அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
தமிழ் புத்திஜீவிகள் தளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஜெரா படம் | Channel4 தமிழ் பரப்பில் இயங்கும் புத்திஜீவிகள் தளம் எப்படியானது? அது தன் பெயரில் முன்னொட்டாகக் கொண்டிருக்கும் புத்தி அதாவது, அறிவுக்கும் அதன் ஜீவித நிலைத்திருப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? கடந்த 30 வருடங்களாக இயங்கும் இந்தப் புத்திஜீவிகள் தளத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்தச் சந்தேகங்கள் எழுவது சாதாரணமான விடயம்தான். புத்திஜீவிகள் யார்? குறித்த ஒரு சமூகத்தின் ஒருவகைப் பிரதிநிதிகள். அதாவது, அரசியல் தலைவர்களுக்கும் அந்த சமூகத்துக்கும் இடையில் நிற்கும் இடையீட்டாளர்கள். அதற்குள் நின்று தொடர்ச்சியாகத் தொழிற்படுபவர்கள். ஒட்டுமொத்த சமூகத்தினதும் அறிவுப் பெட்டகமாகக் கொள்ளத்தக்கவர்கள். அவர்கள் நடம…
-
- 0 replies
- 438 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் பதவியேற்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான கருத்து வெளிவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன், பக்கச்சார்பின்றி நடந்துகொள்வார் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகச் செயற்படுவார் என்றும் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல. அவர் இத்தகைய கருத்து வெளியிட்டதற்கு, கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நவநீதம்பிள்ளை மீதிருந்த வெறுப்புத்தான் காரணம். இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியான 2008ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவியை பொறுப்பேற்ற நவநீதம்…
-
- 1 reply
- 495 views
-
-
ராஜதந்திரப் போர் எனப்படுவது - பின்நோக்கிப் பாய்வதல்ல... நிலாந்தன்:- 31 ஆகஸ்ட் 2014 இந்திய பிரதமரை கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13 ஆவது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல சலிக்கத் தொடங்கி விட்டார்கள். அதே சமயம் மோடி வந்தால் என்ன? யார் வந்தால் என்ன? இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாறவே மாறாது என்று தாங்கள் தீர்க்க தரிசனம் உரைத்ததை இன்னொரு தரப்பினர் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் மாவை சேனாதிராஜா கூறுகிறார். மோடியோடு தாங்கள் கதைத்தவை எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது என்ற தொனிப்பட. அதாவது கூட்ட…
-
- 0 replies
- 619 views
-
-
மூலம்: globaltamilnews.net Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:- Surge of radical Buddhism in South Asia - தெற்காசியாவில் பௌத்தத்தின் தீவிர எழுச்சி- Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:- இலங்கையிலும் மியன்மாரிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள மத வன்முறைகள் பௌத்த மதகுருமார் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டுவது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. யூன் 15ம் திகதி இலங்கையின் தென்பகுதியில் பௌத்தர்கள் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் போது அளுத்கம, பேருவல, தர்ஹா நகர் பகுதிகளில் 3பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் காயமடைந்தனர். பௌத்த துறவியை முஸ்லீம் ஒருவர் தாக்கிவிட்டார் என்ற வதந்தி…
-
- 1 reply
- 546 views
-
-
