அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
நந்திக் கடலோரம் .. ஒரு மீள்பயணம் - முல்லை சபா காலம் திரைகளை நிறம் மாற்றி விரிப்பதுண்டு. வரலாற்றிற்தான் எத்தனை விசித்திரங்கள்? கோடையிற் காய்ந்து மாரியிற் துளிர்க்கிற நந்திக்கடலில் இப்பொழுது மயான அமைதி. தன்னுடைய சனங்களை இழந்து போனேன் என்ற துயரத்தில் உறைந்து போன அமைதியா அது? அங்கே கடலில் விளையாடும் கறுத்த, மெலிந்து ஒடுங்கிய சிறுவர்கள் இல்லை. மாரியில் வலை படுக்கின்ற, கோடையில் கரப்புக் குத்துகிற அல்லது தூண்டில் போடுகிற மீனவர்களும் இல்லை. சீசனுக்கு வரும் கடற்பறவைகள் கூட இன்னும் வரவில்லை. உக்கிப் போன அல்லது உறைந்து போன கடந்த காலத்தின் எச்சங்களாகக் கரையோரங்களில் சிதைந்த சிறிய படகுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதைந்து கிடக்கின்றன. சாம்பல…
-
- 1 reply
- 982 views
-
-
அரசின் வியூகத்தை உடைத்த அமெரிக்கா (கே. சஞ்சயன்) ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும், அதற்கு முன்னரும், அரசதரப்பு செய்து வந்து பிரசாரங்களைப் பொய்ப்பிக்கின்ற வகையில், அமெரிக்க காங்கிரஸில் கடந்தவாரம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு பிரிவான – போர்க்குற்றங்கள், மனித உரிமைமீறல் விவகாரங்களைக் கையாளும் - குற்றவியல் நீதிப் பணியகமே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. குற்றவியல் நீதிப் பணியகத்துக்குப் பொறுப்பான ஸ்டீபன் ராப், கடந்த பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்தை அடிப்படையாக வைத்து, 2010 ஓகஸ்ட் 11ம் திகதி சமர்ப்பிக்கப்ப…
-
- 0 replies
- 709 views
-
-
தீர்வை முன்வையுங்கள் என்பதே கோரிக்கையாகும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதாக கூட்டமைப்பினர் கருதக் கூடும். வேறு வழியில்லை. இலங்கையின் இன விவகாரத்தில் சிங்களத் தரப்பு அடிக்கடி முருங்கை மரத்தில் ஏறிக் கொள்வது வழமையாகும். இந்த ஒரு பின்னணியில் ஒரு சரியான விடயத்திற்காகவும் நல்ல நோக்கத்திற்காகவும் நாம் ஏதோ ஒரு மரத்தில் ஏறித்தான் ஆக வேண்டும். அது வேறு ஒன்று அல்ல! தமிழ் மக்களின் தீர்வு விடயம் தொடர்பாகவே. ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கான தீர்வை தமிழர் தரப்பும் முன்வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக இப்பத்தியில் கோரிக்கை விடுத்து வந்துள்ளோம். ஆனால் தமிழ் தலைமைத்துவங்கள் அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும் அல்லது அரசாங்கத்…
-
- 2 replies
- 659 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா எடுத்திருந்தால், தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா தனது ஒத்துழைப்பை ஒருபோதும் வழங்காதிருந்திருக்கலாம். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்டு வெளியாகும் The Hindu ஆங்கில நாளிதழில் நிருபமா சுப்பரமணியன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா தனது கருத்தில் எடுத்துள்ள அதேவேளையில், 2009ல் ஜெனீவாவில் இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது சிறிலங்கா தான் பெற்றுக் கொண்ட வெற்றி மமதையில் செயற்பட்டதை மீளவும் திரும்பிப்…
-
- 0 replies
- 473 views
-
-
