Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரசியல் செயற்பாட்டில், எவரையும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை.. June 20, 2019 அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:- அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார் ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல்,…

  2. எழுக தமிழை ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும் ஒரு மக்கள் இயக்கம் என்னும் வகையில், தமிழ் மக்கள் பேரவையானது, 2016இல் வடக்கிலும் கிழக்கிலும் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் எமது மக்களை, ஓர் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அணிதிரளச் செய்ததில் எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இறுதி யுத்தத்தின் விளைவுள் ஏற்படுத்திய அச்சம், பதட்டம் மற்றும் தாழ்வு மனப்பாண்மை என்பவற்றால் எமது மக்கள் வெறுமனே தேர்தல்கால வாக்குறுதிகளுடன் கட்டுண்டு கிடந்த ஒரு சூழலில்தான், ”எழுக தமிழ்’ இடம்பெற்றது. இந்த எழுச்சியானது, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்குள்ளும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த…

  3. அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்! தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி இருந்தார்கள். அதில் சிலர் கொலை வெறியோடும் பதில் எழுதியிருந்தார்கள். தமிழ்ச் சமூகவலைத்தளச் சூழல் என்பது தமிழ்ப் பண்பாட்டின் சீரழிவின் குறிகாட்டியாக மாறி வருகிறது. தனக்குப் பிடிக்காத ஒன்றை எதிர்க்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் தமிழ் முகநூல் வாசிகளின் பண்பாட்டுச் சீரழிவைக் காட்டுகின்றன. இவ்வாறு எழுதப்படும் கேவலமான, கீழ்த்தரமான, வன்மம் மிகுந்த, மற்றவர்களின் கவனத்தை வலிந்து ஈர்க்க முயற்சிக்கின்ற பதிவுகளைத் தொகுத்துப் பார்த்தல், அந்த ந…

  4. இலங்கையின் வெளியுறவு கொள்கை - ஒத்துழைப்புக்கும் முதலீட்டுக்கும் முதலிடம் வழங்குகிறதா.? இலங்கை -இந்தியப் பிரதமர்களுக்கிடையிலான உரையாடல் அதிக அரசியல் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது. இன்றைய புவிசார் அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கும் பூகோள அரசியலில் முதன்மை அடைந்துவரும் இரு துருவ அரசியல் போக்குக்கும் மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களது பேச்சுவார்த்தை அரசியல் ரீதியில் மட்டுமன்றி பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியில் அதீத முக்கிய விடயமாக தென்படுகிறது. இதில் அதிக கவனமும் கரிசனையும் கொள்ள வேண்டியவர்களாக தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் காணப்படுகின்றனர். இக்கட்டுரையும் இரு நாட்டுத் தலைவர்களது உரையாடல் ஏற்படத்தியுள்ள அரசியல் மற்றும் இராஜதந்திரீதியான முக்கியத்துவத்த…

  5. இலங்கையின் பொருளாதாரம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை ஆகும் - இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் ஏப்ரல் 19, 2022 Dr. P. Nandalal Weerasinghe ‘பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மீள்வது ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ செய்ய முடியாத ஆச்சரியமான விடயம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Dr. P. Nandalal Weerasinghe) தெரிவித்தார். மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை நிலைபெறச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்த கருத்துகள் பின்வரு…

  6. சிங்களவர் செய்தால் சதி- தமிழர்கள் செய்தால் பயங்கரவாதமா? அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச அகி­யோ­ரைக் கொலை செய்­ய­வ­தற்­கான முயற்சி ஒன்­றினை விசா­ரணை அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அதில் பொலிஸ் மா அதி­ப­ருக்­குத் தொடர்­பி­ருக்­கக்­கூ­டும் என்­கிற கோணத்­தி­லும் விசா­ர­ணை­கள் நடக்­கின்­றன. பொலிஸ் திணைக்­க­ளத்­திற்­குச் சொந்­த­மான துப்­பாக்­கி­கள் இரண்டு பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் அவை அர­சி­யல் தலை­வர்­க­ளின் கொலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட இருந்­த­னவா என்­கிற கோணத்­தி­லும் விசா­ரணை முன்­னெ­…

