விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன ? By VISHNU 06 OCT, 2022 | 11:48 AM (என்.வீ.ஏ.) அவுஸ்திரேலியாவில் முதல் சுற்றுடன் இம் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று, சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதுடன் முதல் சுற்றில் 8 நாடுகள் இரண்டு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் அடிப்படையில் மோதவுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் இரத்தாகிறதாம் முன்னணி அணிகளுக்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடுவதாலும், அதிக அளவில் சுவாரஸ்யம் இருப்பதாலும் ஐ.சி.சி. இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்தது. அதன்படி தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்தியத்…
-
- 0 replies
- 313 views
-
-
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 02:06 PM இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவராக அப்ரிடி நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தொடர்களில் அப்ரிடி தலைவராக செயற்படவுள்ளார். இந்தியாவில் 2016 இல் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிவரை பாகிஸ்தானின் இருபதுக்கு 20 கிரிக்கட் அணித் தலைவர் பதவியை அவர் வகிப்பார் என அந் நாட்டு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. பங்களதேஷில் இவ் வருடம் நடைபெற்ற உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளின் முதல் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியதை அடுத்து மொஹமட் ஹபீஸ் அணித் தலைவர் பதவியைத் துறந்திருந்தார். அ…
-
- 0 replies
- 389 views
-
-
[size=4]பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி அரையிறுதிப் போட்டிக்கு துடுப்பாட்டத்துக்கு மிகப் பாதகமாக ஆடுகளத்தை தயாரித்திருந்ததான அதிகாரிகளை பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் கண்டித்துள்ளார். 16 ஓட்டங்களினால் இலங்கை அணி பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்த இந்த ஆடுகளம் துடுப்பாட முடியாததாக அமைந்திருந்தது என அறிவிப்பாளராக கொழும்பு வந்திருந்த வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை முந்துவது 180 ஓட்டங்களை முந்துவது போலாகும் என அவர் கூறினார். இப்படியான முக்கியத்தும்மிக்க ஒரு போட்டிக்கு இவ்வாறாக ஆடுகளம் அமைத்தது எவ்வாறு என அவர் வினவினார். பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியும் இந்த…
-
- 0 replies
- 415 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக இந்தியா வர பாகிஸ்தான் வீரர்கள் மறுக்கலாம் ! மும்பையில் நடைபெற இருந்த இந்திய –- பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை சிவசேனா போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும், சிவசேனா மிரட்டலால் ஐ.சி.சி. தங்களது நடுவரான அலீம் தாரை திரும்பப்பெற்றது. இந்த செயல்களால் பி.சி.சி.ஐ. தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட வரவிருக்கும் பாகிஸ்தான் வீரர் கள் மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.சி.சி. தலைவர்களில் ஒருவரும்இ பாகிஸ்தான் முன்னாள் வீரருமான ஸாஹிர் அப்பாஸ் தெரிவித்த…
-
- 0 replies
- 196 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் 20 அணிகளை தெரிவு செய்ய ஐ,சி,சி, தீர்மானித்துள்ளது. அதன்படி, 12 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும், மேலும் 8 அணிகள் தகுதிச் சுற்றுப்போட்டியின் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். மேலும், மீதமுள்ள இரு அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும். உலகக் கிண்ண இருபதுக்கு 2…
-
- 1 reply
- 247 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாடாவிட்டால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி (டிசம்பர்–ஜனவரியில்) விளையாட மறுத்தால் உலகக் கிண்ணத்தை புறக்கணித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்துவித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்தகட்ட முடிவெடுப்போம். அப்படி…
-
- 0 replies
- 174 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2016 – ஒரு கண்ணோட்டம் 16 அணிகள் பங்கேற்கும் 35 போட்டிகளைக் கொண்ட 6வது இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று (மார்ச் 08) முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தல…
-
- 0 replies
- 543 views
-
-
இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் சூழ்ச்சி ; இலங்கை அணிக்கு நடந்த அநீதி (வீடியோ இணைப்பு) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின் போது நாணய சுழற்சியில் இலங்கை அணியே வெற்றிப் பெற்றதாகவும், அதை இந்திய அணிக்கு வழங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் வர்ணனையாளர் முரளி கார்த்திக்கால் இந்த நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்ட போது,உபுல் தரங்க நாயணத்தை சுழற்றிய வேளையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தலையென (HEAD) என கோரினார். பின்னர், போட்டி தீர்மானிப்பாளரான ஹேன்ட் பிக்ரொப்ட் பூ (TRAIL) என அறிவித்து உபுல் தரங்கவை நோக்கி கையை காட்டினார்.எனினும், மீண்டும…
