அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
சுயநிர்ணய உரிமையை நினைவுகூரும் டிசெம்பர் 06 தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:23Comments - 0 ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் வரலாறாகின்றன. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு, வரலாற்றைத் தீர்மானிக்கும் நிகழ்வுகள் நடந்த நாள்கள், முக்கியமானவை. சில நாள்கள், ஏனைய நாள்களைவிட முக்கியமானவை. அந்த நாள்கள் வரலாற்றின் திசைவழியை, அரசியல் சித்தாந்தத்தை, சமூக அசைவியக்கத்தை என, எல்லாவற்றையும் புரட்டிப் போடும் தன்மையுடையவை. உலக அரசியல் வரலாற்றில் அதிகம் பேசப்படா விட்டாலும், இன்றைய தினம் (டிசெம்பர் 06) மிகவும் முக்கியமான தினம். இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று வரலாற்று நிகழ்வுகள், எவ்வாறு உலக அரசியலின் நி…
-
- 0 replies
- 730 views
-
-
மைத்திரியின் பேயாட்டம் - தடுமாறும் மக்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 05 புதன்கிழமை, பி.ப. 12:30 Comments - 0 ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் கேலிக்குள்ளாக்கிவிட்டு, சர்வாதிகாரத்தின் வேர்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். இலங்கை அரசியல் மோசமான தலைவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. நாட்டில் இன ரீதியான மோதல்களைக் கட்டமைத்துக் கொண்டு, வாக்கு அரசியலில் வெற்றிபெற்று, நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய தலைவர்கள் ஏராளம். ஆனால், நாட்டின் முதற்குடிமகனாக சர்வ அதிகாரங்களோடு இருக்கும் ஒருவர், மைத்திரி அளவு…
-
- 0 replies
- 1.1k views
-
-
விரல்களை வெட்டிக்கொண்ட மனிதர்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! மதம் தொடர்பிலான சடங்களுக்காக மனிதர்கள் தங்களது விரல்களை வெட்டிக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பில் சற்று விரிவாக பார்க்கலாம்…… வரலாறுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்கள் மதம் தொடர்பான சடங்கு ஒன்றிற்காக தங்களது விரல்களை வெட்டிக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள குகை ஓவியங்களில் புராதன கால சாயங்களில் தோய்த்து சுவர்களில் பதிக்கபட்டுள்ள கை அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில…
-
- 0 replies
- 548 views
-
-
தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா? Editorial / 2018 டிசெம்பர் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:22 Comments - 0 - ஜெரா தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று செய்கின்றனர்; வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் “கதைகளை” அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புகளின் அடிப்படையில்தான், வடக்கிலும் கிழக்கிலும், நாளாந்தம் பௌத்…
-
- 0 replies
- 1k views
-
-
பிரான்ஸ் அரசியல்: தடுமாறுகிறது ஐரோப்பா Editorial / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, மு.ப. 01:55 Comments - 0 -ஜனகன் முத்துக்குமார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கான ஆதரவு, உள்நாட்டில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் பேரணிகள் மூலம், அவரது கொள்கைகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிர்ப்புகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவது தெரிவிப்பது, தொடர்ச்சியாகவே பிரெஞ்சு ஜனாதிபதிக்குக் கடினமானதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பிரெஞ்சு அரசியல் விவகாரங்களில் பல ஆய்வாளர்கள், ஜனாதிபதி மக்ரோனின் அரசியல் நிலை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “அவர், முன்னைய ஜனாதிபதிகளான ஃபொஷ்வா ஹொலான்டே, நிக்கோலா சார்க்கோசி ஆகியோரைக் காட்டி…
-
- 0 replies
- 710 views
-
-
