அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
கொஞ்சம் வாங்க பேசலாம் - 5 - புலிகளின் மீதான தடை விலகலும் + தமிழரின் செயற்பாடுகளும்.... நேற்றையிலிருந்து செய்திகளையும் கருத்துக்களையும் பார்த்திலிருந்து..... பலரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி தெரிகிறது.. ஆனால் இந்த வழக்கை தாக்கல் செய்தவரே இது தமிழர்களின் வெற்றி என்ற போதும் இதை ஒரு தனி மனிதரின் முயற்சி என்பது போலவும் அமைப்புக்களை குறை கூறுவதிலும் ஒரு சிலர் முனைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.. இங்கு கருத்தெழுதுபவர்கள் புலத்திலுள்ள எந்த அமைப்பிலாவது இருக்கின்றீர்களா? ஒருங்கிணைப்புக்குழு மக்களவை நாடுகடந்த அரசு உலகத்தமிழர் அமைப்பு பேரவைகள் ஏன் புலம் பெயர்தேசத்து (தமிழரற்ற) அமைப்புக்கள்..... எதிலாவது அங்கத்தவராக உறுப்பினராக சந்தாதாரராக…
-
- 28 replies
- 2.2k views
-
-
சந்தேகங்கள் நிலவும் வரை நல்லிணக்கம் ஏற்பட வழியில்லை. அதனால் நல்லிணக்கம், நல்லுறவுக்கு நிலவும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். தமிழ்பேசும் மக்களான தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலே இணக்கத்திற்கு தடையாயிருப்பது ஒருசாரார் மீது மறுசாரார் கொண்டுள்ள சந்தேகமே. ஒருசாராரது உரிமைகளை மறுசாரார் பறித்து விடுவார்களோ, தடுத்து விடுவார்களோ, ஏமாற்றி விடுவார்களோ, நம்பிக்கைத்துரோகம் செய்து விடுவார்களோ என்ற சந்தேகமே இன்று உறவுக்குத் தடையாயிருக்கின்றது. கடந்த கால நிகழ்வுகள் இவ்வாறான சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கின்றன. இவ்வாறான சந்தேகங்கள் நிலவிவருவது வரலாற்று நிகழ்வுகளைத் தெளிவாக அறியாமையே என்பது கண்டறியப்படுகின்றது. இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்பட்டால் நாட்டில், சமூகத்தில் நல்லுறவு மட்ட…
-
- 0 replies
- 553 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பும் ஈழக் கோட்பாட்டு பூச்சாண்டியும் வீ. தனபாலசிங்கம் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மறுபுறத்தில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆட்சி முறை மூன்றரைத் தசாப்தகாலமாக நடைமுறையில் நீடித்து வருகிறது. அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வெகுஜனக் கோரிக்கையாக மேலெழும்ப முடியாமல் இருந்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை அடையமுடியாமல் போனவர்களினாலும், என்றைக்குமே அப்பதவியை அடையக் கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற முடியாதவர்களினாலும் அது முன்வைக்கப்பட்டதேயாகும். 1994 பிற்பகுதியில் ஜனாதிப…
-
- 0 replies
- 454 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நெருங்கிவரும் ஆபத்து? - யதீந்திரா படம் | TAMILGUARDIAN தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பான விவகாரம் மீண்டும் தலைநீட்டியிருக்கிறது. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை கடந்த ஜந்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இது ஒரு புதிய கோரிக்கையோ அல்லது அரசியல் வாசகர்கள் அறியாத சங்கதியோ அல்ல. ஆனால், இதுவரை இந்தப் பிரச்சினைக்கான காத்திரமான தீர்வை எவராலும் காண முடியவில்லை. இதனை கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் எவ்வாறு பரபஸ்பர விட்டுக்கொடுப்புடன் கையாளப்போகின்றனர் என்பதிலும் தெளிவற்ற ஒரு நிலையே காணப்படுகிறது. கூட்டமைப்பை ஒரு தனி அரசியல் கட்சியாக மாற்றியமைப்பதில் உள்ள தடைகள் என்ன? தமிழ் த…
-
- 0 replies
- 675 views
-
-