-
- 6 replies
- 670 views
-
-
இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரராக டோனி சாதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின் போது 34 பந்தில் டோனி 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இந்த போட்டியில் ஓட்டங்கைளக் குவித்ததன் மூலம் டோனி இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். http://globaltamilnews.net/2018/76583/
-
- 0 replies
- 628 views
-
-
இருபதுக்கு-20 போட்டிகளில் ஜொலிஸ்ரார் முதலிடம் -குணசேகரன் சுரேன் யாழ். மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இருபதுக்கு-20 போட்டிகளின் தரப்படுத்தல்களில், 54.54 புள்ளிகளைப் பெற்ற ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம், முதலிடத்தைப் பெற்றுள்ளது. சென்ரல் விளையாட்டுக் கழகம், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணத்துக்காக யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சிறந்த அணியை தெரிவு செய்யும் தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது. 2010ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தரப்படுத்தலில், 50, 40, 30 ஓவர்கள் மற்றும் இருபதுக்கு-20 ஆகிய போட்டிகளுக்கு தனித்தனியாக புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வருடத்துக்கான அனைத்து இருபதுக்கு-20 போட்ட…
-
- 1 reply
- 300 views
-
-
இருமுறை 300 ரன்கள் அடித்தும் எனக்கு மதிப்பில்லை: கிறிஸ் கெய்ல் காட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை 300 ரன்களை எடுத்திருந்த போதும், ஜமைக்காவிற்காக நிறைய செய்தும் அந்த அரசு தன்னை மதிக்கவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கடுமையாகச் சாடியுள்ளார். வரிவிலக்கு கேட்டிருக்கிறார் கிறிஸ் கெய்ல், ஆனால் ஜமைக்கா அரசு தொடர்ந்து அந்த கோரிக்கையை நிராகரித்து வருகிறது என்று அவர் 'தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “ஜமைக்கா அரசு மீது நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். நான் கேட்பதெல்லாம் கொஞ்சம் நாகரிகம், சிறு அங்கீகாரம் அவ்வளவே. 2 முறை முச்சதங்கள் அடித்துள்ளேன், ஆனால் விமான நிலையத்தில் ஒரு கேமரா கூட என்னை புகைப்படம் எடுக்க வரவில்…
-
- 0 replies
- 354 views
-
-
இருமுறை சாம்பியன், 2019 உ.கோப்பைக்காக தகுதிச்சுற்றில் ஆடும் மே.இ.தீவுகள்- ரசிகர்கள் வேதனை 1979 உலகக்கோப்பையுடன் கிளைவ் லாய்ட் 1975, 1979 உலகக்கோப்பை சாம்பியன்களான மே.இ.தீவுகள் 2019 உலகக்கோப்பைக்காக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வரும் ஞாயிறன்று ஹராரேயில் களமிறங்குவது மே.இ.தீவுகளின் தீவிர ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. தலைசிறந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் தனிப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆனால் மே.இ.தீவுகளின் நிலையோ இன்று அது ஆதிக்கம் செலுத்திய ஒரு வடிவத்தில், தோற்கடிக்க முடியாத அணியாக இருந்த வடிவத்தில் தகுதிச்சுற்றுக்குப் போராடும் நிலை. கெய்ல், பிராவோ,…
-
- 0 replies
- 177 views
-
-
இறுதி ஆட்டம் இலங்கைக்கு மாற்றம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இறுதி ஆட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக இந்த இடமாற்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இலங்கை இந்திய வீரர்கள் பிரத்தியேக விமானம் ஒன்றில் இலங்கை நோக்கி பயணமாகக்கொண்டீருக்கிறார்கள் இப்பிடி என்னுடைய நண்பர் தனது சிங்கள நண்பர் சொன்னதாகச் சொன்னார் ஏப்ரல் முதலாம் திகதி கப்சாவாக இருக்கலாம்
-
- 0 replies
- 1.1k views
-
-
இறுதி ஓவரில் மலிங்க கூறியது என்ன? : “எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் தாய், தந்தை உருக்கம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதுமாத்திரமின்றி இறுதி தருணத்தில் மலிங்க தனக்கு எவ்வாறான ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் வழங்கினார் என அசேலவும் மனந்திறந்துள்ளார். அசேல குணவர்தன தொடர்பில் அவரது தாய், தந்தை தெரிவிக்கையில், தாய், “நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்ற…
-
- 13 replies
- 1.1k views
-
-
இறுதி சுற்றில் இந்தியா . Tuesday, 26 February, 2008 11:13 AM . ஹோபர்ட், பிப்.26: ஹோபர்ட்டில் இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. . இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸதிரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா மற்றும் இலங்கை மோதிய கடைசி லீக் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா மற்றும் பிரவீன் குமார் ஆகியோரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 47.1 ஓவரில் இலங்கை அணி 179 ர…
-
- 0 replies
- 889 views
-
-