கணக்கில் எடுக்கப்படாத ஆணைகளும் அபிலாஷைகளும் மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:25 Comments - 0 மக்கள் தங்கள்தங்கள் அபிலாஷைகளின் அடிப்படையில், அரசியல்வாதிகளுக்கு வழங்கிய ஆணையை, பெருந்தேசிய அரசியல் தலைவர்களும் சிறுபான்மை அரசியல்வாதிகளும் மீறி, அல்லது மதிக்காமல் நடக்கின்ற ஒரு போக்கையும் பொறுப்புக்கூறலில் இருந்து, தப்பியோடப் பார்க்கின்ற எத்தனங்களையும் வெளிப்படையாகவே காணக் கூடியதாக இருக்கின்றது. காணி ஒன்றைக் குத்தகைக்கு எடுத்தவர், அதில் என்னவேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்று நினைப்பதைப் போல, ஜனநாயக நாடொன்றினது மக்களின் வாக்குகளையும் அதன் ஊடாக, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற மக்கள் ஆணையையும் தமது தாய்வீட்டுச் …
-
- 0 replies
- 502 views
-
-
குழப்பங்களைத் தீர்ப்பாரா ஜனாதிபதி? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:13 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சி, பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும் கூட, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிடிவாதம், அவர் நாட்டின் தலைவராகச் செய்யப்படுகிறாரா அல்லது, தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஒருவராகச் செயற்படுகின்றாரா என்ற ஐயத்தை எழுப்பி இருக்கிறது. இதன்மூலம், தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் எல்லா வழிகளையும் அடைக்கின்ற ஒருவராகவே அவர் மாறியிருக்கிறார் . நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பலமில்லாத ஒருவரைப் பிரதமராக நியமித்து, குழப்பத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, பெரும்பான்மை …
-
- 0 replies
- 438 views
-
-
மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன் December 2, 2018 கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க முற்பட்டார்கள். கிழக்கில் நடப்பட்ட நினைவுக்கற்களைப் பிடுங்கினார்கள். ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வரலாம் வெள்ளை வான்கள் மறுபடியும் வீதிக்கு வரலாம் என்றவாறாக ஊடகங்கள் மேலெழுந்த ஒருவித அச்ச சூழலில் மாவீரர் நாள் முன்னைய ஆண்டை போல இவ்வாண்டும் அனுஷ்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நாட்டின் முழுக்க…
-
- 0 replies
- 406 views
-
-
கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம் December 1, 2018 வரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை. இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும்…
-
- 0 replies
- 624 views
-
-
பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை ? சாத்திரி முந்தைய நாள் போராளி 28 நிமிடங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை Getty Images Image caption வேலுப்பிள்ளை பிரபாகன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தே; பிபிசியின் கருத்துக்கள் அல்ல.- ஆசிரியர்) இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஏற்பாடாகி கொண்டிருக்கின்றது . பிரபாகர…
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை Ahilan Kadirgamar / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, பி.ப. 04:00 Comments - 0 இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா? அல்லது இருபெரும் கட்சிகளுக்கிடையிலான மோதலா? அல்லது ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான சட்டரீதியான குழப்பமா? நான் இந்த நெருக்கடியை ஒரு வரலாற்று ரீதியிலான அரசியல், பொருளாதார காரணிகளின் விளைவாகப் பார்க்கின்றேன். சோகக்கதையும் கேலிக்கூத்தும் மாக்ஸினுடைய பலவிதமான எழுத்துகள் மத்தியில், அரசியல் சம்பந்தமான மிகவும் முக்கியமான படைப்பாக The Eighteenth Brumaire of Louis Bonaparte (லூயி போனபார்ட்டினுடைய பதினெட்டா…
-
- 0 replies
- 745 views
-
-
அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை! இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின் மூலமாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தற்போது இலங்கையின் அரசியல் நெருக்கடி ஒரு மாதத்தை கடந்து முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது. ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையைக் கலைத்து மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றத்தில் நடந்தே…
