Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இன்றைய திகதியில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், ஒரு பஸ் டிரைவரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத (!) இலங்கை அரக்கர்கள், ஒரு பஸ் டிரைவரின் மகளைப் பார்த்து நடுங்குவதாவது - என்று நம்பிக்கையே இல்லாமல் திருப்பிக் கேட்பீர்கள். ஆனால், அந்த பஸ் டிரைவரின் மகள் பெயரைச் சொன்னால், நான் சொல்வதை நிச்சயமாக நம்புவீர்கள். அவரது பெயர், நவநீதம் பிள்ளை. இப்போது சொல்லுங்கள் நம்புகிறீர்களா இல்லையா! (சும்மா பேரைச் சொன்னாலே நடுங்குதுல்ல!) ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம்பிள்ளை மட்டும் இல்லையென்றால், இந்நேரம் 'இனப்படுகொலை' என்கிற குற்றச்சாட்டை, செம்மணிப் புதைகுழிக்குப் பக்கத்திலேயே குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள் ர…

    • 5 replies
    • 1.6k views
  2. ஐயா மகாஜனங்களே உங்ககிட்ட கொஞ்சம் மனம்விட்டு பேசனுங்கய்யா. சில வெப்சைட்டுகள்ள வர்ற நியூசுகளை வாசிக்க காளமேகம் றொம்ப கடுப்பு ஆயிடுச்சு. ஏதோ நம்ம அரசியலப்பற்றிச் சொல்லியிருக்கிறாங்கள், பாத்துப் பயனடைவம் எண்டு இந்த லிங்கை கிளிக் பண்ணினால்........ http://inioru.com/?p=36664 ஏம்பா இப்பிடி? ஒண்ணும் புரியலீங்க, அதுதான் நம்மளுக்கு தெரிஞ்ச தமிங்கிலத்தில நாம நினைக்கிறத விசயத்தை சொல்லியிடலாம் என்டு நினைக்கிறனுங்கய்யா. மாகாண சபைத்தேர்தலில நம்ம நீதவான் விக்கினேஸ்வரன் ஐயா முதலமைச்சரா போட்டி போடப்போறார் என்று முடிவாயிடிச்சுங்கய்யா. நீதவான் சொல்லுறாருங்கய்யா ‘விட்டுக் கொடுப்பை நிர்ப்பந்திக்கும் கடுமையான அழுத்தம் வெளியில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ அதிகாரத்தில் இருப்பவர்கள் மீ…

  3. வட மாகாணசபைத் தேர்தலிற்கான அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்ட நாள் முதல், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற காரசாரமான உரையாடல்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மத்தியில் உருவாகி இருந்ததை மக்கள் அறிவார்கள். அந்த விவாதங்கள் அடங்கி, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக, ஓய்வுபெற்ற நீதிபதி கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து, அரச தரப்பால் களமிறக்கப்படுவதாக, ஊடாகப்பரப்பில் அதிகம் பேசப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப்பொறுப்பாளர் தயா மாஸ்டர், ஐ.ம.சு.மு.வேட்பாளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட்ட விவகாரம் குறித்து, தென்னிலங்கையில் விவாதம் தொடர்கின்றது. இவைதவிர, அரசோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்று, முஸ்லிம் கொங்கிரசின் தவிசாளர் ப…

  4. இலங்கையில் 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைக்கலன்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ராஜபக்சேக்களின் அரசியல் செல்வாக்கு அசைக்க முடியாதவாறு உறுதியாக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பன்னாட்டு மட்டத்தில் ராஜபக்சேக்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும் அதை அவர்கள் உறுதியுடன் எதிர்த்து நிற்பதும் சிங்களவர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இலங்கையின் விலைவாசி அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சனை போன்றவற்றை வைத்து அரசுக்கு எதிரான ஒரு பெரும் கிளர்ச்சிக்கு யாரும் தூபமிட முடியாத நிலை இலங்கையில் இருக்கிறது. ஆனால் Standard & Poor எனப்படும் நாடுகளின் கடன்படுதிறனை ஆய்வு செய்து நிரைப்படுத்தும் நிறுவனம்…

