நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டிருந்த பரிஸ் கோபுரமொன்று தற்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிஸ் மத்திய பகுதியில் (சத்தலே லே ஹாலுக்கு அருகில்) நகரில் 16ம் நூற்றாண்டில் 1500ம் ஆண்டுகளில் Tour Saint-Jacques என்ற இக்கோபுரம் கட்டப்பட்டது. எனினும் சில நாட்களிலேயே இக்கோபுரம் மூடு விழாவும் கண்டது. 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியின் காரணமாக இங்கிருந்த தேவாலயம் சேதமடைந்தபோதும், இக்கோபுரத்திற்கு சேதாரம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்பட்டது. எனினும், ஈபிள் கோபுரத்திற்கு இணையாக கருதப்பட்ட இக்கோபுரம், 500 வருடங்களுக்குப் பிறகு, தற்போது புனரமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. கிட்டத…
-
- 0 replies
- 561 views
-
-
-
-
- 0 replies
- 173 views
-
-
மனோவைக் கண்டு அஞ்சுகின்றதா கூட்டமைப்பு? வடக்குக் கிழக்கு வீடமைப்பு, வீதி அபிவிருத்தி அமைச்சர் மனோவிடமிருந்து பறிபோகிறது” என்று தலைப்புச் செய்தியிட்டுள்ளது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதைப்போல ஒரு செய்தியை “அமைச்சர் மனோவின் குழப்பத்தால் வடக்குக் கிழக்கு வீடமைப்பு தாமதம்” என்று தலைப்பிட்டு அதே பத்திரிகை வெளியிட்டது. அதற்கு மனோ கணேசன் தன்னுடைய முக நூலில், “இதென்னப்பா... அநியாயம்? வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று வருடங்களாக, இதோ, அதோ என்ற அறிவிப்ப…
-
- 0 replies
- 441 views
-
-
ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும்செயல் ; வி.ரி.தமிழ்மாறன் (நேர்காணல்:-ஆர்.ராம்) பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அதன் முழுவடிவம் வருமாறு. 19ஆவது திருத்தத்தின் பின்னணி 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்/ தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்…
-
- 0 replies
- 292 views
-
-
Posted on : 2007-07-07 குறுகிய அரசியல் லாபங்களுக்காக படைநகர்வுச் செயற்பாடுகள் தன்னுடைய குறுகிய அரசியல் லாபங்களுக்காகப் படை யினரைப் பலிகொடுத்து இராணுவ நகர்வுகளை முன்னெ டுக்கின்றது மஹிந்தவின் அரசு என்பது இப்போது பரகசிய மாகி வருகின்றது. தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாண்மை சக்திகளின் ஆதரவைத் தக்கவைப்பதன் மூலம் தனது ஆட்சி அதிகார செல்வாக்கை உறுதிப்படுத் திக் கொள்வதில் கண்ணாக இருக்கும் இந்த அரசுத் தலைமை, அந்தப் பேரினவாத சக்திகளை வளைத்துப் போட்டுத் தனது கைக்குள் வைத்திருப்பதற்காக சிறுபான்மைத் தமிழர் மீதான இராணுவத் தாக்குதல் கெடுபிடிகளை இறுக்குகின்றது. தமிழர்களின் போராட்ட சக்தியான விடுதலைப் புலிகளுக்கு எதிரான தன்னுடைய போர்முனைப்பைத் தீவிரப்படுத்து வதன் மூலம் தன்னை பௌத்த சிங…
-
- 0 replies
- 1k views
-
-
எங்கும் அரசியல் எதிலும் அரசியல்! அழிவின் விளிம்பில் தமிழர்கள் Report us Dias 1 hour ago ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்தவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ இல்லையோ, இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியலே எங்கும் வியாபித்திருக்கின்றது. எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்பதே நிலைமையாக உள்ளது. அதனை நிகழ்வுகளின் ஊடாகவும், நடவடிக்கைகளின் ஊடாகவும் தெளிவாகக் காணவும் உணரவும் முடிகின்றது. ஆயினும், இது நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அரசியலாகத் தெரியவில்லை…
-
- 0 replies
- 845 views
-
-
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்? (ஸ்டான்லி ஜொனி) கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் க்ரைஸ்ட் சர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்களில் வெள்ளை இனப் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான சம்பவத்திற்குப் பதிலடியாகவே ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று 350 இற்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. சர்வதேச இயக்கத் தொடர்புகளிடமிருந்து கிடைத்திருக்கூடிய உதவியுடன் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற உள்நாட்டு இஸ்லாமிய இயக்கமே தாக்குதல்களை மேற்கொண்டதாக விசாரணையாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்குத் தாங்களே பொறுப்ப…
-
- 0 replies
- 510 views
-
-
"சீமானைப்போல எனக்கு தைரியம் இல்லையா?" வேல்முருகன் #VelMurugan #Politics #Seeman
-
- 0 replies
- 480 views
-
-
