அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
சம்பந்தனின் தலைமைத்துவத்தின் மீதான நெருக்கடிகள் - யதீந்திரா இன்று ஈழத்தமிழர் அரசியல் என்றால் - அது சம்பந்தன் என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சமீபத்தில் வாசித்த ஆங்கில கட்டுரை ஒன்றில் தமிழர் அரசியல் திருகோணமலையை மையப்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையாளர் திருகோணமலை என்று குறிப்பிட்டிருப்பது, இரா.சம்பந்தன் திருகோணமலையை சேர்ந்தவர் என்னும் பொருளிலாகும். அந்தளவிற்கு சம்பந்தனின் தலைமைத்துவம் இன்று உற்று நோக்கப்படுகிறது. எனவே இன்றைய அர்த்தத்தில் சம்பந்தனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையாள முடியாது. எவ்வாறு 2009இற்கு முன்னர் பிரபாகரனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையிலெடுக்க முடியவில்லையோ, அத்தகையதொரு நிலைமையே தற்போது சம்பந்தன் விடயத்தில் …
-
- 1 reply
- 653 views
-
-
மாற்று அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உள்ள தடைகளும் வாய்ப்புகளும் முத்துக்குமார் மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தமிழ் மக்களுக்கு தேவையாக உள்ள போதும் அதனை கட்டி எழுப்புவதில் பல தடைகளும் காணப்படுகின்றன. அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளாகும். கூட்டமைப்பு - அரசாங்கம், இந்தியா, சர்வதேச சக்திகள் என்பவற்றிற்கு தலையினையும், தமிழ் மக்களுக்கு வாலையும் காட்ட முற்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்றுகின்ற அமைப்பாக தன்னைக் காட்டுகின்றது. தேர்தல் காலங்களில் இந்த வெளிப்படுத்துகை அதி உச்சநிலைக்குச் சென்று விடுகின்றது. இதனால் தான் 'பிரபாகரன் மாவீரன்' என வடமாகாணசபைத் தேர்தல் காலத்தில் வ…
-
- 0 replies
- 604 views
-
-
சம்பந்தரின் அறவழிப் போராட்டம் - நிலாந்தன்:- 15 டிசம்பர் 2013 தமிழர் தாயகப் பகுதிகளில் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களிற்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் தமிழ் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான அறவழிப் போராட்டத்தை கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்று எச்சரித்துள்ளார் சம்பந்தர். ஜப்பானின் சிறப்புத்தூதுவர் யசுசி அகாசி அண்மையில் 23ஆவது தடவையாக இலங்கைக்கு வந்தபோது அவரைச் சந்தித்த சம்பந்தர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இவ் அறவழிப்போராட்டத்தை வேறு எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் அகாசியிடம் கூறியிருக்கிறார். சம்பந்தரோ அல்லது கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்களோ இப்படிக் கூறுவது இது தான் முதற் தடவையல்ல.…
-
- 0 replies
- 435 views
-
-
நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன் டிசம்பர் மாதம் 5 ஆம்திகதி 2013 அன்று தென்னாபிரிக்க நேரம் இரவு 8 மணி 20 நிமிடமளவில் நெல்சன் மண்டேலா இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். தென்னாபிரிகாவின் இன்றைய ஜனாதிபதி ஜகோப் சூமா மரணச் செய்தியை உலகிற்கு அறிவித்தார். தென்னாபிரிக்க நிற வெறி அரசுக்கு எதிராகப் போராடிய மண்டேலாவின் வரலாற்றில் ஆயிரம் சுவடுகள் எம்மக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அவர் தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கினார் என்பதையும் அதனை சரியான திசைவழியில் தான் ஆரம்பித்தார் என்பதையும் அதனால் தான் அது வெற்றிக்கான வழிகளைத் திறந்துவிட்டது என்பதையும் பலர் சாட்சியாகச் சொல்கிறார்கள். அமரிக்க ஜனதிபதி ரொனால்ட் ரீகனும் பிரித்தானியப் பிரதமர் மாக்ரட் …
-
- 5 replies
- 1.3k views
-
-
Annonces Google 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார். 1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியை கற்றார். 1958 ஆம் ஆண்டு மண்டேலா வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார். 1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்றார். 1956 இல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக புரட்சியை மேற்கொண்டார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 மேலதிகமான தோழர்களும் தென்னாபிரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர். 