நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூடும் போதெல்லாம் ஈழத் தமிழ் மக்கள் எங்களுக்கு நீதி கிடைக்குமா? நடந்த கொடுமைக்கு தண் டனை வழங்கப்படுமா? எங்கள் இனத்துக்கு உரிமை வழங்கப்படுமா? என ஜெனிவாவை நோக்கித் தவமிருப்பர். இந்தத் தவமிருப்பு இன்று நேற்றல்ல. பத்து ஆண்டுகளாக நீண்டு செல்கிறது. போர்க்குற்ற விசாரணை பற்றியும் தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டிய நிபந்தனைகள் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர் மானங்களை நிறைவேற்றியதுடன் அதற்கு இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றிருந் தது. எனினும் ஒவ்வொரு தடவையும் ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகும்போது, மனித உரிமைகள் ஆணையம் விதித்த ந…
-
- 0 replies
- 576 views
-
-
தேர்தல் பிரசாரத்தில் ‘விடுதலைப் புலிகள்’ -கபில் தேர்தல் பிரசாரங்களில் விடுதலைப் புலிகளே முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்யும் போக்கு இன்று நேற்று உருவானதல்ல. நீண்டகாலமாகவே இவ்வாறான வழக்கம் இருந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடுக்கின்ற போக்கு இன்று வரை தொடர்கிறது. தெற்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலாபம் பெறுகிறார்கள். வடக்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள். அரசியல்வாதி…
-
- 0 replies
- 355 views
-
-
‘தண்டனை விலக்கீட்டை முடிவுறுத்து, உண்மையை உயிர்ப்பித்திரு’-பி.மாணிக்கவாசகம் 27 Views உண்மைகள் சாவதில்லை. ஆனால் சாகா வரம் பெற்ற உண்மையை வெளிக்கொண்டு வருபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள், கடத்தப்படுகின்றார்கள், கொல்லப்படுகின்றார்கள். நாகரிகம் வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் வாழ்வியலில் இது மிக மோசமான உலகளாவிய நிலைமையாகத் திகழ்கின்றது. தகவல்களை – உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது மக்களின் பிறப்புரிமை. அந்த உரிமையை நிறைவேற்றுவதற்காக ஊடகவியலாளர்கள் உழைக்கின்றார்கள். அவர்கள் உண்மைகளையும் உள்ளவாறாக நிலைமைகளையும் வெளிக் கொண்டு வருவதற்குப் பாடுபடுகின்றார்கள். அதனை அவர்கள் தமது வாழ்வியலாக – தொழிலாகக் கொண்டிருக்கின்றார்கள். …
-
- 0 replies
- 280 views
-
-
களையெடுத்து நிலைத்திருப்போம் புலம் பெயர் உறவுகளே! எதிரி உன் உளவுரணில்தான் மையம் கொள்கின்றான்.எங்களின் நிதானமான,அதேசமயம் வீச்சான செயற்பாடுகள் எதிரிக்கு கலக்கத்தை கொடுக்கும் இதே வேளை சஞ்சலம் கொள்ளவைக்க சில,பலமாதிரியான முயற்சிகளை சில எட்டப்பர்களினூடாக பரப்புரைகளை மேற் கொள்வதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் மன உறுதியை குறி வைத்து தனது பொய்ப்பிசாரத்தை இணையத்தளமூடாகவும்,தனது ஊது குழலான வானலை ஊடாகவும்,மேலும் எமது தொலைக்காட்சிகளில் மறைமுகமாக ஊடுருவி ஊனக்கதைகள் பரப்ப முயல்வதை நாம் இப்போது நேரடியாகவே கண்முன்னே தெரிந்து கொள்கின்றோம்.இந்த அளவிற்கு இத்தனையையும் உணர்ந்த நாம் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். முதற்கண் இத்தகை நிலைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை எமதான …
-
- 0 replies
- 785 views
-
-
24 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த சம்பவத்தினால் மனமுடைந்த சிலர், கொழும்பு - பொரள்ளை மயானத்தின் இரும்பு வேலியில் வெள்ளை நிறத்திலான துணிகளை கட்டி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பிரிட்டனில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது …
-
- 0 replies
- 327 views
-
-
-
கொழும்பு வீட்டின் முன் நடந்தவை பற்றி கஜேந்திரகுமார் விளக்கம்
-
