அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இலங்கையின் ஜனாதிபதி ரணில் இந்த வருட இலங்கையின் சுதந்திர விழாவில் ஈழத் தமிழருக்கு தீர்வு என்று சொன்னார். ஒரு சிறு நகர்வு கூட நகர்ந்ததாய் இல்லை. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் இருக்கும் போதும், வாய் கிழிய பாராளுமண்றத்தில் தீர்வை தாருங்கள் என்று கத்திய போதும், எதுகும் நடக்காத போதும் எதையுமே அவர்களை காதில் போட்டுக் கொள்ளாத போதும், அவர்களிடம் ஏதும் பேசாத போதும், இன்னுமே தொலைத்து போனவர்களுக்கான ஒரு தீர்வை வழங்காத போதும், புத்த சிலைகளை எல்லாம் போகும் இடம் எல்லாம் தமிழர் பூமியில் புதுசாய் நட்டு வைத்தும் எந்த வித நல்லிணக்க செயல்பாடோ Act of reconciliation இது வரை ஏதும் செய்யாமல், தமிழர் தீர்வில் எத்தனையோ ஆணையகங்களின் சிபாரிசுகளை ஏற்க மறுத்தும், தமிழர் மனங்களை வெல்…
-
- 0 replies
- 408 views
-
-
கொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 23 ராஜபக்ஷர்களின் இன்றைய அரசியல் என்பது, மிகத் தௌிவான சிங்கள-பௌத்த இனத் தேசியவாதத்தை, பெருந்திரள்வாத (populism) வாகனத்தில் ஏற்றிக்கொண்டுள்ள பெரும்பான்மையினத் தேசிய பெருந்திரள்வாத அரசியலாகும். ஏதோவோர் அடிப்படையில், தம்மை ஒரு மக்களாக அடையாளங்காணும் மனிதக் கூட்டமொன்றைத் தம்மில் வேறுபட்ட ‘மற்றையவர்களுக்கு’ எதிராக நிறுத்தும் சித்தாந்தமே, பெருந்திரள்வாதமாகும். பெருந்திரள்வாதத்தை வரையறுக்க முயலும் அல்பெடட்ஸியும் மக்டொன்னெலும், பெருந்திரள்வாதச் சிந்தாந்தம் என்பது, ஒன்றுபட்ட தன்மைகளையுடைய ஒரு மக்கள் கூட்டத்தை, அந்த இறைமையுள்ள மக்கள் கூட்டத்தின் அதிகாரங்கள், விழுமியங்கள், சௌபாக்…
-
- 0 replies
- 408 views
-
-
அரசியல் கைதிகளின் விவகாரமும் கூட்டமைப்பின் படுதோல்வியும் யதீந்திரா அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை இன்றுவரை காண முடியவில்லை. அரசியல் கைதிகள் சிலர் சாகும் வரை உணவுதவிர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 அரசியல் கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதான செய்தி வெளியாகியிருக்கிறது. இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் கூட பல தடவைகள் இ;வ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அப்போது என்ன நடைபெற்றதோ அதுவே இப்போதும் நடைபெறுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆங்காங்கே எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 408 views
-
-
ஜெனிவாவை நோக்கித் தமிழ்த் தரப்பை ஒன்றிணைக்க முடியுமா? நிலாந்தன்… January 3, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பின் நோக்கம் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கித் தமிழ்த் தரப்பு எப்படி ஒரே அணியாக அணுகலாம் என்பதற்குரிய வழிவகைகளை கண்டுபிடிப்பதே. திருமலை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரான நோயல் இமானுவேல் அடிகளார் ;மதகுருக்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவர்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அழைப்பு…
-
- 0 replies
- 408 views
-
-
அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை ப…
-
- 0 replies
- 408 views
-
-
‘ஒருமித்த குரலில் பேசட்டாம்; ஒன்னா மண்ணா போகட்டாம்’ ஒருமித்த கருத்தோடு, ஒரே பயணத்தில் இணைய எல்லோரையும் அழைக்கிறார்கள். இப்போது கொஞ்சக் காலமாய் ஓரே குரலில் பேச வேண்டியதன் அவசியம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழர்களின் மகுடவாசகம், ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற அலப்பறைகள் வேறு. இதில் பிரதானமாய்க் கேட்க வேண்டிய வினா, எந்தத் தமிழர்களின் மகுடவாசகம் அது என்பதுதான்; கோவிலுக்குள் நுழைய இயலாமல் வெளியே நிற்கின்ற தமிழன், தோட்டக்காட்டான் என்று புறக்கணிக்கப்படும் தமிழன், மட்டக்களப்பான் என்று ஒதுக்கப்படும் தமிழன் ஆக…
-
- 0 replies
- 408 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியின் தென்கிழக்காசிய பயணம் அமெரிக்க - சீன உறவுகள் மேலும் வலுவடையுமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 12 நாட்கள் அரச பயணம் ஒன்றினை மேற்கொண்டு தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்குப் புறப்பட்டுள்ளார். இவரின் பயணம் ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஆசியன் மாநாட்டிற்கும் சமூகமளிப்பதாகும். வியட்நாமில் ஏ.பி.ஈ.சி. மாநாடு11-, 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் வியட்நாமில் விஜயத்தை முடித்துவிட்டு பிலிப்பைன்ஸ் நோக்க…
