Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முஸ்லிம் கூட்டமைப்பு: அதிகரிக்கும் சாத்தியங்கள் ‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கின்றது. ஆனால், குறிப்பாக இலங்கைச் சோனகர்களின் வாரிசுகள் எந்தளவுக்கு அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது. தம்முடைய மார்க்கம் சொல்கின்றது என்பதற்காகவோ அல்லது சமூகவியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டோ, இலங்கை முஸ்லிம்களும் அவர்களது தலைவர்களும் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவதைக் காண்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது. மாற்றுக்கருத்தியல் என்பது காத்திரமான வாதங்களுக்கும் ஆரோக்கியமான இறுதித் தீர்மானங்களுக்கும் வித்திடும் என்ற நிலை மாறி, அது கருத்து வ…

    • 1 reply
    • 710 views
  2. குடியரசுத் தேர்தல் பதவிக்கான குதிரையோட்டம் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல், களை கட்டி விட்டது. ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக, இந்தமுறைத் தேர்தல் மாறியிருக்கிறது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டொக்டர் ராஜேந்திரபிரசாத், பீஹார் மாநிலத்தில் இருந்துதான் தெரிவு செய்யப்பட்டார். இப்போதும் பீஹார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட இருக்கிறார். நாட்டின் மிக உயர்ந்த, முதல் பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல், இந்தமுறை வித்தியாசமான தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. எதிரும் புதிருமாகப் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள, ராம்ந…

  3. புலிகளுக்குச் சோதனைமேல் சோதனைதான் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைச் சுட்ட குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்காக முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டில், வேறு சில விடுதலைப்புலி இயக்க முன்னாள் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகிச் சிறையிலிருக்கின்றனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, தனங்கிளப்புப் பகுதியில், வெடிப்பொருட்கள் மற்றும் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணியில் சம்மந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கைத…

  4. அடக்குமுறையை நியாயப்படுத்திய போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும், அவர் அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில், குறிப்பாகத் தெற்கிலுள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில், ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது முற்றிலும் பிழையான கருத்தும் இல்லை. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்லாது, நாட்டில் முக்கியமான சகல விடயங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சம்பந்தனும் அவரது கட்சியும் பொதுவாகத் தமிழ் அரசியல் கட்…

  5. எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்தால் பிரச்சினைகள் தீருமா? எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் பொறுப்பல்ல” எனக் கூறினார். அதேவேளை, “இந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்த காரணிகளில் சில, எமது கட்டுப்பாடுக்கு அப்பாலானவை” என்றும் கூறினார். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்களித்த மக்களின், அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதே ஜனாதிபதியின் உரை…

    • 0 replies
    • 455 views
  6. எங்கே செல்லும் இந்தப் பாதை? “வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள் வளப் பங்கீட்டுப் பிரச்சினைக்கான தீர்வு" என, வடக்கு மாகாண அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில், அமைச்சர் இவ்வாறான ஆலோசனை பகர்ந்துள்ளார். மேலும் அமைச்சர், தான் சொன்னது என்னவென்று முழுமையாக ஆராய்ந்து பாராமல், நுனிப்புல் மேய்ந்து விட்டு, ஆசிரியர் சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன எனவும் மறுப்பு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். ஆனாலும் அமைச்சர் அவ்…

  7. வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’? மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முற்போக்கானவையாகும். இருந்தபோதிலும், அவற்றை நிறைவேற்றுவது, இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், எந்த இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருந்தாலும், அவற்றுக்குப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கின்றது. எனினும், இந்தப் பிரச்சினை சிறிய மற்றும் சிறுபான்மைக் க…

  8. கேட்டதோ தமிழீழம்; கிடைத்ததோ ஜீப் வண்டிக் கதை கேட்டதோ தமிழீழம், கிடைத்ததோ ஜீப் வண்டிக் கதையை பலரும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். இதுதான் இலங்கை வரலாற்றில் அமிர்தலிங்கம் தலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்று, ஆனந்தசங்கரி, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, கிளிநொச்சிக்கு ஜீப் வண்டியில் வந்தவேளை, பேசப்பட்ட கதையே இது. நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல், பெண்களை அரசியல் தலைமைத்துவத்துக்காக அறிமுகப்படுத்தும் முதல்படியானது. அவர்களை இனங்காணும் வழியை ஏற்படுத்துவதும் இதன் முதல் நோக்கம். தங்களுடைய இருப்புகளிலும் கொள்கையிலும் இருந்து மாறவில்லை என்பதைக் கா…