- 0 replies
- 191 views
-
-
வடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்! நாட்டில் அன்றாடம் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தி வருகின்றோம். கவனயீனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் ஒருபுறம் இருக்க பல பிரதேசங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (13.03.2019) கவனஞ்செலுத்துகிறது. வடக்கிற்கான ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டு 6 ஆண்டுகளிற்கு மேல் கடந்துள்ள போதிலும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி முதல் பளை வரை மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் இவ்வாறான பாதுகாப்பற்ற கட…
-
- 0 replies
- 594 views
-
-
ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய நபர் - பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு (எம்.கோகுலதாஸ்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் நீட்சியாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடாளவிய ரீதியில் அச்சம்பவத்தின் நீட்சியாக நிகழும் விடயங்கள் இனங்களுக்கிடையிலான விரிசல்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து வருகின்ற நிலையில் மிகவும் உணர்வு பூர்வமான விடயமொன்று திருகோணமலை மூதூரில் நிகழ்ந்துள்ளது. மூதூர் கிளிவெட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தமிழ் பெயரில் ஆலயத்தின் பிரதான குருவுக்கு உதவியாளராக செயற்பட்டு வந்த நபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி பொலிஸார் சந்கேத்தின் பேரில் கைது செய்தனர். அதனையடுத்து அவர் முஸ்லிம் நபர் என்றும் அவர் …
-
- 0 replies
- 529 views
-
-
கோடி அற்புதர் அந்தோனியாரின் கோலாகலமற்ற திருவிழா இன்றைய திருவிழா திருப்பலி காலை 10 மணிக்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும் ஜூன் மாதம் 13ஆம் திகதி என்றாலே கொழும்பு கொச்சிக்கடைவாழ் மக்களின் மனதில் குதூகலம் குடிகொண்டு விடும். ஆம், அன்றுதான் கொச்சிக்கடை புனித அந்தோனியாருக்குத் திருவிழா எடுக்கும் நாள்; கோலாகலம் நிறைந்த நாள். கொச்சிக்கடைவாழ் மக்கள் மட்டும்தானா...? இல்லை... நாடு முழுவதுமுள்ள புனிதரின் பக்தர்கள் ஆலயத்துக்கு ஓரணியாகத் திரண்டுவந்து கொண்டாடும் திருவிழா இது. புனித அந்தோனியார்...! அவரை நினைத்தாலே போதும், மனதில் கவலைகள், துன்பதுயரங்கள், கஷ்டநஷ…
-
- 0 replies
- 763 views
-
-
புத்தளம் மாவட்டம் விரிந்த பரப்பளவைக் கொண்ட மாவட்டமாகும்.இம்மாவட்டம் வடக்கே பூக்குளம் தொடக்கம் தெற்கே கொச்சிக்கடை நஞ்சுண்டாக்க வரையும் மேற்கே இந்து சமுத்திரத்தையும், கிழக்கே வளம் கொண்ட நிலத்தொடர்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 3072 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். இதன் கடற்கரை நீளம் 150கி.மீ. இங்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அனைத்து மதங்களையும் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இம்மாவட்டத்தில் 16 பிரதேசங்கள் அமைந்துள்ளது. புத்தளம், முந்தல், மகாகும்புக்கடவெல, கல்பிட்டி, கருவெலகஸ்வௌ, நாத்தாண்டி, மகாவௌ, சிலாபம், பல்லம, ஆனமடு, வென்னப்புவ, நவகத்தேகம, தங்கொட்டுவ, ஆராய்ச்சிக்கட்டு, வண்ணாத்தவில்லு,மாதம்பை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகள…
-
- 0 replies
- 383 views
-
-
