அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
வை திஸ் போர்க்குற்றம்.. சுவாமி – ரணில் குழப்பம் சிறீலங்காவுக்கு வந்த இந்திய சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்து சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவானது என்று பல தமிழ் ஊடகங்கள் எழுதியுள்ளன. ஆனால் சுவாமி, சோ போன்றவர்களை கருத்துக் கூறவிட்டால் நான் சொல்லமாட்டேன், நான் சொல்லமாட்டேன் என்று எல்லா உண்மைகளையும் அவிழ்த்து விட்டுவிடுவார்கள். போர்க் குற்றம் தொடர்பாக சுவாமி தெரிவித்த கருத்தை சரியாக ஊடுருவி நோக்கினால் மகிந்த ராஜபக்ஷவும், சகோதரர்களும் தலை தலையாக அடிக்க வேண்டும். போர்க் குற்றம் நடைபெற்றமைக்கு ஆதாரம் இல்லை என்று சுவாமி சொல்லியிருக்கிறார். ஆதாரம் இல்லாத காரணத்தால் மட்டுமே மகிந்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்ற கருத்து மிக ஆபத்தானது. - சுவாமி போர்…
-
- 1 reply
- 945 views
-
-
தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா? ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது.போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். இதற்கு முன்னதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் பல்வேறு விதமான எச்சரிக்கைக…
-
- 3 replies
- 763 views
-
-
இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஜனவரி 16-ஆம் நாளன்று சிறிலங்கா வந்தடைந்து பல தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் சிறிலங்கா வந்தடைவதற்கு முதல் நாளன்று கிருஷ்ணா இந்தியா சென்றுவிட்டார். இவர்கள் இருவருடைய சிறிலங்காவிற்கான பயணத்தின் நோக்கங்கள் அரசியல் முக்கியத்துவமானவை. சிறிலங்காவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்கிற செய்தியைத்தான் இரு தலைவர்களும் சிறிலங்காவின் அரச தலைவர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திர காய்நகர்த்தல்கள் இந்தியாவிற்கே ஆபத்தாக அமைந்துவிடும். நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் முதலாவ…
-
- 0 replies
- 701 views
-
-
முதலில் இன்றைய தமிழ் மக்களின் அரசியல் நிலையில் அவர்கள் தாம் எந்த தமிழ் தலைமையை ஏற்றுக்கொள்வது என்ற குழப்பநிலையிலேயே உள்ளனர். தமக்கு முற்றுமுழுதான நிம்மதியான வாழ்வையும், தாம் இதுவரை பட்ட துன்பங்களுக்கு ஈடான அரசியல் சுதந்திர அபிலாசைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் பெற்றுக்கொடுக்கும் என்று அவர்கள் நம்பவில்லை. இது அவர்கள் கடந்த 30 வருடமாக நம்பி ஏமாந்து தாம் நம்பிய தலைமைகள் தமக்கு விட்டுச் சென்ற சுமைகளின் வெளிப்பாடாகவே கருத இடமுண்டு. இதை மறுதலிக்கவும் முடியாது. சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் சிறிலங்கா என்ற நாட்டிலே வாழும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமது அரசியல் தலைமையாக முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கும் நன்கு தெரிய…
-
- 0 replies
- 861 views
-
-
சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும் உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆ…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார். ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வரலாற்றின் கணிசமான காலத்தில் அதனுடன் பயணித்திருக்கிறார். அரசியல், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அவதானிப்பையும் பங்கேற்பையும் கொண்டிருக்கும…
-
- 6 replies
- 1k views
-
-