"மேரியிடம் ஒரு செம்மறியாட்டுக் குட்டி இருந்தது' மேரி செல்லும் இடமெல்லாம் குட்டி ஆடும் பின்தொடர்ந்து செல்லும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அது போலவே, ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பாராளுமன்ற உறுப்பினரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பாளருமாகச் செயற்படுபவராகிய சஜின் வாஸ் குணவர்தனவும் சென்று கொண்டிருப்பார். சென்ற மாதம் ஐ.நா. வின் 69 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ சென்றபோது, சஜின் வாஸ் குணவர்தனவும் சென்றிருந்தாரல்லவா? அச்சந்தர்ப்பத்தில், நியூயோர்க் நகரில் ஜனாதிபதி ராஜபக்ஷ பங்கு பற்றிய சந்திப்பொன்றின் போது எல்லோரினதும் முன்னிலையில் எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் வைத்தியக் கலாநிதி …
-
- 0 replies
- 751 views
-
-
முன்னுதாரணம்மிக்க தமிழீழ மக்களும் கேள்விக்குறியாயுள்ள விடுதலைப் போராட்டமும்! சண்முகவடிவேல் ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன என்ற மிக எளிமையானதும் மிக அடிப்படையானதுமான இந்த வினாவை எழுப்பி இதற்கு விடைகாண முனைவார் யாருமில்லை. மேற்படி வினாவை எழுப்பி அதற்குப் பொருத்தமான பதிலைத் தேடாமல் சிலர் மனம்போனபடி பேசுகிறார்கள். சிலர் வெறும் விருப்பத்தின் அடிப்படையிற் பேசுகிறார்கள். சிலர் விரக்தியடைந்து ஏதோவெல்லாம் பேசுகிறார்கள். சிலர் எல்லாம் முடிந்துவிட்டது இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கைவிரிக்கின்றார்கள். சிலர் தம் மன உளைச்சலைத் தீர்க்கும் வகையில் பழிகூறலையும் திட்டித்தீர்த்தலையும் மேற்கொள்கிறார்கள். சிலர் தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள் அல்லது எதிர்மறையாய் …
-
- 3 replies
- 681 views
-
-
கட்டுரை ஆசியரின் இணக்கத்துடன் திருத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் செயற்பாடுகளினால் 24 உறுப்பினர்கள் கடுமையான விரக்த்தி மனநிலையில்? உள்ளக ஜனநாயகம் இன்மையால் பரிதவிக்கும் ஏனைய கட்சிகள்- சரியான தலைமை இல்லை என குற்றம் சுமத்தியபோதும் அமைதிகாத்த சம்பந்தன். 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் சர்வதேசத்தை பேச வைத்தது. ஆனால் இன்று? -அ.நிக்ஸன்- தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது முக்கியத்துவதைதை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளையும் அரவனைத்துச் செல்ல முடியாத சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தாம் நினைத்தையே செயற்படுத்தி வரு…
-
- 0 replies
- 405 views
-
-
சர்வதேச அரசியல் கட்டமைப்புக்களை மாற்றியமைக்க வந்திருக்கும் ISIS - சாந்தி சச்சிதானந்தம்:- இஸ்லாமிய உலகிலிருந்து இன்னமும் எவ்வளவு ஆச்சரியங்கள் எமக்காகக் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. ISIS எனக் கூறப்படுகின்ற ஈராக்கினதும் அல் ஷாமினதும் இஸ்லாமிய அரசு (Islamic State for Iraq and Al Sham) என்னும் ஆச்சரியத்தினைப் பற்றித்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். சில ஆயிரம் படை வீரர்கள் கொண்டதொரு சிறு குழுவாகவே இது கருதப்பட்டிருந்தது. ஆனால் இன்று வட சிரியா தொடங்கி ஈராக்கின் பாக்தாத் நகர் வரை பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டு முன்னேறும் பெரும்படையாக இது மாறி விட்டது. இஸ்லாத்தின் ஆரம்பத்தில் சுல்தான்களால் ஆளப்பட்ட caliphate போன்ற ஆட்சியினை மீளக் கொண்டு வருவதே தமது நோக்கம் என இவ…
-
- 0 replies
- 564 views
-
-
