Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. விடுதலைப் போராட்டத்தின் மையம் கிழக்கு – தென்னகன் 15 Views தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் என்பது என்றும் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தியதாகவே இடம்பெற்று வந்தது. வடக்கில் இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைகள் மேல் எழுந்தாலும், கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இன முரண்பாடுகளே தமிழர் தேசிய போராட்டம் முனைப்பு பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன. ஒரு தடவை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரனை பிரேமதாச அழைத்து வடக்கினை தமிழீழமாக பிரகடனப்படுத்துகின்றேன், கிழக்கினை விடுங்கள் என்று கோரியபோது, எங்களுக்கு கிழக்கு மாகாணமே முக்கியமானது. அதனை தமிழீழமாக பிரகடனப்படுத்துங்கள் வடக்கில் எதையா…

  2. டிசம்பர் 16, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து படகுக்காவி (டொக் ) அந்த நடவடிக்கை திட்டமிட்டதுதான். எதிரியின் மூர்க்கமான நகர்வால் வன்னி மண் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் அது. முப்படைகளின் நகர்வுகளையும் மரபணியாய் தோற்றம் பெற்றுக்கொண்டிருந்த எமது அணிகள் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தன. நாளும் எல்லைக் காவலரண்களில் வீரச்சாவுகளும், விழுப்புண் அடைபவர்களினதும் பட்டியல்கள் நீண்டுகொண்டிருந்தன. வெற்றிடங்கள் அடைக்கப்பட வேண்டியவையே. இல்லாது போனால் எதிரி எம் மண்ணை, மக்களை ஆக்கிரமித்து விடுவது தவிர்க்க முடியாது போய்விடும். வெற்றிடங்களை நிரவ தென்தமிழீழத்திலிருந்து படையணிகளை கடல்வழியாக நகர்த்துவதென்று முடிவாகிற்று. ந…

  3. விடுதலைப்புலிகள் பத்திரிகையும் தேசத்தின் குரலும்…! பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார். விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக்கமிகு வகையிலும் எ…

    • 3 replies
    • 1.3k views
  4. தேசத்தின் குரல் ஈழமக்கள் உரிமை மீட்புக் குரலாக இன்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் 42 Views இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இக்குரலுக்குக் செவிகொடுத்தாலே ஈழமக்கள் உரிமைகள் பாதுகாப்புறும் 14.12.2006 அன்று ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் தேசத்தின் ஒளியான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தேசத்தின் குரலாக ஈழமண்ணில் நிலை பெற்ற நாள். ஈழத்தமிழர்களின் சுதந்திர இயக்கத்தின்4, அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட தேசத்தின் ஒளிவிளக்கு எனத் தலைவரால் போற்றப்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தேசத்தின் குரலாக பூதவுடல் வ…

  5. ஆவண தொகுப்பு

  6. அரச ஓடுக்குமுறையும் ஆயுத எதிர்ப்புமுறையும் டிசம்பர் 9, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து குறிப்பு: 1984 ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களுக்கு விடுத்த அறிக்கை. சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறைபற்றியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரித்துள்ள ஆயுத எதிர்ப்புமுறைபற்றியும், இந்த அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். ஒன்றுபட்ட போராட்டத்தை வலியுறுத்தி, ஏனைய தமிழ் அமைப்புகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியும், இதில் அடங்குகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த அறிக்கை அன்றைய போர்ச் சூழ்நிலைபற்றியும், இயக்கத்தின் போராட்ட குற…

  7. தனித்துநின்று வாழ்வோடு போராடும் மெக்கானிக் சந்திரன் Rajkumar Periyathamby1 day ago (edited) ஐயாவின் மன உறுதியும் அவர் செய்த நன்மைகளும் அவரை வாழவைக்கின்றது இளந்தலைமுறையினர் அவரிடமிருந்து வாழ்க்கையை கற்றுகொள்ளவேண்டும் இருந்தாலும் அவருடைய இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதது மிகுந்த வேதனை வலி. நேர்காணல் செய்பவர்கள் ஊணமுற்றவர்கள் என்று சொல்வது தவரான பேச்சு

