அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
தமிழ் பகுதிகளில் சீனாவின் ஆர்வம்? - யதீந்திரா இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே நோக்கப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க வெளியக உளவுத் துறையான சி.ஜ.ஏயின் தலைவர் கூட, ஒரு கலந்துரையாடலின் போது, சீனாவுடன் தூரநோக்கின்றி பொருளாதார தொடர்புகளை பேணிக் கொள்ளும் நாடுகள் இலங்கையிலிருந்து கற்றுகொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். இலங்கை தூரநோக்கின்றி சீனாவின் திட்டங்களை அனுமதித்ததன் விளைவாகவே, இன்று பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். …
-
- 7 replies
- 589 views
-
-
மக்கள் ஆணையைக்கொண்ட அரசின் தேவை குறித்து வலியுறுத்தும் நாணய நிதியம் 07 SEP, 2022 | 01:21 PM இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருட காலத்துக்கு 290 கோடி அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெறுவதற்கு கடந்தவாரம் கொழும்பில் காணப்பட்ட அலுவலர்கள் மட்ட பூர்வாங்க உடன்பாடு குறித்து அரசாங்கம் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு சிறப்பான வாழ்வைக் கொடுப்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு இருக்கும் பற்றுறுதிக்கு இந்த உடன்பாடு ஒரு அத்தாட்சி என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த அதேவேளை படுமோசமான வீழ்ச்சியைக் கண்டிருக்கும் பொருளாதாரத்த…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 563 views
-
-
ஐ.எம்.எப் கடன்கள் கசப்பான மருந்து! -நஜீப் பின் கபூர்- இன்று நமது நாட்டில் பிரச்சினைகள் சங்கிலித் தொடர் போல வந்து கொண்டிருக்கின்றன.பொருட்களின் விலைகளில் மிகச் சிறியதோர் சலுகையை மக்களுக்கு கொடுத்து அதனைவிட பல மடங்கு பணத்தை மக்களிடம் பறிக்கின்ற ஒரு வேலைத் திட்டத்தைத்தான் அரசு இன்று முன்னெடுத்து வருகின்றது.இதனை மின் கட்டணங்கள் உயர்வில் நாம் பார்த்தோம்.மக்களுக்கு நெருக்கடியில் எந்த விமோசனங்களும் கிடையாது.பொருளாதாரத் துன்பங்கள் அப்படியே தொடர, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் கடந்த 30ம் திகதி சமர்ப்பித்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் அரசு எந்தச் சலுகைகளையும் குடிகளுக்கு வழங்கவில்லை. இந்த வரவு-செலவுத்திட்டங்கள் ப…
-
- 0 replies
- 345 views
-
-
கோட்டாவின் மீள்வருகையும் குழம்பிய குட்டையும் மொஹமட் பாதுஷா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளமை, இலங்கை அரசியலில் இன்னுமொரு திருப்பத்தை ஏற்படுத்த வழிகோலுமா என்ற கேள்வி, எழுந்துள்ளது. இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்கள் கிளர்ச்சி வெடித்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்துக்கும் ஓடித் தப்பியிருந்தார். இப்போது 50 நாள்களின் பின்னர், நாடு திரும்பிய அவர் வரவேற்கப்பட்டு, வாகனத் தொடரணியாக அழைத்து வரப்பட்டிருக்கின்றார். இது ராஜபக்ஷர்களும் மொட்டு அணியும் மீள்எழுச்சி பெறுவதான தோற்றப்பாட்டையும், குழம்பிய அரசியல் குட்டைக்குள் என்ன நடக்குமோ …
-
- 1 reply
- 430 views
-
-
இடைக்கால வரவு செலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியமே வருக! தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டமானது, இந்த அரசாங்கம் நாட்டை எத்திசையில் நகர்த்த முனைகிறது, யாருக்கானதாக அரசாங்கம் இருக்கிறது போன்ற வினாக்களுக்கான பதில்களைத் தந்துள்ளது. அந்தவகையில், இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியமானது. தனது உரையின் தொடக்கத்தில், நான்கு விடயங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இவை நான்கும் மிகத் தெளிவாக, இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயன்முறையாகவே, இந்த வரவு செலவுத் திட்டம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தின. ஒருபுறம், வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் …
-
- 0 replies
- 342 views
-
-