வன்முறை அரசியலும் மிதவாதிகளும் - யதீந்திரா ஓர் இலக்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள் சாத்வீக (வன்முறை தழுவாத) மற்றும் வன்முறை (ஆயுதம் தாங்கிய) ஆகிய இருவேறுபட்ட வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட்டிருப்பதே வரலாறு. அந்த வகையில் தமிழர் உரிமைசார் அரசியல் போக்கிலும் மேற்படி இருவேறுபட்ட வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியிலிருந்தே இளைஞர்கள் வன்முறையை நோக்கி பயணித்ததாக ஒரு கருத்துண்டு. ஆனால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். அன்றிருந்த மிதவாத தலைவர்கள் சாத்வீகப் போராட்டத்தை உச்சளவில் முன்னெடுக்கும் ஆற்றலற்றவர்களாக இருந்த நிலையிலேயே, மிதவாதிகள் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் வன்முற…
-
- 0 replies
- 554 views
-
-
ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா? - யதீந்திரா ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களும் இது தொடர்பில் கூர்ந்து அவதானிக்கின்றன. ஆனால், இப்படியாக கூர்ந்து நோக்கும், விவாதிக்குமளவிற்கு ஊவா தேர்தல் அப்படியென்ன ஆச்சரியமான பெறுபேறுகளை தந்துவிட்டது? இதற்கான பதிலை காணும் வகையில், முதலில் ஊவா தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்குவோம். ஊவா தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349,960 வாக்குகளை பெற்று 19 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஜக்கிய தேசியக் …
-
- 0 replies
- 534 views
-
-
கூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்:- நிலாந்தன்:- 12 அக்டோபர் 2014 "ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு புலிகள் இயக்கம் அதன்நோக்கு நிலையிலிருந்து TNAஐ ஒரு கட்சியாக பதிவதில் அக்கறை காட்ட வில்லை" ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான ஒரு சந்திப்பின் போது அமரர் ரவிராஜ் புலிகள் இயக்கத் தலைமையிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு நீங்கள் உங்களுடைய அபிப்பிராயத்தை கூறவேண்டும் என்று. அதற்குப் புலிகள் இயக்கத் தலைமை பின்வரும் தொனிப்பட பதில் கூறியதாம். 'இப்பொழுது இருப்பது போலவே இருக்கட்டும், அதனால் ஏதும் பிரச்சின…
-
- 0 replies
- 398 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் தேவை இலங்கை ஆட்சியாளர்களுக்கு வரவர அதிகரித்துக் கொண்டேபோகிறது. [Tuesday 2014-10-07 21:00] இலங்கை அரசியலில் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஏனையோருக்கு இல்லாத சில தனித்திறமைகள் உண்டு. ஏனைய கட்சிகளைப் பதவிகளைக் காட்டி உடைத்து சின்னாபின்னப்படுத்துவதிலும் சிறுபான்மை இனங்களின் ஐக்கியத்தைச் சீரழித்து அவற்றைப் பலவீனப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே தான். அவ்வகையில் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பவற்றை உடைத்து அவர்களின் அரசியல் பலத்தை நிர்மூலமாக்கினார். முஸ்லிம் கட்சிகளையும், மலையகத் தலைமைகளையும் ஐக்கியப்பட விடாது தங்களுக்குள்ளேயே மோதவைத்து அனைவரையுமே தனக்கு ஆதரவு தரும் நிலையை ஏற்படுத்தினார். ஆனால் அவரின் இந்தச் சதியை தமிழ் …
-
- 0 replies
- 725 views
-
-
1990 களில் விடுதலைப்புலிகள் அமைப்போடு சேர்த்து.. இல்லாத பொல்லாத கட்டுக்கதைகள் கட்டப்பட்டு.. மேற்குலகால் பயங்கரவாதிகள் என்று வர்ணிக்கப்பட்ட குர்திஷ் போராளிகள் இன்று.. ஈராக்கில்.. சிரியாவில்.. மேற்குலகின் ஆயுதப் பயிற்சி மற்றும் இராணுவ வளங்களைப் பெற்று இஸ்லாமிய ஜிகாத் ஐ எஸ் அமைப்புக்கு எதிராகவும் தங்களின் குர்திஸ்தான் விடுதலையை உறுதி செய்யவும் போராடி வருகிறார்கள்..! இன்றும் துருக்கியால் இவர்கள் பயங்கரவாதிகளாகவே நோக்கப்படுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்து தமிழீழ விடுதலைப் புலிப் பெண் போராளிகள் போல சண்டைக்களத்தின் நேரடியாகக் களமாடும் குர்திஷ் பெண் போராளிகள்.. மீண்டும் ஒரு முறை ஈழத்துப் பெண் போராளிகளை நினைவில் மீட்டிச் செல்ல வகை செய்கிறார்கள். http://y…
