Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும் April 2, 2026 — அ. வரதராஜா பெருமாள் — இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது. சிங்களவர்கள் ஏற்காமல் சமஸ்டி சாத்தியமில்லை சமஸ்டி…

  2. நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்கிறோமா? அல்லது இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அஹ்மென் கவாஜா, குளோபல் ஜர்னலிசம் குழு, குளோபல் ஸ்டோரி போட்காஸ்ட் 2 ஏப்ரல் 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல் மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்குமா என்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்தப் போர் இரானை மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இராக், பஹ்ரைன், குவைத், செளதி அரேபியா, ஓமன், அஜர்பைஜான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, சைப்ரஸ், சிரியா, கத்தார் மற்றும் லெபனான் உள்ளிட்ட பல பகுதிகளை பாத…

  3. வளைகுடாவில் எண்ணெயை விட அதிமுக்கிய வளத்திற்கு குறியா? இரான் போரில் எச்சரிக்கை சமிக்ஞை பட மூலாதாரம்,BBC and Getty Images கட்டுரை தகவல் நிக் எரிக்சன் பதவி,பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் குறைந்து வரும் இயற்கை வளங்களின் பின்னணியில் நடக்கும் மோதல்களைச் சித்தரிக்கும் ஏராளமான கற்பனை நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் காட்சிகள், குறிப்பாக அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் எதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இல்லை. எதிர்பார்த்தபடியே, இந்தப் போர் ஓரளவு எண்ணெயைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது; இது இப்பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய ஒரு வளமாகும். ஆனால், இந…

  4. இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் March 28, 2026 — அ. வரதராஜா பெருமாள் — (இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்) மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்பட…

  5. மத்திய கிழக்கில் போரில் இருந்து விடுபடமுடியாமல் தடமாறும் ட்ரம்ப் March 30, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2025 ஜனவரியில் இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்த பிறகு பத்து மாதகாலப் பகுதிக்குள் உலகின் பல்வேறு பிராந்தியங்களில் எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதாக பெருமையுடன் உரிமை கோரிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக தன்னைத் தவிர, வேறு எவரினால் அவ்வாறு போர்களை நிறுத்த முடியும் என்று கேள்வியெழுப்பி கர்வம் காட்டினார். ஆனால், தற்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக தான் தொடுத்த போரை நிறுத்த முடியாமல் அவர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். போரைத் தொடங்குவதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கு…

  6. கொழும்பு மைய அரசியலும் இணக்க அரசியலும் குற்றமா? March 28, 2026 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலை ‘கொழும்பு மைய அரசியல்’ பலவீனப்படுத்துகிறது என்ற பெருங்கவலை ‘தீவிரத் தமிழ்த்தேசிய அரசியல் விருப்பாளர்’களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்பந்தனும் அவரால் தமிழ் அரசியற் பரப்பிற்குள் கொண்டு வரப்பட்ட மதியாபரணம் சுமந்திரனும்தான் கொழும்பு மைய அரசியலுக்கான கதவைத் திறந்தவர்கள் என்ற அபிப்பிராயமும் கோபமும் இவர்களிடமுண்டு. தங்களுடைய இந்தக் கவலையையும் கோபத்தையும் பல்வேறு வழிகளில் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ‘கொழும்பு மைய அரசியல்’ என்று இப்பொழுது அடையாளப்படுத்துவது, சுமந்திரனை மனதில் கொண்டே. சுமந்திரனுக்கு முன்பு, சம்பந்த…

  7. பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள் பட மூலாதாரம்,BBC/Getty images கட்டுரை தகவல் நிக் எரிக்சன் பிபிசி உலக சேவை 30 மார்ச் 2026, 05:52 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தூண்டப்பட்ட போர், கணிக்க முடியாத தன்மையிலிருந்து கணிக்க முடிவதாக மாறியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக ஊடகப் பதிவுகள், குறுகிய காலத்திற்காவது, குழப்பத்தை அதிகப்படுத்தி உலகளாவிய சந்தைகளை உலுக்குவதாகத் தோன்றுவதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இந்தப் போரின் போக்கைத் தீர்மானிப்பதில் டிரம்பின் கருத்துகள் மட்டுமே…

