Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ் November 12, 2020 - ஆர்.அபிலாஷ் · மற்றவை அரசியல் கட்டுரை 1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப் பொழிந்தது; இதில் 136 ஜெர்மானியர் கொல்லப்பட்டனர். பிரிட்டனின் இந்த விமானத் தாக்குதலின் நோக்கம் ஜெர்மானிய குடிமக்களிடம் அச்சத்தை தோற்றுவித்து ஹிட்லரை பலவீனப்படுத்தி, அவருடைய மக்கள் ஆதரவை நிலைகுலையச் செய்வது; அதுவரையில் வலுவான உருக்கு மனிதராகத் தோன்றியவரை கையாலாகாதவராகக் காட்டினால் ஜெர்மானிய குடிமக்கள் அவரை வெறுக்கத் தொடங்குவார்கள் என பிரிட்டன் கணக்குப் போட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இந்த குண்டு பொழிவு மக்களிடம் பீதியை, பதற்றத்தை உருவாக்கி…

  2. யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரம் 06க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 06க்குரிய இஸ்லாம் (தமிழ் மொழி), தரம் 07க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10க்குர…

  3. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதிப்பிற்கு காரணம் மஹிந்த ;விஜித் விஜதமுனி சொய்சா ஜனவரி எட்டாம் திகதி அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடன் கூட்டு அரசாங்கத்தினை ஸ்தாபித்திருந்தாலும் அதில் தோல்வியடைந்து விட்டோம் என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து பாராளுமன்றத்தில் ஆளும் வரையில் அமர்ந்த முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜிதமுனி சொய்ஸா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். கேள்வி:- தங்களுடைய தந்தையார் முதல் தாங்கள் வரையில் சுதந்திரக் கட்சிக்காரர்களாக செயற்பட்டு வந்திருந்த நிலையில் திடீரென கடந்த செவ்வாயன்று(18) ஐக்கிய தேசியக…

  4. பௌத்த பிக்­கு­மாரின் அத்­து­மீ­றிய செல்­வாக்­கிற்கு எதி­ராக ஜனா­தி­ப­தி, பிர­த­மர் கடும் நிலைப்­பாட்டை எடுக்­க­வில்லை - த இந்து நாச­கா­ரத்­த­ன­மான ஒரு உள்­நாட்டுப் போரி­லி­ருந்து விடு­பட்ட இலங்கை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் புதி­ய­தொரு ஒப்­பு­ர­வான சமூக ஒழுங்கை உரு­வாக்­கு­வ­திலும் கவ­னத்தைக் குவிக்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் இந்­தி­யாவின் பிர­பல தேசிய ஆங்­கிலத் தின­ச­ரி­களில் ஒன்­றான "த இந்து", ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு நாட்டில் தோன்­றி­யுள்ள அர­சியல் நிலை­வ­ரத்தின் மீது சில பௌத்த பிக்­குமார், அவர்­க­ளது அள­வுக்கு ஒவ்­வாத முறையில் செல்­வாக்குச் செலுத்­து­வ­தற்கு எதி­ராகக் கடு­மை­ய…

  5. தனது அரசு செய்த அனைத்துமே கொடுங்கோன்மையான நிகழ்வுகள் என்பதனை ஏற்க மறுப்பதுடன், உலக நாடுகளை கண்டித்து பேசிவரும் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது சண்டித்தனத்தையே காட்டி வருகிறார். பணச் செல்வாக்கினால் பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகளில் இயங்கும் சில பிரச்சார அமைப்புக்களை உள்வாங்கி தனது பிரச்சாரத்தை அந்நாடுகளில் பரப்பி வருகிறார் மகிந்தா. சண்டித்தனத்துடன் கூடிய தனது அதிகார மற்றும் பணச் செல்வாக்கை வைத்து தன் மீதும் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட தனது செல்வாக்கை மேற்குலகத்தில் அதிகரிக்க பல்வேறுபட்ட பிரயத்தனங்களை எடுத்துவருகிறார் மகிந்தா. ஒக்ஸ்போட்யூனியனில் உரையாற்ற 2010-இல் லண்டன் சென்ற மகிந்தா பாதுகாப்புக…

