அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
நல்லாட்சி சவாரியில் டக்ளஸும் தொண்டமானும் புருஜோத்தமன் தங்கமயில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகள், பெரும்பாலும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த சிறுபான்மைக் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும…
-
- 0 replies
- 310 views
-
-
சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு தீர்வு இணைப்பாட்சி நிர்வாகமே - இந்திய அரசறிவியல் பேராசிரியர் [ ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012, 09:18 GMT ] [ நித்தியபாரதி ] இணைப்பாட்சி [federal] நிர்வாகத்தை படிப்படியாகச் செயற்படுத்தி, அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பை மீளவரையறுக்கும் போது மட்டுமே சிறிலங்காவில் நிலவும் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில், டெல்லி Jawaharlal Nehru பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசறிவியல்துறைப் போராசிரியர் Anuradha Mitra Chenoy* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.…
-
- 1 reply
- 667 views
-
-
இனநெருக்கடித் தீர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசம்: தமிழர் தரப்பு செய்ய வேண்டியது என்ன? Johnsan Bastiampillai / 2020 ஜூன் 29 அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில், எந்தத் தரப்பு வெற்றிபெறும் என்பதை, ஓரளவு அனுமானிக்கக் கூடிய சூழ்நிலையே, தற்போது வரையில் நிலவுகின்றது. இத்தகைய அனுமானத்தின் மீது, பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய காரணிகளோ சவால்களோ, வெற்றிபெறும் தரப்புக்கு முன்னால் இல்லை. எனவே, ராஜபக்ஷக்களின் தலைமையிலான இந்த அரசாங்கமே, தேர்தலுக்குப் பின்னரும் தொடர்ந்து நீடிக்கும் என்பதற்கான நிகழ்தகவுகள், அதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால், அந்த வெற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டமையுமா என்பதுதான் கேள்விக்குறியாக அமைகின்றது. எது எப்படி இருந்தபோதிலும், தமிழ…
-
- 1 reply
- 445 views
-
-
கொமன்வெல்த் மாநாட்டை ‘நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கில்‘ நடத்தும் இலங்கை அரசின் திட்டம் அவ்வளவு இலகுவாக கைகூடும் போலத் தெரியவில்லை. காரணம் இன்றுவரைக்கும், இந்த மாநாட்டை கொழும்பில் தான் நடத்துவது என்ற உறுதியான அறிவிப்பு ஏதும் உரியதரப்பில் இருந்து வெளியாகவில்லை. 2011 பேர்த்தில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்குப் பின்னர் - வரும் நவம்பர் 15 தொடக்கம் 18 வரை கொமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்ட போதிலும், கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. பேர்த் மாநாட்டின் முடிவில், அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் தொடக்கம், கனடா இதனை எதிர்த்தே வந்தது. மனித உர…
-
- 1 reply
- 754 views
-
-
வடக்கின் வசந்தம் வன்னியை வளப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஒரு புதுயுகம் படைத்துக் கொண்டிருப்பதாகத் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அது போர் இடம்பெற்ற காலம். கிளிநொச்சி வளர்ந்து வரும் ஒரு நகரமாக உருப்பெற்றிருந்த நாள்கள். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகங்கள் அத்தனையும் அங்குதான் மையம் கொண்டிருந்தன. அப்போது அங்கே அகன்ற அழகான ஏ9 வீதி இருக்கவில்லை. ஓங்கி உயர்ந்த கட்டடங்கள் இருக்கவில்லை. பிரதான வீதியால் பறக்கும் நவீன வாகனங்களையோ பெரும் கனரக வாகனங்களையோ காணமுடியாது. எனினும் நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். கிபிர் வரப் போகும் முன்னறிவிப்பு விசில் அடித்ததுமே மக்கள் ஆங்காங்கே இருக்கும் பதுங்கு குழிகளுக்குள் இறங்க…
-
- 0 replies
- 909 views
-
-
மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்து முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் அனுமதித்திருக்கவில்லை. இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மக்களின் கூட்டுரிமையையே மஹிந்த அரசாங்கம் தன்னுடைய கொடுங்கரம் கொண்டு அடக்கியிருந்தது. ஆனால், இம்முறை அந்தக் கரத்தினை முற்றாக விலக்காமல் பிடியின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தியிருக்கின்றது. (ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.) அதுதான், மக்களைப் பெருவாரி…
-
