அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
சர்வகட்சி மாநாடும் ஜனாதிபதி - கூட்டமைப்பு சந்திப்பும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வகட்சி மாநாடு நடந்தேறியுள்ளது. இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கல் நிலையை எதிர்கொள்ளவதற்கான சர்வகட்சிகளின் ஆலோசனைக் களமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு, அதன் நோக்கத்தை அடைந்ததோ இல்லையோ, அது அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அது கனத்த பிரபல்யத்தைத் தேடித்தந்திருக்கிறது. ரணில் அங்கு பேசிய விதம், பேசிய விடயம், கப்ராலின் அரசியல் பேச்சைக்…
-
- 0 replies
- 232 views
-
-
சர்வஜன வாக்குரிமைக்கு வயது 90 - என்.சரவணன் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து இம்மாதத்துடன்\ 90 ஆண்டுகள் பூர்த்தியாக்கின்றன. இலங்கையில் இன்று நாம் அனுபவிக்கிற வாக்குரிமை, தேர்தல், ஜனநாயகத் தெரிவு, வெகுஜன அரசாங்கத்தை தெரிவு செய்யும் சுதந்திரம் என்பவற்றுக்கெல்லாம் தொடக்கமாக அமைந்தது 1931 இல் நாம் பெற்ற சர்வஜன வாக்குரிமை. இலங்கையின் அரசியல் கலாசாரத்தை ஒரு பெரும் பிரட்டு பிரட்டிய ஒரு நிகழ்வு தான் 1931 டொனமூர் திட்டத்தின் அறிமுகம்.டொனமூர் அரசியல் திட்டத்தில் போதாமைகள் இருந்தபோதும். அதற்கு முன்னிருந்த அரசியல் திட்டங்களைவிட அது ஒரு முன்னேறிய அரசியல் திட்டம் என்பதில் சந்தகம் கிடையாது. இத்திட்டத்தில் தான் ஆண்களுக்கும்பெண்களுக்கும் சேர்த்தே ஏக காலத்தில் ஒரே தடவையில…
-
- 1 reply
- 3.2k views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு தீர்வைத் தருமா? உத்தேச புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட அக்கட்சியின் சில தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தென் பகுதிளைத் தளமாகக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அதனை வரவேற்றிருக்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் சிறந்ததோர் அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், நாட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும், தமது பிரதிநிதிகள் மூலமல்லாது தாமாகவே குறிப்பிட்டதோர் விடயத்துக்குத் தமது ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்க அது வாய்ப்பளிக்கிறது. …
-
- 1 reply
- 648 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்? யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு கோரிக்கையே முன்வைக்கப்பட்டது. இது அரசியலில் துனிப்புல் மேயும் பிரச்சினை. தமிழ்ச் சூழலில் தங்களை படித்தவர்களென்று கருதிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கே விடயங்கள் சரியாக விளங்காத போது, பல்கலைக்கழக மாணவர்களால் எவ்வாறு இந்த விடயங்களை புரிந்துகொள்ள முடியும்? பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூறுவோரும் கூட அவர்களை தவறாக வழிநடத்தியிருக்கலா…
-
- 0 replies
- 778 views
-
-
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் பெப்ரவரி 25, 2013 தொடக்கம் மார்ச் 22, 2013 வரை மனித உரிமைகள் சபைக்கான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இம்முறை நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர் பார்க்கப்படுகின்றது. ஆனால் இப் பூகோள அரசியலில் மிக திடமாக எதனையும் கூற முடிவதில்லை. இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்பவர்கள், வரும் முடிவு எவ்வாறானாலும் அதனை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட அந்த மாதிரியான ஒரு தயார்ப்படுத்தலுக்கு தம்மை உள்ளாக்கி வைத்திருக்க வேண்டுமென்பதும், ஆனால் அதனைத் தாண்டிய வேலைத்திட்டங்களின் புரிதலுக்கு தம்மை உள்ளாக்கி கொள்ளுதலும் அவசியமானதொன்றாய் இருக்கின்றது. அனைத்துலக சுயாதீன போர்…
