Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. உதயன் பத்திரிகைகை நிறுவனத்தின் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை அடுத்து ஊடகத்திற்காய் உயிர்நீத்த எமது சக பணியாளர்களான சுரேஸ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரது நினைவு அஞ்சலி இன்று காலை 10 மணியளவில் உதயன் பணிமனையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், இ.ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் - நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான பொ.கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் உதயன் பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=27…

  2. பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் - யாழ். அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இரங்கல் 17 APR, 2024 | 05:33 PM பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் என அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் (யாழ்ப்பாணம்) செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், நூற்றாண்டு கடந்த வரலாற்றை கொண்டதும், ஈழத்தின் பழம்பெரும் அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டதும், பல பண்டிதர்களை இத்தமிழுலகுக்கு அளித்ததுமான ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தை கடந்த 40 வருடங்களாக போற்றிப் பணியாற்றிய பெருந்தமிழ்மகன். தமிழ் மூச்சே உயிர்மூச்சு என்ற அசையாத நம்பிக்கையோடு சங்க…

  3. இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022) May 22, 2022 — என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் — யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.…

  4. வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினம் இன்று September 2, 2021 தமிழர் விடுதலை கூட்டணியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் மகனும் ,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள நினைவிடத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் போது , தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட…

  5. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல் December 25, 2021 நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது. 25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில், ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நினைவு கூரப்பட்டது. நிகழ்வுக்கு முன்…

  6. கவிஞர் வி. கந்தவனம் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்தம் துயரிலும் தாய்வீடு பங்குகொள்கிறது. அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

  7. யாழ். மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி காலமானார் April 13, 2022 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். பாலகுமாரன் இயற்கை எய்தினார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிர் இரசாயனவியல் துறையின் விரிவுரையாளராக இணைந்து கொண்ட இவர், மூத்த விரிவுரையாளராக கடமையாற்றிய அதே வேளை 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பீடத்தின் 9 ஆவது பீடாதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பீடாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மருத்துவ பீடத்துக்கென அதி நவீன வசதிகளைக் கொண்ட ஹூவர் …

  8. முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார் 07 Dec, 2025 | 12:07 PM இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அ…

  9. மூத்த எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார்! மூத்த எழுத்தியல் தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் (88) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஐராவதம் மகாதேவன் 1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக இருந்துள்ளார்.இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார். கல்வெட்டு துறையில் தமிழ் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி காரணமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர், அதில் ஆய்ந்த…

  10. Published By: DIGITAL DESK 3 08 APR, 2024 | 04:36 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் வயலின் இசை வழங்கிக் கொண்டிருந்த நேரம் இயலாமை ஏற்பட்டு தொடர்ந்து வீட்டிற்கு சென்ற நிலையில் இன்றையதினம் அதிகாலை காலமானார். நாச்சிமார் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/180742

  11. தேசியத் தலைவரின் தந்தை அமரர் திருவேங்கடம்-வேலுப்பிள்ளையின் நினைவுநாள். ஐயாவுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  12. நாட்டின் பிரபல நடனக் கலைஞரும் நடன ஆசிரியருமான கலாசூரி ரஜினி செல்வநாயகம் காலமானார். உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளார். இராஜகிரிய – களபளுவாவையில் வசித்து வந்த அவர் தனது 71 ஆவது வயதில் காலமானார். உள்நாட்டில் மட்டுமின்றி வௌிநாட்டிலும் புகழ்பெற்ற கலாசூரி ரஜினி செல்வநாயகம், கலா கீர்த்தி மற்றும் விஷ்வ கலா கீர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பலாங்கொடையை சேர்ந்த கிராமமொன்றில் பிறந்து, கலை உலகில் பிரவேசித்த அவர், மாணவர்களுக்கு நடனம் கற்பிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். https://thinakkural.lk/article/278040

  13. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜெயன் மஹாதேவன் (ஜெயன் தேவா) மறைவு! - வ.ந.கிரிதரன் 21 டிசம்பர் 2022 நண்பரும், எழுத்தாளரும், முகநூலில் ஜெயன் தேவா , Jeyan Deva , என்னும் பெயரில் அறியப்பட்டவருமான மகாதேவன் ஜெயக்குமரன் (விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவர்) மறைந்த செய்தியினை எழுத்தாளர் காத்யான அமரசிங்க மூலம் அறிந்து கொண்டேன். அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார். தனிமையில் வாழ்ந்து வந்த ஜெயன் தேவாவின் மறைவு துயர் தருவது…

