அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
தென்னாபிரிக்காவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் உலகத் தமிழர் பேரவையும் தற்போது தென்னாபிரிக்காவை ஆட்சி செய்யும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உலகத் தமிழர் பேரவையும் சென்றிருக்கின்றன. வருகிற பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், இவர்களின் தென்னாபிரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவளித்த அமைப்புகளும் கலந்து கொள்கின்றன. இதில் ஏறத்தாழ 120,000 பேர் பங்குபற்றுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் த…
-
- 3 replies
- 735 views
-
-
-
எனது தொடரின் நான்காவது பகுதியை, எனது தொடரின் முன்னைய பகுதிகளை வாசித்த நண்பர் ஒருவர் முன் வைத்த விமர்சனத்தையும் அதற்கான பதிலையும் தந்து தொடர விரும்புகிறேன். ஏனேனில் நீண்டு செல்லவுள்ள தொடர முழவதும் கீழ்க்கண்டவாறான விமர்சனத்தை பலர் முன்வைக்க விரும்புவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் யாவரும் இனிவரும் காலத்தில் மரபுவழியான சிந்தனை முறைகளில் இருந்து வெளியே வந்து கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அணுக வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. நண்பரின் விமர்சனம்: அன்பின் குருபரன் தங்களின் மௌனம் கலைகிறது தொடரை இரசித்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை எதிர்ப்பார்க்கிறோம். ஆனால், ஊடகவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அனைத்துலக விசாரணைகளில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றவே நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு பேராசிரியர் போல் நியூமன் அவர்கள் இந்தியாவின் The Weekend Leader ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். (கலாநிதி போல் நியூமன் அவர்கள் வட இலங்கயில் மனித உரிமைகளும், அவலங்களும், உளநாட்டு இடப்பெயர்வும்’ என்னும் ஆய்வு மூலம் இந்நதியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஒரு தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர்). மேலும் வாசிக்க ... http://naathamnews.com/2012/01/11/pro-paul-newman/
-
- 0 replies
- 557 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன சாதகமான பதில்களை வழங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்துள்ளது. இவ்வாறு www.wsws.org இணையத்தளத்தில் விஜே டயஸ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் பலம் வாய்ந்த பிரதான தமிழ்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிபர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆரம்பத்திலேயே மறுத்து விட்டது. பிரிவினை கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிரா…
-
- 0 replies
- 543 views
-
-
தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு பகுதி.. இந்து சமுத்திரத்தை அண்டிய படிவுப் பாறைகளால் ஆன நிலப்பரப்பைக் கொண்டது. அங்கு கடல் நீரின் உவர்ப்புத் தன்மை கலந்த நீரே அதிகம். அது உயிர் வாழவும் பயிர் செய்கைக்கும் உகந்ததல்ல. அது மட்டுமன்றி யாழ்ப்பாணம்.. சம தரை கொண்ட பூமி ஆதலால்.. கார் காலம் தவிர ஓடக் கூடிய ஆறுகள் கிடையாது. பெரிய நீர்த்தேக்கங்களும் இல்லை. இந்த நிலையில் யாழ்ப்பாண பண்டைத் தமிழன்.. பல அடி ஆளத்தில் நிலத்தை அகழ்ந்து.. நிலத்தடி நன்னீரை பெற்று உயிர் வாழ்ந்தும்.. விவசாயம் செய்தும் அந்தப் பூமியை செழிப்பித்தான். ஆனால் கடந்த காலணித்துவ.. அடிமைத்தனத்தை தொடர்ந்த சிங்கள ஆக்கிரமிப்பு என்பது.. தமிழர்களின் சொந்த நிலத்தில் அவர்களின் வாழ்வியலை புரட்டிப் போட்டுள்ளது. அ…
-
- 0 replies
