அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9269 topics in this forum
-
தமிழ்த் தேசிய தளத்தை பாதுகாப்பதற்கான உபாயம் என்ன? - யதீந்திரா அரசாங்கம் அதன் சிங்கள அடிப்படைவாத வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக முன்னெடுத்துவருகின்றது. ஒரு புறம் ராஐபக்சக்கள் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்வது, மறுபுறமாக வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தை பலவீனப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது. மேற்படி இரண்டு வேலைத்திட்டங்களிலும், எந்தவொரு சமரசமுமின்றி அரசாங்கம் துரிதமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. சிங்கள அடிப்படைவாதத்தின் குறீடாக எழுச்சியுற்றிருக்கும் ஒரு அரசாங்கத்திடமிருந்து இதற்கு மேல் வேறு எதனையும் எதிர்பார்க்கவும் முடியாது. எனவே இப்போது தமிழ்த் தேசியத் தரப்புக்கள் அதாவது தங்களது கட்சிகளின் பெயர்களில் தேசியத்…
-
- 0 replies
- 523 views
-
-
-
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீயினை வலியுறுத்தும் வகையில், இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக (டிசெம்பர் 9) நாளில் கருத்தரங்கொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது. இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை ஐ.நாவினால் நினைவு கொள்கின்ற அனைத்துலக உடன்படிக்கையின் 72வது ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது. இந்நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை இளையோர் பிரிவான அலைகளினால் முன்னெடுக்கப்படுகின்ற இக்கருத்தரங்கில் Prof Francis Boyle அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கின்றார். டிசெம்பர் 9ம் நாள் புதன்கிழமை, நியு யோர்க் நேரம் மாலை 4மணிக்கு இணைவழி இடம்பெற இருக்கின்ற இந்நிகழ்வினை t…
-
- 3 replies
- 926 views
- 1 follower
-
-
களச்சவால்கள் - மொஹமட் பாதுஷா ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும். முஸ்லிம்கள் இன்னும் ‘தேநீர்க்கடை அரசியலை’த்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேநீர் குடித்து முடிக்கும் வரை பேசுகின்றார்கள், பின்னர் மறந்து விடுகின்றார்கள். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதை அலசுவது, அதைப் பற்றி விவாதிப்பது; பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் பழையதை மறந்து விட்டுப் புதிய பிரச்சினையை தலையில் …
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்காவிடம் கடும் நிபந்தணை – சிங்களப் புத்திஜீவிகள் பரிந்துரை ஜே பைடன் நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் மீளவும் இணைந்து இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் என்றோ, குறைந்தபட்சம் போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை நடக்கும் என்றோ எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஈழத்தமிழர்கள் தயாராகி, இலங்கை மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தினதும் குற்றங்களுக்கான சர்வதேச நீதியைக் கோரத் தலைப்பட வேண்டும். 0 அ.நிக்ஸன் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்த பொது அமைப்புகளில் ஒன்றான தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்ற…
-
- 0 replies
- 631 views
-
-
புதிய ஐ.நா தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ் 87 Views எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் பல நகர்வுகளை சிறீலங்காவும், தமிழர் தரப்புக்களும் முன்னெடுத்துவரும் நிலையில், இந்தியாவும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் சிறீலங்கா வந்து சென்ற பின்னர், தற்போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமாக வந்து சென்றுள்ளார். அமெரிக்காவை எதிர்க்கும் நில…