-
- 11 replies
- 1.2k views
-
-
ஜெயக்குமாரி கைது என்பது தன்னை விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் ஒரு நடவடிக்கை. தீயநோக்கம் கொண்டது - கலும் மக்ரே - தமிழில் - ரஜீபன்:- 05 அக்டோபர் 2014 சுமார் 200 நாட்களுக்கு முன்னர் இலங்கை அதிகாரிகள் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தமிழ்பெண்மணியையும் அவரது மகளையும் கைதுசெய்தனர். ஜெயக்குமாரி காணமல்போன தனது 15 வயது மகன் மகிந்தனிற்க்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அதிகாரிகள் மகிந்தனை விடுதலைப்புலி உறுப்பினர் என குற்றம்சாட்டி கைதுசெய்திருந்தனர். கடந்த நவம்பரில் பிரிட்டிஷ் பிரதமர் முன்னர் யுத்தம் இடம்பெற்ற அந்த பகுதிக்கு சென்ற வேளை அவரை சூழ்ந்துகொண்டு தங்களது வேதனைகளை வெளி;ப்படுத்திய பலர…
-
- 0 replies
- 655 views
-
-
ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை ஒரு பகுதியினர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் அது பதினேழு ஆண்டுகளின் பின் சற்றுத் தாமதமாக கிடைத்த நீதி என்று கூறுகிறார்கள். அத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக மூன்று வௌ;வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். அ.தி.மு.கா வினர் அதை முழுக்க முழுக்க தமது கட்சியின் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். ஆனால் மற்றொரு தரப்பினர் அத்தீர்ப்பை அனைத்திந்திய மற்றும் அனைத்துலக பின்னணிக்குள் வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். மூன்றாவது தரப்பினர் அத்தீர்ப்பை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். இதைச் சிறிது விரிவாக பார்க்கலாம். தீர்ப்பை ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் நீதிபதி குன்ஹாவின் தனிப்பட்ட ஆழுமையை ஒரு முன்னுதாரணமாக காட்டுகிறார்கள். இந்…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழ் தேசிய சபைக்கான கொள்கை நிலைப்பாடு என்ன? - யதீந்திரா படம் | Srilankabrief தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும், தமிழ் அரசியல் வாசகர்களுக்கு புதிய விடயமல்ல. ஆனால், இதுவரை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிருந்த நிலைமைக்கும் தற்போதிருக்கின்ற நிலைமைக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. முன்னைய முடிவுகளின் போது, ஜயா சம்பந்தனே தமிழரசு கட்சியின் தலைவராகவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார். ஆனால், தற்ப…
-
- 0 replies
- 384 views
-
-
ஆஹா, ஹொங்கொங் மக்களும் உலக மக்கள் புரட்சி இயக்கங்களுடன் இணைந்து விட்டார்களே. சிங்கப்பூர் போன்றே அதே விதமான வர்த்தகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பெயர் போன ஹொங்கொங் கூட ஒரு புரட்சித்தலமாக மாறும் என நாம் நினைத்திருக்க மாட்டோம். அது புரட்சித்தலமாக மட்டுமன்றி மிகப்பண்பான எதிர்ப்பாளர்கள் (politest protestors) கொண்ட இடம் எனவும் பெயர் பெற்றுவிட்டது. லட்சோப லட்சமாகக் மக்கள் இரவுபகலாகக் கூடியிருந்தும், அவர்கள் பொலிஸ் தாக்குதலுக்கு முகம் கொடுத்திருந்;தும், சிரித்த முகத்துடன் அமைதியுடன் எதனையும் எதிர்கொள்பவர்களாக இருக்கின்றார்கள். போகும் பாதைகளை அவர்கள் அடைக்க நேர்ந்தால் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும் என்று அறிவித்தல் போடுகின்றார்களாம். இரவு முழுக்க மக்கள் தங்கிய இடங்கள் காலை பார்த்த…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கையில் 