ரணில் வீசிய கொழுக்கி ? - நிலாந்தன் கனடாவில் உள்ள நண்பர் ஒருவர் கேட்டார்….”தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளையே எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை. இந்நிலையில்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து தாயகத்தில் முதலீடு செய்வது நடக்கக்கூடிய காரியமா ? “என்று. ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் மீது தடையை நீக்கியது தொடர்பில் நான் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவே அவர் அவ்வாறு கேட்டிருந்தார். நியாமான கேள்வி. தாயகத்தில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள்,மிகச்சிறிய சனத்தொகையின் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்று கட்சிகளை ஒன்றாக்க முடியவில்லை. ஆனால் புலம்பெய…
-
- 0 replies
- 636 views
-
-
மன்னார் மாவட்ட காற்றாலைகளும் கரிசனைகளும் By DIGITAL DESK 5 03 SEP, 2022 | 08:30 PM -ஆர்.ராம்- மன்னார் மாவட்டத்தில் மன்னார்த்தீவு, மன்னார் பெருநிலப்பரப்பு ஆகிய இரு பகுதிகளில் மூன்று கட்டங்களாக காற்றாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாம் கட்டத்தில், மன்னார்த் தீவின் தென்பகுதியான தாழ்வுப்பாடிலிருந்து துள்ளுகுடியிருப்பு வரையில் இலங்கை மின்சார சபையினால் 30காற்றாலைகள் ஏலவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்ட முதலாம் கட்டத்தில் 50மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு 21காற்றாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன. அதில், 7காற்றாலைகள் தாழ்வுப்பா…
-
- 3 replies
- 719 views
- 1 follower
-
-
ஜெனிவா... யதார்த்தம் ? நிலாந்தன். இம்மாதம் பன்னிரண்டாம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்றது.இக்கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு எதிரான போக்கு அதிகமாகக் காணப்படலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் கடந்த 13 ஆண்டு கால அனுபவத்தின்படி, அதிலும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களை தொகுத்துப்பார்த்தால் ஒரு முடிவுக்கு வரலாம்.அதாவது,இம்முறை ஜெனிவாவில் ரணில் விக்கிரமசிங்கவை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் பெரியளவுக்கு இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தொகை குறைந்து வருவதைக் காணலாம்.பெருந்தொற்று நோய் ஒரு காரணம். எனினும்,த…
-
- 1 reply
- 606 views
-
-
-
- 0 replies
- 346 views
-
-
Factum சிறப்பு கண்ணோட்டம் : தாய்வான் – மேற்கு பசுபிக்கின் ஆபரணம் By Digital Desk 5 03 Sep, 2022 | 01:57 PM குசும் விஜேதிலக 1895ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது சீன-ஜப்பானிய யுத்தத்தைத் தொடர்ந்து தாய்வான் தீவினை கைவிட்ட குயிங் வம்சம், ஜப்பான் ஏகாதிபத்தியத்தின் முதலாவது குடியேற்றத்தை உருவாக்கியது. "ஜப்பானியமயமாக்கலின்" அனுகூலங்களை வெளிப்படுத்த, "மாதிரி" குடியேற்றத்தை உருவாக்க ஜப்பானியர்கள் திட்டமிட்டனர். வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார கட்டமைப்புகள் மற்றும் பொதுச் சுகாதார சிகிச்சை நிலையங்களின் வலையமைப்புகள் ஆகியன உருவாக்கப்பட்டன. கட்டாய ஆரம்பக் க…
-
- 0 replies
- 287 views
-
-
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை? புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவ…
-
- 0 replies
- 329 views
-
-
பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஏன் மீண்டும் இலங்கை வந்துள்ளார்? By RAJEEBAN 03 SEP, 2022 | 12:57 PM சிஎன்என் ஐம்பதுக்கும் அதிகமான நாட்களின் பின்னர் அவர் மீண்டும் வந்துள்ளார். இலங்கையிலிருந்ததப்பியோடி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை காலை இலங்கை திரும்பினார் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டில் மீண்டும் பதற்றங்களை உருவாக்ககூடிய நடவடிக்கையாக இது காணப்படுகின்றது. இலங்கையை ஒரு காலத்தில் இரும்புபிடியுடன் ஆட்சி செய்த ராஜபக்ச – தசாப்த காலத்தில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை அவர் கையாண…
-
- 0 replies
- 487 views
- 1 follower
-
-