இறுதி டெஸ்ட் போட்டி: டோனி வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014 08:25 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் காலம் அண்மித்து வருகின்றது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போட்டியே லோர்ட்ஸ் மைதானத்தில் தான் விளையாடிய இறுதிப் போட்டி என 33 வயதான டோனி கூறியுள்ளார். லோர்ட்ஸ் வெற்றி பற்றிக் கூறும் வேளையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த வெற்றி பற்றிக் கூற தனக்கு வார்த்தைகள் இல்லை. இறுக்கமான போட்டி ஒன்று என்று கூறிய டோனி, 2007ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் ஸ்ரீஷாந்துடன் இணைந்து போதிய வெளிச்சமில்லாமல் போட்டி நிறுத்தப்படும் வேளையில் சமநிலையில் நிறைவு செய்தமை மறக்க முடியாத ஒரு போட்டி எனவும் கூறியுள்ளார…
-
- 0 replies
- 1k views
-
-
இறுதி நேரத்தில் பெறப்பட்ட கோலினால் போட்டியை சமநிலை செய்த பார்சிலோனா அத்லடிகோ மட்றிட் மற்றும் பார்சிலோனா கழகங்கள் மோதிய லாலிகா சுற்றுப்போட்டியின் போட்டியானது, பார்சிலோனா அணியினால் இறுதித் தருவாயில் பெறப்பட்ட கோலின் மூலம் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. முதல் பாதி அட்லடிகோ அணி சார்பாகவும், இரண்டாம் பாதி பார்சிலோனா அணி சார்பாகவும் அமைந்திருந்தது. நேற்றைய தினம் (14) நடைபெற்ற போட்டிகளில் அட்லடிகோ மட்றிட் கால்பந்து கழகத்திற்கும் பிரபல பார்சிலோனா கால்பந்து கழகத்திற்கும் இடையிலான போட்டி பார்வையாளர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற போட்டியாக அமைந்தது. அத்துடன் பார்சிலோனா அணியானது அட்லடிகோ மட்றிட் அணியின் புதிய அரங்கமான மெட்ரோபோலீனோ (Me…
-
- 0 replies
- 325 views
-
-
இறுதி நேரப் பரபரப்பில் அசத்தலாக ஆடி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி. March 17, 2019 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தேசிய அணியில் விளையாடும் இரண்டு வீரர்களை உள்ளடக்கிய தனது அணியுடன் களமிறங்கிய போதும், களத்தடுப்புகளில் இழைத்த தவறுகளால் வெற்றியைத் தவறவிட்டது. 221 என்ற இலக்கை மத்திய கல்லூரி நிர்ணயிக்க, 48 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளைப் பறிகொடுத்து வெற்றியைச் சுவைத்தது சென்.ஜோன்ஸ் கல்லூரி. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 17ஆவது ஒரு நாள் ஆட்டம், சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது. துட…
-
- 0 replies
- 859 views
-
-
இறுதி பத்து ஓவரில் போட்டியின் திசையை மாற்றிய மே.தீவுகள் : பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி! (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மே.தீவுகள் அணி 4 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மொஹமட் ஹபீஸ் 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் 309 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 49 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. ஒருகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓவர்களுக்கு 138 ஓட்டங்களை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. …
-
- 0 replies
- 247 views
-
-
இறுதி போட்டிக்கு தெரிவான பங்களாதேஷ் அணி..! தென் ஆப்ரிக்காவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டிக்கு பங்களாதேஷ் அணி தெரிவாகியது. பங்களாதேஷ் அணி முதல் முறையாக இவ்வாறு இறுதி போட்டிக்கு தெரிவிக்கியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் நியுசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 6 விக்கட்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதனை தொடர்ந்து வெற்றிஇலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44வது ஓவ…
-
- 0 replies
- 521 views
-
-
இறுதி போட்டியில் களமிறங்கும் சென்றலைட்ஸ் vs ஜொலி ஸ்டார்ஸ் விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம், வருடாந்தம் நடத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் பி.வதூஸனனின் துல்லியமான பந்துவீச்சால் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியின் போட்டிகள், கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 27 ஓவர்களில் 78 ஓட்டங்களை மாத்திர…
-
- 1 reply
- 413 views
-
-
இறுதி போட்டியில் முழு கவனம்: ஜெர்மனி வீரர் குளோஸ் ரியோஜெனீரோ, ஜூலை.11– உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி வருகிற 13–ந்தேதி நடக்கிறது. இதில் 3 முறை சாம்பியன் ஜெர்மனி, 2 முறை சாம்பியன் அர்ஜென்டினா மோதுகின்றன. இறுதி ஆட்டம் குறித்து ஜெர்மனியின் முன்னணி வீரர் குளோஸ் கூறியதாவது:– பிரேசிலுக்கு எதிராக அரைஇறுதி போட்டியை மிகவும் ரசித்து விளையாடினோம். அதில் அபார வெற்றி பெற்றோம். ஆனால் அதையே நினைத்து கொண்டிருக்கவில்லை. 24 மணி நேரத்தில் மறந்து விட்டோம். தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராக இறுதிப்போட்டி மீதே முழு கவனம் செலுத்தி வருகிறோம். அதில் எங்களது திறன்களை காட்ட வேண்டியது அவசியம். உலக கோப்பையில் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்த பெருமையாக உள்ளது. இருந்தபோ…
-
- 8 replies
- 893 views
-
-
இறுதி வரை பரபரப்பு: இந்தியா – மேற்கிந்தியதீவு போட்டி சமநிலையில் நிறைவு! இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 321 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்கத்து 157 ஓட்டங்களை, அம்பத்தி ராயுடு 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி ஓபேட் மெக்காய், …
-
- 0 replies
- 280 views
-