-
- 6 replies
- 709 views
-
-
சர்வஜன வாக்கெடுப்புக்கான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் மொஹமட் பாதுஷா மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்ற அரசாங்கத்துக்கு, அரசமைப்பில் ஒரு திருத்தத்தை கொண்டுவந்து, வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒரு பெரிய காரியமாக இருக்கப் போவதில்லை என்றே, ஆரம்பத்தில் பரவலாகக் கருதப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலின் மற்றுமொரு பேரிடர் ஏற்பட்டுள்ளமையால், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை, இலாவகமாக வெற்றிபெற வைக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன. உத்தேச திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த நீதியரசர் குழாம் எடுத்திருக்கும் தீர்மானம்…
-
- 0 replies
- 428 views
-
-
சர்வதேச அரங்கைச் சரியாக கையாளக் கூடிய தரப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான்! Posted on June 30, 2020 by தென்னவள் 46 0 ;தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ;இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் என்றும் கூறுகின்றார்…
-
- 0 replies
- 676 views
-
-
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. – லண்டனில் இருந்து லோகன் பரமசாமி. தகவல் தொழில்நுட்பமும் வலையமைப்பும் குறித்த விடயத்தில் எவ்வாறான ஒரு மாற்றத்தை இந்த உலகம் கண்டு வருகிறது. இதனை மக்கள் தமக்கு ஏற்றாற்போல் பயன்படுத்துகின்றார்களா? அல்லது அது ஒரு பகுதியில் வளர்ந்து கொண்ட போகும் போக்கில் தனிப்பட்ட வசதிகளுக்கும் பெருமைக்குமாக பயன்படுத்தவதுடன் நின்றுவிடுகிறதா? வலையமைப்பு குறித்த அரசியல் பார்வை என்ன? சர்வதேச அரசியலில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு என்ன என்பன குறித்த பார்வை ஒன்றை இந்த கட்டுரை…
-
- 0 replies
- 585 views
-
-
சர்வதேச அரசியலும் தமிழர்களின் முக்கியத்துவமும் - யதீந்திரா இன்று சாதாரண குடிமக்கள் அதாவது, அன்றாட வேலைகளில் மூழ்கிப் போவதையே தங்கள் பிரதான கடமையாகக் கொள்பவர்கள், மாலைநேர அரட்டைகளில் அரசியலையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்பவர்கள் ஆகிய பிரிவினர் தொடக்கம், அரசியலை ஊன்றிக் கவனிப்போர் வரை, அனைவர் மத்தியிலும் இருக்கும் கேள்வி - எதிர்வரும் மார்ச்சில் என்ன நடக்கும்? அவர்களது மனங்களில் எழும் கேள்விக்கு அவர்களிடமே பதிலுமுண்டு. நிச்சயம் ஏதோ பெரிதாக நடக்கத்தான் போகிறது. தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று வருடங்களாக இரண்டு சொற்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஒன்று ஜெனிவா மற்றையது அமெரிக்கா. ஜெனிவா என்னும் சொல்லுடன் அமெரிக்கா என்னும் சக்திவாய்ந்த சொல்லை இணைத்துப் புரிந…
-
- 2 replies
- 652 views
-
-
சர்வதேச அரசியல் கட்டமைப்புக்களை மாற்றியமைக்க வந்திருக்கும் ISIS - சாந்தி சச்சிதானந்தம்:- இஸ்லாமிய உலகிலிருந்து இன்னமும் எவ்வளவு ஆச்சரியங்கள் எமக்காகக் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. ISIS எனக் கூறப்படுகின்ற ஈராக்கினதும் அல் ஷாமினதும் இஸ்லாமிய அரசு (Islamic State for Iraq and Al Sham) என்னும் ஆச்சரியத்தினைப் பற்றித்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். சில ஆயிரம் படை வீரர்கள் கொண்டதொரு சிறு குழுவாகவே இது கருதப்பட்டிருந்தது. ஆனால் இன்று வட சிரியா தொடங்கி ஈராக்கின் பாக்தாத் நகர் வரை பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டு முன்னேறும் பெரும்படையாக இது மாறி விட்டது. இஸ்லாத்தின் ஆரம்பத்தில் சுல்தான்களால் ஆளப்பட்ட caliphate போன்ற ஆட்சியினை மீளக் கொண்டு வருவதே தமது நோக்கம் என இவ…
-
- 0 replies
- 566 views
-
-