(சிறிலங்கா அரசு வடக்கிலும் கிழக்கிலும் பாரிய கட்டுமானத் திட்டங்களையும் பொருண்மிய மேம்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பறை சாற்றுகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது பொருளாதாரம் இரண்டு முக்கிய தொழில்களில் தங்கியுள்ளது. ஒன்று விவசாயம். மற்றது மீன்பிடி. இதில் வடக்கில் மீன்பிடித் தொழில்பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. சுமித் சாமின்டா (Sumith Chaaminda) என்ற சிங்கள ஆய்வாளர் எழுதிய இக்கட்டுரை த அய்லாந்து நாளேட்டில் ஏப்பிரில் 02 ஆம் நாள் வெளிவந்தது. வட மாகாணத்தில் நலிந்து போயிருக்கும் மீன்பிடித் தொழில்பற்றி முடிந்தளவு பக்கசார்பில்லாது எழுதியுள்ளார். (தமிழழாக்கம் - நக்கீரன்.) யாழ்ப்பாணத்தில் மீன்பிடித் தொழில்: யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தளவில் மீன்பிடி…
-
- 0 replies
- 560 views
-
-
ஜெனீவா தீர்மானமும் நகரும் அரசியல் தந்திரமும் ஆக்கம்: வ.திருநாவுக்கரசு நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையே அரசாங்க உயர் பீடத்தினரின் சொல்லும் செயலும் நன்கு புலனாக்கி வருகின்றன. அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷ பயங்கரவாதம் எனப்படுவதைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பு தீர்ந்து விடக்கூடாதென்பதற்காக உயர்ந்த வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட மக்களைத் திசை திருப்புவதற்காக நான் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன். நான் அதனை அழித்துவிட்டேன். சில நாடுகள் எம்மீது அழுத்தம் கொடுப்பதற்கு முனைந்து வருகின்றனவாயினும் எமக்கு முழுமையான சர்வதேச ஆத…
-
- 0 replies
- 593 views
-
-
ஜெனிவாப் பிரகடனம் தமிழ் அரசியலுக்கு புதிய வழியைத் திறக்குமா? ஜெனிவாப் போரின் முதலாம் கட்டம் ஒருவாறு முடிவடைந்து விட்டது. அமெரிக்கா இவ்வளவு கரிசனையுடன் ஜெனிவாக் களத்தில் செயற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசுடன் தொடர்புடைய பெரிய தலைகள் எல்லாம் களத்தில் நின்றன. 100 வரையான இராஜதந்திரிகள் களத்தில் இறக்கப்பட்டனர். இறுதி நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் ஹில்லறி கிளின்ரனே களத்தில் நின்றார். நிஜமான சீன- அமெரிக்க இராஜதந்திரப் போர் போலவே களம் தோற்றம் பெற்றது. ஆய்வாளர்கள் சீன- அமெரிக்கப் போரின் தொடக்கப் புள்ளி என இதனை வர்ணிக்கின்றனர். சீனாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்திருக்காவிட்டால் இலங்கை மேலும் தோற்றிருக்கும். 15 வாக்குகளை அது ஒருபோதும் பெற்றிருக்காது. ஆசிய…
-
- 1 reply
- 731 views
-
-
மண்டேலாவிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கை ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொண்டது என நாம் கடந்த வாரம் கூறினோம். அமெரிக்க பிரேரணை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள் நாட்டில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்விணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அதற்கு காரணமாகும். ஆனால், அதனால் வெளிநாடுகளின் நெருக்குதல் இத்தோடு முடிவடைந்ததாக அர்த்தமாகாது. ஏனெனில் அந்தப் பிரேரணை இலங்கைக்கு சில பொறுப்புக்களையும் வழங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்…
-
- 0 replies
- 596 views
-
-
அடிக்கடி மொக்கு கூட்டம் என விழிக்கின்றேன் என பலருக்கு என் மீது கடுப்பு,யார் இந்த மொக்கு கூட்டம். சுயம் அறியாமல் எவன் என்ன சொன்னாலும் அதை நம்பி அவனுக்கு பின்னால் அலையும் ஒரு பெரும் கூட்டம் எம்மவர்கிடையே இருக்கு இவர்களை வேறு எப்படி அழைப்பது என எனக்கு தெரியவில்லை. சுய நலத்திற்காக பின்னால் அலைந்து பின் அவர்களையே தருணம் வரும் போது சுத்திவிடலாம் அல்லது கிடைத்தவரை லாபம் என்று நினைக்கும் கில்லாடிகளும் சிலர் இருக்கின்றார்கள் ,இவர்கள் இந்த மொக்கு கூட்டத்திற்குள் அடங்க மாட்டார்கள் . இந்த மொக்கு கூட்டம் சுயமாக சிந்திக்க தெரியாததுகள்.இரண்டும் இரண்டும் மூன்று என்றாலும் தலையாட்டும் ஐந்து என்றாலும் தலையாட்டும் .இவர்கள் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் இவர்களை வைத்து சில விஷ…
