அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா - இல்லையா என்று கருத்தறிய, பிரித்தானிய மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பு, உலகளாவிய ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கருத்து வாக்கெடுப்பின் முடிவு, உலகத்துக்கே ஏமாற்றத்தை அளித்திருப்பதுடன், உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரித்தானிய மக்களின் முடிவு, பொருளாதார ரீதியாக இலங்கையையும் பெரியளவிலான பாதிப்புக்குள் தள்ளியிருக்கிறது, அதேவேளை, இந்தக் கருத்து வாக்கெடுப்பு, இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும், சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கத்தை இலங்கை எதிர்கொள்ளப் போகிறது, அத்தகைய பாதிப்பில்…
-
- 0 replies
- 498 views
-
-
சம்பந்தன் ஜயாவின் காலம் - யதீந்திரா படம் | Monsoonjournal தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்குப் பின்னர் ஒரு அடைமொழியுடன் நோக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது இராஜவரோதயம் சம்பந்தன் ஒருவரேயாவார். செல்வநாயகம் ‘தந்தை’ என்று விழிக்கப்பட்டது போன்று, சம்பந்தன் ‘ஜயா’ என்று விழிக்கப்படுகின்றார். ஜயாவின் காலத்தில் என்ன நிகழும்? கடந்த அறுபது வருடங்களாக இப்படியொரு கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உலவியவாறே இருக்கிறது. எப்பொழுதுதான் இதற்கொரு முடிவு வரப்போகிறது? இப்படியொரு கேள்வி தொடர்வதற்கான காரணங்களை நாம் மற்றவர்களுக்குள் தேட முடியாது. ஏனெனில், அதற்கான காரணங்கள் வெளியில் இல்லை. தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் சம்பந்தன் குறிப்பி…
-
- 0 replies
- 498 views
-
-
இலங்கையில் கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலம் உயர்கல்வித்துறை முடங்கிக்கிடக்கிறது. பல்கலைக்கழக ஊழியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என்று உயர்கல்வித் துறையினரின் போராட்டங்கள் மற்றும் போர்க்கொடிகளால் நாளுக்குநாள் பிரச்சனைகள் வளர்ந்துகொண்டு போகின்ற நிலையில் அரசாங்கமும் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தபாடில்லை. போராட்டங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களை மூடியும் பார்த்தது. நீதிமன்றங்களை நாடி மாணவர் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க தடையுத்தரவுகளும் பெற்றது. ஆனால் பிரச்சனை முடிந்தபாடில்லை. விடைத்தாள் மதிப்பீடு [size=3][size=4]இப்போது பள்ளிக்கூட படிப்பை முடித்துக்கொண்டு பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல காத்திர…
-
- 1 reply
- 498 views
-
-
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம் February 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் நாம் அறியவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறைந்த பிறகு அவரது உடலை பேணிப்பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கடந்தவாரம் விடுத்திருக்கிறார். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவின் மரபை எதிர்காலச் சந்ததிகள் கௌர…
-
- 1 reply
- 498 views
- 1 follower
-
-
மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன், கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தச் சந்திப்புகளில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை, நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், இந்தக் கலந்…
-
- 0 replies
- 498 views
-
-
விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் காரை துர்க்கா / 2019 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:54 Comments - 0 தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார். அப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார். வடக்கில் இராணுவக் கட்…
-
- 0 replies
- 498 views
-
-
புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா? ரணில் ஜனாதிபதியான பின்னர் ஏற்படும் மாற்றங்கள் — ஈழத்தமிழர்கள் என்று நேரடியாகவே விழித்துத் தமிழில் கூறி வரும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எவரும் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது Eelam Tamils என்று சொல்வதில்லை– -அ.நிக்ஸன்- புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமை…
-
- 1 reply
- 498 views
-
-
