அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும். மக்கள் உணவுக்கும் எரிபொருளுக்கும் அல்லாடுகையில், முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்படைத் தளத்துக்காக மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது, மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்ற பின்னர், இடம்பெறும் முதலாவது நிகழ்வு இதுவல்ல. இது, இறுதி நிகழ்வும் அல்ல! இலங்கை அரசாங்கம் எதிர்கொ…
-
- 0 replies
- 285 views
-
-
காலி முகத்திடல் போராட்டத்தின் காலாவதி புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் எழுச்சி மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. காலி முகத்திடல் போராட்டக்களமும் சோபையிழந்துவிட்டது. ராஜபக்ஷர்களை முழுமையாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலக வைக்கும் அளவுக்கான இலக்கை எட்டியது. ஆனால், முதன்மைக் கோரிக்கையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்கிற விடயம் இலக்கை அடைய முதலே போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கின்றது. ராஜபக்ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் எழுச்சி பொருளாதார நெருக்கடிகள், ஊழல் மோசடிகளுக்கு எதிராக நிகழ்ந்த ஒன்று. அங்கு ஆட்சி அதிகார மாற்றம் என…
-
- 0 replies
- 329 views
-
-
இந்து சமுத்திரத்தில் ஒரு கண்ணீர் துளி! ___________________ ஞானேஷ்வர் தயாள் ___________________ இலங்கை பல வருடங்களாக ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு பெருந்தோல்வி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளீர்த்துக்கொள்ளாத அதன் சித்தாந்தமே இதற்குக் காரணம் . சரியான நேரத்தில் இந்தியா பாடம் கற்பது நல்லது. இலங்கையின் துயரங்கள் தமிழர்களை அந்நியப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிங்கள அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. அப்பட்டமான போர்க்குற்றங்களால் தமிழ் மக்கள…
-
- 0 replies
- 260 views
-
-
தமிழர்கள் உள்வாங்கப்படாவிடில் , மாற்றத்திற்கான இலங்கையின் தேடல் தோல்வியடையும்! -ஜே.எஸ். திசைநாயகம் ”’சிங்களவர்கள்சிலர் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தாலும், நாட்டின் அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மாற்றவில்லை”. ‘ஒவ்வொரு முன்மொழிவும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தினாலும், இது அரசின் தன்மையை மாற்றாது .அரசு ஒற்றையாட்சியாகவே இருக்கும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பாராளுமன்றம் இன்னும் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் .நிலையில் தமிழர்களுக்கு அதி…
-
- 0 replies
- 451 views
-
-
அரசியலமைப்பு மாற்றங்களின் அரைவேக்காட்டு நிலைமை | பி.மாணிக்கவாசகம் June 14, 2022 அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை இலங்கையின் அரச கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் சிக்கல் மிகுந்த முக்கிய பேசு பொருளாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிலைமை உருவாகி இருக்கின்றது. இது அரசியலில் மாற்றத்தை நோக்கிய ஒரு நிலைமை. அரச கட்டமைப்பில் – நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது சாதாரண விடயமல்ல. கடந்த கால் நூற்றாண்டு காலமாக நிலவி வந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மக்கள் இப்போது வெறுப்படைந்திருக்கின்றனர். ஜனாதிபதி ஆட்சி முறையின் ஆரம்பகால நிலைமைகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதி என்ற தனி மன…
-
- 0 replies
- 209 views
-
-
இலங்கையில் அதானி மின் திட்டம்: மோதி பற்றிய சர்ச்சையை விளக்க வலுக்கும் கோரிக்கைகள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வட மாகாணத்திலுள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள நிலையில், அந்த திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க எட்டப்பட்ட தீர்மானம், இன்று இரு நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழுத்தங்களை கொடுத்ததாக, இலங்கை மின்சார சபையின் தலைவராக…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
