எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
ஐபிசியில் சிறிலங்கா விசுகோத்துக்கு விளம்பரம் செய்யப்படுகின்றது. நாம்வாழும் நாடுகளில் எவ்வளது விதமான இப்படியான பொருட்கள் இருக்கும் பொழுது இதை நாம் வாங்கவேண்டுமா, இப்படியான பொருட்களுக்கு விளம்பரம் தேவைதானா, பிறகு எதர்க்கு சிங்களவன் எம்மக்கள் குண்டு போடுகிறான் என்று இந்த வானொலி கத்துகின்றது. பேசாமல் சிங்களவனுக்கு கிபீர் வாங்க காசு சேர்க்கலாமே..... இன்னுமொரு விளப்பரத்தில் ஒட்டுப்படைகளின் வானொலியில் ஒலிபரப்பப்படும் வாத்திய ஒலி கேட்டதும் என்ன ஐபிசியும் பார்வைகளை ஒலிபரப்புதா என சந்தேகப்படவேண்டிவிட்டது.. போற போக்கில் சிங்களவனின் பொருட்களுடன் ஐபிசியையும் புறகணிப்பதை தவிர வேறுவழியில்லை போல் ஊள்ளது. இங்கு ஐபியை பற்றி எழுதினால் அழித்துவிடுவார்கள் என்று தெரிந்தும் எழுதப்படு…
-
- 7 replies
- 5.5k views
-
-
தினந்தினம்..தமிழீழத்தில் மாணவர்கள் கடத்தப்படுவதும் சுடப்படுவதும் நடப்பது மட்டுமன்றி சித்திரவதைகளோடு கைதுகள் மற்றும் பயங்கர ஆயுத மயப்படுத்தப்பட்ட இராணுவச் சூழல் என்று பயங்கரமான சூழலில் படிப்பை பயந்து பயந்து தொடர வேண்டிய நிலையில்.. நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நகரும் தமிழீழ மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை நல்குவீர்களா..! இங்கு உங்கள் கையொப்பங்களை இட்டு உங்கள் ஆதரவை அவர்களின் குரலுக்கு அளியுங்கள். சர்வதேச மாணவ சமூகத்துக்கு தமிழீழ மாணவர்களின் அவலக் குரல் கேட்க வகை செய்யுங்கள்..! இங்கு உங்கள் கையொப்பத்தை இடுங்கள்.. http://www.petitionspot.com/petitions/jaffnastudents Raise your voice for the rights of Jaffna's student community Imagine the army patroling e…
-
- 10 replies
- 1.8k views
-
-
சேறும் சகதியாய் இருந்த பகுதி எல்லாம் எண்ணண்டு உருமாற்றம் அடைந்தது தெரியாத மாதிரி வரண்ட மணலாக பரவி கிடக்கு. அந்த அமைதியான காலை பொழுதில் விளக்குமாற்றால் பின் வளவை அப்பம்மா கூட்டும் பொழுது ஆவரோணம் அவகரோணம் ஏற்ற இறக்கம் போல ஒலிக்க வைப்பதற்க்கு உந்த சோழக்காற்று எங்கே இருந்து கொண்டு வந்த மணல் தான் காரணம். இந்த வெயில் கொழுத்தக்கை இந்த காலத்தை வசந்த காலம் என்று சொல்லாமாவோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த கால மாற்றத்தை வரவேற்கிற மாதிரி குயில்களும் பறவையினங்களும் வீட்டு மூலையிலுள்ள மாமரங்களிலிருந்து கொண்டு தாள கச்சேரி செய்யும் ஓசையினால் இந்த விடிந்து விடியாமல் இருக்கும் பொழுதை இனிமையாக்கிறதை பார்க்கும் பொழுது வசந்த காலம் என்று தான் சொல்ல தோன்றும். http:…
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத புதிய வகைப் பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இறகும், நீளமான அலகும், கட்டையான கால்களையும் கொண்ட இப்பறவை வேற்று நாடொன்றிலிருந்து வந்து இப்பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மூளாய் பிள்ளையார் கோயிலுக்கருகாமையில் ஒதுங்கிய இப்பறவையை அப்பகுதியைச் சேர்ந்த றேகன் என்ற இளைஞர் பிடித்து பராமரித்து வருகிறார். தினமும் பெருமளவானோர் திரண்டுவந்து இப்பறவையைப் பார்வையிடுகின்றனர். இப்பறவையை பராமரித்துவரும் இளைஞருடன் ஒட்டி உறவாடிவரும் இப்பறவை ஏனையோர் நெருங்கும்போது மிரட்சியடைந்து அவர்களை தனது அலகால் கொத்தி விரட்ட முயல்கிறது. அப்பகுதியிலுள்ள…