  6. சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்றும் இணைஅனுசரணையில் இருந்துவிலகிக் கொள்கின்றோம் என்றும் இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருந்தது. தவிர, உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கையின் அறிவிப்பு இருந்தது. இந்த அறிவிப்புத் தொடர்பில், பதிலளித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்; போர்க்குற்றம் தொடர்பான இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளார். இவை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நிகழ்வில் நடந்தவை. இலங்கை அரசின் மேற்போந்த அறிவிப்பும் அதற்கு ஆணையாளர் விடுத்த பதிலும் இவற்றின் முடிவுகள் என்னவாக அமையும் என் பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் நாம் இங்கு கேட்பதெல்லாம் இலங்கையில் நடந்த போர்க்குற்றத்…

    • 0 replies
    • 462 views
  7. உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடை பெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விடைபெற்று செல்கின்ற போதும் அது போரை அடுத்த வருடத்திற்கு விட்டு செல்கின்றது என்பதை மறுக்க முடியாது. வன்னிப் பகுதியின் முக்கிய நகரங்களான கிளிநொச்சியை அல்லது முல்லைத்தீவை இந்த வருடத்தின் முடிவுக்குள் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அரசின் திட்டம் அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும் சில தினங்களில் நிறைவேற்று…

  8. சொந்த நாட்டின் ஏதிலிகள் க. அகரன் தமிழர் வாழ்வில் புலம்பெயர்தல் என்பது தவிர்க்கமுடியாத வரலாறாகிப்போயுள்ள நிலையில் இந்தியாவுக்கும் பலரும் இடம்பெயர்ந்திருந்தனர். சுமார் 30 வருடங்களாக இந்தியாவில் மூன்றாவது சந்ததியுடன் வாழும் இலங்கைத் தமிழர் தொடர்பில் தற்போது பேசுபொருள் உருவாகியுள்ளது. பல தசாப்தங்களாக அகதி என்ற நாமத்துடன் வாழ்ந்த இலங்கைத்தமிழர்கள் தற்போது இந்திய பிரஜாவுரிமை பெறும் நிலை உருவாகியுள்ளமையும் அவர்களது அகதிகள் என்ற பதம் மாற்றப்பட்டமையும் அவர்களுக்கான வசதிகளுமே இந்தப் பேசு பொருளுக்கு காரணமாகியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் வாழ்ந்த பலரும் யுத்த நிறைவுக்கு பின்னர் தமது தாயகத்தில் வாழும் அபிலாசைகளுடன் அரசின் வாக்குறுதிகளை நம்பி இலங்கைக்கு …

  9. மாதன முத்தாக்களின் கும்மாளம் November 20, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பெரும்பாலான சிங்கள வீடுகளில் இப்பொழுது “மாதன முத்தாக்களின்” கதையே பேசப்படுகிறது. மாதன முத்தாக்களை நம்பித் தங்களுடைய ஆட்டின் தலையைக் காப்பாற்றுவதற்குக் கொடுத்து விட்டோமோ என்று சிங்கள மக்கள் யோசிக்கிறார்கள். கடைசியில் பானையும் மிஞ்சாது. ஆடும் மிஞ்சாது என்ற நிலையென்றால் யாருக்குத்தான் யோசினை வராது? முட்டாள்களை நினைத்துச் சிரிப்பதற்கு இலங்கையில் மாதன முத்தாவின் கதை பிரபலம். அதிகாரத்தையும் அறிவீனத்தையும் பரிகாசம் செய்வதற்கு –பழிப்பதற்கு – இந்தக் கதையை விட வேறு எதுவும் சிறப்பில்லை. காலந்தோறும் இந்தக் கதையை நினைவூட்டும் ஆட்கள் இருப்பார்கள். வரலாற்று நிகழ்வுகளும் நடந்து கொண்டி…