- 576 views
-
-
தமிழ்த்தேசியமும் திராவிட அரசியலும் இந்தியக்குடியரசின் ஓர் அங்கமாக ஒரு மாநிலமாக ஓரினமாக ஒரு மொழியாக இருக்கும் தமிழன் இந்தியக் குடியரசின் ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி, ஓர் இனம், ஒரு மதம் என்ற ஒருமைத்தன்மையில் ஆதிகாலம் தொட்டு கலந்து விடாமல் தனித்தே நிற்கிறான். சிலம்புக் காவியம் படைத்த இளங்கோவடிகளின் தமிழ் மண்ணில் இன்று தமிழனுக்கு அவன் தமிழன் என்ற அடையாளம் இருப்பதாலேயே இடமில்லை, அடித்து விரட்டப்படுகிறான், சொந்த மண்ணிலேயே அகதிகளாகிவிடும் அவலம் இன்று உச்சநிலையை எட்டியுள்ளது. அதாவது திராவிட இன மக்கள் அதாவது திராவிட மண்ணின் பங்காளிகள் இன்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக் கொண்…
-
- 0 replies
- 761 views
-
-
ஈழ மக்களுக்கும் திபெத்தியர்களுக்கும் துரோகம் செய்யும் இந்து ராம் அண்மையில் நாகர்கோவில் நகரில் இயங்கும் ஒரு நூல் விற்பனை நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் தேடி சில நல்ல நூல்கள் வாங்கினேன். அதில் ஒன்றுதான் 'திபெத் சில புரிதல்கள்'. தி ஹிந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என்.ராம் அவர்கள் திபெத் பிரச்சனை குறித்து 'புரன்ட்லயன்' இதழில் (மே 23, 2008) எழுதிய கட்டுரை இக்குறுநூலில் தமிழில் தரப்பட்டுள்ளது. திபெத் பிரச்சனை குறித்து ஐந்து கேள்விகள் என்ற தலைப்பில் கொல்கத்தாவில் உள்ள சீன குடிமக்கள் நலன் காக்கும் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான மாவேசிவேய் எழுதியுள்ள கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது (04.06.2008). தமிழாக்கம் செய்த இலக்குவன், அறிமுகமும் எழுதி திபெத்திய புத்தமதம் …
-
- 0 replies
- 823 views
-
-
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர் "கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள், சீனக் கடற்படையுடன் இராணுவ ஒத்திகையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன." இது போன்ற செய்தி, சர்வதேச அரங்கில் எந்தளவு கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் வியூகமும் அது போன்றது தான். நாங்கள் அமெரிக்காவையோ, சீனாவை ஆதரிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் சோவியத் யூனியனுடனான பனிப்போர் யாரால், எப்போது தொடங்கப்பட்டது என்பதை இன்று எல்லோரும் மறந்து விட்டனர். அன்று "சிவப்பு அபாயம்" குறித்து, மேற்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. இன்று, "மஞ்சள் அபாயம்" பற்றிய அச்சவுணர்வு ம…
-
- 2 replies
- 933 views
-
-
முள்ளிவாய்க்காலிலிருந்து முன்நகர ஆரம்பித்துள்ள தமிழீழ விடுதலைத் தேர் பாரியதொரு தமிழினப் படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைத் தேர் தற்போது முன்நகர ஆரம்பித்துள்ளது. ‘தமிழீழம் இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினமே இல்லை’ என்ற சிங்கள தேசத்தின் கற்றுக்கொடுக்கும் தொடர் பாடம் இந்த விடுதலைத் தேரின் முன்நகர்வை வேகப்படுத்தியுள்ளது. தேசியக் கூட்டமைப்பின் இலக்குத் தவறிய பயணத்திற்கு எதிராகத் தமிழீழத்தின் மனச்சாட்சிகள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, புலம்பெயர் தேசங்களில் தமிழீழ இலட்சியத்தின்மீது போர் தொடுத்தவர்களும் தற்போது மௌனித்துப் போயுள்ளனர். விடுதலை கோரும் ஒரு இனத்தின் ஆன்ம பலத்தின்மீது எந்தச் சக்தியினாலும் சேதத்தை ஏற்படுத்த முடியாது என…
-
- 4 replies
- 1k views
-
-