இன அழிப்பு, போர்க்குற்றமாக சுருங்கி அதன்பின் மனித உரிமைமீறலாக மாறி இப்போது சிறீலங்காவின் ஆட்சியை மாற்றிவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று முடிவு உருவாகி உள்ளது. பொதுவாக மேற்கில் அப்படி ஒரு கருத்துருவாக்கம் உருவாகி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிலையில் அப்படியான ஒரு எண்ணம் இருக்கக்கூடிதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக மாறிவரும் நிலைமை அதனைத்தான் எண்ணவைக்கிறது. பலம் ஏதுமற்ற ஒரு இனமாக நாம் மாறிய 2009 மே மாதத்துக்கு பின்னர் எங்களுடைய நோக்கம், எங்களுடைய பாதை என்று எதை வரித்து இறங்கினாலும் அதனை மாற்றி எம்மை அதனிலும் வலுக்குறைந்த ஒரு போராட்ட முறைக்குள் தள்ளுவதாகவே குறிப்பாக மேற்குலகின் நகர்வாகவும் இந்தியாவின் பார்வையாகவும் இருந…
-
- 0 replies
- 590 views
-
-
[size=3][size=4]செவ்வணக்கங்க.[/size] [size=4]பொதுவாவே உங்க கூட பேசறதுன்னாலே பயந்தாங்க.[/size] [size=4]நான் நம்மூரைப் பத்தி பேசறப்ப[/size] [size=4]நீங்க இந்த நாட்டப் பத்திபேசுவீங்க.[/size] [size=4]நான் இந்த நாட்டப்பத்தி பேசறப்ப[/size] [size=4]நீங்க வேற நாட்டப்பத்திப் பேசுவீங்க.[/size] [size=4]நானும் உங்கள மாதிரி பேசணும்னு தத்துப்பித்துன்னு நாலு நாட்டு சமாச்சாரங்களத் தெரிஞ்சிட்டு வந்தா[/size] [size=4]அப்பப் பாத்து நம்மூரு மாரியாத்தா கோயிலப்பத்திப் பேசுவீங்க.[/size] [size=4]எப்பப்பாரு இதே கூத்துதாங்க. சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒருநாள் ஒத்துமையா நாம ஒரே விசயத்தைப்பத்தி பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க.[/size] [size=4]உங்ககிட்டே நெருங்கறதுன்னாலே ஒரு கிலி. சும்ம…
-
- 0 replies
- 499 views
-
-
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன் எங்கே ? - ஸ்ரான்லி ஜொனி வட கொரியா கிம் ஜொங் - உன்னின் உடல்நலம் குறித்து இணையத்தில் ஊகங்கள் ஏராளம்.தனது பாட்டனாரான கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தாபகர் கிம் இல் - சுங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்ரில் 15 நடத்தப்பட்ட சூரியதினக் கொண்டாட்டங்களில் (Day of the Sun celebrations) அவர் காணப்படாததையடுத்து வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. ( இல் -- சுங் என்பதற்கு கொரிய மொழியில் - சூரியனாக வருவது(Becoming the Sun) என்று அர்த்தம் என்பதால் தாபகரின் தினம் சூரிய தினம் என்றுஅழைக்கப்படுகிறது.அந்த தினம் வடகொரியாவில் மிகவும் முக்கியமான விடுமுறை தினமாகும் ) தந்தையாரின் மரணத்தைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதியாக வந்த…
-
- 0 replies
- 359 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தினருடன் எவ்விதமான நெருக்கமுமில்லை - சீன தூதரக அரசியல் பிரிவுத்தலைவர் பேட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகத்திடம் ‘வெள்ளை மேலதிக்கவாதம்’ காணப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ‘குரல்களை ஒடுக்கி’ தமது ‘பிடி’க்குள் வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகவுள்ளது என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான லூ சொங் (Luo Chong) கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார். அந்தச் செவ்வியின் முதற்பாகம் வருமாறு, கேள்வி:- இலங்கையில் ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கத்துடனான உறவுகள் எப்படியிருக்கின்றன? பதில்:- இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2ஆயிரம் …
-
- 0 replies
- 272 views
-
-
