அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
‘சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறது’ Dec 16, 2014 | 13:26 by நித்தியபாரதி கிறிஸ்தோபர் கொலம்பஸ் மாலுமியாக இருந்த சான்ரா மரியா கப்பலை விட 200 இற்கும் மேற்பட்ட மிகப் பெரிய கப்பல்களை சீனாவை ஆண்ட செங்க் ஹீ என்கின்ற ஆட்சியாளர் வைத்திருந்தார். பல சிறிய படகுகள் இணைக்கப்பட்ட இவ்வாறான 50 கப்பல்கள் 27,000 வரையான வீரர்களை ஏற்றிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவான இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. இது சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்ட ‘Stars and Stripes’ ஊடகத்தில் Wyatt Olson எழுதியுள்ள ஆய்வுக்கட்டு…
-
- 0 replies
- 691 views
-
-
இனவாதப்பூதத்தின் எந்தப் பிள்ளை ஆட்சிக்கு வருவது ஈழத் தமிழருக்கு நன்மை தரும்? தாமரை காருண்யன் 1. ஜனாதிபதித் தேர்தல் ஆரவாரங்கள் நன்றாகவே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அணி தாவும் ஆட்டமும் தேர்தலின் இணை பிரியா அங்கம் ஆகிவிட்டது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி, ஜனாதிபதியாகப் போவது மகிந்த இராஜபக்சவா அல்லது மைத்திரிபால சிறிசேனாவா என்பது முடிவாகப் போகிறது. மைத்திரிபால சிறிசேன களம் இறக்கப்படும் முன்னர் மகிந்த இராஜபக்சதான் ஜனாதிபதியாக வருவார் என அடித்துக் கூறியவர்கள் பலர் தற்போது சற்று அமத்தி வாசிக்கத் தொடங்கியுள்ளார்கள். எதிர்வரும் நாட்கள் ஜனாதிபதித் தேர்தலில் மிக முக்கியமான நாட்களாகக் கருதப்படுகின்றன. தற்போது வரும…
-
- 0 replies
- 655 views
-
-
அடுத்த மாதம் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், அதன் போக்கு என்னவோ, கட்சிகளை உடைப்பதற்கான, போராகவே நடந்து கொண்டிருக்கிறது. வரப்போகும் தேர்தல், ஆளும்கட்சிக்கும் எதிரணிக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டியாக அமைந்துள்ள சூழலில், கட்சிகளை உடைத்தும், ஆட்களை இழுத்தும் வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்ற வெறி இருதரப்பினரிடமும் காணப்படுகிறது. இதன் விளைவாக, இப்போது வாக்காளர்களிடம் வாக்குக் கோருவதில் ஆர்வம் காட்டுவதை விட, மறுதரப்பை உடைப்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. யார் எப்போது எந்தப் பக்கம் இருப்பார்கள் என்றே அனுமானிக்க முடியாதளவுக்கு, இலங்கை அரசியலில் இப்போது கட்சித் தாவல்கள் நடந்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரசாரங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கலோடு பெரும் ஆரவாரத்துடனும் அக்கறையுடனும் ஆரம்பிக்கப்படவிருந்தன. போட்டி மிக நெருக்கமானதும் கடுமையானதுமாகவும் இருக்கப்போவதால் சிறுபான்மையினத்தவரது வாக்குகள் தேர்தல் முடிவுகளை தீர்மானம் செய்வதில் ஆற்றல் உள்ளதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இருந்த போதிலும் பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தாம் எந்த வேட்பாளரை ஆதரிக்கப் போகின்றோம் என்னும் தீர்மானத்தை இன்னும் எட்டாதிருக்கின்றன. அவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் எவ்வாறு தமது அரசியல் விஞ்ஞாபனத்தை அமைக்க உள்ளனர் என்பதனைப் பொறுத்தே தாம் ஒரு தீர்மானத்தை செய்யலாம் என்று காலம் தாழ்த்தி வருவதாகத் …
-
- 0 replies
- 394 views
-
-
சிறீலங்காவில் ஐனாதிபதித்தேர்தல் சூடுபிடிக்கவும் ஆட்கொள்வனவுகள் இரகசிய ஒப்பந்தங்கள் அரவணைப்புக்கள் நடந்தாலும் தமிழர் விடயத்தில் மிகவும் கவனமாகவும் அதே நேரம் ஒரே கொள்கையிலும் சிங்களக்கட்சிகள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. தேடுவாறற்று தமிழினம் இன்று தனித்துவிடப்பட்டுள்ளது மட்டுமன்றி பனையால் விழுந்தவனை மிதிப்பது போல யார் அதிகம் உதைப்பது என்பதும் நடக்கிறது இது புதிதல்ல என்பதாலும் வாங்கி மரத்துவிட்ட வரலாற்றுப்பாடங்களிலிருந்தும் தமிழினம் தள்ளியே நிற்கிறது. இந்தநிலையில் மகிந்தவை ஆதரிக்கணும் அவர் மீண்டும் வந்து தமிழரை மிதிக்கணும் என்றும் அவர் மிதிப்பது பழகிப்போனதால் அதிகம் வலிக்காது என்றும் அத்துடன் அவர்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவரும் நிலையில் அவரி…
