அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கைகொடுக்கத் தயங்குவது நியாயமா? DEC 14, 2015 சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணா வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. அதேவேளை, இன்னும் சிலரின் மனங்களில் உள்ள வக்கிரங்களையும் இந்தப் பெருந்துயர் வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறவுமில்லை. சில மணிநேரத்துக்குள் கொட்டித் தீர்த்த பெருமழையின் பாதிப்பு இலட்சக்கணக்கான மக்களை சூனிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த மழைக்கான காரணம் என்ன, இந்தப் பேரழிவுக்கான பொறுப்பு யார், ஏனிந்த அழிவை எதிர்கொள்ள நேரிட்டது என்று எல்லா ஊடகங்களிலும் ஆய்வுகள் நடக்கின்றன, விவாதங்கள் தொடர்கின்றன. அவரவர் அறி…
-
- 0 replies
- 689 views
-
-
வாழைப்பழ யுத்தம்! வாழைப்பழம் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு விஷயம் வாழைப்பழ குடியரசு என்ற பிரயோகம். அதாவது, பனானா ரிபப்ளிக் எனப்படும் இது எதைக் குறிக்கிறது? பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் பொம்மை அரசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் வாழைப்பழ யுத்தத்தின் கதை. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் உள்ள நாடுகளின் வாழைப்பழ சந்தையை ஏகபோகமாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா உருவாக்கிவைத்த பொம்மை அரசுகளையே, வாழைப்பழ குடியரசு என்று அழைக்கின்றனர். இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் ஓ.ஹென்றி. ஹோண்டுரஸ் நாட்டின் பொம்மை அரசைக் குறிக்க அவர் வாழைப்பழக் குடியரசு என்னும் பதத்தைப் பயன்படுத்தி…
-
- 0 replies
- 2.2k views
-
-
நிலைமாறுகால நீதி: நான் ஊமையாய்ப் போன கனங்கள் 1 இலங்கைத்தீவின் நல்லிணக்கக் கதவுகளை திறப்பதற்கான அடித்தள வேலைகளை இலங்கை அரசும் அதன் நேச அணிகளும் ஆரம்பித்துவிட்டன. இதற்காக அவர்கள் என்ன விலை கொடுப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இனிமேல் இலங்கை அரசுக்கு எதிராகவோ, அதன் கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவொரு தீவிரமான தரப்புகளும் மேலெழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. இதனால்தான் கோடிகோடியாய் கொட்டியேனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசு முயல்கிறது. நீதியால் முடிக்க வேண்டியதை நிதியினால் முடிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், முயற்சியின் அளவுக்கு அது பலன் தருமா? இம்முயற்சி இதயபூர்வமாக மேற்கொள்ளப்படுகிறதா? என்ற பலத்த சந்தேகங்கள் சாதாரண மக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சமூகவெளியில் நிகழும் அரசியல்..சமூகக் குசும்புகளை கிசுகிசு..குசும்பு வடிவில்...தர விளைகிறோம். இது ருவிட்டர் காலம் என்பதால்.. குறுஞ்செய்தி எழுதவும் வாசிக்கவும் தான் நேரமிருக்குது. அதுவும் ஒரு காரணம். இது யாரையும் தனிப்பட்ட முறையில் நோகடிப்பதை நோக்காகக் கொண்டன்றி சமூக அக்கறை நோக்கி எழுதப்படுகிறது. ======================================= குஞ்சையாவின் குசும்பு 1. தெருத்தம்பி: என்ன குஞ்சு புறுபுறுத்துக் கொண்டு போறேள்... குஞ்சையா: இல்லடாம்பி.. உவன் சாத்திரிட்ட போறன்.. சாதகத்தின் படி 2016 இல உசுரோட இருப்பனோ இல்லையோன்னு.. பார்க்க. இத்தனை வருசம் வராத வருசம் 2016இல தமிழருக்கு வரப்போதாம் என்று சொறீலங்கா. நாகதீப புகழ் ஒப்பசிசன் லீடர் சவால் விட்டிருக்காராமில்ல.…
-
- 39 replies
- 3.6k views
-
-
விக்னேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின் பதில் என்ன?- யதீந்திரா தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை, தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவிநிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்திருக்கின்…
-
- 1 reply
- 820 views
-
-
தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு இந்திய ஆதரவு கிடைக்குமா? கலாநிதி சர்வேந்திரா கடந்த வெள்ளிக்கிழமை 27.11.2015 அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்றன. தமக்காக உயிர்நீத்த மாவீர்களுக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதில் மக்கள் உணர்வுபூர்வமாய் ஈடுபட்டனர். மாவீரர்நாள் அறிமுகப்படுத்தப்பட்ட 1989 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை உலகமெங்கும் கவனத்தைப் பெறுவதாக அமைந்திருக்கும். தலைவர் பிரபாகரன் அவர்கள் 2008 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆற்றிய இறுதி மாவீரர்நாள் உரையை இவ் வருட மாவீரர் நாள் அன்று மீள வாசித்துப் பார்த்தேன். அதில் இந்தியாவுடன் நட்பினை ஏற்படுத்துவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் இடையீடு; நமது உரைகல் என்ன? - யதீந்திரா by Jathindra - on December 1, 2015 படம் | SLGUARDIAN சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அமெரிக்க உயர்மட்டத்தினர் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. இதன் உச்சமாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் விஜயம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடுமென்னும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாயிருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமிக்க…
-
- 0 replies
- 938 views
-
-
அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா? by Rev. M.Sathivel - on November 30, 2015 படம் | Selvaraja Rajasegar Photo தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன. பலப் பேராட்டங்கள் அரசியல்வாதிகள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளால் கைவிடப்பட்டன. பண்டாரவளை, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களை முகாம் காவலாளிகளும் காடையர்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவே 28 ப…
-
- 1 reply
- 909 views
-
-
விக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா? யதீந்திரா படம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் பின்னர், அதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதுமே மேற்படி சூடான தமிழ் அரசியலுக்குக் காரணம். இவ்வாறான வாதப்பிரதிவாதங்களால் தமிழ் மக்கள் அடையப்போகும் நன்மை என்ன என்பதற்கு …
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா? அ. நிக்ஸன் படம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும் என வேறு சிலர் காரணமும் கூறுகின்றனர். உள்ளக முரண்பாடுகள், முதலமைச்சா விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், தமிழர்களின் சமகால அரசியல் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது! - குணா கவியழகன் நேர்காணல் இனப்படுகொலை விவகாரத்தை இராணுவ அத்துமீறலாகச் சுருக்கும் முனைப்புடன் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கையாளப்படுவதாக எழுத்தாளர் குணா கவியழகன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த சனியன்று தனது 'விடமேறிய கனவு' நாவல் அறிமுக அரங்கில் பங்கேற்பதற்காக குணா கவியழகன் நோர்வேக்கு வருகை தந்திருந்த போது அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக அவருடன் நேர்காணல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் சில மாதம் முன்னரே வழங்கப்பட்டிருந்தன. ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்…
-
- 0 replies
- 710 views
-
-
தமிழர் அரசியல் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் உண்டா? கலாநிதி சர்வேந்திரா ஈழத்தமிழர் தேசம் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களைக் கொண்டதொரு நாடு கடந்த தேசமாக பரிணமித்திருக்கிறது. இந்நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அரசியல் அமைப்புக்கள் தமக்கிடையே போதிய புரிந்துணர்வைக் கொண்டுள்ளனவா? இவ் அமைப்புக்கள் தமக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏதும் உண்டா? மே 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் தலைமை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரே அமைப்பின் கையில் இல்லை. மே 2009 க்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பே இரு தளங்களிலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமையாக விளங்கி…
-
- 0 replies
- 772 views
-
-
அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது முத்துக்குமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இனச்சுத்திகரிப்புப் பிரச்சாரம் அவுஸ்ரேலியாவரை தாக்கம் செலுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் கூட்டமொன்றில் அவரை பேசவிடாது தடுத்திருக்கின்றனர். ஜனநாயக ரீதியாக இளைஞர்களின் செயல்பற்றி விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களிடமிருந்த தேசிய உணர்வை குறைத்து மதிப்பிடமுடியாது. வெறுமனே சுமந்திரனின் கருத்துக்கெதிரான செயல்கள் என்பதாக அல்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால போக்குகள் பற்றிய ஒட்டுமொத்த அதிருப்தியின் விளைவு என்றே அதனைக் கூறவேண்டும். எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் இணக்க அரசியலுக்குச் சென்றமை, …