-
- 0 replies
- 360 views
-
-
தூபியை ஏன் இடித்தார்கள்? மீண்டும் ஏன் கட்டுகிறார்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரசாங்கம், சிறுபான்மை மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் நிலையில், இந்த நாட்டில் நிலையான சமாதானம் எப்போதும் உருவாகாது என்ற நிலைப்பாட்டுக்கு ஒருவர் வந்தாலும், அது நியாயமற்ற முடிவு எனக் கூற முடியாது. பதவிக்கு வந்தவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக, எதையும் செய்ய முடியாது என்று கூறினார். அதற்கு அடுத்து, அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் முறையொன்று வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையில், மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டும் என, மாகாண சபைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கூறித் திரிந்தார். பின்னர், கொவிட்- 19 நோ…
-
- 0 replies
- 701 views
-
-
இலங்கையில் வலுவடையும் இந்தியாவின் ஆதிக்கம் இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எரிபொருள் தாங்கிகள் சிலவற்றை மீளப் பெறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், திருகோணமலைத் துறைமுகத்தை, அபிவிருத்தி செய்யும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டிருக்கிறார். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புது…
-
- 0 replies
- 607 views
-
-
தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன் 12 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 0 replies
- 366 views
-
-
நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள் ! 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக வகைப்பொறுப்பு கூறுவதற்கும் அத்துடன் நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கும் ஏற்புடைய பிரச்சினைகளை இலங்கைக்குள்ளேயே தீர்க்குமாறு இலங்கை உந்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணையானது உண்மை, நீதி, இழப்பீடு செய்தல் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றை நோக்கிய அர்த்தபுஷ்டி மிக்க முதலாவது படிமுறையை தோற்றுவித்தது. இந்தப்பிரேரணையின் கீழ், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு, காணாமற் போன ஆட்களைப்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் தொல்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வநாயகத்தின் தந்தை ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த காலத்தில் தந்தை செல்வா மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார். அகில இலங்கை காங்கி…
-
- 0 replies
- 482 views
-
-
அரசியலமைப்புச் சீர்திருத்தக் குளறுபடி http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-11
-
- 0 replies
- 304 views
-
-
பூத்துச் சிரிக்கின்றது வறட்சி காலமை ஆறு மணிக்குத் தண்ணி வரும். எட்டு மணி வரைக்கும் ஓடும். அதுக்குள்ள இந்த பைப்புக்குரிய அம்பது, அறுவது குடும்பங்களும் தங்களுக்குத் தங்களுக்குத் தண்ணி எடுத்திர வேணும். ஆளாளுக்கு நம்பர் படிதான் தண்ணி. ஒண்டிரெண்டு பெரிய குடும்பகாரர், கூட்டுக்குடும்பகாரருக்கு ரெண்டு, நம்பர் இருக்கு. மிச்ச முழுப் பேருக்கும் ஒரு நம்பர்தான்… இண்டைக்கு இரு பத்தஞ்சாம் நம்பர்காரர் வரைக்கும் தண்ணி ஓடிச்சென்டால், நாளைக்கு இருபத்தாறாம் நம்பரிலயிருந்து எடுப்பினம். மழை பெய்ஞ்ச கொஞ்சக் காலத்துக்கு எல்லாரும் எடுக்கிற அளவுக்கு வேகமா ஓடுற தண்ணி, வெயில் காலம் வந்தால் குறையுறது வழமைதான்… ஆனா இந்த முறை என்னடா எண்டால் தண்…
-
- 0 replies
- 491 views
-
-