1961 ஆம் ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கூட்டமைப்பை திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சி - மாற்று அரசியல் இயக்கமே இன்றைய தேவை முத்துக்குமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் இயக்கம் தேவை என்கின்ற விவாதம் பல தளங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலை முன்நோக்கி நகர்த்துவதற்கு பதிலாக பின் நோக்கி நகர்த்துவதாகும். தமிழர் அரசியல் 1920 தொடக்கம் 1949 வரை சமவாய்ப்புகளை கோருகின்ற அரசியலாக இருந்தது. பின்னர் 1949 தொடக்கம் 1968 வரை தமிழர் தாயகத்தை வரையறைத்து அதற்கு அதிகாரத்தை கோருகின்ற சமஸ்டி தீர்வை முன்வைப்பதாக அமைந்தது. 1968 இற்குப் பின்னர் சமஸ்டி தீர்வும் சரிவராத நிலையில் தனிநாட்டுப் போராட்டமாக ப…
-
- 0 replies
- 836 views
-
-
'சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடர்பறாமல் முன்னெடுக்கப்படுகின்றது' - ஊடக ஆய்வு [ ஞாயிற்றுக்கிழமை, 08 டிசெம்பர் 2013, 10:55 GMT ] [ நித்தியபாரதி ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமவலுவில் செயற்பட வேண்டும். அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கம் மீது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவது மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் அழுத்தங் கொடுப்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது தங்கியுள்ளது. இதில் புலம்பெயர் சமூகம் பெரும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு The Diplomat ஊடகத்தில் ஊடகவியலாளர் Kim Wall* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங…
-
- 0 replies
- 636 views
-
-
வடமாகாண சபையை ஒரு அதிகார மையமாகக் கட்டியெழுப்ப முடியுமா? நிலாந்தன்:- 08 டிசம்பர் 2013 இலங்கைத் தீவில் இரண்டு அரசியல் மையங்கள் அல்லது அதிகார மையங்கள் காணப்படுகிறதா? ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் கலாநிதி பியானி வடக்கிற்கு வந்தபோது வடமாகாண சபையின் முதலமைச்சரைக் கண்டுவிட்டே சென்றிருக்கிறார். வடமாகாண சபை உருவாக்கப்பட்ட பின் நாட்டுக்கு வரும் சிறப்புத்தூதுவர்கள் அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அல்லது பன்னாட்டுப் பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டுத் தலைவர்கள் போன்றோரில் பெரும்பாலானவர்கள் வடக்கிற்கு வந்து முதலமைச்சரைச் சந்தித்துவிட்டே போகிறார்கள். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்படியாக வரக்கூடும் என்று ஒரு செய்தி அண்மையில் வெளிவந்தது. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும…
-
- 0 replies
- 631 views
-
-
ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் என்னும் ஆயுத இயக்கம் அழிவுற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு வருடங்களில் நடைபெற்ற விடயங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த எந்தவொரு விடயமும் தமிழர்களுடன் நேரடியான தொடர்புடையவை அல்ல. அனைத்தும் யுத்த வெற்றிக்குச் சொந்தமான, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தொடர்பானவை. உள்ளுக்குள்ளும் வெளியிலும் அரசாங்கம் எதிர்கொண்ட, எதிர்கொண்டு வருகின்ற அனைத்தும் அரசாங்கத்தின் தொடர்சியான இருப்புடன் தொடர்புபட்டவையாகும். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆட்சிக்கவிழ்ப்பு அரசியல் பிரவேசம், மற்றும் யுத்தவெற்றிக்கு உரியவரான ஜனாதிபதி ராஜபக…
-
- 0 replies
- 591 views
-
-
விழலுக்கு இறைத்த நீராகும் வடக்கு மக்களின் நம்பிக்கை - செல்வரட்னம் சிறிதரன் 07 டிசம்பர் 2013 அதிகாரப் பரவலாக்கலா அல்லது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதா, எது முக்கியத்துவம் மிக்கது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. வடமாகாண சபையின் மூலம் மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற சேவைகளைச் செய்ய வேண்டிய தேவை முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது. மக்களுடைய வாழ்வாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத் தேவையும் இருக்கின்றது. அதே நேரம் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் குறிப்பாக அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டியதும், முக்கியமாகும். ஏனெனில், போருக்குப் பின்னரான காலப்பகுதிய…
-
- 0 replies
- 577 views
-
-
