Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமைகள் தயாரா.? ஒரு இனத்தின் மீது இன்னொரு ஆதிக்க இனம் ஒடுக்கு முறையை மேற்கொள்ளுகின்ற போது சட்டங்கள் மேலாதிக்கம் கொண்டவர்களின் அதிகாரமாகவே துலங்குகிறது. இது இலங்கையில் மாத்திரமல்ல, இலங்கை போன்ற இன மேலாதிக்க நாடுகள் பலவற்றிலும் இருக்கின்ற நடைமுறை. ஆனாலும் தேச விடுதலை, சமூக விடுதலை என சிந்திக்கும் மக்கள் தரப்பினரும் அவர்களின் ஆளுமை மிக்க தலைவர்களும் அதனைக் கடந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உண்மையிலே சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த எண்ணப்பாங்கில்தான் நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. மக்களிடம் அதிகாரம் இருக்கவும் அவர்கள் அதனை பாதுகாக்கும…

  2. அனைத்துத் தரப்­பி­ன­ரதும் கவ­னத்தை ஈர்த்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் முழு­நாட்­டி­னதும் தமிழ் பேசும் மக்­களின் கவ­னத்­தையும் அவ­தா­னத்­தையும் ஈர்த்த காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களின் உண்­ணா ­வி­ர­தப்­போ­ராட்டம் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்­த­னவின் எழுத்­து­மூல உத்­த­ர­வா­தத்தை அடுத்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த திங்­கட்­கி­ழமை முதல் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் மேற்­கொண்­டு­வந்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் நாட்டு மக்கள் மத்­தியில் பர­ப­ரப்­பான நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் என்ற அறி­விப்­பா­னது அனைவர் மத்­தி­யிலும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன் பாதிக்­கப்­பட்­டோரின் உ…

  3. நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில் May 8, 2021 139 Views வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம், நினைவுச் சின்னங்களைப் பற்றிச் சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத் தமிழ்த் தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின் வெறுமைத் தன்மை திட்டமிட்டு தக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதை யாரும் அறியாமல் இல்லை. முள்ளிவாய்க்காலில் உள்ள உருவச் சிலையும் ஒரு கூட்டு அழிவின் படிவமாக உள்வாங்கப்படவில்லை. இனப் படுகொலைச் சொல…

  4. அவசரகால நிலைமை பிரகடனத்தின் இலக்கு பொருளாதாரமா, வாழ்வாதாரமா? லக்ஸ்மன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில் பிரகடனப்படுத்து வதற்கானதாகவே அவசரகால நிலைமைப்பிரகடனத்தைக் கொள்ளலாம். ஆனால், நமது நாட்டில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை , கடந்த சில மாதங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சீனி, பால்மா, அரிசி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு…

  5. தமிழர்களின் பொருளாதார மீட்சி என்.கே. அஷோக்பரன் twitter:@nkashokbharan தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை வலுப்படுத்தக்கூடிய எந்தத் திட்டங்களோ தூரநோக்கோ கூட, தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது என்ற குற்றச்சாட்டை, என்னுடைய பத்தியிலும் மற்றைய தளங்களிலும் முன்வைத்திருக்கிறேன். அண்மையில், இதைப் பற்றிய கேள்வியொன்றை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனிடம் முன்வைத்த போது, “இந்தக் குறையொன்று, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளது” என்ப…

    • 11 replies
    • 1k views
  6. வடக்கு - கிழக்கு துண்டாடப்பட்ட துயரம்: - மு.திருநாவுக்கரசு [Sunday 2017-07-09 18:00] தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து எதனையும் பெறவில்லை மாறாக சேர்ந்து அனைத்தையும் கொடுக்கின்றனர். மு. திருநாவுக்கரசு ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு அடையாளங்களுள் முதலாவது அதற்குரிய பொதுவான நிலப்பரப்பாகும். ஆங்கில மொழி பேசும் பிரித்தானியர், அமெரிக்கர், கனேடியர், அவுஸ்திரேலியர் என பலர் ஒரு மொழியைப் பேசினாலும் அவை வொவ்வொன்றும் தனித் தனித் தேசங்களாகவும், வேறு வேறு அரசுகளாகவும் அடையாளம் காணப்படுகின்றன. எனவே மொழியின் அடிப்படையில் ஒரு தே…

    • 0 replies
    • 676 views
  7. வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..? இந்த ஆண்டு கொமன் வெல்த்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் அது சனல் 4 நிருபர் கெலும் மக்ரேதான் என்று துணிந்து கூறலாம். அப்படிக் கூறுவதற்கான அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன, 2009 வன்னிப்போரில் சிறீலங்கா எவ்வளவு மடைத்தனமான தவறுகளைப் புரிந்து இப்போது கையறு நிலையில் நிற்கிறதோ.. அதைவிட பெரிய தவறை கெலும் மக்ரே விடயத்தில் இழைத்திருக்கிறது. சரியாக நடந்திருந்தால்.. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன் வெல்த் கதாநாயகனாகியிருப்பார்… பாவம் தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சிறீலங்கா அனுப்பி அந்த வாய்ப்பை பறிகொடுத்தார். கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கும்வரை கதாநாகனாக இருந்தவர் கனேடிய பிர…

