அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9290 topics in this forum
-
கொழும்பில், ஈரான் கப்பல் விவகாரம் --- --- --- *அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்! *டில்லி தமிழர் பக்கம் முழுமனதோடு இல்லை என்ற உண்மையை இனிமேலாவது ஏற்றுக் கொள்ளுங்கள்... *மிலிந்த மொறகொடவில் இருந்து ரில்வின் வரை... --- --- --- மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக, அதாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் அதிகாரங்களுடன், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை பதவி வகித்திருந்தார். கோட்டாபய, ரணில் ஆகியோர் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இவர், தூதுவராக இருந்தார். அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்குச் சென்று. ஈழத்தமிழர் விவகாரத்தை, இலங்கையின் உள்ளக விவகாரமாக மாற்றும்…
-
- 1 reply
- 131 views
- 1 follower
-
-
அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்? பட மூலாதாரம்,US Navy via Getty Images கட்டுரை தகவல் ஜோனாதன் பீல் பாதுகாப்பு செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் 'கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன' என்று கூறியுள்ளார். மறுபுறம், அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் 'எதிரியை எதிர்த்து நிற்கும் திறன்' எங்களிடம் உள்ளது என்று இரானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுத கையிருப்பு மற்றும் விநியோகம் மட்டும் இந்த மோதலின் முடிவை தீர்மானிக்காது. யுக்ரேன் நீண்ட காலமாக ரஷ்யாவைவிட குறைந்த வீரர்கள் மற்றும் குறைந்த ஆயுதங்களுடனும் போராடி வருகிறது. இருப்பினும்…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பு முயற்சி வெற்றி பெறுமா? நிலாந்தன்! தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவை ஈடுபட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி ஒரு புதிய யாப்பை அரசாங்கம் உருவாக்குமாக இருந்தால் அந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று கூறப்படுகிறது.குறிப்பாக சமஸ்டி தீர்வு ஒன்றை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கம் இதில் உண்டு என்பதனை அந்த உத்தியோகபூர்வ அறிக்கை காட்டுகிறது. இந்த ஒருங்கிணைப்பு முயற்சிக்குள் தங்களை இணைத…
-
-
- 1 reply
- 154 views
- 1 follower
-
-
இராக், லிபியா, ஆப்கன் உள்பட அமெரிக்க ராணுவம் தலையிட்ட 5 நாடுகளில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பவுலா ரோசாஸ் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் மத்திய கிழக்கில் அமெரிக்கா மீண்டும் ஒரு போரைத் தொடங்கியுள்ளது. அந்தப் பிராந்தியம், நீண்டகாலமாக அமெரிக்காவின் ராணுவ தலையீடுகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் தலையீடு எதிர்பார்த்த முடிவைக் கொடுத்ததா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில். இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 அன்று இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி கொல்லப்பட்டார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் க…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் ஈழத் தமிழர்களும் - நிலாந்தன் ஒரு சிறுவர் கதையிலிருந்து தொடங்குவோம். ஓநாய் ஒன்று நீரோடையில் நீர் அருந்த வந்தது. அங்கே ஒர் ஆட்டுக்குட்டி நீர் அருந்தி கொண்டிருந்தது. ஓநாய் ஆட்டுக் குட்டியைப் பார்த்துச் சொன்னது “டேய் நீதான் போன மாதம் என்னை கேவலமான வார்த்தைகளால் திட்டியது. அதற்குத் தண்டனையாக உன்னை இப்பொழுது நான் கொன்று சாப்பிடப் போகிறேன்” என்று. அதற்கு ஆட்டுக்குட்டி சொன்னது “ஐயா நான் போன மாதம் பிறந்திருக்கவே இல்லை” என்று. ஓநாய் சொன்னது “அப்படியென்றால் அது உன்னுடைய அம்மாவாக இருக்கும். உன்னுடைய அம்மாவைத் தண்டிப்பதற்காக இப்பொழுது உன்னைச் சாப்பிடப் போகிறேன்.” என்று கூறி ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது. இந்தக் கதைக்குள் இருக்கும்…
-
-
- 3 replies
- 202 views
- 1 follower
-
-
நல்ல கண்ணுகளும் -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன். தமிழ்நாட்டின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணு அண்மையில் இயற்கை எய்தினார்.தன் பெயருக்கு ஏற்ப நல்ல கண்ணுவாக வாழ்ந்தவர் அவர். உண்மையான கொம்யூனிஸ்ட் ஒரு சன்னியாசியைப்போல இருப்பார். நல்ல கண்ணு அப்படித்தான் வாழ்ந்தார். அவர் சொத்துச் சேர்க்கவில்லை.புகழுக்கோ பதவிக்கோ போகங்களுக்கோ ஆசைப்படவில்லை.எளிமையாக வாழ்ந்தார். அவருடைய எளிமையை,சந்நியாசத்தை தமிழ்நாட்டில் யாரும் கேள்விக்கு உட்படுத்தியதில்லை. அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்திய பின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார். இந்தஇடத்தில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.தமிழ்நாட்டின் முதலமைச்சரால் வாழ்ந…