மஹிந்தவின் கட்சியில் தனித்து இயங்கும் எம்பிக்கள் - உடைகிறதா ராஜபக்ஷ கோட்டை? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயல்பட தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றிய, நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ், இந்த தீர்மானத்தை அறிவித்தார். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, டிலான் பெ…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழர்களும் இலங்கை அரசின் தந்திரம்-பா .உதயன் பல ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடாமல் தொலைந்து போன தமிழ் மக்களுக்காய் இன்று வரை ஒரு நீதியை வழங்காமல் வட கிழக்கில் ஆக்கிரமித்து இருக்கும் இராணுவ முகாம்களை அகற்றாமல் தமிழர் அரசியல் தீர்வுக்கான எந்த வித கரிசனையும் இல்லாமல் புலம் பெயர் சில அமைப்புகளையும் சில தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறதாம் இலங்கை அரசு. தடையை நீக்குவதும் பின் தடையை போடுவதுமாக தங்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்துவதுமாக ஓர் இனவாத போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இந்த இனவாத சிந்தனைப் போக்கினால் தான் இலங்கை இன்று இவ்வளவு…
-
- 0 replies
- 286 views
-
-
கட்சியரசியலுக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்த் தேசியம் By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 03:34 PM சி.அ.யோதிலிங்கம் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லாத நிலையில், இந்த வாரம் தேர்தல் மையகட்சி அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் சிக்குண்டிருக்கும் காரணியைப் பார்க்கலாம். தேச விடுதலை அரசியலும், தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலும் ஒரேநேர்கோட்டில் செல்வது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். உலகின் பல விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்கு முறைக்கான போராட்டங்கள் இந்த அனுபவங்களைக் கொண்டுள்ளன. தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகம் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள் புகுந்ததும் தே…
-
- 0 replies
- 250 views
-
-
-
நலத்திட்டம் இலவசமா ? - சுப. சோமசுந்தரம் 'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ : வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பார…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் ரணிலும் 01 SEP, 2022 | 03:59 PM 'அறகலய' மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த நாட்களில் 'கோட்டா வீட்டுக்கு போ ' என்ற சுலோகத்துக்கு நிகராக ' நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் ' என்ற கோரிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.பெரும்பாலும் சகல அரசியல் கட்சிகளுமே அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன.மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்குதல்களுக்கு ஆளான நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளை ஆதரிக்கத்தயாராயிருப்பதாக கூறவேண்டியேற்பட்டது. மக்கள் கிளர்ச்சி தணிந்துபோயிருக்கும் நிலையில…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
நாடு திரும்பும் கோட்டாவின் அடுத்த நிகழ்ச்சி நிரல்கள் என்ன – உபுல் ஜோசப் பெர்னாண்டோவின் அரசியல் அலசல் கோட்டா மீண்டும் இலங்கைக்கு வருவார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், மூத்த அரசியல் ஆய்வாளர் உபுல் ஜோசப் பெர்னாண்டோ சிங்கள இதழுக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழாக்கம் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக பதவி நீக்கப் பிரேரணை முன்மொழியப்பட்டபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய பிக்கு ஒருவர் ஆலோசனை வழங்கினார். பிரேமதாசவின் ஜாதகத்தை கவனமாகப் படித்த பிறகு, பிக்கு அவருக்கு ஆலோசனை வழங்கினார். நீங்கள் இப்போது ஒரு பயங்கரமான சாபத்தை அனுபவித்து வருகிறீர்கள். அரசனின் தீய காலம் வந்தபோது, அவன் தீமையிலிருந்து தப்பிக்க …
-
- 0 replies
- 238 views
-
-