-
- 0 replies
- 811 views
-
-
முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும் - வியாசன் முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம். நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள் யாரிவர்கள் என்று அதிசயித்தன. அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர். நாணற்புற்களும் தலைநிமிர்த்தி மானத்தின் மகுடம் தரித்தன. எம்மாலும் …
-
- 0 replies
- 768 views
-
-
கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ் வீரஜனனம: 22-12-1958 - வீரமரணம் 20-05-1987 யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் …
-
- 1 reply
- 885 views
-
-
படீர்; ; படீர் என தொடர் எறிகணைவெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன. வாகரையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் படையமருத்துவமனையானது சுறுசுறுப்படைகின்றது. காயமுற்று வரும் போராளிகளை ஏற்கத் தயாராகின்றது. ஒடுங்கிய நிலப்பரப்பினுள், இராணுவ அழுத்தம் நிறைந்த நேரத்தில், பொருளாதார மருத்துவப்போக்குவரத்துத் தடையால் மக்கள் அல்லற்படும் காலத்தில் எதிரியின் யுத்தமுழக்கம் கேட்கிறது. இம் மருத்துவமனையானது சமராடும் போராளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆளணி, உபகரண வளங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் கடந்த காலங்களில் இப்பிரதேசங்களில் கரந்தடிப் போரிற்கான மருத்துவ வளங்களே பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது முதன் முறையாக மரபுவழிப் போரினை எதிர்கொள்வதற்கு ஏதுவாகத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் க…
-
- 0 replies
- 916 views
-
-
அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு வீரமரணம்-18.05.1984 வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று "அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை. ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் க…
-
- 3 replies
- 1.1k views
-
-
நம் நாட்டின் பழம் பெரும் இதிகாசகாவியம் ராமாயணம், ராமர்பாலம் உள்ளது என்ற இதிகாச உண்மையை நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்து செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டுள்ளது. ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சி ஆட்சி யாளர்கள் உருவாக்கிய வரை படங்களிலும் இந்தப் பாலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பிறகு இலங்கை வரை உள்ள கடல் பகுதியில் புள்ளிகள் இடப்பட்டு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று எழுதப்பட்டு இருப்…
-
- 0 replies
- 4.8k views
-
-
சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் ஜெயில் சம்பந்தமான காட்சிகளை எடுக்க வேண்டும் என்றால் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கோ, அல்லது செட் போட்டோ எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது சென்னை மத்திய சிறையிலேயே எடுக்கலாம் என்ற வசதி வந்துள்ளது. இதுவும் இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான். சிறைச்சாலை இருந்த இடத்தில் விரைவில் அரசு பொது மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் பகடை என்ற படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர் என்.டி.ஆரின் பேரன் தாரக ரத்னா ஹீரோவாக நடிக்கிறார் இப்படத்தில். சிறையில் இருக்கிற ராஜ்கிரண் நாட்டில் நடக்கிற அக்கிரமங்களை தட்டி கேட்க சிறையில் இருந்தே ஒரு இளைஞனை ஏ…