யுத்தவெற்றியைச் சாப்பிட முடியாது? நிலாந்தன். January 9, 2022 புதிய ஆண்டு பிறந்த பொழுது நாட்டில் ஏழைகளின் வீடுகளில் பால் தேநீர் இருக்கவில்லை. இனி தேனீர்க் கடைகளில் பால் தேனீரை விற்க முடியாது என்று தேநீர்க் கடைகளின் சங்கத் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார். சாதாரண தேநீர் கடைகளில் மட்டுமில்லை நட்சத்திர அந்தஸ்துள்ள உல்லாச விடுதிகளிலும் பால் தேநீர் தட்டுப்பாடாக இருப்பதாக தெரிகிறது. ஒரு சிறிய அங்கர் பெட்டி வாங்குவது என்றால் அதோடு சேர்த்து நான்கு அல்லது ஆறு அங்கர் யோக்கட்களையும் வாங்குமாறு வர்த்தககர்கள் வற்புறுத்துகிறார்கள். அங்கர் கொம்பனிதான் அவ்வாறு விற்குமாறு அறிவுறுத்தல் வழங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒரு பெட்டி அங்கருக்காக எந்த வ…
-
- 0 replies
- 528 views
-
-
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? பரபரப்பான அரசியல் காட்சிகள் திரைப்படத்தின் அந்த ‘க்ளைமாக்ஸ்’ காட்சி, தமிழக அரசியலில் அரங்கேறி விட்டது. சசிகலாவின் ஆதரவு பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களை, ‘ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஏழு தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் சபாநாயகர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படியான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தைத் தக்க வைத்து விட முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். …
-
- 0 replies
- 484 views
-
-
-
- 0 replies
- 492 views
-
-
மேலோட்டமான அரசியல் சீர்திருத்தங்கள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை! Veeragathy Thanabalasingham on June 4, 2022 Photo, APnews இலங்கை அரசியலமைப்புக்கு இன்னொரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு கடந்த 44 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கு கொண்டுவரப்படுகின்ற 21ஆவது திருத்தம் இதுவாகும். அமெரிக்காவின் அரசியலமைப்பு 234 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரையில் அதற்கு 27 திருத்தங்களே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இரண்டேகால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக…
-
- 0 replies
- 290 views
-
-
ஐ.எம்.எப் கடன்கள் கசப்பான மருந்து! -நஜீப் பின் கபூர்- இன்று நமது நாட்டில் பிரச்சினைகள் சங்கிலித் தொடர் போல வந்து கொண்டிருக்கின்றன.பொருட்களின் விலைகளில் மிகச் சிறியதோர் சலுகையை மக்களுக்கு கொடுத்து அதனைவிட பல மடங்கு பணத்தை மக்களிடம் பறிக்கின்ற ஒரு வேலைத் திட்டத்தைத்தான் அரசு இன்று முன்னெடுத்து வருகின்றது.இதனை மின் கட்டணங்கள் உயர்வில் நாம் பார்த்தோம்.மக்களுக்கு நெருக்கடியில் எந்த விமோசனங்களும் கிடையாது.பொருளாதாரத் துன்பங்கள் அப்படியே தொடர, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் கடந்த 30ம் திகதி சமர்ப்பித்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் அரசு எந்தச் சலுகைகளையும் குடிகளுக்கு வழங்கவில்லை. இந்த வரவு-செலவுத்திட்டங்கள் ப…
-
- 0 replies
- 344 views
-
-
போர் நடக்கும் பொழுது எந்த நாட்டின் வெற்றிக்கும், உளவுப்பிரிவு மிக முக்கியமானது. எதிரி நாட்டை சீர்குலைப்பது. அதன் மூலம் தன்னுடைய நாட்டின் நலனை பாதுகாப்பது, போரில் தனது நாட்டை வெற்றி பெற வைப்பது இவை தான் உளவுப்பிரிவின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பங்களாதேஷ் உருவாவதற்காக நடந்த போர் கூட உளவுப்படையின் பங்களிப்பிற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கு – கிழக்கு பிரச்சினையின் யதார்த்தம் ஈழத்தில் தொடக்கப்பட்ட பிரிவினைப் போராட்டத்தை இந்தியா எப்போதும் விடுதலைப் போராக ஏற்கவில்லை. ஈழத்தமிழர் இந்த கண்ணோட்டத்தோடு இவற்றை அணுகுவது மிகப்பெரும் குறைபாடு. 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய– இலங்கை ஒப்பந்தத்தின் முதல் விடயம் இலங்கை ஒருமித்த நாடாக இருக்க வேண்டும் என்பதால் தனி ஈழ எண்ணத்தை இந்தியா எப்போதும் ஆதரிக்கவில்லை என்று இந்திய இராணுவ ஓய்வு நிலை புலனாய்வு நிபுணரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிஹரன் அண்மையில் பேட்டியளித்திருந்தார். அப்படியானால் ஈழம் என்பதும் பிரிவினை என்பதும் இந்தியாவுக்கு முன்பே தெரிந்திருப்பதாகவே அர்த்தமாகிறது. ஈழத்தமிழர…