கல்முனை தமிழ்ப் பிரிவின் தரமுயர்வு? லக்ஸ்மன் கிழக்கின் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று கல்முனை (வடக்கு) தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமாகும். அப்பிரதேச செயலகம் இன்னமும் தரமுயர்த்தப்படவில்லை. உண்ணாவிரதங்களையும் போராட்டங்களையும் நடத்தியதுடன் பல்வேறு நிர்வாக ரீதியான முயற்சிகளையும் அரசியல்வாதிகள், கல்முனை சிவில் சமூகத்தினர் மேற்கொண்டிருந்தபோதும் இதுவரையில் எதுவுமே நடைபெறவில்லை. போராட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் முடிவு கிடைக்காத நிலையில், தற்போது, இதுவரையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் ஒன்றாகக் காட்டப்பட்ட கல்முனை வடக்கு (கல்முனை தமிழ் பிரிவு) பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக சில தி…
-
- 3 replies
- 892 views
-
-
அவர்கள் என்னைத் தேடி வந்தபோது... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடு வழமைக்குத் திரும்பிவிட்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களை வரிசையில் நிற்காமல் பெறமுடிகின்றமை, உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளமை, போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து அகன்றுள்ளமை போன்றன நிலைமை, சீராகியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இங்கு நாம் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி இன்னமும் கேட்கப்படாமலேயே இருக்கிறது. நாட்டை இந்த நெருக்கடிக்குத் தள்ளிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா? இல்லையெனில், எதன் அடிப்படையில் நாடு வழமைக்குத் திரும்பி விட்டது என்று நாம் நம்புகிறோம்? இப்போது நாட்டில் நடைபெறுகின்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளோமா? இ…
-
- 0 replies
- 400 views
-
-
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென் இலங்கையின் விழிப்பு என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, தென்இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான பிரக்ஞை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 44 வருடங்கள் அமலில் இருக்கும் ஒரு தற்காலிக சட்டம், இந்நாட்டின் நிறைவேற்றுத்துறையிடம், தான் நினைக்கும் எவரையும், பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில், நீதித்துறையின் தலையீடின்றித் தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, ஒப்புக்கொடுத்திருந்தது. இதுகுறித்து, தென்இலங்கை 44 ஆண்டுகள் கழித்தாவது, ஓரளவு விழித்துக்கொள்ள முனைவது ந…
-
- 1 reply
- 442 views
-
-
சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியுள்ளது - இந்திய அதிகாரி கடும் சாடல் By T YUWARAJ 30 AUG, 2022 | 06:20 AM (நா.தனுஜா) சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக சீனாவினால் பின்பற்றப்பட்டுவந்த கொள்கையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்புப் பிரதி ஆலோசகர் பங்கச் ஷரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மைக்கால இராஜதந்திர விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த வார இறுதியில் மிகவும் காட்டமான கட்டுரையொன்றை வெளியிட்டிருந்த இலங்கை…
-
- 3 replies
- 416 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய அரசியல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரதிபலிக்கும் கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. அரசியல் உரிமையையும் விடுதலையையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தரப்பாக, தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் அதுசார் ஓர்மத்தோடும் இராஜதந்திர அணுகுமுறையோடும் நகர வேண்டும். ஆனால், அவ்வாறான கட்டத்தை எந்தவொரு தமிழ்த் தரப்பும் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவு செய்யவில்லை. இலங்கை, அதன் அமைவிடம் சார்ந்து, எப்போதுமே சர்வதேச ரீதியில் கவனம் பெறும் நாடாக இருந்து வந்திருக்கின்றது. சீனா, தன்னுடைய தொழில், இராணுவ கட்டமைப்பு ரீதியான முன்னேற்றத்தை அடைந்த போது, சர்வதேச ரீதியில் தன்னுடை…
-
- 0 replies
- 398 views
-