சர்வதேச அழுத்தங்களை குறைக்க தேர்தல் வெற்றியை காண்பிக்க முயற்சி:- -அ.நிக்ஸன்- 06 ஜனவரி 2014 எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு உள்ளவர்களை அரசாங்கத்த்தின் பக்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம். அமரர் ஜே.ஆர்.ஜயவாத்தன இனப்பிரச்சினையை மையாகக் கொண்டு இனரீதியான கண்ணேட்டத்தில் சட்டங்களை உருவாக்கினார். ஆனால் அந்த சட்டங்கள் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கும் தற்போது இடையூறாக மாறிவிட்டது. அதனை எதிர்த்து வெகுஜன போராட்டங்களை ஆரம்;பிக்கும் தகுதியை இடதுசாரிகளும் இழந்துவிட்டன. தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் அது அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமை…
-
- 0 replies
- 491 views
-
-
சர்வதேச அழுத்தத்தை தமிழ் தலைமை பயன்படுத்துமா...? இலங்கை தற்பொழுது இராஜதந்திரிகளின் வருகையால் திக்குமுக்காடிப் போயிருக்கின்றது. ஐ.நா. மனிதவுரிமை ஆணையகத்தின் விசேட அறிக்கையாளர், ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர், அவுஸ்திரேலிய நாட்டின் வெளியுறவு அமைச்சர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் என்ற பட்டியலில் சுவிஸ் நாட்டின் தூதுவரும் இணைந்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை அல்லது ரணில் –மைத்திரி கூட்டரசாங்கத்தை உருவாக்குவதில் இவர்களுடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததென்பதை அனைவரும் அறிவோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஐ.நா. மனிவுரிமைகள் கூட்டத்தொ…
-
- 0 replies
- 466 views
-
-
சர்வதேச அவதானிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும் நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி தற்போது ஜனாதிபதி சர்வதேசத்திடம் நிதானமான மெதுவான பயணத்துக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டாகும்போது முன்னேற்றத்தை வெ ளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு தீர்க்கமானதாகவே அமையப்போகின்றது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் அமெரிக்கா வந்துள்ள நிலையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய…
-
- 0 replies
- 273 views
-
-
சர்வதேச உறவுகளில் செல்வாக்கு செலுத்தும் பயங்கரவாத, குற்றவியல் செயல்பாடுகள் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் தொடர்ந்து தடைகளை முன்வைக்கின்றன. 2001 ஆம் ஆண்டு 9/11 தாக்குதல்கள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் அரசியல் ஒழுங்குகளை மறுவடிவமைக்க விரும்பும் அரசு சாரா செயல்பாட்டாளர்களின் திறன் மற்றும் அணுகல் பற்றிய சொற்பொழிவுகள் நாடுகடந்த மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை முன்னணியில் வைத்தது. பயங்கரவாத உத்திகள், உந்துதல்கள் மற்றும் நிதியளிப்பு வழிமுறைகள் காலப்போக்கில் மாறி, மோதல் சூழல்களில் வேறுபடுகின்றன. பனிப்போரின் விளைவாக மொஸ்கோ மற்றும் வோஷிங்டன் இரண்டும் மற்ற வல்லரசுகளை…
-
- 0 replies
- 256 views
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம் நீட்டின. தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மேற்குலக நாடுகளின் விருப்பத்துக்குரியவராக விளங்கினார் போன்று தோன்றியது. பொருளாதாரத்தை விக்கிரமசிங்க கையாண்ட முறையைப் பாராட்டி அந்த நாடுகள் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டன. சர்வதேச நாணய நிதியமும் அதேபோன்று அவருக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டது. விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் மேற்குலக நாடுகளின் தலைமையிலான நடவடிக்கைகளுடன் தன்னை அடையாளப்படுத்துவதற்கு விசேட முயற்சிகளை முன்னெடுத்தது…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