-
- 0 replies
- 408 views
-
-
காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள். அப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும்…
-
- 0 replies
- 407 views
-
-
தேசத்தின் வீழ்ச்சி – கேடு விளைவிக்கும் ஆட்சிக்கு மாற்றிடு எங்கே உள்ளது? ரங்க ஜெயசூரிய ——————————— தேசமொன்றின் பாரியதொரு அழிவில் ஒப்பந்தம் ஒன்று உள்ளதென்று ஆடம் ஸ்மித் ஒருமுறை கூறியிருந்தார் – அதாவது நவீன அரசுகள் வெளிப்புற மற்றும் உள்மட்ட அழுத்தத்தைத் சிறப்பாக கையாளும் அளவுக்கு உள்ளார்ந்த வலிமையானவை. ஒரு தேசத்தை சிதறடிக்க கொள்கை வகுப்பாளர்களால் தீவிரமானதும் தொடர்ச்சியானதுமான குழப்பங்கள் தேவை. கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாட்டை எப்படி வேகமாக அழிக்க முடியும் என்பதை காட்டியுள்ளார். இந்த எண்களைக் கவனியுங்கள். 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3600 அமெரிக்க டொ…
-
- 1 reply
- 407 views
-
-
கூட்டு அரசினை வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின் தலையாய எண்ணம் ‘‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சகல பிரிப்புக்களையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது வாழ்நாள் பூராவும் நான் அதற்கு எதிராகப் போராடினேன். தற்போது மட்டுமன்றி எனது உயிர் பிரியும் வரை அதற்காகப் போராடுவேன்’’ என நெல்சன் மண்டேலா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகள் காலமாக ஐரோப்பாவின் குடியேற்ற நாடாகஇருந்த தென்னாபிரிக்க நாட்டில் நிலவிய அடிமைத்தன நிறபேதத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய நெ…
-
- 0 replies
- 407 views
-
-
ட்ரம்பின் ஆசியப் பயணம்: போருக்கு பிச்சையெடுத்தல் பயணங்கள் பலவிதம்; அரசியல் பயணங்கள் அதில் ஒருவிதம். அரசியல் பயணங்களின் நோக்கங்கள் பலவிதம்; அதில் பிச்சைகேட்கும் பயணங்கள் ஒருவிதம். இராஜதந்திரம், அனைத்துக்கும் அதற்குப் பொருத்தமான, அழகான சொல்லாடல்களைக் கொண்டுள்ளது. பிச்சையெடுத்தலை ‘உறவைப் பலப்படுத்தல்’ என்றும் உதவி கேட்டலை ‘தார்மீக உதவி’ என்றும் கட்டளைக்குப் பணிந்து கூட்டுச்சேருதலை ‘மூலோபாயக் கூட்டணி’ என்றும் இன்னும் பலவாறும் அழைப்பதற்கு இராஜதந்திரச் சொல்லாடல்களும் அயலுறவுக் கொள்கைக் கூற்றுகளும் வழியமைக்கின்றன. இருந்தபோதும், நேரடியான மயக்கங்களற்ற மொழியில் இவற்றை விளங்குவது, இச்சொற்களுக்கான உண்மையான பொருளை வ…
-
- 0 replies
- 407 views
-
-
கவனத்தில் கொள்ளப்படாத பொறுப்புக்கூறல் கடப்பாடு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றிய போது, பொறுப்புக்கூறலுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி எந்தத் தகவலையுமே வெளியிடவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் நிறைவேற்றப்பட்ட அத்தனை தீர்மானங்களிலும், பிரதான அம்சம் பொறுப்புக்கூறல் தான். ஆனாலும் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் எத்தகைய முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்ற விளக்கத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொடுக்கத் தவறியுள்ளார். ஜெனீவா தீ…
-
- 0 replies
- 407 views
-
-
கலப்பு நீதிப்பொறிமுறையை நிறுவுதல்; நிலைப்பாட்டை கொள்கை அறிக்கையாக வௌியிடவும்! படம் | The Wall Street Journal பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த 23 பொது அமைப்புக்கள் மற்றும் 121 சிங்கள, தமிழ், முஸ்லிம் செயற்பாட்டாளர்களால் நேற்று அறிக்கையொன்று வௌியிடப்பட்டது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. --------------------------- 2015ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் ஏகோபித்த சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாப் பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை …
-
- 0 replies
- 407 views
-
-