-
- 1 reply
- 146 views
-
-
காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்! சர்வதேச ‘அரசியல்’ பின்புலம் பாரதி ஆனந்த் Updated on: 04 Mar 2026, 6:54 pm 3 min read “ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இந்தச் சூழலில் மவுனம் என்பது நடுநிலையல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை அது எளிதாக்கும். சர்வதேச ஒழுங்கு சீர்…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
சோம.அழகுவின் சமீபத்திய கட்டுரை : அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு [சங்கிகள், சொங்கிகள், சிங்கி மங்கிகள் ஆகியோர் தயை கூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம் எனத் தாழ்மையு…. அப்படி எல்லாம் கேக்க முடியாது. வேண்ணா வாசிச்சுக்குங்க! சொங்கி : சங்கி அல்லாவிடினும் ‘திராவிடம்’, ‘பெரியார்’ என்ற சொற்களைக் கேட்டவுடன் ஒவ்வாமையுடன் ஓங்கரிக்கும் ஒ(ஓ)ட்டுண்ணி சிங்கி மங்கி : தகுதியே இல்லாத தானைத் தலைவன்(!) என்ன உளறிக் கொட்டினாலும் சீழ்க்கை அடிக்கும் ஜெல்லி மீன்கள்] *************************************** ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘இந்த அரசியல் செய்திகளில் எல்லாம் ஆர்வம் இல்லை’ - வழமையான இவ்வரிகளை ஒருவிதப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு திரிபவர்களின் ஆழ்மனங்களில் சென்று ய…
-
-
- 3 replies
- 318 views
- 2 followers
-
-
ஆமென்! sudumanalMarch 4, 2026 மத்திய கிழக்கு போர்க் குறிப்பு கேள்வி கேட்கப்பட முடியாதவர்களை யாராவது துணிந்து கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பெறுமதி உண்டு. அது ஏற்படுத்துகிற மகிழ்ச்சி என்ற ஒன்று உண்டு. இவை அடிமையாக வாழ மறுக்கிற, அடங்க மறுக்கிற மனித உணர்வுகளிலிருந்து எழுபவை. ஈரான் தன் மீதான பாதிப்பையும் பொருட்படுத்தாமல் இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் பதிலடி என்பது இவற்றின் குறியீடுகளாக இருக்கின்றன. மேற்குலகு உருவாக்கி கட்டமைத்திருக்கிற இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையிலும், ஜனநாயகத்தை பண்பாக வலியுறுத்துவதற்கும் மேலால் அதை வெறும் கட்டமைப்பாக மட்டும் வைத்து புரிந்துகொள்கிற மனநிலையிலும் நின்று இப்போரை அல்லது முரண்களின் மோதலை புரிந்துகொள்ள முடியாது. கொலோகாஸ் யூதப் படுகொலையிலிருந்து எப…
-
-
- 5 replies
- 379 views
- 1 follower
-
-
ஈரான் போர் விளைவுகள்... சீனாவுக்கு இழப்பா, ஆதாயமா? - ஒரு தெளிவுப் பார்வை பாரதி ஆனந்த் Updated on: 05 Mar 2026, 7:03 pm 4 min read போர் என்றாலே பேரழிவைத் தவிர வேறொன்றும் இல்லை. அதை மேற்கொள்ளும் நாடாக இருக்கட்டும் அல்லது இலக்காகும் நாடாக இருக்கட்டும், இரண்டுக்குமே பாதிப்பே மிஞ்சும். ஆனாலும் போர்கள் ஓய்வதில்லை. அதுவும் சமீப ஆண்டுகளாக போர்கள் மலிந்து வருகின்றன. மாறிவரும் காலச்சூழலில் பல போர்கள் ‘அதிகார அரசியல்’ காய்நகர்த்தலாகவே இருக்கின்றன. இவற்றை முடிவு செய்வதில் உலகின் சூப்பர் பவர் நாடுகளின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. எந்த நாட்டில் எந்த ஆட்சி நிலவினால் தங்களுக்கு சாதகமானதை சாதித்துக் கொள்ளலாம் என்ற அளவில் உத்திகளை வகுத்து, தான் ‘டிக்’ செய்த நாடுகளை பேரத்தில், அழுத்தத…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி எம்.எஸ்.எம். ஐயூப் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெருமளவில் அது தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ள போதிலும் அவை எதுவும் நடுநிலையாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாக தெரியவில்லை. எல்லோரும் தத்தமது அரசியல் கண்ணோட்த்திலேயே பிரச்சினையை அணுகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் இறுதியில் சட்ட நடவடிக்கையாகவே தீர்க்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் அதன் பின்னால் அரசியலும் இருப்பதாக தெரிவதால் பலர் அதனை அரசியல் கண்கொண்டு பார்ப்பதை…
-
- 0 replies
- 131 views
-
-
இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளை இரான் உருவாக்கி வருவதாக டிரம்ப் கூறியது, அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளால் ஆதரிக்கப்படவில்லை கட்டுரை தகவல் ஜெரிமி போவன் சர்வதேச ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் அமெரிக்கா, இஸ்ரேல், இரான் இடையே புதிய போர் தொடங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்டன. அமெரிக்காவின் நட்பு நாடுகளான அரபு நாடுகளையும், வளைகுடா முழுவதும் இரானின் அண்டை நாடுகளையும் இரான் தாக்க முடிவெடுத்த பிறகு, இதுவொரு பிராந்திய போராக உருவெடுத்தது. பிரிட்டனில் உள்ள தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு பிரிட்டன் தெரிவித்து வந்த மறுப்பைக் கை…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்! இக்கட்டுரை எழுதப்படுகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது. அரச பல்கலைக்கழகங்களில் நிகழும் பட்டமளிப்பு விழாக்களில் வேலை இல்லாத புதிய தொகுதி பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்று அந்த வாதப் பிரதிவாதங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. அரச வேலை தேடும் மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகள் இன்று வெளியேறுகிறார்கள் என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள். ஏற்கனவே 4000க்கும் குறையாத பட்டதாரிகள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் வெளியேற்றப்பட்ட பட்டதாரிகள் என்று எழுதுவதற்கு பதிலாக அரச வேலை இல்லாத பட்டதாரிகள் என்று எழுதுவதே பொர…
-
- 2 replies
- 231 views
-
-
அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன் தமிழ் நாடு,திருச்சியில், கடந்த வாரம் சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை ஒரு பிரம்மாண்டமான தமிழ்த் தேசிய வெற்றியாக அவர்கள் போற்றுகிறார்கள். அண்மை மாதங்களாக சீமானுக்கும் விஜய்க்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் சீமானும் விஜேயும் ஒருவர் மற்றவருக்கு எதிராகக் காணப்படுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த சீமானின் கூட்டத்தோடு அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் நம்பிக்கையோடு காணப்படுகிறார்கள். ஈழத் தமிழர்கள் தமிழ…
-
- 0 replies
- 179 views
-
-
யாழ்க்கள உறவுகளே,தமிழீழ மக்களின் தற்போதைய அரசியற்கையறுநிலைகுறித்த உரையாடலாக உள்ளதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 182 views
-
-
சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக விதிகளின் கீழ்தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கிடைத்த தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக, இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். ஏப்ரல் 21, 2019 அன்று , சஹாரான் …
-
- 7 replies
- 450 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் February 24, 2026 — கருணாகரன் — தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முடியாதோரின் கண்களுக்கு ரோஹண விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்க போன்ற முகங்களே தென்படும். அந்த முகங்கள் பிரதிபலித்த பழைய – தீவிர இனவாத முகத்தையும் அது மேற்கொண்ட பகிரங்க வெறுப்பு நடவடிக்கைகளுமே நினைவில் எழும். அவ்வாறு தோன்றுவதால்தான் பழைய ஜே.வி.பியை நினைத்துக்கொண்ட…
-
- 1 reply
- 152 views
- 1 follower
-
-
--கொழும்பில் நடந்த பெளத்த மாநாடு-- சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய செய்தி! --- --- *வடக்கு கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் பெளத்த தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம். தடை விதிக்க முடியாது. *பௌத்த சமயம் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு அநுர பொறுப்புக் கூற வேண்டும்... *பிக்குகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு ---- ----- ----- இலங்கைத்தீவில் பௌத்த சமயத்திற்கும் பௌத்த தேரர்களுக்கும் ஏற்படும் அழுத்தங்கள், புத்த சாசனம் மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவின் தற்போதைய நிலைமை குறித்த கவலைகளை வெளிப்படுத்தி நடைபெற்ற பௌத்த மகா சங்க மாநாடு, சிங்கள அரசியல் தலைவர்களுக்கு பலவிதமான செய்திகளை வழங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாநாட்டில்,…
-
- 2 replies
- 206 views
- 2 followers
-
-
PSTB: சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா? Veeragathy Thanabalasingham on February 23, 2026 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு (Protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வரைவும் …