-
- 0 replies
- 647 views
-
-
தலைகீழ் மாற்றம் -பி.மாணிக்கவாசகம் November 28, 2018 ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலமே தீர்க்கமானது. தீர்மானிக்க வல்லது. ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆசியாவில் நீண்டகால ஜனநாயகப் பெருமையுடையதாகக் கருதப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன. எண்ணிக்கையில் …
-
- 0 replies
- 489 views
-
-
முட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 01:41Comments - 0 அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில் தள்ளிவிடும் அவலத்தை நிகழ்த்தி விடுவார்கள். குறிப்பாக, ஒரு தசாப்த காலத்துக்கு முன்தொடங்கிய, பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், நாடுகளும் நாடுகளின் கூட்டுகளும் தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தில் நண்பன், எதிரி என்ற வரையறைகள் எல்லாம், மீள்வரையறுத்துள்ள நிலையில், தேசங்களின் தப்பிப்பிழைத்தலே சவாலுக்குள்ளாகி உள்ளது. இதைக் கண்டு, சார்ள்ஸ் டாவின் மட்டும், தனக்குள் சிரித்துக் கொள்வார் …
-
- 1 reply
- 559 views
-
-
‘கிழக்குத் தமிழர்’ என்னும் மாயவலை அதிரதன் / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 12:17 Comments - 0 நாட்டின் ஆளும்மன்றம் அல்லோல கல்லோலமாக இருக்கிறது. ‘யம்பர் அரசியலுக்கும், திருஷ்டி கழிப்புக்கும் என, மிக நல்ல விதமாக வளர்ச்சிகண்டு கொண்டிருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், கிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை ஒருமுகப்படுத்துவது வரவேற்கத்தக்க தொன்று. ஆனால், இவ்வாறு ஒற்றுமைப்படுத்துவோர் எந்தவிதத்திலும் தமது நலன் கருதாத, முற்றிலும் பொது நோக்குக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம் என்ற வாதம் முகிழ்ப்பு பெற்று வருகிறது. தமிழர் அரசியலில் பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் ஒழுங்கில், 197…
-
- 0 replies
- 747 views
-
-
அரசியலமைப்பு, நீதித்துறை, பிரஜைகள் - பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட இப்போதெல்லாம் நாட்டுப் பிரஜைகளில் பலரைப் போன்று எனது மனைவியும் எமது அரசியலமைப்பையும் அதற்கான 19 ஆவது திருத்தத்தையும் அறிந்து விளங்கிக்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவராக மாறியிருக்கிறார். அரசியலமைப்பின் பிரதியொன்றை அவர் என்னிடமிருந்து வாங்கிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். அன்றொரு நாள் ஆபிரஹாம் லிங்கனின் மேற்கோள் வாசகம் ஒன்றைத்தாங்கிய சமூக வலைத்தளப் பதிவொன்றையும் எனக்கு அவர் அனுப்பியிருந்தார். " காங்கிரஸினதும் நீதிமன்றங்களினதும் உரிமைப்படியான எசமானர்களான மக்களாகிய நாம் அரசியலமைப்பை அல்ல, அதைச் சீர்குலைக்கக்கூடிய பேர்வழிகளைத் தூக்கியெறிவோம் " என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. அதேவேளை, …
-
- 0 replies
- 619 views
-
-
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை தன்னாதிக்கம் போன்றவதற்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தான்டி திட்டதிட்டபடி மாவீரர் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர் அமைப்பு ரீதியான ஒழுங்குபடுத்தல்கள் எதுவுமேயின்றி ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழந்த மக்கள் தாமாகவே முன்சென்று நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைகள் ஒதுவும் ஒலிபரப்பக் கூடாது என யாழ் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. …
-
- 0 replies
- 349 views
-
-