இந்தியாவு டன்பேசிய விடயங்களை வெளியிட முடியாது என்கிறார் மாவை இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது. இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய கால கட்டம் இது. அதனைப் பின்பற்றி நாமும் செயற்பட வேண்டியமை மிகவும் அவசியமாகும். - இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. - செய்தி கொழும்பில் பேசிய சுப்பிரமணியசுவாமி வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமே தமிழர் கூட்டமைப்பை சந்திப்பார். பிரதமர் சந்திக்க மாட்டார் எனக் கொக்கரித்திருந்தார். இதுவே ராஜபக்சவினதும் சில அயல்நாட்டு அதிகாரிகளினதும் எதிர்பார்ப்பு. இப்போது மேல்மட்டச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியா அம…
-
- 1 reply
- 778 views
-
-
மேற்குலக ஏகபோக அரசுகள் தமிழர்களுக்குப் போதிக்கும் இலங்கை அரசின் ஜனநாயகம் :செங்கோடன் தமிழ்த் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையைப் புறக்கணித்து தமிழர்களை ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே திணித்து இலங்கைக்கு போலிச் சுதந்திரத்தை வழங்கிய பிரித்தானிய அரசாங்கம், காலனியத்திற்குப் பிந்திய காலப்பகுதி முழுவதும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகளாலும் பௌத்த மதகுருக்களாலும் பௌத்த தீவிரவாதம் வளர்க்கப்பட்டு ஈழ தமிழின மக்கள் அரச படைகளாலும் பிக்குகள் மற்றும் தென்னிலங்கை இனவாதிகளாலும் கொடுமைப்படுத்தப்பட்டு, பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி, எரிக்கப்பட்டு, கடத்தி சித்திரைவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்படும் போதும் அவர்களுடைய வரல…
-
- 2 replies
- 586 views
-
-
சீமானும் தமிழ்த் தேசியமும் - நிலாந்தன்:- 24 ஆகஸ்ட் 2014 இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஓன்று புலிப்பார்வை, மற்றது கத்தி இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால் சீமானும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சீமானின் சடுதியான எழுச்சியோடு ஒப்பிடுகையில் அண்மை வாரங்களில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் சடுதியானதே. சில வாரங்களுக்கு முன்புவரை முகநூலில் ஒரே அணியில் மிக நெருக்கமாக நின்று எதிர்த்தரப்பை ஈவிரக்கமின்றி தாக்கிய நண்பர்ககள் இப்பொழுது ஒருவர் மற்றவரை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இன மான அரசியலில் சீமானின் எழுச்சி எனப்படுவது ஏனைய தமிழகத் தலைவர்களோடு ஒப்பிடுகை…
-
- 2 replies
- 806 views
-
-
இந்திய தேசியமும் தமிழ் தேசியமும் B.R. மகாதேவன் இந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் தரும்போதே, அது நீண்ட காலம் சுதந்தர நாடாக நீடிக்காது/ நீடிக்கக்கூடாது என்பதே பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்குலகின் எண்ணமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேரலாம்; விரும்பினால் தனியாகவும் இருந்துகொள்ளலாம் என்று மிகவும் தாராள மனதுடன்தான் இந்தியாவை விட்டு வெளியேறியிருந்தார்கள். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டமானது விரைவிலேயே தமக்குள் அடித்துக்கொண்டு மடியும். பிரிட்டிஷாரின் மேலான ஆட்சியை வேண்டாம் என்று எதிர்த்தவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய முடியாது, அமைந்துவிடக்கூடாது என்பதே அந்த கனவான்களின் பெருவிருப்பமாக இருந்தது. ஏற்கெனவே இஸ்லாமியர்கள…
-
- 3 replies
- 877 views
-
-
நிர்க்கதியான அரசியற்கைதிகளும் தமிழரின் போராட்டத்தின் போக்கும் – பாகம் 1 - 23 ஆகஸ்ட் 2014 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இனியவன்:- இன்று அரசியற்கைதிகள் என்றால் யார் என்று கேட்குமளவிற்கு போரின் பிந்திய தமிழரின் அரசியற்போக்கு இருக்கும் இந்தக் கேவலமான சூழ்நிலையில் அரசியற்கைதிகள் என்றால் யார் என்ற கேள்வியிலிருந்தே இப்பத்தியினை எழுத வேண்டும். சுருங்கக்கூறின் சிங்களப் பேரினவாத அரசு யாரையெல்லாம் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் பட்டியற்படுத்தி சிறைகளிலும் தடுப்பு நிலையங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றதோ அவர்கள் எல்லோரும் அரசியற்கைதிகளாவார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான அரசியற் கைதிகள் மகசீன…