தேசிய, சர்வதேசிய கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை Photo, (AP Photo/Eranga Jayawardena) கடந்த ஜூலையில் உச்சக்கட்டத்தை அடைந்த மக்கள் போராட்ட இயக்கத்துக்கு எந்த அளவிலாவது தலைமைத்துவத்தை வழங்கியவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் நிலையாக தொடருகின்றன. மிகவும் இறுதியாக கைதானவர் விருது பெற்ற ஒரு நடிகை. ஜனாதிபதி மாளிகை போராட்டக்கார்களின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது அவர் அதற்குள் பிரவேசித்திருத்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் அவர் ஒரு துடிப்பான பேச்சாளராகவும் இருந்தார். போராட்டங்களில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவது தற்போதைய அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும். அது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையா…
-
- 0 replies
- 172 views
-
-
எம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜனாதிபதியின் வடமாகாண விஜயம் - சாந்தி சச்சிதானந்தம்:- 18 அக்டோபர் 2014 கிளிநொச்சிக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் மிகவுண்டு. விவசாயத்துக்கான பல பாரிய குளங்கள் அமைத்து வன்னியர்கள் ஆண்ட பூமி அது. நவீன வரலாற்றிலும் அதற்கு இடம் உண்டு. 1998ம் ஆண்டு கண்டி தலதா மாளிகையில் ஸ்ரீலங்காவின் ஐம்பதாவது சுதந்திர தின நிகழ்வை அன்றைய சந்திரிகா அரசு ஏற்பாடு செய்திருந்தது. அடுத்த சுதந்திர தின நிகழ்வினை கிளிநொச்சியில் நடத்துவோம் என பகிரங்க சவால் விட்டார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை. இதற்குப் பதிலடியாக குண்டு பொருத்தப்பட்ட வாகனத்தை தலதா மாளிகைக்கு அனுப்பி விட்டனர் விடுதலைப்புலிகள். அந்த வருடம் சுதந்திர நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டன. …
-
- 0 replies
- 443 views
-
-
எங்களை அழித்தது இந்தியா தீபச்செல்வன் - ஈழத்தில் வடக்கில் கிளிநொச்சியில் பிறந்தவர். பல்வேறு பிரதேசங்களில் அகதியாய் இடம் பெயர்ந்து வாழ்ந்தவர். பிறந்த நாளிலிருந்து இடம்பெயர்ந்து... பல்வேறு பாடசாலைகளில் படித்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்கல்வி பயின்றவர். தமிழ் விசேடப் பட்டப் படிப்பைப் படித்து விட்டு ஒன்றரை வருடங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் ஊடக அலகில் வருகை விரிவுரையாளராகவும் பயிற்சி ஆசிரியராகவும் பணியாற்றி வருபவர். அதே பல்கலைக்கழகத்தில் மாணவராக 2008-09 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பொறுப்பு வகித்தவர். விடுதலைப் புலிகளின் உத்தியோகப் பூர்வ தொலைக்காட்சியில் விவரணப் படத் தயாரிப்பாளராக இயங்கியவர். கற்கை …
-
- 0 replies
- 1.1k views
-
-
Watch the live and exclusive interview in Athirvu with Hon. Rishad Bathiudeen (Minister of Industry & Commerce, Resettlement of Protracted Displaced Persons & Co-operative Development)
-
- 0 replies
- 461 views
-
-
‘பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைய வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார்’ என்று இதுவரை வெளிவராத ‘இரகசியம்’ ஒன்றை அண்மையில் கலைஞர் முத்துவேல் கருணாநிதி ‘போட்டுடைத்திருந்தார்’. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு. நாளை தமிழீழம் மலராது போனாலும், நாளை மறுதினமாவது அது மலர்ந்தே தீரும்’ என்றெல்லாம் அண்மைக் காலமாக கருணாநிதி வெளியிட்டு வரும் ‘பிதற்றல்களின்’ தொடர்ச்சியாகவே ராஜீவ் காந்தி பற்றிய புதிய ‘இரகசியத்தை’ அவர் வெளியிட்டிருப்பதாக நாம் புறந்தள்ளிவிட முடியாது. கருணாநிதி ‘போட்டுடைத்திருக்கும்’ இந்த ‘இரகசியத்தில்’ மிகப்பெரும் அரசியல் சூட்சுமம் ஒன்று அடங்கிக் கிடக்கின்றது: ஒரு வகையில் இதில் கருணாநிதி குடும்பத்தின் அதிகார அரசியலின் எதிர்காலமும் பொதிந்துள்ளது. அமைதிப் படையின் போர்வை…
-
- 0 replies
- 2.4k views
-
-