-
- 33 replies
- 3.3k views
-
-
நாட்டின் அதியுயர் நிறைவேற்றதிகாரமுள்ள பதவியான ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைந்து விடும். நாட்டு மக்கள் அனைவரது கவனமும் குறித்த தேர்தலில் ஈர்க்கப்பட்டுள்ளமை தெரிகின்றது. பொதுவாக சகல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் இதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளன. நிறைவேற்று அதிகாரமுறைமையை நீக்குவோம், அரசியல் அமைப்பை மாற்றுவோம் , தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றெல்லாம் எதிரணியினர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆளும் தரப்பு இன்று நாட்டில் நிலவும் நிலையைத் தொடர்ந்து பேண மக்கள் வாக்கை எதிர்பார்க்கின்றது. இவ்வாறு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில் நாட்டில் கூடியஅளவு தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவம் …
-
- 0 replies
- 559 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பலரது பேசுபொருளாகியிருக்கும் இன்றைய நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பதும் பலரது எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்தை விடக் குறைவான காலமே இருக்கின்ற இந்த நிலையிலும் தேர்தல் குறித்த திடமான ஒரு முடிவை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது. இதற்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சித் தாவல்கள் அரச சொத்துக்களைப் பாவித்தும் சட்டவிரோத பணத்தினைப் பாவித்தும் மக்களிடையே குறிப்பாக கிராமப் புற மக்களிடையே வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் மக்களிடையே எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை, இன்னும் மதில் மேல் பூனையாக இருக்…
-
- 1 reply
- 961 views
-
-
மகிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றத் துடிக்கும் அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு மட்டும் கொடிகட்டி பறக்கும்: பாவம் மக்கள்.. - நடராஜா குருபரன்- 13 டிசம்பர் 2014 “முதலில் சுவாசிப்பதற்கு ஒக்சிஜன் வேண்டும் விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏன் ஊடகவியலாளர்களாகிய உங்களுக்கும் அது அவசியம்” என வடக்கு ஊடகவியலாளர்களை அண்மையில் கொழும்பில் சந்தித்த ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இங்கே அவரை உதாரணத்திற்கு எடுப்பதனால் அவர் உத்தமர் என அர்த்தப்படாது... அவர் சொன்ன கருத்தை இங்கு குறிப்பிட்டேன்... இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னிருந்து கடந்த 67 ஆண்டு கால வரலாற்றில் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களோ, அல்லது ஆட்சி அமைத்த ஆளும் கூட்டணிகளோ, …
-
- 0 replies
- 775 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் - தமிழ் மக்கள் பார்வையாளர்களா? - நிலாந்தன்:- 14 டிசம்பர் 2014 ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை அவருக்கு வெற்றி வேண்டும். அதற்காக அவர் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் காத்திருந்து விட்டார். கிடைக்கப்போகும் வெற்றியைப் பொறுத்தே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கும். தனது தலைமைக்கு சவாலாக கட்சிக்குள் எழுச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவருக்கு வெற்றி அவசியம். …
-
- 0 replies
- 519 views
-
-