கொரோனாவிற்கு பின்னரான அரசியல் போக்கும் இலங்கைத் தீவும் - யதீந்திரா கொரேனாவிற்கு பின்னரான அரசியலென்பது, ஒரு உலகளாவிய போக்கு. புதிய உலக ஒழுங்கு தொடர்பான எதிர்வுகூறல்களே மேற்படி, உலகளாவிய போக்கின் அடிப்படையாக இருக்கின்றது. இந்த எதிர்வு கூறல்கள் மூன்று விடயதானங்களை முன்னிலைப்படுத்துகின்றது. ஒன்று, இதுவரை உலகில், மேலாதிக்கம்பெற்றிருந்த உலமயமாக்கல் சூழல் கேள்விக்குள்ளாகின்றது. இரண்டு, முதலில் நாங்கள் (முதலில் எங்களின் நாடு ) என்றவாறான தேசிவாத எழுச்சி. மூன்றாவது, உலக புவிசார் அரசியலில் சீனாவின் எழுச்சி. சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் முன்னணி சிந்தனையாளர்கள் மத்தியில், இது தொடர்பில் பலவாறான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. …
-
- 0 replies
- 498 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வங்கி, இத்தேர்தலில் மிகவும் முக்கியமானதொரு விடயமாகக் கருதப்படுகிறது. சுமார் நான்கு இலட்சம் தமிழர்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேச முனைவதாக, அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அமைச்சர் விமல் வீரவன்சவின் காழ்ப்புணர்வை காட்டுவதாக மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட…
-
- 0 replies
- 498 views
-
-
அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள் – நிலாந்தன் September 5, 2020 அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்தலின் பின்னணியில் தேர்தலுக்குப் பின் அண்மையில் அந்தச் சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டது. தேர்தலுக்கு முன் கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் வாக்களிக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்று பகிரங்…
-
- 0 replies
- 498 views
-
-
அபாய சங்கு முகம்மது தம்பி மரைக்கார் மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளின் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பௌத்தர்கள் யாருமில்லாத தமது பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை, அங்குள்ள மக்கள்தான் பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள். ஆனால், அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, அதுகுறித்து அக்கறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. …
-
- 1 reply
- 498 views
-
-
கூட்டுத்தலைமையே தேவை சிவசக்தி ஆனந்தன் செவ்வி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும் வியடத்தில் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளும், தலைவர்களும் ஏனைய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் கூட்டுத்தலைமை உள்ளிட்ட கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கேள்வி:- தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டில் நீடித்துக்கொண்டிருந்த தமிழ் தலைவர்கள் திடீரென 13ஐ நோக்கி செல்ல காரணம் என்ன? பதில்:- தமிழ் தலைவர்கள் 13ஐ நோக்கி சென்றார்கள் என்ற கருத்து முற்றிலும் தவறானது குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 13ஐ ந…
-
- 0 replies
- 498 views
-
-
ஆட விரும்பாதவனுக்கு நிலம் கோணல் இந்தியா கொடுத்த வாக்கை மீறக் கூடாது என அண்மையில் சம்பந்தன் அழுத்தமாகக் கூறியிருந்தார் அல்லவா? அது சூரியநாராயணனின் தளம்பல் கருத்துகளுக்குப் பதிலாகவே அமைந்திருந்தது. இதைத்தான் நான் சென்ற கட்டுரையில் இப்போதைக்கு 13 ஆம் ஷரத்து விடயத்தில் ஓய்ந்து இருந்தபோதும் அதை இப்போதும் இந்தியா உயிர்ப்பிலேயே வைத்திருக்கிறது. அதன் உயிர்ப்பை அழிக்க இடமளிக்காதிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன். சம்பந்தனின் கருத்தை எதிர்த்து பேரினவாதத்தின் பிதா மகன்மாரில் ஒருவரான குணதாச அமரசேகர என்ன கூறுகிறார் தெரியுமா? 13 ஆம் ஷரத்தை வலுப்படுத்தி இந்தியாவை நாடி, சம்பந்தன் ஈழத்தை…
-
- 0 replies
- 498 views
-
-
‘வெள்ளை’ இனவாதத்துக்கு முடிவு வருமா? இனவாதம் தொடர்பாகவும் மதவாதம் தொடர்பாகவும் பாகுபாடுகள் தொடர்பாகவும், உலகுக்கெல்லாம் பாடமெடுக்கும் ஐக்கிய அமெரிக்கா, அண்மைக்காலத்தில் சிறிது அடக்கி வாசிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நாட்டில், அண்மைக்காலத்தில் பகிரங்கமாகவே ஆரம்பித்திருக்கும் இனவாதங்களும் மதவாதங்களும் பாகுபாடுகளும் தான், இதற்கான காரணங்களாக இருக்கின்றன. அதற்காக, போர்க்குற்றம் தொடர்பாகவும் பாகுபாடு தொடர்பாகவும், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஐ.அமெரிக்கா பாடமெடுத்த போது, அது தேனும் பாலும் ஓடும் நாடாகக் காணப்பட்டதா என்றால், இல்லை. ஈராக் போர் என்ற மிக மோசமான, கொடூரமான முடிவை எடுத்து, அதன் ம…