உண்மையான சுதந்திரம்? மொஹமட் பாதுஷா நமது தேசத்தின் இன்னுமொரு சுதந்திர தினத்தை நாம் கொண்டாடியிருக்கின்றோம். தேசிய கீதம் இசைக்க விடப்பட்டது. கொடிகள் பறக்கவிடப்பட்டன. வாழ்த்துச் செய்திகள் பிரித்தானியாவில் இருந்தும் வந்து குவிந்தன. மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எல்லாமுமாக 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. ஆனால், உண்மையான சுதந்திர உணர்வுடன் இந்நாட்டில் வாழ்கின்ற மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் இந்த சுதந்திர தினத்தை அனுபவித்திருக்கின்றார்களா அல்லது ஓர் அரசாங்க, வர்த்தக விடுமுறை நாளாக இதை உணர்ந்திருக்கின்றார்களா என்ற ஐயப்பாடு இருக்கவே செய்கின்றது. அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை நாள், அத்தியாவசிய …
-
- 0 replies
- 509 views
-
-
நகோனோ - கரபாக்: மௌனமாக ஒரு யுத்தம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகின் பல மூலைகளிலும் நடப்பவை நம் காதுகளை எட்டுவதில்லை. எட்டுவனவும் முழுமையான செய்திகளல்ல. அவற்றிற் பாதி உண்மையுமல்ல. தெரிந்தே திரித்த செய்திகள் எங்களை அடைகின்றன. உலகின் செய்தி வழங்குனர்கள் தரும் செய்திகளை விடத் தராமல் விடும் செய்திகள் பல சமயங்களில் முக்கியமானவை. செய்திகளின் முக்கியம், அவை யாருக்கானவை என்ற அடிப்படையிலேயே முடிவாகின்றன.சில நாட்களுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மூண்ட யுத்தம், நெடுங்காலமாகத் தொடரும் முரண்பாட்டைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. இரு நாடுகளும் போரிடுதற்குக் காரணமாக அமைந்தது, நகோனோ-கரபாக் என்ற நில…
-
- 0 replies
- 407 views
-
-
பாராளுமன்றத் தேர்தல் வரப்போவது உறுதியாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ்ப்பாணத்தில் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பெரியளவிலான கருத்தரங்கு நடத்தப்பட்டது. வடமராட்சி, வலிகாமம், தென்மராட்சி என பிரதேச ரீதியாகவும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கெல்லாம், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தான், பிரதான பேச்சாளராகப் பங்கேற்று வருகிறார். கருத்தாளர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்தார். பிறர் மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் தவறவில்லை. அதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்படப் போகிறது என்பதை, யாழ்ப…
-
- 0 replies
- 219 views
-
-
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி: வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழ் ஈழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நா`ட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். கிழக்கே சீனா முதல் மேற்கே ரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள். அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து …
-
- 0 replies
- 485 views
-
-
சர்வதேசச் சட்டத்தின் பார்வைக்குள் அகப்பட்டிருக்கும் இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக, முக்கியமாக 2009-ல் முதல் 5 மாதங்களில் வட மாகாணத்தில், இலங்கை அரசு புரிந்த பரவலான ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறலுக்குள் அமைகின்றன எனச் சட்ட நிபுனர்கள் கூறுகின்றனர். இந்தக் காலவரையறையில், ஐ.நா உட்பட சர்வதேசச் சமூகத்தினால் காட்டப்பட்ட அலட்சியப் போக்கினால், 30,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய நிலையில், (அ) இலங்கை அரசு, நடைபெற்ற பேரழிவுகளைச் சரித்திரப் பதிவுகளிலிருந்து அழித்தலைத் தடுத்தல் (ஆ) சர்வதேசம் தமிழ் மக்களை, நடைபெற்ற குற்றங்களுக்குப் பதில் சொல்லுவதைத் தவிர்த்தும் நீதியைக் கோராது சமாதானமாகப் போக…
-
- 0 replies
- 568 views
-