  7. பனங்காட்டான் பௌத்த சின்னமான அரசமர இலைகளையும், சிங்களச் சின்னமான வாளேந்தும் சிங்கத்தையும் கொண்ட சிறிலங்கா தேசியக்கொடியை தமிழரின் கலாசாரத் தலைநகரில் நின்று ஏந்துவதந்கு சம்பந்தருக்கு எவ்வாறுதான் மனம் இடமளித்ததோ தெரியாது. ஆண்டாண்டு வந்துபோகும் மே தினம், வழமைபோல இவ்வாண்டும் வந்துபோனது. மே தினம் என்பது, தொழிலாளர் தினம். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக, தங்கள் வேலைப் பாதுகாப்புக்காக, தங்கள் வேதன அதிகரிப்புக்காக ஒன்றுகூடிக் குரல்கொடுக்கும் நாள். அதற்காகவே அன்று விடுமுறை வழங்கப்படுகின்றது. ஆனால், இலங்கையைப் பொறுத்தளவில் மே தினம் அரசியலாளர்கள் நாளாகி, அவர்களின் கேளிக்கைகளுக்கான விடுமுறையாக மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதைய மே தினக் கூட்டங்களில் தொழிலாளர் பற்றி எத…

  8. புனிதம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்? இலங்கை தமிழரின் இரத்தத்தை என்னுள் இறங்கிக் கழுவவோ? கூடா நட்பின் கேடாய் நானும் பாவ நதியாய் மாழவோ? கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்? .

    • 0 replies
    • 392 views
  9. அனைத்துலக காணாமற்போனோர் தினம்(International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. 'காணாமற்போனோர்' என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் 146.679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது ? என மன்னார் பிஷோப் மதிப்பிற்குரிய ராயப்பு ஜோசெப் அவர்கள் அனைத்துலக சமூகத்தை நோக்கி குரல் கொடுத்தார். வெள்ளை வான் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் தொடர்ந்து கொலை செய்யப்படுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது . சிறிலங்காவில்…

  10. தவறுகளைச் சுட்டிக்காட்டும் பணியில் நியாயமாக நடந்து கொண்டு இருந்த ஊடகங்கள், கடந்த பல வருடங்களாக ஒருதலைப்பட்ச செய்திகளாலும், அரசியல் சார்ந்தும் செயல்பட்டதால் மதிப்பை இழந்து விட்டன. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சார்ந்தே தற்போது இயங்கி கொண்டுள்ளன. Image Credit ஆன்லைன் செய்தித்தளங்கள் வந்த பிறகு புற்றீசல் போல ஆளுக்கொரு தளங்களை உருவாக்கிச் செய்திகள் என்று கொடுத்து வருகின்றன. இதில் 90% க்கும் மேல் Deskwork எனப்படும் மற்ற செய்திகளைப் பட்டி பார்த்துக் கொடுப்பதே. ட்விட்டர் ஃபேஸ்புக் பயன்படுத்திய பிறகு தற்போது மக்கள் எதையும் சிரமம் இல்லாமல் உடனே படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது சுட்டியை (Link) க்ளிக் செய்து படிக்கச் சோம்பேறித்தனம். இரு வ…

  11. பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் ஒன்று கூடுவதற்கும், அரசியல் விவாதங்களை நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.போராடிய முன்னணி மாணவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சீர்த்திருத்த முகாம்களிலும், சிறைகளிலும் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஊடகங்களும், அரச ஆதரவாளர்களும் மாணவர்கள் சமூகத்தைச் சீர்குலைப்பதாகக் பிரச்சாரங்களை மேற்கொண்டன. இவையெல்லாம் நடந்தது இலங்கையின் வடக்கிலோ கிழக்கிலோ அல்ல. இன்று ஜேர்மனியில் அகதிகளாக தஞ்சம் கோரிய மக்கள் மட்டுமல்ல ஜேர்மனியர்கள் கூட அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே அரசு அவ்வாறு செயற்பட்டது. இன்றைய ஜேர்மனிய மக்களது சிந்தனையைத் தீர்மானிக்கும் போராட்டத்தை 60களில் நடத்திய பல்கல…

  12. தலைவர் என்றால் எப்படியும் இருக்கலாம் என்று இங்கு வரையறை செய்யப்பட்டுள்ளது .அல்லது அப்படி நடந்து கொள்கின்றனர்.மகளுக்காக செய்வதை போல் மக்களுக்கு செய்த தலைவர்.பேரன்களுக்கு செய்ததை போல் பெருசுகளுக்கு செய்யாத தலைவர் இவர் பெயர் தான் தமிழின தலைவர். இந்த புகைபடைத்தை பாருங்கள் ,இந்த அளவு நேசித்த நேசித்த குழந்தைகளை கூட இனத்தின் மானம் காக்க போர் முனைக்கு அனுப்பிய தலைவன். இப்படி தான் இருக்க வேண்டும் ,இதை விட்டு அளவுக்கு மேல் சொத்தை சேர்த்து விட்டு ,வாய்தா வாங்கியே உலக சாதனை செய்வது.மகனுக்காக கட்சி வளர்ப்பது,அடுத்தவன் மேல் சவாரி செய்தே காலத்தை ஓட்டுவது இப்படி மேலும் பலர் நம் தமிழ் நாட்டில் தலைவர்களாக வலம் வந்து நம்மையும், நம் நாட்டையும் வளம் கொழிக்க செய்பவர்களா…

