Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப்பும் சீன-பாக் நல்லுறவை மேலும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தினால், இருநாடுகளின் பாதுகாப்பு சித்தாந்தத்தின் அடிப்படையான “இந்திய எத…

  2. கொரோனாவுக்கு அரசியல் சிகிச்சை -எம்.எஸ்.எம். ஐயூப் புதிய மருந்துகளைக் கண்டு பிடிப்பதில், இலங்கைக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே, பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள், பல மாதங்களாக ஆய்வுகூடப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், களப் பரீட்சைகளிலும் ஈடுபட்டதன் பின்னரே, மருந்துகளைப் பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கின்றன. இலங்கையில், புதிய மருந்துகள் முதலில் பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்ட பின்னரே, ஆய்வுகூடப் பரிசோதனைக்கு விடப்படுகின்றன. இது, அரசாங்கம் எந்தளவு கவலைக்குரிய நிலைமையில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அமெரிக்காவில் ‘பைஸர்’ என்ற பல்தேசிய மருந்துக் கம்பனி, ஜெர்மனியில் ‘பயோஎன்டெக்’ எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இ…

  3. ஜனாஸாக்களில் வைக்கப்படும் இனவாதத் தீ -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், அவர்களின் மார்க்க நம்பிக்கைக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிராக, அரசாங்கத்தால் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. ‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்வது போல, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடக்கம் செய்வதாலும் தொற்றுக்கான அச்சுறுத்தல் இல்லை’ என்று, உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே அறிவித்து இருக்கின்றது. அப்படியான நிலையில், இலங்கையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், பலவந்தமாகத் தகனம் செய்யப்படுகின்றன. அண்மையில், 20 நாள்களேயான சிசுவொன்றின் ஜனாஸாவும், கொரோனா வைர…

  4. இளைய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகளின் பாராளுமன்ற அரசியல் புதிய பாராளுமன்றத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்துகொண்டு எல்லோரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்கள் கருத்துக்களை சிறப்பாக முன்வைக்கிறாரர்கள்.வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாாக இருந்தாலும், கட்சிவேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பெரும் அனுதாபத்தை பெறுகிறார்கள். அவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் ஏற்கெனவே 10 வருடங்கள் சபையில் அங்கம் வகித்தவர்.மற்றைய மூவரில் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 10 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.எஞ்சிய இருவரான உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.…

  5. இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி – கேர்னல் ஆர் ஹரிஹரன் கேர்னல் ஆர் ஹரிஹரன் சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப்பும் சீன-பா…

  6. தொல்பொருள் என்ற ரீதியில் மக்களின் காணி மட்டக்களப்பில் கபளீகரம்? (வ.சக்திவேல்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் என்ற ரீதியிலும், வனப் பாதுகாப்பு என்ற ரீதியிலும் மக்களின் பூர்வீகக் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஜி.பி.ஆர். தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலே இருந்து கொண்டு மட்டக்களப்பு மக்களின் பூர்வீக இடங்களை அடையாளமிடும் அதிகாரிகள்; மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் முதல் அரசாங்க அதிபர் வரையிலான எந்தவித அதிகாரிகளுக்கும் தெரியாமல் கொழும்பிலிருந்து வந்து தொல்பொருட் களுக்குரிய இடம் எனவும், வன இலாகாவுக்குரிய இடம் எனவும் அடையாளப்படுத்தி விட்டுச் செல்வதாகவும் அவ்வாறு அவர்களால் அடையாளப்படுத்தப்படும் …

  7. எரிப்புக்கு எதிராக ‘வெள்ளைத் துணி’ மொஹமட் பாதுஷா உலகின் சில நாடுகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுறை, சாதாரணமாகக் கட்டுப்படுத்தல் என்ற கட்டத்தைக் கடந்து, அதற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றை மக்கள் பாவனைக்கு வழங்குவதிலும், முனைப்புக் காட்டி வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில், மரணங்கள் 152 ஐத் தாண்டிவிட்டன. நாட்டை வழமைக்கு, முழுமையாகத் திருப்ப முடியாத சூழலையே, இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தப் பின்னணியில், உலக ஒழுங்கைப் போலவே, நமது நாட்டில் வாழ்கின்ற மக்களது முயற்சியும் பிரார்த்தனையும், கொவிட்-19 நோயிலிருந்து தப்பித்து, உயிர் பிழைத்து வாழ்தல் என்பதாகவே இருக்கின்றது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம்கள் மேலுமொரு நெருக்…