-
- 5 replies
- 1.6k views
-
-
இந்தியாவின் இலங்கைக் கொள்கை வகுப்பில் தமிழக அரசியல் சக்திகள் செல்வாக்குச் செலுத்தியதில்லை இந்தியாவின் இலங்கைக் கொள்கையை வகுக்கும் செயன்முறைகளில் தமிழக அரசியல் சக்திகள் ஒருபோதுமே செல்வாக்குச் செலுத்தியதில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியேற்படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் வெளிக்காட்டியிருக்கக்கூடிய உணர்வுகளை ஓரளவுக்கேனும் மதித்து புதுடில்லி அதன் இலங்கைக் கொள்கையை வகுத்துக்கொண்டதில்லை. ஆனால், இந்திய நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கக்கூடிய இலங்கை அரசாங்கங்களை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று புதுடில்லி சிந்தித்திருக்கக்கூடிய காலகட்டங்களில் தேவையேற்பட்ட போது தமிழக அரசியல் சக்திகளையும் தலைவர்களையும் பயன்படுத்துவதில் மாத்திரம் அக்கறை காட்டப்பட…
-
- 3 replies
- 467 views
-
-
அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..?-இதயச்சந்திரன் ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது.அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன.நல்லிணக்க ஆணைக் குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்பதாக அப் பிரேரணை அமைந்திருந்தது. அதேவேளை, பெரும் படை பரிவாரங்களோடு ஜெனீவாவில் களமிறங்கிய ஆட்சியாளர்கள், நாடு திரும்பும்போது நிச்சயம் செங்கம்பள வரவேற்பு இருக்காது என நம்பலாம். இப் பிரேரணையானது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் முதலாம் பாகம் மட்டுமே. இனி ஆரம்பம…
-
- 0 replies
- 504 views
-
-
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள்... மனித உரிமைகளும் ஈழத்தமிழர் வாழ்வுரிமையும்..! முள்ளிவாய்க்கால் நோக்கிய அமெரிக்க நகர்வுகள்: 1996 ஆம் ஆண்டு கிளிங்டன் நிர்வாகம் சந்திரிக்கா அம்மையாருடன் ஒட்டி உறவாடிய காலத்தில் ஈழக் களத்தில், சிங்கள பேரின தேசியவாதிகளின் பயங்கரவாத சிங்கள இராணுவம் வெற்றிக் களமாடிக் கொண்டிருந்த நேரத்தில் இதோ புலிகளின் கதை முடியப் போகிறது என்ற நேரத்தில் எடுத்த முடிவுகளில் முக்கியமான சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகளை இணைத்துக் கொண்டமை. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் எந்த அமெரிக்க பிரஜையையும் குறிவைத்து தாக்குதல்களும் செய்யவில்லை அமெரிக்காவிற்கு அரசியல்ரீதியிலும் கொள்கை ரீதியிலும் எதிராக செயற்பட்ட…
-
- 25 replies
- 2.2k views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானம்- ஒரு பார்வை இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்க…
-
- 1 reply
- 815 views
-
-
ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சூடான கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விரைவில் விவாதத்துக்கு வரப்போகிறது. வாக்கெடுப்பும் நடக்கப் போகிறது. இந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது. இந்த எதிர்பார்ப்பு இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் தான் உருவாகியுள்ளது. காரணம் இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவுக்குப் போயுள்ளது. அதைவிட, இதன் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இலங்கை அரசு இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க எந்தளவுக்…
-
- 0 replies
- 941 views
-
-
தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல அமெரிக்கா மற்றும் பல மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ளதாகிய இலங்கைக்கு எதிரானதென்று கூறப்படும் பிரேரணை மீது 22. 03. 2012 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இலங்கை இரு நாடுகள் தரப்பிலும் மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகள் மத்தியில் கடந்த பல நாட்களாக சூறாவளிப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். குறித்த பிரேரணையானது வெற்றியை எட்டக் கூடிய அளவுக்கு ஆதரவுள்ளதாக அறிக்கைகள் காணப்படுவதால் ராஜபக்ஷ அரசாங்கம் கவலை அடைந்துள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் இலங்கை தரப்பிலும் குறிப்பிடத்தக்களவு ஆதரவு திரட்டப்பட்டு வந்துள்ளதாக அ…
-
- 0 replies
- 640 views
-
-
இறுக்கமடைகின்றது ஜெனீவா போர் அரங்கு வெளிவந்தது கடுகளவாக இருப்பினும் வராதது கடலளவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இலங்கையின் கொலைக்களத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்கிற தலைப்பிட்டு நான்கு புதிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது. சர்வதேசமெங்கும் காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு சனல் 4 இன் விவரணப் படம் மேலும் வலுச் சேர்த்துள்ளது. கடந்த வருடம் வெளிவந்த முதலாம் பாகத்தைவிட, இரண்டாவது பாகமானது, இலங்கை அரசின் அதிகார மையத்தை நோக்கி பல வினாக்களை முன்வை…
-
- 2 replies
- 756 views
-
-
பிரச்சாரத்திற்கு செல்லும் வைகோவை கண்டாலே ஓடி வந்து சூழந்துகொள்ளும் மாணவர்கள் சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கண்டதும் பள்ளி மாணவர்கள் அவரை சூழந்து கொள்கின்றனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சி வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் வீடு, வீடாகச் சென்று ஆதரவு கேட்கிறார். அப்போது தெருக்களில் நடந்து செல்லும் வைகோவை பார்த்ததும் பள்ளி மாண…
-
- 0 replies
- 801 views
-
-
நீதிநியாயத்திற்கான போராட்டம் உலகத்தமிழர் பேரவைத் தலைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் அண்மையில் கலாநிதி போல் நியூமன் அவர்களுக்கு வழங்கிய நேர்காணலில் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவைபற்றிய சில குறிப்புகள். ஐ.நா.மன்றம் உட்பட்ட உலகின் வலிமைமிகுந்த நாடுகள் ஒன்றுதிரண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு நிதிஉதவியும், ஆயுதஉதவியும் செய்தன. அதன்மூலம் போராளிகளை மட்டுமல்லாது 40,000 பொதுமக்களையும் கொன்றொழித்தார்கள். இவற்றையெல்லாம் நன்றாகத்தெரிந்துகொண்டே, தமிழர்களாகிய நாம் தமிழினஅழிப்பில் ஒத்துழைத்தவர்களிடமே நீதிக்காக மன்றாடவேண்டியுள்ளது. அதன்மூலம் மேலான உலகஒழுங்கு உருவாக்கப் படும் என நம்புவோம். வன்னித்தலைமை திடீரென்று துடைத்தழிக்கப்பட்டதும…
-
- 1 reply
- 967 views
-
-
இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும் பா. செயப்பிரகாசம் உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன. உலகின் பொதுவான இயங்குதிசை வல்லரசுகளால் தலைமை தாங்கப்படும், அவற்றின் நலன்களை முன்னிறுத்தும் சக்திகளால் இயக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை மக்கள் நலனை முன்னிறுத்தும், மக்களால் தலைமை தாங்கப்படும் சக்திகளால் இயக்கப்படுவதாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. 2011இல் தெற்கு சூடானின் விடு தலையை உள்ளடக்கிய அண்மைக் காலம்வரையிலான நிகழ்வுகள் உலக அரங்கில் தேசிய இன வி…
-
- 3 replies
- 859 views
-
-
அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே அமெரிக்கா இறுதியில் இலங்கை விடயத்திலான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிதித்துவிட்டது. அமெரிக்கா அதனை சமர்ப்பிக்கு முன் ஏதோ வானம் சரிந்து விழப் போவதைப் போல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செய்த ஆளுங்கட்சி, அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னனர் ஒன்றுமே நடக்காததைப் போல் இருக்கிறது. இந்தப் பிரேரணையில் மூன்று விடயங்கள் தான் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல்தான் இதில் முக்கியமான விடயமாக இருக்கிறது. அடுத்த மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெறும் போது அரசாங்…
-
- 1 reply
- 778 views
-
-
எமது உரிமைக்கான போரில் இந்தியாவை ஒது(டு)க்கிவிடுவதே எங்கள் உரிமையைப் பெற்றெடுக்கச் சிறந்த வழி ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர்கள் இந்தியா எங்களைக் காப்பாற்றும் எங்களுக்கு நன்மையே செய்யும் என்று நம்பவைத்த இந்தியாவை இறுதிவரை நம்பி முள்ளிவாய்க்கால் வரை 100.000 உயிருக்குமேல் நாங்கள் பறிகொடுத்துள்ளோம் என்றால் அது நாங்கள் வைத்த நம்பிக்கையின் நம்பகமல்லாத்தன்மை தான். இந்தியாவுடனும்;; இலங்கையுடனும் இருந்த தமிழர் பிரச்சனை இன்று சர்வதேச ரீதியில் ஒரு பிரச்சனையாகக் கொண்டு வந்து தந்தவர்கள் புலிகள் தான். தேசியத் தலைவ்h ஓரிடத்தில் இயக்கத்தடன் இணைந்து போரட வந்த போராளியைக்கேட்டதாகச் சொல்கின்றார்கள். தமிழீழம் எந்தககாலஅளவில பெற்றுக்கொள்வோம் என்று நினைக்கின்றீர் என்று சொல்லும் பார்க்கலாம்" அத…
-
- 5 replies
- 880 views
-
-
ஈழத் தமிழருக்கு என்ன வழி? உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990களில் உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. ஸ்லேவேனியா, கொ…
-
- 0 replies
- 577 views
-
-
சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் ஜெனிவா உடன்படிக்கைகளும் போர் மனித வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கிறது. புராதன காலந் தொட்டு போர் பற்றிய விதிமுறைகளும் சம்பிரதாயங்களும் நிலவுகின்றன. பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் படைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை. போரின் போது பொது மக்கள் பாதிப்படைகின்றனர் என்பது தான் உண்மை. இதனால் போர் சூழலில் அகப்பட்ட பொது மக்களையும் போரில் இருந்து விலகிய போராளிகளையும் பாதுகாப்பதற்கு மனிதநேயச் சட்டங்கள்(Humanitarian Laws) உருவாக்கப் பட்டுள்ளன. போர் தொடர்பான சட்டங்களும் விதிகளும் 1864,1906,1929,1949 ஆகிய வருடங்களில் உருவாக்கப்பட்டு இன்று நடை முறையில் இருக்கின்றன. சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் ஜெனிவா கொன்வென்ஷன்கள் (Geneva C…
-
- 0 replies
- 741 views
-
-
உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990களில் ஸ்லேவேனியா, கொசாவோ,மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள், 2000-ங்களில் மாண்டிநிக்ரோ, தெற்கு ரேசடியா, …
-
- 0 replies
- 738 views
-
-
இந்தியா, யார் பக்கம் ? ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் இலங்கையும் உறுதியாக உள்ளது. இந்த இருவேறு முரண்பட்ட சூழலுக்குள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூட இரு அணிகளாகி நிற்கின்றன. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளன. இன்னும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும்இ வாக்கெடுப்பு ஒன்று வரும் போது தான் எந்தப் பக்கம் வெற்றிபெறப் போகிறது என்பது தெரியவரும். யார் யார் எந்த அணியில் நிற்கிறார்கள் என்பதும் உறுதியாகும். இந்தத் தீர்மானம் விடயத்தில் அயல் நாடும் இந்து சம…
-
- 0 replies
- 585 views
-