30 வருட இன மோதல் தொடர்பாக எவரும் மன்னிப்புக் கேட்கவில்லை : கல்கண்டே தம்மானந்த தேரர் ”சிங்கள-பௌத்த கேடயத்தை அதன் அதிகபட்ச நன்மைக்காக அரசாங்கம் பயன்படுத்தியது” *இந்த அரசாங்கம் குண்டர் போன்ற பிக்குகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து பல்வேறு இடங்களில்அமர்த்தியிருந்தது. *சில பிக்குகள் உளவியல் ரீதியாக கடுமையான ரணங்களைக் கொண்டிருக்கின்றனர். *குடும்ப வன்முறை, துன்புறுத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றை சமூகம் குணப்படுத்தவில்லை என்றால், அது அதிகரிக்கும். *நல்லிணக்கம் என்பது கருத்தரங்குகளை நடத்துவது, அறிக்கையை வழங்குவது மற்றும் டொலர்களை சம்பாதிப்பதாகவிருந…
-
- 2 replies
- 469 views
-
-
வரும் ஆனால் வராது : இது ஒரு நவீன ஆக்கிரமிப்பு யுக்தி June 12, 2022 —கருணாகரன்— “வரும், ஆனா வராது” என்று நடிகர் வடிவேலுவின் மிகப்பிரபலமான பகடி ஒன்றுண்டு. அதை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் – இலங்கை அரசின் – இன்றைய துயர நிலவரம். கடைகளில் “சமையல் எரிவாயு இருக்கா?” என்று கேட்டால், தலையை உயர்த்திப் பார்க்காமலே “இல்லை” எனப் பதில் சொல்கிறார் கடைக்காரர். “எப்ப வரும்?” என்று கேட்டால், “வரும், ஆனால் வராது” என்கிறார். இதைக் கடந்து சிலவேளை “பின்னேரம் வந்து பாருங்கோ” அல்லது “நாளைக்கு வரும்” என்று அவர் சொன்னாலும் அந்தப் பொருள் அப்படி உரிய நேரத்தில் வருமென்றில்லை. அதற்கான உத்தரவாதமெல்லாம் முடிந்து விட்டது. அந்தக் காலமே மலையேறி எங…
-
- 0 replies
- 396 views
-
-
உணவு, நெருக்கடியை.. எதிர் கொள்வது! -நிலாந்தன்.- வரும் ஓகஸ்ட்,செப்டம்பர் மாதமளவில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு விகிதமளவுக்கு விழிப்பு ஏற்பட்டிருப்பது சந்தோஷமே.இந்த விடயத்தில் செயல்பூர்வமாக தற்காப்பு நடவடிக்கைகளை தொடக்கி வைத்த கட்சியாக ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தைக் குறிப்பிடலாம்.அக்கட்சியானது, சிறுதானியங்களுக்கு “ராசதானியம்” என்று பெயர் வைத்து, விதைத் தானியங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது.அதைத் தொடர்ந்து அரச நிர்வாக கட்டமைப்புக்கள் சிலவும், செயற்பாட்டு அமைப்புகளும் தனி நபர்களும் அதுபோன்ற செய்முறைகளை முன்னெடுக்கப்படுகின்றனர். தவிர சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் விவசாய செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் குறிப்ப…
-
- 0 replies
- 247 views
-
-
கோத்தா+ரணில் : அசுத்தக் கூட்டா ? நிலாந்தன்! June 12, 2022 தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கு நிரந்தர தொழில் இல்லை.வேறு வருமான வழிகளும் இல்லை.இதனால்,அக்குடும்பம் சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இது முதலாவது செய்தி. வெலிகேபொல, பிரதேசத்தில் கிராமத்தில் ஒரு வறிய பெண் நோயுற்ற தனது பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதால் அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.அப்பணத்தில் 500 கிராம் அரிசியை …
-
- 0 replies
- 382 views
-
-
21இன் மூலம் 19 ஐ உணர்வற்ற விதத்தில் கொல்லுதல் ! -ஒஸ்ரின் பெர்னாண்டோ- அரசியலமைப்புரீதியான பொருளாதார மறுசீரமைப்புகளை ஆதரிப்பவர்கள் தற்போதைய சமூக-பொருளாதார-அரசியல் குழப்பத்திற்கான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு போராடுகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு முதலில் தீர்வு காணப்பட்டு பின்னர் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும் என பூமொட்டு பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ரொமேஷ் டி சில்வா குழுவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனுகூலங்களைக் கொண்டுள்ளார். ஜனதா விமுக்தி பெரமுன , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்…
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கை: பசில் ராஜபக்ஷ எம்பி பதவியில் இருந்து விலகல் - அடுத்த திட்டம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் அவர் வழங்கினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தின் நிதி அமைச…