-
- 1 reply
- 658 views
-
-
அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும் அவரை ஒப்பீட்டளவில் அதிகளவில் நம்புவது போலத் தெரிகிறது. கைதிகளுக்கென்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது என்று அவரும் கூறியிருக்கிறார். அரசியல்கைதிகளுக்கென்று ஏன் ஓர் அமைப்பு உருவாக்கப்படவில்லை? முன்பு அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ஓர் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார் “இப்போதுள்ள அரசியல் கைதிகளில் அநேகமானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழு; கைது செய்யப்ட்டவர்களே. தேசத்துரோகம், அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைக…
-
- 0 replies
- 440 views
-
-
புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்! -கலாநிதி சர்வேந்திரா ஈழத்தமிழ் புலம்பெயர் மக்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் தமது தாய்நாட்டுடன் பேணிக் கொள்ளும் உறவுகளை இவர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள பெரும் சமூகத்தினர் எவ்வாறு பார்க்கின்றனர்? இவர்களின் தாயகத் தொடர்பு இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசத்துக்கு இடமளிக்கும் என்பதனால் அதனை முழுமையாக நிராகரிக்கிறார்களா? புலம்பெயர்ந்தோரின் தாயகத் தொடர்பு இவர்கள் வாழும் நாடுகளின் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறதா? புலம்பெயரந்து வாழும் மக்களுக்கும் இவர்கள் வாழும் நாடுகளின் பெரும் சமூகத்துக்குமிடையே சமூக, பண்பாட்டுத் தளங்களில் பாரிய முரண்பாடுகள் எழுகின்றனவா? இவற்றைப் பற்றிய சில விடயங்களை இன்றைய பத்தி தொட்டுச் செல்கிறது…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுமந்திரனின் பதில் என்ன? - யதீந்திரா படம் | INDIAN EXPRESS தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? ஏன் அண்மைக்கலாமாக சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே சர்ச்சைக்குரியவையாக நோக்கப்படுகின்றது அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்ற…
-
- 0 replies
- 648 views
-
-
அரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்? நிலாந்தன்:- 08 நவம்பர் 2015 அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசாங்கம் முற்படுகின்றது.ஆயுத ப்போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ தமிழ்த்தேசியப் பிரச்சினையை எப்படி அதிகாரப் பரவலாக்கலுக்குரிய பிரச்சினையாகக் காட்டினார்களோ அப்படித்தான் கைதிகள் விவகாரத்தையும் ஒரு சட்ட விவகாரமாகக் காட்ட முற்பகிறார்கள். இவ்வாறு ஒரு விவகாரத்தின் மையத்தைச் சிதைத்து அதை வேறொன்றாகக் காட்டுவதன் மூலம் அதை ஒத்தி வைக்கலாம் அல்லது அதைத் தீர்க்காமலே விடலாம். அதற்குரிய மிக நீண்ட பாரம்பரியம் இலங்கைத் தீவின் அரசாட…
-
- 1 reply
- 887 views
-
-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் நகர்வுகள், ஏமாற்றமளிக்கின்ற சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. சிறைச்சாலைகளில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆறு நாட்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த உறுதிமொழியை அடுத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. நவம்பர் 7ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்…
-
- 0 replies
- 672 views
-
-
புலிகள் இயக்கம் அதிகபட்சம் படைத்துறை ஒழுக்கத்தைக் கொண்ட ஓரியக்கம். படைத்துறை இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக முழு உலகிற்கும் ஒரு புது அனுபவமாகக் கிடைத்த சயனைற் மரபை அந்த இயக்கம் வளர்த்தெடுத்தது. எதிரியிடம் இரகசியங்கள் போகக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே மாய்த்துக்கொள்ளும் ஒரு மரபை அந்த இயக்கம் கட்டி எழுப்பியது. இயக்க இரகசியங்கள் உயிரை விட மேலானவைகளாக மதிக்கப்பட்டன. எதிரியிடம் சரணடைவதை விடவும் உயிரைத் துறப்பதே மேலானது, புனிதமானது என்று நம்பப்பட்டது. இயக்க இரகசியங்களுக்காக உயிரைத் துறத்தல் என்பது புலிகளிடம் இருந்து தொடங்கவில்லை. ஆனால் சைனட் அருந்துவது என்பதை ஒரு புனித மரபாக கட்டியெழுப்பியது புலிகள் இயக்கம் தான். போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்க உயர் பிரதானிகளில் அனேகர்…