சிங்கப்பூரின் சிற்பி என்று வர்ணிக்கப்படுபவர் அந்த நாட்டின் முன்னாள் தலைமை அமைச்சர் லீ குவான் யூ. சுமார் 30 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர். சிங்கப்பூர் என்கிற நாட்டைக் கட்டியெழுப்பியவரே அவர்தான் என்கிறார்கள். தன்னுடைய காலத்திலேயே மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக இருந்த சிங்கப்பூரை முதலாவது உலக நாடுகளில் ஒன்றாக மாற்றிக் காட்டியவர். அதுவும் ஒரே தலைமுறைக் காலத்துக்குள் அதைச் சாத்தியமாக்கிக் காட்டியவர். இலங்கையில் போர் நிறைவுக்கு வந்த சமயத்தில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், ‘‘போரை இலங்கை அரசு வென்றிருந்தாலும் தமிழர்கள் அடங்கிப் போவார்கள் என்று நான் நம்பவில்லை.’’ என்று அவர் சொன்னார். …
-
- 1 reply
- 720 views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
-
- 1 reply
- 779 views
-
-
பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, மு.ப. 01:07 Comments - 0 தேர்தலைப் பிரதானப்படுத்திய அரசியல் கூட்டணிகள், இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில் தோற்றம் பெறுபவை. அங்கு கொள்கை, கோட்பாடுகளுக்கான இடம் என்பது, இரண்டாம் பட்சமானதே. அதனால்தான், முன்னாள் வைரிகளான சந்திரிகாவும் ரணிலும், தமது பொது வைரியான மஹிந்தவை எதிர்கொள்வதற்கான கூட்டணியை, 2014இல் அமைக்க முடிந்தது. இப்போது, மைத்திரியும் மஹிந்தவும், ரணிலை எதிர்கொள்வதற்காகப் புதிய உடன்பாட்டுக்கு வந்திருப்பதும் அதன்போக்கிலானதுதான். அப்படியான நிலையொன்று, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியலிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் …
-
- 0 replies
- 1.6k views
-
-
அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய ஏழு நீதியரசா்கள் நியமிக்கப்பட்டமை எந்த அடிப்படையில்? இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான இலங்கை வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே தாக்கல் செய்திருந்தன. ஆனால் அரசியல் நெருக்கடி விவகாரமாகக் கருதி …
-
- 0 replies
- 881 views
-
-
இன அரசியலில் தமிழ்த் தேசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.. தமிழ்த் தேசியம் தேசிய இனப் பிரச்சினை இன்று தமிழினம் ஈழத்திலும் தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தமிழகத்தில், கவலை கொள்வதாகத் தெரியவில்லை. நம்மால் மக்களிடையே ஓர் எழுச்சியை உருவாக்க முடிந்தால், நமது சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிதாகும். அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை நோக்கமும் அதுபோன்ற ஓர் எழுச்சியை உருவாக்குவதே. அதற்கான நமது சிந்தனைகள் எல்லாம் அடிப்படையில் பகுத்தறிவின் மீது கட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, மக்களுக்கு சிக்கல்களைப் பகுத்தறிவைக் கொண்டு விளக்கிப் …
-
- 0 replies
- 968 views
-
-
ஜே ஆரால் மீண்டெழுந்த ஜப்பான் - என்.சரவணன் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏனைய மேற்கத்தையே நாடுகளுக்கும் இடையில் கடும் போர் நிகழ்ந்து வந்தது. இந்தப் போரில் கிழக்காசிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக கைப்பற்றி வந்தது ஜப்பான். பல நாடுகளின் மீது போர் தொடர்ந்தும் இருந்தது. 1941இல் அமெரிக்காவையும் தாக்கியது. ஐரோப்பாவில் ஜெர்மனை வீழ்த்துவதில் ரஷ்யா பெரும்பங்கு வகித்தது. அது போல ஜப்பானில் 1945 ஓகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கா அணுக்குண்டை போட்டு பாரிய மனிதப் பேரழிவை நடத்தியதுடன் மட்டுமன்றி அந்த நாட்டை பெரும் சேதத்துக்கு உள்ளாக்கி சரணடைய வைத்தது. அத்தோடு இரண…
-
- 0 replies
- 763 views
-
-
கேழ்வியும் பதிலும்..SA Jothi to Jaya Palan கூட்டமைப்புக்கு சொந்தமாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இருக்கிறதா?ஜெயபாலன்..Jaya Palan to SA Jothi ஒரு நாய் யாருக்கு வாலாட்டுகிறது என்பது முக்கியமல்ல நண்பா அது தன் எசமானை காப்பற்றுதா என்பதுதான் முக்கியம். எங்கள் நாயகர்கள் உலகம் முழுக்க வாலாட்டியும் எங்கள் எசமான்கள் இன்னும் கொடுஞ்சிறையில். இனியும் பட முடியாது இத்துயரம்.
-
- 0 replies
- 456 views
-