    • 18 replies
    • 2.6k views
  8. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்.கே. அஷோக்பரன் twitter: @nkashokbharan ‘மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ என்ற சொல்லை, ஓட்டோவில் பதிந்திருந்தமை தொடர்பில், வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ஓட்டோவுடன் வருகைதருமாறு சகோதரர்களான 21, 19 வயதுடைய இளைஞர்களை, முல்லைத்தீவு பொலிஸார் அறிவுறுத்தி இருந்தனர். அவர்களை அழைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தவேளை, ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள்…

    • 0 replies
    • 2.4k views
  9. 'சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடர்பறாமல் முன்னெடுக்கப்படுகின்றது' - ஊடக ஆய்வு [ ஞாயிற்றுக்கிழமை, 08 டிசெம்பர் 2013, 10:55 GMT ] [ நித்தியபாரதி ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமவலுவில் செயற்பட வேண்டும். அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கம் மீது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவது மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் அழுத்தங் கொடுப்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது தங்கியுள்ளது. இதில் புலம்பெயர் சமூகம் பெரும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு The Diplomat ஊடகத்தில் ஊடகவியலாளர் Kim Wall* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங…

  10. இந்திய பிரதமருக்கான தமிழக கட்சிகளின் கடித விவகாரம் திசை திருப்பப்படுமா?

    • 0 replies
    • 275 views
  11. தரப்படுத்தலும் தரந்தாழ்ந்த அரசியலும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 12 1970ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள், தமிழ்த் தேசியவாத அரசியலில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. அந்தப் பின்னடைவைச் சரிக்கட்டும் முகமாக, அப்போதிருந்த ஆட்சியாளரின் நடவடிக்கைகள் இருந்தன. இலங்கையின் இனமுரண்பாட்டின் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது, 1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத் தரப்படுத்தல்; இதைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள், தரம் தாழ்ந்த அரசியலின் பக்கங்களை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தரப்படுத்தலை நியாயப்படுத்தி, சிங்கள சமூகத்தினர் முன்வைக்க…

    • 0 replies
    • 1.1k views
  12. அரசியலாகிப்போன மே தினம் லக்ஸ்மன் புதிய பிரதமருடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். இதுவும் ஒருவகையில் மேதினத்துக்கான செய்திதான். இது மகிழ்ச்சியான செய்தியும்கூட! தொழிலாளர் தினத்துக்கிடையில் இது நடைபெறுமானால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மே தினத்தைக் கொண்டாடுவார்கள். இல்லையானால் ஏக்கத்துடன் எதிர் கொள்வார்கள். அரசியல் ஆதாயத்துக்காகவே மே தினம் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை இப்போது காண்கிறோம். அத்தோடு இன, மத, மொழி என இன்னோரன்ன வேறுபாடுகளுடனும் தொழிலாளர் தினம் தற்போது நடைபெறுகின்றமையையும் காணலாம். அதனாலேயே…

  13. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் இது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டக் குழுவொன்று யப்பானின் சிறப்புத்தூதுவர் யசூசி அகாஷியைச் சந்தித்தது. இதன்போது அந்த இயக்கத்தின் தலைமையால் எழுதப்பட்ட ஒரு கடிதம் யசூசி அகாஷியிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை யப்பான் அங்கீகரிக்க வேண்டும் என்ற தொனிப்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தாக அப்பொழுது தகவல்கள் வெளிவந்தன. அகாஷி அதை வாசித்துவிட்டு பின்வரும் தொனிப்படப் பதில் சொன்னாராம்... ''யப்பான் ஒரு பெரிய கப்பலைப் போன்றது. அதை திடீரென்று திருப்புவது கடினமானது' என்று. யப்பான் மட்டுமல்ல, அதைப் போன்ற பெரிய கேந்திர முக்கியத்துவம் மிக்க எந்தவொரு நாடும் அதன் வெளி…