    • 0 replies
    • 520 views
  5. இறைவனின் சீற்றம் சென்ற யூன் [2013] மாதத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் மிகமோசமான பேரழிவு ஏற்பட்டது.அதுபற்றிய உண்மைகளை இந்திய ஆட்சியாளர்களும் அவர்களை ஆதரிக்கும் ஊடகங்களும் அமுக்கிவிட முயன்றன.எனினும் பிணக்காடாகக் காட்சியளித்த அப்பகுதிபற்றிய செய்திகள் வெளியே கசிந்துள்ளன." சுமார் 50ஆயிரம் பேர்வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது" [குமுதம்:03-07-2013;பக்.137]. இறந்தவர் எண்ணிக்கை பற்றி உறுதிபடக் கூறமுடியாதெனினும் நிகழ்ந்தது "இமாலயச்சுனாமி" எனக்குறிப்பிடப்பட்டிருப்பது அதன் பாரிய அளவினைச் சுட்டுகிறது எனலாம். கேரளமாநிலத்திலிருந்து அங்கு உதவிப்பணிக்காகச் சென்ற மருத்துவர்குழுவின் கருத்துப்படி அங்குள்ள மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்துள்ளனர்…

  6. வடமாகாணசபைத் தேர்தல் யாருடைய நலனுக்காக – வேல்ஸ் இல் இருந்து அருஷ் வடமாகாண சபைக்கான தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான சர்ச்சைகளே தற்போது சிறீலங்காவில் பேசப்படும் முக்கிய விடயம். அதிலும் வடமாகாண சபைத் தேர்தலின் மூலம் தமிழீழம் உருவாக்கப்பட்டுவிடும் என்ற கருத்தை விதைப்பதில் தென்னிலங்கை இனவாத அரசியல் சக்திகள் முனைப்பாக செயற்பட்டுவருகின்றன. ஏற்கனவே தமிழ் மக்களால் 1987 ஆம் ஆண்டே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை தேர்தலின் முன்னர் முற்றுமுழுதாக செயற்திறனற்றதாக மாற்ற வேண்டும் என தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடுகின்றனர். வடமாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவோம், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என பிரச்சாரம் மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு …

  7. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் கீழ்வரும் காணொளியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உருவான நிகழ்வும், அதன் நோக்கமும் சிறிதளவில் விளக்கப்பட்டுள்ளது..! 2:20 நேரக்கணக்கில் இருந்து பாருங்கள்..! http://www.youtube.com/watch?v=gvqE0AMndCc இன்றைய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அதன் ஆரம்ப நோக்கங்களை விட்டுக் கொடுத்திருந்தாலும் பாதக நோக்கங்கள் எதையாவது காவி நிற்கிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை. குறிப்பாக, புலிகள் உருவாக்கித்தந்த இந்த அமைப்பின் முதுகில் இன்று இந்திய அரசு சவாரி செய்வது ஓரளவு ஊகிக்கக்கூடியது.. இது பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிந்தால் நன்றாக இருக்கும்.. தேசியத் தலைவருடன் அன்று காட்சி தந்த சம்பந்தன் அவர்கள் புலி அடையாளத்தை படிப்படியாகத் துறந்து வருகிறார் …

  8. தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம் - நிலாந்தன் 04 ஆகஸ்ட் 2013 ஈழப்போருக்கு முற்பட்ட காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. அது ஒரு தேர்தல் காலம். பீற்றர் கெனமன் வடமராட்சியில் ஒரு தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றினார். மைதானம் முழுவதும் சனங்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். விசிலடியும், கைதட்டும் பிரமாதமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் கெனமன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னார் ''இம்முறை எமக்கு வடமராட்சியில் ஒரு சீற்றாவது கிடைக்கும்' என்று. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. பீற்றர் கெனமனுடைய வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார். இச்சம்பவத்தின் பின் கெனமன் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருந்தார்.... ''தமிழர்கள் எம்மை நன்கு உபசரித்து விருந்தோம்புவர்கள். தேர்தல…

  9. இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும் [ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:05 GMT ] [ நித்தியபாரதி ] முத்தரப்பு உடன்படிக்கையானது, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டுமல்லாது, தொடர்பாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறைமைகளையும் நடைமுறைப்படுத்த வழிசமைக்கிறது. இவ்வாறு Iranga Kahangama* என்னும் ஆய்வாளர் கொழும்பை தளமாகக் கொண்ட Daily Mirror ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் தெரித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் வர்த்தக மற்றும் மூ…