புதிய அரசியல் அணிசேருகைகள் August 28, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் —- கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதே போன்றே அவற்றுக்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை. அண்மையாநாட்களாக அரசியல் கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் அண்மைய எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்த நிலையாக இருக்கும்போது சில முக்கிய எதிரணி கட்சிகளின் கூட்டணி அமைக்கு…
-
- 0 replies
- 407 views
-
-
Published By: VISHNU 25 APR, 2025 | 09:43 PM டி. பி.எஸ். ஜெயராஜ் " சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இபோவில் பிறந்தார்.... மலேசியாவில் மிகவும் தூய்மையான நகரம் என்று பெயரெடுத்தது இபோ. அதனால்தான் போலும் செல்வநாயகத்தின் வாழ்வு சமகால அரசியலில் அறியப்படாத ஒரு தூய்மையைக் குறித்து நின்றது." -- எஸ். ஜே.வி. செல்வநாயகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது 1977 செப்டெம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி இவ்வாறு கூறினார். அந்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றிய அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன, " செல்வநாயகம் உங்களை கைவிட்டு விடக்கூடியவர் அல்லது ஏமாற்றிவிடக்கூடியவர் என்று கூறிய ஒருவரை எனது சமூகத்திலோ அல்லது…
-
-
- 4 replies
- 407 views
- 1 follower
-
-
மக்களின் பாதிப்பும் இனவாத அரசியலும் பி.மாணிக்கவாசகம் எதையும் இனவாத அரசியலாக்குவது, எங்கேயும் அரசியல் செய்வது என்பது இந்த நாட்டின் ஒரு தீவிரமான போக்காகும். ஆழ்ந்து நோக்கினால் மாத்திரமே இதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆழ்ந்து நோக்காத வரையில் நாட்டுக்குக் கேடு விளைவிக்கின்ற இந்த இனவாத அரசியல் போக்கின் உண்மைத் தன்மையை இலகுவில் கண்டு கொள்ள முடியாது. "எதிலும் அரசியல், எங்கேயும் அரசியல்" என்று இந்தப் பத்தியில் இதற்கு முன்னர் நாட்டின் அரசியல் போக்கு குறித்து எழுதப்பட்டிருந்தமை பலருக்கும் நினைவிருக்கலாம். அதனை இன்னும் துலாம்பரமாக எடுத்துரைக்கும் வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்ப…
-
- 0 replies
- 407 views
-
-
Published By: VISHNU 11 JUN, 2023 | 04:55 PM ஹரிகரன் “சிங்களத் தலைமைகளின் ஊடாக இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத போது, தமிழ் தலைமைகளை வளைத்துப் போட்டு, தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, காரியம் சாதித்துக் கொண்டது இந்தியா” வடக்கு, கிழக்கில் பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால், இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் உதவியைக் கோரப் போவதாகக் கூறியிருக்கிறார், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன். ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான அவரது இந்தக் கருத்து, பரவலாக கவனிக்கப்பட்ட ஒன்று. அதேசெய்தியில், பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார். …
-
- 1 reply
- 407 views
- 1 follower
-
-
விடை தேட வேண்டிய வேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை (தேர்தல் விஞ்ஞாபனம்) தயாரிப்பதற்கு அவசியமான தேர்தல் முன்கள நிலைமை இன்னும் கனியவில்லை. ஆனால் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர்களும், வேட்பாளர்களாவதற்குத் தயாராகி வருபவர்களும் தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாக்குறுதிகளில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது குறித்து தெளிவான உறுதியான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை. அதுகுறித்து அவர்கள் தமது அதிகாரபூர்வமான தேர்தல் உறுதிமொழிகள் தொடர்பான அறிக்கையில் தெளிவாகக் கூறுவதற்காகக் காத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. …
-
- 0 replies
- 407 views
-
-
கட்டுரை ஆசியரின் இணக்கத்துடன் திருத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் செயற்பாடுகளினால் 24 உறுப்பினர்கள் கடுமையான விரக்த்தி மனநிலையில்? உள்ளக ஜனநாயகம் இன்மையால் பரிதவிக்கும் ஏனைய கட்சிகள்- சரியான தலைமை இல்லை என குற்றம் சுமத்தியபோதும் அமைதிகாத்த சம்பந்தன். 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் சர்வதேசத்தை பேச வைத்தது. ஆனால் இன்று? -அ.நிக்ஸன்- தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது முக்கியத்துவதைதை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளையும் அரவனைத்துச் செல்ல முடியாத சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தாம் நினைத்தையே செயற்படுத்தி வரு…