- 0 replies
- 254 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-08#page-11
-
- 0 replies
- 413 views
-
-
யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன. ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். இவ்வாறு கேட்டுக்கேட்டே, நான்கு தசாப்தங்களைக் கடந்துவிட்டோம். யாழ்ப்பா…
-
- 1 reply
- 625 views
-
-
நினைவு கூர்தல் 2017 – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன் கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது ‘நஎநவெ டியளநன’ ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ஒரு நஎநவெ- நிகழ்வு- வரும்பொழுது அதற்கு எதிர்வினையாற்றும். அந்த நிகழ்வு முடிந்ததும் அதை அப்படியே மறந்துவிடும். தாயகத்திலிருந்து யாராவது வந்தால் அவரைச் சுற்றி நின்று அவர் சொல்வதைக் கேட்டும். உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு உதவிகளையும், வாக்குறுதிகளையும் வழங்கும். ஆனால் அவர் நாடு திரும்பிய பின் நாங்கள் வழமைபோல எமது அன்றாடக் காரியங்களுக்குள் எந்திரமாக மூழ்கி விடுவோம்’ என்று. அவர் கூறியது டயஸ்பொறாச் சமூகங்களுக்கு மட்டுமல்ல தாயக்தில் வாழும் தமிழர்களு…
-
- 0 replies
- 419 views
-
-
இலங்கையின் வடமாகாணத் தேர்தல், அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகத் திகழ்கின்றது. யதார்த்தங்கள் குறைவு, எதிர்பார்ப்புகள் பெரிது இந்த மக்களிடம் இந்தத் தேர்தலில் அபிவிருத்தியை முன்னிறுத்தி ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி களத்தில் இறங்கியிருக்கின்றது. அதேநேரம் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகின்றது. வடமாகாண சபை என்பது, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாகும். இதற்குப் போதிய அதிகாரங்களில்லை.தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு இது தீர்வாகமாட்டாது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். பிளவுபட்டுள்ள முஸ்லிம்…
-
- 0 replies
- 523 views
-
-
எனது நண்பர் ஒருவர் திரு எம். ஏ. சுமந்திரன் அவர்கள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வியை எனக்கு அனுப்பியிருந்தார். ஏரிக்கரை பத்திரிகையான தினகரன் பத்திரிகை எப்பொழுதும் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் பத்திரிகை மற்றும் அரசாங்க பத்திரிகை என்பது யாவரும் அறிந்ததே. ஆனபடியால் சாதாரணமாக நான் தினகரன் பத்திரிகை பார்ப்பது குறைவு அப்படியிருந்தும் எனது நண்பர் மூலம் இவ் செவ்வியை பார்க்க கிடைத்ததற்கு முதலில் எனது நன்றியை அவருக்கு தெரிவித்துகொள்கின்றேன். இனி திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களின் செவ்வியில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் சிலவற்றைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விலக்கப்படவேண்டு மெனக் கோரி வட மாகாண சபை…
-
- 2 replies
- 474 views
-
-
கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக? புதிய அரசியல் யாப்பா...? அல்லது யாப்பில் திருத்தமா...? என்ற பட்டிமன்றத்திற்கு புத்த பிக்குகளின் எதிர்ப்பானது தேர்தல் என்னும் சிறிய விளம்பர இடைவேளையை வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் போது புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டில் நிலுவையில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. அதன்படி ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்களை நீக்குதல், தேர்தல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் மற்றும் இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருக்க கூடிய தீர்வை வழங்குதல் என்னும் மூன்று அடிப்படைக…
-
- 0 replies
- 472 views
-
-
புதிய ஆண்டிலாவது நற்செய்திகள் கிடைக்குமா? நிலாந்தன் இரண்டாவது பெரும் தொற்றுநோய் ஆண்டு நம்மை கடந்து சென்றிருக்கிறது. உலகம் முழுவதுக்கும் அது ஒரு பொதுவான தோற்றப்பாடு. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை பெரும் தொற்றுநோய் மட்டும் பிரச்சினை அல்ல.அதற்கும் அப்பால் பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த ஒரு ஆண்டு அது எனலாம். மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஓர் அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வெற்றிகள் எதனையும் பெறவில்லை. ஒரே ஒரு விடயத்தில் மட்டும் துலக்கமான வெற்றியை காட்டியது. அது என்னவென்றால் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகளில் உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் அது வினைத்திறனோடு செயல்பட்டிருக்கிறது. …