  10. மீள் குடியேற்றம் செய்யாது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழினம் அனுமதிப்பது ஆபத்து! [ சனிக்கிழமை, 12 யூன் 2010, 06:07.44 பி.ப | இன்போ தமிழ் ] மகிந்த அரசு மிகச் சாமர்த்தியமாக தனது நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடித்தது போல ஒன்று இரண்டாகக் கொலைகளை நடத்தி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனத் தமிழ் மக்களை இலட்சக் கணக்கில் கொலை செய்தது. இன்று இலட்சக் கணக்கில் முட்கம்பி முகாம்களிலும் அடையாளம் அறியப்படாத சித்திரவதைக் கூடங்களிலும் பாலியல் உட்படப் பல வித வதைகளையும் செய்த படியே தனது செயல்களுக்கு சர்வதேச அங்கீகாரம் தேடிக் கொள்கிறது. உலக அளவிலான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச் சாட்டுகளுக்கு முகம் கொடுத்தப…

    • 0 replies
    • 596 views
  11. நாட்டை மீளக்கட்டியெழுப்ப முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புகள் தேவை பொருளாதார நிபுணர் ரெஹானா தௌபீக் *தொலைநோக்க ற்ற தீர்மானங்கள் , கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் இலங்கையை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளின *அதிகாரிகள் இறுதிக் கட்டத்தை கடந்திருந்தும் கூட சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அதிகாரிகள் தாமதம் செய்தனர் *இலங்கைப் பிரஜைகள் மத்தியில் உணவுப் பாதுகாப்பில் விரைவான வீழ்ச்சி *41% குடும்பங்கள் 75% க்கும் அதிகமான பணத்தை உணவுக்காக செலவிடுகின்றன *மக்கள் உணவுக்காக மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவை குறைக்கின்றனர் *பொருளாதார நெருக்கடிகளின் போது மனித மூலதனம்…

    • 0 replies
    • 212 views
  12. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் பரிமாறப்பட்ட தகவல் குறிப்புகள் சில அண்மையில் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று- வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை வாங்க முற்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு ஆயுதங்களை வாங்கினால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை உள்ளடக்கியிருந்தது. இன்னொன்று- ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவில்லை என்று இலங்கை தெரிவித்த மறுப்பையும் அதுபற்றிய அமெரிக்கத் தூதுவரின் கருத்தையும் உள்ளடக்கியிருந்தது. அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒருவித இராஜ…

    • 0 replies
    • 1.3k views
  13. படத்தின் காப்புரிமை Getty Images பிரதமர் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின உறுப்பு நாடாக பிரிட்டன் தொடர வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார், இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகளையும், நிபந்தனைகளையும் உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு வாக்களித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிராக 432 வாக்குகளையும், ஆதரவாக 202 வாக்குகளையும் பதிவு செய்தனர். …

  14. 1,000 ரூபாய் கோரிக்கையும் வங்குரோத்து அரசியலும் Editorial / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 02:19 மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1,000 ரூபாயாக்க வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டங்கள், புதிய கட்டத்தை எட்டியுள்ளன. காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள், குழிபறிப்புகள் என்பன தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகின்றன. ஆனால், காலங்கள் மாறியுள்ளன; மலையக அரசியற் கட்சிகளும் அதன் தொழிற்சங்கங்களும் கைவிரித்த பிறகும், மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இன, மத அடையாள பேதங்களைக் கடந்து, இந்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு, 1,000 ரூபாய் இயக்கத்தினரைச் சேர…

  15. தமிழர்களைச் சீண்டும் மஹிந்த அரசு. போர் வெற்றியை வருடா வருடம் கொண்டாடி அதனூடாகத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்புகளைஎச்சரிக்கையை மஹிந்த அரசு விடுக்கின்றது. அதாவது, தமிழினம் நந்திக் கடல் முனையில் மண்டியிட்டுவிட்டது. எனவே, தமிழர்களுக்கு அதிகாரங்கள் அவசிய மில்லை. இது சிங்கள தேசம். எமக்கு கட்டுப்பட்டே தமிழர்கள் வாழவேண்டும் போன்ற குரோதத்தனமான இனவாதம் கொண்ட விடயங்களையே அது வருடா வருடம் மே மாதத்தில் தமிழர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி வருகின்றது. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் தான் என்ற யதார்த்தத்தை மறந்து ஆணவப் போக்கில் மஹிந்த அரசு செயற்படுவதாலேயே நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுகின்றது. இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் முள…