-
- 0 replies
- 547 views
-
-
#தமிழ்தேசியம்: தேசியமா? தமிழ் தேசியமா? எது காலத்தின் கட்டாயம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.…
-
- 0 replies
- 823 views
-
-
வூகான் உச்சிமாநாடு இந்திய சீன உறவுகள் பலமடையுமா? இந்தியா, சீனா என்னும் இரண்டு பழம்பெருமை வாய்ந்த இரு நாகரிகங்களும் இன்று உலகில் அதிவேகமாக பொருளாதார விருத்தியில் முன்னேறும் நாடுகளாகும். உலக சனத்தொகையில் நாற்பது வீதத்துக்கு மேற்பட்டோர் இவ்விரு தேசங்களிலும் வாழ்கின்றனர். இந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துக்கு பெயர் போன இந்தியா பல மொழிகளுக்கு, மதங்களுக்கு, பல வேறுபட்ட கலாசாரங்களுக்கு தாயகமாக விளங்குகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் பெரும் ஜனநாயக நாடு என வர்ணிக்கப்படுகிறது. சனத்தொகை 120 கோடியைத் தாண்டிவிட்டது. தரையாலும் கடலாலும் சூழப்பட்ட நாடாகும். இந்தியாவின் தெற்கு இந்து சமுத்திரத்தால் சூழப…
-
- 0 replies
- 679 views
-
-
ஹீரோவாகிய இராணுவ அதிகாரியும் சிதையும் தமிழ் தேசியமும் நரேன்- வன்னியில் இருந்து மாற்றலாகி சென்று மீண்டும் வன்னிக்கு வந்திருக்கும் கேணல் ரத்னபிரிய என்ற இராணுவ அதிகாரியின் பிரியாவிடை நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முகப்புத்தகங்கள், ஊடகங்கள் என்பவற்றில் அந்த விடயம் பேசுபொருளாக மாறியிருப்பதுடன் அடுத்து வரும் ஜெனீவா அமர்விலும் அது தாக்கம் செலுத்தும் அளவுக்கு சென்றிருக்கின்றது. இந்த நிலைக்கு என்ன காரணம்….?, யார் பொறுப்பு …? என்பது குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியமானதே. யாழ் மாவட்டத்தை சூரியகதிர் இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவம் 1995 ஆம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் விடுதலைப் புலிகளின் கட்மைப்பு வன்னியை மையமாக கொண்டு இ…
-
- 3 replies
- 1.4k views
-
-
காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க போராடாத முஸ்லிம்கள் சனத்தொகைப் பரம்பல் மற்றும் அதனது மேல்நோக்கிய வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல், காணிகள் இல்லாத இனக் குழுமமாக, நாட்டில் பரவலாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இழந்த காணிகளை மீட்பதிலோ அல்லது காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலோ, இவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கின்றமை, மிகவும் ஆபத்தான நிலைமையாகும். பொருத்தமற்ற தலைவர்களையும் அரசியல் பிரதிநிதிகளையும் தெரிவு செய்கின்ற சமூகமும், சமூக அக்கறையற்ற அரசியல்வாதிகளால் ஆளப்படும் மக்கள் கூட்டமும் எவ்வாறான இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் என்பதைத்தான், இலங்கை முஸ்லிம்கள் தற்சமய…
-
- 0 replies
- 360 views
-
-
ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த கட்ட வியூகம் இந்திய இலங்கை வர்த்தக உறவைச் சீர்ப்படுத்தும் முயற்சி சீனாவை விலக்கி வடக்குக் கிழக்கில் புதுடில்லிக்கு முன்னுரிமை பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனை உணர்ந்துகொண்ட இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தயவுடன் இந்திய - இலங்கை வர்த்தக உறவுகளை மீளவும் புதுப்பிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கின்றது. வடக்குக் கிழக்கில் இந்தியத் திட்டங்களுக்கு முன்னுரிமை என்ற வியூகத்துடன் இந்தியாவுடனான வர்த்தக உறவை விரிவுபடுத்தும் ஏற்பாடுகள் வகுக்கப்படுகின…
-
- 0 replies
- 244 views
-