-
- 0 replies
- 407 views
-
-
வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் அரசியல் January 12, 2016 Photo: VATICAN NEWS ‘ஹெரோயினின் அரசியல்: பூகோள போதைப்பொருள் வர்த்தகத்தில் சி.ஐ.ஏயின் உடந்தை ஆப்கானிஸ்தான், தென் கிழக்காசியா, மத்திய அமெரிக்கா, கொலம்பியா’ என்ற நூல் அல்பிரட் W.மக்கோய் அவர்களால் திருத்திய பதிப்பாக 2005இல் வெளிவந்தது. இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் வடக்கு – கிழக்கில் இலங்கை அரசு பன்முக போர் முனையை விரிவாக்கியது. நில ஆக்கிரமிப்பு, சிங்கள – பௌத்த மயமாக்கம், இராணுவ மயமாக்கம், வரலாற்றியல் திரிபு இன்னும் பிற. அவற்றில் மிக முக்கியமான புதிய போர்முனைக்களமாக போதைப் பொருள் மீதான போர் முக்கிய பேசு பொருளாக மாறியது. போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் பூதாகரமான விளைவாக வெளிவந்த போது, அதனை குற…
-
- 0 replies
- 407 views
-
-
தாயின் பசி – நிலாந்தன்! March 14, 2021 “ஐநா எனப்படுவது எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே இல்லாத அரசியல் நலன்களின் செல்வாக்குக்கு உள்ளாகிறது. அது ஐநாவை அமைப்பு ரீதியாக ஊழல் மிகுந்தது ஆக்கிவிட்டது. நான் நம்புகிறேன் நாங்கள் ஐநாவை மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றவேண்டும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஒன்றாக அல்ல. எனது படம் ஆகிய Quo Vadis Aida ஐநாவின் முடிவுகளின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதியான நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்ப உதவும் என்று நான் …
-
- 0 replies
- 407 views
-
-
சயனைட் குப்பி போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கு வழிகோலிய நாள் ஜூன் 5 ஜூன் 5 ஈழத்தமிழினத்தின் அரசியல் போராட்ட வரலாற்றில் பல பதிவுகளைக் கொண்ட நாளாகும். ஜூன் 5 தான் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய நாளாகும். ஆயுதப் போராட்ட காலத்திலும் பல சாதனைகளை வெற்றிச் சமர்களைக் கண்ட நாளாக ஜூன் 5 திகழ்கின்றது. ஆயுதப் போராட்டம் எழுச்சி பெறவும் சயனைட் என்கின்ற கொடிய நஞ்சு போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கும் இந்த நாள் தான் வழிகோலியது என்பதில் மிகையில்லை. மலையகத்தில் வாழ்ந்த மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் ஜக்கிய தேசியக் கட்சி 1948 ல் பறித்து மக்களை நாடற்றவர்களாக்கியதுடன் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உறுப்பினர் எண்ணிக்கையையும் குறைத்தது. இந் நேரத்தில் தான் தந்தை செல்வா '…
-
- 0 replies
- 407 views
-
-
-
அரசியலமைப்பு திருத்தத்தின் பயன் யாருக்கு ? By NANTHINI 31 OCT, 2022 | 02:48 PM (இராஜதுரை ஹஷான்) ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர ஏனைய சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்திய அரசியலமைப்பின் இரண்டாம் குடியரசு யாப்பு 45 வயதை அண்மித்துள்ள நிலையில், இதுவரை 21 தடவைகள் சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியலமைப்பை திருத்தம் செய்கின்றமை 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை காண முடிகிறது. பொருளாதார ரீதியில் ஸ்தீரமடைந்துள்ள நாடுகள் அரசியல் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட…
-
- 3 replies
- 407 views
- 1 follower
-
-
எழுக தமிழ் காலத்தின் கட்டாயமா; அரசியல் உட்பூசலா? கடந்த 24ஆம் திகதி நடந்தேறிய எழுக தமிழ் பேரணியானது மீண்டும் ஒருமுறை ஒரு உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட பேரணியாக காணப்பட்டாலும், இந்தப் பேரணியின் நோக்கமும் இந்தப் பேரணியின் நிறைவில் உரையாற்றியவர்களின் உரைகளையும் உற்று நோக்குகின்ற போது, இந்தப் பேரணியானது உண்மையிலேயே மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முன்னெடுக்கப்பட்ட ஒன்றா? அல்லது தமிழரசுக் கட்சிக்கு இணையாக ஒரு சக்தி உருவாக்குகின்றது என்பதை வெளிக் கொணர முன்னெடுக்கப்பட்ட ஒன்றா? என்பதில் ஒரு நியாயமான சந்தேகம் உள்ளது. ஏனெனில் பேரவையின் இணைத்தலைவர் என்ற வகையில் முதலமைச்சர் விக்கினேஸ் வரன் தனது உரையின் ஆரம்பத்திலேயே,…
-
- 0 replies
- 407 views
-