முசுப்பாத்திக் கொம்பனிகளால் நெருக்கடிக்குள்ளாகும் தமிழர் March 11, 2021 — கருணாகரன் — தமிழ் மக்களின் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணக் கூடிய தலைமைகள் எதுவும் இல்லை. அரச ஆதரவுக் கட்சிகள், அரச எதிர்ப்புக் கட்சிகள், மேற்குச் சாய்வைக் கொண்ட கட்சிகள், இந்திய ஆதரவுத் தலைமைகள், இடதுசாரிகள், வலதுசாரிகள், முன்னாள் இயக்கங்கள், பின்னர் உருவாகிய புதிய கட்சிகள், பேரவை, சிவில் அமைப்புகள், போதாக்குறைக்கு நாடு கடந்த அரசாங்கம், நாடு கடக்க முடியாத அரசாங்கம் என்று பல தரப்புகள் இருந்தாலும் இவை ஒன்றினாற் கூட உருப்படியாகச் செயற்பட முடியவில்லை. அப்படிச் செயற்படக் கூடிய தரப்புகளை மக்கள் இனங்கண்டு ஆதரிப்பதுமில்லை. ஆகவேதான் நெருக்கடிகள் வரவரக் கூடிக் கொ…
-
- 0 replies
- 344 views
-
-
கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியில் ரீதியில் பலமாக்குவதற்கு முயற்சி ;சட்டத்தரணி குருபரன் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கான முயற்சியாகவே ஜனாதிபதியின் செயற்பாட்டினை பார்க்க முடியும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்தவொரு விடயமாகின்றது. அவ்வாறிருக்கையில், 19ஆவது திருத்தச்சட்டத்தினையும் உள்வாங்கிய …
-
- 0 replies
- 226 views
-
-
’பொறுப்பைக் கொடுத்தால், 2 வருடங்களில் ISஐ துடைத்தெறிவேன்’ - சரத் பொன்சேகா Editorial / 2019 மே 01 புதன்கிழமை, மு.ப. 11:58 Comments - 0 நேர்காணல்: மேனகா மூக்காண்டி படப்பிடிப்பு: நிசல் பதுகே அரசியல் ரீதியான பொறுப்பைக் கொடுத்தால், நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாடுகளை, 2 வருடங்களில் முடித்துக் காட்டுவேனென, முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி தெரிவித்தார். நாடு எதிர்நோக்கியுள்ள சர்வதேசத் தீவிரவாதம் குறித்து, தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு, கே: ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக…
-
- 0 replies
- 568 views
-
-
முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை… May 22, 2019 கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட ஒன்பது இடங்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களால் 290இற்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.இத் தாக்குதல்கள் நாட்டின் சகல மக்களையும் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியுள்ளது. சமதைபெண்ணிலைவாத குழுவினரான நாம் உயிரிழந்த அனைவருக்குக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் நி…
-
- 0 replies
- 914 views
-
-
நான் முதலமைச்சர் ஆக வேண்டுமா? இல்லையா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் ...!
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கை: இடைக்கால அனைத்துக் கட்சி அரசு என்பது என்ன? பொருளாதார நெருக்கடிக்கு அது தீர்வு தருமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் மஹிந்த, அதிபர் கோட்டாபய கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு நெருக்கடியா…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மார்சல் பற்றி உலகம் அறியாத முகம் ?
-
- 0 replies
- 453 views
-
-
யேர்மனி யுத்தத்தில் தோல்வியடைந்து இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நாள் 08.05.1945. கிட்லர் மணம் முடித்து மரணித்த கடைசி சங்கரின் கதை.
-
- 0 replies
- 454 views
-
-
பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்? ஜெரா இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக அறிக்கை சொல்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காணிக்கான உறுதி இல்லை என்பதும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் இராணுவ பேச்சாளரின் மேலதிகக் குற்றச்சாட்டுக்களாக அமைந்திருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவையல்ல. வன்னியில் பிரபாகரனின் அல்லது புலிகளின் காணிகள் என்று எதுவும் இருக்கவில்லை. வருட அடிப்…
-
- 0 replies
- 558 views
-
-
பாகிஸ்தானின் வறிய மாகாணமான பலூசிஸ்தான், தவறான காரணங்களுக்காக அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. தலைநகர் குவெட்டாவில் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் மக்களை பிபிசியின் ஷுமைலா ஜாஃப்ரி சந்தித்தார். ஒரு வங்கி மேலாளரின் ரகசிய வாழ்க்கை ரகசியமாக செயல்படும் ராக் இசைக்குழு 'மல்ஹார்'இன் பிரதான பாடகரான யாசிர், பகல் நேரத்தில் வங்கி மேலாளராகவும், இரவு நேரத்தில் பாடகராகவும் அவதாரம் எடுக்கிறார். அவர் வாழ்ந்துவரும் பழமைவாத முஸ்லிம் சமுதாயத்தில், பாடுவதும், நடனமாடுவதும் தடை செய்யப்பட்டிருப்பதால், ராக் இசை மீதான தனது பேரார்வத்தை அவர் மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கி…
-
- 0 replies
- 589 views
-
-