சிறுகுழந்தைகள் நொடிகளைச் சொல்லி அதற்குவிடைகேட்பதுபோல் இருக்கின்றதா தலைப்பு. இது என்னகதை என்றும் கேட்கவும்வேண்டும் போல் இருக்கின்றதா? பெரிதாக மண்டையைப்போட்டு உடைத்துக் கொள்ளவேண்டாம். கதை இதுதான். இந்தநாட்டில் பெரும்பான்மையினர் சிங்களசமூகத்தினர். தமிழர்களும் முஸ்லிம்களும் இந்தநாட்டில் சிறுபான்மையினர். தமிழர்களில் இந்திய வம்சாவளி என்ற ஒரு பிரிவினர் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விவகாரம். இந்தநாட்டிலுள்ள பெரும்பான்மையினரின் தரப்பிலிருந்து இருபெரும் வேட்பாளர்கள் களத்தில். அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற படி மகிந்த மைத்திரி அந்த இருவரும். எனவே, இருவரில் ஒருவர்தான் இதில் வெற்றி பெறுவார்கள் என்பது தெளிவான விடயம். ராஜபக்ஷவின் சிந்தனையைத் தொடர்வதா அல்லது சிரிசேனாவின் …
-
- 0 replies
- 423 views
-
-
மைத்திரி வெற்றிபெற்றால்…? அ.நிக்ஸன் தற்போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கட்சிகளின் தனித்துவம் பற்றிய சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்களிடையே அதிகரித்துள்ளன. அரசில் இருந்து விலகி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் பொது எதிரணியில் இணைந்து கொண்ட பின்னர் மேலும் பலர் அரசில் இருந்து விலகிச் செல்லும் வாய்புள்ளதாகக் கூறப்படுகின்றது. அடையாளம் என்ன? பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். அதற்கு பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன. பொது எதிரணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா: அபிவிருத்தி என்னும் போர்வையில் முல்லைத்தீவின் காடுகள் அழிப்பு Dec 12, 2014 | 12:31 by நித்தியபாரதி முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு Ceylontoday ஆங்கில ஊடகத்தில் Rathindra Kuruwita எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் சிறிலங்காவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் முன்னால் போர் வலயத்தில் உள்ள காடுகள் துப்பரவு செய்யப்பட்டு செல்வாக்கு மிக்க வர்த்தகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த காலத…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஓ டயரை கொன்றால் போராளி ராசீவைக் கொன்றால் குற்றவாளியா? ????????????? 1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர் படுகொலைக்கு பழிவாங்க லண்டன் சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங் (பஞ்சாபி சீக்கியர்) இந்திய அரசுக்கு போராளி என்றால் அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம் தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே. நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்' http://namvaergall.blogspot.co.uk/
-
- 0 replies
- 1k views
-
-
சமகால இலங்கை அரசியலில் காத்திரமான அரசியல் அழுத்தக் குழுவென்றால் அது பேரினவாத சக்திகள் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவரும் ஒன்று. பேரம்பேசும் ஆற்றல் கூட தம் வசமே உள்ளது என்று மார்தட்டி பறைசாற்றும் அளவுக்கு அது உண்மை. தீர்மானகரமான அரசியல் சூழல்களில் அவர்கள் தமது பாத்திரத்தை வெற்றிகரமாக ஆற்றியிருக்கிறார்கள். அரசை இனவாத திசையில் வழிநடத்தவும், வழிதவறிப்போனால் எச்சரிக்கவும் அவர்களால் முடிந்தது. குறிப்பாக இதுவரை ஜாதிக ஹெல உறுமய அரசின் பங்காளிக்கட்சியாக தாமும் அதிகாரத்தில் இருந்தபடி தமது பேரினவாத இலக்கில் பாரிய வெற்றிகளை பெற்றார்கள். யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அவர்கள் இரண்டாம் கட்ட போரை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார்கள். தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக…
-
- 2 replies
- 648 views
-
-