-
- 0 replies
- 543 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஆச்சரியம் தேடித்தரும் விடயங்களில் "ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு”. இலங்கையின் நீதித்துறையும், சட்டத்தரணிகளும் புரியப்பட்ட குற்றத்தை நிரூபிக்க வருடக்கணக்கில் உழைத்திருப்பர். தமது சட்ட அறிவைக் கொட்டித்தீர்த்திருப்பர். குறித்த குற்றத்தை நிரூபிப்பதற்காக பெரியதொரு அரச நிதி செலவழிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவாளியினால் பாதிக்கப்பட்ட – உறவுகளை இழந்த குடும்பத்தவர் கண்ணீரோடு நீதியை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு அலைந்திருப்பர். தம் உழைப்பை, பணத்தை செலவழித்திருப்பர். இவ்வாறானதொரு கூட்டுழைப்பின் பின்னர் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால் அவர் சிறைக்கு சென்று ஒரு வருடத்திலோ, அல்லது சில மாதங்களிலோ எல்லாவிதக் குற்றங்களிலிருந்தும் நீக்கம் செய…
-
- 0 replies
- 346 views
-
-
உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது, ‘உடனடியாக வெளிநாடுகள் கடன் கொடுக்கும்; பிரச்சினைகள் தீரும்’ என்று சொல்லப்பட்டது. “எல்லா இலங்கையர்களுக்கும், மூன்றுவேளை உணவை உத்தரவாதப்படுத்துவதே எனது பணி” என்று பதவியேற்றவுடன் ரணில் விக்கிரமசிங்க சொன்னார். நடந்தது யாதெனில், அவர் பதவியேற்ற போது மூன்று வேளை உண்டவர்கள், இப்போது இரண்டு வேளையும், இரண்டுவேளை உண்டவர்கள் ஒரு வேளையும் உண்கிறார்கள். புதிய பிரதமரின் சாதனையாக …
-
- 0 replies
- 401 views
-
-
ரணிலின் அரசியல் சதுரங்கம் ? - யதீந்திரா சில வாரங்கள் வரையில், ரணிலின் அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதான ஒரு அனுமானமே பரவலாக இருந்தது. ஆனால், ராஜபக்சக்களின் வீழ்ச்சி, ரணில் விக்கிரமசிங்கவை ஆறாவது பிரதமராக்கியிருக்கின்றது. இதன் மூலம், ரணில் – தனது அரசியல் எதிர்காலம் தொடர்பான அனைத்து ஆருடங்களையும் ஒரு ஆசனத்தின் மூலம் தோற்கடித்திருக்கின்றார். ரணிலின் பதவியேற்பு தொடர்பில், பலவாறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அவரது நியமனம் ஜனநாயகரீதியானதல்ல – அது முறையானதல்ல என்று கூறுவோர் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தை, ஜனநாயகரீதியில் பார்க்க முடியுமென்று நான் கருதவில்லை. இது அடிப்படையில் நெருக்கடி நிலையை கையாளுவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வு. தந…
-
- 1 reply
- 630 views
-
-
21ஆவது அரசியலமைப்பு திருத்தவரைவின் போதாமைகள் Veeragathy Thanabalasingham on June 6, 2022 Photo, Selvaraja Rajasegar அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கப்போகிறது என்பதை தற்போதைய அரசியல் நிகழ்வுப்போக்குகள் வெளிக்காட்டுகின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்தவரைவு இரண்டாவது தடவையாகவும் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் ஆராயப்படவிருந்தது. 21ஆவது திருத்தத்தின் வடிவில் 2015ஆம் ஆண்டின் 19ஆவது திருத்தமே மீண்டும…
-
- 0 replies
- 245 views
-
-
தமிழ் மக்கள்... 21ஆவது திருத்தத்தில், தொங்கிக் கொண்டிருக்கலாமா? -நிலாந்தன்!- மிருகக்காட்சி சாலைகளில் உள்ள மிருகங்களுக்கு உணவு கொடுக்க முடியாத அளவுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமாகி வருகிறது. மிருகங்களுக்கு உணவு வழங்க முடியாத ஓர் அரசாங்கம் மனிதர்களை எப்படி பாதுகாக்கப் போகின்றது ? தொடரும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.அண்மை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறி…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் வருவாய் வரும்? மக்களுக்கு என்ன ஆகும்? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் அலுவலகம், கொழும்பு இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதன்படி, பெறும…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