  8. நினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் 51 Views தாயக விடுதலை நோக்கிய பயணத்தில் உடல், உள ஆற்றல் ஆளுமையை தனது மக்களுக்காக தான் பணியாற்றிய கல்வித்தளம் தொடக்கம் தமிழீழ விளையாட்டுத்துறையெனும் பரிணாம வீச்சால் இளைய தலைமுறையினையும், ஆசிரியத்துவ மாணவர்களையும் உலகப் பரப்புவரை தங்கள் திறனை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்த நல்லாசான் பேரன்புக்குரிய மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் இழப்புச் (30.11.2020) செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையுடன் எனது இரங்கல் பகிர்வுடன் இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1967 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி ஆசிரியர் பயிற்சி மாணவனாக கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கு தெரிவாகி …

  9. போராலும் நோயாலும் வாழ்விழந்த குடும்பம்

  10. ”காணிக்கை என்ன?கண்ணீரும் கார்த்திகைப் பூக்களுமா”-சபரி 15 Views “உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம். தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம் – எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்” ஈழத்தில் ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் துயிலும் இல்லங்கள் தோறும் கல்லறைகளுக்கும், நடுகற்களுக்கும் முன்னால் கண்ணீர்மல்க நின்று இவ்வாறு சத்தியம் செய்தவர்கள் நாங்கள். ஆம்! தாயக விடுதலை என்ற கனவைத் தம் நெஞ்சங்களில் நினைத்து, சாவைத் தம் தோள்களின் மீதே சுமந்து நடந்த எங்கள் தேசத்தின் புதல்வர்களுக்கு – மாவீரர்களுக்கு –…

  11. புரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் - திருநாவுக்கரசு தயந்தன் இலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது ? இரு தினங்களுக்கு முன்னர் புரெவிப்புயல் பற்றிய விழிப்புணர்வு தொடர்பில் எழுதிக்கொண்டிருந்தபோதும், எம்மில் பலர் புரெவிப்புயலை நகைச்சுவையாகவே கொண்டாடிக்கொண்டிருந்தனர்!! நகைச்சுவை நல்லது தான்!! ஆனால் பாடங்களை கற்றுக்கொள்ளமால் நகைச்சுவை மட்டுமே இருந்தால் அதுவே நம் நிரந்தர அழிவுக்கான நாளைய காரணமாகிவிடவும் கூடும்!! இன்று காலை முதல் புரெவிப்புயலின் தாண்டவங்கள் என்ற பெயரில் பல்வேறு புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆட்கொண்டுள்ளன! அவற்றில் சிலவற்றை தரவிறக்கி நானும் …

  12. டிசம்பர் 3, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்/0 கருத்து குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிரபல இந்திய ஆங்கில ஏடான ‘சண்டே’ வார இதழுக்கு அளித்த இரண்டாவது நேர்காணலின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். இந்த விசேட நேர்காணல் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 29, அக்டோபர் 5 இதழில் பிரசுரமாகியது. இந்தப் நேர்காணலில் சிறீலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக இராணுவத் தீர்விலேயே அரசு அக்கறை கொண்டிருப்பதாக விளக்குகிறார். தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக அமையுமென…

  13. சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன் 1984ஆம் ஆண்டு ஒதியமலையில் இலங்கை இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சனசமூக நிலைய வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது. உயிரிழந்தவர்களை நினைத்து, அவர்களது உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஒதியமலை பிள்ளையார் கோவிலில் ஆத்மா சாந்தி பூஜைகளும் நடைபெற்றன. இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். Tamilmirror Online |…

  14. வரலாறு எனது வழிகாட்டி டிசம்பர் 2, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்/0 கருத்து குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்த போது முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. இந்தியாவின் பிரசித்திபெற்ற ‘சண்டே’ (SUNDAY) எனப்படும் ஆங்கில வார ஏடு (11 – 17, மார்ச், 1984) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் இந்த நேர்காணலை பிரசுரித்தது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படத்தை அட்டையில் தாங்கி, மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்ட இந்த நேர்காணல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்த பெரிதும் உதவியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கம்…