-
- 0 replies
- 411 views
-
-
உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார். சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் …
-
- 4 replies
- 600 views
-
-
சாட்சியமளிக்குமா கூட்டமைப்பு? - யதீந்திரா படம் | REUTERS/Dinuka Liyanawatte, Themalaysianinsider ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த அரசின் மீதான விசாரணை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அளப்பரிய நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு தமிழ் மக்களின் தற்போதைய தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்ப, மேற்படி விசாரணை தொடர்பில் வெளிப்படுத்தி வரும் அதீத நம்பிக்கையே பிரதான காரணமாகும். அரசன் எவ்வழியோ, அவ்வழியே குடிகள் என்றொரு கருத்துண்டு. அதே போன்று ஒரு மக்கள் கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசியல் அமைப்பானது, எதனை மக்கள் முன்வைக்கிறதோ, அதுவே மக்களது நம்பிக்கையாகவும் பரிணமிக்கிறது. அந்த வகையில், தமிழ் மக்கள் ஜ.நா. மனித உரிமைகள் பேரவை…
-
- 0 replies
- 485 views
-
-
இந்தக் கட்டுரை எழுதுவதற்கான குறிப்புக்களை எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அவுஸ்திரேலிய ஊடகமான கிறீன் லெப்ட் (Green Left Weekly) வாராந்த சஞ்சிகையை மேற்கோள் காட்டி மேற்படி செய்தி இலங்கையின் ஊடகங்களால் முக்கியத்துப்படுத்தப்பட்டிருந்தது. அந்த செய்தி இதுதான் - சமீபத்தில் சீனா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அங்கு ஒரு உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அதாவது, திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள சீனக்குடா பகுதியில் 1200 ஏக்கர் நிலப்பகுதியை நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு வழங்கியிருக்கின்றார். இது பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி ((defense-related development) என்னும் அடிப்படையில் சீனாவினால் பயன்படுத்தப்படவுள்ளது. இ…
-
- 0 replies
- 760 views
-
-
காஸா: எரிந்து கொண்டிருக்கும் நேரம் சேரன் கன்னும் பத்து நிமிடங்களில் உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியேறிவிட வேண்டும். சரியாகப் பதினோராவது நிமிடம் உங்களுடைய வீடு ஏவுகணையால் தகர்க்கப்படும்.” இஸ்ரேல் படையினரிடமிருந்து தொலைபேசியில் இந்த எச்சரிக்கை வந்ததும் மைஸா சலீம் தர்ஸாவின் மாமா, மாமி, உறவினர்கள், குழந்தைகள் என இருபது பேர் அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். மைஸாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஹமாஸ் அமைப்புடனோ அல்லது காஸாவில் இயங்கும் மற்றொரு அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கும் எத்தகைய உறவும் இல்லை. காஸாவில் இருப்பவை வீடுகள் அல்ல. பெரிய கட்டிடத் தொகுதிகளில் தொடர் குடியிருப்புகள். மாடியிலிருந்து இறங்கித் தெருவுக்கு வருவதற்கே ஆறு அல்லது ஏழு …
-
- 1 reply
- 909 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் மிகக்கௌரவமான முறையில் தம் ஸ்தாபனங்களை கலைத்து விட்டு தங்களுடைய உறுப்பினர்களையும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணையுமாறு கூறுவதே சரியானதாகும். அதற்காக தமிழர் விடுதலை கூட்டணியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மன்னன் வீணை வாசித்துக்கொண்டிருந்தான் என்ற பழமொழிக்கு ஒப்ப தமிழ் தேசியகூட்டமைப்பும் இலங்கை தமிழரசுகட்சியும் செயற்பட முனைவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் …