2009 இல் இன அழிப்பு யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த கையோடு வடக்கு கிழக்கு தொடர்பில் சிறிலங்கா மற்றும் பிற அரசாங்கங்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டும் வார்த்தைகள் அபிவிருத்தி மற்றும் முதலீடுகள். இங்கு அபிவிருத்தி மற்றும் முதலீடு என்ற அளவுகோலில் இருக்க கூடிய அரசியலானது தமிழினத்திற்கு மிக மோசமான பின்னடைவுகளையும் தமிழினத்தின் அரசியல் மீது மிக நாசுக்காக மோசமான தாக்கங்களையும் கொண்டுவருகின்றது என்பதை ஈழ உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பிரதிநிதிகள் நுணுக்கமாக திறனாய்வு செய்வதோடு இன்றைய அபவிருத்தி மற்றும் முதலீட்டில் உள்ள எதிர்கால அரசியல் நோக்கம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிப்பது சம்மந்தமாக விரைவாக கவனம் செலுத்த வேண்டும். வடக்கு கிழக்கு தாண்டி ஒட்டுமொத்த இலங்க…
-
- 0 replies
- 432 views
-
-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஈழத்தமிழர் அரசியலில் தாக்கத்தைச் செலுத்துமா? - முத்துக்குமார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடச் சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே அவர் கர்நாடக சிறையிலும் அடைக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாரிசு அரசியல் இல்லாத நிலையிலும், தனியொரு நபரின் நிர்வாகமே இருந்த நிலையிலும், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் கட்சி திணறிக்கொண்டிருக்கின்றது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசி பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவின் புகைப்படத்தினை கையிலேந்தியபடி கண்ணீர்விட்டவாறு பதவியேற்றார். ஏனைய பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் கண்ணீருடனேயே பதவியேற்றனர். சிலர் கதறியழுதனர். நி…
-
- 0 replies
- 671 views
-
-
வடமாகாண சபை ஒரு பதுங்கும் புலியா? - நிலாந்தன் 28 செப்டம்பர் 2014 வடமாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாது தான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால் மாகாண சபைத் தேர்தலில் வழங்கப்பட்ட விறுவிறுப்பான உணர்ச்சிகரமான, வாக்குறுதிகளுக்கூடாகப் பார்க்கும் போதும், கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவும் மேற்கு நாடுகளும் வட மாகாண சபைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திற்கூடாக பார்க்கும் போதும் குறிப்பாக மே 19க்கு பின்னரான பொதுவான ஈழத் தமிழ் உளவியலுக்கூடாக பார்க்கும் போதும் வடமாகாண சபையின் ஓராண்டு காலம் என்பது கவனிப்புக்குரியதே. கண்டி வீதியில் பழமை வாய்ந்த கைதடி முதியோர் இல்லம் ம…
-
- 3 replies
- 956 views
-
-
மதமும் கடவுளும் - மண்டேலா தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் தந்தை, தியாகத்திருஉருவம், மாமனிதர் நெல்சன் மண்டேலா ஆங்கிலஇதழொன்றுக்கு மனம் திறந்துஅளித்த பேட்டி இங்கே தமிழில்: கேள்வி: பல்லாண்டுக் கால அடக்குமுறை. சிறைவாசத்தைத்தொடர்ந்து இறுதியில் அரசியல் சுதந்திரம் அடைந்தபோது, நீங்கள்இதயத்தில் பழிவாங்கும் உணர்ச்சி மிக்க ஒரு தலைவராகஇருப்பீர்கள் என மக்கள் கருதியிருக்கக் கூடும். எனினும், நீங்கள்சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்தப் பாதை எத்தனைசக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம்அடைந்தீர்களா? மண்டேலா: மக்களை நீங்கள் எந்த முறையில் அணுகுகிறீர்களே,அதற்கேற்பத்தான் அவர்களது பதில் அணுகுமுறையும் இருக்கும்.நீங்கள் வன்முறை அடிப்படையில் அணுகினீர்கள் என்றா…
-
- 1 reply
- 867 views
-
-
