அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 28 புதன்கிழமை, பி.ப. 12:31 கடந்த வாரம், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரசாரப் பயணத்தை சி.வி. விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமசந்திரனும் இருந்தார். முதலாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, 2016 செப்டெம்பரில் நடைபெற்றது. மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, ‘எழுக தமிழ்’ போராட்ட வடிவத்துக்கான வரலாறு, மூன்று வருடங்கள் மட்டுமே! ஆனால், இந்த மூன்று வருடங்களுக்குள், அந்தப் போராட்ட வடிவத்தின் அடையாளமும் அதற்கான அர்ப்பணிப்பும் எவ்வளவுக்கு வலுவிழந்து இருக்கின்றது என்பதைக் கவனித்தாலே, தமிழ்த் தேசிய அரசிய…
-
- 0 replies
- 856 views
-
-
றோம், ( சின்ஹுவா ) இத்தாலிய பிரதமர் கியூசெப்பி கொன்ரேயின் அரசாங்கம் கடந்தவாரம் வீழ்ச்சிகண்டபோது அது பதவியில் 15 மாதங்களைப் பூர்த்திசெய்வதற்கு 11 நாட்கள் குறைவாக இருந்தன.அதன் அர்த்தம் இரண்டாவது உலகப்போருக்கு பின்னரான காலகட்டத்தில் இத்தாலியில் பதவியில் இருந்த ஒரு அரசாங்கத்தின் சராசரி காலநீட்சியை உண்மையில் அதிகரித்தது என்பதேயாகும். புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் போது இத்தாலி உலகப்போரின் முடிவுக்கு பின்னரான ( 74 வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலகட்டம் ) அதன் 69 வது அரசாங்கத்தைக் காணும். ஒரு அரசாங்கம் சராசரி 13 மாதங்களுக்கும் குறைவான காலமே பதவியில் இருந்திருக்கிறது. இது ஐரோப்பாவின் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத ' சுழலும் கதவு ' போன்ற நிலைவரமாகும்.அதே 74 வருட கால…
-
- 1 reply
- 959 views
-
-
2015இல் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், எல்லாவற்றையும் நிறைவேற்றுவோம் என்று ஜெனீவாவில் வாக்குறுதிகளைக் கொடுத்து, சர்வதேச சமூகத்தை நம்பவைத்து வந்த இலங்கையின் தற்போதைய அரசாங்கம், தமது வாக்குறுதியை மீறும் வகையில் செயற்படுவதை சர்வதேச சமூகத்தினால் பொறுத்துக்கொள்ள முடியா திருக்கின்றது. இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள விவகாரம், புதியதொரு பரிமாணத்தைத் தொட்டிருக்கிறது, இதனை ஐ.நாவும் சர்வதேச சமூகமும், தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கின்றன. 2010ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்புக்கூறுவதற்கு எடுக்கப்பட்டு வந்…
-
- 0 replies
- 354 views
-
-
திராவிடர் கழகம் தனது பவள விழாவை இன்று (ஆகஸ்ட் 27) கொண்டாடும் நிலையில், அந்த இயக்கத்தின் தற்போதைய தேவை, சாதனைகள், எதிர்கால லட்சியங்கள், அக்கட்சி மீதான விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பேசினார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து: கே. இந்த இயக்கம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. திராவிடர் கழகம் என்ற இந்த அமைப்புக்கு இனிமேலும் தேவை இருப்பதாக நினைக்கிறீர்களா? ப. கண்டிப்பாக. திராவிடர் கழகத்தின் அடிப்படையான கொள…
-
- 0 replies
- 372 views
-
-
கடந்தவருடம், செப்டெம்பர் 2018, , தி பயனியர் எனும் இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்த கட்டுரை ஒன்றினைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கட்டுரையின்படி, இந்திய பி ஜே பி அரசின் அமைச்சரான சுப்ரமணிய சுவாமி காங்கிரஸின் முன்னாள் தலைவி சோனியாவையும், ப சிதம்பரத்தையும் 2009 இறுதிக்கட்டப் போரின்பொழுது புலிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவரது புளொக்கில் அவர் எழுதிய கருத்துப்படி, இறுதிக்கட்டப் போரின்பொழுது, சிதம்பரம் பிரபாகரனுக்கு அனுப்பிய தகவலில், "இந்திய கடற்படை உங்களைக் காப்பாற்றும், ஆகவே பொறுத்திருங்கள்" என்று கூறியிருந்தாராம். ஆனால், வந்ததோ இலங்கை கடற்படை. வந்திருப்பது இலங்கையின் கடற்படை என்பதைத் தெரிந்திருக்காத பிரபாகரன், …
-
- 0 replies
- 481 views
-
-
அநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, மு.ப. 10:59 Comments - 0 மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி”யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலி முகத்திடல் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்க ஒரு நாயகனைப் போல, அநுர குமார மேடையேறினார். கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, அரசியலுக்கு வந்த ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திப் பேசிய அவர், “புதிய பாதையைத் தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், மூன்றாவது அணி வேட்பாளர்களாக …
-
- 2 replies
- 527 views
-
-
ஜே.வி.பி.யும் ஜனாதிபதி தேர்தலும் வீ.தனபாலசிங்கம் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் பேரணியின்போது கொழும்பு காலிமுகத்திடலில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளம் நிச்சயமாக அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் இலங்கையில் வேறு எந்த அரசியல் பேரணியிலும் நாம் கண்டிராததாகும். சுமார் 30 அரசியல் கட்சிகள், குழுக்கள், சிவில் சமூக மற்றும் புத்திஜீவிகள் அமைப்புக்களை உள்ளடக்கிய இந்த இயக்கத்தின் பேரணி இடதுசாரி ஆதரவாளர்களுக்கு குறிப்பாக, பழைய இடதுசாரிக்கட்சிகள் பெரும் செல்வாக்குடன் செயற்பட்ட காலகட்ட அனுபவங்கைளைக் கொண்டவர்களுக்கு ஒரு ' மருட்சியை ' ஏற்…
-
- 0 replies
- 410 views
-
-
மாற்று தெரிவுகளும் முஸ்லிம்களின் தேடலும் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:48 Comments - 0 பொதுவாக, மனித மனம் முழுமையாகத் திருப்தியடைவது என்பது, அபூர்வமான காரியமாகும். திருப்தியின் எல்லைகளைத் தொடர்ந்து, அகலமாக்கிச் செல்வதன் காரணத்தால், எதிலும் இலகுவில் திருப்தி காணாத ஓர் உயிரினமாக, மனிதர்கள் கருதப்படுகின்றார்கள். திருப்திப்படுத்த முயலும் விடயங்களிலேயே, மனிதர்கள் திருப்தி காணாத நிலை இருக்கையில், மக்களைத் திருப்திப்படுத்துவது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஆட்சி, அதிகாரத்தால், மக்கள் எந்தளவுக்கு அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்பதைத் தனியாக விவரிக்க வேண்டியதில்லை. அப்படியொரு மனநிலையே, பெரும்பாலான இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருப்ப…
-
- 0 replies
- 530 views
-
-
ஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:30 Comments - 0 மிக முக்கியமான தருணமொன்றில், இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்குப் பின்னாலுள்ள அரசியலும் அரசியலில் எதிர்பார்க்கப்படும் தாக்கங்களும், மிக முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இந்த நியமனம் இடம்பெற்றிருக்கிறது. அதுவும், பிரதான வேட்பாளராகப் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவரே, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு, சர்வதேச அளவில் கடு…
-
- 0 replies
- 611 views
-
-
இந்தோ- பசுபிக் பிராந்தியப் பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் டில்லிக்கு என்ன சொல்ல வேண்டும்? தீர்மானிக்க வேண்டிய தமிழ் தரப்பு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்தே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும்? இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திரமோடி சில நாட்களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்திருந்தார். அப்போது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்த மோடி புதுடில்ல…
-
- 0 replies
- 656 views
-
-
காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1 புதினப்பணிமனைAug 16, 2019 by in கட்டுரைகள் காஷ்மீர் தெற்காசியாவின் அரசியலில் முக்கிய நகர்வு ஒன்றை கண்டிருக்கிறது. முன்பு இருந்த தனித்துவமான அதிகாரங்களை இழந்து இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு அரசியல் பிராந்தியமாக இருந்த பிரதேசம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டுள்ளது. முன்பு இருந்த காஷ்மீரில் மத்திய அரசினால் எடுக்கப்படும் எந்த தீர்மானத்தையும் மாநில சட்டபேரவையின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்த முடியாது என்பது அவற்றில் முக்கியமானது. மேலும் வேற்று மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அரச வேலைகளில் வெளிமாநிலத்தவர் தெரிவு செய்யப்பட முடியாது என்பன போன்ற …
-