  13. சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு ஐக்­கிய நாடுகள் சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திக­தி­யன்று மனித உரி­மைகள் சாச­னத்தைப் பிர­க­டனம் செய்­தது. ஐ.நா சபையின் பிர­க­ட­னத்­திற்கு அங்­கீ­காரம் அளித்த அங்­கத்­துவ நாடுகள் பிர­க­ட­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­றுக்­கொண்­டன. பிர­க­ட­னத்தைத் தொடர்ந்து ஐ.நா சபை­யினால் பல தீர்­மா­னங்கள், உடன்­பா­டுகள், படிப்­ப­டி­யாகச் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டன. ஒவ்­வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்­வ­தேச மனித உரி­மைகள் தின­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்டு மனித உரி­மைகள் தினத்தை அனுஷ்­டிக்­கும்­போது அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த ஆலோ­ச­னை­களும் பாரா­ளு­மன்­றத்தில் எடுத்­துக்­கொள்­ளப…

  14. ரெலோ முயற்சி – புதிய போத்தலில் பழைய கள்ளு July 10, 2021 — கருணாகரன் — தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு அவ்வப்போது ஏதாவதொரு புதுக்கதையைச் சொல்வதுண்டு. சற்று உன்னிப்பாகப் பார்த்தால் அதொன்றும் புதிய கதையாக இருக்காது. சலித்துப்போன பழைய கதையைச் சற்று உருமாற்றிச் சொல்லியிருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் அதை எப்படியே சனங்கள் நம்புகிறமாதிரிச் செய்து விடுவார்கள். இதில் அவர்கள் மகா கெட்டிக்காரர்கள். உண்மையில் இதில் இவர்கள் பலே கில்லாடிகள். நிபுணர்கள். இல்லையென்றால் எந்தப் பயனையுமே தராத – எதிர்விளைவுகளையே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற – தமிழ் (தேசிய) அரசியல் இன்னும் சூடு குறையாமல் இருக்குமா? இந்தப் பழைய கத…

  15. வரலாற்றில் தேசபக்தர்கள் துரோகிகளாக்கப்பட்டதும், துரோகிகள் தேசபக்தர்களாக ஆக்கப்பட்டதும் வரலாறு நெடுகிலும் வந்து போகின்ற சம்பவங்களே. “வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் அதிபுனைவு” என்பார்கள். இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஒரு முக்கிய பிரகடனம் அப்பேர்பட்ட ஒரு வெளிப்பாடு தான். அது பலரின் கவனத்தை ஈர்த்திருக்காது. முக்கியமாக தமிழ்ச் சூழலில் அந்தச் செய்தி கவனிப்புக்கு உட்பட்டிருக்காது. 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகை ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட கெப்பட்டிபொல உள்ளிட்ட 19 பேரின் பெயர்களை 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் தேசத்து…

  16. தமிழ்க் கல்வி அதிகாரிகளின் நியமனங்களை விரும்பாத பேரினவாத செயற்பாடுகள் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 09:39 AM (சிவலிங்கம் சிவகுமாரன்) அதிக தமிழ் பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்டிருக்கக் கூடிய அட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களை நான்காக பிரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் திடீரென அவை மூன்றாக குறைக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டமானது தொடர்ச்சியாக தமிழ்க் கல்வி அமைச்சை தக்க வைத்திருக்கும் பிரதேசமாகும். கல்வி இராஜாங்க அமைச்சும் இம்மாவட்டத்துக்கே கிடைத்திருந்தது. எனினும் இந்த பதவிகள், எந்தளவுக்கு நிர்வாக பொறுப்புகளை தமிழ் அதிகாரிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்பது கேள்விக்குரியே. நுவ…

  17. சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர Posted on February 5, 2023 by தென்னவள் 29 0 உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தல் நடைபெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவை செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த 20 வருடங்களின் பின்னர் பேரினவாத தேசிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிடுகின்றன. சில உள்ளூராட்சி சபைகளில் பிரதேச மட்டத்தில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் இணைந்…

    • 0 replies
    • 186 views
  18. 2018: கடந்து போகும் காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 05:38Comments - 0 இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து போகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ஏராளமான அல்லல்களையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு அப்பால் நகர்கிறது. இதன் தாக்கம், இனிவரும் ஆண்டுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இது, இவ்வாண்டை எவ்வாறு நினைவுகூருவது என்ற வினாவை எழுப்புகிறது. இந்த ஆண்டு, உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? இவ்வாண்டில், உலக அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிகழ்வுகள் ஏதாவது நடைபெற்றுள்ளனவா ஆகிய இரு கேள்விகளுடன், இவ்வாண்டின் இறுதிக் கட்டுரைக்குள் நுழைகின்றேன். இவ்வாண்டை எதிர்கூறி, நான…