இலங்கை அரசுக்கான நெருக்கடிகள் - யாருடைய நலன்களுக்காக? - சஞ்சீவன் ஜெயக்குமார் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு இலங்கை அரசுக்கு உள்நாட்டு நெருக்கடி என்பது, சமாளிக்கவே முடியாத மிகப் பெரிய சவால். ஆனால், அப்போது வெளியுலகத்தின் ஆதரவுத்தளம் பலமாக இருந்தது. அல்லது சாதகமாக இருந்தது. இப்போது உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் மிகப் பலமாக உள்ளது. பதிலாக வெளியுலக நெருக்கடி மிகப் பெரிய சவாலாக உள்ளது. எதிர்நிலை அம்சங்கள் அதிகரித்துள்ளன. புலிகள் இல்லை என்றாலும் புலிகளின் பேராலான புலிகளுடனான யுத்தத்தின் போது நடந்த - யுத்தக் குற்ற விவகாரங்கள் தொடர்பாகவே இன்றைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இந்த மாதிரியான நிலைமைகளை முன்னரும் …
-
- 0 replies
- 624 views
-
-
நாம் இனி என்ன செய்யப் போகிறோம் ? 2009 முதல் இன்றுவரை நடைபெற்றுவரும் விடயங்கள் எம்மைப் பொறுத்தவரையில் நல்ல சமிக்ஞைகளாகத் தெரியவில்லை. 2009 இல் அழிக்கப்பட்ட எமது தாயக விடுதலைப் போராட்டமும் அதனுடனிணைந்த எமது கனவுகளும், நம்பிக்கைகளும். போரின் பின்னர் ஐ. நா உற்பட பல உலக நாடுகள் நடந்துகொண்ட விதங்கள். இடைக்கிடயே எமக்கு நம்இக்கை தருவதாகத் தோன்றி மின்னி மறைந்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான தனிநபர் கோரிக்கைகள், சனல் 4 ஒளிப்படங்கள், பா கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கைகள், அவ்வப்போது காற்றில் ஆடி எரியும் மெழுகுவர்த்திப்போல தமிழகத்தின் மூலைகளில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் எம்மீதான அனுதாபக் கோஷங்கள், தற்கொடைகள் . இனக்கொலை முடிந்து இன்றுடன் இரண்டு வருடங்களு…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைக்கான மீள்கட்டமைப்பின் அவசியம் தமிழீழ விடுதலைக்கான புதிய மனப்பாங்கையும் புதிய சிந்தனையையும் மீள்கட்டமைப்பையும் வரலாறு கோரி நிற்கிறது. எங்களுக்கு நாங்களே எஜமானர்களாய் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் நடந்து வந்த பாதையை நாங்களே திரும்பிப் பார்ப்பதுடன் எங்கள் தவறுகளை நாங்களே திருத்திக் கொள்ளவும், எங்களை நாங்களே புதுப்பிக்கவும், எங்களை நாங்களே மீள்கட்டமைப்புச் செய்யவும் தயாராக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவோமேயானால் நாங்கள் எதிரிகளின் சேவகர்களாகவே இருக்க நேரும். சேவல் கூவி சூரியன் உதிப்பதில்லை. ஆனால் சூரியனின் வரவை சேவலால் முன்னறிவிப்புச் செய்யமுடியும். சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்ல ஒரு பண்டிதர் தேவையில்லை. ஆனால் சூரியன் ஏன் கிழக்கே உதிக…
-
- 1 reply
- 691 views
-
-
கலாமின் இலங்கை அவதாரம்!இரு கடலோர நிலவரம் ஆக்கம்: இரா.தமிழ்க்கனல் சர்வரோக நிவாரணி போல, சமீபமாக பல பிரச்னைகளுக்கு இந்திய அரசின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். திடீரென, கடந்த வாரம் இலங்கை சென்றவர், இருதரப்பு மீன்பிடிப்பு தொடர் பாக ஒரு தீர்வைச் சொல்ல... பிரச்னை பற்றிக் கொண்டுள்ளது. ''இந்திய, இலங்கை நாடுகளின் மொத்தக் கடல் பரப்பும் இருநாட்டு மீனவர்களுக்கும் பொதுவானது. இதில், வாரத்துக்கு மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் மற்ற மூன்று நாட்களில் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கலாம். ஒருநாள் பொதுஓய்வு எடுத்துக்கொள்ளலாம்'' என்பதுதான் கலாம் சொன்ன யோசனை. கலாமின் இந்தக் கருத்துக்கு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடைய…
-
- 0 replies
- 585 views
-
-
அட்சர கணிதத்தில் இரண்டு மைனஸ், பிளசுக்கு சமமானது, இதன் அர்த்தம் ஒன்றும் இல்லையென்பதே'' மிக்னோன் மக்லோக்ளின் அமெரிக்க பத்திகையாளர் (1913 1983) மூன்று வருட கால இடைவேளையின் பின்னர் 13 பிளஸ் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. இவ் உற்பத்திப் பொருள் யார் யாருக்கு விற்கப்படப்போகிறது என்பது தான் எல்லோருடைய கேள்வியாகும். முள்ளிவாய்க்காலுக்கு முன் ஓர் முக்கிய காரணத்தினால் இப்பொருள் நன்றாக சர்வதேச ரீதியாக சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு பின் 13 பிளஸ் என்னும் வாய்ப்பொருளை நம்பி வாங்கியவர்கள் தமக்கு விற்பனை செய்தவரை தேடத் தொடங்கினார்கள். இவர் இறுதியாக தமக்கு 13 பிளஸை விற்றவர், மிகவும் சந்தோஷத்திலும் கேளிக்கைகளிலும் மூழ்கி 13 பிளஸ் விற்பதை நிறுத்திவிட்டு வேறு ஒர…