தேசிய மக்கள் சக்தி கூறிய மாற்றங்கள் சரிவருமா?; சறுக்குமா? கந்தையா அருந்தவபாலன் முன்னைய ஆட்சியாளர்களின் பலவீனங்களை மூலதனமாக்கி மாற்றங்களைத் தருவோம் என்ற நம்பிக்கையை மக்களிடத்து விதைத்து ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியினர் தாங்கள் கூறியதைப் போல மாற்றங்களை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை இப்போது உணரத் தொடங்கிவிட்டனர் என்பதை அவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனையுந்தாண்டி அவர்கள் கூறியவாறு மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தாலும் பிரச்சினை. முனையாவிட்டாலும் பிரச்சினை. ஏனெனில் மாற்றத்துக்காக தங்களால் கொண்டுவரப்பட்டவர்களால் மாற்றமேற்படுத்தப்படாதவிடத்து அவர்களை மாற்றுவதற்கும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை நிலை. …
-
- 0 replies
- 366 views
-
-
பிறிதொரு கட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ள சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் (எம். எப்.எம். பஸீர்) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் விசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு, குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்ர் பிரான்சிஸ் தொடர்பிலான விசாரணைகள் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்திய பிறிதொரு கட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சனின் கீழ் மனித படுகொலைகள் தொடர்பான விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சத் முனசிங்க, பொலிஸ் பரிசோதகர் .இக்பால் உள்ளிட்டோர் கொழும்பு பிரதான …
-
- 0 replies
- 791 views
-
-
இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபயராஜபக் இலங்கையின் சுதந்திரதினம் நேற்றைய நாள் கொண்டாடப்பட்டதுசுதந்திர தினத்திற்கான மரியாதையை ஏற்றுக் கொண் டார். இவை வழமையான சம்பிரதாயங்களாக இருப்பினும் இந்த நாட்டின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடந்தாகி அதில் ஒன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் இசைக்கப்பட்டு தமிழ் புறக்கணிக்கப்பட்டது. அதாவது சுதந்திரதின நிகழ்வின் போது தேசிய கீதம் சிங்களத்தில் முதலிலும் தமிழில் இரண்டாவதாகவும் இசைக்கப்படுவது வழக்கம்.ஆனால் இம்முறை தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தவிர இரண்டாவது சம்பவம் ஜனாதிபதி கோட் டாபய ராஜபக் சுதந்திரதின நிகழ்வில் முதன்மைக்குரிய மரியாதையை ஏற்பதற்காக இராணுவ பட்டயங்களுடன் வந்திருந்…
-
- 0 replies
- 378 views
-
-
நீங்கள் பயிற்சி பெற்றதை ஏற்றுக் கொள்ளுங்கள் – முஸ்லிம் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் May 21, 2020 மூன்று முஸ்லிம் பிள்ளைகளிடமிருந்து கட்டாயப்படுத்தி ஆதாரங்களை பெற்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் அல் சுஹ்ரியா அரபுக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்களது முஸ்லிம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தங்களை காவல்துறை அதிகாரிகள் என அழைத்துக்கொண்டு ஒரு குழு பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை தனியாகப் பிரித்து தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அச்சுறுத்தியுள்ளனர். எங்களிடம் ஒரு …
-
- 0 replies
- 380 views
-
-
ஏ.ஆர்.ஏ.பரீல் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாடொன்றில் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்த முக்கிய கருத்துகளை தொகுத்து தருகிறோம். நமது நாட்டின் இன்றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவலைப்படுகிறோம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. எமது கடல் எல்லையில் தீப்பற்றிய கப்பல் மாத்திரம் பிரச்சினையல்ல. இந்நாட்டில் ஆட்சியொன்று இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது. இலங்கை முக்கிய கேந்திர நிலையத்திலுள்ள ஒரு நாடு. இந்நாட்டை பாதுகாப்பதாக அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள். இது…
-
- 0 replies
- 469 views
-
-
பிரபாகரன் மரண சான்றிதழ் மர்மங்கள்! ''விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனும், உளவுத் துறை தலைவரான பொட்டு அம்மானும் கொல்லப்பட்டது உறுதியாகிவிட்டது. அவர்களின் மரணம் குறித்த ஆவணங்களை சிங்கள அரசு, இந்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதனால் விரைவிலேயே ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்!'' - கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிங்கள மீடியாக்கள் இப்படியரு செய்தியை முக்கியத்துவத்தோடு வெளி யிட்டு வருகின்றன. இத்தனைக்கும் சிங்கள அரசின் அறிக்கையாகவோ, அதிபர் மாளிகையின் செய்தியாகவோ இந்தத் தகவல் வெளியிடப்படவில்லை. 'இலங் கையின் அட்டார்னி ஜெனரல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் மேற்கண்ட தகவலைச் சொன்னதாக'வே சிங்கள மீடியாக்கள் எழுதி வருகின்றன. அந்த அதிகாரி யார் என்று இலைமறை காயாகக் கூட சிங்…
-
- 0 replies
- 662 views
-