வரலாற்றுக்காலத்தில் மக்கள் தமது இனங்களிற்குள் போரினால் படும் துன்பங்களைத் தவிற்பதற்காகச் சில அடிப்படைச் சட்டங்களை வகுத்துக் கொண்டார்கள். இந்தப் போர்கள் சிறிய அளவாக நடந்த போது அந்தப் போரில் கலந்து கொண்ட அணிகள் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொண்டன. ஆனாலும் நவீனகால யுத்தங்களின் அளவும் சட்ட மீறல்களும் இந்தச் சட்டத்தை மேலும் இறுக்குவதற்கான வழியை வகுத்துக் கொண்டது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் செம்பிறை இயக்கமும் இணைந்து ஹென்றி டனன்ட் தலைமையில் 1864ம் ஆண்டு முதலாவது மனிதாபிமானச் சட்டத்தினை (Inernational Humanitarian Law) உருவாக்கி அதனைச் சண்டையிடும் அணிகள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை உருவாக்கினார்கள். 1949ம் ஆண்டிலிருந்து ஜெனிவா உடன்படிக்கையானது. தனது முக்கியமான உடன்படிக்கைகளைத் த…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு மாகாணத்தை மையாகக் கொண்டுதான் பிரச்சினை ஆரம்பித்தது. காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதுதான் தமிழத்தேசிய கோட்பாடு, தமிழர் தாயம் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. இறுதிக் கட்ட போர் தொடர்பாகவும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் பேசப்படுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணம் என்பதும் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி என்ற பேச்சும் நலிவடைந்துள்ளன. தற்போது இனப்பிரச்சினை என்ற பேச்சு வடமாகாண பிரச்சினையாக மட்டும் மாறிவிட்டது. தமிழத்தேசிய கூட்டமைப்பு தமிழத்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இனப்பிரச்சினை வடபகுதி பிரச்சினையாக மாறிவிட்டதை நினைத்து கவலைப்படுவதாகவும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வடபகுதியில் தினமும் நடக்கின்றன. ஆனால…
-
- 4 replies
- 948 views
-
-
‘ராஜபக்ச அச்சத்தில்? – டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு… நன்றி : அவந்த ஆட்டிகல வன்னிப் படுகொலைகளை நடத்திய வேளையில் அழிக்கும் ஆயுதங்களைச் ’சட்டரீதியான’ மூலங்களூடாகவே மகிந்த பாசிச அரசு பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் பயன்படுத்திய பொஸ்பரஸ் கொத்துக்குண்டுகளிலிருந்து இரசாயன ஆயுதங்கள் வரை இலங்கை அரசு எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.இது வெறுமனே தமிழின் வாதம் தமிழின உணர்வு என்ற எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட மக்களை நோக்கிச் செல்லவேண்டும். கொலைகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமும் அதன் ஆதரவாளர்களும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்கள் மக்கள் மத்தியில் நடமாடுவதே மனித குலத்திற்கு ஆபத்…
-
- 8 replies
- 1.5k views
-
-
இந்தியாவின் பிடியில் இருந்து விலகி சர்வதேச மயப்படும் இலங்கை விவகாரம் - செல்வரட்னம் சிறிதரன் 23 நவம்பர் 2013 மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை என்று சொல்வார்கள் இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த நிலைமையிலேயே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் பாரதத்தின் பிடிக்குள் அடங்கியிருந்த இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம், இந்திய அரசிடமிருந்து கைநழுவி சர்வதேசமயப்படுகின்றதா என்ற சந்தேகமும், நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாட்டையடுத்து எழுந்துள்ளது. கொழும்பு மாநாட்டுத் தலையிடி பொதுநலவாய அமைப்பி;ன் உறுப்பு நாடு என்ற வகையில் அந்தஸ்து ரீதியாக கொழும்பில் நடைபெற்ற பொது…
-
- 2 replies
- 1.2k views
-
-
கடந்த வார ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இரண்டு விவகாரங்கள் காணப்பட்டன. ஒன்று முன்னணி ஊடக நிறுவகம் ஒன்றுக்கு எதிராக மங்கள சமரவீர வழக்குத் தொடுத்துள்ளமை. இரண்டாவது ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்துகின்ற அல்லது அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகின்ற எவரையும் சிறிலங்கா அரசாங்கமானது தடைசெய்யும் என்கின்ற அறிவிப்பு. சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் என்பது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீர, முன்னணி ஊடக நிறுவகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தமை தொடர்பில் சிலர் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ள அதேவேளையில், இந்த ஊடகமானது தொழில்சார் ஒருமைப்பாட்டை ம…