கடந்தகால வரலாறு, நிகழ்கால நிகழ்வுகள் போன்றவற்றை கூர்ந்து ஆய்ந்து விளங்கி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது ஏற்றது, பொருத்தமானது. பயனுள்ளது என்பது புத்தியுள்ளோர் புரிந்து வைத்துள்ள உண்மை. யதார்த்தமும் கூட. இது தனிப்பட்ட மனிதனின் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமல்ல நாட்டை, சமூகத்தை வழிநடத்தத் தலைப்பட்டுள்ள அரசியல் அரங்காடிகளுக்கும் பொருந்தும். வரலாறு என்பது வெறும் பழங்கதையல்ல. நிகழ்வுகளின் தாக்கம் எவ்வாறமையும், அதனால் விளையும் நன்மை, தீமைகள் எவ்வாறு நாட்டை, சமூகத்தை, இனத்தை, மதத்தை, மொழியை, தனிப்பட்ட வாழ்வை பாதித்தன என்பது பற்றி புரிந்து கொள்ள, எதிர்காலத்தை திட்டமிட, உகந்ததாயமைந்துள்ளது. ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வுகளை அதாவது வரலாற்றை மறந்தோ, புறந்தள்ளியோ செய…
-
- 0 replies
- 486 views
-
-
சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? Dec 07, 2014 | 9:03 by நித்தியபாரதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார். இவ்வாறு World Socialist Web Site இணையத்தில் K. Ratnayake எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஏறத்தாழ 36 வரையான…
-
- 0 replies
- 580 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்! - காலங்கள் மாறும், காட்சிகள் மாறும்! முத்துக்குமார் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வழங்கத் தொடங்கிவிட்டன. மாரிப் பருவநிலைபோல இரு தரப்பினதும் செல்வாக்குத் தளங்களும் நாள் தோறும் ஏறி இறங்குகின்றது. மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டதும் மகிந்தர் ஆடிப்போய்விட்டார். எதிரி தனது கோட்டைக்குள் இருந்து வந்திருக்கிறார் என்பதுதான் அவர் ஆடிப்போனமைக்குக் காரணம். எனினும் சிறிய சேதாரங்களுடன் வியூகங்களை வகுத்து நிலைமைகளை ஒருவாறு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளார் போல தெரிகின்றது. பலர் எதிர்த்தரப்பிற்கு மாறுவர் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இவரது கட்டுப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இன்னும் ஒரு மாதத்தினுள் இலங்கைத்தீவு, ஜனாதிபதி தேர்தலை சந்திக்கப்போகின்ற சூழல் மற்றும் சீனாவின் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்த இந்தியாவின் கரிசனையும் கவலைகளும் அதிகரித்துள்ள சூழலிலேயே அவரது பயணம் இடம்பெற்றுள்ளது. இதனால், அரசியல் ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் அஜித் டோவலின் இலங்கைப் பயணம் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்பட்டது. அவரது இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமானது காலியில் கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் நடைபெற்ற காலி கலந்துரையாடல் என்ற கடற்படையால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கடல் பாதுகாப்பு …
-
- 0 replies
- 636 views
-
-
கலைஞர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் இவர்களடங்கிய பிரஜைகள் சக்தி என்னும் குழு 'பொறியிலிருந்து விடுபடுவோம்' என்கின்ற தொனிப்பொருளில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவானதொரு அரசியல் கூட்டத்தினை கடந்த வாரம் ஹயிட் பூங்காவில் நடத்தியிருந்தது. பூங்காவிற்கு உள்ளும் அதன் வெளியே நடைபாதையிலும் ஒரே கூட்டம். 'இது சேர்த்த கூட்டமில்ல. தானா சேர்ந்த கூட்டம்' என ரஜனி பாணியில் கூற வேண்டும்போலிருந்தது. பொறுமையுடன் பல மணி நேரம் நின்றுகொண்டே சகல உரைகளையும் யாவரும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவ்வப்போது கரகோஷம் இடவும் மறக்கவில்லை. அரசியல் மாற்றத்திற்கு தென்பகுதி தயாராகி வருவது போலத் தோன்றியது. இக்கூட்டத்தில் ரணில் மைத்திரி எனப் பல அரசியல் தலைவர்கள் பேசினாலும், குறிப்பாக காமி…