-
- 0 replies
- 979 views
-
-
லெப்டினன் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில்…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.nmmv.co.uk/default.asp http://www.nmmv.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளிடம் உள்ள விமானம் Zlin 242 வகையை சேர்ந்தது தான் என இராணுவ ஆய்வாளர்கள் (இக்குபால் அத்தாசு உட்பட) கூறியது தெரிந்ததே. தற்போது அது 4-seat Zlin 143 ஆக இருக்குமோ என சந்தேகிக்கிறார்கள். http://www.saag.org/%5Cpapers23%5Cpaper2234.html
-
- 2 replies
- 1.4k views
-
-
பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். ஈழம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பர்......... உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்தியா: 60 மில்லியன் மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன் ஈழம் - 11.1 மில்லியன் இந்தோனெசியா - 10 மில்லியன் மடகஸ்கார் - 10 மில்லியன் மியன்மார் - 2.3 மில்லியன் கம்பூச்சியா - 2 மில்லியன் தாய்லாந்து - 2 மில்லியன் இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொ…
-
- 2 replies
- 6k views
-
-
தமிழீழம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை தொடராக இங்கே இணைக்கலாம் என்று என்னுகிறேன் பதிந்து அது சம்பந்தமான கர்ஹுத்து பகிர்வுகளையும் இங்கே தொடர்வோம்
-
- 12 replies
- 1.9k views
-
-
மின்னல் வேகத் தாக்குதல் -புரட்சி- இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்களினால் பயன்படுத்தப்பட்ட பிலிட்ஸ்ரீக் (Blitzkrieg) என்ற மின்னல் வேகத் தாக்குதல் நடவடிக்கையானது சூழ்ச்சிகர நகர்வுத் தந்திரோபாயத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் பயன்பாடாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பாக படைத்துறை மூலோபாய வல்லுநரும் வரலாற்றாசிரியருமான லிட்டெல் ஹாட் கூறுவதாவது; மின்னல் வேக நடவடிக்கையின் தந்திரோபாயமானது நீரால் நிரம்பிய பாரிய குளத்தின் அணைக்கட்டை நீரானது தள்ளுவது அல்லது அமுக்குவது போன்றது. அதாவது நீரானது குளத்தினது அணைக்கட்டின் எல்லா பகுதிகளுக்கும் அமுக்கத்தை பிரயோகிக்கும். எங்கு சிறிய இடைவெளி அல்லது பலவீனம் இருக்கின்றதோ அங்கு நீரானது வெளியேறத் தொடங்கும். முதல…
-
- 0 replies
- 1k views
-
-
தராக்கி- சில நினைவுகள் - நடராஜா முரளிதரன் (கனடா) மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும். உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான். அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன். அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்க…
-
- 1 reply
- 947 views
-
-
இது வரை நான் தமிழீழத்தின் தேசிய கீதம் என்று புலிகளின் தாகம் பாடலைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிண்றேன் இன்றுதான் இணையத்தில் தற்சேலாக தமிழீழத்தின் தேசிய கீதத்தை கேட்க நேர்ந்தது அதை உங்களுடன்
-
- 5 replies
- 1.6k views
-
-
கண்காணிப்பு குழு எங்கே? தப்பாக நினைக்க வேண்டாம் யுத்தநிறுத்த கன்காணிப்பு குழு தற்சமையம் எங்கை? நாட்டைவிட்டு போய்விட்டார்களா?