  8. களப்பிரர் காலத்து இலங்கை பாலா கருப்பசாமி March 11, 2026 வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை சமீபத்தில் வாசித்தேன். களப்பிரர் காலம் குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன என்று ஆரம்பத்தில் அவர் நூலைத் தொடங்கும்போது, இதெற்கெதற்கு 180 பக்கப் புத்தகம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் களப்பிரர் காலத்தில் அண்டை நாடுகள், சமயம், இலக்கியம், போர்கள் என விரிவாக இந்நூல் அலசிச் செல்வதன் மூலம் களப்பிரர் ஆட்சி குறித்து ஓரளவு தெளிவான சித்திரத்தை அளிக்கிறது. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் எத்தனை மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பார்த்தால் சட்டென்று ஆதித்த கரிகாலன் மட்டுமே நினைவுக்கு வருகிறார். அதைத் தவிர்…

  9. வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.”போராளிகள் நலன்புரி அமைப்பினால்” ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், “சமகால அரசியலில் போராளிகளின் வகிபாகம்” என்ற தலைப்பின் கீழ் பலரும் உரையாற்றினார்கள். போராளிகள் நலன்புரி அமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2009க்குப்பின் புனர்வாழ்வு பெற்ற,தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட,அல்லது கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக ஜனநாயக நீரோட்…

  10. ஒரு கொலையும் யாழ்ப்பாணத்தவரின் பயங்களும் - நிலாந்தன் சித்த மருத்துவத்துறை விரிவுரையாளரின் கொலைச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றச்செயலா? அல்லது பொதுவான சமூகப் பிறழ்வின் குறிகாட்டியா ? கொல்லப்பட்டவர் ஒரு மருத்துவர், விரிவுரையாளர் என்பதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்தச் சம்பவம் அதிகம் கவனிப்பைப் பெறக் காரணம். அவர் ஒரு படித்த தாய். பிள்ளையும் யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலையில் படித்திருக்கிறார். ஒரு படித்த தாய், பதின்ம வயதிலும் அதன் பின்னரும் பிள்ளையை வெற்றிகரமாகக் கையாள முடியாமல் போனது அவருடைய தனிப்பட்ட தோல்வியா? அல்லது நடப்பில் உள்ள கல்வி முறையின் தோல்வியா? இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதாக இருந்தால் ஒரு குற்றச் செயல் மட்ட…

  11. வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்? - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை நல்லூரடியில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்தியது “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தார்கள். நல்லூரில் அவர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் பொதுவாக அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக அர்ஜுனா என்று சுட்டிப்பாகக் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும் என்று ஒருபகுதி …

  12. அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பாலின் கோலா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது என அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடாத ஒரு "மூத்த அரசியல்-பாதுகாப்பு அதிகாரி" ஒருவரை மேற்கோள் காட்டி, சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது உட்பட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரானின் ஐந்து நிபந்தனைகளை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது. அதன் பிறகு வளைகுடாவில் உ…

  13. ஈரான் போர் - நிம்மதி கிடைக்குமா? - பா.ரவீந்திரன் sudumanal image:VictorStock அமெரிக்காவின் இன்னொரு தவறான கணிப்பு ஈரான் மீதான போரை முன்னெடுத்திருப்பது ஆகும். ஏற்கனவே ஜேர்மன் எல்லையிலிருந்து ஒரு அங்குலம்கூட நேட்டோ நகராது என 1990 இல் கோர்பச்சேவுக்கு உறுதியளித்துவிட்டு, ரசிய எல்லைவரை நேட்டோவை நகர்த்தினார்கள். பிறகு ரசியாவால் ஐரோப்பாவுக்கு “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என கதையாடலை உருவாக்கினார்கள். ஆனால் அதன் உள்நோக்கம் ரசியாவை பலவீனப்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரல் ஆகும். இதை பின்னாளில் வெளிப்படையாகவே பொதுவெளியில் ஐரோப்பிய தலைவர்கள் பேசும் நிலைக்கு வந்தார்கள். இந்த நோக்கத்தை ஏதோ மாதக் கணக்கினுள் செய்து முடித்துவிடலாம் என நேட்டோ உக்ரைனை வைத்து திரைமறைவில் களமடியது. ஆனால் ரசியா நீ…