'பாலை' மறவராவோம் தமிழீழம் பெறுவோம் [ கீற்று ] - [ Jan 06, 2012 15:10:05 GMT ] தமிழ் சினிமாவின் ஆராம்ப காலங்களில் புராணக் கதைகளும், தேசபக்தி இந்திய சுதந்திர போராட்ட கதைகளும் அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, திராவிட இயக்க உணர்வு பெற்றவர்கள் திரை உலகை ஆக்கிரமித்து, பிறகு பழைய மரபை உடைத்தனர். (பராசக்தி, நாடோடி மன்னன், வேலைக்காரி). நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க நலன்களை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைப்படங்களை வடிவமைத்தவர் கே.பாலசந்தர். இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் அரசியலை திரையில் புகுத்தியதில் முன்னோடி இவரே. தமிழ்த்திரையை கிராமத்து மனிதர்களின் களமாகவும், கிராமங்களை தமிழ்த்திரையின் தவிர்க்கமுடியாத அங்க…
-
- 0 replies
- 719 views
-
-
மனிதவுரிமை விவகாரங்களுக்குரிய பொறுப்புக்கூறலில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்கத் தவறினால், 2013இல் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவுள்ள கூட்டத்தினைக் கனடா புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக கனேடிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற போது கனேடியப் பிரதமர் Stephen Harper இந்தக் காலக்கெடுவினை விதித்திருந்தார். இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்படுவதோடு, தமிழ் மக்களுடனான மீள்நல்லிணக்கத்தை வலுப்படுத்துமாறும் அவர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்திருந்தார். சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பிலிருந்து பல்வேற…
-
- 1 reply
- 846 views
-
-
உடையும் இந்தியா? - புத்தகத்திலிருந்து ஒரு பகுதி அரவிந்தன் நீலகண்டன், ராஜீவ் மல்ஹோத்ரா குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடான ‘உடையும் இந்தியா?’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே அளிக்கப்படுகிறது. இந்தியாவைக் குறி வைக்கும் மூன்று பண்பாடுகள் இந்த நூல், இந்தியாவின்மீதான மேற்கத்தியத் தலையீடுகளையும் அதற்கு திராவிட-தலித் பிரிவினைவாதங்கள் பயன்படுத்தப்படும் விதத்தையும் குறித்தது. ஆனால் இந்தத் திராவிட-தலித் அடையாள அரசியலை சர்வதேசச் சக்திகள் இந்தியாவில் தலையீட்டுக்காகப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்னையின் ஒரு பரிமாணம் மட்டுமே. இன்று மூன்று சக்திகள் வெளிப்படையாகவே உலக மேலாதிக்கத்துக்காக மோதுகின்றன. மேற்கு (குறிப்பாக அமெரிக்கா), …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழருக்கு நல்ல எதிர்காலத்தை வரைந்து செல்லும் 2011 ரூனீசியாவில் புறப்பட்ட புரட்சிகரமான புது நதி அநீதிகளை எல்லாம் அழிக்கும் என்ற புது நம்பிக்கையை ஏற்படுத்திய பொன்னான ஆண்டு. 1948 ம் ஆண்டு இலங்கை அடைந்த போலிச் சுதந்திரத்திற்கு பின்னர் பெரும் துயரடைந்த ஈழத் தமிழர் வாழ்வில் 2011 ம் ஆண்டு பொன்னான ஆண்டு மட்டுமல்ல பொற்காலத்திற்கு பாதை வரைந்து விடைபெறும் புதுமை ஆண்டாகவும் அமைந்திருக்கிறது. ஏன் 2011 பொன்னான ஆண்டு இதோ காரணங்கள் : 01. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் காரணமாக வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசு கொன்றொழித்துள்ளது. அவர்களுடைய வீடுகள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் யாவும் அழிக்கப்பட்டன. இந்த ஆண்டு அந்த மரணங்களும…
-
- 0 replies
- 637 views
-
-