  19. சோகத்தில் ஈழத் தமிழர்கள்... விபசாரத்துக்கு விரட்டும் அகதிமுகாம்! 'யுத்தத்தால சொந்த மண்ணுல நிம்மதியைத் தொலைத்துப்போட்டு... வாழ வழிதெரியாமல்தானே வந்தோம். இங்கட இப்படியெல்லாம் நடக்குமென்டு தெரிந்திருந்தால் நாங்க பேசாம அங்கயே செத்து மடிஞ்சுருப்போம்தானே...' -ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கை அகதியருவர் நமக்கெழுதிய கடிதத்திலிருந்த நெஞ்சைக் குத்தும் வரிகள் இவை. இலங்கையிலிருந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வந்த அகதிகளில் சுமார் 4000 பேர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை குறித்து முகாமுக்கு சென்று நாம் விசாரித்தபோது, ''போட்டோ, பெயரை யெல்லாம் போட்டுடா தீங்கள்'' என்ற வேண்டு கோளுடன் பேச ஆ…

  20. நான்தான் கடவுளா..? - பூநகரான் [saturday, 2012-12-08 22:28:40] நான் பிறந்த நாள் மார்கழியில் வருகிறதாம். ஆனால் இந்த மாதத்திலேயே உலகம் நிறைவுறும் என்கிறார்கள். என்னால் திரும்பிப் பார்க்கக் கூடிய வரை , இந்த நாளை நோக்கி எனது நினைவுகளை திரும்பிப் பார்க்க முயல்கிறேன். அவற்றை இரை மீட்டுப் பார்க்க முயன்ற போதும் , ஏழு வயதிற்கு முந்திய எந்தச் சம்பவமும் என் மனதிற்கு எட்டுவதாக இல்லை. ஐந்து வயதாகிய பின்னரும் அதாவது , 'அருவரி' (இன்றைய கின்ரர் காடின்) வகுப்பிற்கு போகும் போதும் பால் குடித்து விட்டுத் தான் போனேனாம். அது மட்டுத் சற்று மங்கலாக என் மனத் திரையில் புலப்படுகிறது. அம்மாவின் மடியால் இறங்கிப் போனது ஏதோ கறுப்பு வெள்ளைப்படமாய் கலங்கலாகத் தெரிகிறது. ஒன்பத…

    • 0 replies
    • 657 views
  21. வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் ; கஜேந்திரகுமார் நேர்காணல் June 30, 2020 நேர்கண்டவர்; ரொஷான் நாகலிங்கம் “தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம்” என்றும் கூறுகின்றார். ஞாயிறு தினக்க…

  22. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை; ‘குழந்தை’களை வதைக்காதீர் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்பது என்பது பரீட்சையில் சித்தியடைவதாகவும் சுருங்கி விட்டது; கல்வியின் நோக்கங்கள் மாறிவிட்டன; கற்பித்தலின் நோக்கங்களும் மாறிவிட்டன; இது வருந்தத்தக்கது. இதன் பின்னணியிலேயே கல்வி என்பது, எவ்வாறு மிகப்பெரிய வணிகமாக உருப்பெற்று நிற்கிறது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இந்த வாரம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சார்ந்து, சமூகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் நிகழும் உரையாடல்களை, கடந்த சில நாள்களாக அவ…

  23. கலைஞர் கருணாநிதியை கணணதாசன் போல வேறு யாரும் அம்பலப்படுத்தியதில்லை. கண்ணதாசன் மறைவிற்காக கருணாநிதி நிச்சயம் உள்ளூர மகிழ்ந்திருப்பார். கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்... 30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்... அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்…

    • 0 replies
    • 2.7k views
  24. 10 cm அசாதாரணமான வால் வளர்ச்சி கொண்ட சிறு குழந்தையின், தாயிடம் இலகுவாக அதனை நீக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முள்ளம்தண்டில், அடிப்படை பிரச்னையினை தீர்க்காமல் இதனை அகற்றினாலும் மீண்டும், மீண்டும் வளரும் என தெரிவிக்கிறார்கள் சீன டாக்டர்கள். 800 பிள்ளைகளுக்கு 1 பிள்ளை இந்த வகையில் பாதிப்புறுகின்றது எனினும் இந்த குழந்தை அதிகமாக பாதிப்டைந்துதுள்ளதாக படத்தினை பார்க்கையில் தெரிகிறது. குழந்தை நலம் பெற வாழ்த்துவோம். http://news.uk.msn.com/trending-blog/mum%E2%80%99s-appeal-for-help-over-child%E2%80%99s-%E2%80%98tail%E2%80%99 Mum’s appeal for help over child’s ‘tail’

    • 0 replies
    • 595 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.