தமிழ் சசியின் வலிப்பதிவில் இந்த ஆவணப்படத்தை கண்ணுற்றேன்.புலத்தில் வாழும் ஒவ்வொரு ஈழத் தமிழனும் பாத்து தெளிவு பெற வேண்டிய ஒரு ஆவணம். எவ்வாறு அமெரிக்க ஊடகங்கள் இசுரேலியரினால் கட்டுப் படுத்தப்படுகின்றன என்பதை வெகு நேர்தியாகச் சொல்லி இருகிறார்கள்.எவ்வாறன யுக்திகளை இந்த சர்வதேசம்(மேற்குலக) ஊடகங்கள் பாவித்து செய்திகளை தமது மக்களுக்கு வழங்குகின்றன என்பதை ஆராய்ந்து உள்ளார்கள். கட்டமைவுரீதியாக எவ்வாறு இது நடை பெறுகிறது என்பதையும் செய்திகள் எவ்வாறு மறைக்கப் பட்டும் திரிக்கபட்டும் மக்களுக்கு இசுரேலியரின் சார்பாக வழங்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஆக்கிரமிப்பாளன் என்கின்ற தோற்றத்தை எவ்வாறு மறைத்து பலஸ்தீனையரை பயங்கர வாதிகளாக எவ்வாறு காடுகிறார்கள் என்பதையும் இந்த சர்வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சர்வதேச ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது சாத்தியமா?? இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகின்ற காலத்தில் நடத்தப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் தரப்பின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள், இல்லாது விட்டால் வெள்ளை யானைகளாக உள்ள மாகாண சபைகளை கலைத்து விடுங்கள் என்று கூறியிருக்கின்றார். உண்மையில் மாகாண சபைகள் முறையானது இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் அடிப்படையில் இலங்கையின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே உருவாக்கப்பட்டதாகும். இந்த மாகாண சபைகள் முறையானது, வெறுமனே நிருவாகக் கட்டம…
-
- 0 replies
- 363 views
-
-
சர்வதேச கண்துடைப்பு செல்வரட்னம் சிறிதரன் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டிருந்த ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் இலங்கை தொடர்பான கூட்டத்தில் அரசுக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தத் தீர்மானத்தை ஏனைய சில நாடுகளுடன் முன்னின்று சமர்ப்பித்த அமெரிக்காவும், பிரிட்டனும் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அதற்குரிய சந்தர்ப்பமாகவே 2019 ஆம் ஆண்டு வரையிலான கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றன. இந்தத் தீர்மானத்திற்கு ஐ.நா. மனித உரிமை…
-
- 0 replies
- 394 views
-
-
சர்வதேச காணாமல் போனோர் தினமும் காணாமல் போனோருக்கான அலுவலகமும் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோருக்கான தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இராணுவத்தினராலோ அல்லது பாதுகாப்பு படையினராலோ கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் இரகசிய கைதுகளை தடுக்கவும் அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவுமே இதற்கான நாள் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தின் பின்னணியில் இலத்தீன் அமெரிக்க நாடான கொஸ்டரிக்கா உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வலிந்து காணாமலாக்கப்படுதலை (forced disappearance) ஒரு அரசியல் அடக்கு முறையாக பாவித்த நாடுகளில் முதலிடத்தை இலத்தீன் அமெரிக்…
-
- 0 replies
- 619 views
-
-
இலங்கை நாட்டிலே இழைக்கப்பட்ட அட்டூழிங்கள் குற்றச்செயல்களையிட்டு நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களின் விளைவாக அர்த்தமுள்ள வழக்குகளை நடாத்துவதற்கு வழிவகுக்கும் விதத்திலே, இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசக் குற்றச்செயல்களும் உள்ளடக்கப்படவேண்டும் என நானும் எலியானோர் வெர்மன்ட் என்பவரும் (Eleanor Vermunt) அண்மையிலே பதிப்பிக்கப்பெற்ற கட்டுரையொன்றிலே வாதித்திருந்தோம். ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததுதொட்டு, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் ஆகியவைகள் தொடர்பாகப் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல ஐ.நா. அறிக்கைகளின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் – அவை நிரூபிக்கப்படும் பட்சத்திலே…