  14. வடக்கு கிழக்கு இணைப்பின் அவசியம் பெப்­ர­வரி 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லா­னது ஆளும் அரா­சாங்­கத்­துக்கு மக்கள் ஆத­ரவு உள்­ளதா அல்­லது குறைந்து விட்­டதா என்­பதை மதிப்­பீடு செய்யும் தேர்­த­லாக இருக்­கப்­போ­கி­றது. அதே­வேளை எதிர்க்கட்­சி­க­ளுக்கு குறிப்­பாக மஹிந்த ராஜபக் ஷ அணிக்கு பரீட்சைப் போராக இருக்­கப் ­போ­கி­றது என்­பது ஏதோவொரு வகை­யி­லுண்மை. வட – கிழக்கைப் பொறுத்­த­வரை மேற்­கு­றிப்­பிட்ட வாய்ப்­பாட்டை பிர­யோ­கிக்க முடி­யா­விட்­டாலும் இந்த தேர்­த­லா­னது கூட்­ட­மைப்­புக்கும் அதற்கு எதிரே அணி­கட்டி நிற்கும் மாற்றுக் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான பலப்­ப­ரீட்­சையை பரி­…

  15. தேர்தலில் யார் தோற்றார்கள்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் வந்திருக்கின்றன. கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை, பத்திரிகைகளை வாசிப்போர்,…

  16. மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? எம். எஸ். எம் ஐயூப் நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை விடயத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன. தற்போது சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக கடுமையான பிரேரனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே, அவ்வமைப்புகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் நம்பகமான முறையில் நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே, …

  17. கூட்டமைப்பின் முடிவில் தங்கியுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தேசிய அர­சாங்கம் என்ற மகு­டத்­தின்கீழ் அல்­லது கூட்டு அர­சாங்­க­மென்ற இணைப்­புடன் இதற்கு முதல் இலங்­கையில் பல கட்­சி­களின் கூட்­டுடன் அல்­லது ஆத­ர­வுடன் அர­சாங்­கங்கள் அமைக்­கப்­பட்டு ஆட்சி நடத்­தப்­பட்­டாலும் அவை தமது முழு­மை­யான காலப்­ப­கு­தியை முடிக்க முடி­யாமல் குலைந்­து­போன, கலைந்து போன சந்­தர்ப்­பங்­கள்தான் இலங்­கை அர­சியல் வர­லா­றாக இருந்­துள்­ளது. அதே­போன்­ற­தொரு நிலைதான் இன்­றைய தேசிய அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருப்­ப­துடன் பிர­தமரின் நாற்காலியும் ஆட்­ட­நிலை கண்­டுள்­ளது. என்­னதான் தேசிய அர­சாங்கம் என்று சிலர் பெரு­மைப்­பட்­டாலும் எதிரும் புதி­ரு­மாக பல பாராளுமன்­றங்­களில் இர…

  18. மாற்றுப் பாதை- சாத்தியமாகுமா? தமிழ் மக்­கள் ஒரு­போ­துமே இரண்­டாம்­த­ரக் குடி­மக்­க­ளாக இருக்க மாட்­டார்­கள். அவர்­களை அரசு தொடர்ந்து ஏமாற்­றி­னால் அவர்­கள் மாற்­றுப் பாதை­யொன்றை நாட­வேண்­டிய கட்­டா­யத்­துக்­குத் தள்­ளப்­ப­டு­வார்­கள். இவ்­வாறு எதிர்க் கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­தன் இலங்­கை­யி­லி­ருந்து விடை­பெற்­றுச் செல்­லும் இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வ­ரி­டம் கூறி­யமை இன்­றைய சூழ்­நி­லை­யில் கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. எதிர்க்கட்­சித் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­த­னின் கருத்­துக்­க­ளுக்கு பன்­னாட்­டுச் ச…

  19. மூன்றாவது தடவையாக அரச தலைவர் பதவி மகிந்­த­வுக்­குக் கிட்­டுமா? அடுத்த அர­ச­த­லை­வர் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச போட்­டி­யிட முடி­யா­தென அர­சின் சார்­பில் தெரிவிக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, அவ­ரது வெற்­றி­யைத் தடுக்­கவே அரசு, அவ­ருக்கு எதி­ரான புலன்­வி­சா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக கூட்டு எதி­ரணி விமர்­சித்து வரு­கி­றது. தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்­பின் பிர­கா­ரம், மகிந்த அர­ச­த­லை­வர் தேர்­த­லில் மீண்­டும் போட்­டி­யிட முடி­யா­தென வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் இதை உறுதி செய்­கின்­றது. ஆனால் இந்த விடயத்தில் சமீப நாள்க…