செல்லம்மாவின் கதை : தயா நெத்தசிங்க நாங்கள் அவரை நெருங்கினோம். ‘அம்மா’ என்று அழைத்த உடனேயே அவரது வாடியிருந்த முகத்தில் தோன்றிய பிரகாசம், இன்னும் நினைவிலிருக்கிறது. எனினும், அடுத்த கணமே மழை மேகம் சூழ்ந்த வானம் போல அவரது வதனம் இருண்டது. அவரிடம் சொல்வதற்கு ஏதோ இருக்கிறது. எங்களால் அவரைத் தாண்டிச் செல்ல இயலாது. “அம்மா, வியாபாரம் எப்படியிருக்கிறது?” எனது பயணத் தோழன் கேட்ட கேள்விக்கு, அவர் வெறுமனே புன்னகைத்தார். எனினும் அடுத்த கேள்விக்கு தந்த பதிலோடு அவர் எங்களுடன் உரையாடத் தொடங்கினார். “எனது ஊர் பூந்தோட்டம், பிள்ளை. இந்தப் பிள்ளைகளைக் கண்டவுடன் எனக்கு எனது மகன் நினைவுக்கு வந்தார்.” எனச் சொன்னவர், தனது இரு கன்னங்களையும் நனைத்தபடி, வடிந்துகொண்டிருந்த கண்ண…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள் அபுகிரைப் சிறைச்சாலையில் ஈராக் மக்கள் மீது அமெரிக்கத் துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன்முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கண்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஷ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது. இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் ஈராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச்சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு. "துப்பாக்கி முனையில் அம்மணமா…
-
- 5 replies
- 11k views
-
-
எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் பிறப்பு: ஜனவரி 17.1917 நாவலப்பிட்டி, இலங்கை இறப்பு: டிசம்பர் 24.1987 தமிழ்நாடு, இந்தியா தொழில்: நடிகர், அரசியல்வாதி வாழ்க்கைத் துணை: தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி பிள்ளைகள்: கிடையாது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பெருந்தொகை நிதியை அளித்து போராட்டத்தை முன்னெடுக்க உதவியிருந்தார். பிரபாகரனை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று பிரபாகரன் தலைமையில் தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூற…
-
- 3 replies
- 1.3k views
-
-
மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட வரலாறு அழிவு சக்திகளின் பிடியில் திரிபு படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் தமக்குரிய அடையாளத்தை நிறுவிக் கொள்வதற்கான கருவியாகப் பயன்பட்டுப் போவது வேதனை தரும் சம்பவங்கள். மண்ணிலிருந்து பிடிங்கியெறியப்பட்டு உலகின் ஒவ்வொரு மூலைகளை நோக்கியும் விரட்டியடிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனிடமும் ஆயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன. சமூகத்தின் பொதுவான பிற்போக்குச் சிந்தனையை மாற்றும் போக்கில் இந்த அனுபவங்கள் காத்திரமான பாத்திரத்தை வகிக்கவல்லன. அனுபவப் பகிர்வு என்பது தனிமனித அடையாளத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக அன்றி அந்தக் காலத்திற்கே உரித்தான புறச் சூழலையும் அதனோடு இணைந்த அரசியல் மாற்றத்தையும் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாக அமையுமானா…
-
- 15 replies
- 1.8k views
-
-
சர்வதேசியவாதியின் சொந்த தேசியம் -முதல் பகுதி - யமுனா ராஜேந்திரன் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அப்பால் ஈழப்பிரச்சினை குறித்து நிறைய எழுதி வந்திருக்கிற, மாவோகால சீனசார்பு கொண்ட மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரை தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடையதும் ஈழம் தொடர்பான பாரா முகங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஈழம் தொடர்பாக அவர் எழுதி வந்த எழுத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களையே கொண்டிருந்தன. தனித் தமிழீழத்தை அவர்கள் அங்கீகரிக்காதது குறித்து தனது கடுமையான விமர்சனங்களை ராஜதுரை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார். திருநாவுக்கரசு மற்றும் சேரன் போன்றோர் எழுதிய ஈழப் போராட்டம் …
-
- 1 reply
- 849 views
-
-
http://youtu.be/4Lon_kDiT4o http://youtu.be/EVkFEuqn4N4 http://youtu.be/pQ3qGIx5JlE http://youtu.be/y7VzVUUGChc
-
- 0 replies
- 869 views
-
-
கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது? இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன? இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்ல…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவில் தமிழர்களை கொலை செய்த சிங்களப் படைகள் இதுவரை தண்டனை பெற்றதாக சரித்திரம் இல்லை. கடந்த 30 வருடகால போரில் மூன்று இலட்சத்தில் இருந்து ஐந்து இலட்சம் வரையான தமிழ் மக்கள் அந்த நாட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. குறைந்த பட்சம் யூலைக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொலை செய்த சிங்களக் காடையர்களில் ஒருவர் கூட தண்டிக்க வழி செய்யாத ஏமாற்று அறிக்கைதான் அன்றைய சன்சோனிக் கமிஷன் அறிக்கை. அதுபோல இன்னொரு சன்சோனி கமிஷன் அறிக்கையாக வெளியாகியிருக்கிறது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை. இதுபற்றி தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிங்கள அரசு சர்வதேசத்தை ஏமாற்ற எழுதிய அறிக்கைக்கும் தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்…
-
- 0 replies
- 691 views
-
-
Operation Payback : பழைய போர்; புதிய போர்க்களம் பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் : (ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்) http://www.mediafire.com/?8l8t4kew6p3i8ol [ 0 ] சின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களாக அந்த இரகசியச்செய்தி பொதுமக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது. வீதிகளில் சுவரொட்டிகளாகப் புரட்சிகர வாசகங்களுடன் அச்செய்தி காணப்படுகிறது. அதிகார அரசின் காவலாளிகள் அவசர அவசரமாகச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துகிறார்கள். ஆயிரமா இரண்டாயிரமா? கோடிக்கணக்கான சுவரொட்டிகள். போராளிகள் மறைவாக வந்து சிலர் காதுகளுக்குள் செய்தியைக் கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறார்கள். துண்…
-
- 0 replies
- 739 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 01:36 GMT ] [ நித்தியபாரதி ] கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதேமாதத்தில் நடந்தேறிய சில சம்பவங்களால் ஐரோப்பிய மொழி மூலத்தைச் சேர்ந்த புதிய சொல் ஒன்று, சிங்களம் மற்றும் சில தென்னிந்திய மொழிகளுக்குக்குள் நுழைந்து கொண்டது. இன்று யாராவது சிங்கள பேச்சு வழக்கில் (எம்டன்) 'Emden' என்று சொன்னால் அந்த வார்த்தையானது குறிப்பிட்ட நபர் நரியைப் போன்று குள்ளப் புத்தி உடையவர் என்றே அர்த்தம். சிறிலங்காத் தாய்மார்கள் தமது குழப்படிக்காரப் பிள்ளைகளை மிரட்டுவதற்கு 'Emden billa' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். 1914 ஓகஸ்ட் 04ம் நாள், ஜேர்மனி மீது பிரித்தானியா போரை ஆரம்பிப்பதாக அறிவித்ததன் பின்னர், முதலாம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கடாபி-இராச்சியத்தில் இருந்து பூச்சியம், 24Share கடைசியில் கேணல் கடாபியை சுட்டுக் கொன்று விட்டார்கள்,இரத்தம் தோய்ந்த நிலையில் மேற்சட்டை கூட இல்லாது ஒரு தெரு நாயை இழுத்து வருவது போல ஒரு நாட்டின் 42 வருட ஆட்சியாளரை இழுத்துவரும் காட்சியை முதல் தடவையாக அல் ஜெசீரா தொலைக் காட்சி ஒளி பரப்பிய வேளையில் சரியாக நான் எனது நண்பனின் வீட்டில் இருந்தேன்,தொலைக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பனின் தந்தையால் அக் காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை ஏன் நம்பக் கூட முடியவில்லை,அவரைப் பொறுத்த வரை கேணல் கடாபி ஒரு ஹீரோ,ஒரு ஆதர்சனம் அவரிற்கு மாத்திரமல்ல சுதந்திரம் வேண்டி நின்ற இளமை துடிப்புள்ள,சுய மரியாத…
-
- 4 replies
- 2.5k views
-