  14. இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா காலமானார் December 11, 2021 இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ்தேசிய பற்றாளருமான வேலுப்பிள்ளை தவராஜா இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தனது 68ஆவது வயதில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற கணித ஆசிரியராகயிருந்த இவர், இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகாலமாக ஆயுட்கால உறுப்பினராக செயற்பட்டு வந்திருந்தார். எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவந்த இவர் மட்டக்களப்பு மாவட்ட தம…

  15. உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் சாவடைந்தார்! AdminSeptember 4, 2021 உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் நேற்றுக் (03-09-2021) காலமானார். அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன், தவிற்காரர் செல்லத்துரையின் மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார். அதன் மேல் இந்தியாவுக்க…

  16. பிரபல எழுத்தாளர் தெணியான் மறைந்தார்! மே 22, 2022 ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவரான “தெணியான்”என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் 22.05.2022 அன்று மாலை வல்வெட்டித்துறை – பொலிகண்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன், இலக்கிய உலகில் பிரவேசித்ததும் ‘தெணியான்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் கற்று பின்னாளில் அங்கேயே நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் தெணியான். மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் இவர் வர்ணிக்கப்பட்டவர். ந…

  17. மணிவண்ணன்... தான் இறந்த பின்பு தன் உடலில், புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார். நினைவு அஞ்சலி. 🙏

  18. தோழன் விஜயன் - எமது சிவப்பு அஞ்சலிகள்!! தோழன் விஜயன் இன்று தனது சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் நிறுத்திக் கொண்டான். தோழன் விஜயன் இனவாத இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தனது அரசியல் செயற்பாடுகளை தொடங்கினான். பின்பு இலங்கையின் எல்லாச் சமூகங்களின் விடுதலையும் தமிழ் மக்களின் விடுதலையும் இணைந்து கொள்ளும் போதே நிலையான தீர்வு ஒன்று கிடைக்கும் என்னும் பொதுவுடைமை அரசியல் வழியில் தனது பாதையை வகுத்துக் கொண்டான். சம உரிமை இயக்கம், முன்னிலை சோசலிச கட்சி ஆகிய அமைப்புக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டான். மக்கள் போராட்ட அமைப்பின் பத்திரிகையான "போராட்டம்" இதழை பிரான்ஸ் தமி…

  19. நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார். adminMay 2, 2025 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். https://globaltamilnews.net/2025/214928/

  20. “ஈழத்து சௌந்தரராஜன்” என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று (08) தனது 81ஆவது வயதில் காலமானார். 1943 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்த விஜயரட்ணம் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார். கிராமிய பாடல்கள், திரையிசை பாடல்கள், பக்தி பாடல்கள் எதுவாயினும் இனிமையான குரலில் பாடி பலரை மகிழ்வூட்டியவர் ஆவார். மறைந்த தென்னிந்திய பாடகரான டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன் 1980இல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடத்துவதற்காக வருகை தந்தபோது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய பைரவிப்பிள்ளை விஜயரட்ணத்துக்கு தென்னிந்திய…

  21. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் காலமானார் 18 Feb, 2023 | 10:03 AM ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடல்நலப் பாதிப்பால் நேற்று (17) மாலை காலமானார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவர் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். மாணவர்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் மென்போக்கை கடைப்பிடிப்பதால், அரசியல் பழிவாங்கலுக்க…

  22. புகழ்பெற்ற... இலக்கியத் திறனாய்வாளரும், ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான... கே.எஸ்.சிவகுமாரன் காலமானார்! புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று(வியாழக்கிழமை) இரவு காலமானார். இலங்கையின் மூத்த அறிவிப்பாளர், இலக்கியவாதி, விமர்சகர், எழுத்தாளர், திறனாய்வாளராக தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சியும் தெளிவும் கே.எஸ். சிவகுமாரன் பெற்றிருந்தார். https://athavannews.com/2022/1299374

  23. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா காலமானார் ! இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் Sayanolipava முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசா இன்று காலமானார். 1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில், தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானர். 2000ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிமலன் சௌந்தரநாயகம் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பொன்.செல்வராசா அவரது வெற்றிடத்திற்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்…

  24. புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம் July 15, 2025 11:36 am தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர், புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது. நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒள…

  25. தமிழீழம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யேர்மனி முல்கைம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருமதி கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23.05.2022 அன்று காலமானார். இவர் டுயிஸ்பூர்க், ஓபகௌசன் மற்றும் முல்கைம் தமிழாலயங்களின் மூத்த ஆசிரியரும் ஆவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.