-
- 0 replies
- 232 views
-
-
மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல் லக்ஸ்மன் குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர் கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசாங்கம் அமைத்திருக்கிறது. முன்னைய அரசாங்கங்களின் காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பாகவே இதுவும் அமைந்திருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கூறிவடவும் முடியாது. அதே நேரத்தில் ஒரு இலக்கைக் கொண்டிருக்கின்ற தரப்புக்கு அவர்களது சிந்தனையைத் திசை திருப்பும் செயற்பாடாகவும் அமையலாம் என்றும் கூறலாம். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது 2024ஆம்…
-
- 0 replies
- 202 views
-
-
எகிய ராஜ்யவும் இளங் கலைஞர் மன்றச் சந்திப்பும் - நிலாந்தன் அண்மை மாதங்களாக அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்று ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியைத் தொடங்கலாம் என்று கஜேந்திரக்குமார் எச்சரித்து வருகிறார். அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அவ்வாறு உண்டு.ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்து செல்ல அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் எச்சரிக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு சுவிற்சர்லாந்தில் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தவர் அவ்வாறு எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படும் அந்த இடைக்கால வரைபை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவ…
-
- 0 replies
- 134 views
-
-
கழண்ட கத்திகள் ? - நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட 10 பேரை அவர் சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது சிவாஜிலிங்கம் அங்கிருந்த ஓர் அரசியல் விமர்சகரிடம் கேட்டார்… ”இந்த வாரக் கட்டுரை இதைப் பற்றித் தானா?” என்று. அப்பொழுது அரசியல் விமர்சகர் சொன்னார், ”இல்லை இந்தச் சந்திப்பில் நான் ரிப்போர்ட்டராகக் கலந்து கொள்ளவில்லை.இது மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு. தமிழ்த் தரப்பு இவ்வாறு மூடிய அறைகளுக்குள் நடக்கும் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை அப்பாவித்தனமாக அல்லது உள்நோக்கத்தோடு வெளியே விடுகிறது என்று ஓர் அபிப்பிராயம் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் உண்டு” என்று. …
-
- 0 replies
- 149 views
-
-
நாட்களை கடத்தும் ஆளும் கட்சியும் இடம் கொடுக்கும் தமிழ்க்கட்சிகளும் February 19, 2026 — கருணாகரன் — இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தேசிய மக்கள் சக்தியும் தீர்வைத் தரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் பதிலையும் உறுதியாகவோ வெளிப்படையாகவோ சொல்லாமல் தந்திரமாக நாட்களைக் கடத்தும் உபாயத்தைக் கையாள்கிறது NPP அரசாங்கம். இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மாகாணசபைகளுக்கான தேர்தல், வடக்குக்கிழக்கில் பௌத்த சிங்கள விரிவாக்கச் செயற்பாடுகள், பொருளாதார மறுசீரமைப்பு – புதிய பொருளாதார முன்னெடுப்பு, மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினைகள் என எதற்கும் பொறுப்பான பதிலை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவோ சொல்வதில்லை. மட்டுமல்ல, ஒவ்வொர…
-
- 0 replies
- 142 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன? February 16, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு” (protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரச…
-
- 1 reply
- 155 views
- 1 follower
-
-
அரசியலையே அவமதிக்கும் நடிகர் விஜயை பொதுமன்றம் கண்டிக்க வேண்டாமா? 16 Feb 2026, 7:00 AM ராஜன் குறை நடிகர் விஜய் பிற அரசியல் கட்சி தலைவர்கள் போல பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு, மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. தன் கருத்துக்களைக் கூறுவதில்லை. அரசியலை மல்டிபிள் சாய்ஸ் குவெஸ்டின் பேப்பர் போல எடுத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி மட்டும் கருத்து தெரிவிக்கிறார். பிற பிரச்சினைகளில் அவர் கருத்துக் கூறவில்லையே என்று விமர்சித்தால், நீங்கள் சொல்வதற்காகவெல்லாம் நான் பேசமுடியாது என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார். அதைவிட மிகப்பெரிய சிக்கல் அவரால் மக்களை …
-
- 0 replies
- 146 views
-