  20. சீனாவின் இராணுவ நோக்கத்துக்கு துணை போகின்றது இலங்கை முன்னைய மகிந்த அர­சின் தூர­நோக்­கற்ற செயற்­பா­டு­கள் நாட்டை அந்­நி­ய­ருக்­குத் தாரை வார்த்­துக் கொடுக்­கின்ற நிலையை உரு­வாக்­கி­விட்­டது. இதன் கார­ண­மா­கவே, சீனா இரா­ணுவ நோக்­கங்­க­ளுக்­கா­கவே இலங்­கை­யில் முத­லீ­டு­களை மேற்­கொள்­கி­றது என்று அமெ­ரிக்­கா­வின் இரா­ணு­வத் தலை­மை­ய­க­மான பென்­ட­கன் கூறு­கின்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. சிறிய நாடு­க­ளுக்கு உத­வி­களை வழங்கி அவற்றை வளைத்­துப் போடு­கின்ற செயற்­பா­டு­க­ளைச் சீனா முன்­னெ­டுத்து வரு­கின்­றது. பெரும்­பா­லான ஆசிய நாடு­க­ளில் சீனா இதைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கின்­றது. படை பல­மும், பொரு­ளா­தா…

  21. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் அதன் வல்லரசுக் கனவு பெரும் பங்கு வகிக் கின்றது. இந்த வல்லரசுக் கனவிற்கு சீனா தடையாக இருப்பதை மாற்றி அமைக்க இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையிலும் அதன் வர்த்தகத்திலும் பெரும் விட்டுக் கொடுப்புக் களைச் செய்து கொண்டிருக்கின்றது. இதனால் தான் இந்தியா ஜப்பானிய, சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவிற்கு வரவேற்று உபசரித்தது. கவர்ச்சிகரமான இந்தியா கவர்ச்சிகரமான இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை, மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொரு ளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக் கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு உலகி லேயே மிக இளமையான சராசரி மக்கள் தொகைக்கட்டமைப்…

  22. இலங்கையின் றொக்கற் மனிதனாக ராஜபக்ச பேரம் பேசுகிறார் ஈழத்தமிழர்களுக்கு மண்குதிரையாகியிருக்கிறது ஜெனீவா நாடகம் இலங்கைத் தீவின் பலமான மனிதன் (ஸ்ரோங் மான்) என்று வெளியுலக ஆங்கில ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டுவரும் மகிந்த ராஜபக்ஷ, வட கொரியாவின் விண்கலம் ஏவும் மனிதன் (றொக்கற் மான்) கிம் ஜொங்-உன் போல அமெரிக்காவுடன் இயைந்து போகும் மனப்பாங்குள்ளவன் என்ற அடிப்படையிலேயே வெள்ளிக்கிழமை மாலை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டிருக்கும் தென்னிலங்கை அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகள் அமைந்திருக்கின்றன. ராஜபக்ஷ சீனாவுடன் அல்ல அமெரிக்காவுடனே தனது ஆழமான அரசியலை மேற்கொண்டுள்ளார். இதையே அமெரிக்காவும் உசிதமாக…

    • 0 replies
    • 659 views
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல் அவிவ் நகரை அடைந்து இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினார். ஹமாஸை 'பிசாசு' என்று கூறிய அவர், எந்த சூழ்நிலையிலும் அமெரிக்கா இஸ்ரேலுடன் இருப்பதாகவும் கூறினார். இஸ்ரலுக்கு எல்லா உதவியும் கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார். இதற்குப் பிறகு, நவம்பர் மாதத் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இஸ்ரேலுக்கு 14.5 பில்லியன் டாலர் இராணுவ உதவிக்கான முன…

  24. மே 18: ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்.. யதீந்திரா ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், இதுபோன்றதொரு மே மாதத்தில், தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆத்மா, தலைவர், முதன்மைத் தளபதி என்று, அனைத்து நிலைகளிலும் அந்த இயக்கத்தை தாங்கிநின்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்த உடல் காண்பிக்கப்பட்டபோது, அதனை நம்புவதற்கு மிகவும் சொற்பமான தமிழர்களே இருந்தனர். அவர் இருக்கிறார், வருவார் என்று சொல்பவர்களின் கைகளே சொற்ப காலம் ஓங்கியிருந்தது. ஆனாலும் காலம் என்னும் ஆசானுக்கு முன்னால் அதிக காலம் பொய்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்று பிரபாகரனும், அவரது கட்டள…

  25. கிழக்கில் அரசியல் காத்திருப்புக்கு யார் கைகொடுப்பது? Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:29 Comments - 0 -இலட்சுமணன் வடக்கு, கிழக்கு இணைந்த மொழிவாரி மாநில சுயாட்சி இல்லாமல், புதிய அரசமைப்பொன்று வருவது, தமிழர்களைப் பொறுத்தவரை தேவையற்றது என்ற கருத்துகள் நிலவுகின்ற போதும், அதற்கான வேலைகள் நடைபெறுவதாகத் தான் காண்பிக்கப்படுகிறது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பெற்ற பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் வாயிலாக, ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் சரத்துகள், அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 1987இலிருந்து இன்றுவரை, அதன் நோக்கம் அர்த்தமுள்ள வகையில், அரசியல் விருப்பத்துடன் முழுமையாக அமுல் செய்யப்பட்டு, இன்னும் நிறைவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.