-
- 0 replies
- 340 views
-
-
மீளமுடியா நெருக்கடிக்குள் நாடு புருஜோத்தன் தங்கமயில் நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், ராஜபக்ஷர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைக் காட்டிலும், படுமோசமான குழிக்குள் இப்போது விழுந்துவிட்டார்கள். ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, சீனாவின் கடன்களைப் பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான தாராள கடன்களை வழங்கும் கட்டத்தில் இருந்து சீனா விலகிவிட்டது. மாறாக, கடந்த காலத்தில் வழங்கிய கடன்களை, மீள வசூலிப்பது அல்லது அதற்குச் சமமான சொத்துகளை இலங்கையில் கையகப்படுத்துவது என்கிற கட்டத்துக்கு சீனா வந்துவிட்டது. இந்த நிலைதான், ராஜபக்ஷர்களை திக்குத் திசை தெரியாமல் ம…
-
- 0 replies
- 351 views
-
-
ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ? நிலாந்தன். March 6, 2022 கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தின் விளைவாக என்ன நடந்தது? அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று மூன்று கட்சிகளும் கேட்டிருந்தன. கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் அவ்வாறு பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகும் விடயத்தில் உண்மையாக உழைத்த கட்சி எது? இதுவிடயத்தில் தமிழ்க் கட்சிகள் முதலில் தமது மக்களுக்கு பொறுப்புக்கூறுமா? உக்ரைன் விவகாரம் மீண்டும் ஒரு தடவை ஐநாவின் கையாலாகாத்தனத்தை…
-
- 0 replies
- 454 views
-
-
போர்க்கப்பலுக்காக பலிக்கடா? கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர், இலங்கைக் கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்ட முதல் தமிழர் என்று சர்வதேச ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்டவர் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா. அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஒரு தமிழர் என்று அடையாளப்படுத்தியே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அது பரபரப்பான செய்தியாகவும் அமைந்திருந்தது. ஆனால், அவரது தாய்மொழி சிங்களம் என்பது பலருக்குத் தெரியாத விடயம். எவ்வாறாயினும், மீண்டும் ஒரு தமிழருக்கு கடற்படைத் தளபதி பதவி கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, குறுகிய காலம் பதவியில் இரு…
-
- 0 replies
- 505 views
-
-
மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள் மாவீரர் நாள் முடிந்து விட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக விசாரணை மிரட்டல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மாவீரர் நாளுக்கு முன்னதாக அரச தரப்பில் இருந்து அதற்கு எதிரான கருத்துகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. மாவீரர் நாளை அனுஷ்டித்தால், புலிகளை நினைவு கூர்ந்தால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னரே எச்சரிக்கைகள் எதுவும் அரச தரப்பிலோ பொலிஸ் தரப்பிலோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருக்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன. …
-
- 0 replies
- 361 views
-
-
Apparently, the relationship between the two countries (cricket aside) genuinely could not be closer. Photograph: /Sri Lankan High Commission In Australia (http://www.theguardian.com/commentisfree/2014/may/08/australian-silence-on-human-rights-is-our-gift-to-sri-lanka) இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் புன்முறுவலுடன் அவுஸ்திரேலிய குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு அமைச்சருக்கு டில்மா தேயிலைப் பெட்டியை அன்பளிப்பாக வழங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதயசுத்தியுடனான நெருக்கத்தைக் கொண்டிருக்க முடியாதென (கிரிக்கெட்டுக்கு அப்பால் ) தென்படுகிறது. தமது பெற்றோரின் கலாசாரத்திற்குப் புறம்பான கலாசாரத்தில் வளரும் குழந்தைகள், தாங்கள் எந்த நாட்டைச் சா…
-
- 0 replies
- 500 views
-
-