  16. மு.கா.வின் முட்டைகள் மப்றூக் முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று 'குஞ்சு' பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் 'குஞ்சு' எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், 'குஞ்சு' எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் தொடங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று 'குஞ்சு' பொரித்திருக்கிறது. எம்.எஸ். தௌபீக் முட்டைக்குள்;ளிருந்து சத்தமில்லாமல் வெளியே வந்திருக்கிறார். முட்டைகளின் கதை முஸ்லிம் காங்கிரஸும் - …

  17. பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர். 1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது. 150 குடும்பங்களைக் குடியேற்று…

  18. ‘இயற்கையை புரிய மறுத்தால் இன்னும் அழிவுகளை சந்திக்க நேரிடும்!’ கவிஞர் தீபச்செல்வன். உலகமே கொரோனாவால் முடங்கியிருக்கிறது. உலகில் எங்கோ ஒரு மூலையில் மனித அழிவுகள் ஏற்படுகின்ற போது, இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்ற போது, ஏனைய பகுதிகளில் வாழ்கிறவர்கள் அது குறித்து எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் தத்தம் வாழ்வை குறித்தும் பயணங்களை குறித்தும் சிந்தித்தார்கள். அந்தப் போக்கை கொரோனா மாற்றியுள்ளது. இயற்கை மற்றும் மனித சமூகத்திற்கு இடையிலான உறவுகளின் வெளிகளை இந்த இடர்பாட்டுக்காலம் ஒழுங்குபடுத்துகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இருந்தால் மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதுதான் தீர்வு என்பதே உலகமெங்கும் கைகொள்ளப்படும் நடைமுறை. மனிதர்களற்ற உலகின் நகரங்களிலும் உலகக் கிரா…

  19. செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக் கேள்வி பதில் அளிக்கவேண்டிய கேள்வி. எங்கள் தீவின் தசாப்தகால வன்முறைகளின் போது விடுதலைப்புலிகள், அரசாங்கம், ஆயுதகுழுக்கள் உட்பட மோதலில் ஈடுபட்ட பல தரப்புகள் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளன. இந்த அட்டுழியங்களில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரின் பரிமாணங்கள் குறித்து மதிப்பிடுவதற்கு நான் முயலமாட்டேன். அவைகள் ஒவ்வொரு கொடுமையிலிருந்து மற்றைய கொடுமைக்கு இடையில் வேறுபட்டவையாக காணப்படுகின்றன. எனினும், 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதன்மை கு…

  20. 13க்கு எதிராக சிங்கள பௌத்தத்தை அணிதிரட்டும் ரணிலின் உத்தி! Posted on August 13, 2023 by தென்னவள் 13 0 தமிழருக்கான அதிகாரப் பகிர்வையும், அரைகுறை அதிகார மாகாண சபை முறைமையையும் முற்றாக ஒழித்துக் கட்டுவதற்காகவே பதின்மூன்றாம் திருத்தத்தை மீண்டும் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்கு எடுத்துச் செல்ல முனைவதுடன், சகல கட்சிகளினதும் ஆலோசனையைக் கோரியுள்ள ரணிலின் இலக்கு இலகுவாக எட்டப்படுகிறதா? இன்றைய பத்தியை எழுத ஆரம்பிக்கும்போது ‘இதற்குத்தான் ஆசைப்பட்டாயா ரணிலகுமாரா” என்ற வரிகளை வாய்க்குள் முணுமுணுப்பது தவிர்க்க முடியாதுள்ளது. பதின்மூன்று பதின்மூன்று என்று வாய்ப்பாடாகச் சொல்லப்படும் அரசியல் திருத்தத்தை சிங்கள பௌத்த நெருக…

    • 0 replies
    • 193 views
  21. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்து - பெளத்த மாநாட்டில் கலந்து கொண்ட பெளத்த பிக்குகள் ஆற்றிய உரைகள் தமிழ் மக்களை அவர்கள் பால் கவனிக்க வைத்துள்ளது. பெளத்த பிக்குகள் என்றால் அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்றே இது காறும் தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அதில் நியாயமும் உண்டு. எனினும் கோட்டாபய ராஜபக்­ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிற்பாடு பெளத்த தேரர் களின்கை இன்னும் ஓங்கியிருப்பது போன்ற நிலைப்பாடு தெரிகிறது. அதேநேரம் கடந்த காலங்களில் இனப்பிரச் சினைக்கான தீர்வு முயற்சிகளையயல்லாம் தடுத்தாற்கொண்டவர்கள் பெளத்த தேரர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வாகப் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதை முன்வைத்தபோது, அதனை எதிர்ப் பதில…