- 2 replies
- 1.3k views
-
-
கோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: "ராஜபக்ஷ குடும்பத்தில் எவரும் தமது பாரியாரை தேர்தல்களில் ஈடுபடுத்தவுமில்லை ஈடுபடுத்தப் போவதுமில்லை" "தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய பிரச்சினைக்கான யோசனைத் திட்டத்தினை முன்மொழிய வேண்டும்" ஜனாதிபதி வேட்பாளருக்காக எமது குடும்பத்திலிருந்து பெயர்கள் முன்மொழியப்பட்டபோது தற்போதைய சூழலை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் பெயரை நானே முன்மொழிந்தேன் என்று முன்னாள் சபாநாயகரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்…
-
- 0 replies
- 269 views
-
-
காய் நகர்த்தும் ரணில் - சஜித்: வேட்பாளராகப் போவது யார்..? ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடு பிடித்துக்கொண்டிருக்கின்ற நிலை யில் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒவ்வொருவராக வெளிவந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் வேட்பாளர்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றனர். தற்போது அரசியல் களப்போக்கை பார்க்கும்போது இருமுனைப்போட்டி மும்முனைப்போட்டி அல்லது நான்கு முனைப்போட்டியாகக் கூட தேர்தல் வந்துவிடுமோ என்று தோன்றும் அளவிற்கு அரசியல் காய் நகர்த்தல்கள் மற்றும் களநிலைமைகள் முன்னேற்றமடைந்து வருகின்றன. தற்போதுவரை இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரம…
-
- 0 replies
- 831 views
-
-
விடை தேட வேண்டிய வேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை (தேர்தல் விஞ்ஞாபனம்) தயாரிப்பதற்கு அவசியமான தேர்தல் முன்கள நிலைமை இன்னும் கனியவில்லை. ஆனால் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர்களும், வேட்பாளர்களாவதற்குத் தயாராகி வருபவர்களும் தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாக்குறுதிகளில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது குறித்து தெளிவான உறுதியான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை. அதுகுறித்து அவர்கள் தமது அதிகாரபூர்வமான தேர்தல் உறுதிமொழிகள் தொடர்பான அறிக்கையில் தெளிவாகக் கூறுவதற்காகக் காத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. …
-
- 0 replies
- 407 views
-
-
தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019 தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவதுஎன்றால் என்ன? தமிழ் மக்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான அனைத்துலகப் பொறிமுறை, இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு எதிரான நீதி போன்ற கோரிக்கைகள் தமிழ் மக்களிடம் உண்டு. இக்கோரிக்கைகள் எவற்றையும் இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடிப்படையான கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதன் அடிப்படை…
-
- 0 replies
- 853 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 -இலட்சுணனன் லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின…
-
- 0 replies
- 446 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள் Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 12:52 Comments - 0 2020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர். இது, மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எ…
-
- 0 replies
- 622 views
-
-
கிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 12:17Comments - 0 காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல, நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு ஒரு நாட்டையோ, அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச் சொல்லிக் கேட்பதும், அதற்காகத் தயாரித்திருக்கும் பேரமும் அபத்தமாகத் தெரியுமல்லவா? ஆனால், இன்றைய உலக அரங்கு, அபத்தமும் அவலமும் ஆபத்தும் கலந்த கலவையாய் இருக்கின்றது. இதை மெய்யாக்கும் கதை ஒன்றையே, நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். காணிகளையும் கட்டடங்களையும் வாங்கி விற்கும் வியாபாரி, தனது 19ஆம் நூற்றாண்டு நினைவுகளுடன் உலகின் பலம் பொருந்திய நாட்டின் ஜனாத…