-
- 10 replies
- 749 views
-
-
சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சில சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இவை அனைத்திற்கும் பின்னால், அரசின் திரைமறைவு கரம் இருப்பதாக குற்றஞ்சாட…
-
- 1 reply
- 523 views
-
-
மார்க்சியம் என்றால் என்ன? _ தோழர் தியாகு
-
- 0 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவில் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான முக்கியமான கேந்திர நிலையமாக திருகோணமலை விளங்குகிறது என்று சிலோன் ருடே ஆங்கில நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் கார்வண்ணன். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். சீன அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனம் ஒன்று திருகோணமலையில், விமானப் பராமரிப்பு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி அளித்திருந்தால், அதுபற்றித் தெரியப்படுத்துமாறு அவர் கோரியிருந்தார். அந்த திட்டம், இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை மீறுகின்ற ஒன்று என்றும், அது இந்தியாவுக்குப் ப…
-
- 0 replies
- 790 views
-
-
இயக்குனர் பிரசன்ன விதானகேயின் புதிய திரைப்படமான ‘ஒப நத்துவ ஒப எக்க’ (With you Without you ) தாஸ்தயேவ்ஸ்கி 1876-ல் எழுதிய A Gentle Creature என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. போருக்குப் பின்னான இலங்கையில் தத்தளிக்கும் இனத்துவ உறவுகளைச் சித்திரிக்கும் இந்தத் திரைப்படம் சர்வதேசப் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்று மதிப்புக்குரிய விருதுகளையும் வென்றிருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவின் முக்கியமான ஆறு நகரங்களில் பதினேழு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. சென்னையில் திரையிடப்பட்ட பி.வி.ஆர். திரையரங்கிற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகளால் படத்தைத் தொடர்ந்து திரையிட முடியாது எனத் திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மாற்றுச் சி…
-
- 13 replies
- 2.4k views
-
-
போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும் - யதீந்திரா படம் | PEDRO UGARTE/AFP/Getty Images இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர் டெஸ்மன் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் கிறேன் ஆகியோரே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்கள் ஆவர். பிரித்தானிய சட்டவாளரான சேர் டெஸ்மன் டி சில்வா (Sir Desmond de Silva) சர்வதேச போர் குற்ற விடயங்களை கையாளுவதில் மிகுந்த தேர்ச்சியுடைவராவார். சியாரா லியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் தலைமை சட்ட…
-
- 0 replies
- 557 views
-
-
-கே.சஞ்சயன் தமிழ்நாட்டில் தணிந்து போய்க்கிடந்த இலங்கை அரசுக்கு எதிரான உணர்வலைகள், இப்போது மீண்டும் கொதி நிலைக்கு வந்திருக்கின்றன. இதற்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினையோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களோ காரணமல்ல. இலங்கை பாதுகாப்பு அமைச்சே இந்த பிரச்சினையை உருவாக்கி விட்டது. எங்கோ சிறகடித்துப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய - இலங்கை உறவுகளுக்கு கடிவாளம் போட்டு அடக்கி விடும் சூழலை பாதுகாப்பு அமைச்சே ஏற்படுத்தி விட்டது. ஒரு வகையில் சொல்லப் போனால், இதனை யானை தன் தலையில் மண்ணை வாரியது போல என்று கூறலாம். ஏனென்றால், புதுடெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமைந்த நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், கொழும்புக்குச் சாதகமான உற்சாகத்தை ஏற்படுத்தத்தக்க …
-
- 2 replies