  8. ஜெனீவா குறித்து தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு வருமா? சுமந்திரனின் யோசனையை ஆராயும் விக்கியும், கஜனும் கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் குறித்து இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனம் திரும்பியிருக்கின்றது. பிரதான தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்றும் திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதும் இதற்குக் காரணம். இதன் ஓரு அங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம…

  9. கோத்தாபயவின் இருகளப் போர் – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி சர்வதேச நாணய நிதி தொடக்கம் உலக வங்கி ஊடாக உலக நாடுகளின் நிதி நிலைமைகளைப் பற்றிக் கண்காணிக்கும் பல உலகளாவிய இராட்சத நிறுவனங்கள் வரை எல்லாமே, ஒன்றன்பின் ஒன்றாக, இலங்கையின் கடன்பளு ஆபத்தான ஒரு நிலைக்கு அந்நாட்டின் பொருளாதாரத்தை வளரமுடியாமல் தடுக்கிறதென்றும் இந்த வருடக் கொள்ளை நோயால் ஏற்பட்ட மந்த நிலையிலிருந்து இலகுவாக மீழ்வது கடினமென்றும் இடையறாது எச்சரித்து வருகின்றன. அத்துடன் அவ்வாறு மீழ்வதற்குரிய பொருளாதார மாற்று மருந்துகள் கசப்பானவை எனினும் அவற்றைத் துணிந்து கையாளாகாதவரை பொருளாதாரப்பிணி தீராதென்றும் அவை மேலும் வலியுறுத்துகின்றன. ஆனால் இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சும் அந்த எச்…

  10. வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறார் விக்கினேஸ்வரன் BharatiDecember 14, 2020 வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறார் விக்கினேஸ்வரன்2020-12-14T17:19:05+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore “வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காதது உங்களைப் பல கண்டனங்களுக்குள் உள்ளாக்கியுள்ளது. உங்கள் பக்கக் கருத்துக்களைக் கூற முடியுமா?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்துள்ளார்.…

  11. ஓய்வூதியர்களின் நீதி ? – நிலாந்தன் நிலாந்தன் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த நூலில் அவர் இலங்கைத் தீவில் இடம்பெற்றது ethnic slaughter அதாவது இன சங்காரம் என்று கூறியிருக்கிறார். ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவர் இனப்படுகொலை என்று அதை அழைத்திருப்பதாக்க கருதுவது தெரிகிறது. ஆனால் அது இனப்படுகொலை என்ற அரசியல் அடர்த்தி மிக்க ஒரு வார்த்தயை விட செறிவு குறைந்த வார்த்தைதான். சங்காரம் என்பது தொகையாக உயிர்களை அழிப்பது. அதன் வேர்ச்சொல் பழைய நோர்வீஜிய மொழியிலிருந்து வருகிறது. அதன் பொருள் இறைச்சிக்கடை அல்லது யுத்த களத்தில் தொகையாகப் பொது மக்களைக் கொல்…

  12. சிறுபான்மையினரை அடக்கியாளுதல் -என்.கே. அஷோக்பரன் ஆங்கிலத்தில் sadism என்ற சொல்லுண்டு. இந்த வார்த்தை sadisme என்ற பிரென்ஞ் சொல்லில் இருந்து வந்தது. Sadisme என்ற பிரென்ஞ் சொல்லானது, மாக்கி டு சாட் (Marquis de Sade) என்ற பிரென்ஞ் எழுத்தாளரின் பெயரிலிருந்து வந்தது. மாக்கி டு சாட்டின் சிற்றின்பக் கதைகள், வன்முறைக்கு பெயர்போனவை. மற்றவர்களைத் துன்புறுத்துவதன் ஊடாக, இன்பமடையும் தன்மைகள் அவற்றில் விஞ்சி நிற்கும். இதனால், பாலுறவில் மற்றவரைத் துன்பப்படுத்துவதன் ஊடாக, இன்பமடைவதற்கு sadism (சேடிஸம்) என்ற சொல் வழங்கலாயிற்று. காலப்போக்கில் இந்தச் சொல், பாலுறவு என்பதைக் கடந்து, மற்றவர்களைத் துன்பப்படுத்தி …