  15. சேனையூரும் விளக்கீடும் :: பால சுகுமார் பக்கங்கள் -1 எந்த பண்டிகையானாலும் சேனையூருக்கு ஒரு தனித்துவ பண்பு உண்டு. கார்த்திகை விளக்கீட்டிலும் அந்த பண்பாட்டு தனித்துவத்தை உணர்த்தும் பல விடயங்களை நாம் பேச முடியும். விளக்கீட்டுக்கு முதல் நாள் மாலை நேரம் நாங்கள் பந்தக் கம்பு வெட்டுவதற்காக ஊரை அண்டிய சிறு காட்டுப் பகுதிக்கு சென்று கம்பு வெட்டி வருவது வழக்கம். சிறுவர்களாக இருக்கும் போது அப்புச்சி அழைத்துச் செல்வார். கொஞ்சம் வளர்ந்த பின்பு நாங்களே போவோம். பந்தக் கம்பு வெட்டும் போது சில மரங்களைத்தான் தெரிவு செய்வோம், பன்னை, உலுமந்தை, காட்டு வேப்பிலை, சில சமயங்களில் கறுத்த பாவட்டை. எங்கள் தேவைக்கேற்ப கம்புகள் அமையும் நேரியதா அவை, இரு கவர், மூன்று கவர், பல் கவர் தெ…

  16. 2009 போரை முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன்!

  17. கேள்வி: கடவுள் உங்களை காப்பாற்றினார் என்று சொல்லலாமா? தேசியத் தலைவர்: இயற்கை அருளால் .. என் உண்மையான எதிரிகள் இவர்கள்தான்- கோபப்பட்ட மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM&feature=emb_err_woyt https://youtu.be/7d-Zt6RlePM

  18. பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடலை, கச்சான், இனிப்பு, ஐஸ்கிறீம் கடைகளும், பனை, தென்னை வழியே பிறக்கும் சுதேச உற்பத்திப் பொருட்களுமாகக் கோயிலைச் சூழவும் மூகாமிட்டிருக்கக், கோயில் முன்றலில் சங்கீதக் கச்சேரிகள், கதாப் பிரசங்களுமாகச் சாமம் தொடும் நிகழ்ச்சிகள். இதெல்லாம் அந்தக் கோயில் திருவிழாவுக்கான் தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு நிரந்தரப் பொழுது போக்கு மையமாக அப்போது அமைந்தது பண்டிதர் சரணாலயம். நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தட்டாதெருச் சந்தியாலோ, பலாலி வீதியாலோ பயணப்படும் போது எதிர…

  19. பிரபாகரனை கடைசி வரை நம்பிய ஈழத்தமிழர்கள் | பத்திரிகையாளர் ப்ரியம்வதா உருக்கம்

  20. ‘ஆளுமையுள்ள தலைமை தொடர்பில் தமிழ் மக்களை சிந்திக்க வைத்தவர்’ தலைவர் பிரபாகரன் 59 Views இலங்கையின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு ‘புரட்சியாளன்’. விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும், அதன் தலைவரை பயங்கரவாதியாகவும் இலங்கை அரசு உருவகப்படுத்தியுள்ள போதிலும், இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அவருடைய பங்கு தவிர்க்க முடியாததாகப் பதிவாகி இருக்கின்றது. அது மட்டுமல்ல, தமிழினத்தின் நவீனகால வரலாற்றிலும் அவர் ஓர் அதி உன்னத இடத்தைப் பெற்றிருக்கின்றார். தமிழர்கள் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அரசர் காலத்தில் தமிழ் மன்னர்களினதும் தமிழர்களினதும் வீரம் சிறந்து விளங்கியது. ம…

  21. தலைவர் பிரபாகரனுடன்… கொளத்தூர் மணி November 26, 2020 Share 86 Views எந்த ஒரு மனிதராக இருந்தாலும், அவரை முதலில் சந்திக்கின்ற போது ஏற்படுகின்ற மதிப்பு, காலப்போக்கில் அவரின் குறைகளைக் கண்ட பின் குறைந்து கொண்டே வரும். ஆனால் தலைவர் பிரபாகரன் மிகவும் மாறுபட்டவர், தலைவர் ஆகட்டும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகட்டும் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்கள் மீதான மதிப்புக் கூடிக்கொண்டே போனது. எந்த நேரத்திலும் ஏற்கனவே இருந்த மதிப்பு ஒரு அங்குலம் அளவும் குறையவில்லை என்பது முதல் சிறப்பாகும். தலைவர் பிரபாகரன் தன்னுடை…

  22. தமிழ் அரசியல் கைதிகளுக்காக தற்கொலை செய்த செந்தூரனின் நினைவு நாள்! அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தன்னூயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனின் (18-வயது) ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 2015ம் ஆண்டில் இதே நாள் குறித்த மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிக்கு கோரிக்கை விடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இந்த மாணவன் தற்கொலை கோண்டாவில் புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். https://newuthayan.com/தமிழ்-அரசியல்-கைதிகளுக்க/

    • 2 replies
    • 829 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.