  10. தமிழ்த் தேசியமும் விக்னேஸ்வரனின் வருகையும் - யதீந்திரா தெற்கின் கடும்போக்குவாதிகளின் பலமான எதிர்ப்புக்களையும் மீறி, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கு பின்னால் வலுவான இந்திய அழுத்தம் இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றல்ல. வடக்கு தேர்தல் தெற்கில் ஏற்படுத்திய வாதப்பிரதிவாதங்கள், அதன் அரசியல் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க, நமது சூழலிலோ அது வேட்பாளர்களை அடிப்படையாககக் கொண்டிருந்தது. தெற்கில் இடம்பெற்றது போன்று 13வது திருத்தச் சட்டம் குறித்து வாதப்பிரதிவாதங்கள் எவையும் வடக்கில் இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் 13வது திருத்தச் சட்டத்தில் ஒன்றுமில்லை என்றவாறு விமர்சித்த சில குழுவினர் கூட, இறுதியில் நீதியரசர் விக்னேஸ்வரன் வருகையுடன் தங்கள் வி…

    • 4 replies
    • 935 views
  11. உறங்காத விழிகள் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா... இல்லை விடுதலைப் போராளிகளா? விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி "விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்" என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக …

  12. எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம். - நிலாந்தன் 28 ஜூலை 2013 அண்மையில் யாழ்ப்பாணத்தில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் யாழ். முகாமையாளர் அவையின் சந்திப்பு ஒன்று நடந்தது. இதில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ''நாங்கள் அபிவிருத்திக்கோ இணக்கப்பாட்டுக்கோ எதிரானவர்களில்லை. மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றியடையும்போது அபிவிருத்தியை ஆரம்பிப்போம். மக்களுடைய தேவைகளை நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம். பலரும் நினைக்கிறார்கள், நாங்கள் நெகடிவ் திங்கிங் உடையவர்கள் என்று. உண்மையில் நாங்கள் அப்படிச்சிந்திக்கவில்லை. பொஸிடிவ் திங்கிங்கில்தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம். நாங்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. இப்போது…

    • 2 replies
    • 531 views
  13. தலைவர்கள் மட்டுமா?! -மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவர் சமுகம்- 18 ஜூலை 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனுப்பி வைத்த கட்டுரை தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, அதன் தற்போதய மென்மைப்போக்கு, அதற்கான காரணங்கள்/ தந்திரங்கள், சகோதர இனத்துடனான அதன் உறவு அல்லது அதனுடன் பேசி/ முரண்பட்டு தீர்வைப்பெறும் அதன் இயலுமை, மற்றும் தற்போதைய அரச இயந்திரத்துடன் தமிழர்தரப்பு முரண்படும் விடயங்களான அதிகாரப்பகிர்வு, காணி-பொலிஸ் அதிகாரம் மற்றும் இவற்றை மாகாணசபைகளுக்கு குறித்தொதுக்குதல் போன்றவற்றினைத் தர்க்க ரீதியாக விளங்கிக்கொள்ள ஒரு தளத்தை உருவாக்குதலே இக்கட்டுரையின் நோக்கம். ஆகவே இக்கட்டுரை மேற்படி பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்டத்தை பற்றிப்பேசாது, மாறாக (யாதாயினும்?) ஒரு தீர்வ…

  14. 1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி, நேரம்: அதிகாலை 1 மணி, திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. 1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos) 2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 - Sikh Light Infantry) நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்…

  15. 77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே(காணொளி இணைப்பு) 77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள். என கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து பாராளுமன்றில் ஆற்றிய உரை M.A. சுமந்திரன். 1983ல் திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவே 1983 கலவரம் ஏற்பட்டது. இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள் என்றால், அதற்கு முன் வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லையா? 56ல், 58ல், 61ல், ஆயதம் ஏந்தாத தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது இளைஞர்கள் வன்முறையை கையில் எடுக்கவில்லை. இன்னும…