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களின் பணத்திலிருந்து கோடிகோடியாக வருடாவருடம், சர்வதேச பிரச்சார அமைப்புகளுக்கு வழங்கி தன்னை பற்றி சர்வதேச அளவில் உருவாகியுள்ள களங்கத்தை துடைக்கும. முயற்சியில் ஈடுபடுகின்றார், அதன் மூலமாக தான் யுத்த குற்றங்களுக்கா விசாரணை செய்யப்படுகிறேன் என்பதை மக்கள் மறக்கச்செய்கின்றார். எனினும் ஊழல், சட்டவிரோதம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் துர்நாற்றம் அவரிலிருந்து அகலுவதில்லை,அது அவரின் ஆன்மாவில் ஆழமாக பதிந்துள்ளது,அவரது ஒவ்வொரு அசைவிலும் புலப்படுகின்றது. தனது பதவிக்காலம் ப+ர்த்தியாவதற்க்கு இன்னமும் இரண்டுவருடங்கள் இருக்கையில் தேர்தலை நடாத்தும்அவரது முடிவும் அவ்வாறனதே, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற தனது ஆதரவை காப்பாற்றும் இறுதிமுயற்ச…
-
- 0 replies
- 589 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் தற்போதைய அரசாங்கத்தின் ஆணிவேரையே ஆட்டம்காண வைத்திருக்கிறது. மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களின் வெளியேற்றம், அரசாங்கத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை விட, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமைத்துவத்துக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது என்பதே உண்மை.மைத்திரிபால சிறிசேனவும் அவருடன் இணைந்து கொண்டுள்ளவர்களும், ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்டிருந்தால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விடயமன்று. மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப்ப…
-
- 0 replies
- 668 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஸ்யங்களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, அந்தப் போராட்டத்தை உடைத்து வெற்றி பெறும் எண்ணத்தில் கணிசமானளவு முன்னோக்கி வந்துள்ளதாக பொது எதிரணி கருதுகிறது. பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில், புறாக்களைப் பறக்கவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தார். ஊடகங்களால் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் நபராக மைத்திரிபால சிறிசேன மாறி, இரண்டு வாரங்களுக்குள்ளேயே அவர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்திருப்ப…
-
- 0 replies
- 569 views
-
-
ஜனாதிபதி தேர்தல்: கூட்டமைப்பு எடுக்கக்கூடிய புத்திசாதுரியமான முடிவு எதுவாக இருக்கமுடியும்? - யதீந்திரா ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு உத்தியோகபூர்வமான முடிவையும் இதுவரை அறிவித்திருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப் போக்கிற்கும் எதிராக எழுந்துள்ள எழுச்சிமிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான அபிப்பிராயங்களை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதானது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தல் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவ…
-
- 2 replies
- 637 views
-
-
‘உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது மகிழ்ச்சி ஆனால் சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை’ Dec 04, 2014 | 14:14 by நித்தியபாரதி யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவ்வாறு ‘சண்டே லீடர்’ ஆங்கில ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேற…
-
- 2 replies
- 611 views
-
-
-கே.சஞ்சயன் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தாலும், அதனை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் இரண்டு பிரதான தரப்பினிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படும் கொள்கைகளை, ஆளும் கட்சியும் எதிரணியும் கடைப்பிடிக்க முனைவதாலேயே இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று, தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் எண்ணம் இரண்டு பிரதான தரப்புக்களிடமும் இருந்தது. ஆனால், இப்போது பிரசார வியூகம், சிங்களத் தேசியவாத வாக்குகளை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியுள்ளது. தமிழர்களின் வாக்குகள், வெற்றிக்கு முக்கியத்துவமானவையாக இருந்தாலும், அதனை பெற…
-
- 0 replies
- 809 views
-