-
- 1 reply
- 536 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் மும்மொழித்திட்டம் நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம், தமிழ்நாட்டின் தென்னிந்திய விஞ்ஞானிகள் சங்கம், மற்றும் ஜனாதிபதிகள் சங்கத்தின் தடையை மீறி இலங்கை வருகை தந்திருந்தார்! அவரிடம் படலை ஒரு பேட்டி எடுக்க அப்பாய்ண்மன்ட் கேட்ட போது போடாங்கோ என்று சொல்லிவிட, அவர் விஜயம் சம்பந்தமான ஒரு whatever! வணக்கம் அப்துல் கலாம் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது! அது தானே நாங்க பாலர் வகுப்பிலேயே படிச்சிட்டோமோ உங்களில் எத்தனை பேரு சந்திரனுக்கு போகவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? சந்திரன் மாஸ்டரை தானே சுட்டிட்டாங்களே ஐயா? மும்மொழி கல்வி அவசியம். நான் எல்லாம் பத்தாம் வகுப்பு வரைக்கும் தாய்மொழியில் படித்த காரணத்தால் தான் இந்த அளவு முன்னேறினேன…
-
- 0 replies
- 712 views
-
-
அடுத்தது என்ன? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சவால்களும் வாய்ப்புக்களும் அடுத்தது என்ன? - இந்த சொற்தொடரை இன்று பரவலாகக் கேட்க முடிகின்றது. இவ்வாறு கேள்வி எழுப்புவோரின் இலக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கிறது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பின் குறியீடாகவும், அதனை வெற்றி கொள்வதற்கான ஸ்தாபன வடிவமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெளித்தெரிந்தது- தெரிகிறது. இதுவே அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைப்பதற்கான காரணமாகும். ஆனால் இவ்வாறு த.தே.கூட்டமைப்பை இலக்குவைத்து வெளிவரும் கருத்து வெளிப்பாடுகள், த.தே.கூட்டமைப்பை முன்நோக்கி நகர்த்துவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருக்கின்றனவா? இதனைப் பார்ப்பதற்கு, முதலில் த.…
-
- 1 reply
- 463 views
-
-
இலங்கையில் மாற்றம்... புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!: கவிஞர் சேரனின் பேட்டி ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசங்கள் இருப்பதும். தொடர்ச்சி யான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகு தூரம் விலகி விழுந்த விதைகளில் ஒருவராக, இன்று கவிதை விருட்சமாக இருப்பவர் கவிஞர் சேரன். தன் 'காடாற்று’, மற்றும் 'எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் - மானுடவியல் துறை பேராசிரியராக இருப்பவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினேன்! ''என் 'காடாற்று’ தொகுதியில் இருக்கும் பெர…
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்தியா புலிகளை அழித்ததா? நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு : யதீந்திரா இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகளை மறைக்கும் காலச்சுவடும் குட்டிக் கேபியும்! சிறுபான்மைத் தேசிய இனம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவதற்குப் பின்னால், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் பாசிசம் நிலை பெறுவதற்குப் பின்னால், இனச்சுத்திகரிபின் பின்னணியில், நாள்தோறும் பட்டினியால் மரணித்துப் போகும் சிங்களத் தொழிலாளர்களின் பின்னணியில் ஒரு பிரச்சார வலைப் பின்னல் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாம் தலித்தியம் பேசுகிறோம், முஸ்லீம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம், பின்நவீனத்துவப் பையன்கள் என்று அழகிய “கதையாடல்கள்” உலக மக்களை ஒரு பிரச்சார வரம்புக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது. ஈழத்தின் இனப்படுகொலையை முன்வைத…