-
- 0 replies
- 475 views
-
-
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமும் தமிழ் மக்களும் முத்துக்குமார் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை இலங்கை ஜனாதிபதி நவம்பர் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் தொடர்பான பெரிய ஒதுக்கீடுகள் ஏதும் இருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் சிறப்பு ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசாங்கம் இதுபற்றி அக்கறை எதையும் செலுத்தவில்லை. வழக்கம் போலவே பாதுகாப்பு அமைச்சிற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கினை பொறுத்தவரை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரங்களை உருவாக்கவேண்டிய தேவை இருந்தது. குறிப்பாக வீடுகளை கட்டுதல், தொழில்களை உருவாக்குதல், பாடசாலைகள் போன்ற பொது நிறுவ…
-
- 1 reply
- 591 views
-
-
பேசாப் புள்ளி விபரங்கள் - நிலாந்தன் 01 டிசம்பர் 2013 போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்திழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறப்புச் செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்னிட்டு அரசாங்கம் செய்துவரும் மற்றொரு வீட்டு வேலையே இது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போரில் ஏற்பட்ட இழப்பு விபரங்களைக் குறித்து திருத்தமானதும், விஞ்ஞானபூர்வமானதும் அனைத்துலகப் பெறுமனங்களிற்கு அமைவானதுமாகிய புள்ளி விபரங்களைக் காட்டவேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. உண்மையை அங்கீகரிப்பதிலிருந்தே நல்லிணக்கம் ஆரம்பமாகின்றது. புள்ளி விபரங்கள் உண்மையின் தவிர்க…
-
- 0 replies
- 687 views
-
-
நான் தேசபக்தனா என்கிற கேள்வியை அடிக்கடி கேட்க முடிகிறது.. அவர்களுக்கான எனது சிறுபதிலை பதிவு செய்துகொள்ள விரும்புகிறோம்..... இந்திய தேசத்தின் மீதான பக்தி என்பது மக்கள் மீதானதா அல்லது அரசு இயந்திரத்தின் மீதா என்பதான கேள்வி எழுந்த சமயத்தில் தான் இந்தியா என்பது அதன் அதிகார வர்க்கமும், ஆளும் கட்சிகளும், தனிப் பெரும் நிறுவனங்களும் என்று புரிந்தது.. இந்தியா என்கிற கருத்தியலில் நம்மைப் போன்ற சராசரி மக்களுக்கு இடமில்லை.. நம் கருத்துக்களுக்கோ, நேர்மைக்கோ இடமில்லை.. காந்தியோ, அம்பேத்காரோ, பகத்சிங்கோ இன்னபிற தலைவர்களோ கொடுத்துச் சென்ற அறம், மானுடத்தன்மை போன்றவைகளை கட்டிக்காக்கும் தேசமோ இல்லை இது.. இந்த தேசியம் நமக்காக இல்லை... இந்த ஒட்டுமொத்த கும்பலும் தனது சுயநலத்திற்காக கொள்ளையடி…
-
- 0 replies
- 715 views
-
-
எந்தவொரு நாடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போது அவற்றை நியாயப்படுத்துவதற்காக மற்றைய நாடுகளில் இடம்பெறும் மீறல்களைச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது அல்லது பூகோள மூலோபாய பேரம்பேசலில் ஈடுபடுகின்றது என்பதே உண்மையாகும். இவ்வாறு The New Indian Express ஊடகத்தில் Anuradha M chenoy* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மனித உரிமைகள் என்பது எப்போதும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் போட்டியிடுகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. மனித உரிமைகள் என்பது வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது என மூலோபாய வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். உலக நாடுகள் தமது நாடுகளின் நலன்கள் மற்றும் அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்க…
-
- 0 replies
- 768 views
-
-
டேவிட் கமரூனின் யாழ் பயணமும் சில யதார்த்தங்களும் உலகின் மிக சக்திமிக்க தலைவர் ஒருவர் வருகின்றார், தான் வரப் போவதை முன்னதாகவே அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பு பல பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் உண்டாக்குவதுடன், அவரது சர்வதேச நிலைப்பாடுகள் காரணமாக, அவரது பாதுகாப்பானது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகிறது. அவரது சொந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முடிவின் படி லண்டனில் இருந்து குண்டு துளைக்காத நான்கு லேன்ட் ரோவர் வாகனங்கள் கொண்டு வரப் பட்டன. மேலும் அவரது பயண நிகழ்ச்சி நிரல் அவரை வரவேற்க்கும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவின் கையில் தான் இருக்கும். அவர்கள் தான் அவரது பாதை, பாதையில் வரும் தடை நீக்குதல் போன்ற விடயங்களை முடிவு செய்வார்கள். இந்த வகையில், இலங்கை அரச…