  13. இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் ஏனைய இன மக்களுக்கு ஒரு சட்டமா? 41 Views இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம், ஏனைய இன மக்களுக்கு ஒரு சட்டமா? என மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இங்குள்ள மக்களும் இந்த நாட்டு மக்கள்தான் அவர்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்துவந்தவர்கள் இல்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப…

  14. அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன் 35 Views கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் தம்பதிகளின் 20 நாட்களேயான சிசு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தி இது. “இந்த அப்பாவி 20 நாள் குழந்தை தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு செய்த பாவம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா. இந்தக் கேள்விக்குப் பின்னால் உள்ள ஆற்றாமை, குழறல் இலங்கையில் நடைபெறும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்குள் இருந்து மீளமுடியாமல் முஸ்லிம்கள் தத்தளித்துக் க…

    • 2 replies
    • 621 views
  15. யாழ் மாநகரசபை பாதீடு தோற்கடிக்கப்பட்டமை... மக்கள் நலன் சார்ந்தா??? அரசியல் நலன் சார்ந்தா???

  16. வெள்ளக் கதைகள் -நிலாந்தன் December 13, 2020 புரேவிப் புயல் கடந்த வாரம் தமிழர் தாயகத்தை ஓரளவுக்குச் சேதப்படுத்தியது. மூன்று மரணங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டது.குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலைச் சூழ்ந்து வெள்ளம் நின்றது. யாழ் நகரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. கோவில் வீதியில் அமைந்துள்ள இரண்டு நாடாளுமன்ற உறுபினர்களின்(விக்னேஸ்வரன்,அங்கஜன்) வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விக்னேஸ்வரனின் வாடகை வீட்டின் படிக்கட்டுக்கு வெள்ளம் ஏறியது. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் வெள்ளத்துள் மிதந்தமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. நகைச்சுவை உணர்வு மிக்…

    • 3 replies
    • 644 views
  17. வீணடிக்கப்பட்ட 20 நாட்கள் ”தமிழ் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில் பேசினால் அவர்கள், புலிப் பயங்கரவாதிகள், பிரபாகரன்கள். முஸ்லிம் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில், மதம் தொடர்பில் பேசினால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள், சஹ்ரான்கள்” தாயகன் கொரோனா வைரஸின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தலைமையிலான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வியாழக்கிழமை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்களும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

  18. 2009 ஆம் ஆண்டுக்குப் பி்ன்னரான கடந்த பத்து ஆண்டுச் சூழலில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் நலனும் இலங்கைப் படைத் தளங்களைப் பலப்படுத்தினால் பிராந்தியப் பாதுகாப்புக்கு உகந்ததென நம்பும் மேற்குலகம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்த்தேசியக் கட்சிகளின் வார்த்தையில் சொல்வதானால்…

  19. கஜனின் உரை: ஓரு இனமாகத் திரள்வது? http://www.nillanthan.com/wp-content/uploads/2020/12/Kajan-copy-2.jpg நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேச…

  20. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் பிராந்திய நலனும் நாடாளுமன்றத்தில் அரை மணித்தியாலம் நடைபெறும் கேள்வி நேரத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை இராணுவத்துக்கு வழங்கும் உதவிகள் பற்றியும் கேள்வி எழுப்ப முடியும். ஆனால் அப்படிக் கேட்கப்பட்டதாகத் தெரியவில்லை அ.நிக்ஸன் ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகா…

  21. அஜித் டோவால் விஜயமும் இலங்கை அரசியலும்! - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அரசியல் உறுதிப்பாடு என்பது இந்தியாவுடனான உறவிலே அதிகம் தங்கியிருப்பதான தோற்றப்பாடு உண்டு. அதனை நிராகரிக்க முடியாது விட்டாலும் இலங்கை இந்தியாவை கையாளுவதனைப் பொறுத்ததாகவே அத்தகைய எண்ணம் வளர்ந்துள்ளது. அதிலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைமை இலங்கை ஆட்சிக்கு விரோதமாக அமைய ஆரம்பித்ததன் பின்பாடு இந்தியாவைக் கையாளும் திறன் இலங்கை ஆட்சியாளருக்கு அவசியமானதாக அமைந்தது. ஆனால் இந்தியத் தரப்பு இலங்கையைத் திருப்திப்படுத்த முடியாத சூழலிலேயே இலங்கைத் தமிழரை அரவணைத்துக் கொண்டது. ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கமும் முடிவும் அதனையே வெளிப்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.