அடுத்த முதல்வரும் விக்னேஸ்வரன்தானா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனின் பிரியாவிடை விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. இதில் வழமைபோல் அரசியல் தலைவர்களும் ஏனைய பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர். இதன்போது நடராஜன் தெரிவித்திருந்த ஒரு அபிப்பிராயம் அங்கிருந்த கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட ஏனையவர்கள் மத்தியிலும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் அடுத்த ஆண்டு நிறைவடையும், அதன் திறப்பு விழாவின் போது பார்வையாளர் வரிசையில் நானும் இருப்பேன். அப்போதும் வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே அதனை திறந்து வைப்பார் என்று நடராஜன் கூறிய விடயம்தான் மேற்படி முணுமுணுப்ப…
-
- 0 replies
- 426 views
-
-
20 ஆவது திருத்த யோசனையும் அரசியல் எதிர்காலமும் இதில் உறுதியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தார்கள். இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க மக்களிடம் ஆணையைக்கேட்டு அதை சாதுரியமாக பெற்றும் கொண்டார்.அதை மாற்றியமைப்பதற்கான அரசியல் நிர்ணய சபையாக பாராளுமன்றை மாற்றியதுடன் உபகுழுக்கள் வழிப்படுத்தல் குழு என குழுக்களை அமைத்த விவகாரங்களும் நடந்தேறியுள்ளன.ஆனால் எல்லாமே குறைப்பிரசவம் கொண்டவையாகவே ஆகியிருக்கின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது இலங்கைத்தீவில் பல நெருக்கடி நிலைகளை உருவாக்கியதுடன் ஜனநாயக நிறுவனங்கள…
-
- 0 replies
- 322 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வரும்? ஆனால் வராது? நிலாந்தன். உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது ஏறக்குறைய வடிவேலுவின் ஜோக்கை போல் ஆகிவிட்டது. “வரும் ஆனா வராது”? இதில் பொதுவாக ஒரு அபிப்பிராயம் உண்டு.அரசாங்கம் தேர்தலை நடாத்த விரும்பவில்லை என்று. அது உண்மை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசாங்கம் ஒற்றை யானையால் தலைமை தாங்கப்படும் தாமரை மொட்டுக்கள் உடையது. ஒரு தேர்தல் நடந்து அதில் தாமரை மொட்டு மக்கள் ஆணையை இழந்து விட்டது என்று தெரிய வந்தால், அது அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது முன்னெடுத்துவரும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நகர்வுகளையும் பாதிக்கும். எனவே பொதுப்படையாக பார்த்தால், ஒரு தேர்தலை நடாத்த இந்த அரசாங்கம் விரும்பாது எ…
-
- 0 replies
- 789 views
-
-
விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் தருணத்துக்கேற்ற அரசியல் பூச்சாண்டியே வடபகுதி தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் விடுதலைப் புலிகளின் ஆதரவு மனநிலை குறித்து ஆய்ந்தறிந்து அதற்கான நடவடிக்கை தொடர்பாக தீர்மானிப்பதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அண்மையில் வடபகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மத்…
-
- 0 replies
- 277 views
-
-
சட்டப்படி… இக்கட்டுரை விக்னேஸ்வரன் எதிர் டெனீஸ்வரன் வழக்கைப் பற்றியது அல்ல. மணிவண்ணனுக்கு எதிரான வழக்கைப் பற்றியதும் அல்ல. அதே சமயம் இவ்விரு வழக்குகளின் பின்னணியில் இரு தரப்பு ஆதரவாளர்களும் முகநூலில் மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது தமிழ் அரசியலரங்கு ஒரு வழக்காடு மன்றமாக மாறி வருகிறதா? என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் உச்சக்கட்ட சுவாரசியம் எதுவெனில் சட்டத்தரணி சயந்தன் தனது முகநூல் பதிவொன்றில் டெனீஸ்வரனிடம் இலவச சட்டவகுப்பு எடுக்க விரும்பியவர்கள் வரலாம் என்ற தொனிப்பட எழுதியிருப்பதுதான். அதேசமயம் மணிவண்ணனுக்கு ஆதரவாக முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவரான குருபரன் எழுதியிருக்கிறார். அதில் அவர் அப்புக்…
-
- 0 replies
- 492 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 08:39 GMT ] [ நித்தியபாரதி ] வியட்நாம் மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய இரு நாடுகள் மீது யுத்தத்தை ஆரம்பிக்குமாறு கடந்த மாதம் சீன கம்யூனிசக் கட்சியால் வெளியிடப்படும் 'Global Times' ஊடகம் சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறு SiliconIndia என்னும் இணையத்தளம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட போட்டியானது தற்போது கடல் விவகாரத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அண்மைய சமீபத்திய குழப்பநிலையானது ஒரு எச்சரிக்கைக்கான சமிக்ஞையாக இர…
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது. இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். ப…
-
-
- 71 replies
- 4.5k views
-