- 1.1k views
-
-
நன்றி: ஆனந்த விகடன் - 13 Aug, 2014. வரலாற்றின் குப்பைத் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கு, வலியப் போய் மலர் மாலைகள் சூட்டவிருக்கிறது இந்தியா! ராஜபக்ஷேவை உலகின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கானதருணம் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் ராணுவப் பாடம் கேட்பதற்குத் தயாராகிறது இந்தியா. இந்த மாதம் 18-20 தேதிகளில், கொழும்பில் நடக்கும் ராணுவக் கருத்தரங்குக்கு இந்தியப் பிரதிநிதிகள் செல்லப் போவதாகத் தகவல். செப்டம்பர் மாதம் 18-21 தேதிகளில், ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு ஒன்றைக் கூட்டி, 'ஆசிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புதல்’ என்பது பற்றி பேச இருக்கிறார் ராஜபக்ஷே. போகிற போக்கைப் பார்த்தால், அதற்கும் பா.ஜ.க தனது பிரதிநிதியை அனுப்பக்கூடும்ப…
-
- 0 replies
- 678 views
-
-
அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம் - on June 2, 2014 தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அர…
-
- 9 replies
- 1.4k views
-
-
இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பம் கொடுத்தபோது எங்கள் குழுவில் ஒருவர் “ பாலஸ்தீனத்தைப் பார்க்கப் போகின்றேன்” என தனது விண்ணப்பத்தில் எழுதியதால் எங்கள் எல்லோருக்கும் விசா மறுக்கப்பட்டது. பாலஸ்தீனம் என்பது வேறு நாடு என்கின்ற பொருள்படக் கூறிவிட்டோமாம். இதற்கு, பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையானது 1994ல் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இல்ரேல் அரசாங்கத்திற்குமிடையிலான ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பேரில் ஓர் இடைக்கால நிர்வாக அதிகாரமாக உருவாக்கப்பட்டது. அது ஐந்து வருடங்களு…
-
- 5 replies
- 826 views
-
-
ஈராக் மதவாதத்தின் எழுச்சியால் குர்திஸ் (குர்திஸ்தான்) இனம் விடுதலை பெறுமா ? துருக்கிய எல்லையில் மதவாதத்தை அடிப்படையாக கொள்ளாத நாடு ஒன்று உருவாகுவது தமக்கு பாதுகாப்பானது என பார்க்கிறது. உள்நாட்டு குர்திஸ் மக்களை சாந்தப்படுத்தவும் தீர்மானித்துள்ளது. துருக்கிய பிரதமர் முதன் முறையாக “குர்திஸ்தான்” என்ற சொல்லை உச்சரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலை நாடுகளிலே தமிழீழ விடுதலை ஆர்வலர்களுக்கும் குர்திஸ் இனவிடுதலை ஆர்வலர்களுக்கும் இடையில் மிக அன்னியோன்னியமான உறவு ஒன்று உள்ளது. ஆனால் மிக விரைவில் தமிழின விடுதலை ஆர்வலர்கள் குர்திஸ் இனத்தவர்களுக்கு அவர்களின் விடுதலை வெற்றிக்கான வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட உள்ளது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதும், பிராந்திய அரசுகளுக…
-
- 0 replies
- 3.1k views
-
-
சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும் மனித சமுதாயத்தில் சட்டங்களும் நியதிகளும் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றன. சமதாயக் கட்டுக்கோப்பிற்கும் அமைதியான வளர்ச்சிக்கும் சமுதாய நியதிகளும் கோட்பாடுகளும் உறுதுணையாக விளங்குவதாகச் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நியதிகள் பன்னெடுங்காலமாகப் பலராலும் பரிசோதிக்கப்பட்டும் பயன்படுத்தியும் வந்திருக்கின்றன. எனவே சமுதாயக் கட்டுப்கோப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதனவாகச் சட்டங்கள் உள்ளன. அதுபோல் சர்வதேச அரசியல் நடைமுறைகளிலும் இத்தகைய நியதிகளும் சட்டங்களும் உருவாகின. “சர்வதேச அரங்கில் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டுடனும் தொடர்பில்லாமல் வாழ முடியாது. தொடர்புகள் இருந்தால் தொல்லைகள், மோதல், முரண்பாடுகள் முளைப்பது இயற்கை. இத…
-
- 0 replies
- 4.4k views
-