-
- 0 replies
- 498 views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா? பிரிவதா? என்பதை முடிவெடுக்க இங்கிலாந்தில் நேற்று நடந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடும் மழையிலும் 72 வீத மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதில் 52 வீதத்தினர் பிரிவுக்கும் 48 வீதத்தினர் இணைவுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆளும்கட்சிப் பிரதமரின் தலைமையை நோக்கி எழுந்த அவரது கட்சிக்காரரின் அழுத்தம் காரணமாகப் பிரதமர் டேவிட் கமரூன் இராஜினாமா செய்திருக்கிறார். லேபர் கட்சித் தலைவருக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலை அக்கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளால் தொடக்கி விடப்பட்டிருக்கிறது. 1 அரசியல் அதிகாரத்தின் தோல்வி இங்கிலாந்தின் மூன்று பெரும் கட்ச…
-
- 0 replies
- 498 views
-
-
மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தமிழர்களுக்கு நன்மை தருமா? - நிலாந்தன் 06 ஜூலை 2014 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. சாதாரண தமிழ்ப் பொதுசனம் நம்புவது போல இது அதன் பரந்தகன்ற பொருளில் ஒரு சக்திமிக்க முழுமையான அனைத்துலக விசாரணைக் குழு அல்ல. ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியில் காட்டிக் கொள்வதைப் போல புறக்கணிக்கத்தக்கதும் அல்ல. இவை இரண்டுக்கும் இடையில் தானிருக்கிறது அதன் முக்கியத்துவம். அரசாங்கம் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது. நாட்டுக்குள்ளிருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பவர்களுக்குக் குறிப்பாகச் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதும், ஏற்கனவே, அரச தரப்புப் பிரதானிகளால் நேரடியாகவும் மறைமுக…
-
- 0 replies
- 498 views
-
-
நிலப்பிரச்சினையும் எச்சரிக்கை மணியும் - கருணாகரன் “2020இல் இலங்கைத் திருநாடு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக. “2020இல் இலங்கை என்று ஒரு நாடு, அநேகமா இருக்காது. இந்தக் குட்டி நாடு, இன்னும் குட்டி குட்டியாப் பிரிஞ்சு, ஒவ்வொரு துண்டிலும் சீனாவுடையதும் அமெரிக்காவுடையதும் ரஷ்யாவுடையதும் இந்தியாவினுடையதும் கொடிகள் பறந்து கொண்டிருக்கும். “இலங்கைக் கொடி எங்கும் பறக்காது. அப்படிப் பறந்தாலும், அது ஏதோ ஓர் ஒதுக்குப் புறத்தில்தான் அசைந்து கொண்டிருக்கும். பறக்கும் திராணியெல்லாம் அதற்கிருக்காது. இங்கே உள்ளவர்கள் எல்லாம், ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் காரில் போகவும் விசா எடுக்கவும் எல்லையில் கடவு…
-
- 0 replies
- 498 views
-
-
அபாய அறிவிப்பு! பி.மாணிக்கவாசகம் பிராந்திய சுயாட்சியின் கீழ் சமஷ்டி முறையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதே, ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழர் தரப்பு அரசியலின் அடிப்படை நோக்கமாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அல்லது அந்த இலக்கை அடைவதற்கு அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது கேள்விக்கு உரியதாகியிருக்கின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்…
-
- 0 replies
- 498 views
-
-
மறக்கப்படும் தீர்வு என்.கே. அஷோக்பரன் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியலில் சில விடயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாக இருக்கும். சமகால அரசியல் என்பது, அந்த விடயங்களைச் சுற்றியே கட்டமைக்கப்படும். அரசியல் வாதப்பிரதிவாதங்கள் எல்லாம், அது தொடர்பாகவே அமையும். அந்த விடயங்களே அரசியல்வாதிகளின் மூலதனமுமாகும். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், 1956 ‘தனிச்சிங்களம்’ சட்டத்தின் பின்னரிலிருந்து, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு’ என்பது, மிக முக்கியமானதும் மய்யமானதுமான பேசுபொருளாக இருந்து வருகிறது. இலங்கை அரசியல் என்பது, அன்றிலிருந்து இனப்பிரச்சினையைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிக…
-
- 0 replies
- 498 views
-
-
வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஜனநாயகமும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan வாரிசு அரசியல் என்பதை, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழையடி வாழையாக அரசியல் கட்சிகளின் தலைமை உட்பட்ட உயர்பதவிகளையும் அதன்வாயிலாக நாட்டின் ஆட்சியில் உயர்பதவிகளையும், தம்மகத்தே கொண்டுள்ளமை என்று வரையறுக்கலாம். சுருங்கக்கூறின், தகப்பன், தகப்பனுக்குப் பின்னர் மகன்; மகனுக்குப் பின்னர் பேரன் என, வாரிசுகள் அந்தப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகும். இதில் நேரடி வாரிசு அல்லாது, நெருங்கிய உறவுகள் அந்தப் பதவிகளை அடுத்ததாகப் பெற்றுக்கொள்வதையும் வாரிசு அரசியல் எனலாம். குடும்ப அரசியல் அல்லது குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை, ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார…
-
- 0 replies
- 497 views
-
-
கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009இல் அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கினார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்பதை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு ஒவ்வாத அரசுகளை அயோக்கிய …
-
- 0 replies
- 497 views
-
-
மீண்டும் எழுந்துள்ள படைக்குறைப்பு கோரிக்கை இலங்கையில் மேற்கொண்ட பத்து நாட்கள் பயணத்தின் முடிவில் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வடக்கில் படைக்குறைப்பு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா. போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கில் அதிகளவு படையினர் நிலை கொண்டிருப்பதையும், அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் அவர் தனது பயணத்தின் போது நேரடியாக கண்டிருக்கிறார். பல்வேறு சந்திப்புகளின் மூலம் கேட்டறிந்து கொண்டிருக்கிறார். இத…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்? லக்ஸ்மன் கொரோனா வைரஸின் பேகமான பரவல் அச்சம் இருந்து கொண்டிருக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குத் தாக்குதல் அச்சுறுத்தல், நாரேகஹம்பிட்டி வைத்தியசாலைக் கழிப்பறைக்குள் கைக்குண்டு மீட்பு, யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் இரண்டு வெடிகுண்டுகள் மீட்பு, திருகோணமலை, மூதூரில் இரண்டு கிளைமோர்கள் மீட்பு என்றெல்லாம் செய்திகள் கடந்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமிருக்கின்றன. நேரடியாகச் சொன்னால், கடந்த 13அம் திகதி முதல் சர்வதேச ரிதியில் எழுந்திருக்கும் அழுத்தங்கள் இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வடிவத்த…
-
- 0 replies
- 497 views
-
-
“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன? அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் கேட்டார். அரசியல் உரையாடலை நிகழ்த்த விரும்பி அந்த நண்பர் இது தொடர்பாக மேலும் சில கேள்விகளை எழுப்பினார். “தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாகப் பலவீனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதனுடைய அடுத்த கட்டம் என்பது அதற்கிருக்குமா என்பதே கேள்விதான். ஏனென்றால், பலவீனங்களைத் திருத்திக் கொள்ளாமலிருக்கும் எதுவும் பலமாகவோ, உறுதியாகவோ, தொடர்ச்சியாகவே இருக்க முடியாது. பலவீனமாக இருக்கும் எதுவும் வெற்றியை நோக்கி நகரவும் இயலாது. ஆகவே, தமிழ்த்தேசியம் என்பதற்கு அடுத்த கட்டம் என்ற ஒன்றிருக்குமா? என்பதே கேள்விதான். தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவது எதிர்த்தரப்பாகிய ச…
-
- 1 reply
- 497 views
-
-
கூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:24 ஒக்டோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை உயர்நீதிமன்றம் மைத்திரியினதும், அவரது சட்ட ஆலோசகர்களினதும் முகத்தில் அறைந்து, முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். 52 நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம், அரசியல்வாதிகளை மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களை, நோக்கர்களை, எல்லாவற்றையும் தாண்டி நாட்டு மக்களைப் பெரும் அழுத்தத்துக்குள் தள்ளியிருந்தது. அதனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் ரணிலின் பதவியேற்பையும் நாடு பெருமளவுக்குக் கொண்டாடியது. இலங்கையின் ஜனநாயகமும் நீதித்துறையின் சுயாதீனமும் காப்பாற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்களும்…
-
- 0 replies
- 497 views
-