-
- 0 replies
- 345 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமா? ஐ.நா மனித உரிமைச்சபையா? உருத்திரகுமாரன் தெளிவுரை 9 Views சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் சாத்தியம் இல்லை. ஜெனீவாவும் விடுபட்டுப் போய்விடும், இதனால் சிறிலங்கா உலக கண்காணிப்பில் வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறுவது தவறான கருத்தென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவை மையப்படுத்தி ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையின் அமர்வுமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ள இவ்வேளையில், சர்வதேச நீதிமன்றமா அல்லது ஐ.நா மனித உரிமைச்சபையா என்ற கேள்விக்கு இடமின்றி இரண்டு தளங்களையும் நாம் கையாளவேண்டும் என அவர் இடித்துரைத்துள்ளார். ஐ.நா மனித உரிமைச…
-
- 0 replies
- 443 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை பட மூலம், PageTamil சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை. ஏன் என்பது வருமாறு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்குத் தொடுனர் (chief prosecutor) என்றொருவர் இருக்கிறார். அவருக்கு சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கொள்ளப்படக் கூடிய – இனப்படுகொலை (genocide), போர்க்குற்றங்கள் (war crimes), மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் (crimes against humanity) மற்றும் வலியத் தீங்கு செய்தல் (crime…
-
- 0 replies
- 433 views
-
-
வருடம் 365நாளும் இனவழிப்பை சந்தித்த இனம் நாங்கள், சர்வதேச சட்டங்களால் நாம் பலவற்றை சாதிக்க முடியும்; சட்டத்தரணி காண்டீபன்
-
- 1 reply
- 641 views
-
-
07 FEB, 2024 | 05:25 PM (ரமிந்து பெரேரா) கடந்த வாரம், தென்னாபிரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பகுதியில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு (ICJ) பரிந்துரைத்ததுடன், இராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலை குற்றத்துக்கு ஒப்பானவை என்று வாதிட்டது. இந்த வழக்கின் வாய்வழியிலான விசாரணைகள் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் ஹேக்கில் நடைபெற்றதுடன், இந்த வழக்கு ஏற்கனவே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. ICJ என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை அமைப்பு என்பதுடன், தென்னாபிரிக்கா இஸ்ரேல் தங்களின் இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற தற்காலிக ஏற்பாட்டை நாடுகிறது. இந்த கட்டத்தில், இனப்படுகொலை உண்மையில் மேற்கொள்ளப்பட்டது என…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும் மனித சமுதாயத்தில் சட்டங்களும் நியதிகளும் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றன. சமதாயக் கட்டுக்கோப்பிற்கும் அமைதியான வளர்ச்சிக்கும் சமுதாய நியதிகளும் கோட்பாடுகளும் உறுதுணையாக விளங்குவதாகச் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நியதிகள் பன்னெடுங்காலமாகப் பலராலும் பரிசோதிக்கப்பட்டும் பயன்படுத்தியும் வந்திருக்கின்றன. எனவே சமுதாயக் கட்டுப்கோப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதனவாகச் சட்டங்கள் உள்ளன. அதுபோல் சர்வதேச அரசியல் நடைமுறைகளிலும் இத்தகைய நியதிகளும் சட்டங்களும் உருவாகின. “சர்வதேச அரங்கில் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டுடனும் தொடர்பில்லாமல் வாழ முடியாது. தொடர்புகள் இருந்தால் தொல்லைகள், மோதல், முரண்பாடுகள் முளைப்பது இயற்கை. இத…
-
- 0 replies
- 4.3k views
-