-
- 0 replies
- 598 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்த முடியும், முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினால் அதன் சாதக பாதகங்கள் என்ன எனும் கண்ணோட்டத்தை அளிக்கிறது இந்தக் கட்டுரை. ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக சிவில் அமைப்புக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும், இதில் சாதகமான தீர்மானம் எட்டப்படும்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக உள்ளதாகவும் பிபிசி தமிழிடம் ஹிஸ்புல்…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து கடந்த திங்கட்கிழமை புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்திடமிருந்தும், ஐக்கிய நாடுகளிடமிருந்தும் கூர்மையான கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையில் இனத்துவ நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் பாதகமான விளைவுகளை இந்த நியமனம் ஏற்படுத்துமென்று அவை தெரிவித்துள்ளன. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்த செயல் இலங்கையில் அ…
-
- 0 replies
- 538 views
-
-
2019-08-21 12:29:31 இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்தமை குறித்து ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் தமது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து வதுதான் ஜனாதிபதி மைத்திரியின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடந்த கால நடவடிக் கைகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் நமக்குச் சமன். இருவரையும் வைத்துக் கொ…
-
- 1 reply
- 608 views
-
-
கோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, மு.ப. 11:19 Comments - 0 சட்டப்படி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி, இன்னமும் எழுப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. ஏனெனில், அவர் தமது அமெரிக்கப் பிரஜா உரிமையை இரத்துச் செய்து கொண்டாரா என்பது, இன்னமும் தெளிவாகவில்லை. 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படி, வெளிநாட்டுக் குடியுரிமையுள்ள ஒருவர், இலங்கையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஆனால், அவ்வாறான ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாளில், மற்றொரு வேட்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், மிகக…
-
- 1 reply
- 465 views
-
-
நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆவார் அமித்ஷா. இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். அமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார். சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார். 2014 இந்திய பொதுத் தேர்தல் ஜூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார். ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் …
-
- 7 replies
- 1.9k views
-
-
”அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ செல்வத்தை தேய்க்கும் படை” - வள்ளுவர் . . இன்று (21.08.2019) ஏனோ 2009ல் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனக்கொலையில் பலியானவர்களின் சாபங்கள் பலிக்க ஆரம்பிக்கிறது என்கிற உணர்வு திடீரென என்னை ஆட்கொள்ளுகிறது. . . இலங்கையில் இருந்து மகிந்த இராசபக்சவின் அரசியல் குடும்பம் எதிர் நோக்கும் நெருக்கடி பற்றிய சேதிகள் கிடைத்தது. ஏனைய நாடுகளில் இருந்தும் அதே போன்ற சேதிகள் கிட்டுகின்றன. . தர்மம் வெல்லும் என்கிறதை தவிர அதிஸ்ட்டத்தால் இனக்கொலைக்கு தப்பித்து வாழும் எம்மிடம் வேறு சொற்கள் இல்லை.
-
- 0 replies
- 863 views
-
-
ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:35Comments - 0 உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி - ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள், தற்சமயம் கைசேதப்பட்டு நிற்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இப்போது, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அண்மித்து விட்டது. மைத்திரி - ரணில் ஆட்சிக் காலத்திலும், முஸ்லிம்களுக்குப் பெரும் அநியாயங்கள் நட…
-
- 0 replies
- 601 views
-