-
- 24 replies
- 3k views
-
-
டேவிட் கமரூனின் யாழ் பயணமும் பயன்படுத்தத் தெரியாத தமிழ்த்தரப்பும்! முத்துக்குமார் பொதுநலவாய அமைப்பு என்பது காலனித்துவ முடிவிற்குப் பின்னரும் தனது செல்வாக்கினை அந்நாடுகளில் நிலைநிறுத்துவதற்காக பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிரித்தானிய மகாராணியாரே அதன் தலைவராக விளங்குகின்றார். பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் அம்மாநாட்டிற்குச் செல்லாமல் இருக்க அதனால் முடியாது. இதைவிட அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்திடம் நேர்மறை அணுகுமுறை மூலம் இலங்கையைப் பணியவைத்தல் என்ற கொள்கை நிலைப்பாடும் இருந்தது. இந்த இரண்டும் தான் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் மாநாட்டில் கலந்துகொண்டதற்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..? இந்த ஆண்டு கொமன் வெல்த்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் அது சனல் 4 நிருபர் கெலும் மக்ரேதான் என்று துணிந்து கூறலாம். அப்படிக் கூறுவதற்கான அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன, 2009 வன்னிப்போரில் சிறீலங்கா எவ்வளவு மடைத்தனமான தவறுகளைப் புரிந்து இப்போது கையறு நிலையில் நிற்கிறதோ.. அதைவிட பெரிய தவறை கெலும் மக்ரே விடயத்தில் இழைத்திருக்கிறது. சரியாக நடந்திருந்தால்.. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன் வெல்த் கதாநாயகனாகியிருப்பார்… பாவம் தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சிறீலங்கா அனுப்பி அந்த வாய்ப்பை பறிகொடுத்தார். கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கும்வரை கதாநாகனாக இருந்தவர் கனேடிய பிர…
-
- 18 replies
- 2.6k views
-
-
குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த! யுஹான் சண்முகரட்ணம் (தமிழில் ரூபன் சிவராஜா) நோர்வேயின் Klassekampen (The Class Struggle)நாளிதழில் கடந்த வாரம் (09.11.13) வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். கட்டுரையை எழுதிய யுஹான் சண்முகரட்ணம் Klassekampen நாளிதழின் வெளிநாட்டுவிவகாரங்களுக்கான பொறுப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மோசமான போர்மீறல் குற்றச்சாட்டுகள் சிறிலங்கா அரசதலைவரை நோக்கி முன்வைக்கப்படுகின்ற நிலையிலும் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையேற்கவுள்ளார். பிரித்தானிய இளவரசர் சார்ஸ், பிரித்தானியாவின் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் ஆகியோர் உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள் - நிலாந்தன் 17 நவம்பர் 2013 கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம் ஈர்க்க முடியும் என்று அவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும், கூட்டமைப்பினரும் நம்புகின்றார்கள். உள்நாட்டில் அவர்களால் இதைத்தான் இப்போதைக்குச் செய்ய முடியும். அதாவது, அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது. இதற்குமப்பால் போக அவர்களால் முடியாமலிருக்கிறது என்பதே கள யதார்த்தம். வலி வடக்குத் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தகையதொரு பின்னணியில் இப்போராட்டங்களை இரண்டு தளங்களில் வைத்துப்…
-
- 0 replies
- 681 views
-
-
ஈழமும் மிதவாத அரசியலும் தீபச்செல்வன் ஈழத்தில் மிதவாத அரசியலின் தோல்விதான் ஆயுதப்போராட்டத்திற்குக் காரணமாக இருந்தது. சிங்கள மிதவாதத் தலைவர்கள் ஈழ மக்களின் உரிமைப் பிரச்சினையை சிங்களப் பேரினவாத நோக்கத்துடன் பயங்கரவாதமாகவே சித்தரித்து உரிமை மறுப்பு மற்றும் இன அழிப்பு அரசியலை மேற்கொண்டார்கள். அவர்களுடனான அரசியல் நடவடிக்கைகளின்மூலம் எதையும் செய்ய முடியாத நிலை தமிழ் மிதவாதத் தலைவர்களுக்கு ஏற்பட்டது. காலத்திற்குக் காலம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடந்தேறிய பொழுதும் சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு சிறு துறும்பைக்கூட பகிரவில்லை. ஈழம் மிதவாத அரசியால் பல்வேறு பாதிப்புகளையும் மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்கள…
-
- 2 replies
- 1.1k views
-