறை. இது தொலைநோக்கம் எதுவும் இல்லாததை வெளிப்படுத்துகின்றது. ஆனால் இவ்வாறான மாற்றங்களால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பின்னடைவை இலங்கை கிரிக்கெட் சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இளம் வீரர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற கேள்விக்கு முரளிதரன் கருத்து வெளியிடுகையில்,  

”குசெல் மென்டிஸை எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணிக்காக எதிர்காலத்தில் பிரகாசித்து தொடர்ந்து அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர். ஆரம்ப காலங்களில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். எனினும், ஒருசில மாதங்களில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஓரு சுற்றுப்பயணத்தில் அவரால் ஓட்டங்களை குவிக்க முடியாது போன காரணத்தால் அடுத்த தொடரில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே, இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இதுபோன்ற காரணங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது” என்றார்.

 

கடந்த காலங்களில் முன்னாள் தலைவர்களான அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா போன்றவர்கள் இலங்கை அணிக்காக விளையாடியதன் காரணமாகத்தான் இலங்கை அணிக்கு கௌரவமும், வெற்றியும் கிடைத்தது. அதனாலேயே கிரிக்கெட் உலகில் இலங்கையின் பெயரை காண்பிக்க முடிந்ததாகத் தெரிவித்த முரளிதரன், அவ்வாறானதொரு நிலைமை தற்போது இலங்கை அணியில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள், அரசியல்வாதிகளின் பிரவேசம் என்பவற்றால் இலங்கை கிரிக்கெட் அணி அழிவடைந்து வருவதாக முரளிதரன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

முரளியின் கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் பதிலடி

tamil-murali-696x464.jpg
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர சுழல் பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், கடந்த கால சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு தவறான நபர்களின் ஆலோசனைப்படி ஊடகங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பி வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக இந்தியாவின் சஞ்சிகையொன்றுக்கு முத்தையா முரளிதரன் அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேர்தல் ஒன்று நெருங்கி வருகின்ற போது இவ்வாறான நாடகங்களை நாங்கள் நிறையவே பார்த்துள்ளோம். இது ஒரு சாதாரண விடயம். ஆனாலும், முரளிதரன் போன்ற உலகப் புகழ் பெற்ற நட்சத்திர வீரரொருவர் இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு ஆளாகியிருப்பது தொடர்பில் உண்மையில் நாம் கவலையடைகிறோம்.

அதிலும் குறிப்பாக முரளிரதன் கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு இவ்வாறு பேசுகின்றார் என நான் நினைக்கிறேன். 1995ஆம் ஆண்டு முரளிதரனின் பந்துவீச்சு தொடர்பில் முதற்தடவையாக சர்ச்சை எழுந்தது. அப்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இருந்த திலங்க சுமதிபால மற்றும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி திஸாநாயக்கவின் முயற்சியினால் அவருக்கு உதவி செய்தோம்.

அதேபோன்று 2004இல் நான் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இருந்த போது தூஸ்ரா பந்துவீச்சு தொடர்பாக ஏற்பட்ட குற்றச்சாட்டிலிருந்தும் அவரை நாம் மீட்டிருந்தோம். இதற்காக நாம் அவரை அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்து உதவியிருந்தோம்.

இது இவ்வாறிருக்க, உலகம் அறிந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரொருவர் இவ்வாறு குற்றம் சுமத்துவது தொடர்பில் உண்மையில் நாம் கவலையடைகிறோம். எனவே ஒரு சிலரின் தூண்டுதல் காரணமாக எந்தவொரு உத்தரவாதமுமின்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகவே நான் அவருடைய கூற்றை கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் த எகொனமிக்ஸ் டைம்ஸ் (The Economic Times) சஞ்சிகைக்கு முத்தையா முரளிதரன் வழங்கிய விசேட நேர்காணலின் போது இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

அதிலும் குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எந்தவொரு அனுபவமும், அறிவும் இல்லாதவர்கள் நிர்வாகத்தில் இருப்பதென்பது இலங்கையின் கிரிக்கெட்டை நாளுக்கு நாள் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

எது எவ்வாறியினும், முரளிதரனுக்கும், தற்போதுள்ள திலங்க சுமதிபால தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையில் இதற்கு முன் பல தடவைகள் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதன்போது 10 நாட்களுக்கு அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக முத்தையா முரளிதரன் செயற்பட்டார்.

இவ்வாறு முரளிதரன் அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியளித்தமைக்கு பல தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, முரளிதரனை துரோகி என பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

 

இதற்கு முரளிதரன் பதிலளிக்கையில், ”அவுஸ்திரேலிய அணிக்கு போட்டிகள் ஆரம்பமாக முன் வெறும் 10 நாட்களுக்கு பயிற்சியளிக்கவே விருப்பம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் முழு தொடருக்கும் என்னை பணிபுரிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் இலங்கை அணி வெற்றிக்காக விளையாடும் போது அதை எவ்வாறு அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து பார்த்து ரசிக்க முடியும். இலங்கை கிரிக்கெட் எனக்கு நிறைய செய்துள்ளது. அதற்கு நான் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன். ஆனாலும், வீரராக மாத்திரமல்லாது, ஓய்வு பெற்ற பிறகும் இந்த நாட்டுக்காக நான் பல சேவைகளை ஆற்றியுள்ளேன். என்னை இலங்கை கிரிக்கெட் துரோகி என குற்றம் சுமத்தினால் மறுபுறத்தில் அவர்கள் தான் மிகப் பெரிய துரோகி என்று சொல்வேன். அவுஸ்திரேலியா என்னை அழைப்பதற்கு முன் இலங்கை எனது சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் நாட்டுக்காக அதைச் செய்திருப்பேன” எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே குறித்த காலப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயத்தில் முரளிதரனுக்கு ஆதரவாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் பேசியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
    • முகாம் ஒன்றினுள் போராளிகளுடன் லெப். கேணல் பொன்னம்மான் 1987<
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.