  9. தடுமாறும் கூட்டமைப்பு உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட பின்­ன­டைவைச் சரி செய்யும் ஒரு முயற்­சி­யாக, அறுதிப் பெரும்­பான்மை பெற முடி­யாத உள்­ளூ­ராட்சி சபை­களில், ஆட்­சி­ய­மைக்கும் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­ன்றன. தேசியக் கட்­சியா- அல்­லது தமிழ்த் தேசிய விரோதக் கட்­சியா என்ற எந்தப் பாகு­பாடும் இல்­லாமல், அவர்­களின் ஆத­ர­வுடன் வடக்கு, கிழக்கு உள்­ளூ­ராட்­சி­களில் ஆட்­சி­ய­மைத்து வரு­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு. இதனால் தமிழ்த் தேசிய அர­சியல் பரப்பில் கூட்­ட­மைப்பு கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் எதிர்­கொண்­டி­ருக்­கி­றது. அதே­வேளை, உள்­ளூ­ராட்சித் தேர்­தலி…

  10. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிக…

  11. இலங்கையில் நீதித்துறை இதுவரை பொறுப்பாக நடந்துக்கொண்டதில்லை

  12. "மேரியிடம் ஒரு செம்மறியாட்டுக் குட்டி இருந்தது' மேரி செல்லும் இடமெல்லாம் குட்டி ஆடும் பின்தொடர்ந்து செல்லும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அது போலவே, ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பாராளுமன்ற உறுப்பினரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பாளருமாகச் செயற்படுபவராகிய சஜின் வாஸ் குணவர்தனவும் சென்று கொண்டிருப்பார். சென்ற மாதம் ஐ.நா. வின் 69 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ சென்றபோது, சஜின் வாஸ் குணவர்தனவும் சென்றிருந்தாரல்லவா? அச்சந்தர்ப்பத்தில், நியூயோர்க் நகரில் ஜனாதிபதி ராஜபக்ஷ பங்கு பற்றிய சந்திப்பொன்றின் போது எல்லோரினதும் முன்னிலையில் எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் வைத்தியக் கலாநிதி …

  13. சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? Dec 07, 2014 | 9:03 by நித்தியபாரதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார். இவ்வாறு World Socialist Web Site இணையத்தில் K. Ratnayake எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஏறத்தாழ 36 வரையான…

  14. இலக்காகும் கிழக்கு இலங்­கையின் சம­கால நாட்கள் பல்­வேறு பேசு­பொ­ருள்­க­ளுடன் நகர்ந்து செல்­கின்­றன.தென்­னி­லங்­கையில் பல்­க­லைக்­க­ழக மற்றும் உயர் கல்வி நிறு­வன மாண­வர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஆர்ப்­பாட்­டங்கள், ஆசி­ரிய, அரச வைத்­திய அதிகாரிகள் சங்கம் உட்­பட தொழிற்­சங்­கங்கள் முன்­னெ­டுக்­கின்ற மற்றும் முன்­னெ­டுக்­கத்­திட்­ட­மிட்­டுள்ள பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பு­க்கள்,கிழக்கில் இடம்­பெறும் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்­டங்கள்,வடக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நில­மீட்புப் போராட்­டங்கள், காணாமல் போன அல்­லது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டித்­துத்­தா­ருங்கள் எனக் கண்­ணீர்­விட்­ட­ழுது நடந்­தே­று­கின்ற போராட்­டங்கள் என்­பன பாதிக்­கப்­பட…

  15. ‘தூறலும் நின்று போச்சு’ தற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான். “உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்...” என்று வெடியைக் கொழுத்திப் போட்டேன். “என்ன, சும்மா வெளிநாடுதான்; நிறத்தால், அங்கு நாங்கள் இரண்டாம் இடம்; இனத்தால், இங்கு நாங்கள் இரண்டாம் இடம்” எனப் பொரிந்து தள்ளினார். அர்த்தம் பொதிந்த இவ்வாக்கியங்கள், நாட்டின் அரசமைப்பு முறை ஊடாக, ஓர் இனம் பாதுகாக்கப்படவில்லை; பேணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. ஒரு நாட்டில் காணப்படுகின்ற …