    • 3 replies
    • 792 views
  16. அரசியல் தலைவர்களின் தவறுகளுக்கும், சுயநல நோக்கங்களுக்கும்விலையாக மக்களின் உயிரகளே பலி கொடுக்கப்படுகின்றன. இதற்க்கு இலங்கைத்தீவும் விதிவிலக்கல்ல! பிரிவினைவாத முரண்பாட்டு அரசியல் புதைகுழிக்குள் இலங்கைத்தீவின் மக்களைத் தள்ளிவிட்டு, பிரித்தானியக் காலனித்துவவாதிகள்ஆட்சிப்பொறுப்பை சிங்களப்பெரும்பான்மையிடம ;ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். ஆட்சிப்பொறுப்பை மட்டுமல்ல இலங்கைத்தீவை முழுமையாக அபகரித்துக்கொள்ளும் காலனித்துவப் பேராசையையும் சேர்த்து பிரித்தானியர்களிடமிருந்து சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். பிரித்தானிய எஜமானர்களிடம் கற்றுத்தேர்ந்த 'காலனித்துவக்கலையினை" ஏனைய பிற இனமக்களிடம் பிரயோகிக்கத் தொடங்கியது சிங்களத் தலைமை! இலங்கைத்தீவு முற்று முழுதான சிங்ஙள பௌத்த நாடாக மா…

  17. தாயகப் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்தால் மீண்டும் மண் மீட்புப் போராட்டம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. போர் நடைபெற்ற காலப் பகுதியிலும், போர் முடிவுற்ற பின்னரும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் சிங்களவர்களினாலும், முஸ்லிம்களினாலும் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. வியாபாராத்திற்காக வந்தவர்கள் முஸ்லிம்கள் என்று பேச்சில் தெரிவித்தாலும், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பூர்விக மக்களே முஸ்லிம்கள்தான் என்ற கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்கக் கூடும். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் தொடக்கம் அம்பாறை வரையிலான கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகள் சிங்கள அரசாங்கத்தினால், இராணுவக் குடியிருப்பு…

  18. ஜூலை இனப்படுகொலை – வலி சுமந்த வரலாறும் பிழைப்புவாதிகளும் : சபா நாவலன் ஜூலைப் படுகொலை, வெலிக்கடைப் படுகொலை என்றெல்லாம் இனப்படுகொலை அரசின் ஆதரவாளர்களே கூட்டம் போட்டுக் கூக்குரலிடும் பிழைப்புவாதிகளின் காலதில் நாங்கள் வாழ்கிறோம். இலங்கையின் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் மீதான இனப்படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் இந்தக் கணம் வரை தொடரும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஐயர்லாந்தில் தனது தேசிய இன விடுதலைக்காப் போராடுவது அவசியமானது என்று கார்ல் மார்ஸ் ஒன்ரரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொன்னதை மார்க்சியத்தின் பெயராலேயே அவமானப்படுத்தும் திருடர்களின் கூட்டம் புலம் பெயர் நாடுகளிலிருந்து தனது வேர்களை இலங்கை வரை ஆழப்பதிக்கிறது. தவறுகளே நிறுவனமாகியிருந்த 30 வருடப்போராட்டம் அவல…

  19. மென் தமிழ்த் தேசியவாதம் - நிலாந்தன் 21 ஜூலை 2013 வடமாகாண சபைக்குரிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுவிட்டார். இத்தெரிவின் மூலம் கூட்டமைப்பின் தலைமையானது தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், பிராந்திய மற்றும் அனைத்துலக சமுகங்களுக்கும் வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞைகள் எவையெவை? முதலில், தமிழ் மக்களுக்கு அதாவது, தனது வாக்காளர்களிற்கு கூட்டமைப்பு வெளிக்காட்டியிருக்கும் சமிக்ஞைகள் எவையென்று பார்;க்கலாம். ஒரு முதன்மை வேட்பாளரை கட்சிக்கு உள்ளேயிருந்து தெரிவு செய்யாமல் கட்சிக்கு வெளியிலிருந்து தெரிவு செய்தது ஏன்? இதை இரண்டு விதமாக விளங்கிக்கொள்ளலாம். முதலாவது, கட்சிக்குள் குறிப்பிட்ட பொறுப்புக்குத் தோதான ஆட்கள் இல்லை என்று விளங்கிக்கொள்ளலாம். இரண்டாவது கட்ச…