-
- 4 replies
- 887 views
-
-
அப்துல் கலாமிற்கு எனி 3 நாளைக்கு சோறு தண்ணி கொடுக்காதீங்கப்பா. இந்தியாவின் புகழ் பூத்த அணு குண்டு விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமிற்கு எனி 3 நாட்கள் சாப்பாடு (சோறு தண்ணி) கொடுத்திட்டு.. 3 நாட்கள் கொடுக்காமல் விட வேணும். 1 நாள்.. சமையல்காரர்களுக்கு.. சமையலுக்கு விடுதலை..! அப்போது தான் தெரியும்... கடல் வளத்தில் ஜீவனோபாயம் செய்யும் மக்களின் பசியும் வலியும். கலாம் அவர்கள் மன்னார் வளைகுடாவில் மீனவர் பிரச்சனைக்கு முன் வைத்துள்ள 3 நாள் ஈழப் பக்க மீனவர் மீன் பிடி.. 3 நாள் தமிழக பக்க மீனவர் மீன் பிடி.. 1 நாள் இரு பகுதிக்கும் மீன் பிடியில் இருந்து விடுதலை என்பது பற்றி இதனையே சொல்ல முடிகிறது. தமிழக தமிழ் சொந்தங்களுக்கும்.. ஈழத்தமிழ் சொந்த…
-
- 1 reply
- 838 views
-
-
மேதகு அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை சில அன்பர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை,அப்துல் காலம் துரோகி என சில நண்பர்களும்,சில ஊடகங்களும் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன,முகப் புத்தகத்தில் ஒரு அன்பர் அப்துல் கலாம் தமிழின துரோகி எனவும் அவரைப் போட்டுத் தள்ள வேண்டும் எனவும் தனது அறச் சீற்றத்தைக் கொளுத்திப் போட்டு இருந்தார் , இந்த துரோகி , தியாகி என்பதற்கு அவசியம் ஒரு டெபினிசன் வேண்டும் தனது முகப் புத்தக பிரண்ட் ரிக்குயஸ்ட்டை ஏற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணை துரோகி என்றும் அவளை போட்டுத் தள்ளவேண்டும் எனவும் ஒரு நண்பர் தனது சீற்றத்தைக் என்னிடம் காட்டி இருந்தார் , என்ன இழவு வாழ்க்கடா இது , ஒரு முறை என்னுடன் கதைத்த நண்பன் ஒருவன் கூறினான் மச்சான் ஒரு தமிழனால் இன்னொ…
-
- 10 replies
- 3.3k views
-
-
அப்துல் கலாம் ( A. P. J. Abdul Kalam) தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாணம் வந்தது.. fusion technology பற்றி நமக்குப் பாடம் எடுக்க. ஆனால் உலகம்.. fission technology பற்றித்தான் அதிகம் அக்கறை கொண்டுள்ளது. காரணம்.. இந்தியா நினைக்கிற Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம். எப்படி atomic nuclear fusion இலகுவில் சாத்தியமில்லையோ அதேபோல் தான்... இதுவும்..! தயவுசெய்து கலாமிடம் இதைக் கொண்டு சென்று விடுங்கள். தமிழ் மக்களின் வாழ்வுரிமை என்பது.. அவர்களின் சொந்த தாயகமான தமிழீழம் அமையப் பெறுவதிலையே தங்கி உள்ளது. இந்தியர்களுக்கு இந்தியா என்ற சுதந்திர தேசம் எவ்வளவு முக்கியமோ.. அதே அளவிற்கு ஈழத்தில் தமிழர்களுக்கு தமிழீழம் முக்கியம். அதை கலாமோ.. எவருமோ.. தடுக்க ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்க தயாராக இருப்பதாக மகிந்த கூறியதின் பின்னணி என்ன? - ஆய்வாளர்கள் விளக்கம் ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவும் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததாக தெரிய வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்த…
-
- 1 reply
- 623 views
-
-
மும்மொழிக் கொள்கை அரசியல் பிரச்சனைகளை தீர்த்துவைக்குமா? இலங்கை சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை அரசின் மும்மொழி செயற்திட்டத்தை சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். இலங்கையில் தமிழ் சிங்கள மொழிகளையும் ஆங்கிலத்தையும் பள்ளிக்கூட மட்டத்திலிருந்தே அனைவருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தமுடியும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் அரசு இந்த மொழிக்கொள்கையை ஒரு வழிமுறையாக பயன்படுத்தமுடியும் என்கின்ற போதிலும் அதன்மூலம் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்துவிடமுடியாது என்று தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்…