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழ் பேசும் மக்களின் பேச்சுவழக்கில் கலந்துள்ள சிங்கள மொழிச் சொற்கள்! [27 - April - 2007] * மாத்தளை மாவட்டத்தில் கலேவெல பிரதேசத்தில் செய்யப்பட்ட ஆய்வு பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில் மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். தமிழ் மொழியும இதற்கு விதிவிலக்கானதல்ல. எமது இலங்கை நாடானது சிங்கள மொழிக்குரிய நாடாக இருந்தாலும், முஸ்லிம் இன மக்களின் தாய்மொழியானது தமிழாகும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம் கிராமங்களின் அமைவிடங்களை நோக்கும் போது, சிங்களக் கிராமங்களை அயற்கிராமங்களாகவும், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்டதாகவுமே அநேகமான முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வாறான அமைவிடச் சூழலில் முஸ்லிம்கள் தாய்மொழியாக தமி…
-
- 0 replies
- 5k views
-
-
ஃபிரான்ஸில் இம்மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழத்தைச் சேர்ந்த மனித நேய பணியாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி, எதிர்வரும் 10ஆம் திகதி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளது. நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அண்மையில் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இவர்களில் சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழீழ மக்களின் பிரச்சினையை விளக்கி உரையாற்றியிருந்தனர். இதனைத் தொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
திருகோணமலையும் புத்தர் சிலைகளும் திருமலை வாழ் தழிழ்மக்களுக்கு மே 15 2005 திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக முளைத்த புத்தர் சிலையுடன் ஆரபம்பமானது ஆப்பு. இது எல்லோரும் அறிந்த உண்மை. இதைவிட சுவாரசியமானதும் நான் நேரில என் கண்களால் பார்த்தும் பழசுகளால் உறுதிப்படுத்திய உண்மையொன்றை சொல்லுறன் கேளுங்கோ. திருமலை நகரில இருந்து கோணேசர் ஆலயத்தை நோக்கும் போது பிரடெரிக்கோட்டையில நின்றநிலையில நிற்கும் புத்தர் சிலையை காணலாம். இதன் அடிவாரத்தில ஒரு புத்த கோவிலும் உண்டு. இந்த புத்த கோவில் பிரடெரிக்கோட்டை வாசலில் வளைவில இருந்து 50 மீற்றர் தூரத்தில கோணேசர் கோயிலுக்கு போகும் பாதையோரம் முட்கம்பி தடுப்பு போட்டு சிங்களப்படைகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. கோட்டைக்குள்ளே இருக்கும் ப…
-
- 1 reply
- 1k views
-
-
திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி. இதன் கடற்கரையில் அழகான ஒரு அம்மன் கோவில். இந்தக்கோவிலால் அந்த இடத்திற்கு சல்லி எனப்பெயர்வந்ததா? அல்லது அந்த இடத்தில் அமைந்ததால் சல்லி அம்மன் என கோவில் பெயர்பெற்றதா என்ற வரலாற்றுக குறிப்புக்கள் எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாத வயதில் சல்லிஅம்மன்கோவில் எனக்கு அறிமுகமானது, இந்தத் தெரியாமைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம். வைகாசிமாதத்தில் வரும் பெளர்ணமியிலோ அல்லது அதை அண்டியோ சல்லி அம்மன் கோவில் பொங்கல் வரும். பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னரே சல்லிக்கிராம கடற்றொழிலாளர்கள், தங்கள் தொழிற்படகுகளை கரையேற்றி விடுவார்கள். அந்த பத்து நாட்களும…
-
- 7 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் தெல்லி்ப்பழை மகாஜனா கல்லூரியில் அதன் பழைய மாணவரான, பேராசிரியர் பொ.இரகுபதியால் 24.06.2005ல் ஆற்றப்பட்ட 'பாவலர் தெ.அ.துரையப்பாபி்ள்ளை நினைவுப் பேருரை - 9' நன்றியுடன் இங்கு மீள்பிரசுரமாகின்றது.) Ponnampalam Ragupathy M.A., Ph.D Former Professor of South Asian Studies and Head of thePostgraduate Departments, Utkal University of Culture, Orissa. Visting Professor, Facullty of arts, University of Jaffna. 'Cultural Identity of the Tamils of Sri Lanka' Pavalar Thuraippapillai Memorial Lecture - 9 Published by: P.Suntharalingam, Principal Mahajana College, Tellippalai, Sri Lanka. Printed at: Bharathi Pathippakam, 430, K.K.SRoad, Jaffna. 24.06.2005…
-
- 1 reply
- 1.2k views
-
-
துணைத் தளபதி மட்டக்களப்பு மாவட்டம் கந்தையா உலகநாதன் திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.200 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை... முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தெருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும…
-
- 0 replies
- 762 views
-