    • 0 replies
    • 284 views
  22. ரஷ்யாவின் இரும்பு மனிதர் விளாடிமிர் புடின். அதிபர், பிரதமர் என, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் அதிகார சிகரத்தில் இருப்பவர். வல்லரசாக இருந்த சோவியத் ரஷ்யா சிதறுண்டு போன பின், ரஷ்யாவை அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக, துாக்கி நிறுத்தியவர். ரஷ்யாவின் உளவு அமைப்பான கே.ஜி.பி.,யின் உயர் பொறுப்பில் இருந்தவர். சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்கு பின், நீண்ட காலமாக பதவியில் இருப்பவர். 1997ல், போரிஸ் எல்சின் பிரதமராக இருந்தபோது, கிரம்ளின் மாளிகையில் நுழைந்தார். அவரை எப்.எஸ்.பி., என்ற உள்நாட்டு உளவு அமைப்பின் தலைவராக நியமித்தார் எல்சின். 1999ல், எல்சின் பதவியை ராஜினாமா செய்தபோது, ரஷ்யாவின் இடைக்கால பிரதமரானார் புடின். 2000ம் ஆண்டு, அதிபரானார்; 2008ம் ஆண்டு வரை, இ…

    • 0 replies
    • 361 views
  23. தமன்னாவும் நாடாளுமன்றமும் ஆடைகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்த ஆண்டு, பல்வேறு வழிகளில் மோசமானதாக அமைந்தது. உலகமெங்கிலும் அதிகரித்திருக்கும் வன்முறைகளும் பிரிவினைகளும், இந்த ஆண்டு எப்போது முடியுமென்ற எதிர்பார்ப்பையே, பல்வேறு தரப்பினருக்கும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், விடைபெறும் நேரத்திலும், சர்ச்சைகளும் இரத்தங்களுமின்றி விடைபெறப் போவதில்லை என்ற திடசங்கற்பத்துடன், இவ்வாண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிறது. பிரதானமாக இரண்டு விடயங்கள், அண்மைய சில நாட்களில் பேசுபொருட்களாகியிருக்கின்றன. ஒன்று, இலங்கையின் நாடாளுமன்றம் சம்பந்தமானது. அடுத்தது, தமிழக நடிகை தமன்னா பற்றியது. இந்த இரண்டு விடயங்களுமே எவ்வாறு ஒன்றுக்…

  24. காணொளி :வடக்குத் தேர்தல் வெற்றி தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம்... பகுதி-01 பகுதி -02 பகுதி-03 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9322:2013-09-22-15-29-33&catid=1:latest-news&Itemid=18

  25. இலங்கையில் இந்த நிலைக்கு மாறி மாறி ஆப்படிக்கும் இந்தியனே காரணம் ஈழத்தமிழர்களை மீண்டும் பகடைக்காய்களாக்க ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு இடம் கொடுக்கக்கூடாது. இந்தியாவின் ஒரே ஒரு நோக்கம் சிங்கள அரசுகளைத் தன் கைக்குள் வைத்திருப்பதே. அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயாராகி இருக்கும் இந்திய இராட்சியம். சிங்களம் தன் கட்டுக்குள் அகப்படாது போனால் மீண்டும் தமிழர் உரிமைப்போராட்டம் முடக்கிவிடலாம். இதற்கு யாரும் பலிக்கடாவாகக்கூடாது. தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. சுருங்கச்சொன்னால் அமெரிக்காவிற்கு பாலஸ்தீனம் எப்படியோ இது போலத்தான் இந்தியாவிற்கு இலங்கைத்தமிழர். இந்தியா இந்தியாவாக இருக்கும் வரைக்கும் நாங்கள் சிங்களத்துடன் சகோத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.