    • 2 replies
    • 507 views
  20. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்துவிட்டனர். தாங்கள் இனியும் என்ன செய்வது என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் காவலர்களும் மீட்பர்களும் எப்போது வரப்போகிறார்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற அவிப்பொருளை மகிந்த ராஜபக்ச தற்போது தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் மகிந்த கூறியிருக்கின்றார். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்பட்டு நிவர்த்திக்கப்படவில்லை. ஒரு பிரச்சினை தோற்றம் ப…

  21. ' உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக......' என்று அடைத்தகுரலில், திரைப்படம் ஒன்றிக்கு விளம்பரம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்கப்போவது திரைப்பட விளம்பரமல்ல. சீனாவின் ஆட்சியாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் சிந்தனைச் சிற்பிகள், இந்துசமுத்திரப்பிராந்தியம் குறித்து முதன்முறையாக வெளியிட்டுள்ள நீலப் புத்தகம் (Blue Book)பற்றிப் பார்க்கப்போகிறோம். இந்தப் பிராந்தியத்தில்தான் நம் தேசமும் இருப்பதால், சீனா நமது பிராந்தியம் குறித்து என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது பற்றி அறிவதற்கு, நாம் அக்கறைப்படுவதில் தப்பேதுமில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு எம்முள் விதைத்துவிட்டுச் சென்ற பெருவலி, எம்மினத்தை அழிக்க உதவியோர், எமது நிலத்திலும், ஆகாயத்திலும், கடல் பரப…

  22. சிறிலங்கா: நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது மீளிணக்கத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சி [ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 07:30 GMT ] [ நித்தியபாரதி ] சிறுபான்மை – பெரும்பான்மை என்கின்ற தோற்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை நோக்கப்படுமாயின் பல்லின நாடுகள் வாழும் சிறிலங்காவின் அரசியல் இயங்குநிலை தொடர்பில் மிகத்தவறான கற்பிதத்தை உருவாக்கும். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தென்னாசியவியல் போராசிரியரான வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுகளை வழங்குதன் மூலம் நாட்டில் இன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவ…

  23. பிரபாகரன் தமிழீழம் கேட்டதில் என்ன தவறு? இலங்கையில் இருந்து - பிரியதர்சன் 20 ஜூலை 2013 விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கை இந்திய ஒப்பந்த்தின்படி இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவேன் என்று சொல்லியே மகிந்த ராஜபக்ஸ போரை தொடங்கி மாபெரும் அழிவுகளை நிகழ்த்தினார். தமிழர்களுக்கு சிங்கள அரச தலைவர்கள் எந்தத் தீர்வையும் வழங்கமாட்டார்கள் என்ற நிலையிலேயே தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு ஜனநாயக அரசியலில் ஏற்பட்ட பின்னடைவே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. ஏதுவுமற்;ற 13 ஐ வைத்து மாபெரும் போர் நடத்தப்பட்டதோ அந்தப் 13ஐயும் இல்லாது ஒழித்துக் கட்டுகிற வேலையில் இனவாத அணியி…

  24. இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல. இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது. நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, எமது நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எமது அரசியலமைப்புக்குள் புகுத்தினார். இதனால் ராஜீவ் காந்தியை எதிர்த்தேன். எனவே, எனது நாட்டை பாதுகாப்பதற்காகவே ராஜீவை பழிவாங்கும் எண்ணம் என் மனதுக்குள் உருவானது. இதன் காரணமாகவே கடற்படை அணிவக…

  25. எனது கடந்த வாரக் கட்டுரை, �மகிந்த முன்னாலுள்ள தெரிவு � 13ஐ திருத்துவதா? ஒழிப்பதா?� என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. ஆனால், பத்திரிகையின் முதல் பக்கச் செய்தித் தலைப்பு, 'சர்வஜன வாக்கெடுப்புக்கு மகிந்த அரசு தயாராகின்றது' என்று இடம்பெற்றிருந்தது. அதன் பக்கத்தலைப்பாக, '13ஐ இரத்துச் செய்யுமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என்று பதிவாகியிருந்தது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாகவும், வேறுபட்டதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். உண்மைதான்! 13வது திருத்தச் சட்டத்தை என்ன செய்வதென்று தெரியாமல் மகிந்த அரசு தடுமாறுவதன் வெளிப்பாடே இந்தச் செய்திகளும், அதன் தலைப்புகளும். அறிவித்தபடி தேர்தல் நடத்தவில்லையானால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆபத்தாக முட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.