-
- 0 replies
- 464 views
-
-
பொறாமை எனும் விஷம் கொட்ஸ் ஆலி - தமிழில்: ரஞ்சன் குறிப்பு : வரலாற்றாய்வாளர் கெட்ஸ் ஆலி-யின் “Why the Germans? Why the Jews? Equality, Envy and Racial Hatred 1800-1933″ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1808 முதல் 1812ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ப்ரஷய (ஜெர்மனியின் முன்னாள் பெயர்) சீர்திருத்தங்கள் அனைத்து குடிமக்களுக்கும் வர்த்தகம் செய்யும் சுதந்திரத்தை வழங்கின. மேலும், நிலவுடைமை சார்ந்த அடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்ததோடல்லாமல், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், யூதர்கள் காரணங்களின்றியும் தண்டிக்கப்படக்கூடும் என்று அதுவரை இருந்த நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. . இருந்தும், யூதர்கள் சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட…
-
- 1 reply
- 971 views
-
-
பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் முதல்வர் ஜெயலலிதா உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இங்குள்ள முக்கிய கட்சிகளான அ.தி.மு.க.வும் (அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்), தி.மு.க.வும் (திராவிட முன்னேற்றக் கழகம்) தங்களது பிரசாரக் கணைகளை கூர் தீட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். தி.மு.க.வின் சார்பில் வருகின்ற பெப்ரவரி மூன்றாம் திகதி அக்கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனையும் ஓர் அஜெண்டாவாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வோ எம்.ஜி.ஆர் பிறந்த நாளை (ஜனவரி 17) வெகு விமரிசையாக கொண்டாடி, 'இந்தக…
-
- 0 replies
- 914 views
-
-
வெள்ளை வேன் சுமந்து சென்ற ப்ரியாவின் எதிர்பார்ப்பு : ப்ரியந்த லியனகே அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். ‘தாய்’ எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப…
-
- 1 reply
- 707 views
-
-
பல பிரமிப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் சுமந்து நிற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், ஒடுக்கு முறைக்கெதிராகக் களமாடி வீரமரணமெய்திய கப்டன் பண்டிதரின் 27வது வருட நினைவு வணக்கம் ஜனவரி 9ம் நாள். விடுதலைக்கான பாதையை வெட்டி, அதில் பலர் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள்தான் வரலாற்றை வரைபவர்கள். மாற்றங்களை உருவாக்கும் உந்து சக்திகளும் இவர்களே. இந்த மாமனிதர்களை நினைவு கூருவது, அவர்களின் இழப்பில் வெளிக் கொணரப்பட்ட போராட்ட உணர்வுச் செய்தியை மக்களுக்களிடையே கொண்டு செல்வது, வரலாற்றை எழுதுபவர்களின் பணியாகிறது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோமென 2009 மே 18 இல் வெற்றி முழக்கமிட்ட சிங்கள பேரினவாத தேசம், புலிகளின் அனுதாபிகளால் ஆபத்தென கூக்குரலிடத் தொடங்கிவிட்டது. இதில் ஒரு உண்மையும…
-
- 0 replies
- 573 views
-
-
எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! - தமிழ்க் கவி ஆக்கம்: எஸ்.கோபாலகிருஷ்ணன் ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்ற பெண்ணைச் சந்தித்தோம். மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பெண்ணியவாதி என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, போருக்குப் பின்னர் வதை முகாமில் அடைக்கப்பட்டு, இப்போது வன்னி நகரில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து... "நீங்கள் சந்தித்த …
-
- 2 replies
- 789 views
-