ஜெயலலிதா எமக்கான நிரந்தர நேச சக்தி கிடையாது. அவரது ஆரம்ப கால நவடிக்கைகளை பார்த்தாலே அது புரியும். அத்தகைய ஒருத்தரை எமது தொடர் போராட்டங்களினூடாக எமக்குச் சார்பாகத் திருப்பியது சமகால வரலாறு. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணப்பிரதிபலிப்பாய், தமிழீழ பொதுவாக்கெடுப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியது தொடக்கம் அவரது சமகால பங்களிப்புக்களை நிறையவே சொல்லலாம். இது எம்மீதான அக்கறையின்பாற்பட்;டதல்ல என்றபோதும் சமகால அரசியல் களம் என்பது இத்தகைய நலன் சார்ந்த பின்புலத்தில்தான் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழீழம் சார்ந்து டெல்லிக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருத்தரை நாம் இழப்பது எமது விடுதலை சார்ந்து நல்ல அறிகுறி அல்ல. அதுவும் சிங்களத்திற்கு எதிராக …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஊடகத்துறை மீதான வன்முறைகளிற்கு முகம்கொடுப்பது என்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தொடர் அச்சுறுத்தலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசிய ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்களும் வன்முறைகளுமே அதிகமானது. தாய்நாட்டில் வைத்து எம்மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள்; தற்போது அகதிகளாக வந்து தஞ்சமடைந்துள்ள புலம்பெயர் நாடுகளிலும் பரவியுள்ளது. 2009 ஆண்டில் எமது இனம் முள்ளிவாய்காலில் சந்தித்த இழப்பின் பின்னர், தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுத்திறன் புலம்பெயர் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழ் மக்களிடமுமே செறிந்துள்ளது. அதனை நன்கு புரிந்துகொண்ட எதிரியானவன் தற்போது தமிழ் தேசியத்தின் குரலை முற்றாக நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளான். அதன் வெளிப்பாடு தான் பாரம்பரிய தமிழ்த் தேசி…
-
- 0 replies
- 807 views
-
-
ஜின்பிங்கின் வருகை: இலங்கையை சுற்றிவளைக்கும் சீனா! - யதீந்திரா படம் | AFP, Ishara Kodikara, Foreign Correspondent’s of Sri Lanka’s Facebook Page சீன ஜனாதிபதி ஜின்பிங் (Xi Jingping) இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவின் வெளிவிவகார நிபுணர்கள் மத்தியில் விவாதங்களை தோற்றுவித்துள்ளது. இந்திய ஊடகங்கள் அனைத்தும் சீன ஜனாதிபதியின் விஜயத்தை வரலாற்று விஜயம் (Historic visit) என்றே வர்ணித்திருக்கின்றன. சீன – இலங்கை உறவு 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட றப்பர் – அரிசி உடன்பாட்டுடன் (Rubber – Rice Pact) ஆரம்பமாகிறது. அந்த வகையில் நவீன சீன – இலங்கை உறவிற்கு சுமார் 62 ஆண்டுகள் வரலாறுண்டு. 1986ஆம் ஆண்டு அப்போதைய சீ…
-
- 0 replies
- 446 views
-
-
தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி 2009 மே முள்ளிவாய்க்காலுடன் தனது இறுதி மூச்சினை விட்டு விட்டதாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உறங்கு நிலைக்குச் செல்லுமா அல்லது தன்னை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொண்டு, புதிய திசையில் அது முன்னோக்கி வீறு நடை போடுமா என்பது இலங்கைச் சமூகங்களின் ஒட்டுமொத்த அரசியல், சமூக விடுதலையை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும். தமிழ்த் தேசியமானது அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையின் எதிர்வினையாற்றல் என்ற வகையில் அது முற்போக்கானது. அது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கான கூறுகளை மாத்திரமல்ல முழு இலங்கையின் விடுதலைக்குமாறு உட்கூறுகளையும் கொண்டிருந்ததாக மூன்று …
-
- 2 replies
- 1.3k views
-