மேலோட்டமான அரசியல் சீர்திருத்தங்கள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை! Veeragathy Thanabalasingham on June 4, 2022 Photo, APnews இலங்கை அரசியலமைப்புக்கு இன்னொரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு கடந்த 44 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கு கொண்டுவரப்படுகின்ற 21ஆவது திருத்தம் இதுவாகும். அமெரிக்காவின் அரசியலமைப்பு 234 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரையில் அதற்கு 27 திருத்தங்களே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இரண்டேகால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக…
-
- 0 replies
- 291 views
-
-
ராஜபக்சர்கள் நடத்திய ஒப்பரேசன் PRIME MINISTER/ Kuna kaviyalahan/ Srilanka Government/01.06.22
-
- 0 replies
- 328 views
-
-
நாட்டின் பொருளாதார நெருக்கடி சமூக சீரழிவுக்கு வித்திடும் புருஜோத்தமன் தங்கமயில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட புதிய அமைச்சரவை, பகுதி பகுதியாக இன்னமும் பதவியேற்று வருகின்றது. புதிய அரசாங்கத்தை, ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்மொழிகிறார்கள். ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக, அக்கட்சிகளின் உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதன் மூலம், அது எப்படி சர்வகட்சி அரசாங்கம் ஆக இருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கேள்வி எழுப்புகின்றன. கோட்டா பதவி விலகினால் …
-
- 4 replies
- 375 views
-
-
-
இலங்கையின், பொருளாதாரத்தினைப் பிடித்துள்ள... சீனாவின் பொறி? தவறான பொருளாதார திட்டமிடல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தோல்வியடைந்துள்ளது. இதனால் சீனாவின் மூலோபாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கைத் தீவு நாடு கடன்களின் பொறியில் சிக்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரின் அதிர்ச்சிகளுக்குப் பிறகு, சீனாவின் கடன் இராஜதந்திரம் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்து நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஏற்கனவே, இலங்கை அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கிய நிலையில், தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க 10 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க சீனா முன்வந்தது. இத்தொகையுடன் சீனக் கடன்கள் 6.5 ப…
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ: ரணில் மாறுவாரா? March 28, 2022 Photo, Ishara S. Kodikara/ AFP – Getty Images, NBCNEWS ‘கோட்டப கோ கம’ என்பது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோசடிகள் அற்ற புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தியலில் கட்டிஎழுப்பப்பட்டதாகும். இது இலங்கைக்கான பொதுவான கருத்தியலாக பொதுவில் பேசப்பட்டபோதும் உண்மையில் ‘கோட்டா கோ கம’ வில் குடியேறி இருக்கின்ற இளைஞர் யுவதிகள் மற்றும் இவர்களைத் தத்தெடுத்துக் கொண்டுள்ள தென்னிலங்கை மக்களுமே இந்தக் கருத்தியலுக்கான சொந்தக்காரர்களாகும். ஏனெனில், வழமையாக தென்னிலங்கையில் முன்வைக்…
-
- 11 replies
- 855 views
-
-
எங்கு பார்த்தாலும் வரிசை, எப்பொருளை எடுத்தாலும் விலையேற்றம், எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என இலங்கை அதளபாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுக்குள்கொண்டுவருவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தேவை என்பதைத் தெற்கின் அரசியல்வாதிகள் பலரும் கூறிவருகின்றனர். இந்தக் கோரிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் சாதகமாக சிந்திக்க முடியுமா? நாட்டின் அவசரநிலை கருதி ஏதாவதொருவகையில் புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா என்பது குறித்த உரையாடல்கள் ஆங்காங்கே இடம்பெற்றும்வருகின்றன. இந்தப் பத்தியும் அதற்கான பதிலைத் தேட விளைகின்றது. புலம்பெயர்க்கும் பொறி இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்கள் இந்நாட்டை விட்டு வ…
-
- 1 reply
- 447 views
-