  14. அமெரிக்கா மூழ்கடித்த இரான் கப்பல் இலங்கை அழைத்ததால் வந்ததா? பட மூலாதாரம்,@IN_HQENC படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் தேனா (கோப்புப்படம்) கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் மத்திய கிழக்கில் அமெரிக்கா - இரான் இடையேயான போர், இப்போது கொழும்புவின் ராஜதந்திரக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் தென்பகுதியான காலி கடற்பரப்பில் இரானியப் போர்க்கப்பல் 'ஐஆர்ஐஎஸ் தேனா' தகர்க்கப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள 'உத்தியோகபூர்வ அழைப்பு' குறித்த சர்ச்சை, இலங்கையின் நடுநிலைமை ஒரு 'ராஜதந்திரப் பொறி'யாக மாறியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பட மூலாதாரம்,SL Navy படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் புஷெ…

  15. சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும் March 16, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அண்மையில் ‘இலங்கையின் சமாதான செயன்முறை; ஒரு உட்பக்க நோக்கு’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். சமாதானச் செயன்முறையை அந்த நேரத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு நேர்மையுடன் முன்னெடுத்தது என்பதைப் பற்றி எங்களுக்கு தனியான அபிப்பிராயம் இருக்கிறது என்ற போதிலும், அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளராக பேராசிரியர் ப…

  16. ஈரான் - வெட்ட வெட்ட தழைத்தல் ! பா. ரவீந்திரன் sudumanal அமெரிக்காவும் இஸ்ரேலும் கனவு கண்டதைப்போல ஈரான் அரசாங்கத்தை விரைவாக கவிழ்த்து தமக்கு சார்பான அடிவருடி -ஷா இன் புத்திரனான- றேசா பாலவியை ஆட்சிக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைவர்களைக் கொல்வதன் மூலம் அல்லது உள்நாட்டு மக்களின் அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்களினுள் புகுந்து மடைமாற்றி அல்லது அதை செயற்கையாக உருவாக்கி ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்க நரித்தன வரலாறு ஈரானிடம் வந்து முட்டி மோதி நிற்கிறது. அதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புத்தான். உச்சத் தலைவரை மட்டுமல்ல இராணுவத் தளபதிகள் ஆலோசகர்கள் என சுமார் 50 பேருக்கு மேல் இதுவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொலைசெய்தபோதும் ஈரான் அரசை சரிக்க முடிய…

  17. மாகாண சபை தேர்தல் நடக்கும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது. இந்த ஆராய்வானது இவ்வருடத்திற்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும் என்றும் தகவல் கசிந்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, விதப்புரை…

  18. அமெரிக்காவும் இரானும் ஒருவேளை பேச்சு நடத்தினால் நெதன்யாகுவுக்கு என்ன சிக்கல்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று டிமோனாவில் இரானியத் தாக்குதல் நடைபெற்ற இடத்துக்குச் சென்றார். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், டெல் அவிவ் 25 மார்ச் 2026, 02:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுடன் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்த அமெரிக்காவின் திட்டங்கள் தொடர்பாகக் கலவையான சமிக்ஞைகள் வெளிவந்துள்ள நிலையில், மத்திய கிழக்கின் இரு பரம எதிரிகளான இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டை தொடர்கிறது. திங்களன்று இரானுக்குள் "பத்துக்கும் மேற்பட்ட" வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் …

  19. அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 12 அன்று முஹர்ரக்கில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. அதே நாளில் பஹ்ரைன், சௌதி அரேபியா மற்றும் ஓமனில் உள்ள எரிபொருள் நிலையங்களும் தாக்கப்பட்டன. கட்டுரை தகவல் பிபிசி மானிட்டரிங் 23 மார்ச் 2026, 02:10 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் ஒரு விரிவான பிராந்திய மோதலாக உருவெடுத்துள்ளது. இரானிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் வளைகுடாவின் உட்பகுதி வரை சென்றடைகின்றன. அவை அமெரிக்கத் தளங்களைத் தாண்டிப் பல வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், எரிசக்தி தளங்கள், துறைம…