  16. உறுதியான தலைமைத்துவத்தின் அவசியமும் வெற்றிடமும் தமிழ் அர­சியல் வெளியில் அனைத்துத் தரப்­பி­ன­ரையும் ஒன்­றி­ணைத்து வழி­ந­டத்திச் செல்­லத்­தக்க, ஆளு­மை­யுள்ள தலை­மைக்கு ஒரு வெறுமை நிலை நில­வு­கின்­றது என்­பது மீண்டும் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் ஏற்­பட்ட இந்த இடை­வெளி பெரி­தாகிச் செல்­கின்­றதே தவிர குறு­கு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அந்த வெறு­மையை நீக்­கு­வ­தற்கு நம்­பிக்கை அளிக்­கத்­தக்க முன்­னெ­டுப்­புக்­களை யார் மேற்­கொள்ளப் போகின்­றார்கள் என்­பதும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. இந்த நிலை­மை­களை மகா­வலி திட்­டத்­திற்கு எதி­ரான முல்­லைத்­தீவின் மக்கள் எழுச்சி பளிச்­சிடச் செய்­தி­ருக்­கின்­றது. முல்­லைத்­தீவு எழ…

  17. எதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா? லோ. விஜயநாதன் தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவிர வேறு எந்த இடத்திலாவது எமது போராட்டம் நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக நகர்த்தப்பட்டிருக்கிறதா ? அப்படி முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாம் எமது இலக்கை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரமாவது கடந்திருந்திருப்போம். ஆனால் நாம் அப்படி செய்யத்தவறியதன் விளைவே இருந்ததையும் இழந்து நிற்கவேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்திருந்தாலும் அதனை நோக்கி கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை அவர்முன்னெ…

  18. வெடுக்குநாறி மலையை இனி விடமாட்டார்கள்!

  19. சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:27 Comments - 0 மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்…

  20. இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்ற கட்டுரைக்கு பதிலாகஅமைந்த ஆங்கிலக்கட்டுரையின்[ii] மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்தசில அவதானிப்புகளும்ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்கைத் தீவில் வாழும் தமிழினம் தமக்கெதிரான அடக்குமுறைகளை உள்நாட்டிலோ சர…

  21. ‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எம். காசிநாதன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:00 Comments - 0 இந்திய மக்களவைக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவுடன் தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. டொக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றில், சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு ஆகியன நடந்து முடிந்திருக்கின்றன. இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கான, அச்சாரமாக அம…

  22. சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன் சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும். சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? சம்பந்தர் சிதறிப்போன தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம். முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள். அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம். அந்த அமைவிடம் காரணமாகத்தான…

  23. தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா? September 3, 2024 — கருணாகரன் — பல அணிகளாகச் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தத்ததளிக்கும் மக்களையும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தையும் பலப்படுத்துவதற்கே தமிழ்ப்பொது வேட்பாளர் என்று சொல்லப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புமாகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அதற்கான பரப்புரைகளும் அங்கங்கே நடக்கின்றன. பொதுவேட்பாளருக்காக இன்னும் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்றாலும் பரப்புரைகள் தொடர…

  24. அன்று ஒரு நாள் அந்த ஈழத்தின் தந்தை செல்வா சொன்னார் ஆண்டவன் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று. ஆண்டன் கூட கை விட்டு அனைத்தும் இழந்த தமிழனாய் குந்தி இருக்கக் கூட ஒரு முழ நிலம் கூட இல்லாமல் அடிமை ஆகிப் போன வரலாறாய் தொடர்கிறது துன்பம் இன்று வரை. எப்பொழுது ஒரு சிறுபான்மை தேசிய இனம் தனது போராட்டத்தின் சம பலத்தை இழக்கிறதோ (Balance of power) அன்றில் இருந்தே அதன் பேரம் பேசும் பலத்தையும் (Bargaining power) இழந்து பெரும்பான்மை இனத்தின் ஆக்கிரமிப்போடு அடிமையாகி விடுகிறது. அதன் பூர்வீக பிரதேசங்கள் யாவும் அரச ஒடுக்கு முறைக்கி உள்ளாகி அந்த மக்கள் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக ஒடுக்கப்படுவர். ஈழ தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் பின் இப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது. வெற்றி க…

  25. நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும் -பா.உதயன் பல படைகளை உருவாக்கி ஒரு காலம் சிங்கள அரசையும் அதன் படைகளையும் நிலை குலைத்து போராடி தமிழர் அடையாளத்தை உலகுக்கு சொல்லி யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காது ,எவனுக்கும் தலை வணங்காமல் பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ( TNA ) என்ற அரசியல் பலத்தை உருவாக்கி எல்லோரையும் நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும். “Not only must you stand, but you must also stay.” என்று வட கிழக்கு உட்பட நாம் தமிழர் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து போராடி மடிந்த தலைவர் பிரபாகரனுக்கு இருந்த வீரம், நெஞ்சுரம், திறமை, பொறுப்பு, சுய நலன் இல்லாத பார்வை இதில் ஏதாவது இன்று தேர்தலில் நிற்கும் தமிழ் தலைவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.