-
- 1 reply
- 481 views
-
-
யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை 'றோ' சீர்குலைக்கிறது? – கூட்டமைப்பின் பதில் என்ன? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தலைவரும் எதிர்க்கட்சியின் கொரடாவுமான அனுரகுமார திசநாயக்க, யாழ்ப்பாணம் இந்திய வெளியக உளவுத்துறையான 'றோ'வின் கூடாரமாகிவிட்டதாகவும் (Den of RAW) அங்கு முகாமிட்டிருக்கும் 'றோ' முகவர்கள் யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை சீர்க்குலைத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுன அடிப்படையிலேயே ஓர் இந்திய எதிர்ப்புவாத சிங்கள அரசியல் கட்சியாகும். 1971இலும் பின்னர் 1989இலும் தெற்கில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மேற்படி அமைப்பு, சிங்கள இளைஞர்களை கவர்வதற்கு முன்வைத்த பிரதான போதனைகளின் ஒன…
-
- 0 replies
- 205 views
-
-
சோறா? சுதந்திரமா? - கலாநிதி சர்வேந்திரா அண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் (ரொபின்) நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் பொதுமக்கள் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இச் சந்திப்பு ஏனைய அரசியல் சந்திப்புக்களை விட வேறுபட்டதாக இருந்தது. இச் சந்திப்பில் ரொபின் அரசியல் விடயங்கள் பற்றிப் பேசவில்லை. மக்கள் மற்றும் பிரதேசங்களின் மேம்பாடு சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய கல்வி வளர்ச்சித் திட்டங்கள், தொழிற்துறை வளர்ச்சித் திட்டங்கள் பற்றியே கூடுதலாகப் பேசினார். சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கினார். மேம்பாடு பற்றியே கூடுதலாகப் பேசப்பட்டதனால் அரசியல் முரண்பாடுகளைக் கடந்த ஒர் ஒருமைப்பாட்டை இச் சந்திப்பில் கா…
-
- 0 replies
- 519 views
-
-
சிறிலங்கா அரசைப் புரிந்துகொள்வது எவ்வாறு? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் ஆட்சிமாற்றம் தொடர்பாக ஒருவகையான பரவச நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இருந்து வந்த கொடுங்கோலாட்சி காரணமாக ஆட்சிமாற்றம் அவர்களுக்கு இப் பரவசத்தினை ஏற்படுத்தியிருக்கக்கூடும். புதிய ஆட்சியாளர்களான மைத்திரி - ரணில் கூட்டு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருப்பதையும் உணர முடிகிறது. இதேவேளை சிறிலங்காவில் ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசு (State) மாறவில்லை என்பதனையும், சிறிலங்கா அரசு மாற்றத்துக்குள்ளாகாதவரை எந்த ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் அவர்…
-
- 7 replies
- 701 views
-
-
இலங்கை இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் இலங்கை அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும். இவ்வாறு The diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சிறைகளில் வாடும் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது ஒரு வார காலம் வரை தொடரப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நவம்பர் 7 ஆம் திகதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி ம…
-
- 0 replies
- 154 views
-
-
முன்னாள் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான, கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் (பரணகம ஆணைக்குழு) இறுதி அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைகளை நடத்தி அறிக்கையை முன்வைத்திருக்கின்றது. கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் மட்டுமின்றி இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்களையும் தம்முடைய விசாரணைகளில் சேர்த்துக் கொள்ள அவ் ஆணைக்குழுவுக்;கு இறுதிக் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்போக்கிலான விடயங்களும் விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள…
-
- 0 replies
- 263 views
-
-
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? -என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்டு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் கபினட் அமைச்சராகினார். அதுவரைகாலமும் ஜி.ஜி.பொன்…
-
- 196 replies
- 42.2k views
- 1 follower
-