  20. அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! இன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொள்ளும் தொடர் தாக்குதல்கள் வெறுமனே ஒரு பிராந்திய போராகவோ, அல்லது ஈரான் மீதான போராகவோ மட்டுப்படுத்தி பார்க்கக்கூடாது. இதனை வரலாற்று பகை உணர்வுகளின் வெளிப்பாடாகவும், பொருளியல் ஆளுகைக்கான போராகவும், உலகளாவிய மேலான்மைக்கான போராகவும் பார்க்கப்பட வேண்டும். மத்திய கிழக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது 2500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான பகைமையை கொண்டதாக பார்க்கப்படுகிறது. இது பாரசீகத்தின் சக்கரவர்த்தி டாரியஸிற்கு பின் வந்த ஷேர்சீஸும் (Xerxes) கிரேக்கத்தின் மீது மேற்கொண்ட பெரும் படையப்புடன் ஆரம்பமானது. எனவே அரசியல், பொருளிள், வரலாற்று அடிப்படையிலேயே இ…

  21. லண்டன் வரை இரான் ஏவுகணைகள் தாக்குமா? டியாகோ கார்சியா 'தாக்குதல்' எழுப்பும் கேள்விகள் பட மூலாதாரம்,Photo by Eyad Baba / AFP via Getty Images படக்குறிப்பு,மத்திய காஸா பகுதியில் உள்ள பாலத்தீன அகதிகளுக்கான புரைஜ் முகாமில் இருந்து பார்க்கும்போது, இரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று வானில் தென்படுகிறது. கட்டுரை தகவல் நிக் எரிக்சன் பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் உள்ள பிரிட்டன் -அமெரிக்கக் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியிருப்பது, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலின் வெளிப்படையான தீவிரத்தைக் காட்டுகிறது. குறிவைக்கப்பட்ட இலக்கு தாக்கப்படவில்லை, ஆனால் போர் தொடங்கி…

  22. முஸ்லிம் நாடுகளுக்கு நடுவே யூத தேசமான இஸ்ரேல் உருவான சிக்கலான வரலாறு பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அனகா பதக் பிபிசி மராத்தி 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். இரான், இஸ்ரேல் இடையிலான மோதல், இஸ்ரேலின் வரலாற்றை மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளது. ஒரு முஸ்லிம் மண்ணில், இந்த யூத தேசம் உருவானது எப்படி? இஸ்ரேல் உருவான வரலாறு மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கலான வரலாற்றை எளிய சொற்களில் விளக்குவதற்கு இந்தக் கட்டுரை முயல்கிறது. இரண்டாம் உ…

  23. உங்களுக்கு தெரியாத வட கொரியா உலகம் தொழில்நுட்பத்திலும் சுதந்திரத்திலும் உச்சத்தை தொட்டுள்ள இந்த யுகத்தில், இன்னும் ஒரேயொரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்டு, வெளி உலகத்திலிருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடு தான் வட கொரியா. பெயரில் 'ஜனநாயகம்' என்று இருந்தாலும், அந்நாட்டு மக்கள் கிம் ஜொன் உன்-னின் கடுமையான ஆட்சியின் கீழ் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கைதிகளை போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 1. தெய்வமாக வணங்கப்படும் "கிம்" குடும்பம் வட கொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும், பாடசாலையிலும், அலுவலகத்திலும் முன்னாள் தலைவர்களான கிம் இல் சுங் மற்றும் கிம் ஜொன் இல் ஆகியோரின் புகைப்படங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தப் படங்களின் தூசியை துடைப்பதற்கு…

      • Thanks
      • Like
      • Haha
    • 36 replies
    • 10k views
  24. மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும் - நிலாந்தன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னார் “மதம் ஓர் அபின்” என்று. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெபர்ட் மார்க்யூஸ் சொன்னார் “நுகர்வுப்பண்டங்களே அபின்” என்று. இந்த நூற்றாண்டில் தகவல் ஓர் அபினா? சமூக வலைத்தள “அல்கோரிதம்” எனப்படுவது ஒருவகை போதை ஊக்குவிப்புத்தான். நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடி வரும். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்று கண்டு அதை நோக்கி உங்களை ஊக்குவிப்பது. ஒரு போதைப்பொருள் பாவனையாளர் எந்தப் போதைக்குப் பழக்கப்படுகிறாரோ, அதே போதையை அவருக்குத் தொடர்ந்து ஊட்டுவதன் மூலம் அவரை அதற்கு அடிமையாக்கிவிடுவது. அதாவது இலத்திரனியல் அடிமைகள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் உலகளாவிய பரந்த மாய வல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.